Friday, September 04, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/09// 2015 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

சவாலே சமாளி படத்தை 170 தியேட்டர்களில், திட்டமிட்டபடி திரையிடுவேன்'' என்று நடிகர் அருண்பாண்டியன் கூறினார்.


விஷால்-காஜல் அகர்வால் நடித்து, சுசீந்திரன் டைரக்ஷனில் வேந்தர் மூவீஸ் தயாரித்த 'பாயும் புலி'படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பில் திடீர் தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து, ''4-ந் தேதி (நாளை) முதல் எந்த தமிழ் படமும் வெளியிட மாட்டோம்'' என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.



பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், பானு ஆகிய 4 படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருவதாக இருந்தது. தயாரிப்பாளர்களின் போராட்டம் காரணமாக இந்த 4 படங்களும் இன்று திரைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில், 'சவாலே சமாளி'படத்தை தயாரித்துள்ள நடிகர் அருண்பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு தன் உறுப்பினர்களுக்கே பாதிப்பாக அமைந்துள்ளது. 'பாயும் புலி'படத்துக்கு ஏற்பட்டிருப்பது தனிப்பட்ட பிரச்சினை. 24 மணி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, சக தயாரிப்பாளர்களுக்கு பாதகமான முடிவு.



நாங்கள் தயாரித்துள்ள 'சவாலே சமாளி'படம் எந்த சவாலையும் சமாளிக்கும். படம் திட்டமிட்டபடி இன்று திரைக்கு வரும். 170 தியேட்டர்களில் படம் திரையிடப்படும்.
படம் திரைக்கு வருவதை திடீர் என்று தள்ளி வைத்தால், வெளிநாடுகளில் எங்கள் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவார்கள். மேற்கொண்டு எந்த படத்தையும் அங்கு திரையிட முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே திட்டமிட்டபடி, 'சவாலே சமாளி'படத்தை திரைக்கு கொண்டு வருவோம்.''
இவ்வாறு அருண்பாண்டியன் கூறினார்.


இதேபோல், ''பாயும் புலி படம் திட்டமிட்டபடி இன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும். கடின உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு'' என்று அந்த படத்தின் கதாநாயகன் விஷால் சமூகவலைத்தலங்களில் அறிவித்து இருக்கிறார்.


1.பாயும் புலி
2 சவாலே சமாளி
3 போக்கிரி மன்னன்  
4 பானு#  4/9/2015


Paayum Puli


அதாவது, படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறாராம். அது யார் என்பது படம் பார்க்கும் போது தெரியும் என்றார்.
படம் பார்த்த பிறகும் தெரியாமலிருக்க, அவர் ஒன்றும் இன்விசிபிள் மேன் இல்லையே.
சரி, பாயும் புலியின் கதை என்ன?
படத்தில் விஷால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார். கெட்டவர்களை போட்டுத் தள்ளுவதுதான் இவர் டூட்டி. தன் மீது கை வைத்தால் சாதாரணமானவனே சும்மாயிருக்க மாட்டான்.
ஒரு போலீஸ்காரன் அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மீது கை வைத்தால்...? இதுதான் பாயும் புலி படத்தின் கதை என்றார் சுசீந்திரன்.
பாஸ்... இதுக்கு பேரு கதையில்ல, பில்டப்.


1971ல் வெளிவந்த சிவாஜி நடித்த படம் - சவாலே சமாளி! இப்போது இந்தத் தலைப்பில் புதிய படம் ஒன்று வெளிவரவுள்ளது.
தெகிடி புகழ் அசோக் செல்வன் நடிக்கும் இந்தப் படத்தில் பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இதன் இயக்குநர். தயாரிப்பு - அருண் பாண்டியன்.
சிவாஜி படத்தலைப்பை இதற்குச் சூட்டியது ஏன்? பதில் சொல்கிறார் இயக்குநர்.
இந்தத் தலைப்பு கிடைக்க மிகவும் சிரமமாக இருந்தது. தயாரிப்பாளர் அருண் பாண்டியன் 3 மாதங்களாகப் போராடி இந்தத் தலைப்பைப் பெற்றார். காமெடி படம் என்பதால் முதலில் கெக்கே பிக்கே என்றுதான் தலைப்பு வைத்தோம். ஆனால் படத்தில் கதாநாயகன் பல சவால்களைச் சந்திப்பதால் சவாலே சமாளி என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என எண்ணினோம் என்றார்.
சிநேகன் வரிகளில் 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் எஸ். தமன். செப்டம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாக உள்ளது.


டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நாயகனாக அறிமுகமாகும் போக்கிரி மன்னன் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.
நடன இயக்குனர் ராஜு சுந்தரத்தின் உதவியாளராக இருந்தவர் ஸ்ரீதர். கூட்டத்தோடு கூட்டமாக நடனமாடிக் கொண்டிருந்தவர் படிப்படியாக நடன மாஸ்டராக உயர்ந்தார். தொலைக்காட்சியில் நடக்கும் நடனப் போட்டிகளின் நடுவராகவும் செயல்பட்டார். காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்கமுக்க பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம் ஸ்ரீதர் சினிமா வட்டாரத்திலும், வெளியிடும் தனித்து அடையாளப்படுத்தப்பட்டார். இன்று ஸ்ரீதர் நடனம் அமைக்காத படங்கள் குறைவு என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
இவர் சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நாயகனாக அறிமுகமாவது போக்கிரி மன்னன் படத்தில். ராகோ மாதேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. 
விரைவில் படம் திரைக்கு வருகிறது.


பசவா புரொடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் பிச்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பானு.’
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜி.வி.சீனு இயக்குகிறார். கே.அப்துல் ரஹ்மான் ஒளிப்பதிவு செய்ய, உதயராஜ் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகர்களாக G.V.சீனு மற்றும் உதயராஜ் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக நந்தினிஸ்ரீ நடிக்கிறார்.
மேலும் ஜவஹர், கவிப்ரியா, நதிஷா, சுஜிபாலா மற்றும் கோவை செந்தில், சிசர் மனோகர், லொள்ளு சபா மனோகர், போண்டாமணி, குள்ளமணி, தினேஷ்மணி என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
ஒரு நாத்திக இந்து வாலிபனுக்கும், முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டம்தான் இத்திரைப்படம். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு குத்தாட்ட பாடலுக்கு சுஜிபாலா ஆடியுள்ளார்.
இப்படத்தின் பாடல்களை அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், சத்யன், லதா ராஜ்குமார் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான உதயராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையிலுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

நன்றி- த இந்து, மாலைமலர் , தினமணி , வெப்துனியா

0 comments: