Tuesday, September 15, 2015

கள்ளக்காதல்கொலைவழக்கு-பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘சந்தேகத்தின் பலனை சாதக மாக்கி அவரை விடுதலை செய் கிறேன்!’’ என்று தீர்ப்பு வாசித்து விட்டு, கண்ணாடியைக் கழற்றும் நீதிபதி களைப் பல திரைப்படங்களில் பார்த்திருப் பீர்கள். டெல்லியில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீஸ் 3 வருடங்கள் துப்பறிந்து, 4 குற்றவாளிகளைக் கைது செய்து, 5 வருடங்கள் வழக்கு நடத்தி, ஆயுள் தண்டனை என்று தீர்ப்பான பிறகு, உயர் நீதிமன்றம் ‘சந்தேகத்தின் பலனை…’ என்று ஆரம்பித்தது. அந்தத் தீர்ப்பு சமூக போராளிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் பின்னணி என்ன?
1999-ம் வருடம் ஜனவரி 23-ம் தேதி. டெல்லியில் தன் அடுக்கு மாடி குடியிருப் பின் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து காத்திருந்தார் ராகேஷ் பட்னாகர். பிறகு தன்னிடம் இருந்த சாவியால் திறந்து உள்ளேச் சென்றுப் பார்த்து அலறினார். உள்ளே அவர் மனைவி ஷிவானி பட்னாகர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொட்டிலில் அவர்களின் இரண்டு மாதமே ஆன குழந்தை அழுதுகொண்டிருந்தது.
போலீஸ் வந்து தடயங்களை சேகரித்து விட்டு ‘‘விசாரித்து குற்றவாளியைப் பிடிப்போம்’’ என்று பேட்டியளித்து விட்டுச் சென்றது. இந்தக் கொலை செய்திக்கு மீடியாக்களில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. காரணம்… கொலை செய்யப்பட்ட ஷிவானி, பிரபல பத்திரிகையின் சீனியர் பத்திரிகையாளர்.
கூலிப் படை வைத்து ஷிவானியின் கணவரே கொலையை நடத்தியிருக் கலாம் என்றும் யோசித்தது. ராகேஷ் 70 முறை விசாரிக்கப்பட்டார். ஆனால், அவரைக் கைது செய்வதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
3 வருடங்கள் விசாரித்து, 2002-ம் வரு டம் 3 பேரை கைது செய்தது போலீஸ். அந்த 3 பேரும் கூலிப் படையைச் சேர்ந் தவர்கள் என்பதும், இந்தத் திட்டத்தின் மூளையாக செயல்பட்டது ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்பதும் தெரியவர, காவல்துறை ஆடிப் போனது.
ரவிகாந்த் ஷர்மா ஒரு ஐ.பி.எஸ் அதி காரி. ஹரியாணாவைச் சேர்ந்த அவர் சிறைத்துறை ஐ.ஜியாக பணியாற்றிய வர். பிரதம மந்திரியின் பாதுகாப்புப் பணி அதிகாரியாகவும் இருந்தவர்.
தகுந்த ஆதாரங்கள் இருந்ததால் ஷர்மாவை கைது செய்ய ஹரியாணா வில் உள்ள அவர் இல்லத்துக்கு போலீஸார் சென்றபோது ஷர்மா தலை மறைவானார்.
ஷர்மா வேலையில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி போலீஸ் அறிவித்தது. அவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50,000 தரப்படும் என்று புகைப்படத்துடன் அறி விப்பு வெளியிட்டது. ஆனால் ஷர்மா தலைமறைவாக இருந்தபடி பாட்னா கோர்ட்டிலும், டெல்லி கோர்ட்டிலும் 3 முறை முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித் தார். மூன்று முறையும் முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஷர்மா போலீஸில் சரணடைந்தார். அவர் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றங்களையும் மறுத்தார்.
போலீஸ் விசாரணைக்கு ஷர்மா ஒத்துழைக்கவில்லை. உண்மை கண் டறியும் லை டிடெக்டர் சோதனைக்கு மருத்துவக் காரணங்களை முன்வைத்து உட்பட மறுத்தார். என்னதான் நடந்தது?
ஷிவானி தன் பத்திரிகை அலுவல் தொடர்பாக பிரதமர் இல்லம் சென்ற போது ஷிவானிக்கு ஷர்மா அறிமுக மானார். அந்த அறிமுகம் நட்பாக மாறி யது. அடிக்கடி டெல்லியின் சில உணவு விடுதிகளில் சந்தித்துக் கொண்டார்கள். (குறிப்பிட்ட அந்த விடுதிகளுக்கு ஷிவா னியை நானே டிராப் செய்திருக்கிறேன். உள்ளே அவள் யாரை சந்திக்கப் போனாள் என்பது எனக்குத் தெரியாது என்றார் ராகேஷ்.)
ஷர்மா டெல்லி வரும்போதெல்லாம் எந்த ஓட்டலில் தங்குவாரோ அங்கு ஷிவானி சென்று சந்தித்திருக்கிறார். (ஷர்மா டெல்லியில் ஓட்டலில் தங்கிய அதே தேதிகளில் ஷிவானி அந்த ஹோட்ட லுக்கு டாக்ஸி பிடித்துச் சென்ற ஆதா ரங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.)
ஷிவானியை 3 மாத ஜர்னலிஸம் படிப்புக்காக பத்திரிகை நிறுவனமே லண்டன் அனுப்பி வைத்தது. திரும்பும் போது சில தினங்கள் தாமதித்து சொந்த செலவில்இந்தியா திரும்பினார். டிக்கெட் செலவுக்கு என்ன செய்தாய் என்று ஒரு தோழி கேட்டபோது, ‘‘ஏர் இந்தியாவில் இருக்கும் நண்பர் டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்’’ என்றார்.
ஷிவானி லண்டனில் இருந்தபோது தன் போனில் இருந்து ஷர்மாவை 176 முறை அழைத்துப் பேசியிருக்கிறார். அதேப் போல அந்த மூன்று மாதங் களில் ஷர்மா தன்னுடைய போனில் இருந்து ஷிவானியை 90 முறை அழைத் துப் பேசியிருக்கிறார். (இதற்கான ஆதா ரங்கள் கோர்ட்டில் வழங்கப்பட்டன)
ஷிவானி தன் அந்தரங்கத் தோழியிடமும், தன் தங்கை செவந்தியிட மும் தனக்கும் ஷர்மாவுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பற்றிச் சொன்னதோடு, இருவரும் அவரவர் துணைகளை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்வதாக இருக் கிறோம் என்றும் சொல்லியிருக்கிறார். பிறகு ஒருநாள் இருவரிடமும் ஷர்மா தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பதால் எங்கள் உறவைப் பற்றி நான் சமூகத்துக்கும் அவர் மனைவிக்கும் தெரியப்படுத்தப் போகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். (ஷிவானியின் தோழி, தங்கை இருவரும் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொன்னார்கள்)
ஷிவானியின் அலுவலகத்தில் அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டரை இயக்கு வதற்கான பாஸ்வேர்டு ‘ரவிகாந்த்’ என் பதாகும். (இதுவும் நிரூபிக்கப்பட்டது)
இதற்கிடையில் ஷர்மாவின் மனைவி தினமும் தொலைக்காட்சிகளில் தோன்றி, தன் கணவர் குற்றமற்றவர் என்றும், ஒரு அரசியல்வாதியை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக தன் கணவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்றும் பேட்டி கொடுத்தார். அந்த அரசியல்வாதிக்கும் ஷிவானிக்கும் நட்பு உண்டு, அவர்தான் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்க வேண்டும் என்று கண்ணீருடன் குறறம்சாட்டினார்.
கோர்ட்டில் பரபரப்பாக நடந்த விசாரணையின்போது மொத்தம் 209 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். அதில் 51 பேர் போலீஸில் முதலில் சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக மாற்றி சாட்சி அளித்தார்கள்.
2008-ம் வருடம் ஷர்மாவும் மற்ற மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அனைவருக்கும் ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே ஷர்மா உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தார்.
இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து 2011-ம் வருடம் ஷர்மா வும் மற்ற இருவரும் குற்றவாளிகள் இல்லையென்றும், பிரதீப் என்பவர் மட்டுமே குற்றவாளி என்றும் தீர்ப்பளித் தது. 9 வருடங்கள் திகார் ஜெயிலில் இருந்த பிரதீப் விடுதலையானார். உயர் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதிகள், ‘‘கீழ்க் கோர்ட்டில் பல ஆதாரங்கள் சரியில்லை. அடிப்படையான சந்தேகத்தை மட்டும் வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்கள்.
அரசுத் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக தெரிவித்தாலும், இந்தத் தீர்ப்பு விமர்சனத்துக்கு ஆளா னது. சுப்ரீம் கோர்ட் வக்கீல் அசோக் அரோரா பலவிதமான கேள்விகளை எழுப்பினார்.
வழக்கின் நடுவில் அரசுத் தரப்பின் வக்கீல்கள் மாற்றப்பட்டது ஏன்? 4 குற்றவாளிகளில் ஒருவருக்கு அளிக் கப்பட்ட தீர்ப்பை மட்டும் உறுதி செய்தது ஏன்? குற்றவாளியான பிரதீப் இந்த கொலையில் ஈடுபட சரியான காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். பிறகு அவர் எப்படி குற்றவாளியாவார்? ஷர்மா குற்றம் செய்யாதவர் என்றால் எதற்காக தலைமறைவானார்? அவருக்கும் ஷிவா னிக்கும் நெருக்கமான தொடர்பு இல்லை என்றால் லண்டனில் இருந்தபோது இருவரும் அத்தனைஅழைப்புகளில் ராக்கெட் விஞ்ஞானம் பற்றிப் பேசினார் களா? இப்படி அவரும் மற்றும் பலரும் கேட்கும் கேள்விகள் தொடர்கின்றன. திடீரென்று ஒரு அபூர்வ சக்தி கிடைத்து கையில் தராசுடன் நிற்கும் நீதி தேவதை பேசத் தொடங்கினால் ஒருவேளை சரியான பதில்கள் கிடைக்கலாம்.
- வழக்குகள் தொடரும்
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]

நன்றி-த இந்து

0 comments: