Friday, January 24, 2014

உலகில் தோன்றிய முதல் வம்புக்கிழுத்தல் எது? ஒரு அழகிய ஆராய்ச்சி

1டைரக்டர் பாலா வின் நந்தா படமும் , அமைச்சர் சசிதரூர் மனைவி சுநந்தா இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை எதிற்பாராத அதிர்ச்சி சோக முடிவு



==============



2ஒரு டைம் ஏ டி எம் ல பணம் எடுக்க 17 ரூபாயாம் .என் அக்கவுன்ட் ல் பேலன்சே 10 ரூபா தானுங்க்ணா


================



3சசிதரூர் அஜித் ரசிகராம்.சம்சாரம் விஜய் ரசிகையாம்.எந்தப்படம் முதல்ல பாக்கறதுன்னு தகராறாம் #,அட்ரா சக்க டுபாக்கூர் செய்திகள்



===============


4பசிச்சா கிச்சன் ரூம் போயோ ஹோட்டல் போயோ சாப்பிடாம " எனக்கு பசிக்கி" என ட்வீட் போடுபவனே தமிழன்


=================



5டைப்ரைட்டிங்கில் லோயர் ,ஹையர் எக்சாம் பாஸ் ஆனவங்கதான் பிரபல ட்வீட்டர் ஆக முடியும் என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!



================



6 காங் கட்சி ஆம் ஆத்மி க்கு டெல்லி ல தர்ற ஆதரவும் ,நயன் தாரா -சிம்பு காதலும் 1, எப்போ வேனா வாபஸ் ஆகலாம்



=============



7 நீ இல்லாமல் எனக்கு எந்த சக்தியும்் இல்லை.ஆனால் நீ என் அருகில் இருப்பது மாதிரி உணரும் கற்பனா சக்தி தான் என்னை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது



==================


8  பனி வெடிப்பு வராமல் இருக்க உதட்டில் எண்ணெய் பூசிக்கொள்வது மாதிரி உன் முத்தம் பெறாத காய்ந்த கன்னத்தைக்காப்பாற்ற கண்ணீரால் ஈரப்படுத்துவேன்



===================


9 கச்சேரியில் பாடகி தன் மனதில் இருக்கும் காதலனை எதிரில் நிற்பது போல் கற்பனை செய்தும் பாடகன் அந்த பாடகியை காதலியாய் மனதில் நினைத்தும் !



================



10   நீ அருகில் இல்லாமல் போனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என உன்னிடம் வீம்பாய்க்காட்டிக்கொள்வதுதான் என் பலவீனம்.



==============


11 நான் உன் மீது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அன்பு காட்டி வருவேன்.நீ எப்போது வந்தாலும் முழு அன்பையும் ஒரே மூச்சில் கர்ணன் போல் வழங்கிடுவா



=================


12 எதுவரைக்கும் இவன் தாக்குப்பிடிப்பான் என ்பரீட்சை வைக்கும் ஆள் நீ! எப்போது வருவாள் இவளைத்தாங்கிப்பிடிப்போம் எனும் எதிர்பார்ப்பில் நான்



===============



13 நம் இரண்டு உள்ளங்கைகள் சேரும்போது கை ரேகைகள் அவைகளுக்குள் பொருத்தம் பார்த்து இணைந்து கொள்கிறது



================


14 உலகில் தோன்றிய முதல் வம்புக்கிழுத்தல் காதலியின் ஜடையைப்பிடித்து இழுத்ததாகத்தான் இருக்கும் # சவுரிராணியின் டைரியிலிருந்து



=================


15  மண்டையைப்போடாத மனுசன் எங்கிருக்கான்.புருசன் கூட சண்டை போடாத சம்சாரம் எங்கே இருக்கு?



==============




16 அன்பே! சந்தையில் நீ 7 சவுரி வாங்கி வந்து தினமும் ஒன்று அள்ளி முடிவதால் இன்று முதல் நீ ஜடை ஏழு அள்ளல்கள் ஆனா



================



17 உடம்பு சரி இல்ல இன்னைக்கு நீங்க சமைங்கன்னு சம்சாரம் சொன்னா அடடா உனக்கு உடம்பு சரி இல்லைனு எனக்கு மனசு சரி இல்லைனு எஸ் ஆகிடுபவனே தமிழன்



===============



18 தன் வீட்டு சொந்தம் விருந்தினராய் வீட்டுக்கு வரும்போது உடம்பு சரி இல்லை,சமைக்க முடியாது என்று சொன்ன சம்சாரம் உலகத்தில் எங்கும்் இல்லை



===============



19 என் மேல இருக்கும் கோபத்துல சாப்டாம போய்டாதீங்கனு சம்சாரம் சொல்லுச்சு.வழக்கமா சாப்பிடும் 6 தோசைக்குப்பதிலா 8 தோசை சாப்ட்டேன் # யார்கிட்டே


================



20 புத்தகத்திருவிழா போய் இன்னின்ன புக்ஸ் வாங்கினேன் னு லிஸ்ட் போட்டவங்க ட்வீட்ஸ் எல்லாம் மார்க்டு.கேள்வி கேட்போமில்ல ?



====================

0 comments: