Wednesday, October 03, 2012

கமலுடன் எப்போ? மிஷ்கின் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

http://icdn.indiaglitz.com/tamil/news/miskint020506_1.jpg

இங்கே எதையும் துணிச்சல் என வெளிப்படையாக பேசி விட முடியாது. அதற்குள் ஆயிரம் பேசி விடுவார்கள். அன்றாடம் நடக்கும் எல்லா விஷயங்களையும் நம்முடைய சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதே இல்லை. ஆனால், சினிமா என வந்து விட்டால், இது அவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ, இவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ என சிறகு கட்டி விடுவார்கள். அதிலிருந்து தப்பிப்பதே பெரிய சவால். இந்தப் படமும் நிச்சயம் சவால்தான். சின்ன வயதில் நாம எல்லோரும் படித்த காமிக்ஸ் கதைதான் இது. ஒரு சூப்பர் ஹீரோ. அநியாயங்களை தட்டிக் கேட்பார். சில பிரச்னைகள், அதிலிருந்து மீள்வார். இது சாதராண கதைதான். அது எடுத்து வைத்திருக்கிற விஷயம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். என் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன். "அஞ்சாதே' எல்லோரையும் கவனிக்க வைத்தது. "நந்தலாலா' நான் படைப்பாளியாக இருப்பதற்கு பெருமைப்பட வைத்தது. "யுத்தம் செய்' படத்தில் பெற்றோர்களின் கவலையை, கண்ணீரை எடுத்து வைத்தேன். இப்போதும் என் படங்களை பயந்து பயந்துதான் செய்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக. என் எல்லாப் படங்களிலும் ஏதோ புதிய விஷயங்களை முன்னெடுத்து வந்திருக்கிறேன். விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். "முகமூடி' நிச்சயம் வேறு மாதிரியான படம்தான்





.ஜீவா முன்பு மாதிரி இல்லை. எதிர்பார்க்காத இடத்துக்கு வந்து விட்டார். அவருக்கான இடத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?




ஜீவா இப்போது ரொம்பவே ஷார்ப். முதன் முதலில் நான் சந்தித்த ஜீவா இப்போது இல்லை. நாளுக்கு நாள் பக்குவப்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அவருடயை சினிமா அக்கறை என்னை ஆச்சரியப்படுத்தும். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்திலும் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு இது நம்பிக்கையான படம். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சிம்பிளான கதையானாலும், தொழில்நுட்ப ரீதியில் படமாக்கும் போது பெரிய சவால் இருந்தது. படத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரொம்பவே வெயிட்டான சூப்பர் மேன் உடை அணிந்து நடித்தார். ஷாட் இல்லாத போதும் அதை அணிந்திருக்க வேண்டிய அவசியம். ஏ.சி. அறைக்குள் அமர்ந்திருந்தாலும் வியர்க்கும். ரொம்பவே கஷ்டம். ஜீவா இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு இருந்திருக்குமா என்று சொல்ல தெரியவில்லை. ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் காத்திருக்கிறது. ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஹிந்திக்கும் போக போகிறார் என சொன்னார்கள். அவருக்கு இன்னும் தகுதிகள் கிடைக்கும்.





என்ன, நரேனை வில்லனாக்கி விட்டீர்களே?




நரேன் என் பெருமை மிகு தயாரிப்பு என சொல்லலாம். நான் கேட்டால் அவன் எந்த வேடத்திலும் நடிப்பேன் என்பான். அந்தளவுக்கு குரு பக்தி மிகுந்தவன். ""நீங்கதான் சார் என்ன தூக்கி விடணும். வேறு யாரு எனக்கு இருக்கா''ன்னு கேட்கும் போதே, என் பழைய வாழ்நாள் ஞாபகத்துக்கு வந்து விடும். என்னை மாதிரியே நிறைய உழைப்பான். சினிமா பற்றி நிறைய தெரிந்தவன். நரேன்தான் இதற்கு சரியாக வருவான் என்று தோன்றியது. கேட்டதும், ""எப்போ சார் ஷூட்டிங் வரணும்''ன்னு கேட்டான். ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடுகள் எல்லாம் அவனுக்கு தெரியாது. அவனிடம் கேட்டுப் பாருங்கள். ""நான் சினிமா நடிகன்'' என ரொம்பவே சிம்பிளாக பதில் சொல்லுவான். ரொம்பவே நம்பகமானவன். இது போக உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செல்வாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்திருக்கிறேன். அப்புறம் ஹீரோயின்ஸ்... பூஜா ஹெக்டே, மும்பை பொண்ணு. நல்லா நடித்திருக்கிறார்.





"மிஷ்கின் இயக்கத்தில் கமல்' என்று செய்தி வந்த காலமெல்லாம் உண்டு. ஆனால் அதன் பின் எந்தவொரு பெரிய ஹீரோவுக்கும் கதை சொல்லுவதே இல்லையா? அஜித், விக்ரம், விஜய், சூர்யா யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா?





அதை கதைதான் தீர்மானிக்க வேண்டும். நான் யாரையும வலுக் கட்டாயமாக எந்த கதைக்குள்ளும் கொண்டு போய் திணிக்க முடியாது. அப்படி செய்தால் அது நல்லா இருக்காது. நீங்கள் சொல்லுகிற எல்லோருமே அருமையான நடிகர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன். அஜித் அருமையான மனிதர் என கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் எந்த கதைக்கும் சரியாக பொருந்துவார். விக்ரம் பெரிய பெரிய இடங்களுக்கு போய்க் கொண்டே இருக்கிறார். சூர்யாவை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இவர்களுக்கெல்லாம் கதை தயார் செய்யும் எண்ணத்துக்கே நான் இன்னும் போகவில்லை. யாருக்காவது ஒருவருக்கு படம் இயக்கினாலும் என் பாணி மாற வேண்டும். அந்த பக்குவம் எனக்கு இப்போதைக்கு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்கு தகுந்த கதைகள் அமைந்து, அதில் அவர்கள்தான் நடிக்க வேண்டும் என தேவை ஏற்பட்டால் நிச்சயம் நடக்கும். அதை அப்போதைய சூழல்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்கு எனக்கு இந்த இடம் போதும்.




"நந்தலாலா' உங்களை நல்ல நடிகராகவும் பளிச்சிட வைத்தது. தொடர்ந்து நடிக்கலாமே?



நண்பர்கள் பலரும் இதை கேட்கிறார்கள். எனக்கான கதைகள் அமையும் போது நிச்சயம் நடிப்பேன். மற்றபடி வேறு ஒருவரின் இயக்கத்தில் நடிப்பது சரியாக வருமா என்று தெரியவில்லை. யோசிக்கலாம்.இந்தப் படத்திலும் கே-தான் மியூசிக். அவரின் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல்?ரொம்பவே இசை தெரிந்தவன் கே. "யுத்தம் செய்' படத்தின் போது, ரொம்ப சின்ன பையன். ஆனால் அவன் பேசுகிற விஷயங்கள் ரொம்பவே ஆச்சரியம் அளிக்கும். ""உனக்கான உயரம் ரொம்பவே பெரிதாக இருக்கும்''ன்னு அவனை அழைத்துக் கொண்டு வந்து, "யுத்தம் செய்' படத்தில் மியூசிக் செய்ய வைத்தேன். எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டான். நிறைய இசை ஞானம் உள்ளவன். இப்போது கூட "ஆரோகணம்' படத்தில் ஒரு பாட்டு... அவ்வளவு சூப்பர். நல்லா வருவான்




.தமிழ் சினிமாவின் டிரெண்ட்டை கவனிக்கிறீர்களா? "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு அவ்வளவு கூட்டம் இருந்தது. "வழக்கு எண்' பரவலான பாரட்டுகளைப் பெற்றது. மக்களின் ரசனையை புரிந்துக் கொள்ள முடிகிறதா?



மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் படைப்பாளிகள்தான் அவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். ""ஒன்றுமே தெரியாமல் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் சேர்ந்தேன். இன்றைக்கு பெரிய இயக்குநராகி விட்டேன்'' என இனி யாரும் பேட்டி கொடுக்க முடியாது. ஏனென்றால் முதல் படத்திலேயே ரசிகர்கள் "செக்' வைக்கிறார்கள். அசிஸ்டெண்ட்டா சேர வேண்டும் என்கிற ஆசையில் ஒரு இளைஞன் என்னிடம் வந்தான். ""யாரையெல்லாம் படிச்சிருக்க''ன்னு கேட்டா, ""படித்தவர்களெல்லாம் சினிமாவில் சாதிக்க முடியாது''ன்னு ரொம்பவே சிம்பிளா பதில் சொன்னான். அவனை திட்டி அனுப்பி விட்டேன். முதலில் சினிமாவுக்கு வர வேண்டும் என முடிவெடுத்து விட்டால், நிறைய படியுங்கள். காலி டப்பாவாக வந்து இங்கு எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

0 comments: