Wednesday, October 03, 2012

பூனம் பாண்டேவின் டைரியிலிருந்து

1. பூனம் பாண்டேவின் டைரியிலிருந்து - உன் எதிரி முன் வாழ்ந்து “ காட்டுவதை” போன்று சிறந்த பழி வாங்கல் வேறு இல்லை 
---------------
2. அன்பெனும் தூண்டிலை நீ வீசினாய், நான்  மீனானேன், அலட்சியம் என்னும் வெய்யிலால் சுட்டாய், நான் கருவாடு ஆனேன்
--------
3. உன் மீது நேசமாய் இருந்தேன், நாசமாய் போனேன்
--------------------
4. இந்தியாவை வல்லரசாக்கவே பொருளாதாரச் சீர்திருத்தங்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:#  இப்படி பண்ணுனா  டல்லரசுதான் ஆகும்
-------------------------
5.உலகத்துலயே ரொம்ப கஷ்டமான வேலை கோபமா இருக்கும் பொண்டாட்டியை சமாதானப்படுத்தறதுதான்
--------------





6.  பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்கிறார்கள் - ஜெ. # கோட்டையை கோட்டை விட்டவரா வழி கேட்டது?




---------------------------


7. இதுக்குத்தான் நான் சொந்த சம்சாரத்துக்கிட்டே கூட எந்த வாதமும் பண்றதில்லை, எது சொன்னாலும் ஆமா சாமி தான் ;-0



------------------


8. இந்தியாவை ஆளும் தகுதி ஜெ.,விற்கு உள்ளது - ஓ.பி எஸ் # உலகத்தையே ஆட்டையைப்போடும் தகுதி கலைஞருக்கு இருக்கிறது, இப்போ சொல்லுங்க,யார் டாப்?



-------------------


9. ட்விட்டர்க்கு வரும்போது கூட சில பெண்கள் 4 இன்ச் பவுடர் போட்டுட்டுத்தான் உக்காருவதாக தகவலகள் தெரிவிக்கினறன # சும்மா



------



10. ஹீரோக்களைத் தலையில் தட்ட வேண்டும் - கே.வி.ஆனந்த் # அய்யய்யோ, அப்போ இளையதளபதி இனி வீங்குன தலைபதியா?



------------------


மழம்புழா அணை...



11. அக்.5ல் மனிதச்சங்கிலி போராட்டம்: திமுக அறிவிப்பு  # வாங்க, வாங்க, எல்லாத்தையும் ஒரே கூண்டுல அடைச்சுடறேன் - ஜெ



--------------------


12. நாளை காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நாங்கள் ஆஃபீசில் வெள்ளை கதர் சட்டை # ஏட்டிக்குப்போட்டியா லேடீஸ் என்ன பண்ணப்போறாங்க்ளோ?



----------------------



13. மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க விரும்புகிறேன்:சொல்கிறார் 86 திவாரி # திமுக ல சேருங்க, நிறைய எதிர்காலம் இருக்கு



-----------------------


14. மாற்றான், ஆங்கில படத்தின் காப்பி அல்ல - நடிகர் சூர்யா # அதை நீங்க சொல்லாதீங்க, டைரக்டரை சொல்ல சொல்லுங்க  பார்க்கலாம்




-------------------------


15. இண்ட்டர்வியூவில் - மிஸ், உங்க டைப்பிங்க் ஸ்பீடு எவ்ளவ்?



 சார், ஒரே டைம்ல  5 பேர் கூட சேட் பண்ணுவேன்




----------------------




16. அத்தான், மரியாதை மனசுல இருந்தா போதாதா?



 ம்க்கும், அதுக்காக நடு ரோட்டுல போடா டேய்னு சொல்றது எல்லாம் ஓவர்



-------------------------


17. அந்நிய முதலீட்டை திமுக எதிர்க்கும்  - மு. க # தலைவா, மோசம் போய்ட்டீங்களே, சோனியாவைத்தாக்கிட்டதா நினைச்சுடுவாங்களே?




-------------------------


18. பெண்ணாகப்பிறந்தால் ராமர் மகள்களையும் சந்தேகப்படுவார் என்றுதான் சீதைக்கே ஆண் குழந்தைகள் பிறந்திருக்குமோ என்னமோ?



---------------------------


19. நம்மை எல்லாம் மேலே இருந்து வாட்ச் பண்ணிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுவதால் கடவுளும் ஒரு வாட்ச்மேனே !




-------------------------


20. முதல் காதல் சொதப்பி விட்டால் முற்றிலும் கோணல் அல்ல !




--------------------------------


4 comments:

ராஜி said...

பெண்ணாகப்பிறந்தால் ராமர் மகள்களையும் சந்தேகப்படுவார் என்றுதான் சீதைக்கே ஆண் குழந்தைகள் பிறந்திருக்குமோ என்னமோ?
>>
வித்தியாசமான சிந்தனை. ஒருவேளை அதுதான் நிஜமோ?!

பிழைத்திருத்தி said...

எல்லாம் சரி.. வேர்ீஸ் பூனம் பாண்டேஸ் ஃபோட்டோ தல??

பிழைத்திருத்தி said...

எல்லாம் சரி.. வேர்ீஸ் பூனம் பாண்டேஸ் ஃபோட்டோ தல??

Unknown said...

@ராஜி

free'ya vidunga raji. Adhu idhigasa kadhai. kadhaiya padikuravangaloda suvarasiyathuga oru shock value kuduka kadhasiriyar potta knot.