Showing posts with label மிஷ்கின். Show all posts
Showing posts with label மிஷ்கின். Show all posts

Saturday, January 25, 2020

சைக்கோ - சினிமா விமர்சனம் 25+

psycho tamil के लिए इमेज परिणाम

ஹீரோ ராஜபார்வை , காசி ,தாண்டவம் படங்கள்ல வர்ற ஹீரோ மாதிரி விழி ஒளி இழந்தவர் , ஹீரோயின் ஒரு ரேடியோ ஜாக்கி . பொதுவா தறுதலையா வெட்டியா இருக்கற பசங்களுக்கு ஒருதலையா எதுனா ஃபிகரை லவ் பண்றது வழக்கமான பழக்கம், இதிலும் டிட்டோ , ஆனா பாப்பா ஏத்துக்கலை , ஒரு மேடை நிகழ்ச்சில ஹீரோவை ஹீரோயின் அவமானப்படுத்துது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாத ஹீரோ ஒரு பாட்டு பாடறார். மைக் மோகன் டைப்ல வர் பாடறதைக்கேட்டு ஹீரோயின் மனசு மாறி உன்னை லவ் பண்றேனா? இல்லையா?ங்கறதை  நான் க்ளூ கொடுக்கற இடத்துக்கு நீ சரியா வந்தா லவ்வை சொல்றேன்குது பாப்பா . ஒரு கேவலமான க்ளூ தருது.


 எங்கேயோ அத்துவானக்காட்டில்  ஹீரோயின் ஹீரோவுக்காக வெய்ட்டிங்
 அங்கே ஹீரோவும் எண்ட்ரி , வில்லனும் எண்ட்ரி . வில்லன் அல்ப சொல்பமானவன் இல்லை. ஆல்ரெடி பல பெண்களை கொலை செஞ்சவன். ஹீரோயினை கடத்திட்டுப்போய்டறான்

 அதுக்குப்பின் என்ன ஆச்சு? ஹீரோ ஹீரோயினை மீட்டாரா? புரொடியூசர் போட்ட முதலீட்ல பாதியாவது  திருப்பி எடுத்தாரா?

 வெண் திரையில் காண்க


சைக்கோ கொலைகாரன் பற்றி தமிழில் வந்த முக்கியமான படங்கள்
பாலுமகேந்திராவின்  மூடுபனி  ( ஹிட்)
பாரதிராஜா வின் சிகப்பு ரோஜாக்கள் ( செம ஹிட்)
சிம்பு வின் மன்மதன் ( செம ஹிட்)
கவுதம் வாசுதேவ் மேனன்   நடுநிசி நாய்கள் ( அட்டர் ஃபிளாப்)
செல்வராகவன்  காதல் கொண்டேன் ( சூப்பர் ஹிட்)
ராம்குமார்  ராட்சசன்  செம ஹிட்
செந்தில்   காளிதாஸ்  ஹிட்

இந்த லிஸ்ட்டைப்பார்த்துட்டு மிஸ்கின் என்ன கணக்கு போட்டார்னா சைக்கோ படம்னா வெற்றிக்கான வாய்ப்பு ஜாஸ்தியா இருக்கு , நாமளும் நம்ம பங்குக்கு ஒண்ணை இறக்குவோம்னு களம் இறங்கி இருக்கார்


படத்துல மிகப்பெரிய பிளஸ்  இளையராஜா , உன்னை நினைச்சு நினைச்சு  செம ஹிட் மெலோடி . படத்துக்கு இவ்ளோ ஓப்பனிங் கிடைக்க முக்கியக்காரணம் பாட்டு ஹிட் ஆனதே ., இது போக 2 பாட்டு இருக்கு , அதுவும் பரவால்லை ரகமே . பிஜிஎம் பற்றி
  சொல்லவே வேணாம், இளையராஜா அதில் விற்பன்னர் ,. முதல் பாதில சுமாரா போன இசை  பின் பாதியில் பட்டாசைக்கிளப்புது


ஒளிப்பதிவு ரொம்ப முக்கியம்,. சைக்கோ கொலைகாரன் ஸ்பாட் ம்னட்டும் டிம் அடிச்ச மூட்ல காட்டிட்டு மற்ற இடங்களை எல்லாம் பிரமாதமான லைட்டிங்கோட ஒளி அமைத்த விதம் அருமை


நித்யா மேணன் நடிப்பு  குட் , ஆனா ஒரு பொறுப்பான போலீஸ் ஆஃபீசர் அம்மாவைக்கூட மரியாதை இல்லாம  வாடி போடி எனவும் பேர் சொல்லியும் கூப்பிடறது என்ன மாதிரி கேரக்டர் ஸ்கெட்ச்? ஒரு வேளை மூன்றாம் கலைஞர் இருப்பதால் யாரும் அம்மாவை மதிச்சா பிடிக்காது என இயக்குநர் நினச்சாரோ என்னவோ?

2015ல இருந்து 2019 வரை கொலைகள் வரிசையா நடக்குது ஆனா போலீஸ் கண்டுபிடிக்க முடியலை என்பதெல்லாம் பூச்சுற்றல்


இயக்குநர் ராம் போலீஸ் ஆஃபீசரா வர்றார். அவரைப்பார்த்தா சுறுசுறுப்பான போலீஸ் மாதிரி தெரியல என்னமோ மூலம் வந்த  ஆதிமூலம் மாதிரி வீக்கா டயர்டா தெரியறார்.

 சார் உங்க உயிருக்கு ஆபத்து எஸ் ஆகுங்க என நாயகி எச்சரிக்கும்போது  . அட போம்மா ரொம்ப டயர்டா இருக்கு அப்டிங்கறார், அய்யோ ராமா

மூன்றாம் கலைஞர் அப்படியே தன் தாத்தா அப்பா மாதிர் , அவங்க 2 பேரும் அரசியல்ல மக்களிடம் நடிச்சாங்க , இவர் சினிமா ல நடிக்கறாரு .ஓவர் ஆக்டிங் எதும் பண்ணாம  அடக்கி வாசித்திருப்பது சிறப்பு

 நாயகியா அதிதி செம ஆக்டிங். முகம் தாமரை மாதிரி  சாரி தமிழர்களுக்குதான் தாமரைன்னாலே அலர்ஜி ஆச்சே? நந்தியா வட்டைப்பூ மாதிரி.

 வில்லன் மிரட்டல் நடிப்பு, ஆஜானுபாவக உய்ரம்.

சிங்கம்புலி கொஞ்சம் ஆறுதல்

aditi rao hydari hot के लिए इमेज परिणाम
நச் வசனங்கள்


1  சைக்கோ,சீரியல் கில்லர் என்ன வித்யாசம்?
2ம் 1தான்.
ஒரு மனுசன் இன்னொரு சக மனுசனை கொலை செய்ய அவனுக்கு உரிமை இல்லை.அப்படி அவன் தொடர்ந்து கொலை செஞ்சுட்டே வந்தா அவன் சைக்கோ

ஜாதி வெறில கொல்றவனும் சைக்கோதான் #PsychoFromtoday


இப்டி என் பொண்ணு பின்னாடியே எப்பவும் வர்றியே?

சீக்கிரம் "முன்னுக்கு" (முன் வரிசைஹீரோவா)வந்துடுவார்.. #PsychoFromtoday

கொலைகாரனைப்பிடிக்கனும்னா சாகறதுக்கு தயாரா இருக்கனும் #PsychoFromtoday








தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  மூன்றாம்"கலைஞர் சில பல படங்கள் நடிச்சிருந்தாலும் ஒருகல் ஒரு"கண்ணாடிதான் ஹிட்.எம்.ராஜேஷ் + சந்தானம் காம்போவால் தப்பிச்சாரு.ஆனா நாளை வெளியாக இருக்கும் "சைக்கோ" மிஷ்கின்,இளையராஜாவையும் தாண்டி அவருக்கு பேர் வாங்கித்தரும்னு எதிர்பார்க்கிறேன்

ஹீரோ க்கு ஹீரோயின் மேல இருக்கற அன்பை,காதலை,அபிமானத்தை"முதல்ல சிலகாட்சிகளால் ,வசனங்களால் ஆடியன்சுக்கு புரிய வெச்சுடனும்.அதுக்கப்புறம்தான் ஹிட் சாங் இன்செர்ட் பண்ணனும், எ குட் மூவ் இன் ராங் ப்ளேஸ் ,உன்னை நினச்சு நினச்சு செம ஹிட் சாங்கை ஓப்பனிங் லயே இறக்கியது பெரிய தவறு #PsychoFromtoday


ஒரு இயக்குநர் தன் கொள்கைலயும் கோட்பாடுகள்லயும் உறுதியா இருக்கலாம்,ஆனா காதல் வெளிப்படுத்தும் முக்கியக்காட்சியில் க்ளோசப் ஷாட் வைக்காமல் லாங் ஷாட்தான் வைப்பேன் னு அடம் பிடிப்பது ஏனோ? #PsychoFromtoday


மூன்றாம் கலைஞரின் நடிப்பு கனகச்சிதம் ,அவரு குடும்பமே நடிப்பு ரத்தத்துல ஊறி இருக்கே? #PsychoFromtoday


படத்தின் முதல் பாதில இளையராஜா கால்ஷீட் கிடைக்கல போல.வட்டியும்,முதலுமா பின் பாதில பிஜிஎம் ல பின்னிப்பெடல் எடுத்துட்டாரு #psyco




சைக்கோ யார் எல்லாம்பார்க்கக்கூடாது?
1 இளகிய மனம்"கொண்டோர்
2 கர்ப்பிணிப்பெண்கள்
3 தனிமையில் வசிக்கும் ஆண்கள்
4 ரத்தம் கண்டால் அலர்ஜி உள்ளவர்கள்;
5 ஒரு படம் பார்த்தா அதில் வரும் வில்லன்"போல்"நாமும் செஞ்சு பார்த்தா என்ன? என்ற எண்ணம் கொண்டவர்கள்
6 வயது 25 க்கும் கீழ் உள்ளோர்



7  சைக்கோ படத்துல இயக்குநர் சொல்ல வரும் நீதி = பல கொலைகள் கொடூரமா செஞ்சிருந்தாலும் சைக்கோ வை யாரும் வெறுக்கக்கூடாது,அன்பு"காட்டனும்,அன்புக்காக ஏங்கிதான் ,சில சம்பவங்களால் பாதிக்கப்பட்டுதான்"அவன் சைக்கோ ஆகறான்,எனவே அன்பு"செய்யுங்கள் #psyco

8   ஹீரோ கேரக்டர் வடிவமைப்பில் ஒரு சறுக்கல்
நண்பன் = நான்தான் உன் வாழ்வின் வெளிச்சம்னு சொல்வியே,இப்போ என்னை போ னு துரத்துனா நான் எங்கே போவேன்?
நாயகன் =போ ,எங்காவது போய் செத்து ஒழி
அடுத்து வரும் காட்சியில் நண்பன் இறக்கப்போகிறார் ங்கற குறியீடு ஓகே,ஆனா ஹீரோ கேரக்டர் புஸ் #psyco




சபாஷ் டைரக்டர்


1   இளையராஜாவிடம் கெஞ்சியோ , பம்மியோ நல்லபடியா 3 பாட்டு வாங்கிய திறமை


2  வாய்ப்பிருந்தும்  ரேப் சீன் வைக்காதது


3  ஹீரோவுக்கு க்ளைமாக்ஸ் ல வில்லன் கூட சோலோ ஃபைட் வைக்காதது

aditi rao hydari hot के लिए इमेज परिणाम


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1 − வழக்கமாக தான் கொலை செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் கொல்லும் முன் அவள் முகத்தில் மரண பயத்தை ரசித்து பின் கொல்லும் சைக்கோ கொலைகாரன் நாயகி கண் முன் கொல்லும் பெண்ணை மட்டும் மயக்க நிலையில் கொல்வது ஏன்? #PsychoFromtoday


லாஜிக் மிஸ்டேக் 2− ஒரு வீட்டு எஜமானியை பாக்க வரும் விழி ஒளி இழந்த நபரை அந்த வீட்டு பணிப்பெண் அவரை மாடிக்கு வழி நடத்தி செல்லாமல் "மேலே தான் இருக்காங்க,போய்ப்பாரு"என்பது ஏனோ? இத்தனைக்கும் அவர் நல்ல மனம் கொண்டவர்,உதவும் மனப்பான்மை கொண்டவர்னு குறிப்புகள் வருது #pshyco

லாஜிக் மிஸ்டேக் 3− சைக்கோ கொலைகாரன் தான் கடத்தும் பெண்களை ஒரு குட்டி நாயின் கவன ஈர்ப்பு மூலம்தான் கடத்தறான் என்பதை அறிந்து போலீஸ் மீடியாக்களில் நாய் வெச்சிருக்கற நாய் யாரையாவது"பாத்தா ஜாக்கிரதைனு வார்னிங் குடுக்குது,சைக்கோ அந்த விளம்பரத்தைப்பாத்து தன் ரூட்டை மாத்திக்கமாட்டானா?பூனைக்குட்டி வெச்சு ட்ரை பண்ண மாட்டானா? #psyco


லாஜிக் மிஸ்டேக் 4− சைக்கோ கொலைகாரன் ஒவ்வொருத்தரையும் கடத்து போது, பப்ளிக் ப்ளேஸ் ல தான் கடத்தறான், அதுவும் 14 வது கடத்தல்ல ஒரு கார் பார்க்கிங்கில் கொலையே செய்யுறாரே அங்கு சிசிடிவி கேமரா இருக்கா என்று கூட போலிஸார் விசாரிக்க மாட்டார்களா ? #PsychoFromtoday



லாஜிக் மிஸ்டேக் 5− கொலைகாரனால் தாக்கப்பட்டு கடைசி மூச்சில் இருக்கும் ஹீரோவின் நண்பன் ஹீரோவுக்கு ஒரு தகவல் சொல்ல ட்ரை பண்றப்ப பக்கத்துலயே இருந்த கொலைகாரனால் மறுபடி தாக்கப்படறாரு. ஈசியான வழி sms.அதை ஏன் அவரு ட்ரை பண்ணலை #PsychoFromtoday



லாஜிக் மிஸ்டேக் 6− சைக்கோ வில்லன் 14 பெண்களை கொலை செய்தவன்,க்ளைமாக்சில் அவனை போலீசில் சிக்க வைத்து மன நல காப்பகத்தில்"சிகிச்சை தர விடும் பொறுப்பு எதுவும் இல்லாமல் மடத்தனமாக அவனை மன்னித்து இரக்கப்பட்டு விடுவது என்ன விதமான மனநிலை?சட்டப்படி ஹீரோ,ஹீரோயின்"செய்ததே தவறுதான் #psyco


லாஜிக் மிஸ்டேக் 7− சைக்கோ தனது பெரும்பாலான கொலைகளை நாய்க்குட்டியை முன் வைத்து பெண்ணின் கவனம் கவர்ந்து தான் கொலை பண்றான்,ஆனா அவனது இருப்பிடத்தில் நாய் இருக்கும் சுவடே இல்லை.அட்லீஸ்ட் பேக்க்ரவுண்டில் நாய் குரைக்கும் சத்தம் கூட கேட்கலை #psyco


லாஜிக் மிஸ்டேக் 8− சைக்கோ ஹீரோயினை குணா"கமல் மாதிரி தன் இடத்தில் 7 நாட்கள் அடைச்சு வெச்சிருக்கான்,வேளாவேளைக்கு சாப்பாடு தர்றான்,ஆனா ஒரு டிரஸ் கூட மாத்திக்க தர்லை,ஒரு"வாரமா அழுக்கு டிரஸோடவே அழகு ஹீரோயின் #psyco


9  லாஜிக் மிஸ்டேக் 9− மேட்டுப்பாளையத்தில் உள்ள 53 பன்றிப்பண்ணைகளில் ஏதோ ஒன்றில் வில்லன் இருக்கான்னு"தகவல் தெரியுது.உடனே போலீசுக்கு தகவல் தந்தா அவங்க பல பிரிவா பிரிஞ்சு 1 மணி நேரத்தில்"பிடிச்சிருப்பாங்க,இவரு 2 பேர் மட்டும் 53 இடம் போய் விசாரிக்க 2 நாள் ஆகும் #psyco


10  லாஜிக் மிஸ்டேக் 10− விழி ஒளி இழந்தவர் பல நாட்கள் பழகிய தனது வீட்டில் நடமாடுவது"எளிது,ஆனால்"முன்"பின்"அறியாத வில்லன் இருப்பிடம் போய்"கரெக்டா லெப்ட்ல திரும்பி ரைட்ல கட் பண்ணி பேக்ல டர்ன் பண்றதெல்லாம் பேரரசு ,ஹரி படத்துக்கு ஓகே,மிஷ்கின்"படத்திலுமா?இதுல நடந்து போகாம ஓடி வேற போறாரு #psyco


11 லாஜிக் மிஸ்டேக் 11- சைக்கோ ஆனது"எப்படி ?என்பதற்கு பிளாஸ்பேக் வெச்சாதான் அது"அழுத்தமா ஆடியன்ஸ் மனசுல பதியும் (உதா− சிகப்பு ரோஜாக்கள், காதல்"கொண்டேன், மன்மதன்,நடுநிசி நாய்கள்) சும்மா வசனத்துலயே சமாளிக்கறது வேலைக்கு ஆகாது.அதுவும் வில்லன் தன்"வாயால ஹீரோயின்ட்ட சொல்ற மாதிரி காட்ட வாய்ப்பிருந்தும் விட்டுட்டாங்க.வேற ஒரு கேரக்டர் அதை விளக்குவது நிக்கலை #psyco


12 லாஜிக் மிஸ்டேக் 12− விழி ஒளி இழந்த ஹீரோ ஒரு பணக்காரர்,கார் வெச்சிருக்கார் ,ஒரு டிரைவர் வெச்சுக்க மாட்டாரா?கண்ணாமூச்சி விளையாடறப்ப லெப்ட்ல போ,ரைட்ல போ னு சொல்றமாதிரி க்ளைமாக்ஸ்ல காரை நித்யாமேணன் வழி காட்ட ஓட்றாரு #psyco .


13  லாஜிக் மிஸ்டேக் 13−வில்லனை ஹீரோ இன்னும் பிடிக்கலை,நேருக்கு நேர் சந்திக்கலை,சில க்ளூ மட்டும் கிடைக்குது,ட்ரை பண்றாரு,ஆனா வில்லன் பேக்கு மாதிரி "நான் உன் கிட்ட தோத்துட்டேன் னு 4 டைம் தனிமை ல கத்தறாரு,200 ருபா அங்கேயும் வேலை செய்யுது போல #psyco


14  லாஜிக் மிஸ்டேக் 14−எந்த அடிப்படையில் வில்லன் தான் கொலை செய்யும் பெண்களைத்தேர்வு செய்கிறான்?னு கண்டுபிடிக்கவே முடியலையே? 14 பேரு கொலை செய்யப்பட்டதுல 14 பேரையும் இணைக்கும் கோடு இல்லையே னு ஹீரோ ,போலீஸ்,ஆடியன்ஸ் அங்கலாய்க்கறாங்க,கடைசி வரை யாருக்குமே விடை தெரில #psyco

15  லாஜிக் மிஸ்டேக் 14− சைக்கோ வுக்கான பிளாஸ்பேக்கில் ஆணான அவரை இன்னொரு ஆண் ரேப்பிட்டதா (!) வசன ரீதியா தெரிவிக்கிறார்.அப்போ லாஜிக்படி அவர் அந்த மாதிரி ஹோமோ டைப் கேரக்டர்களைத்தானே தேடி கொலை செய்யனும்?அப்டி செய்யலை #psyco





 விகடன் மார்க் ( யூகம்)  -42

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  4/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் -3.25 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-சைக்கோ − 14 பெண்களைக்கொலை செய்த சைக்கோவை பிடிக்க முயலும் ஹீரோவின் கதை.மிஷ்கின் அதகளம்,இளையராஜா பிஜிஎம்ல,கலக்கிட்டார்,மூன்றாம் கலைஞர் குட் ஆக்டிங்.அனைத்துத்தரப்பினருக்கும் ஏற்ற படம் அல்ல,கொடூரக்காட்சிகள் உள்ளடக்கம்,விகடன் 42 ,ரேட்டிங் 3.25 / 5 ,ஏ செண்ட்டர் பிலிம் #psyco



Friday, December 19, 2014

பிசாசு- சினிமா விமர்சனம்

a

தமிழ்  சினிமா கொண்டாட வேண்டிய முக்கியமான  இயக்குநர்களில்  ஒருவரான மிஷ்கின்  ஓநாயும்  ஆட்டுக்குட்டியும் படத்தின்  வெற்றிக்குப்பின் மீண்டும்  களம்  இறங்கி  இருக்கும்  படம்  பிசாசு. 


ஓப்பனிங்  சீன்லயே   ஹீரோயின்  சாலை  விபத்தில்  இறந்துடுது. ஹீரோ  வீட்டில்  அவர் நினைவா  இருக்கும்போது ஹீரோயின்  ஆவி நடமாட்டம்  வீட்டில்  இருப்பதை உணர்கிறார்.  ஆவி அமுதா  மாதிரி  ஒரு பொண்ணைக்கூட்டிட்டு வந்து  எஸ்டிமேட்  போட்டு  பேய்  ஓட்டப்பார்க்கும்போது  அந்த  அமுதாவையே மிரட்டி  பேய்  ஓட வைக்குது .


ஹீரோ குடி  இருக்கும்  அப்பார்ட்மெண்ட்டில்   ஒரு  குடிகாரப்புருசன் தன்  சொந்த சம்சாரத்தை  அடிச்சதைப்பொறுக்கமாட்டாம  அந்தப்பேய் அவனை  உண்டு  இல்லைன்னு ஆக்கிடுது.


ஒரு கட்டத்தில்  ஹீரோவின் அம்மாவையே  குற்றுயிரும்  கொலை உயிருமா ஆக்கிடுது அந்தப்பேய்.எதனால்?  இதுதான்  படத்தின்  பின் பாதி திரைக்கதை .


ஹீரோ  புதுமுகம் . நம்ம  பிரபல  வலைப்பதிவர்  ஃபிலாசபி பிரபாகரன் சாயலில் தனுஷ்  உடல் வாகில் இருக்கார். அவர் தலைமுடி  முற்றிலும் முன் நெற்றியை  மறைப்பது  என்ன  மாதிரியான  குறியீடோ?  மணிரத்னம்  படம் போல்  வசனம்  குறைவு என்பதால்   ஹீரோவுக்கு  சவுகர்யம் . படத்தின்   பாரத்தை கேமராமேனும் , இசை அமைப்பாளரும்  தாங்கிச்செல்வதால் பாத்திரங்கள்  பெரிதாக  மெனகெட  வேண்டிய அவசியம்  நிகழவில்லை .ரயில்வே  சுரங்கப்பாதையில் அவர்  போடும் ஃபைட்  சீன்  அப்படியே  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட  ஃபைட்  சீனை  நினைவுபடுத்தினாலும் ஹீரோவின்  பங்களிப்பு  பக்கா .


நாயகி  புதுமுகம்  பிரயாகா மாசு மருவில்லாத முக அழகுடன் மாசிலாமணியாய்  கண்ணியமான  தோற்றத்தில்  இருக்கிறார்.  அவருக்கு  காட்சிகள்  மிகக்குறைவு . இன்னும்   பயன்  படுத்தி  இருக்கலாம்


 இளையராஜா   செய்ய  வேண்டிய பணியை  மிகச்சிறப்பா  பண்ணி  இருக்கார் அறிமுக  இசை அமைப்பாளர் . இவர்  பேசிக்கலா  ஒரு  வயலினிஸ்ட்  என்பதால்   படம்  பூரா   வயலின்  இசை தான்





a



Actress Prayaga in Pisasu
மனதைக் கவர்ந்த  வசனங்கள்



1  சார்,உங்க  பாட்டு  சூப்பர்.அதைப்பத்திதான்  இங்கே டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கு.

ம்,


சார்.சில்லறை இருந்தா ஒரு நூறு  ரூபா  கிடைக்குமா?# பிசாசு


2   யாருடி அவன் ?

 அவர் யாருன்னே எனக்குத்தெரியாதுங்க .



என்னடி?என்னையும் அவர்ங்கறே ? பக்கத்து வீட்டுக்காரனையும் அவர்ங்கறே? #பிசாசு



3  அடுத்த  வீட்டு ஜன்னலைத்திறந்து எட்டிப்பார்ப்பதில்  ஒரு அலாதி சுகம் # பிசாசு


4  சார் , திருடறது  தப்பில்லையா?

 பூட்டுன வீட்டில்  திருடுனாத்தாண்டா  தப்பு # பிசாசு


5 எல்லாரும் சாப்ட்டீங்களாடா?

ம்

 ஆனா நான்  இன்னும்  சாப்பிடலைடா. ஒரு 500 ரூபா கிடைக்குமா?

 அடிங். ஓடிடு # பிசாசு









 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஹீரோயினுக்கு  குளிக்கற சீன்  வைங்கய்யான்னா  இப்பவெல்லாம்  ஹீரோக்கு தான்  குளியல்  சீன் வைக்கறாங்க


2  மவுனம் ,நிசப்தம்  கூட சில  சமயங்களில் சிறந்த  பின்னணி இசை என்ற  பெயரைப்பெற்றுத்தரும்


3 ரயில் சுரங்கப்பாதையில்  ஃபைட்  சீன்  வைப்பது  மிஷ்கினின் ராசி  செண்ட்டிமெண்ட்டில் ஒன்று,பிரமாதமான பின்னணி  இசை , கேமரா  கோணங்களில்


4  பேய்  ஓட்ட வந்த  பெண்  பேய்க்கே  பலி ஆகும் காட்சியில் பி  இசை  மிரள வைக்குது.தியேட்டர்ல அவனவன் ஆடிட்டான் #பிசாசு

5  பேய்ப்படத்துக்கான  ஆரம்பக்கட்ட  முஸ்தீபுகள் , பயம் காட்டல்கள்  அனைத்தும் ஓக்கே. வெற்றியைத்தீர்மானிக்கப்போகும்  பின்பாதி எப்படி இருக்கும்?












இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 பின்னணி இசை  , ஒளிப்பதிவில்  டெக்னிஷியன்கள்  மாறினாலும் தன் அக்மார்க்  பிராண்ட் பாணியை  மாற்றாமல்  தன் ரசிகர்களின்  எதிர்பார்ப்பை  பூர்த்தி  செய்தது 
2  ரயில்   சுரங்கப்பாதை  ஃபைட்  சீனை வடிவமைத்த  ஸ்டண்ட்  மாஸ்டரின் உழைப்பு , அதற்கு  உயிர்  கொடுத்த   பின்னணி இசை , கேமரா  கோணங்கள்


பேய்  ஓட்ட  வரும்  அந்த ஆவி அமுதா திடீர்  என  பெருங்குரல் எடுத்து  மிரட்டும்  காட்சியும்  , அதைத்தொடர்ந்து  வரும்  திகில்  காட்சியும்  கலக்கல்

4  இடைவேளைக்குப்பின்  வரும் கிச்சன்  ரூம்   திகில்  காட்சியில்  ஹீரோவின் நண்பரைப்பேய்   பயமுறுத்தும்  காட்சி யில்   பின்னணி இசை  மிரட்டல்


5   விழிஒளி இழந்தவர்களின்  பங்களிப்புடன்  நிகழும்  பாதாள  சுரங்கத்தில்  வரும்  பாடல்  காட்சியில்  ஃபிரெஞ்ச் படமான  ஜிப்சி  யம்மா   பட  பாதிப்பு  இருந்தாலும்  நுணுக்கமான  பதிவு



6  ராதா  ரவியின்   குணச்சித்திர  நடிப்பு   அருமை 




இயக்குநரிடம்  சில கேள்விகள்



1  ஓப்பனிங்     ஷாட்டில்  ஹீரோயின்  சாலையில்  அடிபட்டு  படுத்திருக்கும்  காட்சியில் நம்பகத்தன்மை குறைவு .பொதுவா  வண்டியில்  அடிபட்டதும்  குப்புற விழுவாங்க .அல்லது  ஒருக்களிச்சு படுத்த வாக்கில்  தான்  கிடப்பாங்க . கேமரா  கோணத்துக்காக அப்படி  சாதாரணமா  மல்லாக்க  படுத்த வாக்கில்  கிட்சக்க மாட்டாங்க . ஸ்கூட்டி  பெப்  விழுந்திருக்கும்  கோணத்துக்கும்  நாயகி  கிடக்கும்  கோலத்துக்கும்   மேட்ச் ஆகலை பொலீஸ் ஏன் அது பத்தி  சந்தெகப்படலை?





2  பேய்ப்படம்  போல் கொண்டு போய்  க்ரைம் த்ரில்லராய்  முடிக்கும் விதத்தில்  சமீபத்தில்  வந்த ர  படத்தின்  சாயல்


3  இன்வெஸ்டிகேஷன்    எல்லாம் கடைசி  30 நிமிடங்களில்  நடப்பதால்  முன்பாதி  முழுக்க   பேய் வரும்  பில்டப்களை  நம்ப வேண்டிய  சூழல்.


4  பேயின்  அப்பா  சிகரெட்  குடிக்கக்கூடாதுன்னு  பேய்  வந்து  தடுக்குது . அவ்வளவு  செய்யும்  பேய்  எதுக்கு  சுத்தி  அடிக்கனும். என்ன நடந்ததுன்னு   ஓப்பனிங்க்லயே  சொல்லி  இருக்கலாமே? அல்லது  குறிப்பால்  உணர்த்தி  இருக்கலாமே?


7  க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  குட் . ஆனா  எத்தனை  பேருக்குப்புரிஞ்சிருக்குமோ?





சி  பி  கமெண்ட் -- ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  படத்தை  விட  தரத்தில்  ஒரு படி  கம்மிதான் , ஆனால்  கம்ர்ஷியலா  அதை  விட நல்லாவே  போகும்  இப்போ  பேய்ப்பட  சீசன்  வேற



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -ஓக்கே



 ரேட்டிங்  =  2.75 / 5



Wednesday, October 03, 2012

கமலுடன் எப்போ? மிஷ்கின் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

http://icdn.indiaglitz.com/tamil/news/miskint020506_1.jpg

இங்கே எதையும் துணிச்சல் என வெளிப்படையாக பேசி விட முடியாது. அதற்குள் ஆயிரம் பேசி விடுவார்கள். அன்றாடம் நடக்கும் எல்லா விஷயங்களையும் நம்முடைய சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதே இல்லை. ஆனால், சினிமா என வந்து விட்டால், இது அவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ, இவன் வாழ்க்கையில் நடந்திருக்குமோ என சிறகு கட்டி விடுவார்கள். அதிலிருந்து தப்பிப்பதே பெரிய சவால். இந்தப் படமும் நிச்சயம் சவால்தான். சின்ன வயதில் நாம எல்லோரும் படித்த காமிக்ஸ் கதைதான் இது. ஒரு சூப்பர் ஹீரோ. அநியாயங்களை தட்டிக் கேட்பார். சில பிரச்னைகள், அதிலிருந்து மீள்வார். இது சாதராண கதைதான். அது எடுத்து வைத்திருக்கிற விஷயம் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கும். என் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறேன். "அஞ்சாதே' எல்லோரையும் கவனிக்க வைத்தது. "நந்தலாலா' நான் படைப்பாளியாக இருப்பதற்கு பெருமைப்பட வைத்தது. "யுத்தம் செய்' படத்தில் பெற்றோர்களின் கவலையை, கண்ணீரை எடுத்து வைத்தேன். இப்போதும் என் படங்களை பயந்து பயந்துதான் செய்துக் கொண்டிருக்கிறேன். என்னை யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக. என் எல்லாப் படங்களிலும் ஏதோ புதிய விஷயங்களை முன்னெடுத்து வந்திருக்கிறேன். விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். "முகமூடி' நிச்சயம் வேறு மாதிரியான படம்தான்





.ஜீவா முன்பு மாதிரி இல்லை. எதிர்பார்க்காத இடத்துக்கு வந்து விட்டார். அவருக்கான இடத்தை உணர்ந்து இருக்கிறீர்களா?




ஜீவா இப்போது ரொம்பவே ஷார்ப். முதன் முதலில் நான் சந்தித்த ஜீவா இப்போது இல்லை. நாளுக்கு நாள் பக்குவப்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, அவருடயை சினிமா அக்கறை என்னை ஆச்சரியப்படுத்தும். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு அவதாரம் எடுக்க ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்திலும் ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு இது நம்பிக்கையான படம். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சிம்பிளான கதையானாலும், தொழில்நுட்ப ரீதியில் படமாக்கும் போது பெரிய சவால் இருந்தது. படத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரொம்பவே வெயிட்டான சூப்பர் மேன் உடை அணிந்து நடித்தார். ஷாட் இல்லாத போதும் அதை அணிந்திருக்க வேண்டிய அவசியம். ஏ.சி. அறைக்குள் அமர்ந்திருந்தாலும் வியர்க்கும். ரொம்பவே கஷ்டம். ஜீவா இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு இருந்திருக்குமா என்று சொல்ல தெரியவில்லை. ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடம் காத்திருக்கிறது. ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஹிந்திக்கும் போக போகிறார் என சொன்னார்கள். அவருக்கு இன்னும் தகுதிகள் கிடைக்கும்.





என்ன, நரேனை வில்லனாக்கி விட்டீர்களே?




நரேன் என் பெருமை மிகு தயாரிப்பு என சொல்லலாம். நான் கேட்டால் அவன் எந்த வேடத்திலும் நடிப்பேன் என்பான். அந்தளவுக்கு குரு பக்தி மிகுந்தவன். ""நீங்கதான் சார் என்ன தூக்கி விடணும். வேறு யாரு எனக்கு இருக்கா''ன்னு கேட்கும் போதே, என் பழைய வாழ்நாள் ஞாபகத்துக்கு வந்து விடும். என்னை மாதிரியே நிறைய உழைப்பான். சினிமா பற்றி நிறைய தெரிந்தவன். நரேன்தான் இதற்கு சரியாக வருவான் என்று தோன்றியது. கேட்டதும், ""எப்போ சார் ஷூட்டிங் வரணும்''ன்னு கேட்டான். ஹீரோ, வில்லன் என்ற பாகுபாடுகள் எல்லாம் அவனுக்கு தெரியாது. அவனிடம் கேட்டுப் பாருங்கள். ""நான் சினிமா நடிகன்'' என ரொம்பவே சிம்பிளாக பதில் சொல்லுவான். ரொம்பவே நம்பகமானவன். இது போக உங்கள் எல்லோருக்கும் தெரிந்த செல்வாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்திருக்கிறேன். அப்புறம் ஹீரோயின்ஸ்... பூஜா ஹெக்டே, மும்பை பொண்ணு. நல்லா நடித்திருக்கிறார்.





"மிஷ்கின் இயக்கத்தில் கமல்' என்று செய்தி வந்த காலமெல்லாம் உண்டு. ஆனால் அதன் பின் எந்தவொரு பெரிய ஹீரோவுக்கும் கதை சொல்லுவதே இல்லையா? அஜித், விக்ரம், விஜய், சூர்யா யாரும் உங்கள் கண்களில் படவே இல்லையா?





அதை கதைதான் தீர்மானிக்க வேண்டும். நான் யாரையும வலுக் கட்டாயமாக எந்த கதைக்குள்ளும் கொண்டு போய் திணிக்க முடியாது. அப்படி செய்தால் அது நல்லா இருக்காது. நீங்கள் சொல்லுகிற எல்லோருமே அருமையான நடிகர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன். அஜித் அருமையான மனிதர் என கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் எந்த கதைக்கும் சரியாக பொருந்துவார். விக்ரம் பெரிய பெரிய இடங்களுக்கு போய்க் கொண்டே இருக்கிறார். சூர்யாவை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இவர்களுக்கெல்லாம் கதை தயார் செய்யும் எண்ணத்துக்கே நான் இன்னும் போகவில்லை. யாருக்காவது ஒருவருக்கு படம் இயக்கினாலும் என் பாணி மாற வேண்டும். அந்த பக்குவம் எனக்கு இப்போதைக்கு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்கு தகுந்த கதைகள் அமைந்து, அதில் அவர்கள்தான் நடிக்க வேண்டும் என தேவை ஏற்பட்டால் நிச்சயம் நடக்கும். அதை அப்போதைய சூழல்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதைக்கு எனக்கு இந்த இடம் போதும்.




"நந்தலாலா' உங்களை நல்ல நடிகராகவும் பளிச்சிட வைத்தது. தொடர்ந்து நடிக்கலாமே?



நண்பர்கள் பலரும் இதை கேட்கிறார்கள். எனக்கான கதைகள் அமையும் போது நிச்சயம் நடிப்பேன். மற்றபடி வேறு ஒருவரின் இயக்கத்தில் நடிப்பது சரியாக வருமா என்று தெரியவில்லை. யோசிக்கலாம்.இந்தப் படத்திலும் கே-தான் மியூசிக். அவரின் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல்?ரொம்பவே இசை தெரிந்தவன் கே. "யுத்தம் செய்' படத்தின் போது, ரொம்ப சின்ன பையன். ஆனால் அவன் பேசுகிற விஷயங்கள் ரொம்பவே ஆச்சரியம் அளிக்கும். ""உனக்கான உயரம் ரொம்பவே பெரிதாக இருக்கும்''ன்னு அவனை அழைத்துக் கொண்டு வந்து, "யுத்தம் செய்' படத்தில் மியூசிக் செய்ய வைத்தேன். எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி விட்டான். நிறைய இசை ஞானம் உள்ளவன். இப்போது கூட "ஆரோகணம்' படத்தில் ஒரு பாட்டு... அவ்வளவு சூப்பர். நல்லா வருவான்




.தமிழ் சினிமாவின் டிரெண்ட்டை கவனிக்கிறீர்களா? "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு அவ்வளவு கூட்டம் இருந்தது. "வழக்கு எண்' பரவலான பாரட்டுகளைப் பெற்றது. மக்களின் ரசனையை புரிந்துக் கொள்ள முடிகிறதா?



மக்கள் சரியாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் படைப்பாளிகள்தான் அவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். ""ஒன்றுமே தெரியாமல் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் சேர்ந்தேன். இன்றைக்கு பெரிய இயக்குநராகி விட்டேன்'' என இனி யாரும் பேட்டி கொடுக்க முடியாது. ஏனென்றால் முதல் படத்திலேயே ரசிகர்கள் "செக்' வைக்கிறார்கள். அசிஸ்டெண்ட்டா சேர வேண்டும் என்கிற ஆசையில் ஒரு இளைஞன் என்னிடம் வந்தான். ""யாரையெல்லாம் படிச்சிருக்க''ன்னு கேட்டா, ""படித்தவர்களெல்லாம் சினிமாவில் சாதிக்க முடியாது''ன்னு ரொம்பவே சிம்பிளா பதில் சொன்னான். அவனை திட்டி அனுப்பி விட்டேன். முதலில் சினிமாவுக்கு வர வேண்டும் என முடிவெடுத்து விட்டால், நிறைய படியுங்கள். காலி டப்பாவாக வந்து இங்கு எதையும் கற்றுக் கொள்ள முடியாது.