Tuesday, February 26, 2013

மிஸ் , ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?


மார்கழி மலரின் ஈர இதழில்
மறைந்து கிடக்கும் பூவின் பெண்மை
இறைந்து கிடக்கும் அன்பின் வாசம்
நிறைந்து அடைக்கும் என்சுவாசம்

மொட்டாய் குவிந்து கோபத்தில் சிவந்து
மலராய் விரிந்து மஞ்சத்தில் கிளர்ந்து
சிலையாய் நெளிந்து நெஞ்சுக்குள் நுழைந்து
அனலாய் அணைக்கும் புனலாய் இழைந்து

இசையின் வாசம் இதுவென காட்டும்
முனகல் நேசம் முழுதும் பேசும்
சுகமும் சுமையும் சுந்தர மாகும்
அகடும் முகடும் அடிக்கடி மாறும்

இகமும் செகமும் ஈடாகுமா..? - உனக்கு
இந்திர சொர்க்கம் காலாகுமா...? - எனக்கு
மந்திர மார்க்கம் நீயாகுமா...? - நமக்கு
சுந்தர சுதந்திரம் நிலவாகுமா..?

அழகின் ஒளியில் வழியும் ஆசையில்
அகமும் ஒளிரும் நெகிழ்ந்தே நாளும்
புறமும் மிளிரும் புன்னகை இதழில்
பூவின் தீண்டல் பூமிக்காந்தம்

அல்லும் பகலும் ஆருயிர் உன்னை
அணுவளவும் நீங்காத ஆயுள் வேண்டும்
கல்லும் காடும் மலையும் ஆறும்
நன்னும் மேடும் நாம்வாழ வேண்டும்

புல்லில் தொடங்கிய புழுதியின் வாழ்க்கை
சொல்லில் அடங்கிய கவிதையின் காதல்
என்னுள் அடங்கி உன்னுள் உயிர்த்து
ஏழ்பிறவிக் கடந்தும் சீவித்திருக்கும்.
1. பூனம் பான்டே சேலை உங்க கடைல இருக்கா?



 இருக்கு மேடம்.டேய்.அக்காவுக்கு அந்த கர்ச்சீப் எடுத்துக்குடு



-------------------------------


2. எப்பவும் பெண்களைப்பற்றியே சிந்திக்கும் ஒரு தலைவரின் மேடைப்பேச்சு  எப்படி ஸ்டார்ட் ஆகும்?

 தெரியலையே? நீயே சொல்லு 

 லேடீஸ் & ஜெண்ட்டில் விமன்


---------------------------


3. பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமா?




 மாப்ளை சமைச்சா வக்கணையா சாப்பிடத்தெரியும் 


-----------------------


4.  நைட் 10 மணிக்கு தூங்கறதா இருந்தா 8 மணிக்கே டின்னரை முடிச்சுடனும். டாக்டர்.எனக்கு மேரேஜ் இன்னும் ஆகலை.2 மணி நேரம் வேற என்ன பண்ண ?



-------------------------


5. சயின்ஸ் டீச்சர் சரோஜா - தண்ணீரில் கரையாதது எது? 



போலீஸ் காரர் மகன் - எங்கப்பா தொப்பை 



-----------------------



Photo


6. யுவர்ஆனர்.கிளாமரா டிரஸ் பண்றது அவரவர் விருப்பம்.தடை போடக்கூடாது. 




ஜட்ஜ் -அட்லீஸ்ட் கொஞ்சமாவது கவர் பண்ணிக்கம்மா.எனக்கே ஒரு மாதிரி இருக்கு 



------------------------------


7. டாக்டர்.கிளினிக் வந்த என்னை ஏன் போ நீ னு துரத்தறீங்க?



 மிஸ் வாணி.நீங்க தான் என் முத போணி னு தான் சொன்னேன், போ நீ -னு சொல்லலை 


-----------------------


8. அத்தான்..கிச்சன் இஸ் மை ப்லேஸ்..யாரையும் உள்ள விட மாட்டேன்




..நல்ல வேளை இதே பார்முலாவை பெட்ரூம்க்கு நீ பாலோ பண்ணலை.நான் தப்பிச்சேன்


----------------------------


9/. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவங்க தரணி ஆள்வாங்கனு ஜோசியர்ங்க அள்ளி விடறாங்ளே.அத்தனை பேரு ஒரே உலகத்தை ஆண்டா குழப்பம் வராதா?



------------------------



10. கீப் இன் டச் னா என்ன அர்த்தம்? 

சின்ன வீட்டை தொடு



--------------------




11. டாக்டர்.யார் எது சொன்னாலும் முத டைம் எனக்கு புரியமாட்டேங்குது.ரிப்பீட் னு கேட்டுடறேன்.



 புரியலையே.ரிப்பீட் . 


------------------------


12. உங்க பையன் சினிமா , இண்ட்டர்நெட் பைத்தியம்னு எப்படி சொல்றீங்க? 


ராதா சதா கூகுள் தெய்வம் அப்டிங்கறானே?




-------------------------------------------------------------------------------



13. டியர்.என் காதல் பரி பாஷை உங்களுக்கு ஏன் புரியறதே இல்லை?




 நான் என்ன குதிரைக்காரன் பேமிலியா? பரி பாஷை புரிஞ்சுக்க? 




---------------------------


14. டாக்டர்.இனிப்பு அதிகம் சேர்த்தா உடம்பு உப்புமா?




 நோ நோ ரவை கொஞ்சமாச்சும் சேர்த்தாதான் களர முடியும் உப்புமா 




----------------------------


15. உன் சம்சாரம் விஜய் ரசிகை னு எப்டி கண்டு பிடிச்சே?

- நான் ஒரு தடவை சமைச்சா என் சமையலை நானே வாய்ல வைக்க மாட்டேன்அப்டின்னாளே?




-------------------


Please Share...


16. டாக்டர்.அடிக்கடி சாக்லெட் சாப்டா என்ன ஆகும்?



 உங்களுக்கு சுகர் வரும்.எனக்கு வருமானம் வரும் 



--------------------


17. டாக்டர்,காலையில் 8 மணிக்கு எழுந்தா 9 மணிக்கே மீண்டும் தூக்கம் வருது 



.சரி, விழிச்சிருந்து என்னத்தை கிழிக்கப்போறீங்க, தூங்குங்க ;-) 



----------------------


18. ஹலோ மிஸ்டர், 26 வயசே ஆன என்னை ஏன் ஆண்ட்டின்னு கூப்பிடறீங்க?




 இதுக்குத்தான், நேரடியா வயசு என்ன?னு கேட்டா சொல்லி இருப்பீங்களா? 




----------------------


19.  டீச்சர், மனோரஞ்சிதப்பூ வாசத்துக்கு பாம்பு வருமா?



 அது தெரில , ரஞ்சிதா வாசத்துக்கு நித்தி வேணா வருவார் ;-)



------------------------


20. எனி ஹெல்ப் ஷாலினினு கேட்க லைசென்ஸ் எடுத்தவர் அஜித் மட்டுமே








-------------------------
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இடம்:அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவியர், வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக தமிழ் வாழ்க என எழுத்துக்களாக நின்று, தமிழை வளர்க்க, உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இடம்:அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி



21. விஜய் நடிச்ச ஆதியே ஹிட் ஆகலை, ஜெயம் ரவி நடிச்ச ஆதி பகவன் மட்டும் ஹிட் ஆகவா போகுது ?






-------------------------------




22. கும்பகோணம் ஃபிகரைப்பார்த்து “ நீங்க குடந்தை மடந்தையா?”ன்னு கேட்கக்கூடாது , அப்புறம் கும்ப கோபம் ஆகிடும்



--------------------------


23. லவ்வுன்னாலே பிடிக்காதுன்னு ஃபிலிம் காட்டும் ஃபிகர் கூட வாலிபால் ல சர்வீஸ் போடும்போது “ லவ் ஆல்”னு சொல்லித்தான் ஆகனும்






------------------------




24. மேத்ஸ் டீச்சர் - உனக்கு  வால்யூ தெரியாத ஒண்ணை X  ( எக்ஸ்) னு வெச்சுக்கோ.



லொள் மாணவன் - ஓக்கே மிஸ், அப்போ ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?








----------------------------------




25. அம்மா மெஸ் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்குன்னா ஜெ வுக்கு கோபம் வந்துடும். வெள்ளைத்தாமரை போல் இருக்கு என்க








------------------------------------


உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்
*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்

உலக தமிழ் மக்கள் இயக்கம்
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது
*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது
*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது..
*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க
*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது
*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது
*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது
*4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்
*தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்

உலக தமிழ் மக்கள் இயக்கம்



2 comments:

Unknown said...

அனைத்தும் ரசிக்க , சிரிக்க

Easy (EZ) Editorial Calendar said...

அனைத்தும் மிக மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)