Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, February 14, 2015

டாப் 6 காதல் சப்ஜெக்ட் தமிழ் சினிமா - விமர்சனம்

மூன்றாம் பிறை: காதலைத் தாலாட்டிய படம்
காதலைக் கொண்டாடிய எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. காதலைத் தாலாட்டிய படம் மூன்றாம் பிறை. விபத்தில் தன்னைப் பற்றிய நினைவுகள் அற்றுப்போகும் நாயகி விஜி (ஸ்ரீதேவி). பார்வையிலே குமரியாக, பழக்கத்திலே குழந்தையாக ஆகிப்போகிறாள். அவளை கண்ணின் இமைபோல் காக்கும் நாயகன் சீனு (கமல்ஹாசன்). இருவருக்கும் இடையேயான அன்பைச் சொல்லும் கதை.
மலைக்கிராமத்தின் அழகையும் பலதரப்பட்ட மனிதர்களின் மன ஆழத்தையும் இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் பாலுமகேந்திரா தனது முழுமையான ஆளுமையின் மூலம் பதிவுசெய்த படம் இது.
பூங்காற்று புதிரானது, பொன்மேனி உருகுதே, கண்ணே கலைமானே போன்ற பாடல்களுக்கான இசையிலும், பின்னணி இசையிலும், சில இடங்களில் இசையைக் கொண்டு கலைக்காத நிசப்தங்களாலும் படம் முழுவதும் வானளாவ உயர்ந்து நிற்பார் இளையராஜா.
பூங்காற்று புதிரானது எனும் பாலுமகேந்திராவுக்கே உரிய மாண்டேஜ் பாடலில் கமலுக்கும் தேவிக்கும் இடையில் ஓடிக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி (சுப்பிரமணி) அன்பின் குறியீடு!
`க’ என்னும் எழுத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதத் தொடங்கிய (கலங்காதிரு மனமே கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே) கண்ணதாசன், அதே ‘க’வில் தொடங்கும் கண்ணே கலைமானே என்னும் இறுதிப் பாடலை இந்தப் படத்துக்காக எழுதினார்.
வணிக ரீதியாகப் பேசப்படாத ராஜபார்வை படத்துக்குப் பின் சகலகலாவல்லவன் படத்தின் வணிக ரீதியான வெற்றிக்குப் பின், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று கமலுக்கு முதல் தேசிய விருது கிடைப்பதற்கும் காரணமாக அமைந்த படம் இது. காதலை வெளிப்படுத்திய படங்கள் முழு நிலவாய்த் திரை வானில் ஜொலித்தாலும் காதலைத் தன் கர்ப்பத்தில் வைத்திருந்த மூன்றாம்பிறை தன் கொள்ளை அழகால் மனதில் நிற்கிறது.
- யுகன்
புன்னகை மன்னன்: காதலில் எழுந்தால்...
வாழ்வின் விளிம்பில் நிற்கும் காதலர்கள் (கமல் - ரேகா) காட்டருவி பாயும் மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்துகொள்ளக் குதிக்கிறார்கள். காதலன் ஒரு மரக்கிளையில் சிக்கிக் கதற அவன் கண் முன்னே காதலி அதலபாதாளப் பாறையில் விழுந்து உயிரிழக்கிறாள். பார்வையாளரை இருக்கை நுனிக்குக் கொண்டு வரும் இந்தக் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. பொதுவாக ஒரு மணி நேரம் விவரித்துச் சொல்லப்படும் ஒரு முழு நீளக் கதையை இளையராஜாவின் இசையோடும், ரகுநாத ரெட்டியின் அசாத்தியமான ஒளிப்பதிவோடும் வெறும் பத்து நிமிடங்களில் சொல்லிவிடுவார் இயக்குநர் பாலசந்தர். இது `புன்னகை மன்னன்’, மீண்டும் `மரோசரித்ரா’ அல்ல என்பதையும் உணர்த்திவிடுவார்.
காதலியின் இழப்பிலிருந்து மீண்டு வர முயலும் நடன ஆசிரியரான சேது (கமல் ஹாசன்) சிங்களப் பெண்ணான மாலினியை (ரேவதி) சந்தித்ததும் படம் முற்றிலுமாக வேறு கோணத்தில் பயணிக்கத் தொடங்கும். ஆரம்பத்தில் மாலினியைக் கண்டாலே எரிந்து விழும் சேது, ஒரு கட்டத்தில் தான் மாலினியிடம் காதல் வயப்பட்டதால்தான் தன்னை முரட்டுத்தனமாக வெளிக்காட்டிக்கொண்டதாக ஒப்புக் கொள்ளும் காட்சி, அதனைத் தொடர்ந்து காதலாகிக் கசிந்துருகி சேதுவும் மாலினியும் ஆடும் நடனம் காதலின் உச்சக்கட்டம். பின்னணியில் காதல் நிரம்பி வழியும் அந்த இசைக் கோவைதான் இன்றும்கூட பல தமிழர்களின் காதல் சங்கீதம் எனலாம்.
காதலின் இழப்பு தரும் வலியைக் கடந்தும் வாழ்க்கை வழி விடுமானால் மற்றொரு காதல் அந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிவிடும் என்ற நெகிழ்வான உணர்வை அற்புதமாகச் சொன்ன திரைப்படம் புன்னகை மன்னன்.
- ம. சுசித்ரா
கடலோரக் கவிதைகள்: ஆழியில் பூத்த வலம்புரி
திரையில் அசல் தமிழ்க் கதாபாத்திரங்களை உலவவிடும் படைப்பூக்கம் மிக்க இயக்குநர் பாரதிராஜா தனித்துவமான காதல் படங்களைத் தமிழ்த் திரைக்கு அளித்தவர். வில்லனாகத் தோன்றிவந்த சத்யராஜின் நடிப்பின் சிறு பகுதியை முதல் மரியாதையில் கண்ட பாரதிராஜா அவருக்கென எடுத்த படம் கடலோரக் கவிதைகள். கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை வரிசையில் 1986-ல் வெளிவந்த இந்தப் படம் பாரதிராஜாவின் காதல் படங்களில் முக்கியமானது.
வழிதப்பிய ஆடாய் முட்டம் என்னும் கடலோரக் கிராமத்தில் திரிந்துகொண்டிருப்பவர் முரடனான சின்னப்ப தாஸ். நல்ல மேய்ப்பராக அந்தக் கிராமத்துக்கு வந்துசேர்வார் ஆசிரியையான ஜெனிஃபர். இவர்களிடையே அரும்பும் வலம்புரி சங்கு போன்ற காதலின் பயணமே இந்தப் படம். துள்ளிவரும் அலைகளின் ஓசையும், கடலோரத் தேவாலய மணியோசையும், அலையும் கரையுமாக இரு மனங்கள் பேசிக் கொள்ளும் காதலும் இணைந்த இசையை இளையராஜா செவியில் இட்டு நிரப்புவார்.
இப்படத்தின் ஈரமணல் கடற்கரை நிலமும், காதல் மனங்களின் உணர்வை வெளிப்படும் நுட்பமான காட்சிமொழியும், உணர்வை உந்தித் தள்ளும் கதைக்குப் பொருத்தமான இசையும் ஒரு கடலோரக் காதலைப் பார்வையாளனின் மனத்தில் நிரந்தரமாக இருத்திவிடும். மீனவக் கிராமமாக இருந்தும் மீனவ பாஷை இல்லை படத்தில். ஆனால் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் காதல் இதையும் மறக்கடித்துவிட்டது.
– ரோஹின்
அலைபாயுதே: விழிப்பூட்டிய காதல்
கல்லூரிக் காலத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, இரு வீட்டாருக்கும் தெரியாமல் இயல்பு வாழ்க்கையை அணுகி, ஒரு கட்டத்தில் உண்மையைப் போட்டு உடைப்பது என்பது நம் சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறிய காதல் கதைகள். அந்தக் கதையை வெள்ளித் திரையில் விரித்து, 'அலைபாயுதே பாணியில் திருமணம்' என்ற தலைப்பிலான ஆயிரக்கணக்கான செய்திகளுக்கு வித்திட்டார் இயக்குநர் மணிரத்னம். காதலர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோர்களுக்கும் 'விழிப்புணர்’வைத் தந்தது இப்படம்.
பொருளாதார ரீதியிலான நடுத்தர, மேல்தட்டு வர்க்க மக்களின் பார்வையில் 'காதல்' உணர்வை யதார்த்தமாகக் காட்டியது 'அலைபாயுதே'. இப்படத்தில் மாதவன் - ஷாலினி ஜோடியை இளம் காதலர்கள் பலரும் தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டனர். அதற்கு இணையாக, அரவிந்த் சாமி - குஷ்பு கதாபாத்திரங்களுடன் மூத்த ஜோடிகள் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளத் தவறவில்லை.
திருமணத்துக்குப் பின் சற்றும் குறைந்திடாத அன்பால் வாழ்கிறது காதல் என்ற பெருந்தகவலைக் குறிப்பால் சொல்லிச் சென்ற கதையின் மையமும், அதை சுவாரஸ்யப்படுத்திய திரைக்கதையும், ‘அலைபாயுதே' படத்துக்கு மட்டுமல்ல; மனம் அலைபாயும் இளம் காதலர்களின் வாழ்க்கை வெற்றிக்கும் அடித்தளம் அமைத்தன.
- இசக்கி
காதல்: மனிதம் சொன்ன ‘காதல்'
தமிழ் சினிமாவையும் காதலையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த நிலையில் 'காதல்' என்றே தலைப்பிட்டு வந்த படத்தில், பேசப்பட்ட காதல் எது? ஏழை நாயகன், பணக்கார நாயகி காதலிக்கும் பழைய கதைதான். பப்பி லவ் அல்லது விடலைப் பருவக் காதல் எனப்படும் காதலே படத்தின் அடிப்படை. இப்படிப் பலவும் ஏற்கெனவே நமக்குப் பழக்கப்பட்டவைதான். ஆனால், எடுத்துக்கொண்ட விஷயத்தை யதார்த்தத்தின் அருகிலிருந்து விலக்காமல், அதற்குரிய நிஜமான பிரச்சினைகளுடன் கதையை நகர்த்தியிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
அப்பா, சித்தப்பாவைத் தவிர ஆண் வாசனையற்ற ஒரு விடலைப் பெண்ணுக்கும் அவர்களுடைய தெருவில் இருக்கும் இளவயது மெக்கானிக் பையனுக்கும் இடையில் காதல். வசதி வாய்ப்பைப் போலவே, இருவருடைய சாதிகளிலும் ஏற்றத்தாழ்வு உண்டு. ஆனாலும், இருவரும் சென்னைக்கு ஓடிப் போகிறார்கள். நண்பன் உதவியுடன் கல்யாணம் செய்துகொண்டு, தனியாக வாழவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். பெரும்பாலான படங்கள் இந்தப் புள்ளியுடன் முடிந்துவிடும்.
தமிழ் சினிமாவின் அடிப்படைக் கச்சாப்பொருளான காதல், எப்போதுமே போராட்டத்துக்குப் பிறகு காதலர்கள் ஒன்றுசேர்வது அல்லது வேறு வழியில்லாமல் காதலர்கள் பிரிக்கப்படுவது-இறந்து போவது என்பதோடு முடிந்துவிடும். அதற்குப் பிந்தைய கதை இருக்காது. மதுரையின் கடுமையான சாதிய ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் தோல்வியடைந்த ஒரு காதலுக்குப் பிந்தைய காலம் 'காதலி'ல் சொல்லப்பட்டது. நாயகி காதலனை கரம் பிடிக்கவில்லை. நாயகி வீட்டாரின் தாக்குதலில் நாயகனும் மனநிலை பிறழ்ந்து போகிறான். கிளைமாக்ஸில் நாயகியின் கணவன், நாயகியையும், மனநிலை பிறழ்ந்து போன அவளுடைய முன்னாள் காதலனையும் புரிந்துகொள்கிறான். தன்னுடைய குழந்தையுடன், மற்றொரு குழந்தையைப் போல நாயகனை அழைத்துச் செல்கிறான். இயல்பான மனிதப் பண்பைத் தொலைக்காத அந்த சாதாரண மனிதன், படத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்திவிடுகிறான்.
- ஆதி
பூ: பெண் மனதின் வாசம்
பெண்ணை மையக் கதாபாத்திரமாக்கத் தொடர்ந்து தயங்கிவரும் தமிழ் சினிமாவில் ‘மாரி’ என்ற எளிய கிராமத்துப் பெண்ணின் வெள்ளை உள்ளத்தையும், அதில் அவள் அடைகாத்துவரும் காதலையும் பிதற்றல் ஏதுமின்றிப் பேசிய திரைப்படம் ‘ பூ’. உணர்வுகளின் சின்னமான இரட்டைப் பனை மரங்கள், தோசைக்கு அளிக்கும் முத்தம், கைபேசி எண்ணை மறந்துவிட்டுத் தவிப்பது, கடிதம் எழுத வார்த்தைகள் தேடி முடியாமல் திணறுவது, காதலனுக்காகக் கள்ளிப்பழம் தேடி நள்ளிரவில் அலைவது, பின் அதைக் கொடுக்க முடியாமல் ஏமாற்றமடைவது என வெகுளித்தனம் நிரம்பிய மாரியாக நடித்திருந்தார் பார்வதி.
“திருமணமானால் என்ன? அன்பை மறந்துவிட வேண்டுமா?” என்று மாரி கேட்பதும், அதன்படியே அன்பு தொடர்வதும் இக்கதையின் முற்போக்கான அம்சமாகப் பார்க்கப்பட்டது.
மாரியின் காதல் தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுக் காதலில், இருந்து மாறுபட்டு இருந்தது.
திருமணத்துக்குப் பின் தன் காதலன் சந்தோஷமாக இல்லை யென்பதை அறிந்து வெடித்து அழுகிறாள் மாரி. மாரியின் அழுகை தொடர, படம் முடிகிறது. ஆணின் காதலை மட்டுமே அதிகம் போற்றிவந்த தமிழ் சினிமாவில் பெண்ணின் காதலைக் கவுரப்படுத்திய படம்.
- சாரதா


நன்றி - த இந்து

Friday, July 05, 2013

தர்மபுரி இளவரசன் -கொலையா? தற்கொலையா?

தர்மபுரி: கலப்பு திருமணம் செய்த தர்மபுரி வாலிபர், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி அடுத்த நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ மகன் இளவரசன், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த, நாகராஜன் கவுண்டர் மகள் திவ்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வன்முறை சம்பவங்கள்:

இதையடுத்து, தர்மபுரியில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்ணின் தாய் தேன்மொழி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது, நீதிபதிகள் ஜெய்சந்திரன், சுந்தரேஷ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசராணைக்கு வந்தது. திவ்யாவிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம், வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆட்கொணர்வு மனுவை, தேன்மொழி வாபஸ் பெறுவதாக, வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் தெரிவித்தார். நீதிபதிகள், வழக்கை இன்று, ஜூலை 5ம் தேதிக்கு, ஒத்தி வைத்தனர். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திவ்யா, "எந்த சூழ்நிலையிலும் இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. அம்மாவுடன் இருப்பேன். என் தந்தை இறந்ததை ஈடு செய்வேன்' என, தெரிவித்தார். இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம், ரயில்வே தண்டவாளத்தில், இளவரசன் உடல், நேற்று பிற்பகலில் கிடந்தது. அவர் ஓட்டிச் சென்ற, "பல்சர்' பைக், அந்த பகுதியில் இருந்தது.

தர்மபுரி ரயில்வே போலீசார், கூறியதாவது:

குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்:

கோவையில் இருந்து, பிற்பகல், 1:20 மணிக்கு, மும்பை செல்லும், குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து, இளவரசன் தற்கொலை செய்துள்ளார். ரயில் தண்டவாளத்தில், தலை வைத்து படுத்திருந்தால் மட்டுமே, உடல் துண்டாகும். ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்வோரின் உடல், தூக்கி வீசப்படும். இளவரசன், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, போலீசார் கூறினர்.

இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகையில், ""திவ்யாவின் பேட்டியை, காலையில் படித்து, இளவரசன் கதறி அழுதான்; நாங்கள் ஆறுதல் கூறினோம். காலை, 10:00 மணிக்கு, செலவுக்கு பணம் கேட்டான். நான், வங்கி ஏ.டி.எம்., கார்டைக் கொடுத்தேன். அதன் பின், பிணமாக என் மகனைப் பார்க்கிறேன்,'' என்றார். இளவரசன், ரயிலில் அடிபட்டு கிடந்த இடத்தில், மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தண்டவாளம் அருகே கிடந்த உடலை, எடுக்க விடாமல், உறவினர்கள் தடுத்தனர். இதனால், மாலை, 4:30 மணி வரை, உடலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல், போலீசார் திணறினர். அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சட்டை பாக்கெட்டில் காதல் கடிதங்கள்:

தற்கொலை செய்து கொண்ட இளவரசனின், சட்டை பாக்கெட்டில் இருந்து, இரண்டு கடிதங்களை, போலீசார் கைப்பறியுள்ளனர். கடந்த, 2011ல், திவ்யாவுக்கு, எழுதிய கடிதமும், திவ்யா, இளவரசனுக்கு எழுதிய கடிதமும் அவை. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விவரங்களை, போலீசார் கூற மறுத்து விட்டனர். இந்த கடிதங்கள், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்கள் ஆகியவை, இளவரசன் ரயில் முன் பாய்ந்து இறந்திருப்பதை, உறுதி செய்வதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை, 5:10க்கு, பெங்களூருக்கு செல்ல, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், தர்மபுரி நோக்கி வந்தது. அந்த நேரத்தில், இளவரசனின் பிணத்தை எடுக்க விடாமல், உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டதால், ரயில் சிவாடியில் நிறுத்தப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு, தர்மபுரி ரயில் நிலையத்துக்கு வந்தது. டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் தலைமையில், ஐந்து மாவட்ட, எஸ்.பி.,க்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாயக்கன்கொட்டாய் உள்ளிட்ட மாவட்ட கிராமங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு அமல்:

கலப்பு திருமணம் செய்த தர்மபுரி இளவரசன், தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இளவரசனின் உறவினர்கள், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருப்பதாகக் கூறினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அங்கு திரண்டனர். இதனால், பதற்றம் அதிகரித்தது. சேலம் டி.ஐ.ஜி., சஞ்சய்குமார், எஸ்.பி.,க்கள் ஆஸ்ராகார்க், செந்தில்குமார் ஆகியோர், அங்கு கூடியிருந்தவர்களிடம், பேச்சு நடத்தினர். "பரிசோதனை மூலம் மட்டுமே, கொலைக்கான காரணத்தை, தெரிந்து கொள்ள முடியும். எனவே, பிணத்தை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து, மாலை, 5:45 மணிக்கு, உடலை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிலர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் உள்ள, கடைகளை தாக்கினர். தொடர்ந்து, கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுதும், பதற்றம் நிலவி வருவதால், 144 தடை உத்தரவு விதித்து, கலெக்டர் லில்லி உத்தரவிட்டுள்ளார். போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை முதல், கிராமப் பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளன.



மக்கள் கருத்து 



1. திரைக்கதையை போல சம்பவங்கள் நடந்தாலும் காதலர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு பாடம்...




2. நம்பமுடியவில்லை கொலையாகவும் இருக்க சந்தர்ப்பங்கள் உண்டு . இந்த காதல் தேவையா ...எத்தனை சண்டை, வீடுகள் நாசம் அடிதடி ...கடைசியில் எல்லாம் போச்சு வாழகத்துக்கங்கடா 



3. கொடுமையான வேதனை என்று தான் வர்ணிக்க தோன்றுகிறது. காதல் உன்னதமானது அதை முழுமையாக உணர்ந்தவர்களுக்கு. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத இருவரின் இனக்கவர்ச்சி ஈர்ப்புக்கு பெயர் காதல் அல்ல. இந்த பெண்ணின் செயலும் இளைஞரின் முடிவும் ஒரு பாடம். காதல் வேறு. பருவ வயதில் ஏற்படும் இன கவர்ச்சி என்பது வேறு. 



4 எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும் அத விட்டு இப்படி கோழை தனமாக உயிரை விடுவதால் என்ன பயன் போன உயிர் திரும்பி வருமா.இளவரசன் பொறுமையோடு இருந்திருந்தால் கண்டிப்பாக திவ்யா மனசு மாறி ஒரு நாள் திரும்பி வந்து இருப்பார்.மனதளவில் தைரியம் இல்லாமல் அவசரத்தில் எடுத்த முடிவாகவே கருதுகிறேன்...மிகவும் வருத்தமான செய்தி...


5. பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஜாதி பற்றி தெரியாத வரை பிரச்சனை இல்லை எப்போது இந்த 10 எக்ஸாம் வரும்போது ஜாதி செர்டிபிகாடே வாங்க அரம்பிதொமோ அப்பொழுது தான் ஜாதி வெறி வெளியில் வர அரம்பிர்கர்த்து..அதுவே வளர வளர அதிகமா ஆகிறது...முதலில் இந்த ஜாதியை certificate ஒழித்து வருமானத்தை அடிப்படையாக கொண்டு மற்றம் செய்ய வேண்டும்... ஆனால் அதை செய்தால் என்ன செய்வார்கள்????????? 


6. ஜாதி வெறி பிடித்து அலையும் மனிதர்களை கண்டால் சவுக்கடி கொடுக்க தோன்றுகிறது. பலர் இங்கே காதலால் தான் ரெண்டு உயிர்கள் போய்விட்டன என்று காதலை குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு ஜாதி வெறி கண்களுக்கு தெரியவில்லையா? காதல் புனிதமானது என்று பல அறிஞர்கள் உலகம் முழுவதும் கூறியுள்ளனர். எவரும் இதுவரை புனிதமான ஜாதி என்று எதையும் குறிப்பிடவில்லை. காதலிப்பதே தவறு என்று கூறிக்கொண்டு இருக்கும் பலர் கருத்தை மாற்றி கொள்ளவேண்டும். இந்த ஜாதி வெறி, வரதட்சணை பிணி ஒழிய, கலப்பு திருமணமே சிறந்த மருந்து. 


தமிழ்நாட்டினுடைய கோர முகம் தெரிகிறது இளவரசனுடைய ஆன்மா சாந்தி அடைய நான் வேண்டிகொள்கிறேன் . 


8. எல்லா மீடியாக்களும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து இளவரசன் "தற்கொலை" செய்துகொண்டான் என்று முடிவு செய்துவிட்டன. எதற்கு இந்த அவசரம்? கோர்ட் முடிவு செய்யட்டுமே இது கொலையா இல்லை தற்கொலையா என்று. அதுவரை மீடியாக்கள் பொறுமை காப்பது நல்லது.

Thursday, July 04, 2013

சாதி த்தது என்ன? தர்மபுரி இளவரசன் இறப்பு உணர்த்துவது என்ன? மக்கள் அலசல்

 

தர்மபுரி மாவட்ட கலப்பு திருமண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திவ்யாவின் கணவர் இளவரசன் , ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர்தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர்.

காதல் திருமணத்தால் கலவரம்

தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவுக்கும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், காதல் திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யாவின் தந்தை நாகராஜன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 



அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்த சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை இளவரசன் கடத்தி்ச் சென்று கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக , கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என திவ்யா கூறியதாக தெரிகிறது. பின்னர் நேற்று இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில் தண்டவாளத்தில் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டனர். இன்று மதியம் தண்டவாளம் அருகே தனது பல்சர் பைக்கி்ல் வந்ததகவும், பைக்கை நிறுத்திவிட்டு மதுகுடித்ததாகவும், பின்னர் ரயிலில் பாயந்து தற்கொ‌லை செய்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சட்டை பையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 


தர்மபுரி: தர்மபுரி திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளவரசனின் உடல் இன்று ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சந்தேக மரணமாகவும் கருதப்படுகிறது.
தான் இனி இளவரசனுடன் வாழப்போவதில்லை என்று திவ்யா நேற்று நீதிமன்றத்தில் கூறிய நிலையிலேயே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், தண்டவாளத்தின் அருகிலிருந்து அவரது பைக் மற்றும் கைப்பை கைப்பற்றப்பட்டதோடு, அவரது சட்டை பையிலிருந்து 2 கடிதங்கள் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
144 தடை உத்தரவு
இதனிடையே இளவரசனின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தினால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த திவ்யாவும். நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதனால் 3 தலித் கிராமங்களில் உள்ள வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கலப்பு திருமணத்தால் நடந்தனைந்த வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திவ்யாவின் தாயார் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா உயர் நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தாயாருடன் செல்ல விரும்புகிறேன் என்றும் இளவரசனுடன் இப்போது போக விரும்பவில்லை என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தாயாருடன் திவ்யா செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

இந்த நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தேன்மொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திவ்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, எனது தந்தையின் நினைவு தொடர்ந்து இருப்பதால், இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை என்றும் அம்மாவின் முடிவுப்படி வாழ தயாராகிவிட்டேன் என்றும் கூறினார்.
இந்த நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இன்று பிற்பகல் 3.30மணிக்கு இளவரசன் உடலை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

இளவரசனின் மோட்டார் சைக்கிள், கைப் பை, சட்டைப் பையில் இருந்து இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 வாசகர் கருத்து 


1. காதல் எனும் போர்வையில் அந்த மகளை பெற்றோரிடம் இருந்து பிரித்தனர்....தகப்பன் உயிர் போச்சு...இப்போது, அதே காதல் மகனை பெற்றோரிடம் இருந்து பிரித்துள்ளது......பாழாய்ப்போன காதல்............பெற்றோரின் மனதை நோகடித்து அப்படி என்ன காதல் வேண்டிக் கிடக்கு? பெற்றோரால் பிறந்த நாம், அவர்களை பகைத்து வாழ்ந்து பயன் என்ன? பெற்றோர், பிள்ளை உறவை முறிக்கும் வகையிலான காதலை யாரும் ஆதரிக்காதீர்கள்......சமூக நீதி என்று பசப்ப வேண்டாம்....பெற்றோரின் மன வலியை யாரும் சட்டை செய்வதில்லை..




2. காமம் சில சமயம் காதல் எனும் போர்வையில் உயிர்களை காவு வாங்கி விடுகிறது...உண்மை அன்பான காதலி உயிரிழப்புக்கு பின் அணு அணுவாக வேதனைகளை தான் அனுபவிப்பாள்....வெறும் காம காதல் வேதனை தராது...மாறாக வேற்று உறவை தான் தேடும்..நல்ல உலகமடா இது...



3. பெண்களே.....உண்மை காதல் இல்லாவிட்டால் தயவுசெய்து திருமணம் செயாதீர்...உங்கள் வேலை முடிந்ததும் இடத்தை காலி பண்ணி விடுங்கள்.... 


4. காதலிப்பதில் உண்மையான ஆண்கள் எப்போதும் மிக கவனத்துடன் செயல்படுவது நல்லது....போன உயிர் மீண்டு வராது..எப்படி போனது என்பதை விட....இனி வராது என்பதை காதல் செய்யும் உண்மையான ஆண்மகன்கள் யோசிக்க வேண்டும்....பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே என்ற பழைய பாடல் நினைவு வருகிறது....இறந்து போன அன்பருக்காக ஆண்டவனிடம் வேண்டிகொள்வோம்... 



5. இரண்டு பேரை பலிகொடுத்து தன் கூற்றை நிருபித்து கொண்ட "பா ம க" ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியாகவேனும். 


6. பெற்றோர்கள் இளம் வயது பிள்ளைகளை பக்குவ படுத்தி வளர்க்க வேண்டும்.... 


7. P Ramesh Ponnaih நிதானம் இல்லாத வயதில் எடுத்த விபரீத (திருமணம் உட்பட ) முடிவு பெற்றோரின் நிலை மற்றவர்களுக்கு இது ஒரு படிப்பினை . பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் நாம் வாழும் சமூகமும் நல்ல பண்பாட்டினையும் பழக்கத்தையும் கற்றுத்தர வேண்டும் . 



8. அது தான் இப்பொழுது தயாரிக்கும் படங்கள் எல்லாம் 80 % சமுதாயத்தை சீரலிப்பதாகவெ உள்ளன... அப்பாவை, டேய் டாடி, என்றும், எருமை என்றும் நகைசுவை காட்சிகளில் அழைப்தாக வந்தால் எப்படி இருக்கும்... முன் காலத்தில் ரெங்கா ராவ் நடித்த படங்கள், ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சமுதாயம் கற்கும் அளவிற்கு இருக்கும்... மக்களாக பார்த்து திருந்த வேண்டும்..


9. Devaraj சாதிகள் இல்லையடி பாப்பா என்பது உண்மை தான். ஆனால் அதனை சாதி சமய சிந்தனையில் மூழ்கி விட்ட சமுதாயத்தில் ஒரே அடியாக, ஒரே நாளில் சாதி அற்ற நிலையை உருவாக்க முடியாது. இரண்டு மரணங்கள்: ஒன்று திவ்யாவின் தந்தை தற்கொலை, அடுத்தது திவ்யாவின் முன்னாள் கணவர் மரணம். இந்த இறப்புகளை தவிர்த்து இருக்க முடியுமா? முதல் இறப்பை தொடர்ந்து நிகழ்ந்த துயரமான நிகழ்வுகள், கொடுமைகள், உடமை இழப்புகள் என பட்டியல் நீளும். இளம் தலைமுறையினர் நன்கு சிந்தித்து செயல் பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


 வெறும் உடல் ரீதியான கவர்ச்சிக்கு இடம் கொடுத்து, பின்பு வேதனை படுவதை விட. பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். சாதி யை ஒழிகின்றேன் என்று வீராப்பு பேசும் சாதிய தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் சாதியை ஒழித்து, நல்ல சமுதாய தலைவர்களாக மிளிர வேண்டும். படிக்கின்ற சின்ன பசங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் திரைப்படங்கள் சீர்திருத்தம் என்ற (போர்வையில் சாதியை ஒழிகின்றேன் என்று, காதல், கத்திரி காயை உருவாக்க வேண்டாம். சமுதாயம் உருப்பட உங்கள் படம் இருக்கட்டும். அல்லது நீண்ட காமிடி படம் தயாரித்து மக்களை சிரிக்க வையுங்கள்.


நன்றி - தினமலர்

Tuesday, May 28, 2013

மதன் கார்க்கி - கலைஞர் தூது போன காதல்! -வி.ஐ.பி.களின் காதல் அரங்கேற்றம்

வி..பி.களின் காதல் அரங்கேற்றம்
கொஞ்சு புறாவே

கலைஞர் தூது போன காதல்!

கதிர்பாரதி
மதன் கார்க்கி

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு... இந்தப் பஞ்சபூதங்களில் எதுதான் காதல்? இவையெல்லாம் கலந்ததுதான் காதலென்றால் அண்ணா பல்கலைக் கழகத்தில் என்னையும் நந்தினியையும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நனைத்த மழையை ஏன் காதலென்று சொல்லக்கூடாது! இப்போது பெய்கிற மழையில் அப்போது பெய்த மழையை இனங்காண முடிகிற உணர்வுதானே காதல்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் படிப்பை முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக நான் ஆஸ்திரேலியாவுக்குப் பறக்கிறவரை என் காதலை நந்தினியிடம் சொல்லவில்லை. அப்போது என் காதலுக்கு வயது ஐந்து. என்.சி.சி.யில் நான் சீனியர் மாணவன்; நந்தினி ஜூனியர். இந்தளவில் இருந்த எங்கள் அறிமுகத்தை காதலை நோக்கித் திருப்பி வைத்ததெல்லாம் நான் செக்ரெட்ரியாக இருந்த கம்ப்யூட்டர் சொஸைட்டிதான். அது மாணவர்களின் கம்ப்யூட்டர் திறன் மட்டுமல்லாத மற்ற திறமைகளுக்கும் நாற்றங்கால். அங்கே நந்தினி என் அப்பாவின் கவிதைகளையும் கலீல் ஜிப்ரானின் படப்புகளையும் பற்றிப் பேசியதும் எழுதியதும் அவளைத் தனித்துக் காட்டியது. அப்போதிருந்தே நான் நந்தினியைக் கவனிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் நந்தினிக்குள் நான் காதலாக அப்போது இல்லை. வெறும் நட்பாகத்தான் இருந்தேன்.
அப்போதெல்லாம் நந்தினியோடு என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் குறிப்பெடுத்துக் கொள்வேன். பிறகுதான் பேசுவேன். குறிப்புகளுக்கு இடையில் இந்த இடத்தில் நந்தினி சிரித்தால், இந்தப் பதில்; சிரிக்காவிட்டால் இந்தப் பதில் என்றெல்லாம் காதலை வீட்டுப்பாடமாகச் செய்தவன் நான். நந்தினி சிரிக்க வேண்டும் என்று நினைத்த இடத்திலெல்லாம் சிரித்தாள். இந்த அனுபவத்தைத்தான்காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின்அழைப்பாயா...’ பாடலில் இப்படிப் பதிந்து வைத்தேன்.
நானென்ன பேசவேண்டுமென்று சொல்லிப் பார்த்தேன் / நீ என்ன கூற வேண்டுமென்றும் சொல்லிப் பார்த்தேன் / நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன் / நீ எங்கு புன்னகைக்க வேண்டுமென்றுகூட சேர்த்தேன்
ஆஸ்திரேலியாவில் இருந்த ஒருநாளில் நந்தினிக்கு நான்தான் சாட்டில் என் காதலைச் சொன்னேன். நான் மத்தியதர வகுப்பு. உங்களோடது பெரிய குடும்பம் ஒத்துவராது என்று முதலில் மறுத்தவளுக்கு முற்றாக மறுக்க மனமில்லை. ஆஸ்திரேலியாவில் என் படிப்பு எனக்குக் கொடுத்த அழுத்தம், லட்சியம் எல்லாம் என்னை நந்தினியிடமிருந்து விலக வைத்தது. நந்தினிக்கும் அப்படித்தான். அவள் மேல்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டாள். ஐந்து வருடங்கள் என் தேடல்களை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். நந்தினியும் அப்படித்தான் அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருந்திருக்கிறாள்.
ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் நான் முடித்து விட்டு இந்தியா வருகிற சமயத்தில் என் அப்பா என்னைப் பற்றி குமுதத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ‘என் தோள்வரைக்கும் வளர்ந்துவிட்ட என் மகனை, தோளைவிட்டுக் கீழிறக்கிவிடும் காலம் வந்துவிட்டது. இனி அவன் திசை, அவன் வானம், அவன் சிறகு. திருமணம் செய்து வைக்கலாம் என்றிருக்கிறேன் பார்க்கலாம் எந்தத் தேவதைக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோஎன்றெல்லாம் அந்தக் கட்டுரையில் எழுதி இருந்தார். அப்போதுகூட என் மனத்தில் நந்தினியின் ஞாபக நிழல் இல்லை. திருமணத்துக்குத் தீவிரமாக பெண் தேடும் மும்முரத்தில் ஒரு நாள் என் அப்பா கேட்டார்.
உன் மைண்ட்ல யாரும் இருக்காங்களா? "
அப்படியெல்லாம் ஒருத்தருமில்லை. நீங்க பொண்ணு பாருங்க" என்று சொல்லிவிட்டேன். பின்பு யதேச்சையாக ஆர்குட்டில் நந்தினியைப் பிடித்தேன்.
எப்படி இருக்கீங்க"- நான்தான் ஆரம்பித்தேன்.
நல்லாருக்கேன். அமெரிக்காவில் வேலையில் இருக்கேன்" - என்றாள் நந்தினி.
கல்யாணம் ஆயிடுச்சா?"

கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா இல்லை. நிறைய பயணம் போகணும். உலகத்தை அப்சர்வ் பண்ணணும். விரிந்து பரந்த உலகத்தில் விடை தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கே!" என்றெல்லாம் பேசிக்கொண்டு போன நந்தினியிடம், வீட்டுல பொண்ணு பார்க்கறாங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன். " - சாட்டில் தட்டிவிட்டுவிட்டு, நந்தினியின் பதிலுக்காகக் காத்திருந்த நொடிகள் கனமானவை.
சரின்னுதான் தோணுது. நீங்களும் நானும் சேர்ந்து வாழறது அர்த்தமுள்ளதா இருக்கும். நான் இன்னும் ஒரே வாரத்துல உங்களை இந்தியாவுல வந்து பாக்கறேன்" என்று நந்தினி சொன்னதும் எனக்குள் நந்தினிக்காக ஆகாயம் விரிய ஆரம்பித்தது. ஆகாயம் பழசுதான் ஆனால் சிறகு புதிது. அவள் என்னை வந்து பார்ப்பதாகச் சொன்ன நாள் என் பிறந்தநாள் மார்ச் 10 அன்று.
இப்போது அப்பாவிடம் வந்து நின்றேன். நந்தினியைப் பற்றிச் சொன்னதும் அவருக்குக் கோபம். ஏன் ஆரம்பத்தில் சொல்லவில்லை. நண்பர்களிடம் சொல்லி பெண்ணெல்லாம் பார்த்துவிட்டேனே முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி?" என்ற அப்பாவின் வாதத்தில் மகனின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தது.
அப்பா, என் விருப்பம் நந்தினி. உங்கள் சம்மதத்துக்காகக் காத்திருக்கிறோம் இருவரும்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். தம்பியைத் தூதனுப்பினேன். தாயை அனுப்பினேன். நண்பனை பேசவைத்தேன். அப்பா அசைந்து கொடுக்கவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. என் காதலைத் தூக்கிக் கொண்டு கலைஞரிடம் போய்விட்டேன். அப்போது அவர் தமிழகத்தின் முதல்வர். என் காதலைக் காது கொடுத்துக் கேட்டவர், கவலைப்படாதே என் குடும்பத்தில் நிறைய காதல் கல்யாணம்தான். உன் அப்பாவிடம் பக்குவமாகப் பேசுகிறேன்" என்று என் காதலுக்குக் கைகொடுத்தார்.
மறுநாள் காலையில், நான் என் காதலுக்காக கலைஞரைப் பார்த்துவிட்டு வந்த விஷயத்தை அவர் என் அப்பாவின் காதுக்குள் போட்டுவிட்டார். கலைஞரோடு அப்பா பேசி முடித்ததும், என் வீட்டில் அப்பாவின் கோப அலை.
கலைஞரிடம் உன்னைப் போக வைத்தது யார்? எப்படிப் போகலாம்..." என்று பொரிந்து தள்ளிவிட்டு, சரி நந்தினியை வரச் சொல்," என்றதும், எனக்கு சந்தோஷம். நந்தினியை வரவைத்து அப்பாவோடு அரைமணி நேரம் பேச வைத்தேன்.
காதலைப் பற்றிப் பேச வந்தவள், அப்பாவின்கள்ளிக் காட்டு இதிகாசம்நாவலையும்ரிதம்படத்தின் பாடல்களைப் பற்றியும் பேசிய தைரியசாலி நந்தினி. அப்போதுகூட அப்பா இறங்கி வரவில்லை.
எங்கேயும் வெளியே சுற்றாதீர்கள்" என்று கட்டளை போட்டுவிட்டு கவிதை எழுத போய்விட்டார். அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து என்னைப் பார்க்க நந்தினி இந்தியா வருவதற்குள் அந்த மாத போன் பில் மட்டும் எழுபத்தைந்தாயிரம் கட்டினேன். அப்போது எனக்கு அண்ணா பலகலைக்கழகத்தில் பார்ட் டைம் வேலையில் மாதச் சம்பளமே இருபதாயிரம்தான்.
நந்தினியோடுதான் என் திருமணம் என்ற என் பிடிவாத நியாயத்தை அப்பா புரிந்து கொண்டார். கலைஞர் தலைமையில் என் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. எங்கள் காதலின் உயிர்சாட்சியாக மகன் ஹைக்கூ வந்து விட்டான். பயணமும் உணவும்தான் எங்களுக்கான புரிதலை , காதலை அதிகப்படுத்தி இருக்கிறது. டாஸ்மேனியாவில் நானும் நந்தினியும் காரில் சுற்றிய 3000 கி.மீ. பயணம், அவளை இன்னும் நெருக்கமாக உணர வைத்தது. என் பாடல்களை நந்தினி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது இன்னும் எங்கள் காதல் அடர்த்தியாகி இருக்கிறது.
மொழியை நம்பி ஓடிக்கொண்டு இருப்பவனுக்கு காதல் நல்ல ஆசுவாசம்தான். அதுவும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிற எனக்கும் என் லட்சியத்துக்கும் ஆசுவாசமாக காதல் இருக்க வேண்டிய இடத்தில் நந்தினியை நிற்க வைத்திருக்கிறது காலம். கடல் படத்தில் நான் எழுதிய கீழ்க்கண்ட பாடலைப் போல
மனச தொறந்தாயே... நீ /எங்கிருந்து வந்தாயோ நீ?/ அடியே... அடியே / என்ன எங்க நீ கூட்டிப் போற?

நன்றி - கல்கி