Thursday, February 28, 2013

பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்

பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்

நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம்  இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள்


* 18 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள். மறைமுக வரிகள் மூலமாக அரசுக்கு 4,700 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். நேரடி வரிவிதிப்பின் மூலம் 13,300 கோடி வருவாய் அதிகரிக்கும். மத்திய விற்பனை வரி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு 9 ஆயிரம் கோடி வழங்கப்படும்

வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை


*  வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி

*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.
* சிகரெட் மீதான கலால் வரி 18 விழுக்காடு அதிகரிப்பு.

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

* ஒரு லட்சம் பேர் வசிக்கும் நகரங்களில் புதிய எப்.எம். சேனல் தொடங்கப்படும்.

* ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான நில ஒப்பந்தங்கள் மீதான டிடிஎஸ் 1 விழுக்காடாக நிர்ணயம்.

* அஞ்சல் நிலையங்களில் வங்கிப் பணிகளுக்கு ரூ.532 கோடி.

* ரூ. 10 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் உடைய உள்ளூர் கம்பெனிகளுக்கு 5-10% சர்சார்ஜ் விதிக்கப்படும்
* கல்வி வரி தொடரும்
* அதிகரிக்கப்பட்ட சர்சார்ஜ் ஒரே ஒரு நிதியாண்டுக்கு மட்டுமே


* 2014 ஆம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.3 %

* வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியை ஊக்கப்படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படும்;ஒரு ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களை தயார்படுத்த முடியும்

* காப்பீட்டுத் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்.

* நிலக்கரி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய விளையாட்டுப் பயிற்சி நிறுவனம் ரூ.253 கோடி செலவில் பாட்டியாலாவில் அமைக்கப்படும்.

* தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 5 கோடி பேருக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு.

* விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு ரூ.5,400 கோடி ஒதுக்கீடு.

* அணு சக்தி துறைக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு.

* ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.

* பாதுகாப்பு துறைக்கு ரூ.2,20,000 கோடி ஒதுக்கீடு.

 * நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதி, இறக்குமதி 43 விழுக்காடு.
* கடந்த ஆண்டில் இந்தியாவை விட வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகள் சீனாவும், இந்தோனேஷியாவும் மட்டுமே.

* நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே.

* மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது.
* சர்வதேச பொருளாதாரம் 3.9 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக சரிவு

* 2013-14 ல் சீனா மட்டுமே இந்தியாவைவிட வேகமாக வளர்ச்சி அடையும்

 * நடப்பு கணக்கு பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு காரணம், எரிபொருள் மற்றும் தங்க இறக்குமதியே.

* மைய பணவீக்க விகிதம் 6.2 விழுக்காடு. ஆனால், உணவுப் பணவீக்க விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது.


* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக 41,000 கோடி மற்றும் 28,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

* மொத்த செலவினம் 16,30,825 கோடி ஆக உள்ளது. இதில் 5,55,322 கோடி திட்டச் செலவுகள்.

* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.
*மாற்றுத் திறனாளிகள் நலனிற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4,200 கோடி ஒதுக்கீடு.

*மருத்துவத் துறைக்கு மொத்தமாக 33,000 கோடி ஒதுக்கீடு.

*கல்வித் துறைக்கு ரூ.65,000 கோடியும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.27,257 கோடியும் ஒதுக்கீடு.

*குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ.11,700 கோடி நிதி ஒதுக்கீடு.

*குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

*தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வி உதவித் தொகை ரூ.5,200 கோடி ஒதுக்கீடு.

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் துறைக்கு ரூ. 27,500 கோடி ஒதுக்கீடு
* *தூய்மையான குடி நீர் வழங்க ரூ.15,260 கோடி ஒதுக்கீடு
* மருத்துவ கல்வி, பயிற்சிக்கு ரூ.4,727 கோடி ஒதுக்கீடு

* ஊனமுற்றோர் நலத்துறைக்கு ரூ. 110 கோடி ஒதுக்கிடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு ரூ. 37,330 கோடி ஒதுக்கீடு. இதில் ரூ.21,239 கோடி புதிய தேசிய சுகாதார திட்டத்திற்கு அளிக்கப்படும்

* ஆயுஷ் திட்டத்திற்கு ரூ. 1069 கோடி ஒதுக்கீடு

* AIIMS போன்ற நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு

* மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு


* மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 13,215 கோடி ஒதுக்கீடு

* குழந்தைகள் நலம் மற்றும் கல்விக்கு ரூ. 17,700 கோடி ஒதுக்கீடு

* தண்ணீர் சுத்திகரிப்புக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு

* உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்கும்

* வேளாண் ஏற்றுமதியால் ரூ.1,38,403 கோடி வருவாய்

* வேளாண் அமைச்சகத்திற்கு ரூ. 27,049 கோடி  ஒதுக்கீடு

* கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு புதிய திட்டம்

* சராசரி வேளாண் வளர்ச்சி 3.6 சதவீதமாக இருந்தது

* கிழக்கு இந்திய மாநிலங்களில் ரூ.1000 கோடி அளவுக்கு பசுமை புரட்சி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்துள்ளது.

* வேளாண் கடன் இலக்கு ரூ. 7 லட்சம் கோடி.

* ராய்ப்பூர் மற்றும் சட்டீஸ்கரில் தேசிய உயிரியில் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படும்

* ராஞ்சியில் தேசிய உயிரியல் தொழில்நுட்ப மையம்

* தேசிய உணவு பாதுகாப்பு மசோதா ரூ.10000 கோடி பெறும்

*13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு.

*அனைத்து பொதுத்துறை வங்கிக் கிளைகளுக்கும் ஏடிஎம் வசதி 2014 ஆண்டிற்குள் வழங்கப்படும்.

*பசுமைப் புரட்சி செயல்படுத்தும் மாநிலங்களுக்கு ரூ.500 கோடி.

*சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ மேம்பாட்டிற்கு ரூ.1,061 கோடி ஒதுக்கீடு.

*கைத்தறி துறைக்கு கூடுதலாக ரூ.96 கோடி ஒதுக்கீடு.

*சிறு மற்றும் குறு தொழில்களுக்கு 3 ஆண்டு வரிச் சலுகை.

*விவசாயத் துறையின் சராசரி வளர்ச்சி 3.6 விழுக்காடாக உள்ளது.

*மேற்குவங்கம், ஆந்திராவில் 2 புதிய துறைமுகங்கள் உருவாக்க நிதி ஒதுக்கீடு.

*கிராமப்புற முன்னேற்றத்திற்காக ரூ.80,000 கோடி ஒதுக்கீடு.

*உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

*ரூ.25 லட்சம் வரையிலான முதல் வீட்டுக் கடன் வட்டியில் மேலும் ரூ.1 லட்சம் குறைக்கப்படுகிறது.

*தூத்துக்குடி துறை மேம்பாட்டிற்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு.

*மின் இயந்திரங்களுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு.

*உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன்களாக இருக்கும்.

*வேளாண் ஏற்றுமதி மூலம் ரூ.1,38,403 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

*நபார்டு மற்றும் குளிர்பதன சேமிப்பு கிடங்குகளுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

*ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.17,000 கோடி

*ஊட்டச்சத்து பயிர் சாகுபடி முன்னோடித் திட்டங்களுக்கு ரூ.300 கோடி

*மாற்றுப் பயிர் சாகுபடி வளர்ச்சிக்கு ரூ.75 கோடி

*கேரளா, அந்தமான் தென்னங்கன்று வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.75 கோடி

*புதிய தேசிய சுகாதாரப் பணித் திட்டத்திற்கு ரூ.21,239 கோடி.

*இந்திரா அவாஸ் திட்டத்திற்கு ரூ.80,195 கோடி ஒதுக்கீடு.

*சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.37,300 கோடி ஒதுக்கீடு.

*ஜவஹர்லால் நேரு தேசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.14,873 கோடி ஒதுக்கீடு.

*4 உள் கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.25,000 கோடி நிதி திரட்ட முடிவு.

* குழந்தைகள் நலனிற்காக ரூ.77,236 கோடி ஒதுக்கீடு.

*ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ. 2,400 கோடி
* கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டிவிகிதத்தில் தொழில் மூலதனம்

*13 பொதுத் துறை வங்கிகள் 2013-14 ல் ரூ.14000 கோடி மூலதனமாக பெறும்

* அனைத்து கூட்டுறவு வங்கிகளும் CBS கீழ் கொண்டுவரப்படும்

* அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் தங்களது சொந்த இடத்திலேயே ஏடிஎம் இயந்திரங்கள் 

* ரூ. 100 கோடி தொடக்க முதலீட்டில், இந்தியாவின் முதல் பெண்கள் வங்கி பொதுத் துறை வங்கியாக தொடங்கப்படும்.


-------------------

பட்ஜெட்டில் கூடுதல் வரி: சிகரெட், செல்போன்,கார்கள் விலை உயருகிறது
புதுடெல்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரி விதிப்பு காரணமாக சிகரெட்,  செல்போன்,கார்கள் விலை உயருகிறது. 

நாடாளுமன்றத்தில் இன்று 2013 - 14ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி  அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்தார்.

அதில், சிகரெட் மீதான வரி 18 சதவீதமாகவும்,வாகனங்கள் மீதான சுங்க வரி 27  சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள  செல்போன்கள் வாங்கும் போது செலுத்த வேண்டிய வரி, ஒரு சதவீதத்தில் இருந்து 6  சதவீதமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.மேலும் வெள்ளி, செல்செட்டப்  பாக்ஸ் ஆகியவற்றுக்கான வரிகளும் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மேற்கூறிய பொருட்களுக்கான விலை உயருகிறது.

மேலும் ஏ.சி. உணவகங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்


-----------------

வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை; ரூ.2,000 சலுகை
புதுடெல்லி: தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிதிப்பில் ரூ.2000 சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தில் இன்று 2013-14-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது உரையில் தனிநபர் வருமான வரி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:


* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்களுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி.


*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.

*10 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி

----------------------

பட்ஜெட்: ஜெயலலிதா, வைகோ கருத்து
 
 
சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், அவரது பகல்  கனவு பட்ஜெட்டாக உள்ளது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"நாட்டின் பொருளாதார  பிரச்னைகளைத் தீர்க்க அறிவிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட், ப.சிதம்பரத்தின் பகல்  கனவு பட்ஜெட். வெளிநாட்டு முதலீட்டை பெருக்குவதற்கு மட்டுமே மத்திய
பட்ஜெட்டில்  வழிவகை செய்யப்பட்டுள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வித அறிவிப்பும்  இல்லை.

நிதிப் பற்றாக்குறையை மாநில அரசுகளை பயன்படுத்தி தீர்க்க மத்திய அரசு  நினைக்கிறது. இந்த பட்ஜெட்டில் மாநில அரசுகளுக்கு எதிரான மத்திய அரசின்  மனப்பான்மை தெளிவாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார். ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு பயன் இல்லை: வைகோமத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்து உள்ள 2013-2014 ஆம்  ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அனைத்துத் தரப்பு மக்களையும் அதிருப்தி அடையச்  செய்து உள்ளது. உலக நாடுகளில் பொருளாதார மந்தநிலை இருந்தாலும், இந்தியப்  பொருளாதார வளர்ச்சியில் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறி உள்ளார்.  ஆனால், இதன் பயன் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

கடந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதம் என்று இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது;  ஆனால், 5 சதவிகித வளர்ச்சியையே எட்ட முடிந்தது. நடப்பு  ஆண்டில் இது 6.7 சதவிகிதம் என்பது எப்படி சாத்தியம் ஆகும்?

பணவீக்க விகிதம் 6.6 சதவீதம் உள்ள நிலையில், அதனைக் குறைத்து, விலைவாசி  ஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உருப்படியான திட்டம் இல்லை. விலைவாசி  உயர்ந்திடக் காரணமாக இருக்கும் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைக்கவோ,  சேவை வரி விதிப்பு, இணையதள வர்த்தகம் ஆகியவற்றை இரத்து செய்யவோ  நடவடிக்கை இல்லை.

தொழிலாளர் நலன்களுக்கான திட்டங்களோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ  திட்டங்கள் இல்லை. கருப்புப் பணத்தை மீட்க, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஐந்து  அம்சத் திட்டம் என்னவாயிற்று? வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள  கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரவும் நடவடிக்கை இல்லை.

ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைத் தான் ப.சிதம்பரம் தாக்கல்  செய்து இருக்கிறார். சாதாரண ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும்  இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
 thanx - vikatan

0 comments: