Saturday, February 02, 2013

டேவிட் - சினிமா விமர்சனம்

 

ஈரோடு சண்டிகா தியேட்டர்ல சாயங்காலம் 6 மணிக்குத்தான் படம் போடுவாங்க . நேத்து என்னடான்னா  6.30 மணிக்குத்தான் டிக்கெட்டே குடுத்தாங்க , நியூஸ் ரீல் ட்ரெய்லர் எல்லாம் முடிச்சு பின் 7 மணிக்கு படம் போட்டாங்க, ஜீ வா நடிச்ச கோ படத்துல இருந்து ஆல் டைம் ஃபேவரைட் பாட்டான “ என்னமோ ஏதோ “ பாட்டு போட்டாங்க , சரி போனாப்போகுதுன்னு விட்டுட்டேன், அப்புறம் விக்ரம் நடிச்ச  தெய்வத்திருமகள் பட பாட்டு போட்டாங்க , செம கடுப்பாகிட்டேன். ஆபரேட்டர் மாத்தி ஓட்டறாரா? இல்லை  நம்மை ஓட்டறாரா? விசாரிக்க கிளம்புனா கேட்டை வழி மறிச்சு 4 பேரு “ சார் சார் , கோபப்பாடாதீங்க , படம் ரொம்ப சின்னப்படம் , அது தெரியாம இருக்க இப்படி ஹி ஹி ன்னாங்க .


அதாவது இது ஒரு டப்பிங்க் படம். ஹிந்தி ஒரிஜினல் ல 3 கதை. 3க்கும் சம்பந்தம் இல்லை . தமிழ் டப்பிங்க்ல ஒரு கதையை கட் பண்ணிட்டாங்க . 2 கதைதான் .


 கே பாலச்சந்தர் எடுத்த ஒரு வீடு இரு வாசல் மாதிரி ட்ரை பண்ணி இருக்காங்க . குரு  மணி ரத்னம் எடுத்த ஆய்த எழுத்து  டைப் ல திரைக்கதை . 


டேவிட்ங்கற பேர்ல இருக்கும் 2 பேரோட தனித்தனிக்கதை. 





ஜீவா  ஒரு கிடாரிஸ்ட்.அவங்கப்பா நாசர் ஒரு கிறிஸ்டியன் , மற்றவர்களை மதம் மாற்றுவது அவரோட பணிகளில் ஒண்ணு. அது மாயாவதி மாதிரி ஒரு அரசியல் தலைவிக்கு பிடிக்கலை . நாசரை அவமானப்படுத்திடறாங்க. பையன் ஜீவா  அந்த லேடியை போட்டுத்தள்ள பிளான் பண்றாரு ( போட்டுத்தள்ள  = கொலை செய்ய - ஏன்னா தமிழ் ஒரு நுட்பமான மொழி ) இது ஒரு கதை . 


விக்ரம் ஒரு தண்ணி வண்டி கேஸ். அவரோட சம்சாரத்தை யாரோ ஓட்டிட்டுப்போய்டறாங்க. அந்தக்கவலையை மறக்க 24 மணி நேரமும்  குடிக்கறாரு. சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் எடுத்த ”மயக்கம் என்ன ”கதையை உல்டா பண்ணி ஒரு கதை . அதாவது விக்ரமோட  நண்பனின் காதலியை இவர் ரூட் விடறாரு .அந்த காதலி பார்க்க பஸ் ஸ்டேன்ட் டிக்கெட் மாதிரி இருக்கு . அதை இவரு தெய்வீகமா லவ்வறாரு. இது கலாச்சார சீர்கேடு இல்லையா? அப்டினு எவனும் நாக்கு மேல பல்லையோ, பல்லு மேல நாக்கையோ போட்டு கேட்டுடக்கூடாதுன்னு  அவருக்கு ஒரு நோய் இருக்கற மாதிரி காட்டறாங்க 


 அதாவது குடைக்குள் மழை ஆர் பார்த்திபன்  மாதிரி விக்ரம்க்கு ஒரு நோய் இருக்கு . செத்துப்போன அப்பாவை எப்பவும் பக்கத்துலயே இருப்பதா அவரா கற்பனை பண்ணிட்டு பேசுவாரு . அது மாதிரி அந்த கிராக்கி ( ஹீரோயின் நெம்பர் 2 ) இவரை லவ் பண்றதா இவரா  நினைச்சுக்கறாரு, இந்த கேவலமான காதல் கதை என்னாச்சு? என்பதே கதை இது தனி டிராக் 




 படிக்கும்போது உங்களுக்கே  இப்போ இவ்வளவு காண்ட் ஆகுதே படம் பார்த்த அந்த 37 ஆடியன்ஸ் கதி என்ன ஆகி இருக்கும். ஆக்சுவலா அரசாங்கம் இந்த மாதிரி குப்பைகளை பார்க்கறவங்களுக்கு தியாகி பட்டம் தரனும் .


முதல் ஹீரோ விக்ரம் இந்தப்படத்துல ஒன் ஆஃப் த புரொடியூசர். இந்தக்கதையை முடிவு பண்ணும்போதே  சக தயாரிப்பாளர்கள் சொல்லீட்டாங்க போல “ இங்கே பாரப்பா ,  படத்துல உனக்கு சம்பளம் கிடையாது , சரக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு அடிச்சுக்கோ “ அதனால விக்ரம் அவர் வர்ற 47 சீன்ல  47 ஃபுல் அடிக்கறாரு . உயர்வு நவிற்சியா சொல்லலைங்க , இதை  எண்ணுவதற்கே ஒரு பொடியனை கூட கூட்டிட்டுப்போய் இருந்தேன் . கின்னஸ் ரெக்கார்டு . இதுவரை எந்த ஒரு உலகப்படத்துலயும் ஹீரோ இத்தனை சரக்கு அடிச்சதே இல்லை. நியாயமா டாக்டர் ராம்தாஸ் இதுக்குத்தடை போட போராட்டம் பண்ணனும் . 




அடுத்தது ஜீவா . உண்மையிலேயே இவரை நினைச்சா பாவமா இருக்கு. தான் நடிப்பது ஒரு டப்பா படம்கற  உணர்வே இல்லாம உயிரைக்குடுத்து நடிச்சிருக்காரு .வன்முறை , கோபம் , பழி உணர்வு எல்லாம் அவர் முகத்துல பொங்கி வழியுது . ( ஒரு வேளை சம்பளம் தர்லைங்கற கோபமோ என்னவோ? 



தபு , லாரா தத்தா, இஷா ஷெர்வானி, ரோஹினி ஹட்டாங் அப்டினு ஏகப்பட்ட லேடீஸ் கேரக்டர்ஸ் . யாரும் மனசுல நிக்கலை 



டைரக்டர் மணி ரத்னம் ரசிகர் . படம் ரிலீஸ் ஆன அன்னைக்கு ஃபாரீன் ட்விட்டர் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு பாராட்டி ஒரு ட்வீட் போட்டாரு . நான் கூட உண்மைன்னு நம்பிட்டேன் . அதாவது ராவணன் , கடல் மாதிரி குப்பையை கொடுப்பதில் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு அர்த்தம் போல. 

 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. மணிரத்னம் சார் படத்துல வர்ற மாதிரியே கேமரா கோணங்கள் , ஒளிப்பதிவு , வசனம் பேசும் ஸ்டைல்  எல்லாம் பிரமாதமா பண்ணி  இருக்காரு.லொக்கேஷன் செலக்சன் பின்னிட்டாங்க . 



2. பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டுது , குறிப்பா ஜீவா வரும் காட்சிகளில்  டெம்போ ஏத்துது . நல்ல ஆக்‌ஷன் படமோ அப்டினு   டக்னு நம்ப வைக்கும்படி பி ஜி எம் பட்டாசு. (ஆனா கதை அடாசு )



3. ஜீவாவுக்கு தங்கச்சிகளா 2 70 மார்க் ஃபிகருங்க ஏதோ மும்பை ஃபிகருங்க போல , ஆல்வேஸ் டைட் டி சர்ட் , மிடி ல வந்து கிளாமரா வர்றாங்க 



4.  தபுக்கு 40 வயசு ஆனாலும் விடாம கதைக்கு ரொம்ப முக்கியமான காட்சின்னு ரீல் விட்டு  பாவாடை கட்டி ஒரு குளியல் காட்சி எடுத்தது சாணக்கியத்தனம் ( ஏன்னா கதை தான் இல்லை , கொஞ்சம் சதையாவது இருக்கட்டும்னுதான் ) 


5. இஷா ஷெர்வானிக்கு கன்னம்  ஸ்பெஷல் மைசூர்பாக் மாதிரி இருக்கு . சாதா மைசூர்பாக்னா கெட்டியா இருக்கும் , ஸ்பெஷல் மைசூர்பாக்னா ரொம்ப சாஃப்டா நெகு நெகுன்னு வெல்வட் மாதிரி இருக்கும்  ( தொட்டுப்பார்க்கலை , ஒரு உத்தேசமா கண்டு பிடிச்சேன் ) அவரை முடிஞ்ச வரை ஓப்பன் யுனிவர்சிட்டி  குட்டியா காட்டுனது 





இயக்குநர் அண்ணனிடம் கோபமாய் சில கேள்விகள்


1. இளிச்சவாய் புரொடியூசர்கள் 8 பேர் கிடச்சா அவங்க தலையில் மிளகாய் அரைப்பீங்களா? இது ஒரு டப்பிங்க் படம்னு ஏன் சொல்லவே இல்லை .? அது சீட்டிங்க் இல்லையா? கேரக்டர்ஸ் வாய்ஸ் மாடுலேஷன்ஸ் சின்க் ஆகவே இல்லை , நல்லா அப்பட்டமாத்தெரியுது .




2. போஸ்டர் டிசைன்ல விக்ரம் மீன் தூக்கிட்டு நிக்கற மாதிரி காட்டி இருப்பது எதுக்கு? மீனவப்பிரச்சனையைப்பற்றி சொல்லப்போறோம்னு பில்டப் காட்டவா? 


3. விக்ரம் ஓப்பனிங்க் சீன்ல அவர் வாய்ல புனலை வெச்சு ஒரு ஃபுல் பாட்டில் சரக்கை வலது கைலயும் , சோடாவை இடது கைலயும் ஊத்தி சரக்கு அடிக்கறார். இது சி செண்ட்டர் ரசிகர்களைக்கவரும் மலிவான் உத்தி . படு கேவலமா இருக்கு .ஷூட் பண்ணும்போது வாமிட் வர்ற மாதிரி இல்லை? 


4. கிறிஸ்டியன்கள்   இந்துக்களை கட்டாய மதம் மாற்றம் செய்பவர்கள் அப்டிங்கற மாதிரி காட்சி வருது . இது எதுக்கு? தேவை இல்லாம பிரச்சனையை கிளப்பவா? ஆல்ரெடி கமல் படும் கஷ்டங்கள் போதாதா? உங்க மலிவான வியாபார உத்திக்கு எதுக்கு மதங்களை , பலிகடா ஆக்கறீங்க?


5. நாசர் ஒரு வெறுப்புல ஷேவிங்க் ரேசர்ல அழுத்தி தன் கன்னத்துல ஷேவிங்க் பண்ணி காயம் பண்ணிக்குவது கொடூரமான காட்சி . ஆனா செம காமெடி என்னன்னா அவர் கன்னத்தை மகள் துணியால துடைக்கும்போது க்ளீன் ஆகிடுது . பிளேடால கன்னம் வெட்டுப்பட்டா ரத்தம் வந்துட்டே இருக்கும் , காயத்தையே காணோம் 

ஸ்பெஷல் மைசூர்ப்பாக் கன்ன அழகி

 


6. ஓப்பனிங் ல விக்ரம்  மூலமா 14 இடங்கள் ல மாற்றுத்திறனாளிகள் பலரை சகட்டு மேனிக்கு கிண்டல் பண்ணி இருக்கீங்க. மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்க  இப்படி ஒரு  கேவலமான பொழப்புத்தேவையா? அவங்க மனசைப்புண்படுத்தி அதுல காமெடி பண்ணி என்ன வருது? தியேட்டர்ல யாரும் சிரிக்கலை


7. மாடிப்படில உக்காந்து ஹீரோ கூட லேடி தம் அடிக்கும் காட்சி எதுக்கு? படத்துக்கு ரொம்பத்தேவையா? ஆணுக்குப்பெண் சரி நிகர் சமானம்னு காட்டவா?


8. பெண் பார்க்கும் வைபவத்துல  வழுக்கைத்தலையா ஒரு பொண்ணு வந்து பலர் முன் அவமானப்படுது , ஏன் விக் வெச்சுக்க மாட்டாங்களா? சவுரி இருக்காதா? லேடீஸை அப்படியா அவமானப்படுத்தறது? 



9. விக்ரமோட தோழியா வர்ற தபு  வாசப்படில உக்காந்து பாவாடையை கட்டிக்கிட்டு மலையாளப்படத்துல வர்ற மாதிரி குளிக்குது . .விக்ரம் அவர் பக்கத்துலயே உக்காந்து டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்காரு ,. நல்ல வேளை  அவர் முதுகுல சோப் போட்டுக்கிட்டே பேசலை . ஏய்யா , எந்த ஊர்ல இப்படி ஃபிரண்ட்ஸ் இருக்காங்க? 



10 . விக்ரமோட தோழி தபுவை ஹீரோ சந்தோஷமா இருக்கும்போது கட்டிப்பிடிக்கறாரு , கிள்ளறாரு , தபுவோட புருஷன்  சரியான மிக்சர் பார்ட்டி போல , எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு



11. ஒரு குண்டான பெண் கேரக்டர் காமெடியன் மேல விழுந்தா ஆடியன்ஸ் சிரிப்பாங்க , ஓகே ஆனா ஹீரோ மேல அவரோட பிந்து கோஷ் டைப் குண்டு அம்மா விழுவது  அதுவும் ஆயிரத்தில் ஒருவன் எம் ஜி ஆர் - ஜெ மாதிரி நெருக்கமா ...... படு கேவலமான காட்சி 


12. ஜீவா பழகும் கணவரை இழந்த அந்த ஆண்ட்டி “ உக்காரும்மா”ன்னா பெட்ஷீட் விரிச்சுப்பக்கத்துல  படுத்துக்கும் போல , ஷகீலா தங்கச்சி மாதிரி இருக்கு . அந்த  மொக்கை ஃபிகருக்கு ஜீவா உருகுவது  , அவங்க 2 பேருக்கும் இடையே மேட்டர் நடக்குமா? நடக்காதா?ன்னு பெரிய ஹிட்சாக் சஸ்பென்ஸ் வெச்சது ரொம்ப ஓவரு 

13. அந்த ஆண்ட்டி ஏன் ஜீவாவை க்ளைமாக்ஸ்க்கு முன்னால “ சாத்தானே அப்பால் போ”ன்னு சொல்லாத குறையா விரட்டுது? பாப்பாவுக்கு புருஷன் இல்லை , அதுக்கும் ஜீவா மேல ஒரு கண்ணு . ஏன்னு கேட்க யாரும் இல்லை , அப்பாவும் கண்டுக்கலை  எதுக்காக அந்த சீன்? சிம்ப்பதி கிரியேட் பண்ணவா? 




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  உன் பொண்டாட்டி கூட ஓடிப்போனவ தான், நான் ஏதாவது கேட்டேனா? சொன்னேனா? 


 உன் தங்கச்சிக்குக்கூட 13 இடங்கள்ல மச்சம் இருக்கு , அதுல 10 மச்சத்தை ஊர்ல இருக்கறவன் எல்லாம் பார்த்துட்டான், 3 மச்சம் அவ மட்டும் பார்க்கும் இடத்துல இருக்கு , நான் ஏதாவது வெளில சொன்னேனா? 



2. தேவன் ஆணைப்படி வெளிச்சம் உண்டாகட்டும் . என்னது? பல்பு மங்குது? அடடா, அங்கேயும் பவர் கட்டா? ( ஜெ வை கலாய்ச்சுடாங்களாம் ) 



3. வீட்டை பேசாம வித்துடுங்க 


அது முடியாது , படேல் அதுக்கு விட மாட்டார் 


 அவர் யாரு? 

 அவர் தான் ஹவுஸ் ஓனர் ( இந்த மொக்கை ஜோக் `1984 ல சாவி வார இதழ்ல கரடி குளம் ஜெயாப்பிரியன் எழுதிய அரதப்பழசான ஜோக் )



4. உலகில் பெஸ்ட் 3 என்ன தெரியுமா? 


1. பெண்ணின் சிரிப்பு 

2. பெண்ணின் கண்கள் 

3 பெண்ணின் வேர்வை வாசம் , ஆக்சுவலா அவங்க வேர்வை வாசத்துல செண்ட்டே தயாரிக்கலாம் தெரியுமா? 



5.  மீ குட் பாய்,. மை ஃபாதர் ஈஸ் ஃபாதர் 


 வாட்? 

 எங்கப்பா ஒரு ஃபாதர் சர்ச் ல ( ஆராரோ ஆரிராரோ பட வசனம் ) 



6.  நீ என்ன சொல்ல வர்றே? புரியல . சைகைல சொல்றே /. என்னது ? வீடு ஓடிப்போச்சா? 


 நோ


 ஓ வீட்டுல உன்னை டிராப் பண்ணனுமா? 


7.  வாட்சாய்யா இது ? முள் தலைகீழா இருக்கு?


 சார், நீங்க வாட்சை தலைகீழா கட்டி இருப்பீங்க ( க்ரேசி தீவ்ஸ் இன் பால வாக்கம்  நாடக கிரெசிமோகன் ஜோக் ) 



8.  அவ என்ன பண்ணா ? சரியாச்சொல்லி , ஃபிரண்ட்ஷிப்ல ஒரே ஒரு எமோஷன் தான் இருக்கு , மத்ததெல்லாம் லூஸ் மோஷன் தான் 



9. ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக்காட்டுன்னு உங்க மதம் சொல்லுது , ஆனா நீ புகார் கொடுத்திருக்கே,,


10 . உனக்கு மேரேஜ் பண்ண யாருக்கு அக்கறை இருக்கும் ? 

 எனக்கு


 இல்லை , உங்கம்மாவுக்கு , போய் அவங்க கிட்டே முதல்ல சொல்லு 



11.  ரெண்டு வாரம் மருந்து , 3 வாரம் ரெஸ்ட் , 4 வாரம்  நோ டாக்.. 


 டாக்டர் , இதே தான் அவருக்கும் சொன்னிங்க 



12  பத்து ரூபா முதலீடு போட்டு  2 ரூபா லாபம் பார்ப்பது பிஸ்னெஸ் , ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாம 100% லாபம் பார்ப்பது அரசியல்



13. ஒரு நல்ல அரசியல்வாதியோட கடமை எது தெரியுமா? மக்கள்ட்ட பிரச்சனை தீராம பார்த்துக்கறது 



14.  எனக்கு எங்கப்பாவைப்படிக்காது , ஆனா அவர் கிட்டே எனக்கு உரிமை இருக்கு ( ஆரண்ய காண்டம் வசன உல்டா ) 



15. வலுக்கட்டாயமா மதம் மாத்துறது தப்பில்லையா? 


16.  அவங்க அடிச்ச முத ஆளும் நீ இல்லை, அவங்க அடிக்கும் கடைசி ஆளூம்  நீ இல்லை.. 



17. வீரனோட வரலாற்றில் யார் முதல்ல கை வெக்கறாங்க என்பதே முக்கியம்   ( மகேஷ் இன் பிஸ்னெஸ்மேன் பட வசனம் ) 



18.  நாம மிடில் கிளாஸ் , ஒண்ணும் பண்ண முடியாது ( சாமுராய் வசனம் ) 



19.  கோடில ஒருத்தருக்குத்தான் வலியைத்தாங்கிக்கும் சக்தி இருக்கு 



20 .எப்பவும் மன்னிப்பு மட்டும்தான் மனுஷனுக்கு நிம்மதியையும் , சந்தோஷத்தையும் தரும்  







ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 37 ( இது டப்பிங்க் படம் என்பதால் விக்டன்ல விமர்சனம் போட மாட்டாங்க , ஒரு ஒப்பிடலுக்காக )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்கிங்க்  -சுமார் 


 ரேட்டிங்க் -     1 /5  


சி பி கமெண்ட் - படம் குப்பைன்னு ஓப்பனா சொல்லியாச்சு , இது டி வி ல  போட்டாக்கூட பார்த்துடாதீங்க . யாராவது உங்களைப்பழி வாங்க “ உனக்கு 500 ரூபா பணம் தர்றேன், முழுப்படத்தையும் பாருன்னு பந்தயம் கட்டுனாக்கூட பார்த்துடாதீங்க, 2 நாள் தலை வலிக்கும், ஆரோக்யம் முக்கியமா? காசு முக்கியமா? 



டிஸ்கி -1 கடல் விமர்சனம் படிச்சுட்டு ஏகப்பட்ட பெரு திட்டறாங்க, படம் நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்ல மாட்டோமா? சும்மா ஏன் டார்ச்சர் பண்ணனும்? ஆஃபீஸ் டைம்ல திட்ட வேணாம் . காலை 7 டூ 9 மாலை 8 டூ  9 திட்டவும்


டிஸ்கி 2 - கடல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/02/blog-post.html


 

7 comments:

velu said...

Hello boss,
Well done for music one suppudu
For cinima centhil than!

Unknown said...

சார் நேத்து உங்க விமர்சனம் படிக்காம கடல் படத்துக்கு போய் நொந்து நூலகிட்டேன்...
நல்ல வேலை இன்று டேவிட் விமர்சனம் படித்து விட்டேன்...
ரொம்ப நன்றி 1500 ருபாய் மிச்சம்...
Shivakumar.

விஸ்வநாத் said...

உங்க கடின உழைப்பு அந்த டைரக்டர்ஸ் கிட்ட இருந்தா கடல் டேவிட் இரண்டு நல்ல படமா வந்திருக்கு;

Vadakkupatti Raamsami said...

இந்த படம் பார்க்கலாம் என்ற ஒரு (விபரீத) எண்ணம் இருந்தது.நல்ல வேலை சிபியார் காப்பாற்றி விட்டார்.ஏற்கெனவே ராஜபாட்டை பார்த்த அதிர்ச்சியே இன்னும் போகவில்லை.காப்பாற்றிய சிபியாருக்கு நன்றியோ நன்றி

Unknown said...

'kadal' paarthey sakika mudiyama velila vanthen... ithu athaivida kuppaiya... great escape ... your review was good... especially 'kadal'(my mind voice):-)

Jaganathan Kandasamy said...

ஆமா தல நீங்க மட்டும் எப்ப டி 1984 ல வந்த ஜோக் எல்லாம் அப்டேட் பண்றீங்க இரகசிய சிநேகிதம் எதாவது இருக்கா ?

Unknown said...

நான் உங்க பின்னாடி தான் பாஸ் உக்காந்து படம் பாத்திட்டு இருந்தேன் :D