Saturday, September 14, 2013

SUPER - சினிமா விமர்சனம் ( அனுஷ்கா வின் தெலுங்குப்படம் )

ஹீரோ ஒரு  கார் மெக்கனிக், ஹீரோயின்  ஜின்ஸ் பேண்ட் டி சர்ட் ( ஸ்லீவ்லெஸ்) போட்ட நவீன டாக்டர்.அண்ணனோட மெக்கானிக் ஷாப்க்கு அண்ணி ஒரு டைம் வர்றாங்க. ஹீரோக்கு அவரை  கண்டதும் காதல்.அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் அனைவர் காருக்கும் இலவச சர்வீஸ்ங்கறார். ஹீரோயின்  உடனே  போட்டிக்கு  எங்க ஹாஸ்பிடலில் உங்க பணியாளர்கள் அனைவருக்கும்  இலவச சிகிச்சைங்கறார். ஆஹா ! லவ் பண்ணினா  ஒரு டாக்டரைத்தான் லவ்வனும் போல்.  இவங்க காதல் வளரும்போது ஹீரோயினின் வளர்ப்பு அண்ணன் (!!) மூலம் சிக்கல் . 


அவருக்கும்  ஹீரோக்கும் ஆரம்பத்துலயே சண்டை . அக்னிநட்சத்திரம் கார்த்திக் - பிரபு மாதிரி  , அழகிரி -ஸ்டாலின் மாதிரி  முறைச்சுக்கறாங்க . அது ஏன்? அதுக்கு  ஒரு ஃபிளாஸ் பேக்

 ஹீரோயினோட வளர்ப்பு அண்ணனுக்கு நிஜமாவே  ஒரு தங்கச்சி . அது  ஹீரோவை லவ்வுது . திருப்பதி லட்டு மாதிரி  இருக்கும் அனுஷ்காவை ஹீரோவுக்கு  பிடிக்கலை . அவர் எம் ஜி ஆர் கணக்கா  ஹீரோயினை தோழியா மட்டும் ஏத்துக்கிட்டு கட்டிப்பிடித்தல்  , தடவுதல் , இடையை கிள்ளுதல் முதற்கொண்டு என்ன என்ன  மொள்ள மாரித்தனம் எல்லாம் பண்ண முடியுமோ அதை எல்லாம் பண்ணிட்டு காதல் , கல்யாணம் மட்டும் வேணாம்னு சொல்றார்.நல்லவேளை   தங்கச்சின்னு சொல்லலை . 




 ஒரு கட்டத்துல விழாமேடைல   ஓப்பனா  ஒரு ஸ்டேட்மெண்ட் விடறார். இன்னைக்கு  நைட்க்குள்ளே என்னை லவ்வலைன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன் அப்டினு. அதை  ஹீரோ  சீரியசா எடுத்துக்கலை .


ஆனா   அனுஷ்கா சொல்பேச்சு மாறாம செத்துக்கிடக்கார் . அவர் சாவுக்கு ஹீரோதான் காரணம்னு  இவர் நினைக்கறார். அதான் பிரச்சனை . 

படத்துல பயங்கரமான  ட்விஸ்ட் 1 . அனுஷ்கா கொலை செய்யப்பட்டிருக்கார் , யார் எதுக்காக செஞ்சார் என்பது வெண் திரையில்  காண்க 


அமலாவோட ஆத்மார்த்த நாயகன் நாகார்ஜூன்  தான்  ஹீரோ .ஃபங்க்  தலை  , ஷேவ் செய்யாத  தாடி அப்டினு  கேவலமா வர்றார்.அவரை  ப்போய் 2  ஹீரோயின்களும்  விழுந்து  விழுந்து லவ்வுதேன்னு ஆடியன்சுக்கு செம வயித்தெரிச்சல் ( இங்கே ஆடியன்ஸ் = சி பி எஸ்) 


இவர்  கூட 2 டூயட்  , அவர்  கூட ஒரு டூயட்  , 2  ஃபைட் அவ்வ்ளவுதான்  ஹீரோ வேலை 


ஆயிஷா டாக்கியா தான்   ஹீரோயின் . டாக்டரா வர்றவர் டிரஸ்ஸிங்க் சென்ஸ் எப்படி இருக்கனும்னு கத்துக்கிட்டு நடிச்சிருக்கலாம் . அட்லீஸ்ட்   இயக்குநராவது  கவனம் செலுத்தி  இருக்கலாம் . ஒரே தாராள மயம் தான் . சி செண்ட்டர் ரசிகர்களுக்கு  கொண்டாட்டம் தான் 


அனுஷ்கா தான்  2 வது நாயகி . ஒரு டூயட்  , அது போக  17 நிமிஷம் வர்றார் . அவ்வளவுதான். மத்தபடி  இவர்  கிட்டே பெருசா எதிர்பார்க்க  முடியாது 


பூரி ஜெகன்னாத்தின் ஃபேவரைட் காமெடியன் பிரம்மானந்தம்  20 நிமிடங்கள் வந்தாலும்   சிரிக்க வைக்கிறார். 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்துக்கு  டைட்டில் செலக்‌ஷன் ஆஹா. எல்லா மொழியிலும் ஒரே டைட்டிலே வெச்சுக்கலாம் . படம்  சூப்பர்னு டைட்டிலைச்சொன்னாக்கூட ரிசல்ட்டைத்தான் சொல்றாங்கன்னு  நினைச்சுக்குவாங்க 



2. சும்மா கெஸ்ட் ரோலில் வரும் அஸ்கா அனுஷ்கா வை மெயின் ஹீரோயின்  மாதிரி பில்டப் கொடுத்து  போஸ்டர்களில் , ஸ்டில்களில்   பயன் படுத்தி படத்துக்கு மார்க்கெட் வால்யூ கொடுத்தது 


3. படத்துல என்ன கதைன்னு  ரசிகர்களை  யோசிக்கவே விடாம பட படன்னு காட்சிகளை நகர்த்தியது 


4. இன்னொரு  ஹீரோவாக வரும் சோனு வை நாகார்ஜூனை விட  இளமையாக , அழகாக காட்டிய  தைரியம் ( நம்மூர்ல இப்படி காட்ட விட மாட்டாங்க ) 


5. பேங்க் ஏடி எம்  திருடனை பார்த்த வன் ஓவியன்   அதை  வரைய வைப்பவர் பிரம்மான்ந்தம் என்ற காமெடி டிராக் நல்லா  ஒர்க் அவுட் ஆகி இருப்பது . சாயாஜி ஷிண்டே  இமேஜ் பார்க்காமல் காம்டியில் கலக்கியது 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  இரண்டு  ஹீரோக்களும் ஏன்  கொள்ளைக்காரர்கள் ஆகறாங்க என்பதற்கு சொன்ன  காரணம்  ரொம்ப  கற்பனை வறட்சி . ஒரு  டைம் அனுஷ்காவுக்கு வயித்து வலி வருது . சும்மா வெந்தயத்தை கரைச்சுக்குடுத்தா சரி ஆகி இருக்கும் . அதுக்குப்போய்   ஹாஸ்பிடல் செலவுக்கு காசு இல்லைன்னு யாராவது  கொள்ளை அடிப்பாங்களா? ஆளாளுக்கு இப்படி  கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டா  கலைஞர், ஆ ராசா மாதிரி பெரிய மனுஷங்க என்னதான் செய்வாங்க  ? தொழில் போட்டி வந்துடாது? 


2.  ஏ டி எம்  மிஷினை கொள்ளை அடிக்கும் ஆரம்பக்காட்சியில் அத்தனை களேபரங்கள் , பல போலீஸ் ஆஃபீசரை சுடுதல்  , தாக்குதல்க்குப்பின் அவ்ர்கள் கொள்ளை அடிப்பது பிசாத்து   2 லட்சம் ரூபாய்  தானா? ஏ டி எம்  மிஷின்ல அவ்வளவுதான்  இருக்குமா? உள்ளத்தை அள்ளித்தா வேன் எல்லாம் வெச்சுக்கடத்தி  இருக்கோம் காமெடி தான் நினைவுக்கு வருது 


3. பேங்க்கில் கொள்ளையர்கள் வந்ததும் ஒரு லேடி ஸ்டாஃப் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி மாட்டிக்கறா. அவ சாதாரணமா எஸ் எம் எஸ் அனுப்பி  இருக்கலாமே? 


4. பேங்க் ல கொள்ளை அடிக்க  ஹீரோக்கள் 2 பேர் , ஹீரோயின் 1 ஆக  மொத்தம் 3 பேர்  3 வெ்வ்வேற  பைக்ல போறாங்க . ட்ரிபில்ஸ் போய் இருக்கலாம் , அல்லது  2 பைக் போதுமே?  நாட்டுல பெட்ரோல் விலை என்ன ரேட்டுக்கு  விக்குது ? 


5. ஹீரோ & கோ  வை போலீஸ்கள்  13 பேர் பார்க்கறாங்க ., எல்லார் கைலயும் கன்  இருக்கு , ஆனா  சுடாம  வரிசைல வந்து  ஒவ்வொரு ஆளா  ஃபைட்  போட்டுட்டு இருக்காங்க ? 



6.  அனுஷ்கா  ஹீரோவுக்கு ஒரு டைம்  கால் பண்றார் . அப்போ  ஹீரோ அட்டெண்ட்  பண்ணாம ஃபோனை கட் பண்றார் . உடனே   ஹீரோயின்   டயல்டு கால் ல போய்  ரி டயல் பண்ணா போதாதா?  எதுக்கு பேக்கு மாதிரி இன்னொரு டைம்,  10 டிஜிட்டையும் டைப் பண்ணுது ( இந்த   தப்பை நல்லா   நோட் பண்ணுங்க   , எல்லா  சினிமாலயும்  வருது ) 


7. அனுஷ்கா தற்கொலை செஞ்சார் , போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட் ல  பலரோட   கை ரேகை பதிஞ்சிருக்கு  தகவல் வந்திருக்குமே?  ஏன் அதை யாரும்    நோட் பண்ணலை ? 


8. அனுஷ்கா   ஹீரோ  கிட்டே தன் லவ்வை சொல்றார் . அவர் ஏத்துக்கலை . ஒண்ணா   அவர் விலகிப்போகனும் . அல்லது  கொஞ்சனும் , அதை விட்டுட்டு என்னமோ லவ்வர்ஸ் விளையாடற மாதிரி  இப்போ நான்  என் டிரஸ் எல்லாம்  ரிமூவ் பண்றேன் , நீ உன்  டிரஸ் எல்லாம் கழட்டுங்கறார். இதுனால காதல்  வந்துடுமா?  ஏதோ   காட்சி  கிளுகிளுப்பா வரனும்க்றதுக்காக காதலை  கொச்சைப்படுத்தலாமா?  ( எங்களுக்கு சீனும்  வேணும் , அது  கண்ணியமா காதலை  கொச்சைப்படுத்தாம  இருக்கனும் ) 


9. வெள்ளி நிலா பாட்டு   ரட்சகன் ல வரும் சந்திரனை தொப்ட்டது யார் பாட்டின்  இசை ,  மெட்டு எல்லாத்தையும் அப்பட்டமா  சுட்டு இருக்கு 


10 . காமெடியன்  டிராயிங்க் பண்ணும்போது கைல  பிரஷ் வெச்சிருக்கார் , ஆனா ஓவியம்   ஃபினிஷ் ஆனதும்  காட்டுவது பென்சில்  ஓவியம் தான் 




மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணுங்க   விஷயத்துல பசங்க எப்பவும்  வீக் தான் 


2. ஹீரோயின் - எனக்கு  ஃபோர்ட்டபிள்  டி வியே போதும்,  பெருசு வேணாம் 


ஹீரோ - என்னங்க  இப்படிச்சொல்லீட்டீங்க ? சின்னதை வெச்சு என்ன செய்யப்போறீங்க? ( டபுள்  மீனிங்க் ) 


3. அண்னனுக்கு பேக் பெயின் 


ஹீரோயின் - என்ன செஞ்சாரு ?


 எதுவுமே செய்யலை . அதான் பிராப்ளம் . காலா காலத்துல செய்ய வேண்டியதை செஞ்சிருக்கனும் 


4.  டேய் , கஷ்டப்பட்டு சம்பாதிச்சவன்  கூட இப்படி எண்ணிட்டு இருக்க மாட்டான் , கொள்ளை  அடிச்ச பணத்தை எதுக்கு இப்படி  மண்டி போட்டு உக்காந்து எண்ணிட்டு  இருக்கிங்க ? 




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  39 ( டப்பிங்க் படத்துக்கு விக்டன்ல விமர்சனம் போட மாட்டாங்க ) 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   2.75 / 5


சி பி கமெண்ட்  - படம்  ஜாலியா போகுது . கண்ணுக்கு  விருந்து  இருக்கு , காமெடி  இருக்கு . ஆனா டி வி ல பார்க்கற அளவு தான் ஒர்த் . நாகார்ஜூன் ,, அனுஷ்கா ரசிகர்கள் மட்டும்  தியேட்டரில் பார்க்கலாம் .இது ஆந்திராவுல  2005 லயே  ரிலீஸ் ஆகி இருக்கு , இங்கே இப்போதான் வருது  போல 



1 comments:

Unknown said...

போஸ்ட்மார்ட்டம்ல கை ரேகை எல்லாம் தெரியாது அதை பாரன்சிக் டிபார்ட்மென்ட் தான் கண்டுபுடிக்கும் பொதுவா தற்கொலை கேஸுக்கு பாரன்சிக் துறையை கூப்பிட மாட்டாங்க போஸ்ட்மார்ட்டம்ல ஏதாவது கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் தெரிய வந்தா அப்புறம் தான் கை ரேகை பத்தியெல்லாம் கவலைப்படுவாங்க