Monday, June 04, 2012

அப்பாடேக்கர் ட்வீட்டரின் பேட்டி -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 7





சென்னையில் நடந்த மெகா ட்வீட்டப்ல வாழை அமைப்பு பற்றி திவ்யா மேடம் பேசிய உரை தான் இந்த பதிவுல முதல்ல வந்திருக்கனும்.. ஆனா தமிழனான நான் தமிழ் சினிமா பார்த்து பார்த்து கெட்டுப்போனதால கருத்து சொல்றதை ஓப்பனிங்க்ல வெச்சுக்கறது இல்லை.. இடைவேளைக்குப்பிறகுதான் .. அவர் பேசியதின் சாராம்சம்


வாழை

சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த இயந்திர வாழ்வில், பள்ளிப்பருவத்தின் முக்கியம் அறியாத கிராம குழந்தைகளுக்கு வழிகாட்டியாக சிலர் செயல்படுகிறார்கள் என கேள்விப்பட்டேன். வார இறுதி ஓய்வுநாளை எப்படி செலவு செய்வதென்று அறியாமல் பல இளைஞர்கள் உள்ளனர். வாழையை பற்றி அறியாதவரை நானும் அப்படிதான் இருந்தேன்.


நம் சமுதாயத்தை எப்படியாவது மாற்றவேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் செயல்படவேண்டுமென தெரியாமல் இருப்போம். நமக்கும் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது நம் வாழை. நம் சமுதாயத்தில் அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைத்தால் போதும், இந்த சமுதாயமே மேன்படும். இதனை அடைவதற்கு வாழை சிறந்த செயல்முறையை வரையறுத்துள்ளது, நம்முடைய பங்கு இதனை செயல்படுத்துவதில்தான் உண்டு.

மாதம் ஒரு முறை கல்வி பட்டறைக்கு செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் பட்டறை செயல்படுத்த தேவைப்படும் மூலபொருளை தயார்படுத்தி இருப்பர் (வரப்போகிற பட்டறைகளுக்கு நாமும் உதவலாம்), நாம் அதனை செயல்படுத்த உதவினால் போதும். அந்த பட்டறையில் கல்வி மற்றும் soft skills பற்றிய sessions இருக்கும்.

கல்விக்கு மேல் குழந்தைகளுக்கும் நமக்கும் ஒரு அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை உறவை வாழை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த உறவு பட்டறை முடித்து நாம் வீடு திரும்பிய பிறகும் தொடரும். அவர்களுடன் கடிதத்தின் மூலமாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாகவோ தொடர்புகொண்டு அவர்களின் முன்னேற்றத்தை நாம் அறிந்து கொள்ளலாம், மேலும் அவர்களை ஊக்குவிக்கவும் செய்யலாம்.




வாழை நம்மிடம் எதிர்பார்ப்பது:

1. நம்முடைய நேரம் (மாதம் ஒருமுறை கிராமத்திற்கு சென்று கல்வி புகட்ட)

2 குழந்தைகளிடம் செலவிட சில நேரம் (வாரம் ஒருமுறை அவர்களிடம் தொலைபேசியில் பேச)

3  வருடத்தில் 12 முறை பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும்

4 வாழை யாரிடமும் கட்டாயமாக பணம் எதிர்பார்பதில்லை, விருப்பப்பட்டவர்கள் வருட சந்தாவோ அல்லது நன்கொடையோ அளிக்கலாம்

5 . கல்வி பட்டறைக்கு சென்று வர பேருந்து சந்தா.

வாழைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்


இவங்க பேசி முடிச்ச பின்னால நான் கொஞ்சம் ஹால்க்கு வெளீல வந்தேன்.. அப்போ பல்லவ மன்னன் அங்கே நின்னுட்டு இருந்தாரு..அவர் கிட்டே பேசுனது..






 “ யோவ்.. என்னய்யா நயன் தாராவை பறி கொடுத்த சிம்பு மாதிரி பம்மிக்கிட்டு நிக்கறீங்க? உள்ளே தானே ட்வீட்டப் மீட்டிங்க் நடக்கு.. இங்கே என்ன பண்றீங்க? “


 இல்லை மாப்ஸ்.. என்னை பிளாக் பண்ணிட்டாரு ஒரு பிரபல ட்விட்டர்... அவர் இப்போ இங்கே வந்திருக்காரு. அவர் கிட்டே  ஏன் என்னை பிளாக் பண்ணிட்டீங்க?ன்னு கேட்கலாம்னு வந்தேன்..


இதெல்லாம் சப்ப மேட்டர்.. அவர் என்ன இண்ட்டர் நேஷனல் ஃபிகரா? அவர் பிளாக் பண்ணுனா என்ன லாஸ் உங்களுக்கு? ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்த மடம்.. “இவர் போனா வேற ஒருத்தர் வந்துட்டு போறாருன்னேன்..


அவர் உடனே சொன்ன ஃபிளாஸ்பேக் ( இதில் அவன் இவன் என அவரைப்பற்றி இவர் குறிப்பிடுவது ஒரு உரிமையிலும், பழக்கத்திலும்)


ஆரம்பத்தில் நானும் அவனும் நல்ல முறையில் தான் நட்போடு இருந்தோம்.. அவனோட ஸ்பெஷாலிட்டி டைமிங்காக காமடி பண்ணுவது தான்.. அவன் மூலமாக தான் எனக்கு பிரீயாவுடு டேவிட் அறிமுகம் ஆனார். ஒருநாள் திடீர் என்று அவன் டுவீட்ஸ் வராததை கண்டு அவன் ப்ரோபைல் பேஜை கிளிக் செய்தேன்.

அப்போது தான் அவன் ப்ளாக் செய்தது தெரிய வந்தது.. நாம எதுவும் அவன திட்டவோ கிண்டலோ செய்யலையே எதுக்கு ப்ளாக் செஞ்சான் என்ற ஆதங்கம் இருந்தது..

அப்போது தான் ரியல்பீனு புதிதாக டுவீட்டார் வந்த நேரம். அந்த பெண் அவரிடம் மேன்ஷன் போட்ட போது ஸ்டுபிட் என்று பதில் அளித்தார் DKCBE.

பிரீயாவுடு டேவிட் ,வாலிபன் ஷேக் போன்றவர்களுக்கு போன் செய்து கேட்டதில் அவர்களும் சொன்னார்கள் தீபக் எப்போ ப்ளாக் பண்ணுவான் எதுக்கு ப்ளாக் பண்ணுவான் என்றே தெரியாது அவன் ரொம்ப சென்சிடிவ் என்றார்கள்.

எனக்கு முன் புரட்சிகனல்SGR என்பவரை ப்ளாக் செய்தார் தீபக். அப்போது SGRக்காக நான் தீபக்கிடம் கேட்டபோது his tweets are stereotypic என்று பதில் அளித்தார்..

ஒருநாள் திடீர் என்று எனக்கு தீபக் மேன்ஷன் போட்டு "yes I have unfollowed and going to block riyazdentist " grow up kids .. U are not replying my mentions 

என்ற டுவீட் போட்டார். அதுக்கு நான் பதில் சொன்னேன் நான் எந்த ஒரு mentionக்கும் பதில் அளிக்காமல் இருந்ததில்லை.. ஒருவேளை groupப்பாக ரயில் வண்டி சாட் நடக்கும் போது தவறி இருக்கலாம் என்றேன். போனில் தொடர்புகொன்டாலும் பிக்கப் பண்ண மாட்டான்.

கோவை டுவீடப் நடந்த போதும் அதை தொடர்ந்து திருச்சி டுவீட்டப் போதும் நான் கால் பண்ணி அவன் எடுக்கவே இல்ல .

இப்போ அபோ நேரில் சந்தித்து கேட்டேன்., அதுக்கு அவன் பதில் " I don't like your tweets so blocked" that is my wish 



 ஃபிளாஸ்பேக் ஓவர்

இதானா மேட்டர்... விடுங்க கேட்டுடலாம்.. அப்டின்னேன். இங்கே ஒரு விஷயம் நல்லா கவனிங்க.. டாக்டர் ரியாஸ் அந்த பிரபல ட்வீட்டரை நண்பர் என்ற முறையில் பழகிய பழக்கத்தை வைத்துத்தான் அவன் இவன் என்ற நடையில் பேசி இருக்கார்..



இப்போ அந்த பிரபல பிளாக் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ஒரு பேட்டி 


அண்ணே, வணக்கம்னே... கின்னஸ் ரெக்கார்டுல இடம் பிடிக்கற அளவு  ஏகப்பட்ட பேரை பிளாக் பண்ணி இருக்கீங்க.. என்ன ரீசன்னு சொன்னீங்கன்னா உங்களுக்குப்பின்னால வர்ற  இளம் சந்ததியினர் திருந்துவாங்க, பல விஷயம் தெரிஞ்சுக்குவாங்க.




எனக்கு இங்க்லீஷ்ல ட்வீட் போட்டா பிடிக்காது.. நான் கலைஞர் மாதிரி பயங்கரமான தமிழ்ப்பற்றாளன். அதனால இங்க்லீஷ்ல யார் ட்வீட் போட்டாலும் உடனே பிளாக் தான்..ஒருத்தன் எனக்கு குட்மார்னிங்க்னு ட்வீட் போட்டான், உடனே அவனை பிளாக் பண்ணிட்டேன்

 அண்ணே, நீங்க பண்றது அநியாயம்... GM  னு இங்க்லீஷ்ல போடறது ஈசியா? காலை வணக்கம்னு போடறது ஈசியா? அதுவும் இல்லாம அவர் மொபைல் ட்வீட்.. தமிழ் விசை ஒர்க் ஆகலையாம்.. பார்த்து மன்னிச்சு விட்டுடுங்கண்ணே

அதெல்லாம் முடியாது.. நான் கலைஞர் மாதிரி, கொண்ட கொள்கைல இருந்து என்னைக்கும் மாறவே மாட்டேன்


ஓஹோ.. உங்க ஆட்டோகிராஃப் இந்த டைரில போட்டுக்கொடுங்கண்ணே...


இந்தா. பொழச்சுப்போ..


அண்ணே.. இப்போதான் தமிழன்.. தமிழ் என் மூச்சு... பேச்சுன்னு சொன்னீங்க.. உங்க பேரைக்கூட இங்க்லீஷ்ல தான் போடறீங்க, அது ஏண்ணே?


 அது வந்து.....  வந்து.. ம் எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காது. மென்ஷன்க்கு பதில் சொல்லலைன்னா பிடிக்காது. உனக்குக்கூட மென்ஷன் போட்டு ஒரு கேள்வி கேட்டேன், நீ பதில் சொல்லலை, உடனே பிளாக் தான்..


 அப்டி என்னண்ணே கேள்வி கேட்டீங்க. நான் கவனிக்கலை. மன்னிச்சுடுங்கண்ணே.. இப்போ அதே கேள்வியை திருப்பிக்கேளுங்க.. பிரமாதமா பதில் சொல்றேன்....

 உனக்கு மூளை இருக்கா?




 ம்க்கும்.. இதான் அந்த கேள்வியா?இந்த மாதிரி கேள்விஎல்லாம் டைம் லைன்ல கேட்டா எபப்டி பதில் சொல்ல? டி எம் ல கேட்டிருந்தா “ இல்லை”ன்னு டக்னு சொல்லி இருப்பேன்..


 நான் தான் உன்னைக்கண்டுக்கவே இல்லையே. எதுக்கு வலியனா வந்து என் கிட்டே பேசறே.. ?



 அண்ணே.. எல்லாம் ஒரு பொதுசேவை தான்.. மக்களுக்கு பல விபரங்கள் போய்ச்சேர வேணாமா? அது இருக்கட்டும்.. இந்த மெகா ட்வீட்டப்க்கு தோராயமா  120 பேரு வந்திருக்காங்கன்னு அட்டெண்டென்ஸ் ரிஜெஸ்டர் சொல்லுது.. ஆனா நீங்க மட்டும் தான் நடமாடும்  சாராயமா வந்திருக்கற மாதிரி தெரியுது. அது ஏன்?


சரக்கடிக்காமல் ஒரு நாளும் இருக்க வேணாம் - இதுதான் என் பாலிஸி.. அது என் பர்சனல் மேட்டர். அதைக்கேட்க நீ யார்டா வெண்ணே..

அண்ணே. சரக்கடிச்சு நீங்க குப்புறக்கா, அப்புறக்கா உங்க வீட்லயோ, ரோட்லயோ கிடந்தா எவன் கேட்குறான்.. பொது இடத்துல மப்போட வந்திருக்கீங்களே.. அது சரியா?ன்னு கேட்கறேன்...


 நான் வந்து யார் கிட்டேயாவது தகராறு பண்ணேனா? யாருக்காவது டிஸ்டர்பா இருந்தேனா? நான் பாட்டுக்கு ஓரமா விழுந்து கிடந்தேன், என் மப்பு என் சரக்கு என் உரிமை.....


சாரிண்ணே.. ஓக்கே .. இனி ஏதும் கேட்கலை.. பை..


கடைசில சாப்பாடு.. பிரமாதமா இருந்துச்சு.. அருமையான சமையல்.. ஏற்பாடுகள். சுடச்சுட பரிமாறுனாங்க.  குலோப்ஜாமூன் 2 , ஒரு வெஜிடபிள் சூப்.. வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி.. தயிர் சாதம் என ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு நிகரான கலக்கலான  டிஃபன் ஐட்டம்ஸ்.  ரூ 160 மதிப்புள்ள உணவு என அறியத்தகவல்...

 பல உற்சாகமான அனுபவங்களை மறக்க முடியாத ஞாபகங்களை இந்த சந்திப்பு தன்னகத்தே கொண்டது.. கருத்து வேற்றுமைகள், சில மனஸ்தாபங்கள் எழுந்தாலும் இந்த சந்திப்பு வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பாக இருந்தது..

 மீண்டும் ஒரு முறை விழா ஏற்பாட்டாளர்கள்  எக்ஸ்பர்ட் சத்யா, கரையான், பரிசல்காரன், கேசவன், பாலு அனைவருக்கும் நன்றிகள்.. விழாவை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துகள்.. 






டிஸ்கி-





இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html


 பாகம் 4 -

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4 http://www.adrasaka.com/2012/05/4.html

  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html


5 comments:

யுவகிருஷ்ணா said...

ட்விட்டப்பு முடிஞ்சே மூணுவாரம் ஆயிடிச்சே அண்ணே. இன்னுமா இதை வெச்சி கல்லா கட்டிக்கிட்டிருக்கீங்க? :-(

குரங்குபெடல் said...

யோவ் . . .


ட்விட்டப்பு தொடர்

ரொம்ப மொக்கையா இருக்குய்யா . .


சீக்கிரம் என்ட்கார்ட் போடுய்யா

Menaga Sathia said...

சில படங்களில் கறுப்பு கண்ணாடி மிஸ்ஸிங்....

selva ganapathy said...

நாங்க பண்ற "என்னால் முடியும்" பதியும் கொஞ்சம் எழுதுங்கள்! :-).. உங்க பதிவை நிறைய பேர் படிக்கிறதால அது எங்களுக்கு கொஞ்சம் பலனளிக்க வாய்ப்புள்ளது!

சி.பி.செந்தில்குமார் said...

@selva ganapathy


உங்கள் அமைப்பு பற்றி ஒரு மெயில் அனுப்புங்க, தனிப்பதிவாவே போட்டுடறேன்.. ஆல்ரெடி நீங்க கொடுத்தது காப்பி பண்ணி போட முடியலை :(