Monday, June 04, 2012

மயங்கினேன் தயங்கினேன் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22218_1.jpgஉங்க இடது கைல 2 ராஜேஷ் குமார் நாவல், வலது கைல 3 தேவி பாலா நாவல், 5 நாவலையும் அட்டர் டைம்ல படிச்சு கதை சொல்லுன்னு உங்க கிட்டே சொன்னா எப்படி இருக்கும்?அப்படித்தான் இந்த படத்தை பார்க்கறப்ப எனக்கும் இருந்துச்சு.. பொறுமையா உக்காருங்க, கதை சொல்றேன்... 

டிராக் -1 :  ஹீரோயின் க்கு ஒரு தங்கச்சி, ஒரு அம்மா, ஒரு அப்பா.. எதிர்பாராதவிதமா அம்மா, அப்பா இறந்துடறாங்க, அந்த அதிர்ச்சில தங்கச்சி மன நிலை பாதிக்கப்பட்டுடறா... மனநலக்காப்பகம்ல அவளை சேர்க்கறாங்க.. அங்கேயே ஹீரோயினும் சிஸ்டம் ஆபரேட்டரா சேர்ந்துக்கறாங்க.. அந்த காப்பகத்தோட நிறுவனர் நம்ம நித்தியானந்தா மாதிரி.. அந்த காப்பகத்துல இருக்கற பொண்ணுங்களை ரேப் பண்ணி தன் வெப்சைட்ல அப்டேட் பண்றான்.. ( வெப்சைட் லிங்க் எல்லாம் கேட்கக்கூடாது.. ) ஹீரோயின் அதைக்கண்டுபிடிச்சு போலீஸ்ல வில்லனை மாட்டி விட்டுடறா.. அந்த கடுப்புல வில்லன் அவளை பழி வாங்க தேடிட்டு இருக்கான்..

டிராக் 2 - ஹீரோவோட ஃபிரண்ட் காதல் படத்துல பரத் வந்தா மாதிரி ஒரு பைக் மெக்கானிக். தனுஷ்க்கு தம்பி மாதிரி ஆள் இருப்பார், ஆனா அவரையும் ஒரு 50 மார்க் ஃபிகர் வலியனா துரத்துது.. லவ் பண்ணுது.. அவன் மேல மேல வந்து விழுது.. மெயின் மேட்டர் தவிர மத்த மேட்டர் எல்லாம் முடிஞ்சுடுது, ஆனா வீட்ல சிங்கப்பூர் மாப்ளை பார்க்கறாங்கன்னு சொன்னதும் பாப்பா எந்த விதமான  மன தடுமாற்றமோ, சங்கடமோ இல்லாம ஓக்கே சொல்லிடுது.. இவன் மெண்ட்டல் ஆகிடறான்


 டிராக் -3 :  இன்னொரு வில்லன், இவன் .இன்ஸ்பெக்டர், ஆள் புரியாத புதிர் ரகுவரன் மாதிரி சைக்கோ பார்ட்டி.. ஆஃபீஸ் போறப்போ அவன் சம்சாரத்தை வீட்டுக்குள்ளேயே பூட்டிட்டு போற ஆள்.. ஒரு நாள் அவன் இல்லாதப்ப அங்கே வர்ற ஹீரோவோட ஃபிரண்ட் கூட பழக்கம் ஆகி ஹி ஹி .. ஒரு டைம் ஃபுல் மீல்ஸ் சாப்பிடச்சொல்லி அவன் சாப்பிட்டதும் தற்கொலை செஞ்சுக்குது//


டிராக்  4 : இப்போ தான் மெயின் கதை.. ஹீரோ ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்..ஹீரோயின் அதே நிறுவனத்துல ஒர்க் பண்ற டெலி காலர்.. ஏதாவது அவசர கேஸ்னா அவ தான் ஹீரோவை கூப்பிடுவா .. ஐ மீன் ஃபோன்ல .. 2 பேரும் நேர்ல பார்த்துக்காமயே ஃபோன் லவ் பண்றாங்க.. ஆனா குள்ளநரிக்கூட்டம் படத்துல வர்ற மாதிரி நேர்ல பார்த்துக்கறாங்க.. ஆனா அவங்க தான் இவங்கன்னு அவங்களுக்கு தெரியாது..எப்படியோ கஷ்டப்பட்டு தெரிஞ்சு நம்மையும் கஷ்டப்படுத்தி பாடா படுத்தறாங்க..



http://www.koodal.com/cinema/koodal_reel/2011/mayanginen-16.jpg


இந்த 4 டிராக்கும் எப்படி இணையுது? வில்லன் துரத்திட்டு வந்த ஹீரோயின் வில்லன் கைல மாட்னாளா? என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதி கதை.. ம்க்கும், 98 % கதை சொல்லியாச்சு..


நிதின் சத்யா நல்ல நடிகர் தான்.. ஆனா இந்தப்படத்துல அண்ணனுக்கு சான்ஸ் கம்மி.. ஏதோ வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம நடிக்கறார்.

மத்த ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் பற்றி சொல்ல பெருசா ஏதும் இல்லை.. கஞ்சா கறுப்பு கடி கடுப்பு.. என்ன சொன்னாலும் காமெடின்னு நினைச்சுக்குவார் போல. .


சைக்கோ போலீஸ் அஜய் ரத்னம் நடிப்பு  ஓவர் டோஸ்








இயக்குநரிடம் சில கேள்விகள்


1. இன்ஸ்பெக்டர் வில்லன் கோயிலுக்கு தன் சம்சாரத்தோட போறார், அப்போ சம்சாரம் மஞ்சள் கலர் சேலை கட்டிட்டு வருது, கோயில்ல ஒரு பன்னாடை அதாவது ஹீரோவோட ஃபிரண்ட் “ மேடம்  நீங்க செம கட்டையா இருக்கீங்க.. இந்த மஞ்சள் கலர் புடவை உங்களுக்கு சூப்பர்னு சொல்றான்.. எந்த ஊர்லயாவது கணவனை பக்கத்துல வெச்சுக்கிட்டே அப்படி யாராவது கமெண்ட் அடிப்பாங்களா? அதுவும் கணவர் ஒரு இன்ஸ்பெக்டர்..


2. வீட்டுக்கு வந்ததும் இன்ஸ்பெக்டர் கடுப்பாகி அந்த  மஞ்ச சேலையை உருவி சிகரெட் லைட்டரால எரிச்சிடறார்... அடுத்து 2 நாள் கழிச்சு ஹீரோவோட ஃபிரண்ட்  வீட்டுக்கு வந்து இன்ஸ்பெக்டர் சம்சாரம் கிட்டே “ நான் உங்களை முதல் முதலா பார்த்தேனே , மஞ்சள் கலர் புடவை அதை கட்டிட்டு வாங்க.. பார்க்கனும் போல இருக்குங்கறான்.. மேடமும் கட்டிட்டு வர்றாங்க.. அது எப்படி?


3. ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ ஹீரோயின் டெட் பாடியை வெச்சு அவ தலை மாட்டுல ஆரம்பிச்சு குழி தோண்டுறான்.. ஆனா குழி தோண்டி முடிக்கறப்போ அந்த குழி ஹீரோயின்க்கு கை சைடுல இருக்கு..


4. மொட்டை மாடில 1 ஏக்கர் அளவு இடம் இருக்கு.. நாடோடிகள் படத்துல வர்ற மாதிரி ஹீரோ மற்றும் நண்பர்கள் 3 பேரு படுத்திருக்காங்க.. ஹீரோவின் தங்கை போக ஏகப்பட்ட இடம் இருந்தும் அந்த 3 பேரை மிதிச்சுட்டு போறா.. அது காமெடியா?


5. ஹீரோயின் அடிக்கடி ஹீரோவுக்கு ஃபோன் பண்றாங்க , 2 பேரும் நேர்ல பார்த்துக்கிட்டதில்லை.. இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் , ஹீரோ ஹீரோயினை பார்க்கலை ஓக்கே ஆனா ஹீரோயின் கம்ப்யூட்டர்ல தான் ஒர்க் பண்றாங்க? ஹீரோ அதே கம்பெனில ஒர்க் பண்றப்போ அவர் நினைச்சா ஈசியா சிஸ்டம்ல பார்க்கலாமே?


6. ஒரு சீன்ல ஹீரோயின் கொலுசுல திருகாணியை டைட் பண்ண பாவாடையை ஏன் முழங்கால் வரை தூக்குது? ஹீரோவும் பக்கத்துல இல்லை.. ஆடியன்சை கிளுகிளுப்பேத்தவா?


7. எந்த லூசாவது தான் பண்ற கில்மா ரேப் வேலையை எல்லாம் தன் வெப்சைட்ல ஏத்துவானா? வில்லன் அப்படி பண்றாரே? அதுவே எவிடென்ஸ் ஆகாதா?


8. சரி. அப்படித்தான் வெப்சைட்ல ஏத்தி வெச்சிருக்கார்னே இருக்கட்டும் , அதே சிஸ்டம்ல ஒர்க் பண்ண ஹீரோயினை  வில்லனே அப்பாயிண்ட் பண்றாரே? அது எபப்டி? அவ பார்ப்பா-னு தெரியாதா?


9. வில்லனின் கில்மா வேலைகளை எல்லாம் பென் டிரைவ்ல காப்பி பண்ணி மறைவா  வைக்காம லூஸ் ஹீரோயின் என்னமோ பெருமையா கம்பேனி ஐ டி கார்டு டேக் மாதிரி கழுத்துல மாட்டிட்டு இருக்கு.. அவளை பிடிச்ச வில்லன் உலக மகா  கேனம் போல “ ஆதாரத்தை எங்கே வெச்சிருக்கே?னு கேட்கறான்

10. ஒரு சீன்ல வில்லன் கோபம் வந்து அவர் போட்டிருக்கற பவர் கிளாசை தூக்கி எறியறார்.. யாருக்கு நஷ்டம்? புரொடியூசருக்கும், வில்லனுக்கும் தான்..

11. வில்லன் ஒரு பொம்பளை பொறுக்கி.. ஹீரோயின் லட்டு மாதிரி இருக்கா .. தனியா மாட்டிக்கிட்டா.. வில்லன் கூட 17 அடியாள்ங்க இருக்காங்க.. அவங்களை காவலுக்கு வெச்சு ஹீரோயினை ரேப் பண்ணாம் அந்த வில்லன் லூசு மாதிரி என்னமோ ஹீரோவை துரத்தி துரத்தி அடிக்கற மாதிரி அடிச்சுட்டு இருக்கான்.. அப்படியா ஒரு பெண்ணை அடிப்பாங்க?


12. ஆசிரமத்துல வில்லன் போலீசால் அப்போதான் கைதாகிறார்.. உடனே  மக்கள் எல்லாம் என்ன விபரம்னே தெரியாம கல் எடுத்து அடிக்கறாங்க..


13. வில்லன் தன்னை  சேஸ் பண்ணிட்டு இருக்கான்கற மேட்டரை ஹீரோயின் ஏன் எஸ் எம் எஸ் பண்ணலை?


14.  அம்மா, தங்கையுடன் வீட்டில் இருக்கும் ஹீரோ ஃபிரண்ட்சுடன் டைனிங்க் ஹால்ல சரக்கு ஓப்பன் பண்றார்.. பக்கத்துலயே அம்மா..


15.  பூட்டுன வீட்ல நுழையும் திருடன் முதல் வேலையா தாழ்ப்பாள் போட்டுக்குவான்.. ஆனா வில்லன் வீட்டுக்குள்ளே எப்படி திருடன் உள்ளே இருக்கும்போது வர்றான்?







 மனம் கவர்ந்த வசனங்கள்


1. பிடிக்காத பொண்ட்டாட்டியா இருந்தாலும், புருஷனா இருந்தாலும்  பேசிக்காம இருக்க மாட்டாங்க ..


2.  மாமி .. ஏதாவது உண்டியல்ல போடுங்க.. கோவில் கும்பாபிஷேகத்துக்கு நிதி திரட்டறோம்..

 என் கிட்டே குலுக்கி என்ன பிரயோசனம்.. மாமா கிட்டே குலுக்குங்கோ..

மாமா..

 போப்பா .. நான் மாமி உண்டியல்லயே காசு போடறதில்லை, சாமி உண்டியல்லயா போடப்போறேன்?


ஹூம், மாமா போடத்தயங்குனாலும் மாமி போட்டுடறா ..



3. அந்தக்காலத்துல விவரமாத்தான்யா கண்டு பிடிச்சிருக்காங்க.. போலீஸ்க்கு சைரன் மாதிரி, பெண்ணுக்கு கொலுசு.. ஓசையை வெச்சே கண்டு பிடிச்சுடலாம்..


4.  ஏண்டா, நீ கொடுத்த 500 ரூபா நோட்டுல காந்தித்தாத்தாவே இல்லையே?

ஹி ஹி அவசரத்துல என் தாத்தா ஃபோட்டோவை பிரிண்ட் பண்ணீட்டேன்..


5. யோவ்.. நான் புதுசா? பழசா?ங்கற  ஆராய்ச்சி இப்போ ரொம்ப முக்கியமா?


6. யோவ், நீ கறுப்பு.. உன் பொண்ணு சிவப்பு... எனி ஃபேமிலி சீக்ரெட்?

 போடா.. நீ கூட கறுப்பு, உங்கக்கா சிவப்பு நான் ஏதாவது கேட்டேனா?


7. என்னடி வேணும் உனக்கு?

 நீ தான்


 எஸ்னு சொன்னா கிஸ் வரை போயிடுவே.. கிளம்பு காத்து வரட்டும்


8.  யோவ்.. என்னைப்பத்தி உனக்குத்தெரியாது.. என் வலை தனி வலை ..






9.  உன் ஆள் வர்றாடா..

 ஏழரை வருதுன்னு சொல்லு..

 என்னடா சொன்னே?

 ஸ்பேனர் சைஸ் சொன்னேன்க்கா..


10. உங்க பேர் அனுவா?

 ஏன்?

 காபி வித் அனு மாதிரி.. ஹி ஹி


11. காலைல கொடுத்த காபி செம அதே மாதிரி குடுங்க..

 அதே மாதிரி கொடுத்தாச்சு..

 எப்படி?

 அது ஜெராக்ஸ் காப்பி ஆஃப் த காப்பி


12.  மேடம், அவனோட ரைட் ஹேண்ட், லெஃப்ட் ஹேண்ட் எல்லாம்  நான் தான்.. எதா இருந்தாலும் என் கிட்டே சொல்லுங்க..


ஏன் அவன் ஹேண்டி கேப்டா?


13. ஏண்டா லூசு.. பர்த்டேக்கு பொக்கே தராம புரோட்டாவா தருவாங்க ?


14. குழந்தைங்க அழுதுட்டே பிறக்கறது சிரிச்சுட்டே  வாழத்தான்


15. ஆம்பளைங்களை சந்தோஷப்படுத்தறதே  நல்ல பெண்ணுக்கு அழகு..


16.  ஆம்பளைங்க கிட்டே எப்படி வேணாலும் பேசிக்கோ, ஆனா பொம்பளைங்க கிட்டே மட்டும் ரொமாண்டிக்கா பேசு..


17. நான் தான் ஒத்தைல இருக்கேன்னு பார்த்தா  எனக்கு வந்திருக்கற  தலைவலியும் ஒத்தையா தான் இருக்கு ..


18.  என்னங்க.. நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்களுக்கு தலைவலி தைலம் தடவவா? ரிலீஃபா இருக்கும்


 என் வாழ்க்கைல  இனி ரிலீஃபும் இல்லை, ரீ லைஃபும் இல்லை








எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - அஜித் பெயின் ( தலவலி)










http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22221_1.jpg


3 comments:

குரங்குபெடல் said...

ஒரு சீன்ல ஹீரோயின் கொலுசுல திருகாணியை டைட் பண்ண பாவாடையை ஏன் முழங்கால் வரை தூக்குது? ஹீரோவும் பக்கத்துல இல்லை.. ஆடியன்சை கிளுகிளுப்பேத்தவா?



நல்லா கேட்குறய்யா கேள்வி . .

Unknown said...

ப‌ட‌ம் பார்க்க‌லாமா வேண்டாமா? த‌லைவ‌லின்னு ஒரு வ‌ரியில் முடித்து விட்டீர்க‌ள்...

சேலம் தேவா said...

"அஜித்பெயின்" புதியவார்த்தை 32456 :)