Tuesday, June 05, 2012

நாளைய இயக்குநர் - ஃபேன்ட்டசி கதைகள் -(27.5.2012)-விமர்சனம்

மரசிற்பம் செய்யும் மாமனிதர்..........-k r vijayan.
Photo: மரசிற்பம் செய்யும் மாமனிதர்...........
1. இயக்குநர் பெயர் - பாக்யராஜ் கண்ணன் - குறும்படத்தின் பெயர் - வசூல்

இயக்குநர் தன் பேருக்குத்தகுந்த மாதிரி குறும்பான கதையைத்தான் செலக்ட் பண்ணி இருக்காரு..

ரஜினியின் அதிசயப்பிறவி,வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் படங்கள் மாதிரி இதுவும் ஒரு ஃபேண்டசி மேல் லோக கதை தான்.. அதாவது எம தர்ம மகாராஜா தன் சின்ன வீடான ரம்பை வீட்டுக்கு போறப்ப சாரி போன பின் அங்கேயே பாசக்கயிறை மறந்து வெச்சுட்டு வந்துடறாரு .. அதனால காலைல பூலோகத்துல ஒரு  உயிரை எடுக்க வேண்டிய சூழ்நிலைல அவரால உயிரை எடுக்க முடியலை.. அந்தாளோட சம்சாரம் அவரை எமலோகத்துக்கு கூட்டிட்டுப்போக ஒரு கண்டிஷன் போடறாங்க.. அதாவது அவங்க கணவர் பல பேருக்கு பணம் கடன் கொடுத்திருக்கார்.. அந்த கடன் பல லட்சங்கள் மதிப்பு பெறும்.. ஏதாவது ஒரு கடனை வசூல் பண்ணிக்கொடுத்துட்டு கூட்டிட்டுப்போங்கங்கறாங்க .. ( இவ தான்யா பொண்டாட்டி - டாக்டர் ராஜசேகர்க்கு அடுத்த பட டைட்டில் ரெடி )

எமனும், சித்திர குப்தனும் அங்கே இங்கே அலைஞ்சு பார்க்கறாங்க, வேலை ஆகலை..என்ன நடக்குதுங்கறதை காமெடியா சொல்லி இருக்காரு.. ஒரு 8 நிமிஷ படத்துக்கு அவர் உழைப்பு அதிகம் .. வெல்டன் சார்..

எமனா நடிச்சவர் நடிப்பு கலக்கல்னா அந்த சொர்ணாக்கா நடிப்பு செம.. வசனங்களில் நகைச்சுவை இழை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடனை எப்போ ரிட்டர்ன் பண்ணப்போறே?

எப்போ வேணும்னாலும்.. கைல காசு இருக்கறப்ப

2. மகனே!

யார்.. என் அப்பனே!

3. ஏத்துன போதையைக்கூட இறக்கிடலாம், ஆனா கொடுத்த கடனை திருப்பி வாங்கவே முடியாது

4. அவங்க ரம்பா மாதிரி என் கண்ணுக்கு தெரியறாங்க..

 என் கண்ணுக்கு என் வாகனம் எருமை மாதிரி தெரியறாங்க..

5. எனக்கு ஒரு சந்தேகம்..

 கேளு

 பவர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

6. இப்போ கணக்கு சரியா வருதா?

ம்ஹூம், கணக்கு சரியா வர்லை, காதல் தான் வருது



எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.
Photo: எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது  சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.




2. இயக்குநர் பெயர் - ஸ்ரீகணேஷ்  - குறும்படத்தின் பெயர் - பரிசு



ஒரு ஏழை.. குடிசை வீட்ல வசிக்கறாரு.. அவர் குடிகாரர்.. மனைவிதான் பொறுப்பா வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாத்துது.. அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை.. 10 வயசு.அந்தபெண்ணோட கனவுகள் பூ வளர்க்கனும்,கிதார் கத்துக்கனும், சைக்கிள் வாங்கனும்,,


 சைக்கிள் வாங்க காசு சேர்க்கறா.. அம்மா தீனி வாங்க குடுக்கற காசு, அக்கம் பக்கம் வீடுகளில் கடை கண்ணிக்குப்போய் அவங்க தர்ற டிப்ஸ் காசு எல்லாம் உண்டியல்ல சேர்த்து வைக்கிறா..


அப்போ டி வி ல ஒரு நியூஸ்... தானே புயல் நிவாரண நிதிக்காக அறைகூவல் விடுக்கறாங்க.. இவ தன் உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை கொண்டு போய் டி வி ஸ்டேஷன்ல கொடுக்கறா.. அவளைப்பற்றி டி வி நியூஸ்ல சொல்றாங்க.. அதைப்பார்த்த அவ பெற்றோர் உள்ளம் உருகறாங்க, அவ அப்பா இனி நான் குடிக்கலை.. 2 மாசம் குடிக்காம பணம் சேர்த்து வெச்சிருந்தா உனக்கு சைக்கிள் வாங்க காசு சேர்ந்திடும்னு சொல்றார்..


க்ளைமாக்ஸ்ல டி வி ல இருந்து அவ வீட்டுக்கு சைக்கிள் பரிசு வருது..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சைக்கிள் வாங்கி இருந்தாக்கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.. இப்போ தானே நிவாரண நிதிக்கு பணம் குடுத்தது மனசுக்கு நிறைவா இருக்கு

2. நீ ஏம்மா இந்த வீட்ல வந்து பிறந்தே?

3. ஃபோட்டோ எடுத்துக்கவா?

வேணாம் சார்.. நான் அழுத மாதிரி இருக்கேன், நல்லா வராது

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காசின் தேவை உள்ள ஏழைப்பெண் அடிப்படையில் கிறிஸ்டினாக இருந்தாலும் தான் கண்டெடுக்கும் 100 ரூபாய் பணத்தை இந்து உண்டியலில் போடுவது

2. அந்த 100 ரூபாய் இருந்தா குவாட்டர்க்கு ஆச்சு, என அப்பாவும், 4 கிலோ அரிசியாவது வாங்கி இருக்கலாம் என அம்மாவும் எதார்த்தமாக பேசுவதும், தன் பெண்ணின் நல்ல குணத்தை அவர்கள் புரியாதபடிக்கு இருப்பதும், பின் தாமதமாக அதை உணர்வதும்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அந்த சிறுமி டி வி ஸ்டேஷன்ல பணம் குடுத்துட்டு அப்பவே கிளம்பிடுது.. ஜஸ்ட் ஒரு ஃபோட்டோ  எடுக்கலாம்னு டி வி ஆஃபீசர் கேட்டப்பக்கூட வேனாம்னு சொல்லி கிளம்பிடுது.


டி வி செய்தில கூட அந்த சிறுமி பேர் சொல்லலை.. அப்படி இருக்கும்போது சைக்கிள் பரிசு தர அந்த ஆஃபீசர் கரெக்டா அந்த குடிசை வீட்டுக்கு வருவது எப்படி? எந்த விபரமும் அந்த சிறுமி சொல்லலையே?


2. அப்பா திருந்திடறாரு.. அப்போ அந்த சிறுமி தூங்கிட்டு இருக்கு.. அவளை எழுப்பி விட்டு அப்பா “ நான் திருந்திட்டேன்”னு சொல்றாரு.. மகள் மேல் பாசம் உள்ள எந்த அப்பா தூக்கத்தை கலைச்சு விட்டு தான் நல்லவன்னு சொல்வாரு.. காலைல சொல்லிக்கலாமே?

Photo


=

3. இயக்குநர் பெயர் - அஸ்வின்   - குறும்படத்தின் பெயர் - இன்பாக்ஸ்

இது செம ரொமாண்டிக் கதை.. எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க..

ஹீரோயின் 75 மார்க்  ஃபிகரு.. செம கலரு.. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல என்னமோ வாங்குது,, ஒரு அழகான கேரி பேக் மாதிரி 1 தர்றாங்க.. அதே கடை, ஹீரோவும் ஏதோ வாங்கறாரு.. அவருக்கும் ஒரு கேரி பேக்..

அந்த கேரி பேக் மெயில் சேட் மாதிரி யூஸ் ஆகுது.. அதாவது ஒரு சீட்ல ஹீரோ தன் பேரை எழுதி உள்ளே போட்டா அது ஹீரோயின் பேக்ல போய் சேருது, ஹீரோயின் அதை படிச்சுப்பார்த்துட்டு அதே போல் ரிப்ளை பண்ணுது.. 2 பேரும் தங்களைப்பற்றி தகவல்களை பகிர்ந்துக்கறாங்க..

2 பேரும் அதை வெச்சு சீட்டு விலையாடறாங்க.. எப்படின்னா 13 கார்டு அந்த பாக்ஸ்ல போட்டா அவ பாக்ஸ்க்கு அது போயிடும்..திடீர்னு கேரி பேக் கிழிஞ்சுடுது.. ஹீரோ சோகம் ஆகறாரு.. ஹீரோயினும் தான்.. 2 பேரும் எதேச்சையா பார்க் வர்றாங்க.. ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க, சேர்ந்துடறாங்க ...

நம்ப முடியாத கதை தான்.. ஆனாலும் ரசனையா தான் எடுத்திருக்காங்க

1. படத்தில் நோ வசனம்.. எல்லாம் காட்சிகள் தான் மகேந்திரன் சார் படம் மாதிரி

2. படம் பார்க்கறவ்ர்களை ஏங்க வைத்து விடுகிறது அது போல் ஒரு கேரி பேக் கிடைக்காதா என..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஒரு சீன்ல ஹீரோயின் லேப்டாப்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கு.. டக்னு அதை க்ளோஸ் பண்ணிடுது.. சைன் அவுட் கொடுத்து ஆஃப் பண்ணி அப்புறமா லேப்டாப்பை மூடனும்கற பேசிக் நாலெட்ஜே கிடையாதா?

2. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் வெவ்வேற ஏரியா.. அதெப்பிடி கரெக்ட்டா ஒரே பார்க் வந்து ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க? இன்னும் நம்பகத்தன்மையோட  அந்த ட்விஸ்ட்டை யூஸ் பண்ணி இருக்கலாம்..

இந்தப்படத்துக்கு சிறந்த படம் விருது கிடைச்சுது..


0 comments: