Friday, June 15, 2012

ரத்த தானமும் , முத்த தானமும்

Photo: காலை வணக்கம் நண்பர்களே..
:-)
1.இன்று ரத்ததான நாள்.. மனதில் அன்பும்,உதட்டில் தெம்பும் இருப்போர்க்கு என்றென்றும் முத்த தினம் தான் ;-)


---------------------------------


2. அந்தக்காலத்திலும் சரி, இந்தக்காலத்திலும் சரி தாதாக்கள் கூட சகுனி என்றால் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது # ஜூன் 22 பில்லா 2 ரிலீஸ் நோ


-------------------------


3. உனக்காக உயிரையும் குடுப்பேன் என்பதன் உள் அர்த்தத்தை இதக்காலப்பெண்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்



-----------------------------


4. சாஃப்ட்வேர்ல நான் புலின்னு சொல்றவங்க எல்லாம் புலிமார்க் பனியன் போடற ஆளுங்களோ?


-------------------------


5. ரத்த தானம், முத்த தானம் இரண்டும் நிகழ்கையில் கிறுகிறுப்பாக இருக்கும்



---------------------


ஆஹா இடங்கள் - 2
Morning Glory !
kind of clouds observed in the Gulf of Carpentaria in northern Australia.
Photo: ஆஹா இடங்கள் - 2
Morning Glory !
kind of clouds observed in the Gulf of Carpentaria in northern Australia.

6. நான் சின்னப்பையனா இருந்தப்போ ( 2 வருஷம் முன்னால ) ரயில் போகும் திசையில் உள்ள சீட்டில் அமர்ந்தால் தான் சரியான இடத்துக்குப்போவோம்னு நினச்சிருந்தேன்



---------------------

7. முற்போக்குவாதிகள் கூட  மாமனார் வீட்டு சீதனத்தை விரும்புகிறார்கள், காரணம் அது கோயில் பிரசாதம் போல , கம்மியா இருந்தாலும் தனி ருசி


 ----------------------



8. திண்ணையில கிடக்கறவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆகுமாம்.-ரேணுகா # யார் வீட்டுத்திண்ணையிலே கிடக்கனும்?



---------------------------


9. மீந்துபோன பழைய சாதத்தை வெய்யில்ல காய வெச்சு வடகம் ஆக்கி தயிர் சாதத்துக்கு கடிச்சுக்கற தமிழன் தான் ரீ சைக்ளிங்கை உலகிற்கே அறிமுகப்படுத்தியவன்



----------------------------


10. தன் காதலியின் மேல் உதட்டின் மேல் மீசை வரைந்து அழகு பார்க்காத காதலன் நல்ல ரசிகனே அல்ல !




------------------------------

விளாவுக்கு எடுக்கலாம் விழா!

விளாங்காய் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்து. தொண்டைப் புண், தொடர் விக்கல் மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. விளாங்காய்ப் பச்சடி, வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.
Photo: விளாவுக்கு எடுக்கலாம் விழா!

விளாங்காய் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு நல்ல மருந்து. தொண்டைப் புண், தொடர் விக்கல் மற்றும் ஈறு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது. விளாங்காய்ப் பச்சடி, வாய்ப் புண்ணைக் குணமாக்கும்.


11. தன் தகுதிக்கு மீறிய சம்பளம் பெறும் அதிர்ஷ்டக்காரன் கணிணிவல்லுனன்,குறைந்த வருமானம் பெறும் துரதிர்ஷ்ட சாலி விவசாயி



---------------------------------


12. ரயில்கள் கிராமங்களைக்கடக்கையில் யாருக்கோ டாட்டா காட்டும் சிறுவர்களின் உற்சாகத்தை நான் வேறு எங்கும் கண்டதில்லை



-----------------------------------------


13. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு நாம் உதவி செய்யும்போது மகிழ்ச்சி தேவதை நம்மைப்பார்த்து நாசூக்காக சிரிப்பாள்



-------------------------


14, நரக வேதனை பற்றி நகர மனிதர்கள் அறிய முன் பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பில் ரயிலில் பிரயாணம் செய்க



---------------------------


15. ரயில் பிரயாணங்களில் பயண நேரம் 24 மணி நேரங்களைத்தாண்டும்போதுதான் வீட்டுச்சாப்பாட்டின் மகத்துவம் தெரிகிறது





--------------

ஆஹா இடங்கள் - 5
Lighthouse guard in Mare!
Lighthouse guard in Mare , France must be one of the most courageous people on the planet! Not everyone will have a smoke in such weather, and in such a place!
Photo: ஆஹா இடங்கள் - 5
Lighthouse guard in Mare!
Lighthouse guard in Mare , France must be one of the most courageous people on the planet! Not everyone will have a smoke in such weather, and in such a place!


16. திருப்பதியில் இருந்து திரும்பி வருபவர்கள் லட்டினை யாருக்கு முதலில் தருகிறார்கள் என்பதில் இனிப்பான கவிதை ஒளிந்திருக்கிறது



---------------------

17. கால எந்திரத்தில் பயணிப்பது சாத்தியம்  எனில் பெரும்பான்மையோரின் தேர்வு பள்ளிப்பருவ நாட்களே!



---------------------------


18. கொடூரமானவன் கூட தன் குழந்தையுடன் விளையாடும்போது தானும் ஒரு குழந்தை ஆகிறான்



----------------------------


19. தாங்கள் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்பதை பறை சாற்ற சில நவ நாகரீக யுவதிகள் புறமுதுகு காட்டி செல்கிறார்கள் # பேக் ஓப்பன் JKT



--------------------------------


20. சாகாவரம் வேண்டும் என்று நேரடியாக ஆசைப்படாமல் : சாவதற்குள் தமிழ் ஈழம் வேண்டும் “ என சுற்றி வளைத்து சொல்கிறார் கலைஞர் 




----------------------


வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே .தோல்வி அடைய கூடாது என்று போராடு..
உலகம் உன் கையில்.


- அ- சந்திரதன்.
Photo: வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே .தோல்வி அடைய கூடாது என்று போராடு..
உலகம் உன் கையில்.


-  அ- சந்திரதன்.

1 comments:

Nirosh said...

முதல் முத்தம்..:))