Wednesday, June 06, 2012

கொங்குமண்டல கணவன்மார்கள் கவனத்துக்கு .......

தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கிறேன்..
1.கொங்குமண்டல கணவன்மார்கள் தங்கள் மனைவியை செல்லமாக பரிமளா எனவும், மச்சினியை ஷர்மிளா எனவும் அழைக்கிறார்களாம் # ட்விட்டர் ஜி கே



--------------------------------


2. அக்கா வேடத்தில் நடிக்க மாட்டேன் - அசின் ஆவேசம் #  மேடம், 10 வயசுப்பொண்ணுக்கு அக்கா வேஷம் இருந்தாக்கூடா நாட் ஓக்கே?



---------------------------


3. சாலையோரத்தில் நடந்த திருமணம்! மணமக்களை நேரில் வாழ்த்திய நமீதா!! # ரோடு ராக்கிங் மச்சான்-னாரா?



--------------------------------



4. மின் திருட்டு ரூ.900 கோடி: பிடிபட்டது ரூ.60 கோடி # ஷாக்கிங்க் நியூஸ் தான்



---------------------------------


5. தன் அம்மாவுடன் அனுசரித்துப்போகும் மணமகள் தேவை என கல்யாண மாலையில் வேண்டும் மாப்ஸ்,உங்கம்மா சண்டைக்காரினு டெல்லிங்க்?



----------------------------------------


பிக்அப்"டா ;)))அழுத்துடா ராஜா.!! அழுத்துடா ராஜா.!! #பின்னாடி என்னடா வியாபாரவிளம்பரமா !.ஓ. இது,விளம்பரமாடலா!! ;))



6. ஜீப்ரா = (வரிக்)குதிரை = பரி # அப்போ அல்ஜீப்ராவை கண்டுபிடிச்சது  யாரோ ஒரு பரிமளாப்பிரியரோ? # வெட்டி ஆராய்ச்சி



------------------------------------


7. ஈகோ என்பது உதடுகளுக்குத்தான், கண்களுக்கு இல்லை 



-------------------------------------


8.தேமுதிகவினருக்கு நாகரீகமோ, அடிப்படை சட்டமோ தெரியாது.-சரத்குமார்#  சட்டம் சம்பந்தமா நான் நடிச்ச படமே 27, நீங்க நடிச்சது 9 தான்-கேப்டன்


--------------------------------

9.  சச்சின் - நான்  எம் பி ஆகிட்டேன்,நான் சபைக்கு போறப்போ என் கூட வரப்போற பார்ட்னர்  யாரு?


-----------------------------


10. சச்சின் - நான் இதுவரை நூறு நூறா 100 தடவை செஞ்சுரி அடிச்சிருக்கேன், இது போதாதா  அரசியலுக்கு வர ?


ஆ ராசா - கோடி அடிச்சவங்களுக்கு முன்னால


----------------------




11. நான் ஒரு தடவை என் முடியை ( திருப்பதிலயோ, பழநிலயோ ) எடுத்துட்டா மறுக்கா நானே என் முடியை எடுக்க மாட்டேன், ஃபங்க் வெச்சுக்குவேன் # துப்பாக்கி பஞ்ச் டயலாக்



--------------------------------

12. அடிக்கறவங்க ஈசியா அடிச்சுட்டுப்போயிடறாங்க,வலிக்காத மாதிரியே முகத்தை வெச்சுக்க ரொம்ப சிரமமா இருக்கு :)


------------------------------

13. வண்ணான் துறையில் இருக்கும் சலவைக்காரியை நான் சைட் அடிக்கக்காரணம் வெளுத்ததெல்லாம் அமலாபால் என நினைக்கும் அப்பாவித்தனமே!


--------------------------------


14. உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று ( 5.6.2012)ஒரு நாள் முழுக்க உன்னைச்சுற்றி நானும், என்னை சுற்றி நீயும் விளையாடிக் கொண்டு இருப்போம்,வா



-------------------------------

15. சாஸ்திர சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் உனக்கு முத்தங்கள் தரும் தருணங்களில் உன்னிடம் அனுமதி கேட்பேன் என எதிர்பார்க்காதே!



---------------------------------



Gauthaman Ds Karisalkulaththaan's photos


இன்று உலக சுற்றுச்சூழலியல் தினம்: (5.6.2012)



16. மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம் என்ற பழமொழில இருந்து அறிய வரும் தகவல் - மாமியாரோ மருமகளோ எதையாவதுஉடைச்சுட்டுதான்இருப்பாங்க


---------------------------------


17. நாட்டின் பொருளாதாரம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: சிதம்பரம் # எங்க அச்சம் எல்லாம் எங்க வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல்,கரன்ட் தான்


----------------------------------

18. அரசு மது விற்கலாம் தவறில்லை - உயர்நீதிமன்றம் கருத்து! # ஆனா எவனும் அதை வாங்கி குடிக்கக்கூடாது - ராம்தாஸ்



-------------------------------------


19. எதிரிகளை வெல்வது என் நோக்கம் இல்லை, என் இலக்கு அவர்களை நண்பர்கள் ஆக்குவதே :)



-------------------------------


20. பொதுவாழ்வில், குடும்ப வாழ்வில் தனி மனித ஈகோவை விடுத்து மன்னிப்பு கேட்பதால் ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும் எனில் அதில் தவறில்லை



----------------------------------

Christopher Daniyal shared Anish Ani's photo.
 

டிஸ்கி - சென்னை மெகா ட்வீட்டப்பில் விடுபட்ட என்னால் முடியும் அமைப்பு பற்றி..


என்னால்  முடியும்
ஒவ்வொருகுழந்தைக்கும்அடிப்படைக்கல்விகிடைப்பதற்கானதிட்டம்
35-18:  நாம் அனைவரும் எளிதில் செய்யக்கூடியது கழித்தல் கணக்கு. அரசு பாடத்திட்டத்தில் இரண்டாம் வகுப்புக்குழந்தைகள் இதைச்செய்ய இயல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் சில ஆய்வுகள்,   3-5 வகுப்புகளில் படிக்கும் கிராமப்புறக்குழந்தைகளில், 55% குழந்தைகளால் கழித்தல் கணக்குகளுக்கு விடை காண இயலவில்லை. 50%க்கு மேற்பட்ட குழந்தைகளால் தமிழில் ஒரு எளிமையான பகுதி கூடப்படிக்க இயலவில்லை.இந்தக்குழந்தைகளில் பலர் தாழ்த்தப்பட்ட ஏழைக்குடும்பத்தைச்சார்ந்தவர்கள்இந்தக்குழந்தைகளின் அறியாமை, அவர்கள் குடும்ப சூழ்நிலையினால் அல்லது ஆற்றல் பற்றாக்குறையினால் ஏற்பட்டது என்று எண்ணுவது எளிது.  


ஒவ்வொரு குழந்தையாலும் முடியும்” என்றநம்பிக்கையை நிதர்சனமாக்க யுரேக்கா அறநிறுவனம், கல்லூரிமாணவர்கள், தனியார் நிறுவன தொண்டூழியர் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து, கிராமப்புறக்குழந்தைகளுக்குத்தேவையான அடிப்படைக்கல்வி வழங்குவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதனைப்பற்றிய விவரங்களை அறியவும், பங்கேற்கவும்,  நம் குழந்தைகளின் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தவும் மேலும்படியுங்கள்...


எங்குதுவங்குவது ?


முதல்படி, பிரச்சனையின் தன்மையையும் அளவினையும் அறிந்து கொள்வது.கிராமங்களில்,குழந்தைகளின் அடிப்படை கணிதம் மற்றும் படிக்கும் ஆற்றலை ஒரு எளியதிறனாய்வு மூலம் நிர்ணயிக்க முடியும். இந்த ஆய்வை 3-4 நபர் 3 மணி நேரத்தில் முடிக்க முடியும்.  இதனைக்குழந்தைகளின் வீட்டிலேயே எளிய செயல்முறைகளைக்கொண்டு மதிப்பிடலாம். இதனைத்தொடர்ந்து,  ஆய்வு முடிவுகளை குழந்தைகளின் பெற்றோர் மற்று ம்ஊர்பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தொண்டூழியர்களும் மற்றவர்களும் கலந்தாலோசித்து, ஊர்ப்பள்ளியின் உதவியுடன் ஏற்ற தீர்வை நிர்ணயிக்கலாம். பள்ளி ஆசிரியர்களிடமும் இந்த ஆய்வின் முடிவுகளைப்பகிர்ந்து கொண்டு குழந்தைகளுக்குத்தேவையான பயிற்சியளிக்க உதவிடலாம்.


திட்டத்தின்வீச்சளவு


தொண்டூழியர்– 200
குழந்தைகள் – 2918
மாவட்டங்கள்-8
ஒன்றியங்கள்- 27
கிராமங்கள்– 105


நிலைமையைமாற்றபெற்றோர்விண்ணப்பங்கள்: 1410



தொடர்பு கொள்ளவும் - செல்வா 9790951652.




3 comments:

chinnapiyan said...

வழக்கம்போல் சுவையாக இருந்தது ராஜா . நன்றி வாழ்க வளர்க

selva ganapathy said...

நன்றி செந்தில் அவர்களே! :-)... கன் டைம்! :-)

Unknown said...

Good