Wednesday, May 11, 2011

பெண் எழுத்து - ஒரு பாஸிட்டிவ் பார்வை

http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-10-03/images/anu-radha-ramanan-17-05-10.jpg
அனுராதாரமணன் எழுதிய கதையை நடிகை லட்சுமி நடிக்க இயக்குநர் சக்தி எடுத்த படமான சிறை சினி ஃபீல்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.தன்னை சீரழித்த கயவனின் வீட்டிலேயே சென்று அடைக்கலம் தேடும் ,அவனை கணவனாக ஏற்கப்போராடும் புரட்சிப்பெண்ணின் கதை.இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி அனுராதாரமணனுக்கு பெரிய பூஸ்ட் அப்பாக அமைந்து அதற்குப்பிறகு நாவல் உலகில் பல வெற்றிகளை குவித்தார். தினமலர் வார மலர் -ல் அந்தரங்கம் கேள்வி பதில் பகுதியில். பலரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து கலக்கினார். அதுவரை வாரமலர் என்றால் அந்துமணி கேள்வி பதில்,பார்த்தது கேட்டது படித்தது இவை தான் முன்னணியில் இருந்தன.அந்தரங்கம் கேள்வி பதில் வந்த பிறகு அது புக்கை எடுத்ததும் வாசகர்கள் படிக்கும் முதல் பகுதி அந்தஸ்தை பெற்றது.

தேவி,ராணி,குமுதம்,விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் எழுதி பல பெண் வாசகர்களை, கவர்ந்த எழுத்தாளர் லட்சுமி நீண்ட நாட்கள் ஃபீல்டில் இருந்த  பெண் எழுத்தாளர்களில் முக்கிய இடம் பிடிக்கிறார்.பெண் மனம்,அகிலா,சூரிய காந்தம் அவரது பிரபல நாவல்கள்.
http://www.ramanichandran.in/images/9.Ramanichandran..jpg
ரமணி சந்திரன் நாவல் லீடரில் இப்போதும் நாவல்கள் எழுதி இந்தியாவிலேயே அதிகம் விற்பனை ஆகும் பெண் நாவல்-ல் தொடர்ந்து எழுதும் பெண் எழுத்தாளர் என்னும்  பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.ஜோடிப்புறாக்கள்,தேவி ஆகிய நாவல்கள் அதிக பெண்களால் ரசிக்கப்பட்டவை.

சிவசங்கரி,இந்துமதி, வித்யா சுப்ரமணியம் போன்ற பெண் எழுத்தாளர்கள் ஆண்கள் மனதையும் தைக்கும் அளவு எழுத்தில் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

மலையின் அடுத்த பக்கம்,அப்பா,ஏன்? எதற்காக? போன்றவை சிவசங்கரியின் டாப் நாவல்கள்.இந்துமதிக்கு தரையில் இறங்கும் விமானங்கள்,மணல் வீடுகள் போன்றவை செம ஹிட்.  சிவசங்கரி,இந்துமதி இருவரும் சேர்ந்து இரண்டு பேர் என்ற நாவலை எழுதியது அந்தக்காலத்தில் பர பரப்பாக பேசப்பட்டது. முதல் அத்தியாயம் ஒருவர் எழுத அடுத்த அத்தியாயம் மற்றொருவர் எழுத வித்தியாசமான நாவல் அந்தாதி உருவானது.

வித்யா சுப்ரமணியம் தென்னங்காற்று மூலம் பலரது மனம் கவர்ந்தார்.அவர் வலைப்பூவும் ஆரம்பித்துள்ளார்.


வாஸந்தி நிலாக்கால நேசங்கள்,ஆகாச வீடுகள் (இலங்கை கதை) ஆகியவை அவர் பெயர் சொல்லும் நாவல்கள்.

அநுத்தமா ஆலமரம்,கவுரி ஆகிய 2 செம ஹிட் நாவல்கள் எழுதினார்.உஷா சுப்ரமணியம் கல்யாண வேலிகள் ஹிட் கொடுத்தார்.

கீதா பென்னட் பல சூப்பர் ஹிட் நாவல்கள் கொடுத்தார். அவர் சைக்காலஜி படித்தவரோ என்ற எண்ணம் மனதில் தோன்றும் வண்ணம் எழுத்துக்கள் பளிச்சிடும்.

அம்பை,கோதை நாயகி,விமலா ரமணி,காஞ்சனா ஜெய திலகர்,ஜோதிர்லதா கிரிஜா,ராஜம் கிருஷ்ணன்,கோமகள் போன்ற பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் முத்திரை பதித்தவர்கள்.( இவர்கள் எழுதிய நாவல்கள் நான் படித்ததில்லை. எனவே ஹிட் நாவல்கள் குறிப்பிட முடியவில்லை)
http://www.tneow.gov.in/Eow/Picture_010.jpg
திலகவதி ஐ பி எஸ் கல் மரம் என்ற சூப்பர் ஹிட் நாவல் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றார்.

அ. வெண்ணிலா சிறந்த கவிதாயினியாக இருந்தாலும் பெண்களின் மாதாந்திர அவஸ்தை பற்றி மிகப்பிரமாதமான ஒரு வலி ஏற்படுத்தும் கவிதை எழுதி இலக்கிய உலகை அதிர வைத்தார்.அந்தக்கவிதை படிக்கும் ஆண்கள் அதற்குப்பின் எந்தப்பெண்ணையும் கண்ணியமாகத்தான் பார்க்க முடியும். அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இவரது காதல் கணவர் மு முருகேஷ் ஹைக்கூ மன்னன்.

பாடல் ஆசிரியர் தாமரை வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே) பாடல் மூலம் ஒரு பெண்ணின் காதல் வலிகளை  பதிவு செய்த முதல் பெண் கவிஞர் என்ற பெருமையை பெறுகிறார்.சினி ஃபீல்டில் அட்ஜஸ்மெண்ட் என சொல்லப்படும் எந்த வித காம்ப்ரமைஸ்க்கும் இடம் கொடுக்காமல் கண்ணியமாக கவிதை மட்டும் எழுதி வருகிறார்.

நடிகை ரேவதி மித்ர மை ஃபிரண்ட் என்ற படத்தின் இயக்குநர் ஆனார்.

வி. பிரியா கண்ட நால் முதல்,கண்ணா மூச்சி ஏனடா போன்ற காமெடி சப்ஜெக்ட் படம் எடுத்தார்.

மதுமிதா வல்லமை தாராயோ,கொலை கொலையா முந்திரிக்கா  என 2 சுமார் படங்களை எடுத்தார்..(சுமார் என்பது வசூல் நிலவரத்தை குறிக்கும்).

ஜே எஸ் நந்தினி திரு திரு துறு துறு  படம் எடுத்தார்.

ரேவதி வர்மா ஜூன் ஆர் எடுத்தார்.அனிதா உதீப் குளிர் 100 எடுத்தார்.

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கண்ணீர் என்ற படத்தை எடுத்து வருகிறார் சற்குணம்.

நடிகை சுஹாசினி இந்திரா என்ற படம் எடுத்தார். ராவணன் பட வசனமும் இவர் தான். ( இரண்டும் எடுபடவில்லை)

லீனா மணி மேகலை பல குறும்படங்களை எடுத்து வருகிறார்.குட்டி ரேவதி கவிதைகளில் தனக்கு என ஒரு ஸ்டைல் வைத்து எழுதுகிறார்.

இனி பதிவுலகில் எழுதும் பெண் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை.


பெண் பதிவர்களிலேயே 1015 ஃபாலோயர்ஸ் பெற்ற ஒரே பதிவர்.

எந்த திரட்டிகளிலும் இணைக்காமல் மொய்க்கு மொய் சிஸ்டம் ஃபாலோ பண்ணாமல் பதிவுகள் மட்டுமே போட்டு ஃபேமஸ் ஆனவர்.

சித்தர்கள் ராஜ்ஜியம் எனும் வலைப்பூ.தோழி என்பவர் இதன் சொந்தக்காரர்.இவர் ஒரு இலங்கைப்பதிவர்.டாக்டர்.

கேபிள்சங்கர்,ஜாக்கி சேகர் போன்ற பதிவர்களுக்கு இல்லாத ஒரு பெருமை இவருக்கு உண்டு.அதாவது எந்தப்பதிவராக இருந்தாலும் அவர்கள் பிளாக்கின் விசிட்டர்ஸ் டுடே எவ்வளவு வர்றாங்களோ அதை விட அதிக பட்சம் 2 மடங்கு மட்டுமே பேஜ் வியூஸ் வரும்.

உதாரணமாக கேபிள் சங்கரின் சராசரி விசிட்டர்ஸ் வருகை ஒரு நாள்க்கு 4000 என வைத்துக்கொண்டால் அவரது பேஜ் வியூஸ் 7000 டூ 8000.அதாவது ஒண்ணே முக்கால் மடங்கு அல்லது 2 மடங்கு.இது பதிவுலகில் இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் தோழி அவர்களின் பிளாக்கில் விசிட்டர்ஸ் வருகைக்கும் பேஜ் வியூஸ்க்கும் உள்ள வித்தியாசம் 5 மடங்கு.

அதாவது அவரது பிளாக்கின் சராசரி விசிட்டர்ஸ் 1500 பேர் என்றால் அவரது பேஜ் வியூஸ் 6800 டூ 7500.அவர் பதிவு போட்டாலும், போடாவிட்டாலும் இந்த ரேஷியோ ஹிட் மாறுவதில்லை.இது ஒரு பிரம்மிக்கத்தக்க உயர்வு.

2010 பிப்ரவரி மாதத்தில் பிளாக் ஆரம்பித்தார். சினிமா,அரசியல் போன்ற கமர்ஷியல் அயிட்டங்கள் எதுவும் சேர்க்காமல் சித்தர்கள் வாழ்வு எனும் ஒரே சப்ஜெக்ட்டில் பதிவு போடுபவர் இவர் ஒருவர் தான்.ஆனந்த விகடனில் பிளாக் ஆரம்பித்த 2 வாரங்களில் அறிமுக அங்கீகாரம் பெற்றவர்,.

இவரது பிளாக்கின் லே அவுட் நாடி ஜோதிட ஓலைச்சுவடி டிசைனில் வித்தியாசமாக இருக்கிறது.வாரம் 5 நாட்கள்  மட்டுமே பதிவு போடுகிறார். சனி ,ஞாயிறு லீவ். ஆனால் லீவ் நாட்களில் கூட சராசரி ஹிட்ஸ் 400 டூ 900.

2,07,264 விசிட்டர்ஸ் இதுவரை வந்திருக்கிறார்கள்.பேஜ் வியூஸ் ஹிட்ஸ் 8,87,762.

மேலும் 2010 ஏப்ரல் மாதத்தில்  61 பதிவுகள் போட்டு 30 நாட்களில் 61 பதிவு போட்ட முதல் பெண் பதிவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

மற்ற பதிவர்களின் விசிட்டர்ஸ் வருகை சராசரியாக இண்ட்லி மூலம் 60%, மற்றும் தமிழ்மணம் மூலம் 30 % , மேலும் மற்ற உலவு , தமிழ் 10 மூலம் 5 % , தனிப்பட்ட செல்வாக்கில் 5 % விசிட்டர்ஸ் வருகையில் இவருக்கு மட்டும் முழுக்க முழுக்க தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே விசிட்டர்ஸ் வர காரணியாக இருக்கிறது ஒரு அதிசயமே..

விசிட்டர்ஸ் டுடே, பேஜ் வியூஸ் வித்தியாசம் பற்றி நான் பிரம்மிக்க காரணம் இஅவரது பிளாக்கிற்கு விசிட் செய்யும் வாசகர் குறைந்த பட்சம் 4 பதிவுகள் படிக்கிறார் என்ற விபரம் தான்.

மற்ற அனைத்துப்பதிவர்களுக்கும் அதிக பட்சம் 2 பதிவுகளே படிக்கப்படுகிறது.
பதிவின் லிங்க்..

http://siththarkal.blogspot.com/2010/02/blog-post.html

உங்கள் வாழ்த்துக்களை சொல்ல விரும்புவர்கள் சொல்லலாம்.

அடுத்து பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? அதை அடுத்த வாரம் பார்ப்போம்.


- தொடரும்

47 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தல! நீங்களா?

Unknown said...

நான் அவன் இல்லை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பெண் பதிவர்களிலேயே 1015 ஃபாலோயர்ஸ் பெற்ற ஒரே பதிவர்.

எந்த திரட்டிகளிலும் இணைக்காமல் மொய்க்கு மொய் சிஸ்டம் ஃபாலோ பண்ணாமல் பதிவுகள் மட்டுமே போட்டு ஃபேமஸ் ஆனவர்.

சித்தர்கள் ராஜ்ஜியம் எனும் வலைப்பூ.தோழி என்பவர் இதன் சொந்தக்காரர்.இவர் ஒரு இலங்கைப்பதிவர்.டாக்டர்.//

ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அடுத்து பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? அதை அடுத்த வாரம் பார்ப்போம்.//

பலருக்கு முகத்தில் ஓங்கி அறைய அண்ணன் சாரி நண்பன் தீர்மானித்து விட்டார் என்பதை இததான் அனைவருக்கும் அறியத்தருகிறேன்! சி பி உண்மையிலேயே நீங்கள் வாழ்க!!

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா.. நல்லாத்தானே போய்ட்டிருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

நான் அவன் இல்லை!

ஹி ஹி நம்பிட்டோம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனது ப்ளாக் ல வந்து இத்துனூண்டு கமென்ட் போட்டுட்டு எஸ்கேப் ஆகிய உங்களை மென்மையாக கண்டிக்கிறேன்! ( பதிவுலக மொய் கோட்பாடுகளை சரியாக பின்பற்றவும்! ஹி.........ஹி.............!!!! )

Unknown said...

பெண்கள் மெதுவடை !

ராஜி said...

பெண்ணுக்கு பெருமையோ?
இதை அன்னையர் தினத்தன்று பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Unknown said...

இன்னைக்கு காலையில இருந்து என்னென்னமோ நடக்குது.......பய புள்ளைங்க ரொம்ப யோசிச்சி செய்யறாங்களோ டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
இன்னைக்கு காலையில இருந்து என்னென்னமோ நடக்குது.......பய புள்ளைங்க ரொம்ப யோசிச்சி செய்யறாங்களோ டவுட்டு!

May 11, 2011 10:40 AM


எந்த ரூட்ல போனாலும் உதை விழுதே..

Unknown said...

போற போக்க பாத்தா பயலுங்க இனிமே நல்ல பதிவுகள் போட ஆரம்பிச்சிடுவாங்க போல ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

அப்போ இத்தனை நாள் போட்டது கெட்ட பதிவா? வெரைட்டி வேணூம்லேய்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

அப்போ இத்தனை நாள் போட்டது கெட்ட பதிவா? வெரைட்டி வேணூம்லேய்"

>>>>>>>>>..

இது நாள் வரை ரசிக வட்டத்துக்காக போட்டீங்க!....... இனி உங்க பதிஉலக வாழ்கைய சீர்தூக்குற பதிவுகளா போட்டு நிலையா இருப்பீர்களாக ஹிஹி!

பொன் மாலை பொழுது said...

பெண் எழுத்தாளர்கள் பற்றி நல்லாதானே சொலிக்கொண்டு வந்தீர்? திடிரென ஏன் வலைப்பதிவுகள் பக்கம் தாவி குரங்காய் மாறினீர்?

/// எந்த பதிவராக இருந்தாலும் அவர்கள் பிளாக்கில் விசிட்டர்ஸ் டு டே எவ்வளவு வர்றாங்களோ அதைவிட அதிக பட்சம் 2 மடங்கு காட்டும்///

அட கலவானிகளா ... எனக்கு இந்த திருட்டுத்தனம் தெரியாதே.

ஆமாம் இதே யுக்தியில்தான் நீரும் முதலில் வந்தீரா சி.பி. ? சேச்சே எனக்கு பொறாமை எல்லாம் இல்லை. சும்மா கேட்டேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஓஹோ.. அப்படி இல்லைன்னா டெம்ப்பரவரி ஸ்டாஃப் ஆகிடுவேனா?#டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

கக்கு - மாணிக்கம் said...
பெண் எழுத்தாளர்கள் பற்றி நல்லாதானே சொலிக்கொண்டு வந்தீர்? திடிரென ஏன் வலைப்பதிவுகள் பக்கம் தாவி குரங்காய் மாறினீர்?

ஏன்? பெண் பதிவர்கள் எழுத்தாளர்கள் லிஸ்ட்டில் வரமாட்டாங்களா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

சித்தர்கள் பதிவுக்கு போய் பார்க்கிறேன் தகவலுக்குநன்றி

Unknown said...

அண்ணே நான் ஒன்னும் சொல்லல அண்ணே....நீங்க நல்லவரு வல்லவரு.....ஆய கலைகள் கற்றவரு போதுங்களா.........பய புள்ளைங்க கமன்ட்டையும் தடை பண்ணிட்டாங்களே....ஹிஹி!

Chitra said...

பதிவர் தோழிக்கு, எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இவரை பற்றிய அறிமுகம் தந்தமைக்கு நன்றி, சார்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பெண் எழுத்து ஜொலிக்கிறது..

நெல்லி. மூர்த்தி said...

சாதாரணப் பதிவென்றாலே 'இடை'வெளிக்கு 'இடை'வெளி அனுஷ்காவோ, அமலா பாலோ, தமன்னாவோ வருவார்கள். அவர்கள் ஏன் வந்தார்கள் என்கின்ற விளக்கமும் இருக்கும். இந்தப் பதிவில் என்னதான் செய்கின்றார் என பார்ப்போமே என வாசித்தால்.... சபரிக்கு மலை செல்பவர்கள் விரதம் இருப்பது போல சுத்த பத்தமாக இருக்கின்றது.

அற்புதமான தகவல் தொகுப்பு! "தோழி" குறித்த தகவல்கள் மட்டுமல்ல இனிவரும் பெண் பதிவர்கள் பற்றிய தொடரினையும் எதிர்நோக்கி ஆர்வமூடன் இருக்கின்றோம்!

Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

பெண் எழுத்து பற்றி மிக விரிவான விளக்கம்.
இவ்வளவு புள்ளி விபரம் புட்டு புட்டு வைக்கிறீங்களே
சித்தர்கள் ராஜ்ஜியம் எழுதும் தோழிக்கு வாழ்த்துக்கள், வலைசரத்தில் அறிமுகப்படுத்தி இருந்தாஙக் பார்த்து இருக்க்கேன்.

மிகவும் ஆச்சரியமே

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் நண்பா. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி சார், அட்ரஸ் மாறி வந்துட்டேன் போல..... !

பொன் மாலை பொழுது said...

/// ஏன் ? பெண் பதிவர்கள் எழுத்தாளர்கள் லிஸ்டில் வரமாட்டார்களா? //

---------------------சி.பி. சொன்னது..

பெண் எழுத்தாளர்கள் (பதிவர்களுக்கென )தனியாக ஒரு பதிவே போடாலாம் .அதைத்தான் சொன்னேன். எல்லாவற்றையும் ஒரே ஓடத்தில் கொட்டாமல் தனித்தனியாக சொன்னால் சிறப்பாக இருக்குமே என்று. பாவிகளா!! உங்ககிட்ட ரொம்ப ஜாக்ரதயாவுள்ள இருக்கனும் போல. பெண் பதிவர்கள் கிட்ட மாட்டி வுட என்னாமா ? நா ரொம்ப நல்லவனைய்யா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ சிபி இப்படி சட்டுன்னு திருந்திட்டார்னா நான் என்ன பண்றது?

சென்னை பித்தன் said...

ஆர்.சூடாமணி என்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளர் பெயரைக் காணோமே, இவரைப் பற்றி தி.சா.ராஜூ ஒரு முறை சொன்னார்”நாங்களெல்லாம்,வாசகர்களுக்காக எழுதுகிறோம்.இவர் எங்களுக்காக எழுதுகிறார்” என்று!
நல்ல முயற்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சித்தர்கள் ப்ளாக் நமக்கு நல்லா தெரிஞ்ச ஒண்ணுதான், வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தான் போய்ட்டு இருக்கு!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் இது உன் சொந்த சரக்காலேய்....???

அட்டகாசமா இருக்கு....!!!

MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடியோ தம்பிகிட்டே திட்டு வாங்குரதுல இருந்து தப்பிச்சிட்டே....

MANO நாஞ்சில் மனோ said...

சுகாசினியை ஏனப்பா இந்த வாரு வாருறீங்க, இங்கேயும் வந்து கற்பு பற்றி பேசிட போறாயிங்க....

NKS.ஹாஜா மைதீன் said...

அருமையான பதிவு....இன்று மகளிர் தினமா?சும்மாச்சுக்கும்தான் கேட்டேன்

சேலம் தேவா said...

தோழிக்கு வாழ்த்துகள்..!! கேப்டன் மாதிரி புள்ளிவிபர புலி ஆகிட்டிங்க போல...அப்பப்ப இந்த மாதிரி வித்தியாசமாகவும் பதிவு போடுங்க. :)

chandru2110 said...

எழுத்து துறையில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது, தோழியின் சேவை பாராட்டத்தக்கது.

Lali said...

அனு அம்மா என்னக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.. நன்றி சி.பி சார் அவர்களை நினைவுகூர வைத்ததற்கு ..
http://karadipommai.blogspot.com/

சசிகுமார் said...

தோழி பற்றி எனக்கு ஏற்க்கனவே தெரியும் நான் பிளாக் ஆரம்பித்த இரண்டு மாதங்கள் கழித்து தான் பிளாக் ஆரம்பித்தார் அப்பொழுது தினமும் அந்த பதிவுகளை படித்து வந்தேன் தற்காலிகமாக நான் அவரின் தளத்தை மறந்தே விட்டேன். ஞாபக படுத்தியதற்கு மிக்க நன்றி.

சசிகுமார் said...

தல உங்க பதிவு செம. படிக்கவே அருமையா இருக்கு புள்ளி விவரங்கள். எல்லாத்துக்கும் மிக்க நன்றி நண்பா

R. Gopi said...

கலக்கிட்டீங்க

Angel said...

superb post
தோழி பற்றிய அறிமுகத்துக்கு நன்றி.

Nanjil Kannan said...

வாழ்த்துக்கள் தோழி அக்கா

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பெண் எழுத்துக்களில் என் பெயரையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி. சித்தர்கள் வலைத்தள தகவலுக்கும் நன்றி. அவசியம் சென்று பார்க்கிறேன்.

ஹேமா said...

மன்னிப்போடு சிபி.இப்பத்தான் பார்க்கிறேன் பதிவு.பெண் எழுத்து மிக மிக சுவாரஸ்யமாகவும் தெரியாத சில விஷயங்களை சொல்வதாகவும் இருக்கிறது.தோழியின் பக்கம் நானும் செலவதுண்டு.நன்றி !

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள் சிபி.
மனந்தளராதீர்கள்.
இந்த பதிவை பேஸ் புக்கில் எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
இந்த மாதிரி நல்ல பதிவுகளாக நிறைய எழுதுங்கள். நிறைய விபரங்கள்.
அற்புதமாக இருக்கிறது.
நன்றி சிபி.

cheena (சீனா) said...

அன்பின் சிபி - நல்லதொரு பதிவு - பெண் எழுத்தாளர்கள் / பதிவர்கள் பற்றிய பல அரிய தகவல்கள் அடங்கிய பதிவு - உழைப்பு தெரிகிறது. நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா