Showing posts with label பெண் எழுத்தாளர்கள். Show all posts
Showing posts with label பெண் எழுத்தாளர்கள். Show all posts

Thursday, March 20, 2014

ஆணின் “வரைபடத்தில்” பெண் எனும் பயணி (கோவை)

a

வீடு, புற வெளி, பெண் அடையாளம்

 
ஒரு எழுத்தாக்கத்தைப் பாலின வகைப்பட்ட எழுத்துச் செயல்பாடாக எழுத்தாளரின் பால் எனும் சாராம்சத்தை வெளிக்காட்டுவதாகப் பார்க்க முடியாது. 


மேலும் பெண் எழுத்தாளரின் ஆக்கம் பெண்சார்பு நிலைகளோடு செயல்படும், ஆண் எழுத்தாளரின் ஆக்கம் அப்படியில்லை என்று பால் இருமையைப் படைப்பின் இருமையாக மாற்றி பொதுப்படையாக நிறுவுவதும் சரியான அணுகுமுறை அல்ல. பெண் உணர்வுகளை, சார்பு நிலைகளை முன்வைக்கிற ஆண் எழுத்தாளர்களின் கதைகள் (அரிதாகவேனும்) நம்மிடமிருக்கின்றன. என்றாலும் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதற்கு சில முகாந்திரங்கள் உண்டு. 



முதலில், சில வருடங்களாகத்தான் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகள் தமிழ் இலக்கியச் சூழலில் பேசுபொருளாகியிருக்கின்றன, இன்னமும்கூடப் பிரபல ஆண் இலக்கியவாதிகள் தருகிற மைய நீரோட்டத் தரவரிசையில் பெண் எழுத்தாளர்கள் இடம்பெறுதல் அபூர்வமாகவே இருக்கிறது. பெண் எழுத்தாளர்களின் எழுத்து குறித்த, பெண்ணியம் குறித்த தீவிர ஆய்வுகள், வாசிப்புகள், விமர்சனங்கள் பெரிதும் நம்மிடையே இல்லை. 


எனவே, அரசியல் நிலைப்பாடாகப் பெண்களின் எழுத்தை முன்நிறுத்த வேண்டிய வேண்டிய தேவையிருக்கிறது. 


மேலும், எழுத்தாக்கத்தில் எழுத்தாளரின் பால் என்பதன் அடையாளத்துக்கு இடமில்லை என்றாலும், வாசகர் அர்த்தப்படுத்திக்கொள்ளும் வழிமுறை களில் ஒரு முக்கியமான சட்டகமாக எழுத்தாளரின் பால் செயல்படுகிறது. உதாரணமாக, பெண் ஒடுக்குமுறையை, குடும்பத்தின் ஆண் செலுத்தும் வன்முறை, பெண் பாலியல் போன்றவை இடம்பெறும் ஆக்கம் ஆண் எழுத்தாளரைவிடப் பெண் எழுத்தாளரிடமிருந்து வரும்போது கூடுதல் முக்கியத்துவத்தை, ஈடுபாட்டை வாசிப்புச் செயல்பாடுகளில் பெறுவதை நாம் பார்க்கிறோம். 


ஆணின் “வரைபடத்தில்”
பெண் எனும் பயணி 


பொதுவாக இந்திய, தமிழ் வம்சாவளியினரைப் பொறுத்தவரை இடம்பெயர்தல் பெண்ணின் பால் இருப்பில் எழுதப்பட்டிருக்கும் ஆண்-மையப் பண்பாட்டு விதி. திருமண பந்தத்தில் கணவனின் வசிப்பிடத்தில் பெண் போய்ச்சேர்வது இயல்பாகவே கருதப்படுகிறது. வீடு இடவாகுபெயராகக் குடும்பத்தை, குறிப்பாக மனைவியைச் சுட்டுகிறது; இல்லாள் இல்லத்திலிருப்பவளாக மனைவியை அடையாளப்படுத்துகிறது. 



எனினும் பெண்ணைப் பொறுத்தவரை, “வீடு” உறைவிடம் என்பதன்றி, அந்தச் சொல்லுக்கிருக்கும் “விட்டு விடுதலை” என்கிற பிறிதொரு பொருளில் அவள் தாய் வீட்டையும் அவ்வீடுசார் நிலத்தையும் அன்றி, கணவன் வீட்டையோ, அதுசார் நிலத்தையோ சுட்டுவதாக இல்லை. சந்திரா இரவீந்திரனின் “யாசகம்” ([2001] 2011) கதையில் வீடு அம்மாவின் நினைவுகளோடு கூடிய வீடு; முற்றத்து வேப்பமரக்கிளைகள், அம்மாவின் மூக்குத்தி ஒளிரும் சமையலறை, ஊஞ்சலின் ஒய்யார ஆட்டம் இட்டுச்செல்லும் மனதின் வானுயரம், வெள்ளை மணற்கும்பி தந்த நிசப்த வேளைகள், ஏகாந்தம் இவை அனைத்தும் திருமணத்தில் தொலைந்துவிடுகின்றன. 



கதைசொல்லிப் பெண்ணின் “சுவாசத்துக்காக மூச்சுக் காற்றையே தந்துவிட முயல்பவன்” அவள் காதலித்து மணந்தவன். அவளின் “சரிபாதியாக” அவனைக் கருதுகிறாள். ஆனால் அந்தச் சரிபாதியின் “விரல்களில் நசித்துக்கொண்டிருக்கிறது அவளின் இதயம்”. இயல்பான சிறகுகள் வெட்டப்பட்டுவிட, தனது ஆண்பாதி தரும் சிறகை “கடன்வாங்கி” அணியவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. 


அவளை அவளாகவே “பறக்கவிட்ட” அவளது அன்னையின் அருகாமைக்கான யாசகம், அன்னையோடான ஒன்றிப்புக்கான யாசகமாகிறது. சுதந்திரத்தைச் சுட்டும் மிகவும் வழமையான கற்பனைவாத உருவகமான வானமும் பறத்தலும் கதையாடலில் வருகின்றன. இவற்றுக்கு நேரெதிராக நகர்தலைக் கண்காணிக்கும் “மாயப்பலகையொன்று எச்சரிக்கையுடன்” அவள்முன் நடப்பட்டிருப்பதும் சொல்லப்படுகிறது. அவள்மேல் “நெருப்புத் துகள்களோடு நகர்கிற” இரு கண்கள் வேறென்ன, அவன் கணவனுடையதாகத்தான் இருக்க வேண்டும். 


அவள் வாழ்வுக்கு அவன் வரைபடமிட்டுத் தந்திருப்பதாகக் கூறுகிறாள் கதைசொல்லி. கணவனின் வரைபடத்தில், கண்காணிப்புப் பார்வையில் அவளற்ற அவளின் பயணமாக நகர்கிறது வாழ்க்கை. 


எனினும், நகைமுரணாக அவளுக்கு வாழ்க்கை “அழகாக” இருக்கிறது: “லண்டன் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பெயர்தெரியாத மரங்களைப்போல, வாசனையேதுமற்ற வண்ணப்பூக்களைப்போல, மொழிமறந்த உதடுகள் தரும் கவர்ச்சிப்புன்னகையைப்போல” அழகு அது (89). பெயர் தெரியாத மரம் பசுமையென்றாலும் அந்நியம், வண்ணமிருந்தாலும் வாசமிலா மலர்கள், மொழித்திறனை கைவிட்ட உதடுகள். 


திருமண உறவில் அந்நியப்படுதலும் காதல் நீக்கமும் பயனற்ற மேம்பூச்சுத்தன்மையும் இடம்பெயர்ந்திருக்கும் புலத்தின் வர்ணனைகளாகிவிடுகின்றன. விளைவாக, புறவெளி கதையின் பின்னணியாகவன்றி அகத்தின் நீட்சியாகக் கதையாடலில் பங்குபெறும் இன்றியமையாத கதாபாத்திரமாகிவிடுகிறது. 


சந்திராவின் சிறுகதை புலம்பெயர்ந்திருக்கும் பெண்ணின் மன உணர்வுகளைச் சித்தரிக்கிறது என்று சொல்லிவிடலாம். ஆனால், பெண்ணைப் பொறுத்தவரை, புலம்பெயர்தல் இரண்டு பரிமாணங்களில் செயல்படுவது கதையை வாசிக்கையில் மனதிலோடியது. 


புலம்பெயர்தலை ஒரு குழுவின் பொதுவான வன் இழப்புகளின், இடம்பெயர்தல்களின் கூட்டு வரலாறைக் குறிக்கும் குறியீட்டுச்செயல் என்று கொண்டால், இந்திய அல்லது தமிழ் சமூகத்தில் திருமண நிமித்தத்தால் பிறந்த இடத்திலிருந்து பிய்த்து வேறிடத்தில் நடப்படுகிற சந்திராவின் கதைசொல்லியின் வார்த்தைகளில், “சிறகுகள் வெட்டப்படுகிற”வன் இழப்பை, உள ஊறுதனை காலம் காலமாகச் சந்தித்துவரும் பெண்கள் அனைவருமே தத்தம் தாயகங்களில் இருந்தாலும் புலம்பெயர்ந்தவர்கள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகிறார்கள். 


ஆக, பெண்ணின் புலம்பெயர்தலோடு திருமணத்தை முன்னிட்டு பெண்ணின் புலம்பெயர்தலும் சேரும்போது, தாயகம் நீங்குதலோடு தாயிடத்தை நீங்குதலும் சேர்ந்துவிடுகிறது. இந்நிலையில் புலம்பெயர்தல் கொள்கிற இரட்டைத்தன்மை பெண்ணின் இழப்புகளிலும் பிரதிபலித்து, கூடுதல் மன அழுத்தத்தை நினைவேக்கத்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. இந்த இரட்டைத்தன்மை அதனளவில் தனித்த, விரிவான ஆய்வைக் கோரும் பொருளாக இருக்கிறது. 


(கோவையில் ஜனவரி 20, 21, 22 தேதிகளில் நடைபெற்ற ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதி இது.)

 
thanx - the hindu

Wednesday, May 11, 2011

பெண் எழுத்து - ஒரு பாஸிட்டிவ் பார்வை

http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-10-03/images/anu-radha-ramanan-17-05-10.jpg
அனுராதாரமணன் எழுதிய கதையை நடிகை லட்சுமி நடிக்க இயக்குநர் சக்தி எடுத்த படமான சிறை சினி ஃபீல்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.தன்னை சீரழித்த கயவனின் வீட்டிலேயே சென்று அடைக்கலம் தேடும் ,அவனை கணவனாக ஏற்கப்போராடும் புரட்சிப்பெண்ணின் கதை.இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி அனுராதாரமணனுக்கு பெரிய பூஸ்ட் அப்பாக அமைந்து அதற்குப்பிறகு நாவல் உலகில் பல வெற்றிகளை குவித்தார். தினமலர் வார மலர் -ல் அந்தரங்கம் கேள்வி பதில் பகுதியில். பலரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து கலக்கினார். அதுவரை வாரமலர் என்றால் அந்துமணி கேள்வி பதில்,பார்த்தது கேட்டது படித்தது இவை தான் முன்னணியில் இருந்தன.அந்தரங்கம் கேள்வி பதில் வந்த பிறகு அது புக்கை எடுத்ததும் வாசகர்கள் படிக்கும் முதல் பகுதி அந்தஸ்தை பெற்றது.

தேவி,ராணி,குமுதம்,விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் எழுதி பல பெண் வாசகர்களை, கவர்ந்த எழுத்தாளர் லட்சுமி நீண்ட நாட்கள் ஃபீல்டில் இருந்த  பெண் எழுத்தாளர்களில் முக்கிய இடம் பிடிக்கிறார்.பெண் மனம்,அகிலா,சூரிய காந்தம் அவரது பிரபல நாவல்கள்.
http://www.ramanichandran.in/images/9.Ramanichandran..jpg
ரமணி சந்திரன் நாவல் லீடரில் இப்போதும் நாவல்கள் எழுதி இந்தியாவிலேயே அதிகம் விற்பனை ஆகும் பெண் நாவல்-ல் தொடர்ந்து எழுதும் பெண் எழுத்தாளர் என்னும்  பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.ஜோடிப்புறாக்கள்,தேவி ஆகிய நாவல்கள் அதிக பெண்களால் ரசிக்கப்பட்டவை.

சிவசங்கரி,இந்துமதி, வித்யா சுப்ரமணியம் போன்ற பெண் எழுத்தாளர்கள் ஆண்கள் மனதையும் தைக்கும் அளவு எழுத்தில் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

மலையின் அடுத்த பக்கம்,அப்பா,ஏன்? எதற்காக? போன்றவை சிவசங்கரியின் டாப் நாவல்கள்.இந்துமதிக்கு தரையில் இறங்கும் விமானங்கள்,மணல் வீடுகள் போன்றவை செம ஹிட்.  சிவசங்கரி,இந்துமதி இருவரும் சேர்ந்து இரண்டு பேர் என்ற நாவலை எழுதியது அந்தக்காலத்தில் பர பரப்பாக பேசப்பட்டது. முதல் அத்தியாயம் ஒருவர் எழுத அடுத்த அத்தியாயம் மற்றொருவர் எழுத வித்தியாசமான நாவல் அந்தாதி உருவானது.

வித்யா சுப்ரமணியம் தென்னங்காற்று மூலம் பலரது மனம் கவர்ந்தார்.அவர் வலைப்பூவும் ஆரம்பித்துள்ளார்.


வாஸந்தி நிலாக்கால நேசங்கள்,ஆகாச வீடுகள் (இலங்கை கதை) ஆகியவை அவர் பெயர் சொல்லும் நாவல்கள்.

அநுத்தமா ஆலமரம்,கவுரி ஆகிய 2 செம ஹிட் நாவல்கள் எழுதினார்.உஷா சுப்ரமணியம் கல்யாண வேலிகள் ஹிட் கொடுத்தார்.

கீதா பென்னட் பல சூப்பர் ஹிட் நாவல்கள் கொடுத்தார். அவர் சைக்காலஜி படித்தவரோ என்ற எண்ணம் மனதில் தோன்றும் வண்ணம் எழுத்துக்கள் பளிச்சிடும்.

அம்பை,கோதை நாயகி,விமலா ரமணி,காஞ்சனா ஜெய திலகர்,ஜோதிர்லதா கிரிஜா,ராஜம் கிருஷ்ணன்,கோமகள் போன்ற பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் முத்திரை பதித்தவர்கள்.( இவர்கள் எழுதிய நாவல்கள் நான் படித்ததில்லை. எனவே ஹிட் நாவல்கள் குறிப்பிட முடியவில்லை)
http://www.tneow.gov.in/Eow/Picture_010.jpg
திலகவதி ஐ பி எஸ் கல் மரம் என்ற சூப்பர் ஹிட் நாவல் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றார்.

அ. வெண்ணிலா சிறந்த கவிதாயினியாக இருந்தாலும் பெண்களின் மாதாந்திர அவஸ்தை பற்றி மிகப்பிரமாதமான ஒரு வலி ஏற்படுத்தும் கவிதை எழுதி இலக்கிய உலகை அதிர வைத்தார்.அந்தக்கவிதை படிக்கும் ஆண்கள் அதற்குப்பின் எந்தப்பெண்ணையும் கண்ணியமாகத்தான் பார்க்க முடியும். அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இவரது காதல் கணவர் மு முருகேஷ் ஹைக்கூ மன்னன்.

பாடல் ஆசிரியர் தாமரை வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே) பாடல் மூலம் ஒரு பெண்ணின் காதல் வலிகளை  பதிவு செய்த முதல் பெண் கவிஞர் என்ற பெருமையை பெறுகிறார்.சினி ஃபீல்டில் அட்ஜஸ்மெண்ட் என சொல்லப்படும் எந்த வித காம்ப்ரமைஸ்க்கும் இடம் கொடுக்காமல் கண்ணியமாக கவிதை மட்டும் எழுதி வருகிறார்.

நடிகை ரேவதி மித்ர மை ஃபிரண்ட் என்ற படத்தின் இயக்குநர் ஆனார்.

வி. பிரியா கண்ட நால் முதல்,கண்ணா மூச்சி ஏனடா போன்ற காமெடி சப்ஜெக்ட் படம் எடுத்தார்.

மதுமிதா வல்லமை தாராயோ,கொலை கொலையா முந்திரிக்கா  என 2 சுமார் படங்களை எடுத்தார்..(சுமார் என்பது வசூல் நிலவரத்தை குறிக்கும்).

ஜே எஸ் நந்தினி திரு திரு துறு துறு  படம் எடுத்தார்.

ரேவதி வர்மா ஜூன் ஆர் எடுத்தார்.அனிதா உதீப் குளிர் 100 எடுத்தார்.

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கண்ணீர் என்ற படத்தை எடுத்து வருகிறார் சற்குணம்.

நடிகை சுஹாசினி இந்திரா என்ற படம் எடுத்தார். ராவணன் பட வசனமும் இவர் தான். ( இரண்டும் எடுபடவில்லை)

லீனா மணி மேகலை பல குறும்படங்களை எடுத்து வருகிறார்.குட்டி ரேவதி கவிதைகளில் தனக்கு என ஒரு ஸ்டைல் வைத்து எழுதுகிறார்.

இனி பதிவுலகில் எழுதும் பெண் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை.


பெண் பதிவர்களிலேயே 1015 ஃபாலோயர்ஸ் பெற்ற ஒரே பதிவர்.

எந்த திரட்டிகளிலும் இணைக்காமல் மொய்க்கு மொய் சிஸ்டம் ஃபாலோ பண்ணாமல் பதிவுகள் மட்டுமே போட்டு ஃபேமஸ் ஆனவர்.

சித்தர்கள் ராஜ்ஜியம் எனும் வலைப்பூ.தோழி என்பவர் இதன் சொந்தக்காரர்.இவர் ஒரு இலங்கைப்பதிவர்.டாக்டர்.

கேபிள்சங்கர்,ஜாக்கி சேகர் போன்ற பதிவர்களுக்கு இல்லாத ஒரு பெருமை இவருக்கு உண்டு.அதாவது எந்தப்பதிவராக இருந்தாலும் அவர்கள் பிளாக்கின் விசிட்டர்ஸ் டுடே எவ்வளவு வர்றாங்களோ அதை விட அதிக பட்சம் 2 மடங்கு மட்டுமே பேஜ் வியூஸ் வரும்.

உதாரணமாக கேபிள் சங்கரின் சராசரி விசிட்டர்ஸ் வருகை ஒரு நாள்க்கு 4000 என வைத்துக்கொண்டால் அவரது பேஜ் வியூஸ் 7000 டூ 8000.அதாவது ஒண்ணே முக்கால் மடங்கு அல்லது 2 மடங்கு.இது பதிவுலகில் இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் தோழி அவர்களின் பிளாக்கில் விசிட்டர்ஸ் வருகைக்கும் பேஜ் வியூஸ்க்கும் உள்ள வித்தியாசம் 5 மடங்கு.

அதாவது அவரது பிளாக்கின் சராசரி விசிட்டர்ஸ் 1500 பேர் என்றால் அவரது பேஜ் வியூஸ் 6800 டூ 7500.அவர் பதிவு போட்டாலும், போடாவிட்டாலும் இந்த ரேஷியோ ஹிட் மாறுவதில்லை.இது ஒரு பிரம்மிக்கத்தக்க உயர்வு.

2010 பிப்ரவரி மாதத்தில் பிளாக் ஆரம்பித்தார். சினிமா,அரசியல் போன்ற கமர்ஷியல் அயிட்டங்கள் எதுவும் சேர்க்காமல் சித்தர்கள் வாழ்வு எனும் ஒரே சப்ஜெக்ட்டில் பதிவு போடுபவர் இவர் ஒருவர் தான்.ஆனந்த விகடனில் பிளாக் ஆரம்பித்த 2 வாரங்களில் அறிமுக அங்கீகாரம் பெற்றவர்,.

இவரது பிளாக்கின் லே அவுட் நாடி ஜோதிட ஓலைச்சுவடி டிசைனில் வித்தியாசமாக இருக்கிறது.வாரம் 5 நாட்கள்  மட்டுமே பதிவு போடுகிறார். சனி ,ஞாயிறு லீவ். ஆனால் லீவ் நாட்களில் கூட சராசரி ஹிட்ஸ் 400 டூ 900.

2,07,264 விசிட்டர்ஸ் இதுவரை வந்திருக்கிறார்கள்.பேஜ் வியூஸ் ஹிட்ஸ் 8,87,762.

மேலும் 2010 ஏப்ரல் மாதத்தில்  61 பதிவுகள் போட்டு 30 நாட்களில் 61 பதிவு போட்ட முதல் பெண் பதிவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

மற்ற பதிவர்களின் விசிட்டர்ஸ் வருகை சராசரியாக இண்ட்லி மூலம் 60%, மற்றும் தமிழ்மணம் மூலம் 30 % , மேலும் மற்ற உலவு , தமிழ் 10 மூலம் 5 % , தனிப்பட்ட செல்வாக்கில் 5 % விசிட்டர்ஸ் வருகையில் இவருக்கு மட்டும் முழுக்க முழுக்க தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே விசிட்டர்ஸ் வர காரணியாக இருக்கிறது ஒரு அதிசயமே..

விசிட்டர்ஸ் டுடே, பேஜ் வியூஸ் வித்தியாசம் பற்றி நான் பிரம்மிக்க காரணம் இஅவரது பிளாக்கிற்கு விசிட் செய்யும் வாசகர் குறைந்த பட்சம் 4 பதிவுகள் படிக்கிறார் என்ற விபரம் தான்.

மற்ற அனைத்துப்பதிவர்களுக்கும் அதிக பட்சம் 2 பதிவுகளே படிக்கப்படுகிறது.
பதிவின் லிங்க்..

http://siththarkal.blogspot.com/2010/02/blog-post.html

உங்கள் வாழ்த்துக்களை சொல்ல விரும்புவர்கள் சொல்லலாம்.

அடுத்து பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? அதை அடுத்த வாரம் பார்ப்போம்.


- தொடரும்