Friday, August 31, 2012

முகமூடி -சினிமா விமர்சனம்

http://reviews.in.88db.com/images/Mugamoodi-first-look/Mugamoodi-Jiiva-Narain-First-look-posters.jpga

நாட்ல முகமூடி போடாத கொள்ளைக்காரர்கள் நிறைய பேர் இருக்காங்க, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் ,பிரதமர்கள், என் நீளும் பட்டியல்கள். ஆனா பாருங்க அவங்க கிட்ட அதிகாரம், அரசியல் செல்வாக்கு, அரசாங்க பாதுகாப்பு, ஒத்துழைப்பு இதெல்லாம் இருக்கு.. சோ அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.. போலீசோட வேலை என்ன?  அஞ்சு பத்து திருடுனவன், பேங்க்ல கொஞ்சமா கொள்ளை அடிக்கறவன் இவங்களைத்தானே பிடிக்க முடியும்?



 கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்க வாய்தா ராணிகளாகவும், நம்ம குடும்பத்தை தவிர வேற யாருக்கும் தமிழ் நாட்டின் சொத்து போயிடக்கூடாதுன்னு நினைக்கும் மனசும், , மற்றவர்கள்க்கு வாய்ப்புத்தராத தலைவர்கள் இருக்கும் தேசம் இது..


கமிங்க் டூ த பாயிண்ட், பணக்கார வீடுகள்ல கொள்ளை அடிக்கும் முகமூடிக்கொள்ளைக்காரர்களை பிடிக்க ஒரு போலீஸ் ஸ்பெஷல் டீம்.. நாசர் தான் அதுக்கு லீடர்.. அவர் பொண்ணு தான் ஹீரோயின். ஒரு வேலையும் செய்யாம தறுதலையா இருக்கும் ஹீரோ ஜீவா அந்த டொக்கு ஃபிகரை பார்த்ததுமே ஒரு தலையா லவ்வறாரு.. 


http://tamil.cinesnacks.net/photos/movies/Mugamoodi/mugamoodi-movie-stills-016.jpg

பால் வடியும் முகமா இருக்கும் ஹீரோ எப்படி இப்படி ஃபைட் போடறார்னு எந்த நாயும் கேள்வி கேட்டுடக்கூடாதே.... அதனால அவர் குங்க்ஃபூ மாஸ்டர்ட்ட  ஃபைட் கத்துக்கிட்ட ஆளா ஓப்பனிங்க்லயே காட்டிடறாங்க.. 


வில்லன்களை பிடிக்கும் முயற்சில நாசர் கிட்டத்தட்ட கொலை செய்யப்படறார்... அதாவது கொலை முயற்சில ஆள் எஸ்.. ஆனா ஹீரோதான் கொலை செஞ்சதா ஹீரோயின் நம்பற மாதிரி ஒரு சிச்சுவேஷன்..  இடைவேளை ( பயங்கர டர்னிங்க் பாயிண்ட் )


அதுக்குப்பின் எல்லா பட ஹீரோ மாதிரி ஹீரோ தான் கொலையாளி இல்ல..  அப்டினு நிரூபிக்க ஒரிஜினல் கொலையாளியை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைப்பதே இந்த டப்பா படத்தின் கேவலமான கதை. 



ஹீரோ ஜீவா நல்ல அர்ப்பணிப்போட உழைச்சிருக்கார்.. குங்க்ஃபூ ஃபைட் நிஜமாவே கத்திட்டு வந்திருப்பார் போல .. ஓக்கே.. ஆனா  அடுத்த  கவுதம் படத்து கெட்டப்பே இதுக்கும் போட்டது எடுபடலை.. அந்த பிஞ்சு மூஞ்சி எப்படி ஆக்‌ஷன் ஹீரோவுக்கு செட் ஆகும்? மீசை இல்லாமல் மழு மழு முகம் இருந்தா தமிழ் சினிமால ஆக்‌ஷன் ஹீரோவா காட்ட முடியாது.. ( குருதிப்புனல் கமல் விதி விலக்கு )கோ படத்துக்குப்பின் வந்தான் வென்றான் , ரவுத்திரம் போல  ஜீவாவுக்கு இதுவும் ஒரு சறுக்குப்படமே.


 ஹீரோயின் பூஜா ஹெக்டே..தானா வந்து அவர் நம்மை ஹக் பண்ணாக்கூட வேணாம் விலகம்மா என சொல்ல வைக்கும் சுமார் அழகுதான்..  பாடல் காட்சில ஃபுல் முதுகை காட்டறார்..  ஒரு சோகக்காட்சில  லோ ஹிப் காட்றார்..  ஒரு காதல் சீன்ல லோ கட் காட்டறார்.. ஆனா நடிப்பை மட்டும் கடைசி வரை காட்டவே இல்லை.. எல்லாத்தையும் இப்பவே காட்டிட்டா எப்படி? அடுத்த படத்துல நடிப்பைக்காட்டலாம்னு பெண்டிங்க் வெச்சிருக்காராம்.. 60 மார்க் போடலாம்.. லிப்ஸ். கண் எல்லாம் நல்லாருக்கு.. கனகாம்பரப்பூ கலர்ல அவர் உதடுகள் வசீகரிக்கிறது.. தொப்பை போடாத அவர் இடை அழகு.. மற்றபடி  அவர் வந்து போகும் 13 காட்சிகளில் இயக்குநர் சொல்லிக்குடுத்ததை செய்கிறார்.. 


 வில்லனாக நரேன்.. இயக்குநருக்கு என்ன கோபமோ தெரில .. நல்லா பழி வாங்கிட்டார்..  இவர் வரும் ஆரம்ப காட்சிகள் நல்லா இருந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் படு சொதப்பல். என்னமோ கார்பெண்டர் மாதிரி சுத்தியலோட அவர் சுத்துவதும், ஹீரோவை நக்கல் அடிப்பதாக நினைத்து இவரே கேவலப்படுவதும் சகிக்கல.. 


நாசர் கனகச்சிதமான நடிப்பு.. 


http://mimg.sulekha.com/tamil/mugamoodi/stills/mugamoodi-movie-012.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்



1. முதல் குங்க் ஃபூ ஃபைட் சீன் ஷார்ப் அண்ட் கலக்கல்..  ஹாலிவுட் படம் போல் காட்சி அமைப்பு.. 


2. எஃப் எம்மில் செம ஹிட் ஆன வாயைப்பொத்தி சும்மா இரு பாட்டு படப்பிடிப்பு அம்சம்.. ஒளிப்பதிவு, கேமரா ஆங்கிள் எல்லாம் ரசிக்கும் விதத்தில் 


3. ஹீரோயின் ஹீரோவை துப்பு சுல்தானி மாதிரி கேவலமா துப்பியதை நினைத்து புலம்பும் ஹீரோ  தன் தாத்தா எதார்த்தமா துப்பும் போது  ஜெர்க் ஆவது கலக்கல்.. 


4. ஹீரோ வில்லன் சேசிங்க் சீனில் நள்ளிரவில் ஒரு கள்ளக்காதல் ஜோடி கொஞ்சுவதும்.. கண் மூடி சொக்கிய நிலையில் இருக்கும் அந்த ஜிகிடியின் கன்னத்தில் ஹீரோ ஒரு தட்டு தட்டி செல்லும்போது அது தன் கள்ளக்காதலன் தான் என அந்த கற்புக்கரசி நினைத்து புளகாங்கிதம் அடைவதும் செம காமெடி சீன். 


5. படு மொக்கை படத்தை என்னமோ பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படம் மாதிரி போஸ்டர் டிசைன், ட்ரெயிலர் எல்லாவற்றிலும் கலக்கலான ஓப்பனிங்க் கொடுத்த மிஸ்கினின் திறமை.. 


 6. டைட்டில் டிசைன் மார்வெல் பிக்சர்ஸின் ஸ்டைலை சுட்டிருந்தாலும்
 ரசிக்கும்படி இருப்பது



http://tamil.cinesnacks.net/photos/events/Mugamoodi-Press-Meet-02/mugamoodi-meet-stills-051.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ,



1. யுத்தம் செய் படத்தில் ஃபைட் சீன்க்கு பேக்கிரவுண்ட் மியூசிக் நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க.. ஓக்கே அதுக்காக அதே இசையை எடுத்து இதுக்கும் போடனுமா? 


2. தமிழ் நாடே கொண்டாடும் ஹீரோ முகமூடியை பார்க்கனும்னு வில்லன் போலீஸ்ட்ட கோரிக்கை வைக்கறான்.. எப்போ தமிழ் நாடு கொண்டாடுச்சு? அவர் இருக்கும் தெருவுக்குக்கூட தெரியாது.. அபப்டி ஒரு சீனே வைக்கலையே? 


3. வில்லன் ஆசாரியா? கார்பெண்டரா? ஏன் லூஸ் மாதிரி கைல ஒரு சுத்தியை வெச்சுக்கிட்டு சுத்திட்டு இருக்கான்?


4. ஸ்பைடர் மேன், பேட் மேன், அயர்ன்மேன், சூப்பர்மேன் என்று வில்லன் ஹீரோவை  நக்கல் அடிப்பது படு கேவலம். அதுவும் 5 முறை அப்படி பண்றார்.. க்ளைமாக்ஸ் சீரியஸா இருக்க வேண்டாமா?  கோபம் வற்ற மாதிரி காமெடி பண்ணாதீங்கன்னு எத்தனை டைம் சொல்றது?


5. ஹீரோயின்க்கு ஹீரோவை 6 டைம் நேருக்கு நேர் பார்த்தப்ப வர்லை.. முக மூடி போட்டுட்டு வேன் கிட்டே யூரின் போறப்ப எதார்த்தமா ஹீரோயின் ஹீரோவை அந்த கேவலமான கோலத்துல பார்த்த பின் காதல் பொங்கிட்டு வருது.. யோவ்,, இது என்ன கில்மா படமா? 


6.  க்ளைமாக்ஸ்ல வில்லன் ஸ்கூல் குழந்தைங்க இருக்கும் வேன்ல உள்ளே போக நினைச்சா கதவைத்திறந்து போக மாட்டாரா? ஏன் லூஸ் மாதிரி டாப்பை சுத்தியால அடிச்சுட்டு இருக்கார்? அவருக்கும் டாப் அதாவது மேல் மாடி காலியா?


7. ஹீரோயின் ஹீரோகிட்டே லவ்வை வெளிப்படுத்த பல வழி இருந்தும் ஏன் கேனம் மாதிரி ஹீரோ  நெஞ்சை தடவி தடவிப்பார்க்கறாரு? ஆண்ட்டி மாதிரி.. 

( நல்ல வேளை.. )


8. குங்க் ஃபூ மாஸ்டர்  ஹீரோவுக்கு  எல்லாத்தையும் கத்துக்குடுக்காம  இன்ஸ்டால்மெண்ட்ல வித்தைகள் கத்து தர்றாரே, அது ஏன்? 


9. க்ளைமாக்ஸ் ஃபைட் சீன் தான் பொதுவா இந்த மாதிரி ஆக்‌ஷன் படத்துக்கு முக்கியம்.. ஆனா ஏன் சொதப்பல் ஃபைட்?


 10. ஹீரோ அந்த குழந்தைங்க முன்னால பல்டி, குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சு டாக்டர் ராமதாசை விட  பெரிய காமெடியன் ஆக ட்ரை பண்றது  படு கேவலமா இருக்கு.. ஆக்‌ஷன் ஹீரோ இமேஜையே அது உடைக்குது.. 



11. ஹீரோவுக்கு அந்த ப்ளூ கலர் பனியன் லெக்கின்ஸ் டிரஸ் படு கேவலமா இருக்கு.. பார்த்தா சிரிப்பு தான் வருது.. அதுக்கு மேல சிவப்பு கலர் ஜட்டி வேற .. அவ்வ்வ்வ்.. ராமராஜன் நடிச்சிருக்கனும் 
http://3.bp.blogspot.com/-awG8r-wdTKI/UD5CP548PZI/AAAAAAAA72Q/IVZ3RitUtUE/s1600/Mugamoodi-Movie-Stills-%2B(1).jpg


மனம் கவர்ந்த வசனங்கள்

1. யாரையும் நம்பாதீங்க.. கமிஷனர் உட்பட.. எப்பவும் சிவில் டிரஸ்ல வாங்க.. யூனிஃபார்ம் வேண்டாம்.. , இந்த ஃபார்மாலிட்டி சார்.. மோர் எல்லாம் கட் பண்ணுங்க , டியூட்டியை பாருங்க.. 


2.  அதென்ன மாப்ளை 18 வயசுல இருந்து 81 வயசு வரை எல்லாரும் டாஸ்மாக் வந்துடறாங்க?


3. அதெப்பிடிடா தண்ணி அடிக்க உன் கிட்டே மட்டும் காசு வந்துடுது?



4. புரூஸ்லி யார் மாதிரியும் ஆகணும்னு நினைக்கலை..தான் என்னவா ஆக
நினைச்சாரோ அப்படியே ஆனார். அதனால நீயும் அவர் மாதிரி வரணும்னு
நினைக்காதே..உனக்கு என்ன ஆகத் தோணுதோ அப்படி ஆகு’


5. எங்கேடா போறே?


 அவளைப்பார்க்கனும்


 பார்த்து?


 கன்னத்துல அறையனும். 

 அவ கமிஷனர் பொண்ணுடா.. 

 அப்போ 2 டைம் அறையனும்.. 



6. இப்போதான் சாமி மலை ஏறி இருக்கு..  திரும்பவும் ஏற வெச்சுடாதீங்க.. 



7. அங்கே என்னடா பண்றே?


 டாடி, பைக்கை ரிப்பேருக்கு குடுத்திருக்கேன்.. மெக்கானிக் பார்த்திட்டு இருக்கான்.. ( பில்டப் ஹீரோயின் முன்)



 உன்கிட்டே சொந்தமா ஒரு சைக்கிள் கூட இல்லையேடா.. சரி சரி.. நைட் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.. சரக்கு அடிச்சு வாமிட் எடுத்துட்டு இருக்காதே.. 



8.  ஏண்டா மூடு அவுட்டா இருக்கே? 


 என்னால முடியல.. 

 அப்போ நல்ல டாக்டராப்பாரு


 அய்யோ தாத்தா.. அதில்லை.. அந்த முடியல அல்ல.. இது வேற.. சோகம்.. 


 9. லவ் ஒரு டெஸ்ட் மாதிரி டா.. 

 ம்க்கும், நான் ஸ்கூல் டெஸ்ட்டே பாஸ் பண்ணலை.. 



10. குனிஞ்சு நடக்காத.. என்னை மாதிரி ஆகிடுவே.. 

 உன்னை மாதிரி இருந்தா நான் அவளை பார்க்காமயே இருந்திருப்பேன்.. 

http://www.koodal.com/cinema/gallery/events/2011/771/mugamoodi-movie-launch-stills_23_190750123.jpg


11. தாத்தா.. ஏதாவது ஐடியா குடு ப்ளீஸ்;. 

 எல்லாத்தையும் நானே சொல்ற மாதிரி இருந்தா நானே அந்தப்பொண்ணை லவ் பண்ணிடலாமே? நீ எதுக்கு ? 


12.  நீ என்னமோ தப்பு பண்றே? உனக்கு என்னமோ நடக்கப்போகுது.. 


13. டேய்.. இப்போ நீ என்ன பண்ணப்போறியோ.. எனக்கு வயிற்றை கலக்குது.. 


 எனக்கும் தான்.. 


14. வில்லன் - என் நிழல் கூட என் பின்னால் வராது.. ஆனா நீ வந்துட்டே..  எனக்கு போலீஸ் வாசனை பிடிக்காது, ஆனா சாவு வாசனை பிடிக்கும்.. 






எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( 37 தான் போடனும் நியாயப்படி பார்த்தா, ஆனா விகடன்ல மிஸ்கின்னா ஒரு சாஃப்ட் கார்னர், அள்ளி வீசுவாங்க )

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேலை வெட்டி இல்லாதவங்க, பொழுது போகாதவங்க யாரா இருந்தாலும் டி வில அடுத்த வாரம் போட்டுடுவாங்க.. அது வரை வெயிட் பண்ணவும் . இந்த டப்பாவை . ஈரோடு அபிராமியில் பார்த்தேன்






http://kollywoodgalatta.com/wp-content/uploads/2012/08/tamil-movie-mugamoodi-photos.jpg a


விழா மாலைப் பொழுதில்- அசோகமித்திரன் -சிறுகதை

அறை வெளியே நிறைய நடமாட்டம் கேட்டது. நான் வெளியே வந்தேன். ஒரு அதிகாரி என்னைத் தடுத்து நிறுத்தி, ”இனாகுரேஷனுக்கு முந்தி ஒரு இன்டர்வியூவும்  கிடையாது என்று உனக்குத் தெரியாது? உன் கார்டைத் தடுத்து நிறுத்தி  விடுகிறேன் பார், நீ ·பெஸ்டிவல் உள்ளேயே நுழைய முடியாது” என்றான்.

அப்போது புடைசூழ ஜெயதேவியும் வெளியே வந்தாள். என்னைப் பார்த்து,
”மறக்காதீங்க சார். கட்டாயம் ஹோட்டலுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு
என்னைக் கடந்து போனாள். அந்த அதிகாரி அவளைப் பின் தொடர்ந்து போனான்.

துவக்க விழா கலாட்டாவும் கூத்தாகவும் இருந்தது. சாலையில் போலீஸ்காரர்கள்  கூட்டத்தைக் கலைக்க தடியடி செய்திருக்கிறார்கள்.

மேடையில் அடுத்தடுத்து அபத்தமும் உளறலும். சினிமாத்துறைத் தலைவர்கள் கையை  வீசிப் பிதற்றினால் மத்திய மாநில மந்திரிகள் அசையாமல் நின்று
பிதற்றினார்கள். இதெல்லாம் எனக்குப் பழக்கமாகிப் போனவை. மந்திரி ஒருவர்
காது கொடுக்கக் கிடைத்தால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒரு சினிமாப்
பிரமுகர் தவறாமல் சினிமாத் தொழிலே நசித்துச் செத்துக்கொண்டிருக்கிறது
என்றும், அந்த மந்திரி உடனே அத்தனை வரிகளையும் ரத்து செய்து அவர்கள்
அடுத்த நிமிடம் உயிர் வாழ அரசாங்கம் இன்னும் உதவிகள் புரிய வேண்டும்
என்பார்கள். மந்திரிகள் தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியம், எப்படி
மூலை முடுக்கெல்லாம் சினிமாவும் சினிமா நடிகர்களும் பாட்டுகளும் ஊடுருவி இருக்கின்றன என்றும், நாட்டின் அத்தனை இடர்பாடுகளையும் தீர்க்கும்படியான கருத்துப் படங்களையே சினிமாத் தயாரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் என்பார். அதே மந்திரி மேடையில் நடிகை என்று ஒருத்தி இருந்துவிட்டால், அவர் உரையில் பாதி அவளுக்குத்தான் என்பதுபோலத் திரும்பித் திரும்பிப் பார்த்துப் பேசுவார். அந்த நடிகை எழுந்தால் அவர் எழுந்துவிடுவார். அவள் அவருக்கு மாலை அணிவித்தால் அவருடைய உயரம் அரை அடி உயரும் அல்லது குறையும். இதெல்லாம் அங்கிருப்போருக்குத் தேச முக்கியத்துவம் உடையதாகத் தோன்றக் கூடும். உண்மையிலேயே அதுதான் உண்மையோ என்னவோ?

என் கண்களுக்கு எல்லாமே அபத்தக் களஞ்சியமாகத்தான் தோன்றியது. அஷோக்குமார் சற்று முதிர்ச்சியுடன் பேசக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் அவரும் தடுமாறினார். அவருக்கு அது திரைப்பட விழா ஒன்றின் துவக்க நிகழ்ச்சி என்றே மறந்துவிட்டது. சட்டென்று நினைவுக்கு வந்து திரைப்பட விழாக்களின்
இன்றியமையாதத் தன்மையை அவர் எப்போதும் உணர்ந்ததாகக் கூறினார்.

முன்னர் இதே மாதிரி ஒரு நிகழ்ச்சியில் வேறோர் நகரில் தேவிகாராணி பேசியது எனக்கு நினைவுக்கு வந்தது. விழாவுக்கு வராத அயல்நாட்டு டைரக்டர்களை எல்லாம் அவள் வரவேற்றாள். அந்த டைரக்டர்கள் வரவில்லை, அவர்கள் படங்களைத்தான் காட்டப் போகிறது என்று விழா நெறியாளர் அவளுக்கு மேடையிலேயே சொன்னார். ஏன் எனக்கு முன்னமேயே இதெல்லாம் சொல்லவில்லை என்ற அவள் சிறிது
கடுகடுத்தாள். ஒரு வைபவத்துக்காக யாரையாவது அழைத்தால் அந்த நபரிடம்
முன்கூட்டியே முக்கிய விவரங்களைத் தெரிவித்துவிட வேண்டும் என்றாள்.
எனக்கு அஷோக்குமாரே தேவிகாராணியாக மாறிவிட்டது போலிருந்தது. அவரும் அவளும் சேர்ந்து நடித்த ‘அச்சுத் கன்யா’ கண்முன் தோன்றியது. செக்கச் செவேலென்று இருக்கும் வதனத்துடன் படிப்படியாக வாரிப் பின்னப்பட்ட கறுத்த கேசத்துடன் அவள் ஹரிசனப் பெண்ணாக நடித்தாள். அப்போது அவள் காதலன் யாராக இருக்க முடியும்? பிராமணப் பையனாக அஷோக்குமார். யாராவது தேவிகாராணிதான் பிராமணப் பெண், அஷோக்குமார் ஹரிஜன இளைஞன் என்று கூறியிருந்தால் தயங்காது
நம்பிவிடலாம். அந்தப் படத்தை ஒரு ஜெர்மன் டைரக்டர் டைரக்ட்
செய்திருந்தார். ஆதலால் தேவிகாராணியும், அஷோக்குமாரும் சர்வதேசத்
திரைப்பட விழாவைத் துவக்க மிகவும் பொருத்தமானவர்கள். பிராமணப் பையன், ஹரிஜனப் பெண் எப்படிப் பார்த்தாலும் காதல் நிறைவேறாது. ‘அச்சுக்
கன்யா’வில் நிறைவேறவில்லை. ஆனால் அதன் பிறகு வந்த பல படங்களில் அத்தகைய காதல் கைகூடிவிடும் ஒரே ஒரு வில்லன் எதிர்க்க எட்டுப் பேர் கதாநாயகனையும் கதாநாயகியையும் மணமுடித்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று செயல்படுவார்கள். இந்த எட்டுப் பேரில் காமெடியனும் ஒருவனாக இருப்பான். முடிவில் அவனும் அவனுடைய ஜோடியை மணந்துகொள்வான்.

அஷோக்குமார் மேலும் மேலும் தடுமாற எனக்கு ‘அச்சுத் கன்யா’ அப்படியே
சென்னை வரையில் விரிவடைந்தது.

ஒரு வழியாக அஷோக்குமார் அவர் பேச வேண்டியதையும் பேச வேண்டாததையும் பேசி முடித்துவிட்டார். அடுத்துக் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். இந்த சினிமாக்காரர்களுக்கு புத்தி ஏதாவது இருக்கிறதா? ஒரு ஆர்க் லாம்ப்பை ஏற்றச் சொல்லக்கூடாது? குத்துவிளக்காம் குத்துவிளக்கு! எல்லாம் பத்திண்டு
எரியும்.

சூட்டும் டையும் அணிந்த அஷோக்குமார் மேடையோரத்தில் வைக்கப்பட்ட பெரிய குத்துவிளக்கருகே சென்றார். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து திரி. ஒரு திரியை ஏற்றினால் போதாது. ஐந்தையும் ஏற்றவேண்டும்.

சூட்டும் டையும் அணிந்த திரைப்பட விழா அதிகாரியும் குத்துவிளக்கருகே
சென்றார். அது போதாது என்று மாநில முதலமைச்சர். அவர் ராஜரிஷி, அல்லது
பக்கிரிராஜா அல்லது கோலோச்சும் சந்நியாசி. அவருடைய கஷாயத்தைவிட
நெற்றியில் தரித்திருந்த குங்குமப் பொட்டு பயமுறுத்தியது.

அஷோக்குமார் குத்துவிளக்கை ஏற்றத் தயாராக இருந்தார். ஆனால் அவராக
ஏற்றிவிடக் வடாது. ஜெயதேவி துணைபுரிந்தபடிதான் அவர் ஏற்ற வேண்டும்.
அப்படித்தான் செய்தி ஒலிபரப்பு இலாகாவும், திரைப்பட விழா நெறியாளர்
அலுவலகமும், மந்திரியும், முதல் மந்திரியும் நிர்ணயித்தார்கள். ஜெயதேவிக்
குச்சியை கிழிக்க அதை வாங்கிக் கொண்டு அஷோக்குமார் திரிகளை ஏற்றுவார். ஆனால் நெருப்பை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் வாங்கலாமா? பெருத்த அபசகுனமாச்சே! அதிலும் எடுத்ததற்கெல்லாம் சகுனமும் ஜோசியமும் பார்க்கும் சினிமாக்காரர்கள் விழாவில் அபசகுனமாக ஒன்றும் நடக்கக்கூடாது. முதலிலும் முடிவிலும் திருப்பதி சாமிக்குப் பூஜை நடத்தியாக வேண்டும். அந்த நாளில் வேறு எந்த கோயிலருகே சாமியார் பிரபலமாயிருக்கிறாரோ அவருடைய ஆசியைக் கோர வேண்டும். இங்கே ஹைதராபாத் பிரபல சாமியார் யார்?

எங்கிருந்தென்ற தெரியாமல் ஜெயதேவி மேடையில் தோன்றினாள். முன் நான்கைந்து வரிசைகள் தவிர இதரப் பார்வையாளர் மத்தியில் கரகோஷமும் சீட்டியடித்தலும் நிகழ்ந்தன. ஜெயதேவி சிலைக்குரிய முகத்தை மிகுந்த தேர்ச்சியோடு நிலைத்து வைத்துக் கொண்டிருந்தாள். இதைத்தானே ‘சஸ்டெயிண்ட் எக்ஸ்பிரஷன்’ என்பார்கள்?

ஒரு பெண்மணி மெழுகுவர்த்தி ஒன்றைக் கொண்டுவந்தாள். அது சிவப்பு
வர்ணத்தில் முறுக்கேறியதாக இருந்தது. ஜெயதேவி நெருப்புக் குச்சியால் பற்ற வைக்க முயன்றாள். மூன்று குச்சிகளாலும் முடியவில்லை. அஷோக்குமார் முதல் குச்சியிலேயே மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்துவிட்டார். எவ்வளவு லட்சம் சிகரெட்டுகளைப் பற்ற வைத்திருப்பார்? விழா நெறியாளர்கள் கைகாட்ட அஷோக்குமார் குத்துவிளக்குத் திரிகளைப் பற்ற வைப்பதில் முனைந்தார். ஒன்று எரித்தால் முந்தையது அணைந்தது. கடைசியாக எல்லாத் திரிகளையும் ஏகமாக வெளியே இழுத்துப் பற்ற வைக்க ஒரு தீவட்டி போல எரிந்தது. நான் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து ‘ஹாஹா’ வென்று சிரித்தேன். அரங்கம் முழுவதும் கரகோஷம் செய்தது. ஜெயதேவி முதலில் என்ன செய்வதென்று நின்றாள். அப்புறம் அவளும் கைதட்டினாள்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (31. 8..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

http://www.tamil.cinebuzzz.com/img_articles/323b.jpg 

1.முகமூடி - மிஷ்கினின் கே‌ரிய‌ரில் முகமூடி முக்கியமான படம். முதல் மெகா பட்ஜெட், முதல் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். கொஞ்சம் ஸ்லிப்பானால் சூப்பர் ஹீரோ சி‌ரிப்பு ஹீரோவாகவும் வாய்ப்புண்டு. முகமூடியின் இன்னொரு பெயர் ‌ரிஸ்க்.

ீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் - சூப்பர் ஹீரோவுக்கான - காஸ்ட்யூம் மிக அருமை என்று படத்தை தயா‌ரிக்கும் யு டிவி-யின் நிர்வாகி தனஞ்செயன் கூறியிருக்கிறார். ஆள் பாதி ஆடை பாதி என்றால் சூப்பர் ஹீரோ விஷயத்தில் ஆள் கால், ஆடை முக்கால். 



அடுத்து சண்டைக் காட்சிகள். இங்கு மிஷ்கின் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார். அவ‌ரின் சூப்பர் ஹீரோ மசில் பவரைவிட மைண்ட் பவரை அதிகம் சார்ந்திருப்பவன். அதை வைத்தே அனைத்தையும் சாதிப்பதாக மிஷ்கின் கூறுகிறார். அதற்காக சண்டைக் காட்சிகள் இல்லாமலில்லை. அதுவும் தாரளமாகவே உள்ளது.


முகமூடிக்கு கே இசையமைக்கிறார்.


சென்டிமெண்ட் சிக்கலில் தமிழ் சினிமா சிக்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண சிக்கல் இல்லை இடியாப்ப சிக்கல்.


முகமூடி 31 ஆம் தேதி வெளியாகிறது. ‌‌‌ீவாவால் தாங்க முடியாத பட்ஜெட். விளம்பரத்தை முடிந்த மட்டும் முடிக்கிவிட்டு முதல் வாரத்தில் கலெக் ஷன் பார்த்தால் தப்பிக்கலாம். இந்த நிலையில் யுடிவி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தனஞ்செயன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதாவது முகமூடி நூறாவது படமாம். 




இந்த வருடத்தில் 99 படங்கள் வெளியாகியிருக்கின்றனவாம். நூறாவதாக வெளியாகப் போவது முகமூடியாம். இது எதேச்சையாக நடந்தது. இதை ஒரு அதிர்ஷ்மாக நினைக்கிறோ‌ம் என்றெல்லாம் புல்ல‌ரித்திருக்கிறார்.ஈரோடு அபிராமி, சண்டிகாவில் ,அன்னபூரணியில் ரிலீஸ் 

முகமூடி -சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_3296.html

 
 http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/ec/New_Joker_movie_poster.jpg/220px-New_Joker_movie_poster.jpg

2. JOKER - (HINDI) ரவுடி ரத்தோர் படத்துக்கு பின், அக்ஷய் குமார்-சோனாக்ஷி சின்கா, மீண்டும் ஜோடி சேரும் படம், ஜோக்கர். இது, அக்ஷய் குமாரின் 100வது படமும் கூட. 40 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுரவ் டகோன்கர், இசை அமைக்கின்றனர். அக்ஷய் குமாரின் அதிரடியான சண்டை காட்சிகளும், கிளு கிளுப்பான காதல் காட்சிகளும் நிறைந்திருப்பதாக கூறப்படுவதால், இந்த படம், பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்.

 


3.LAWLess - காட்ஃபாதர், நாயகன், பில்லா  டைப் கேங்க்ஸ்டர் படம் தான். அண்ணன், தம்பிங்க 3 பேர் சாராயம் பல்க் பிஸ்னெஸ் பண்றாங்க.டாக்டர் ராம்தாஸ் மாதிரி மது எதிர்பாளர்களால், மது விலக்கு அமுலில் இருப்பதால் சட்ட அதிகாரிகளால் வரும் பிரச்சனைகள் தான் கதை.. வேறு சிலர் இதே கேவலமான தொழிலை செய்வதால் குரூப் ஸ்டடி மாதிரி க்ரூம் மோதல்,. அடிதடி, வெட்டு , கொலை நடக்குது.. கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்.   நினைவு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. பயங்கர வன் முறைக்காட்சிகள் கொண்ட படம், பெண்கள் தவிர்க்க வேண்டிய படம் . ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 



4.  வாலிபன் சுற்றும் உலகம் -எம்.ஜி.ஆர் பெயரை கெடுக்கும் போலி எம்.ஜி.ஆர் படம்

A new movie discouraging MGRs filmதமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எப்போதுமே எம்.ஜி.ஆர்தான். தமிழ் சினிமாவின் முதல் ரியல் ஹீரோவும், கடைசி ரியல் ஹீரோவும் அவர்தான். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோவாக வலம் வந்தவர். அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்களின் வீட்டு பூஜை அறையில் தெய்வங்களோடு தெய்வமாக இருப்பவர்.



அவரின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு சொல்லும் அவரது ரசிகர்களுக்கு அத்துபடி. இன்றைக்கும் அவரைப்போல தொப்பி அணிந்து கொண்டு, அவரைப்போல கண்ணாடி அணிந்து கொண்டு, அவரைப்போல மேனரிசத்தோடு வாழ்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர் இறந்து விட்டதைகூட நம்பாத முதியவர்கள் இப்போதும் உண்டு.


 அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் பெயரும், அவரது வாழ்க்கை ஸ்டைலும் இன்றைக்கு பலபேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவர் புகழ்பாடுவதாக நினைத்துக் கொண்டு அவரையே கேலிக்கூத்தாக்குகிற நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் தயாராகி உள்ள படம்.


 சினிமாவில் அதிக தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.  இன்றைக்கு வெளிவரும் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்களுக்கு அதுதான் பிள்ளையார் சுழி போட்ட படம். இப்போதும் தமிழ்நாட்டில் எந்த தியேட்டரில் போட்டாலும் ஒருவாரம் கலெக்ஷனை அள்ளிக் கொடுக்கிற படம்.


 அந்தப் படம் எத்தனை இடையூறுகளை சந்தித்து வெளிவந்தது.  அது எத்தனை பெரிய வெற்றி பெற்றது என்பது அந்தக் காலத்திய மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு ஜனரஞ்சக சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதனை பாடமாகவே வைக்கலாம். அப்படிப்பட்ட அற்புதமான படத்தை உல்டா செய்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.  எம்.ஜி.ஆர் சிவா என்பவர் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் ஆகிவிட முடியுமா? மொட்டை அடித்து கண்ணாடி போட்டவன் எல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா?



தொப்பி வைத்து கூலிங் கிளாஸ் போட்டவன் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா. அப்படித்தான் முயற்சித்திருக்கிறார் சிவா.  எம்.ஜி.ஆர் வேடமிட்டு மேடையில் ஆடட்டும் பாடட்டும், அதனால் சிறு வருமானம் கிடைத்து பிழைத்துக் கொள்ளட்டும். ஆனால் அவரையே கேலிப்பொருளாக்கி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதை எப்படி சகித்துக் கொள்வான் எம்.ஜி.ஆர் ரசிகன். வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் சிவா எம்.ஜி.ஆர் போலவே நடக்கிறர்.


 அவர் பல படங்களில் செய்த ஸ்டைலை இவர் ஒரே படத்தில் செய்கிறார். டூயட்டில் எம்.ஜி.ஆர் போலவே ஆடுகிறார். எம்.ஜி-.ஆரின் ஒவ்வொரு அசைவும் ஒரு ஸ்டைல் அதைப் பார்த்து பார்த்து ரசித்து வாழ்ந்தவன் அவரது ரசிகன். ஆனால் இந்தப் படத்தில் அதையே ஒரு வரைமுறையின்றி செய்து எம்.ஜி.ஆரின் ஸ்டைல், மேனரிசங்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். கதையும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் உல்டாதான்.



 தொற்று நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறார் ஒருவர். வில்லன் கூட்டம் அந்த மருந்தின் ரகசியத்தை அழிக்க நினைக்கிறது. இதனால் வில்லன்கள் நடத்தும் தாக்குதலில் குடும்பம் பிரிகிறது. ஒரு மகன் தாயுடனும், இன்னொரு மகன் வேலைக்காரனுடனும், மகள் தந்தையுடனும் செல்கிறார்கள். பிற்காலத்தில் மூவரும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. ஈரோடு ஆனூரில் ரிலீஸ்


http://www.allbestwallpapers.com/wallpaper/movie/image/king_kong,_2005,_naomi_watts,_jack_black,_adrien_brody.jpg

 5. KING KONG - ஒரு கொரில்லாவுக்கும், ஒரு ஃபிகருக்கும் ஏற்படும் அன்பு தான் கதை. 1933ல தான் முதல் கிங்க் காங்க் ரிலீஸ் ஆச்சு.. செம ஹிட்,அப்புறம் 1976, 2005, 2011 என போட்டு துவைச்சு எடுத்டுட்டாங்க, ரீமேக் வரிசையில் இது சாதனை.. இப்போ வந்திருக்கும் தமிழ் வெர்ஷன் அநேகமா 2005ல் வந்த படம்னு நினைக்கறேன்.  ஈரோட்டில் ஸ்டாரில் ரிலீஸ்.

அடி பழைய ஜிகிடி கதவைத்திறடி" -3டி

1.ஜட்ஜ் - உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன். 



கைதி - யாரை தூக்கனும்? நமீதா? கலா மாஸ்டர்? குஷ்பூ?


-------------------------


2. கசாப் தூக்கு உங்க கருத்து என்ன? ஆதரவா? எதிர்ப்பா?


 மு க - கசாபுக்கு தமிழ் நாட்டில் வாக்குரிமை இல்லை, எனவே  என் நிலைஎன்னஎனசொல்ல தேவைஇல்லை


---------------------


3. ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் - போலீஸ் # தகவலுக்கு நன்றி! நாங்கள் சுதாரித்தோம் - குற்றவாளிகள்



------------------


4.  படம் பூரா ஹீரோ முகத்தையும், உடம்பையும் மூடி இருப்பார், ஹீரோயின் அவருக்கு நேர் எதிரா இருப்பார் # முகமூடி ஸ்டேட்”டச்”



------------------------


5. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும்: கிரண்பேடி # ரேப் நடந்துடப்போகுது



-----------------------------






6. மிஸ்டர் கசாப், தீர்ப்பை கேட்டு ஏன் நீங்க அதிர்ச்சி அடையல ?



எப்படியும் கேஸ் இன்னும் 10 வருஷம் இழுக்கப்போகுது, கருணை மனு எதுக்கு இருக்கு?



-------------------------


7. பெண்கள் தங்கள் மழலை ஃபோட்டோ வைப்பது ஒரு பாதுகாப்புக்கு, ஆண்கள் சொந்த ஃபோட்டோ வைப்பது ஒரு வாய்ப்புக்கு # டி பி



------------------------



8. பெண்கள் சாரி சொல்லும்போது அவங்க முக அழகு கூடும்,சாரி கட்டும்போது நாம பார்த்தா நம்ம முக அழகு கூடும் # பிரைட் ஃபேஸ்



------------------------


9. எம் ஜி ஆர் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆனா வைக்க வேண்டிய  டைட்டில் ஓ”நம் நாடு”




-----------------------


10. காலைல ஊரே கண் விழித்துவிட்டாலும் 9 மணி வரை போர்வை போர்த்தி கண்மூடும் பயங்கர சோம்பேறி நீ!



-----------------------






11. இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்!.சம்சாரம் காணாம போய்ட்டா எவ்ளவ் நல்லாருக்கும் என மனசுக்குள் ஆசைப்பட்டால் நீயும் தமிழனே!



---------------------


12. உனக்காக நான் காத்திருப்பது தவம்.நீ என்னைப்பார்ப்பது வரம்.எனக்கான உன் புன்னகைகள் எனக்கு பிரசாதம்



--------------------


13. கஞ்சன் ீவீட்டுக்கு விருந்தாளியா போனா வாழை இலைக்குப்பதிலா வெற்றிலைலதான் (வெத்தலை) உணவு பரிமாறுவாங்களாம்



-----------------------


14. நானும் ராணாவும் 10 வருஷ்மா பக்கத்து பக்கத்து வீட்ல தான் குடி இருக்கோம் - 3 ஷா # குடி இருக்கீங்களா? குடித்தனமா இருக்கிங்களா?



-------------------------


15. குழந்தை பிறக்கணுமா? உடம்பை... மனசை கூலா வச்சுக்கங்க! -செய்தி # அப்போ சூடேத்த வேணாமா?


-------------------------


ல்.ஏ.'s photo.
சேர நாட்டு இளவரசிகளுக்கும் அவர்களின் சேட்டன்களுக்கும் என் இனிய ஓணம் வாழ்த்துக்கள்!



16. எனது முதல் குறும்பட டைட்டில் " அடி பழைய ஜிகிடி கதவைத்திறடி" -3டி



--------------------------


17. உலகத்துலயே என் மூளை தான் FRESH னு எப்படி சொல்றீங்க அத்தான் ,?




ம்.இதுவரை யூஸ் பண்ணாம அப்படியே வெச்சிருக்கியே?



----------------------------


18. கடுமையான சொற்கள் மெண்மையான இதயத்தை தொடாது.ஆனால் மென்மையான சொற்கள் கடுமையான இதயத்தையும் தொட்டு விடும்



----------------------


19. டியர்.தமிழ்ல பேச மாட்டியா?



தமிழ்னா அவ்ளவ் இஷ்டமா?



ம்க்கும் ,இங்க்லீஷ் புரியாது



-------------------------

20. உங்கப்பா ஏழையா இருந்தா அது உன் தலை எழுத்து.உன் மாமனாரும் ஏழையா இருந்தா அது உன் கொழுப்பு,# அமீர் அவுரத் பக்டோ



--------------------------------


Thursday, August 30, 2012

அணையா நெருப்பு- கமல்ஹாசன்- சிறுகதை

http://www.itimes.com/files/rsz/fit_s_400x600/files/11-2009/92/0af9a91fd626d7766fd9112a0061e021_1257493942.jpg


வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை;

 வேறு, வேறு விதை.

‘‘விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்’’ என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

‘‘ஆம்! இது,  பூமி பார்த்த பூமி’’ என்றேன்.

‘‘சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். ‘‘பார்க்கும்,
எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.’’

‘‘சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்’’ என்றேன்.

‘‘துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.’’

‘‘ம்…?’’

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

‘‘நான் கற்பிழந்த நாள்.’’

‘‘ஓ! கதையின் நீளம்?’’

‘‘சிறுசு’’ என்றார்.

‘‘கதாநாயகனா? நாயகியா?’’

‘‘நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?’’

‘‘உண்மைதான். காலம்?’’


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCI8eDWdYLRml51Bkc2T-Jxi-wGvnwE_IAG5A0dTUWQdtpNfMqn-JTs0eDLYSX-htFvHSDZaBzSeanYKQiZyhGwTWctU4nOXRnOu1jrPnrgIfF9lQZYih3x5haFiBMAVlO3RCR3Rl97GQ/s1600/Kamal+Hassan+With+His+Family.jpg

‘‘பகலா, இரவான்னு கேக்கறீங்களா?’’

‘‘இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?’’

‘‘முந்தானேத்து’’ என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, ‘‘How about முன்பு ஒரு காலத்துல?’’

‘‘Why not?’’ என்றார் விட்டுக் கொடுப்புடன்.

‘‘உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில்
ஒரு நாள்’ – எப்படி?’’

‘‘அம்மாடியோவ்!’’

‘‘ஏன்?’’

‘‘Why not?’’

‘‘கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?’’

‘‘கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?’’ என்றேன்.






‘‘Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச்
சொன்னதுக்கு என்ன ஆதாரம்?’’

‘‘ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க?
சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.’’

‘‘அப்பிடின்னா?’’

‘‘இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.’’

‘‘ஓ! சீதை சொல்லவில்லையா?’’ என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

‘‘இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.’’

‘‘ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?’’

‘‘ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப்  போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.’’

‘‘Wow! hot gossip?’’

‘‘No, a warm tale’’ என்றேன்.

துவங்கினேன்… ‘‘அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.’’

http://www.8pmnews.com/wp-content/uploads/2010/06/Kamal-marrigae.jpg

‘‘ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில்
செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது
சீதையின் மேல்’’ என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

‘‘இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை
எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள்
உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி. விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான். மிச்சம்…’’

‘‘சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை,
ஞாபகமிருக் கட்டும்’’ என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச்சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…

‘‘காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன்
அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன்
கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு
எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப்
பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன்
முதன்முதலாகப் பேசினாள்.

‘‘ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை
ஆட்கொள்’’ என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச்
சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த
அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட
வந்தது பதில்.

‘‘முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.

காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ-qT9mtDqSLXtcs2M8Kecz8RYytkRXFAvq77-eLr6IqnD5wrzG4ilgMwkePXSZrtG85vmyw-fjOXGB_6mL1gn_tdCBihcC7xTpO7ttR4XefPnUQPhMB6N1plIHgu14wtuIy8PUwZ7jNQ/s1600/Actresses-who-were-Pregnant-before-Marriage-1583.jpg

என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

‘‘உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!’’ என்றாள்.

‘‘சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல்
இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம்
உள்ளது காதல்.

என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி
அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய்.
மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை  எனக்கு.

என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில்,
நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தியைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?’’ என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன்
நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில்
அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை,
பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச்
செல்கிறேன்’’ எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.

அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!’’

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என்
குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.

- வெளியான தேதி: 28 மே 2006


http://i.ytimg.com/vi/fOnfqEy5JNo/0.jpg

பாத்ரூம் மேட் 3 ஷா கும் கும் பேட்டி @ விகடன் - கிடா வெட்டு

"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiexysn0BNlnDsLeqxS3fs-BbUbx56n69WjeSwQFzVsC3ds93ARbsUcN8FTMjdpTXW8CKqCB1XH6d9oY6Ra5Ot1U35EzBtf59xkwda3pliADQCcH_FyPyi3jyiHvgmMxYdRCOOf5rGNdHM/s1600/Trisha%252Bhot%252Bphotos%252B%2525289%252529.jpg 
ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

நா.கதிர்வேலன்
'த்ரிஷாவுக்குக் கல்யாணம்... கன்ஃபர்ம்!’ - இண்டஸ்ட்ரி வதந்தி. த்ரிஷாவிடமே கேட்டுவிடலாமே!


சி.பி - என்னமோ இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சு ஏய்ய்ய்ய்.-னு கொண்டாடுற மாதிரியே இருக்கே?






    ''எப்போ கல்யாணம்?''


சி.பி - டைவர்ஸ்க்கு  2 மாசத்துக்கு முன்னாடி  ஹி ஹி 



''கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? நாளாக நாளாக எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்குது. இன்னும் நிறையப் படம் பண்ணணும், நல்ல நல்ல கேரக்டர் பண்ணணும்னு ஆசையா இருக்கு. அதனால இப்போ கல்யாணம் இல்லவே இல்லை. ஆனா, நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!''



 சி.பி - பாப்பா , இப்பவே உனக்கு 39 வயசு ஆகுது, >>> நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!'' நிச்சயம் மட்டும் பண்ணிக்கிட்டா மேரேஜ் எப்போ?


http://cdn3.supergoodmovies.com/FilesFive/trisha-hot-stills-58081ec2.jpg


''சரி... யாரைக் கல்யாணம் பண்ணிப்பீங்க?''



சி.பி - சத்தியமா உங்களை இல்லையாம். கிளம்புங்க காத்து வரட்டும் 



''ம்ம்ம்... ஓ.கே... என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு. அது உண்மை. ஆனா, இப்போ இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். இப்பவே பல விஷயங்களைப் பேசினா, அது ரொம்ப சீக்கிரமாப் பேசுற மாதிரி இருக்கும். சில விஷயங்கள் என் மனசுக்குள் இருக்கு. இன்னும் தெளிவா சொல்லணும்னா, சில விஷயங்களில் எனக்கே கொஞ்சம் தெளிவு தேவைப்படுது. நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்!''




சி.பி - ஆமா, நீங்க எதையும் மறைக்க மாட்டீங்கன்னு  அந்த வீடியோ மூலம் தெரிஞ்சுக்கிட்டோம்.. 


''தெலுங்கு நடிகர் ராணாவும் நீங்களும் எந்த அளவுக்கு நெருக்கம்... உங்க ரெண்டு பேரையும்தான் விடாமத் துரத்துது வதந்தி...''


 சி.பி - எந்த அளவுக்கு நெருக்கம்...னு அவங்க  டீட்டெயிலா சொல்லத்தயாராம், ஆனா டக் இன் சர்ட் பண்ணி இருக்கும் உங்க சர்ட்டை எடுத்து வெளீல விட வேண்டி இருக்குமாம், பரவாயில்லையா? 





''10 வருஷமா நாங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். தி.நகர்ல அடுத்தடுத்த வீட்ல இருக்கோம். யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, எதையும் அவர்கிட்ட என்னால ஷேர் பண்ணிக்க முடியும்.



 சி.பி - அட, என்னங்க 10 வருஷமா திக் ஃபிரண்ட்சாவே இருந்தா எப்படி? சட் புட்டுனு அடுத்த கட்டத்துக்கு வாங்க..


http://lh5.ggpht.com/_3LfhE9l2pEM/S1VeKjg1hRI/AAAAAAAAFkk/x2VdO4QvG7M/Trisha%2520Spicy%2520Hot%2520Sexy%2520Photo%2520(6)%255B5%255D.jpg



என்னைப் பத்தி அவருக்கு எல்லாமே தெரியும். எனக்கும் அவருக்கும் நல்ல வேவ்லெங்த் இருக்கு.


சி.பி - ரொம்ப லெங்க்த் போல 




என் கேங்கும் அவர் கேங்கும் சேர்ந்து இப்ப ரொம்பப் பெரிய கேங்க் ஆகிட்டோம்.


 சி.பி - அதாவது க்ரூப் ஸ்டடி மாதிரி க்ரூப் சரக்கு அடிச்சு க்ரூப் மட்டை ஆகி க்ரூப்பா போலீஸ்ல மாட்டறது?



கிட்டத்தட்ட 10 வருஷமா சேர்ந்தேதான் வளர்ந்தோம்.



சி.பி - சேர்ந்தே வளர்ந்தீங்களா? அப்போ அண்ணன்  தங்கச்சி முறை ஆகுதுன்னு அண்ணன் கழடி விட்றப்போறாரு கபர்தார்



ஆனா, இப்போதான் நாங்க சேர்ந்து சாப்பிட்டாக்கூட நியூஸ் ஆகிடுது. அவர் சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவரோட நான் இப்ப இருக்குற மாதிரிதான் பழகிட்டு இருக்கேன். ஆனா, இப்போ அதை ஸ்கூப் நியூஸ் மாதிரி சொல்றாங்க. தெலுங்கு சினிமாவின் லெஜன்ட் ராம்நாயுடு சாரோட பேரன் ராணா. ஆனா, அந்தக் குடும்பத்தின் எந்த அடையாளமும் இல்லாம ரொம்ப ஈஸியா இருப்பார். ராணாவை நான் நம்புற மாதிரியே, அவரும் என்னைப் புரிஞ்சுட்டு இருக்கார்.''




''உங்க பாலிவுட் என்ட்ரி எதிர்பார்த்த வெற்றி அடையலையே, ஏன்?''





''என்னை சினிமாவுக்குக் கொண்டுவந்தவர் பிரியதர்ஷன் சார். அவரோட ஒரு இந்திப் படத்தில் வேலை பார்க்கக் கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டேன். அப்போ எனக்கு அங்கே கொஞ்சம் நண்பர்கள் கிடைச்சாங்க. அவ்வளவுதான். மத்தபடி அடுத்தடுத்து பாலிவுட் படம் நடிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அங்கே ஜெயிக்க அங்கேயே தங்கி இருக்கணும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கே இப்படி நான் இருக்கிறதே எனக்குப் போதும்!''


http://www.cinetara.in/photos/files/2012/2012/05/07/13836/trisha-hot-in-dammu_005.jpg



''உங்களுக்கும் நயன்தாராவுக்கும் ஏதேதோ பிரச்னைனு சொன்னாங்க. ஆனா, இப்ப திடீர்னு நீங்க நெருக்கமாகிட்டீங்கபோல?''

சி.பி - ஆமா 2 பேரும் தீபா மேத்த டைரக்ட் பண்ணீன படங்கள் எல்லாம் வரிசையா பார்த்திருக்காங்க.. அதுல அண்டர்ஸ்டேண்டிங்க் ஆகி அண்டர்வெட் ஆகிடுச்சாம். 




''அப்படி ஒண்ணும் எங்களுக்குள்ள பெரிய சண்டை எதுவும் இல்லை. சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணிட்டாங்க.



சி.பி - அடடா, சைஸ் மாத்தி குடுத்துட்டாங்களா? 


அந்தச் செய்தி மேலும் மேலும் டெவலப் ஆகாம நாங்களே ஃபுல்ஸ்டாப் வெச்சிட்டோம். பழகினா நயன் மாதிரி ஒரு ஃப்ரெண்ட்டைப் பார்க்க முடியாது. இனி நாங்க எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்!''



http://voteji.com/wp-content/uploads/2009/01/trisha-8.jpg A



நன்றி - விகடன்

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 2

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலரும் பல பதிவுகள் போட்டுட்டு வர்றாங்க. நான் படிச்ச 16 பதிவுகள்ல  4 பேர் மட்டும் விழாவில் பதிவர்கள் அறிமுகம் பகுதில நானும் , கேபிள் சங்கரும்  மற்றவர்களை ஓவராய் கலாய்த்ததாகவும், அது பெண்களுக்கு பிடிக்காது எனவும், தனிப்பட்ட முறையில் பதிவர்களை கலாய்ப்பது  தவறு எனவும் சொல்லி இருக்காங்க.. 



 அவங்களை நினைச்சு சிரிப்புதான் வருது,. நரசிம்ம ராவ் மாதிரியோ, மண் மோகன் மாதிரியோ அறிக்கையை பார்த்து படிச்சா தூக்கம் வந்துடும். இதெல்லாம் ஜாலிக்கு.  தருமன் கண்ணுக்கு எல்லாமே நல்லதா தெரியும்.. துரியோதணன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதா தெரியும். அதுக்கு மனசை பக்குவப்படுத்திக்கனும்.. 

  மேடையில் இருந்தவாறே நாங்க 2 பேரும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை கவனிச்சுட்டுதான் இருந்தோம்.. அப்படி யாரும் ரசிக்காம இருந்த மாதிரி தெரியல.. பெண்கள் அதை ரசிச்சிருக்க மாட்டாங்க என்பதும் கற்பனையே? ஏன்னா  4 பதிவர்களிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்ட போது அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்றே சொன்னார்கள். மேடையில் அமர்ந்த படி எஸ் எம் எஸ் மூலம் அவ்வப்போது நான் கருத்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.. அவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஃபாலோ பண்ணிட்டுதான் இருந்தேன்..


 இதுல இன்னொரு விஷயமும் சொல்லிக்கறேன். 150 பதிவர்கள் தங்களை அறிமுகம் பண்ணிக்கிட்டாங்க.. அதுல நான் கலாட்டா செஞ்சது மொத்தம் 16 பேரை மட்டுமே. தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்கள் பழக்கம்.. அதே போல் அப்படி கிண்டல் அடிக்க எனக்கு உரிமை உள்ளது. அதே போல் கேபிள் சங்கர் கலாட்டா செய்தது மொத்தம் 7 பேரை மட்டுமே.



டி வி சீரியல்கள் பார்த்து பார்த்து தமிழர்கள் பலர் உம்மணாம்மூஞ்சிகளாக மாறி வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கு.. அவர்கள் மன நலம் அடைந்து சிரிச்ச முகமாக மாற இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.குறை சொல்லி எழுதிய மற்ற பதிவர்கள் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை.. ஆனா ஜாலி டைப்பான பலா பட்டறை சங்கர் கூட  அது போல் ஒரு கருத்தை சொன்னது ஆச்சரியமா இருக்கு


இதை விட காமெடி இன்னொரு அதி புத்திசாலி பதிவர்  12 பக்கம் ஏ 4 ல வர்ற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார்.. அதனோட சாராம்சம் பதிவர் அறிமுக நிகழ்ச்சி தேவை அற்றது . 2 மணி நேரம் வீண் என்றார். பதிவரை பற்றித்தான் நமக்கே தெரியுமே? டெயிலி பதிவு வாசிக்கிறோமே என்றார்.


அவருக்கு என் பதில் இணைய  தளங்கள் 1000க்கும்  மேல் இருக்கு. அதில் நாம் ரெகுலரா பார்ப்பது ஒவ்வொருவரும் குறிப்பிட்ட 20 பதிவுகள் தான். எத்தனையோ பதிவுகள் விடுபட்டிருக்கும். தெரியாமல் இருக்கும். 2 வருடங்கள் வலை உலகில் இருக்கும் எனக்கே இதுவரை சென்னை பதிவர் சந்திப்பில் வந்த பதிவர்கள் பாதிப்பேர் தெரியாது. ( இந்த லைனில் எனக்கே என்ற வார்த்தையில் தலைக்கனம் இல்லை ) அப்படி இருக்க புது ஆட்களுக்கு யாரை தெரியும்.. இந்த சந்திப்பின் மூலம் பலரும் பலரை அறிய வாய்ப்பு.. அவ்ளவ் தான்.


புதிய தலைமுறை வார இதழில் இருந்து  ஒரு மேடம் வந்திருந்தாங்க. அவங்க சொன்ன அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதா இருந்தது. அதாவது ஆனந்த விகடன் இதழ்ல என் விகடன் புக்ல வாரா வாரம் வலை ஓசை பகுதியில் ஒரு பதிவரை அறிமுகம் செய்வது போல் புதிய தலைமுறை வார இதழில் அனைத்து பதிவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள்.

அதற்காக துறை வாரியாக அதாவது இலக்கியம், சமையல்
, சமூகம், கவிதை, சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம் இப்படி இயங்குபவர்கள்  அந்தந்த பிரிவை குறிப்பிட்டு மெயில் ஐ டி வலைத்தள முகவரியை ஒருங்கிணைத்து தரச்சொன்னார்கள்

இது நல்ல வாய்ப்பு, அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்
 1.30 மணிக்கு லஞ்ச்..  அறிவிச்ச பின்னும் பாதிப்பேர் சாப்பிடப்போகாம வந்த பதிவர்களுடன் அளவளாவிப்பேசிக்கொண்டிருந்தது அவங்க ஆர்வத்தை காட்டுச்சு.


 சைவ விருந்து , வெஜிடபிள் சூப், மைசூர் பாக், கோக், இட்லி, தோசை ,பூரி . இதுதான் மெனு. எல்லாரும் ஒரு வெட்டு வெட்டிட்டு மீண்டும் மேடைக்கு வந்தோம்.. ஷாக் சர்ப்பரைஸ் என்னன்னா பி கே பி சத்தமே இல்லாம மேடைல அமர்ந்திருந்தார்.. வழக்கமா வி ஐ பி ங்க வந்தா உடனே மேடைல உக்கார வைக்க மாட்டாங்க.. மைக்ல பில்டப் கொடுத்து அப்புறமா தான் உக்கார வைப்பாங்க.. ஆனா இவர் சோ சிம்ப்பிள்.. மேன்..



 கவியரங்கம் நடந்தது.. இதுல பிரபல ட்விட்டரும், பாடல் ஆசிரியருமான சுரேகாவின்  ஆளுமை வெளிப்பட்டது.. அருமையான பேச்சு. அழகான மொழி நடை.. அங்கதம் என மேடையில் கலக்கினார்.. அவரது பேச்சும், அறிமுகமும், கவிஞர்கள் கவிதையும்  டைப் பண்ண 3 மணி நேரம் ஆகும் என்பதால் அது அடுத்த பாகத்தில். 


 அடுத்து பி கே பி பேச வந்தார்






அவர் நல்ல மேக்கப்பில் இருந்தார்.. மிக இயல்பாக பேசினார்..

வலைப்பதிவர்களின் விழா சென்னையில் இவ்வளவு பெரிய முறையில் நடப்பது இதுவே முதல் முறை. பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் கலந்து கொண்டதும் அதுவும் நாள் முழுதும் அமர்ந்து கேட்டதும் விழாவின் வெற்றி என  நினைக்கிறேன்

Photo


விழாவுக்கு என்னை அழைத்த போது மின்னல் வரிகள் கணேஷ், “  நீங்கள் பேசும் நேரம் இருந்தால் போதும், பிறகு  நீங்கள் கிளம்பிக்கலாம்என்று தான் சொன்னார். ஆனால் அது சபை நாகரிகம் அல்ல; அந்த பகுதி முழுமைக்கும் நான் இருப்பதே நல்லது; நானும் ஒரு வலைப்பதிவர் தான். அதனால் முழுதும் இருக்க விரும்பினேன். அனைத்தையும் சந்தோஷமாக நீங்கள் பேசுவதை ரிசீவ் செய்து கொண்டிருந்தேன்.
தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகத்தை நான் வெளியிட்டேன். அது பற்றி சிறிதேனும் பேசுவது தான் முறை என சில நல்ல கவிதைகளை குறிப்பிட்டு இப்பகுதியில் பேசினார்





லஞ்சம் 



பலூன் விற்பவன்
பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ..
வாங்கிய சட்டையின் விலை இருபது
பிறந்த குழந்தை
ஆணா பெண்ணா என
தெரிந்து கொள்ள கொடுத்த விலை ஐநூறு .


கோபம் வரத்தான் செய்கிறது

குடுமி பிடித்து
மண்ணில் உருண்டு புரண்டு
சண்டையிடும்
மழலைகளை காணும் போதெல்லாம்
கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது .
என்னோடு சண்டையே ..
போட்டிராத அக்காவின் மேல் .


என் அன்பைப்போல !

எவர் தடுப்பினும்
நடுவழியிலேயே
நின்றுவிடப்போவதில்லை மழை
உன் மீதான என் அன்பைப்போல !



தென்றல் கவிதை புத்தகம் வெளீயிடுபவர்  பி கே பி , பெறுபவர் சேட்டைக்காரன் அண்ணன், அருகில் கவிதாயினி சசிகலா



முதலில் கையெழுத்து பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக தான் இன்றைய வலைப்பூவை பார்க்கிறேன்

நாங்கள் எழுதிய போது பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு எப்போது பிரசுரம் ஆகும் என காத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து " உங்கள் படைப்பை பிரசுரம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் " என கடிதம் வரும். ஆனால் நீங்கள் காத்திருக்க தேவையின்றி உங்கள் படைப்புகளை வெளியிடுகிறீர்கள். ஆயிரக்கணக்கானோர் உடன் வாசித்து கருத்துக்கள் சொல்கிறார்கள்

விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்துள்ளது ! எலக்ரானிக் யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் ! அந்த காலத்தில் போன் பேசவே டிரன்க் கால் புக் செய்து பேசணும் ! அதுக்கு எட்டு பேர் காத்திருப்பாங்க. இப்போ எந்த அளவு வளர்ந்துட்டோம் !



வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !
\
கேபிள்சங்கர், வீடு திரும்பல் மோகன், சி பி


இப்போ வலைப்பூ என்பது தவிர்க்க முடியாத சக்தி ஆகிடுச்சு. இப்போ புதுசா ஒரு பத்திரிக்கை தொடங்குனா  அதுல கண்டிப்பா வலைப்பூ  பக்கங்கள்னு ஒதுக்கியே ஆக வேண்டிய கட்டாய சூழல் இருப்பதை நான் பார்க்கிறேன்.. உல்லாச ஊஞ்சலில் கூட கேபிள் சங்கரை எழுத வைத்தேன்.. அவரும் 17 வலைப்பூக்கள் பற்றி அறிமுகம் செய்தார்.. 


அட்ராசக்க நீண்ட நாள் வாசகரும்,ஆத்ம நண்பரும் ஆன கும்பகோணம் பேராசிரியர் உடன் ஒரு அழகிய சந்திப்பு


உங்கள் சினிமா விமர்சனங்கள் திரை உலகினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பத்திரிக்கையில் விமர்சனம் வர தாமதம் ஆகும். உங்கள் விமர்சனம் தான் முதலில் வாசிக்கிறார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றோரின் விமர்சனம் அனைத்து இயக்குனர்களும் வாசிக்கிறார்கள்.

சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள். கண்ணதாசன் இன்றளவும் நினைவு கூறப்படுவது அவர் எழுத்தால் தான். அவர் வாழ்க்கையில் பல்வேறு முறை தடுக்கி விழுந்தார். இன்று யாரும் அதை பற்றி பேசவில்லை.அவர் எழுத்துக்களால் நிலைத்து நிற்கிறார் !


பத்திரிக்கைகளுக்கு தணிக்கை உண்டு. எழுத்தாளர்கள் படைப்புகளை எடிட் செய்து தான் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஆனால் ப்ளாகில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எனவே வெளியிடுவோர் தான் எச்சரிக்கை ஆக இருந்து தேவையற்றவற்றை தவிர்க்க வேண்டும்.


வலைப்பூவை எளிதில் எடுத்து கொள்ளாதீர்கள். அங்கு தெரிவது ஒரு மனிதனின் பெர்சனாலிட்டி. உங்கள் முகம், உங்கள் சுயம் அதில் தெரிகிறது. நீங்கள் யார் எத்தகையவர் என ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்துகிறீர்கள். அதை நினைவில் கொண்டு எழுதுங்கள்.


Unparliamentary
வார்த்தைகள் , அல்லது விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !  





சினிமா விமர்சனம் முக்கியம் தான் எனினும் எல்லாரும் அதை எழுத வேண்டும் என்பது இல்லை. சினிமா பற்றிய அறிவும் ரசனையும் உள்ளவர்கள் அதை எழுதினால் நல்லது.விமர்சனத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.


சினிமா விமர்சனம் எழுதியே ஆகனும் என்பதற்காக யாரும் அப்படி எழுதிட்டு இருக்காதீங்க.. வேறு பல விஷயங்கள் எழுத இருக்கு..



பதிவுலகின் ஒரு சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் பேச அதை ரசிப்பவர் இன்னொரு சூப்பர் ஸ்டார் கேபிள் சங்கர் 


வலைப்பூவில் படித்த ஒரு குட்டிக்கதையை இங்கே பகிர்ந்து என் பேச்சை நிறைவு செய்கிறேன்... “ஒரு டிபார்ட்மெண்ட்டர்ல்  ஸ்டோர்,, அங்கே ஒரு கஸ்டமர் வந்து அரைக்கிலோ பட்டர் வேணும்னு கேட்றார். சேல்ஸ்மேன் சொல்றார். சார், எங்க கிட்டே ஒரு கிலோ பட்டர் பாக்கெட் தான் இருக்கு.. பேக் பண்ணினது.. அதை பிரிக்க முடியாது, அது பேக் பண்ணி இருக்கு.

 யோவ்,.. நான் கஸ்டமர்.. நான் சொல்றதுதான் வேணும். என்னை சேட்டிஸ்ஃபை பண்றதுதான் உன் வேலை .. உன் கிட்டே என்ன பேச்சு? நான் ரெகுலரா இங்கே வந்து  அரை கிலோ தான் வாங்கிட்டு இருக்கேன். நீ மேனேஜர்ட்ட போய் கேளு


 சேல்ஸ் மேன் உடனே  மேனேஜர் கிட்டே போய்  “ சார், இங்கே ஒரு லூஸ் , மெண்டல் , சாவு கிராக்கி வந்து   பட்டர் பாக்கெட்ல லூஸ்ல கேட்குது சார்.. “

 இப்படி சொல்லிட்டு இருக்கும்போது திடீர்னு கஸ்டமர் அங்கே வந்துட்டார்.. 

 இப்போ  2 பேருக்கும் அதிர்ச்சி.. கஸ்டமரை லூஸ்னு சொல்லியாச்சு,.. என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியல.. 

 உடனே அந்த சேல்ஸ் மேன் ஸ்மார்ட்டா   ரிப்ளை பண்ணான்.. ” ஆனா இந்த ஜெண்டில்மேன் அரைக்கிலோ வாங்கிக்கறேன்னு சொல்றார் சார்.. “ என சமாளிச்சார்


 உடனே மேனேஜரும் “ அப்புறம் என்னய்யா? அவருக்கு அரைக்கிலோ பிரிச்சு குடுத்துடு” என்றார்


 கஸ்டமர் போனதும் மேனேஜர் அந்த சேல்ஸ்மேனை தனியா அழைச்சு “ வெரிகுட்யா.. நீ கஸ்டமரை நக்கல் அடிச்சே, கமெண்ட் பண்ணினே.. ஆனா கஸ்டமர் வந்ததும் டக்னு சமாளிச்சியே,  நீ எந்த ஊருப்பா? 

 மெக்சிகோ சார்.. மெக்சிகோ தெரியுமில்ல சார்? ஃபிட்பால்  மேட்சுக்கு பேர் போன  இடம்.. அது போக  பிராஸ்டிடியூட்க்கும் பேர் போன இடம் “

 உடனே மேனேஜர் செம காண்ட் ஆகி “ யோவ், என்னை நக்கல் அடிக்கறியா? என் சம்சாரம் கூட மெக்சிகோ தான் “

 உடனே சேல்ஸ் மேன் டக்னு “ஓஹோ அவங்க அந்த ஃபுட் பால் டீம்ல இருக்காங்க சார்? 


 என்றானாம்.. அதுலயும் அவன் தன்னோட ஸ்மார்ட்னெசை காண்பிச்சுட்டான்.. 

 அது மாதிரி உங்க  வலைப்பூவை எல்லாரும் வாட்ச் பண்ணிட்டுதான் இருக்காங்க என்ற உணர்வுடன் ஸ்மார்ட்டாக நடந்துக்குங்க.. வாழ்த்துகள்.. “















a
“படங்கள் உதவி வீடு திரும்பல் மோகன்