Showing posts with label சிம்பு. Show all posts
Showing posts with label சிம்பு. Show all posts

Friday, May 27, 2016

இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்


நயன் தாரா கூட ஊடல், நிஜ வாழ்வில் தாலி கட்ட வாய்ப்பிலை, பார்த்தாரு சிம்பு, சொந்தப்படம் எடுப்போம் , படத்துலயாவது தாலி கட்டுவோம்னு முடிவு பண்ணாரு. அதான் இது நம்ம ஆளு


ஹீரோ ஹீரோயினை பொண்ணுப்பார்க்கப்போறாரு. பார்த்ததும் ஓக்கே ஆகிடுது.பொதுவா பொண்ணுங்க நம்ம வாயைப்பிடுங்கி எதுனா போட்டு வாங்குவாங்க,    அந்த ஃபார்முலா படி  மாப்ளை கிட்டே பொண்ணு உங்க பழைய லவ் எதுனா இருக்கா?னு கேட்குது.

 ஹீரோ ஒரு லவ் பற்றி சொல்றாரு, ஃபிளாஸ்பேக்.

ஹீரோயின் பற்றி விசாரிக்க ஹீரோ ஃபிரண்ட் ஒரு டிடக்டிவ் வைக்கறாரு. அது தெரிஞ்சு ஹீரோயின் கடுப்பாகிடுது. இவங்க ஊடல் என்னாச்சு? ஹீரோ யாரைக்கல்யாணம் பண்ணாரு என்பதுதான் மிச்ச மீதி கதை


 படத்தின் முதல்  ஹீரோ வசன கர்த்தா தான் . பிரமாதமான கவுண்ட்டர் டயலாக்ஸ், ஷார்ப்பான் கவுண்ட்டர்ஸ், 10 பேர் கொண்ட குழு தான் இப்டி எழுதி இருக்க முடியும்.


ஹீரோவா சிம்பு. 3 விதமான கெட்டப் , 3 ஜோடி . இப்பவெல்லாம் ஒரு ஜோடியோட நடிச்சா யாரும் ஹீரோவை மதிப்பதே இல்லை. டிரஸ்ஸிங் சென்ஸ்  பக்கா . வழக்கமா அவர் செய்யும் விரல் சேட்டைகள் எல்லாம் இல்ல. பக்கா ஜெண்ட்டில்மேன் லுக்,  ஐ டி கம்பெனி ஒர்க்கர் போலவே தோற்றம் டீசண்ட், டான்ஸ் ஸ்டெப்பில் இன்னும் கலக்கி இருக்கலாம்.



ஹீரோயினா மேல் உதட்டு மச்ச அழகி , அஞ்சே முக்கால் அடி உச்ச அழகி நயன் தாரா, காதலிக்க இவருக்கு சொல்லியா தரனும் . அதுவும் ஆல்ரெடி காதலிச்சவரை காதலிப்பது போல் நடிக்க 2 கோடி சம்பளம். இதுவல்லவா வாழ்க்கை? பட்டாசைக்கிளப்பி இருக்கார் .


2 வது  ஹீரோயினா ஆண்ட்ரியா. சிம்பு அருகே க்ளோசப்  காட்சிகளில் இன்னும் யூத்தா காட்டிக்க மெனக்கெட்டிருக்கலாம். ஆண்ட்டி போல் இருக்கார் .

சூரிதான் காமெடி , நீண்ட இடைவெளிக்குப்பின் செம ஒர்க் அவுட். இவர்து ஒன் லைனர்களுக்கு சந்தானம் காமெடிக்கு இணையான்  கைதட்டல்கள்


 சந்தானம் கெஸ்ட்  ரோல்.  பெரிதாக  எடுபடவில்லை. இன்னும்  போர்சன் கொடுத்திருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் அப்பா கேரக்டர்கள்  நல்ல குணச்சித்திர நடிப்பு . வெல்டன்.


இசை  டி ஆர் குறளரசன். 2 பாட்டு செம ஹிட்டு . பிஜிஎம்  நீட்.


பாண்டிராஜ்  திரைக்கதை வசனம் இயக்கம்.  குட்.

க்ளைமேக்சில் உங்க 2 பேரையும் வெச்சு படம் எடுத்து முடிப்பதற்குள்  ஷப்பா என புத்திசாலித்தனமான ரியலிஸ்டிக் டயலாக்


நச் டயலாக்ஸ்

GOD மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ CARD மேல CREDIT CARD மேல நம்பிக்கை இருக்கு # இ ந ஆ

2 ஏன் என்னையே பாத்துட்டு இருக்கீங்க?



பார்க்கற மாதிரி இருக்கறதால # இ ந ஆ


3 கவுச்சி பிடிக்கும்னு சொன்னேன்.ஆனா கவர்ச்சி பிடிக்கும்னு சொல்லலையே?# இந ஆ

4 மடியற பிகருங்களை கடவுள் உனக்காக படைச்சதா நினைச்சுக்கோ.மடியாத பிக்ரை மத்தவங்களுக்காக படைச்சதா நினை


5 நயன் = தம் அடிப்பீங்களா?
சிம்பு.= எனக்கு வேணாம்.நீங்க வேணா அடிங்க

6 நம்ம கிட்டே இருந்து வாந்தியும் நம்மைப்பத்தி வதந்தியும் எப்பவும் வரவே கூடாது # இ ந ஆ


7 சிம்பு டூ சூரி = எவன் எவனோ நடிக்கறான்.நீ நடிச்சா என்ன குத்து

8 லவ் பண்ணப்போறேன்


எத்தனை நாளுக்கு?
பார்ட் டைமா?புல் டைமா?


வாட்?

லைப் டைம் # இ ந ஆ

9 லவ் பண்றது கஷ்டம் இல்லை.கஷ்டம் இல்லைன்னா லவ்வே இல்லை # இ ந ஆ

10 வாழ்றான்யா.1 போனா 1 வருது .1 வந்தா 1 போகுது # இ ந ஆ


11 இம்மீடியட்டா இம்ப்ரெஸ் ஆகனும்னு எதிர்பார்க்கறீங்களா?

12 சில குடும்ப குத்து விளக்குங்க புது நெம்பர் வந்தா எடுக்க மாட்டாங்க

13 பொண்ணோட ஜடையை வெச்சே அவ ஜாதகத்தையே சொல்றவன் நான்.எங்கப்பா பொண்ணோட நடையை வெச்சே # இந ஆ


14 இவ தான்னு ஹார்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டா எவ வந்தாலும் கேட்டுக்கு வெளியே தான்


நாங்கெல்லாம் பூட்றதே இல்ல
யார் வேணாலும் வரலாம் போலாம்,ஓப்பன் #இந ஆ--

15 நீங்க அழகா இருக்கீங்கன்னு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்க , பட் உங்கள நான் அழகு -னு சொல்ல மாட்டேன்

ஆனா அவங்க சொல்றது accept பண்றேன் #இந ஆ

16 நாம யாருக்காச்சும் கொடுத்தோம்னு தான் இருக்கனும்.
நாம யாரையும் கெடுத்தோம்ன்னு
இருக்க கூடாது.#இந ஆ

17 காம்பினேசன் நல்லா இருக்கும்ன்னு பார்த்தா . இவ

டாமினேசன் அதிகமா இருக்கும் போலயே # இ ந ஆ


18 நீங்க ரொம்ப நல்லவங்க தான் ப்ரதர்.எல்லாரும் 2 ,3 லவ் பண்றாங்க
ஆனா நீங்க எதையும் மறைக்கிறதில்ல
உங்க கட்ஸ் எனக்கு புடிக்கும் # இ ந ஆ

19 டியர், நமக்குக் கல்யாணம் ஆன பிறகு என்னை எங்கே கூட்டி போகப் போற?
பெட்ரூம்க்கு தான்..# இ ந ஆ


20 உன் பக்கத்துல நான் இருந்தா என்ன பண்ணுவ.?



அப்படியே கட்டிப்புடிச்சு.....
டேய்,இது யு சர்ட்டிஃபிகேட் படம் ஏ சர்டிஃபிகேட் ஆக்கிடாதீங்கடா # இ ந ஆ


21 என்னப்பா, இவ எஸ் ஜே சூர்யா பட ஹீரோயின் மாதிரி இருக்கா? # இ ந ஆ



22 பாத்ததுக்கே ஒரு புல் அடிச்சது போல் இருக்கே?





கல்யாணத்துக்குப்பின் பாரு.பேய் அடிச்சது போல் இருக்கும் # இந ஆ


23 நயன் = எத்தனை பேரைடா லவ் பண்ணுவே?


சிம்பு = முதல்ல நீங்க நிறுத்துங்க # அப்ளாஸ் டயலாக்


24 நானும் எத்தனை நாள் தான் வெர்ஜினாவே சுத்திட்டு இருக்க?# இ.ந ஆ



25 டேய்.நானே கடுப்புல இருக்கேன்
அதைக்கொஞ்சம் விடுப்புல அனுப்பு


26 கில்மா பிகருக்கு இவ்ளோ பில்டப்பா? # இந ஆ



27 ஏண்டி உன் பக்கத்துல ஏதோ ஸ்வீட் வாய்ஸ் கேட்குதே யாரு?
அடேய்.அது எங்க அம்மா டா
FRONT டை கவர் பண்ணச்சொன்னா பேக்கை கவர் பண்றான் # இ ந ஆ


28 ஓல்டு லேடின்னு நினைச்சேன்.கோல்டு லேடியா இருக்கு # இந ஆ


29 மாப்ளை வெட்கப்படறாரு போல
பார்யா.வந்துட்டாரு ஆர்யா # இந ஆ




30 எப்டியாவது கோல் போடனும்
உணர்ச்சிவசப்படாத.கூல் # இந ஆ


31 நீ இவளை லவ் பண்ண 2 காரணம். 1 உன் பருவம் 2 அவ புருவம்.அவளோட புருவம் உன் முதல் காதலி புருவம் போலவே # இ ந ஆ



32 நீ ஏன் விளம்பரத்துக்கு அலையறே?
ஈசியா ரீச் ஆகிடலாம் இல்ல ?# உள் குத்து வசனம்

33 சொன்னா கேளுங்க.எனக்கு நடிப்பு வராது.அதுக்குன்னு நிறையப்பேரு இருக்காங்க

34 ஓசி ல வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?



35 தேடி வர்ற பிகரை விடறதும் தப்பு.
விட்டுட்டுப்போன பிகரை தேடிப்போறதும் தப்பு # இ ந ஆ பென்ச் மார்க் டயலாக்



36 ஏன் போன் கட் பன்றே?
என்னை ஹர்ட் பன்ற மாதிரி பேசினா? # இந.ஆ



37 என்ன நினைச்சே இப்போ?
நான் என்ன சொல்லனும்னு நினைச்சியோ உன் மனசில அதையே தான் என் மனசில் நினைச்சேன் # இந ஆ


38 இதுக்கெல்லாம் நான் FEEL பண்றதா இருந்தா நான் எப்பவோ செத்திருக்கனும் - சூரி # இந ஆ


39 பொதுவா பசங்க எப்போ பிகரை கழட்டி விடலாம்னு தான் யோசிப்பாங்க # இ ந ஆ



40 உனக்கு ஏற்கனவே ஒரு ப்ரியா
அவளுக்கு ஒரு ஆர்யா.அவ்ளோதாண்டா # இந ஆ



41 ஆடி மாசம் கோடி பாசம்
புதுசு புதுசா பழமொழியை உருவாக்காதீங்கடா # இந ஆ


42 ஒரு பொண்ணை மட்டும் லவ் பண்ணிட்டோம்னு வை என்ன பொழப்புடா இது ன்னு புலம்ப.விட்டுடுவாளுக # இந ஆ



43 என்னை நல்லா வெச்சு பார்த்துக்குவியா?
வெச்சுப்பேன்
டேய் # இந ஆ


44 நம்ம குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?



சுருதி ,ஐஸ்வர்யா ,ப்ரியா



ம்ஹூம் சிம்பு ,பிரபு ,தனுஷ் ,ஆர்யா
அடேய் 2 பேரும் அவங்கவங்க லவ்வர்ஸ் லிஸ்ட்


45 இவ என் கிட்டேதான் இப்டி பண்றாளா? இல்ல எல்லார்ட்டயும் இப்டித்தானா?# இந ஆ


46 பரதேசி கூட வேணா வாழ்ந்துடலாம்.ஆனா பிரைவசி இல்லாம வாழ முடியாது


47 எல்லாரும் என் லவ்வை வெச்சு காமெடி பண்றீங்க.இப்போ நீ சொன்ன மாதிரி நான் சொல்லி இருந்தா எப்டி நீ feel பண்ணுவே ?# இந ஆ

48
டேய்.என் கிட்டே நீ ரொம்ப உண்மையா இருக்கே.நான் அப்டி இல்லையோன்னு FEEL பண்ண வைக்கறே # இந ஆ



49 பொண்ணுங்க சாமி மாதிரி.சாமியை கும்பிடத்தான் முடியும்.



பின்னே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மியா அடிக்க முடியும் ?# இந ஆ


50 வண்டியை தூசு படாம பார்த்துக்கோ


அப்போ ஷோ ரூம்ல தான் வைச்சிருக்கனும் # இந ஆ


51 எல்லாருக்கும் லவ் பண்ற பொண்ணைக்கட்டிக்கும் பாக்யம் கிடைப்பதில்லை # இந ஆ



52 சம்பந்தி.உங்க சம்சாரம் தான் நீங்க லவ் பண்ணின முத பொண்ணுனு இப்போதானே சொன்னீங்க?
அது தண்ணி அடிக்கும் முன் சொன்னது #,இந ஆ



53 அடேய்.எமன் கைல லெமன் கிடைச்ச மாதிரி உன் கைல பொண்ணு கிடைச்சது # இந ஆ



54 கிஸ் அடிக்கறதுல நீ பிஹெச்டி முடிச்சவன் ஆச்சே.உனக்கு எதுக்கு கமல் பட ரெப்ரன்ஸ் ?# இந ஆ



55 ஜில்லுனு காத்து
நீ கொஞ்சம் ஜன்னலை சாத்து # இந ஆ



56 உன்னைப்பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது
எல்லாப்பொண்ணுங்க கிட்டேயும் இதே டயலாக் தாண்டா சொல்றீங்க? # இந ஆ






தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பயாலஜி மிஸ் பவித்ரா = DNA ரிப்போர்ட் என்ன சொல்லுது?



சினிமா ரசிகன்.=ஊரே INA ரிப்போர்ட் பாசிட்டிவ்னு சொல்லிட்டிருக்கு


2 இது நம்ம ஆளு =137 நிமிடம் # இன்னும் 6 நிமிசம் சேத்துனா 143 ,மேட்ச்க்கு மேட்ச் லவ் சப்ஜெக்ட்

3 குறளரசன் இன்ட்ரோ.அமைதி அடக்கம்.அடடே #,இ ந ஆ

4 சிம்பு டீசன்ட் லுக் நயன் சிம்ப்பிள் கிக் கேக்

5 முடியலையே பாட்டு சீனில் சிம்பு நயன் காஸ்ட்யூம் டிஸைன் பக்கா


6 ஆன்ட்ரியா இன்ட்ரோ அழகு


7 ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்ட போன்லெஸ் ராக்கெட் ஆன்ட்ரியா

8 பாண்டிராஜ் வசனம் எழுத ரொம்பவே மெனக்கெட்டு இருக்கார்.இடைவேளை வரை 70 நிமிடப்படத்தில் 38 ஷார்ப் டயலாக்ஸ் # இ ந ஆ


9 இது நம்ம ஆளு.இடை வேளை வரை ஓக்கே. முக்கோணக்காதல் கதை.போர் அடிக்காமல் சுவராஸ்யமாகப்போகும் திரைக்கதை.ஒன் லைனர்.வசனங்கள்.+

10 அஜித் ரசிகர் படத்தில் விஜய் ரெப்ரன்ஸ் - தெறி ஸ்டெப் போட வெய்ட்டிங்

11 இது நம்ம ஆளு ரொமான்டிக் காமெடி பிலிம்.ஹிட் என தகவல்.சிம்பு & ரசிகர்களுக்கு வாழ்த்து




சபாஷ் டைரக்டர்


1  திரைக்கதைக்கு  அதிகம் மெனக்கெடாமல்   சிம்பு வின் டைரியிலிருந்து சில பக்கங்கள் எடுத்துக்கிட்டது


2  சிம்பு - நயன் 2 பேரையும் எதுனா பேசுங்க என சொல்லி விட்டு அதையே ஷூட் பண்ணி 6 ரீல் எடுத்துக்கொண்டது


3   சிம்பு  நயன் தாரா வுக்கு தாலி கட்டும் சீன் வெச்சு சிம்புவையும்  அவர்  ரசிகர்களையும் விசில் அடிக்க வெச்சது

4  ஷார்ப்பான வசனங்கள் சமீபத்திய ஹிட்ஸ்
1 ஒரு கல் ஒரு கண்ணாடி ( 117)
2 பில்லா-2 ( 28)
3 இதுநம்ம ஆளு (63)



லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   ஆண்ட்ரியா அவ்ளவ் சின்சியரா லவ் பண்ணிட்டு அப்பா சொன்னதும் அசால்ட்டா விட்டு விடுவது நம்பும்படி இல்லை


2 பின் பாதி திரைக்கதையில்  நயன்  சிம்பு சம்பந்தப்பட்ட ஃபோன் உரையாடல்கள்  , எஸ் எம் எஸ்  அனுப்பும் காட்சிகள்   போர் அடிக்குது. இழுவை


3   க்ளைமாக்சில்  நயன் கை மணிக்கட்டில் கட் பண்ணி தற்கொலைக்கு முயல்வதாய் மிரட்டல் விடும் காட்சி அமெச்சூர்த்தனம்.இதெல்லாம் 1980 லயே பார்த்தாச்சு பாஸ்


4 சம்ப்ந்திகள்  இருவரும்  சரக்கு அடித்து விட்டு பேசும் காட்சியில்  பழைய காதல் பற்றி பகிர்வது செயற்கை. அருகில் கிச்சன்  ரூமில் மனைவியை வைத்து பேசுவது நம்ப முடியாதது.  அதை அப்போதே அவுட் செய்வதும் டிட்டோ ரகம். செயற்கை


5  திரைக்கதையில்  போடாபோடி,  சிவா மனசுல சக்தி  சாயல் இருப்பதை தவிர்த்திருக்கலாம்



சி.பி கமெண்ட் -இது நம்ம ஆளு - முன் பாதி காதல் காமெடி பின் பாதி கொஞ்சம் ஸ்லோ.வசனம் செம.இசை பக்கா. விகடன் =42 ,ரேட்டிங் = 3/5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)= 42


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= ok



Wednesday, September 02, 2015

‘இது நம்ம ஆளு’-மாமனார் டி ஆர் க்கும் ,மருமகள் நயன் தாரா க்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பாக்குது

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா

இது நம்ம ஆளு படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா
'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளில் நயன்தாரா நடித்துத்தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்து வருகிறார்.
'வாலு' வெளியீட்டு பணிகள் முடிந்தவுடன், 'இது நம்ம ஆளு' படத்தின் 2 பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு சார்பில் தெரிவித்திருந்தார்கள்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்திருக்கிறார். அப்புகாரில் டி.ராஜேந்தர் தெரிவித்திருப்பது, "என் மகன் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது.
‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் பேசினோம். இம்மாதம் (செப்டம்பர்) ஐந்து நாட்களும், அடுத்த மாதம் (அக்டோபர்) ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொண்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார்.
பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம். நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துத்தர தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும்.
நயன்தாராவிடம், சிம்பு ‘கால்ஷீட்’ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொருத்தவரை சிம்பு நடிகர்தான். அவர் மீது வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.” என்று அப்புகாரில் டி.ஆர் தெரிவித்திருக்கிறார்.


நன்றி -த இந்து

Sunday, August 23, 2015

'அச்சம் என்பது மடமையடா'. நாயகன் பாகம் 2?- கவுதம் மேனன் ஓப்பன் டாக்

'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு
கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியின் அடுத்த படம் காட்ஃபாதர் நாவலின் ஒரு பகுதியின் தழுவல் என இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' பட வெற்றிக்குப் பிறகு, கவுதம் மேனன், சிலம்பரசன் இணையும் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஒரே சமயத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் இத்திரைப்படத்தில், இரு மொழிகளிலும் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார். 75 சதவித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தைப் பற்றி பேசியுள்ள இயக்குநர், 'காட்ஃபாதர்' நாவலில் வரும் ஒரு வரி தான் இந்தப் படத்துக்கான அடிப்படை என்று கூறியுள்ளார்.
'காட்ஃபாதர்' உலகப் புகழ்பெற்ற நாவல். அதன் திரைப்பட வடிவமும் உலகம் முழுவதும் பிரசித்தம். 'நாயகன்', 'தேவர் மகன்', 'புதுப்பேட்டை', 'தலைவா', இந்தியில் 'சர்கார்' என ஏற்கனவே 'காட்ஃபாதர்' படத்தின் வெவ்வேறு வடிவங்களை இந்திய சினிமா கண்டுள்ளது. தற்போது அந்த பட்டியலில் 'அச்சம் என்பது மடமையடா' படமும் சேர்ந்துள்ளது.
படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில், நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார்.

Saturday, August 15, 2015

வாலு பிரச்சனையில் அஜித் ஏன் உதவவில்லை? விஜய் என்ன உதவி செய்தார்? - சிம்பு ஓப்பன் டாக்!

"ஒய் சோ லேட்டு..?
இதான் வந்துட்டோம்ல... அதான் மாஸ்!"
இந்த விளம்பரத் துண்டு ரீலில் அடங்கியிருக்கிறது, 'வாலு' ரிலீஸ் எதிர்கொண்ட பிரச்சினைகள், வழக்குகள், தடைகள்!
திரையரங்குகள் பஞ்சாயத்து, விஜய் உதவி, அரசியலில் களம் இறங்குகிறார் சிம்பு என பல்வேறு செய்திகள் வலம் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவை சந்தித்து பேசியபோது...
"மூன்று 3 வருடங்கள் கழித்து படம் ரீலீஸ். உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?"
"நான் என்னை கடவுள்கிட்ட கொடுத்துவிட்டேன். அவர் என்ன நினைக்கிறாரோ அப்படி நடக்குது. 3 வருடங்கள் சிம்புக்கு படங்கள் வெளியாகவில்லை, அவன் காலி, இனிமேல் எழுந்திருக்கவே முடியாது என்று நினைத்தார்கள். இப்போது என் படம் 'வாலு' ரிலீஸ். அதை வெளியிடுவதற்கும் வழக்கு, திரையரங்குகள் ஒப்பந்தம் என நிறைய பிரச்சினைகள் எழுந்தது.
மூன்று வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்தது என் ரசிகர்கள். அவர்களின் பாசத்துக்கு நான் எப்போதுமே அடிமைதான். இந்த பஞ்சாயத்து, வழக்கு என எதுவுமே இல்லாமல் இருந்தால் 'வாலு' எப்போதோ வெளியாகி இருக்கும். நான் எப்போதுமே மற்றவர்களுக்கு நிறைய உதவிகள் பண்ணியிருக்கிறேன். ஆனால், எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதைதான் இதுவரை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு புதுமுக இயக்குநரான விஜய் சந்தருடன் இணைந்து பண்ணியிருக்கிறேன். என்னை விடுங்கள், அவருடைய உழைப்பு, கஷ்டம் அனைத்துமே வீணாகி விடக்கூடாது. அதனால் 'வாலு' வெளியாகி வரை கூடவே நின்றேன்.
"தொடர் பிரச்சினைகள் வருவதால் அரசியலுக்கு வரப் போகிறீர்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறதே. உண்மையா?"
"அரசியலைப் பற்றி எனக்கு தெரியாது. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் தனியாக நின்று எதிர்கொள்வேன். அந்த தகவலில் உண்மை இல்லை."
"விஜய் எந்த வகையில் 'வாலு' படத்துக்கு உதவி செய்தார்..?"
"பணம் கொடுத்து விஜய் உதவி செய்யவில்லை. இப்படத்துக்கு வெளியீட்டில் பிரச்சினை எழுந்தபோது விஜய் தரப்பில் இருந்து பி.டி.செல்வகுமார் தான் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். இப்போதும் காலையில் இருந்து, இரவு வரை கூடவே இருந்து என்ன பிரச்சினை வந்தாலும் முடித்து கொடுத்து படம் வெளிவர உதவி செய்கிறார். அந்த வகையில் எனக்கு விஜய் அண்ணா செய்த உதவியை இன்றைக்கு அல்ல என்றைக்குமே மறக்க மாட்டேன்.
இன்னொரு உண்மையும் சொல்றேன். சில மாதங்களுக்கு முன்பாக 'வாலு' பிரச்சினை நிலவி வந்த நேரத்தில் லதா ரஜினிகாந்த் மேடம் போன் செய்து, "'வாலு'வுக்கு என்ன பிரச்சினை. உங்களை ரஜினி சார் பார்க்க வேண்டும்' என சொல்கிறார் என்றார்கள். ஆனால், நான் சொல்லவில்லை. என் படத்தின் பிரச்சினையை நாமளே தான் முடிக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தேன். பிரச்சினைகள் முடிவுக்கு வந்தவுடன் ரஜினி சார் போன் பண்ணினார். "பிரச்சினை முடித்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். வாழ்த்துகள். நான் உங்களை அழைத்தேனே. ஏன் வரவில்லை" என்றார்.
பிரச்சினை எழுந்தபோது அனைவருமே எனக்கு ஆறுதல் சொன்னார்கள். என்ன பிரச்சினை வந்தாலும், எழுந்து நிற்பேனே தவிர, பிரச்சினைகளை கண்டு ஓடி ஒளியும் ஆள் சிம்பு இல்லை.
"நீங்கள் ஒரு அஜித் ரசிகர். அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு உதவியும் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..?"
" 'தல' மேல வருத்தமா... வாய்ப்பே இல்லை. 'வாலு' படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. அஜித்துக்கு, சக்ரவர்த்திக்கும் இடையே இருக்கும் பிரச்சினை என்ன என்பது திரையுலகுக்கு தெரியும். அப்புறம் எப்படி அஜித் உதவி செய்வார். படத்தை வாங்கியவுடன் அப்பாவுக்கு போன் பண்ணிய அஜித் சார், "எதற்குள் கவலைப்படாதீர்கள். அனைத்து பிரச்சினைகளையும் கடந்து சிம்பு வருவான்" என்று ஆறுதல் சொன்னார். இந்த விஷயத்தில் அஜித் உதவவில்லை என்று மாற்றி பேசி, அவர் மீது பழி போடுவதை நான் விரும்பவில்லை."
"உங்களுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தான் பிரச்சினை..?"
"ஒரு பிரச்சினையும் இல்லை. வருத்தம் இருக்கிறது. சென்னையில் முக்கியமான திரையரங்குகளில் வேறு ஒரு படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். 3 வருடம் கழித்து எனது படம் வெளியாகும் போது, பெரிய திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் எனக்கு கோபம் கிடையாது, வருத்தம் தான்.
இந்தப் பிரச்சினையால் எனது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் செய்த விஷயங்களை நிறுத்தச் சொல்லி முதலில் குரல் கொடுத்தது நான்தானே. அவர்களது கோபத்தில் நியாயம் இருக்கிறது. தனது நடிகரின் படம் பெரிய திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் ஆசைப்படத்தான் செய்வான். அதில் தவறு இல்லை.
"உங்களது அடுத்த படங்கள் குறித்து...?"
"கெளதம் மேனன் படம் 70 சதவீதம் முடிந்துவிட்டது. 'வாலு' இப்போது ரிலீஸ். இனிமேல் செல்வராகவன் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவேன். செப்டம்பரில் 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியீடு இருக்கும். அக்டோபர் அல்லது நவம்பரில் படம் வெளியாகும்.
கெளதம் மேனன், செல்வராகவன் படங்களை முடித்துவிட்டு அமீர் படத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறேன். அமீர் படத்தில் விஜய் சேதுபதி என்னுடன் நடிக்கிறார் என்பது எல்லாம் தவறான செய்தி. அந்த மாதிரியான ஒரு பாத்திரம், அப்படத்தில் இல்லை."


நன்றி - த இந்து