Thursday, December 13, 2012

கும்கி

http://tamilasia.com/wp-content/uploads/2012/07/kumki-movie-songs-download.jpg

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்க, இமான் இசையமைத்து இருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

'கும்கி' படம் துவங்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பார்ப்பு தான். பிரபு சாலமன் இயக்கம் மட்டுமன்றி, நடிகர் திலகத்தின் பேரனும் பிரபுவின்  மகனுமான விக்ரம் பிரபு நடிக்கும் முதல் படம் என்பதாலும் கூடுதல் கவனத்தைப் பெற்றது.

காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வரும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் யானைக்கு 'கும்கி' என்று பெயர். அதனையே படத்திற்கு பெயராக வைத்து இருக்கிறார்கள். யானைகள் ஏன் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வருகின்றன? அதனை தீர்க்க என்ன வழி என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி சொல்லி இருக்கிறார்கள்.

'கும்கி' படம் குறித்து பிரபு சாலமன் " 'காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வர்ற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கினு பேரு. எதாவது ஒரு பகுதியில், 'யானைகள் புகுந்து அட்டகாசம்’, 'ரேஷன் கடையை உடைத்து நொறுக்கியது’, 'மனிதர்களைத் தாக்கியது’னு தினமும் யானைகளைப்பத்தி ஃப்ளாஷ் நியூஸ் வருது. ஏதோ யானைகளை வில்லன் ரேஞ்சுக்குக் கொண்டுவந்துட்டோம்.

ஆனா, நிஜத்தில் யானை ரொம்பப் பாசமான ஜீவன். நேசிக்கத்தக்க மிருகம். ஆசாபாசம், கோபம், காதல், பழிவாங்கும் உணர்ச்சி, ஞாபகசக்தினு 40-50 டன் எடை கொண்ட மனிதன் அது... அவ்வளவுதான். யானையைச் சும்மா மிருகம்னு சொல்ல கூச்சமா இருக்கு. அந்த யானைகளின் வாழ்வியல் சூழலின் பின்னணியில் ஒரு காதல் சொல்லி இருக்கேன்.

இப்போ வரை யானைகள் பத்தி தனியா ஒரு புத்தகம் எழுதுற அளவுக்குப் படிச்சாச்சு. யானைப் பாகன்களோடு பேசினால் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் சுவாரஸ்யம். யானைக்குச் சின்ன சத்தம்கூடப் பிடிக்காது. வனத்தில் இயல்பா யானைகள் திரியும்போது, அவ்வளவு அழகா இருக்கும். யானைகள் மனிதர்களின் வாசத்தைப் பதிவுபண்ணி வைக்கும். பாகனோட வார்த்தைக்குத்தான் கீழ்ப்படியும். எங்கே நெல் இருக்கு, சோளம் இருக்குனு அதுங்களுக்குத் தெரியும்.

பரம்பரை பரம்பரையாக யானைகளின் ஜீன்லயே மேப் ரூட் இருக்கு. பேச்சிலர் ஆண் யானைகள் மட்டுமே தனியாத் திரியும். பெண் யானைகள் மகள், அத்தை, அம்மானு உறவுகளோடுதான் திரியும். யானைகளைக் காதலிக்கிற ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலான காதல்தான் படம்.

கிராஃபிக்ஸ் கப்பல்ல நடந்தாலும் 'டைட்டானிக்’தான் உலகின் பிரமாண்டமான காதல் படம் இல்லையா? அப்படிப் பார்க்கும்போது, நிஜமான யானைகள் வளர்த்தெடுக்கும் 'கும்கி’ பிரமாண்டமான காதல் படமா இருக்கும். வனத்தையும் மனத்தையும் ஒருசேரத் தூண்டில்  போட்டுத் தூக்கும். அதுதான் படத்தின் விசேஷம்!'' என்று தெரிவித்தார்.

'கும்கி' படத்தின் இசையை ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, சத்யராஜ் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே ஒன்றிணைந்து வெளியிட்டார்கள். அவர்கள் அனைவருமே இணைந்து வெளியிட்டதாலோ என்னவோ பாடல்கள் அனைத்துமே ஹிட். இமான் இசையில் 'ஒண்ணும் புரியல', 'நீ எப்போ புள்ள' ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சியில் வருடத்திற்கு ஒரு முறை தான் தண்ணீர் வரும். அந்த நேரம் வரை காத்திருந்து ஒரு பாடலை அங்கு சென்று படமாக்கி இருக்கிறார்கள். அது போலவே பயிர் நட்டு அது வளர்த்து அறுவடை செய்யும் வரை காத்திருந்து பல காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறது. டிசம்பர் 14ம் தேதி முதல் தியேட்டர்களில் வலம்வர இருக்கிறது 'கும்கி'.


இளைஞர்களின் ரிங் டோனாக மாறிய கும்கி பாடல்கள்
[
கொலிவுட்டில் மைனா பட வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள 'கும்கி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
கும்கி படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது படத்தின் பாடல்கள், ட்ரைலரை பார்த்தவர்கள் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் விநியோகஸ்தர்கள் அனைவருமே தயாரிப்பாளர் லிங்குசாமி அலுவலகத்தினை முற்றுகையிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கும்கி பாடல்கள் இளைஞர்களின் காதுகளுக்கு இசை விருந்தாக அமைந்துள்ளது.
'ஒண்ணும் புரியல', 'அய்யய்யோ ஆனந்தமே', 'சொல்லிட்டாளே அவ காதல' ஆகிய பாடல்கள் காதலர்களின் ரிங் டோனாக மாறியிருக்கிறது. இப்படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.
மைனா பட குழு அப்படியே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
அனைத்து படங்களிலுமே க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகனை சுற்றி தான் இருக்கும். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் பிரபு சாலமன், கும்கி க்ளைமாக்ஸ் காட்சியினை யானையை மையப்படுத்தி வைத்து இருக்கிறார் என்று தகவல்

 
 

1.படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்




2.படம் : கும்கி
இசை : D. இமான்
பாடியவர் : அதிதி பால்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்

ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே உறவே உனதே

ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ

ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
தங்கி கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதனை
கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏது காதல் ஓடவே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருவேன் சுகமே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

3.
படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்
வரிகள் : யுகபாரதி

நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற



4. படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : D இமான்
வரிகள் : யுகபாரதி

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஒருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல





5.படம் : கும்கி
இசை: D இமான்
பாடியவர்கள் : பென்னி தயால் & D இமான்
வரிகள் : யுகபாரதி

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேலை
கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதியெல்லாம் சுத்தி வித்தை காட்டுவோங்க
வேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு முட்ட நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொழப்போமே



6.படம் : கும்கி
பாடியவர் : மகிழினி மணிமாறன்
வரிகள் : யுகபாரதி
இசை : இமான்

சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்


7. படம் : கும்கி
இசை : இமான்
பாடியவர் : ஹரிச்சரண்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ
ஹய்யய்யய்யோ
ஒ ஹய்யய்யய்யோ

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்துவாய்
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

ஏ ஏ ஏ புள்ளே ஏ புள்ளே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இளநெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

நன்றி -தமிழ் பாடல் வரிகள் , விகடன் , லங்காஸ்ரீ

diSki -

நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

 
 
 

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 




 அ








0 comments: