Showing posts with label கும்கி. Show all posts
Showing posts with label கும்கி. Show all posts

Sunday, February 17, 2013

கும்கி , மைனா -ஜிங்சிக்கா, சொய் சொய் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?மியூஸிக் டைரக்டர் இமான் பேட்டி


பாடல் சக்சஸ்க்கு திரைக்கதை காரணம்!

ராகவ்குமார்

இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார் மியூஸிக் டைரக்டர் இமான். இதைப்பற்றி அவரிடம் கேட்டால், வலது கை செய்வதை, இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும் என கர்த்தர் சொல்லி இருக்கிறார். ப்ளீஸ்... பப்ளிஸிடி வேண்டாமே..." என்கிறார் அடக்கமாக.
சேவை எண்ணத்துக்கு நீங்கள் சார்ந்துள்ள மதம் தான் காரணமா?
மதமும் ஒரு காரணம். சேவை செய்ய மனிதனாக இருந்தால் போதும். எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன."
உங்கள் பாடல்களில் வரும் ஜிங்சிக்கா, சொய் சொய் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்த வார்த்தைகள் குழந்தைகளை அதிகமாக ஈர்க்கின்றன. இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்கக் கூடாது. ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்போது வரும் வார்த்தைகள் இது."
ரொம்ப டச்சிங்கா காதல் பாட்டுக்கு ட்யூன் போடுறீங்களே சொந்த அனுபவமா?

குத்துப்பாட்டுக்கு ட்யூன் போட்டால் டான்ஸ் ஆடிக்கிட்டே ட்யூன் போட்டீங்களான்னு கேட்பீங்களா? எந்த ஒரு ட்யூனும் சக்ஸஸ் ஆக திரைக்கதைதான் காரணம். காதல் என்ற உணர்வு மனிதர்களையும் தாண்டி மற்ற உயிரினங்களில் கூட இருக்கே. ஸோ, காதல் பாட்டுக்கு டச்சிங்கா ட்யூன் போடறது பெரிய விஷயம் கிடையாது."
நிறைய ஹிட் கொடுத்தும், .ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போல உங்கள் மியூஸிக் ரீச் ஆகலையே?
இதற்கான சூழல் எனக்கு அமையலை. எவ்வளவு பெரிய ஹீரோ படமாக இருந்தாலும், மியூஸிக் டைரக்டரா சக்ஸஸ் ஆக, டைரக்டரும், திரைக்கதையும் முக்கியம். விஜய் நடிக்கும்ஜில்லாபடத்துக்கு மியூசிக் பண்றேன். அது எனக்கு வேறொரு இடத்துக்குக் கொண்டு போகும்."
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, விஸ்வநாதன்- இளையராஜா மாதிரி இணைந்து இந்தத் தலைமுறையினர் ஏன் மியூஸிக் பண்றதில்லை?

அன்றைக்கு இருந்த டைரக்டர்ஸ் நம்பிக்கையோட இணைந்து வொர்க் செய்ய வாய்ப்பு தந்த மாதிரி, இன்றைய டைரக்டர்கள் தந்தா நான் யாருடனும் சேர்ந்து மியூஸிக் செய்ய ரெடி."
வொய் திஸ் கொல வெறிபோல உங்க பாட்டு எப்ப சாதனை பண்ணப் போகுது?
சாட்டைபடத்தில்சகாயனேபாடல் நிறைய பேரால் கேட்கப்பட்டு சாதனை செய்தது உங்களுக்குத் தெரியாதா? கின்னஸ் சாதனை செய்வதை மட்டும் மனத்தில் வைத்து கம்போஸ் செய்ய முடியாது. எனது இசை, மக்களில் பலரின் ரசனையோடு ஒத்துப் போகும்போது பெரிய அளவில் ஹிட் ஆகிறது."
சினிமாவில் நடிக்கறதா கேள்விப்படறோமே?

இமான் அண்ணாச்சிதான் சினிமாவில் நடிக்கிறார். இந்த இமான் இல்லை. நிறைய பேர் நான் தான் சினிமாவில் நடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு எப்ப பெரிய ஸ்க்ரீனில் பார்க்கலாம்ன்னு கேட்குறாங்க. என்னைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்யவும், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இமான் கம்போஸர். காம் என்ற பெயரில் புதிய வெப்சைட்டை தொடங்கியுள்ளேன். என்னைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்டேட் செய்து, அனைவரும் பார்க்க வழி செய்துள்ளேன். "
கும்கிபடத்துக்காக பழங்குடி இசைக் கருவிகளைப் பயன்படுத்தினீர்களா?
மக்களிசையில் முக்கிய வாத்தியமானபறையை பயன்படுத்தியுள்ளேன். பறை இசை மக்களின் மகிழ்வு, கோபம், சோகம், வீரம் என பல உணர்வுகளை வெளிக்கொணரும் ஆற்றல் பெற்றது. தவிர மதுரையில் இருந்து, செயல்பட்டு வரும் நாட்டுப்புற, பழங்குடி இசையை மக்களிடையே பரப்பும்சமர் கலைக்குழுஎன்ற குழுவினரின் மக்கள் இசையையும்கும்கியில் பயன்படுத்தினேன்."
உங்கள் வெற்றிக்கு எது காரணம்?
இன்னைக்குசிட்டின்னு சொல்லப்படற இடத்தில் பெரும்பான்மையானவர்கள் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவங்கதான். நகரம் பல கிராமத்தினர் சேர்ந்து வசிக்கும் இடம். நகரங்களில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான். எனது இசை மண்சார்ந்து இருப்பதால் இவர்களைச் சென்றடைந்து வெற்றி பெறுகிறது."

நன்றி - கல்கி 

Thursday, December 20, 2012

விகடன் விமர்சனம் - கும்கி ,நீஎபொவ

விமர்சனம் : கும்கி

விகடன் விமர்சனக் குழு
 
 
யானை மேல் செய்யும் காதல் சவாரியே 'கும்கி’!


 'காட்டு யானையை அடக்கும் கும்கி யானைக்குப் பதில் ஒரு கோயில் யானையை அனுப்பிவிட்டால் என்னாகும்?’ என்ற சுவாரஸ்ய ஒன் லைனில், ஆதி காடு, 200 வருடக் கட்டுப்பாடு, ஒரு வனக் காதல், காட்டு யானையின் மூர்க்கம், பழகிய யானையின் பாசம் என பிரியமும் பிளிறலும் புதைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.


அறிமுகத்திலேயே அசத்தலாக ஃபர்ஸ்ட் க்ளாஸ் தாண்டுகிறார்


ஹீரோ விக்ரம் பிரபு. யானையை அடக்கும் பாகனாக செம ஃபிட். ஊறுகாய் திருடிய யானையிடம், 'உனக்கு எதுல குறைவெச்சேன்? எங்கேடா படிச்ச இந்தத் திருட்டுப் பழக்கத்த?’ என்று கோபம் காட்டுவதா கட்டும், 'அவளப் பார்த்ததுல இருந்து மனசுக்குள்ளே என்னென்னவோ பண்ணுதுடா’ என்று காதலில் உருகுவதாகட்டும்... ஆல் இஸ் வெல்.

படத்தின் செகண்ட் ஹீரோ யானை மாணிக்கம் தான். விக்ரம் பிரபுவுக்குப் பின்னே நாய்க்குட்டி போல் ஓடுவதும், தன் மேல் ஏறச் சொல்லி காலைத் தூக்கிப் பிளிறுவதும், அம்மாஞ்சி யானையாக கும்கி பயிற்சியில் திணறுவதும்... 'மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறது’ அந்த யானை.
வன தேவதையாக லட்சுமி மேனன். அத்தனை பெரிய விழிகளில் பயம், பிரமிப்பு, காதல், சோகம் என எல்லாமே ரம்மியம்!


சலம்பல் பாதி புலம்பல் மீதி என அப்ளாஸ் அள்ளுகிறார் தம்பி ராமையா. தன்னைப் பெரிய வீரன் என்று நினைத்துக் கொண்டாடும் கிராமவாசிகளிடம் மைண்ட் வாய்ஸில் மண்டிபோட்டு உருள்வது என மனிதருக்கு செம ஸ்பேஸ். ''உனக்கு எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ஆரம்பிக்கிறப்ப பக்கவாதம் வந்துடும்டா'' என வசனங்களில் அதிரடித்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இவரது மைண்ட் வாய்ஸ் ஓவர் டோஸ்! 'உண்டியல்’ அஸ்வின், கிராமத் தலைவர் ஜோமல்லூரி என்று ஒவ்வொருவரும் நிறைவான கேரக்டர்கள்.  


இசை, ஒளிப்பதிவு இரண்டும் கும்கியின் கம்பீரத் தந்தங்கள். கொம்பன் வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பதைபதைப்பூட்டும் இமானின் இசை, பாடல்களில் சொக்கவைக்கிறது. புற்களுக்கு இடை யில் பயணிக்கும்போதும், ஹோவெனக் கொட்டும் அருவியின் தலை மேல் ஏறி இறங்கிச் சுற்றிச் சுழன்று பரவசப்படுத்தும்போதும் மயக்குகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. யுகபாரதியின் பாடல் வரிகள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.


கொம்பனும் மாணிக்கமும் சந்தித்துவிட்டால் படம் முடிந்துவிடும் என்பதாலேயே, இறுதிக் காட்சி வரை யானைத் தும்பிக்கையைவிட நீள மாக நீள்கிறது படம். ஊருக்குள் ஹீரோ வந்த பிறகு, நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறது கதை. ஆதி காடு என்றொரு மலைக் கிராமமும் அவர்களின் வாழ்வியலும் எப்படி இருந்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங். பரணில் உட்கார்ந்து எந்நேரமும் மலைக் கிராமத்தையே விக்ரம் பிரபு பார்த்துக் கொண்டு இருப்பது முதலில் ஜோராக இருந்தாலும், போகப் போக செம பேஜார். படத்தின் உயிர்நாடிக் காட்சியே கொம்பனும் மாணிக்கமும் மோதிக் கொள்ளும் சண்டைதான். ஆனால், அதன் கிராஃபிக்ஸ்... ப்ச்!  


இருந்தாலும், திரையில் யானையைப் பார்த்ததுமே குழந்தையாகிவிடுகிற மனசு, எல்லாவற்றையும் மறக்கடித்துவிட... கம்பீர நடை போடுகிறான் கும்கி!

விமர்சனம் : நீதானே என் பொன்வசந்தம்

விகடன் விமர்சனக் குழு


 விண்ணைத் தாண்டி வருவாயா’ காதலில் பள்ளிப் பருவத்தையும் முன்னாள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவையும் சேர்த்தால்... 'நீதானே என் பொன்வசந்தம்’.


 குழந்தைப் பருவத்தில் ஜீவா, சமந்தா இடையே கன்றுக்குட்டிக் காதல். ஈகோ மோதல். பிரிகிறார்கள். கல்லூரிப் பருவத்தில் மீண்டும் சந்திக்கும்போது, விட்ட இடத்தில் இருந்து காதல். இப்போதும் ஈகோ மோதல். பிரிகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பருவத்தில் சந்திக்கிறார்கள். காதலே இல்லாமல்


ஈகோ மோதல் மட்டுமே. பிரிகிறார்கள். முந்தைய இரண்டு தருணங்களிலும் ஜீவாவே சமந்தாவைச் சமாதானப்படுத்தியிருக்க, இப்போது சமந்தா சமாதானத்துக்கு வருகிறார். ஆனால், அப்போது ஜீவாவுக்குத் திருமணம் நிச்சயமாகி ரிசப்ஷனும் முடிந்திருக்கிறது. என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்.


இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன், வசதியான வீட்டுப் பெண், காலேஜ் கல்ச்சுரல்ஸ், காபி ஷாப், ஈகோ, பிரிவு, காதலியைத் தேடிச் செல்லும் காதலன், கூடவே கௌதமின் கரகர குரல்... 'கௌதம் பட க்ளிஷே’க்கள் ஒன்றுகூட மிஸ் ஆகவில்லை. ஆனால், பழையன நிறையப் புகுந்ததில், புதியன எதுவும் இல்லாமல் போய்விட்டதே!


பிரிந்த காதலர்கள் காதலனின் திருமணத்துக்கு முந்தைய இரவில் சந்திக்கும் அத்தியாயத்தில் மட்டும் செம சிக்சர் அடிக்கிற கௌதம், மற்ற ஏரியாக்களில் சிங்கிள் ரன்தான் எடுக்கிறார்.


தன் காதலைத் தானே முறித்துக்கொண்டு பிறகு சமாதானம் தேடி அலையும் கொஞ்சம் நெகட்டிவ் பாத்திரத்தில்... ஜீவா! பள்ளி, கல்லூரிக் கட்டங்களில் க்யூட்டாகக் கவர்கிறார். இறுக்கம் இல்லாத திரைக்கதையிலும் நம்மை ஈர்த்துப் பிடிப்பது சமந்தாவின் குழந்தை முகமும் குறும்புக் கண் களும்தான். சாய்ந்து சாய்ந்து பார்த்து கன்னக் கதுப்புகளில் வெட்கம் புதைத்துப் புன்னகைக்கும்போது... ஸோ ஸ்வீட் சமந்தா!  


'சுடிதாருக்குச் சாயம் போனாத்தானே உங்களுக்கு பேன்ட், ஷர்ட்லாம் கண்ணுக்குத் தெரியும்!’, 'சில்-அவுட் மச்சான்’ - மாறி மாறி வரும் ஊடல் கூடல் வசனங்களுக்கு மத்தியில், சந்தானத்தின் ஒன் லைன் பஞ்ச்கள்தான் சின்ன ஆறுதல்.


ஸ்டேட்டஸ் வித்தியாசம் கருதி சமந்தாவிடம் இருந்து வம்படியாக விலகுவது ஜீவாதான். ஆனால், கடைசியில் ஏதோ சமந்தாதான் ஜீவாவை ஏமாற்றியதுபோல அவரைக் குறுகுறுக்க வைப்பது என்ன நியாயம்?


'நீ ஏற்காடு போனதில்லையா... செம இடம். நான் இந்த சம்மருக்குப் போறேன். ஆமா நீ எங்கே போற?’ 'ஆஸ்திரேலியா!’, 'எல்லா குட்டிக் குட்டி பாக்ஸையும் டிக் அடிச்சிட்டு, கடைசியா என் பாக்ஸுக்கு வந்தியா?’, 'உன் கல்யாணத்துக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடி இதைச் சொன்னேன்னு ஞாபகம் வெச்சுக்கோ’ என்பதுபோன்ற சில இடங்களில் மட்டுமே கௌதம் டச்.


ஃபீலிங் படத்தை செம ஜாலியாக எடுத்திருப்பார்கள்போல. 'வி.டி.வி.’ சிம்புவை சந்தானம் கலாய்க்கிறார். 'டேட்ஸ் இல்லை. அநேகமா நான் இல்லாமதான் அடுத்தடுத்த சீன்லாம் நடக்கும்’ என்று டயலாக் பேசுகிறார். என்ன சார் நடக்குது அங்கே!  


படத்தின் ஹீரோ, பலம்... இரண்டும் இளையராஜாதான். காதலர்கள் இணையும்போது வரும் காதல் கீதமாகட்டும், பிரியும்போது வரும் சோக கீதமாகட்டும்... ராஜா, ஏன் ராஜா என்பதை நிரூபிக்கிறார்.  


காதலர்கள் அடிக்கடி பிரியக் காரணமே 'ஸாரி’ என்ற வார்த்தையை அவர்கள் சொல்லத் தயங்கும் ஈகோதான். ஆனால், நாங்கள் சொல்கிறோம்.. ஸாரி கௌதம்!


நன்றி - விக்டன் 

Tuesday, December 18, 2012

நான் திரைக்கதை அமைத்திருந்தால்? -கும்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-NHNLIgHCEPz_CJEn1lMPVJkFGfPvddamXO3iHdF1B5Zu1XQpRh5SLhrISMFjnaAPQ5E1k7aVgA_K7wmDL42SqGMF3b6iCNyaVSMDnP_7q5TAweaYld_PuDkbp9u63RZHxHJnAqjD9-90/s1600/kumki1.jpg

மைனா படத்தின் பிரம்மாண்டமான வெற்றி ,டி இமானின் இசையில் பாடல்களின் அதிரி புதிரி வெற்றி , ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு  இந்த மூன்று பிரமாதமான பிளஸ் இருந்தும்  கும்கி படம் அட்டகாசமான படமாக அமையாமல் ஏதோ ஓக்கே என்ற அளவில்தான் பேர் வாங்க முடிந்தது .பிரபு சாலமன் எங்கே சறுக்கினார்? இந்தப்படத்துக்கு எப்படி திரைக்கதை அமைத்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகி இருக்கும் ? ஒரு அலசல்



1. படத்தோட டைட்டில் கும்கி-ன்னு வெச்சாச்சு . முதல் வேலையா  முதுமலை 10 நாட்கள் கேம்ப் அடிச்சு அங்கே கூட்டம் கூட்டமா யானைகள் சுற்றுவதை  வீடியோ எடுத்துட்டு வந்து தேவையான இடத்துல அட்டாச் பண்ணி இருப்பேன்.கும்கி யானைக்கு எப்படி பயிற்சி தர்றாங்க? அதனோட ந்டவடிக்கைகள் என்ன? என்பதை படம் பிடிச்சுட்டு வரலாம்.ஏன்னா படத்துல மொத்தமே ஒரே ஒரு யானை தான் வருது . வில்லன் கம் கொம்பன் யானை கிராஃபிக்ஸ் , குட்டி யானை கிராஃபிக்ஸ்.இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்துட்டு  பிரம்மாண்டமா யானைக்கூட்டத்தை காட்ட வேணாமா? 




2. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல யானை ஒரு பெண்ணை கொல்றது மாதிரி சீன் எடுத்தது க்ளோசப் ஷாட்ல நல்லாவே செட்டப் மாதிரி தெரியுது .3 வருடங்களுக்கு முன் யானைப்பாகனையே தூக்கி அடிச்ச மதம் பிடிச்ச யானையோட செய்லகளை சன் டி வி ல காட்டினாங்க . அதை எடுத்து டச்சப் பண்ணி இதுல அட்டாச் பண்ணி இருக்கலாம்.பொதுவா இந்த மாதிரி காட்சி எல்லாம் லாங்க் ஷாட்ல காட்டினாத்தான் நம்பகத்தன்மை வரும் . சும்மா யானையோட பாதம் மட்டும் காட்டி ஒப்பேத்த இது ராமநாராயனன் படம் அல்ல 



3. படத்தோட திரைக்கதை டிஸ்கஷனுக்கு படத்தில் பணிஆற்றும்   அதாவ்து படத்தில் நடிக்கும் ஆட்களை உட்கார விடக்கூடாது. இந்தப்படத்துல மைனா ஹிட்டின் காரணமா தம்பி ராமையாவை ஸ்டோரி டிஸ்கஷன்ல டைரக்டர் உட்கார வெச்சாராம். அதுதான் தப்பு . இந்தபப்டத்துல தம்பி ராமையாவின் காட்சிகள் நீளம் அதிகம் . மொக்கை காமெடி நிறைய இருக்கு,. அரதப்பழசான ஜோக், சென்சார் கட் பண்ற அளவு வச்னங்கள் பேசி இருக்காரு . அவர் சமப்ந்தப்பட்ட காட்சிகளை குறைக்கனும்



4. படம் போட்டு 2 மணி நேரம் கழிச்சு ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொல்றாரு. அதுக்குப்பின் 40 நிமிஷம் தான் படம் , அதனால ஆடியன்ஸுக்கு ஹீரோ - ஹீரோயின் லவ் ல ஒரு பிடிப்பு வர்லை. அவங்க சேருவாங்களா? சேர மாட்டாங்களா? அப்டினு ஒரு துடிப்பு வர்லை. காதலுக்கு மரியாதை பட்த்துல  ஆடியன்சோட பரிதவிப்பு  நல்லாவே தெரியும் . அதுக்கு இருவரும் காதலிக்கும் காட்சிகள் , காதலின் ஆழம் , இதெல்லாம் படத்தோட 4 வது ரீலில் இருந்து காடிடனும் 



5. அந்த 2 போலீஸ் கேரக்டர்களும் என்ன பண்றாங்க? க்ளைமாக்ஸ்ல ஏதோ டர்னிங்க் பாயிண்ட் இருக்கு. அவங்க தான் வில்லன்களா வரப்போறாங்க என்பது மாதிரி பில்டப் எதுக்கு? அட்லீஸ்ட் அவங்க ஹீரோயினை அட்டெம்ப்ட் ரேப் கூட பண்ணலை. இந்த மாதிரி வெட்டி வில்லன்க இருந்து என்ன யூஸ் ? ஏமாற்றம்தான் மிச்சம் . அதனால அந்த 2 கேரக்டர்ஸ்க்கும் பை பை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjea0jWxXOycMDTrSGrwAOtK_ovUimAb5bjZ4XC-6E-wspDStTZRgwRZDNCF1Cmsuh44FJjzsqrnMryDyRy-JJ7OJ8jodeMVip60TxNK_S10LKjmy-d_saAMbpRKlDGZBOtO1aGrHefn00/s320/1.jpg



6. ஹீரோயினோட அப்பா ஹீரோ கிட்டே உங்களூக்கு எங்களால வாழ்க்கையே போச்சு , உங்க யானையும் போச்சு அதனால நீங்க இங்கேயே இருந்துடுங்க. என் பொண்ணை உங்களூக்கே கட்டி வைக்கிறேன். உங்க லவ் எனக்குத்தெரியும். அப்பாவை மதிச்சு காதலை கை விட்ட பொண்ணுக்கு இது என் அன்புப்பரிசு அப்டிங்கற மாதிரி ஒரு டயலாக் அடிச்சு க்ளைமாசை காதலுக்கு மரியாதை மாதிரி சுபமா முடிச்சுடனும்



7. பருத்தி வீரன் ஹிட்டுக்குப்பின் எல்லாப்படங்களிலும் ஹீரோ கிராமத்தான் என்றால் அவன் ஷேவிங்க் செய்யாம  காட்டான் மாதிரிதான் தாடியோட காட்டறாங்க. ஹீரோவுக்கு எதுக்கு தாடி? நீட்டா காட்டலாமே? 



8. ஹீரோயினுக்கு படத்துல ஓப்பனிங்க் ஷாங்க் இல்லை. இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை வெச்சுக்கிட்டு ஹீரோயின் அறிமுகக்காட்சி வைக்கலைன்னா எபடி? அந்த சொய்ங்க் சொய்ங்க் பாட்டை ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட்டா வெச்சா குதூகலமான ஓப்பனிங்க் வரும்



9. ஹீரோ ஹீரோயின் கிட்டே  தன் லவ்வை சொன்னதும் ஹீரோயின் ஓடிடறார். நோ ரிப்ளை. அவர் லவ்வறாரா? இல்லையா?ன்னே தெரியலை ,. ஆனா அடுத்த சீன்லயே  ஹீரோ கிட்டே “ நீங்க போய்ட்டா நானும் உயிரை விட்டுடுவேன்கறார். ஒப்பிக்கற மாதிரி இருக்கு . ஆல்ரெடி சொன்ன மாதிரி 4 வது ரீல்லயே லவ் ஓப்பனிங்க் சீனை வெச்சு 12 வது ரீல்ல குடும்பத்துக்கு மேட்டர் தெரிய வர்ற மாதிரி எடுக்கனும்



10. க்ளைமாக்ஸ்ல ஹீரோவின் யானையும் , கொம்பன் காட்டு யானையும் மோதற சீனை நல்லா பிரம்மாணடமா ஃபாரஸ்ட்ல போய் நிஜ யானைங்க மோதும்போது காத்திருந்து ஷூட் பண்ணி அப்புறம் அங்கங்கே மானே தே பொன் மானே கும்கி யானே அட்டாச் பண்ணி சி ஜி ஒர்க்  பண்ணி பக்காவா ரெடி பண்ணி இருப்பேன். சும்மா நைட் இருட்டுல  ஏதோ சண்டை நடப்பது போல் பாவ்லா காட்டி இருக்க மாட்டேன்


11. தம்பி ராமையா உட்பட படத்தின் முக்கிய கேரக்டர்களை சாகடிக்கத்தேவை இல்லை . படம் பார்த்த பலரது கருத்து “ படத்துல எல்லாரும் செத்துடறாங்க , ஒரே சோகம் “ என்ற புலம்பல் தான்.



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/11/director-PRABHU_SOLOMON1.jpg



Monday, December 17, 2012

Friday, December 14, 2012

கும்கி - சினிமா விமர்சனம்

http://7tab.in/wp-content/gallery/kumki-wallpapers/kumki-wallpapers-8.jpg 

அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி மதுரையை அடக்கி ஆண்டது போல் ஒரு காட்டு யானை ஒரு மலைவாழ்கிராமத்து மக்களை துவம்சம் பண்ணிட்டு இருக்கு.அறுவடை நடக்கும் டைம்ல வந்து எல்லாத்தையும் அழிக்குது. அந்த யானையை விரட்டி அடிக்க ஒரு கும்கி யானை தேவை. இந்த மாதிரி காட்டு யானைகளை விரட்டுவதற்காகவே சின்ன வயசுல இருந்தே பழக்கபட்ட யானை தான் கும்கி யானை .

 ஹீரோ ஒரு கோயில் யானையை வெச்சிருக்காரு. எதேச்சையா அந்த கிராமத்துல எண்ட்டர் ஆகறாரு. ஹீரோயின்  அந்த மலைவாழ் ஜாதிப்பொண்ணு. பார்த்ததும் ஹீரோவுக்கு லவ். அதனால கும்கி யானைன்னு பொய் சொல்லி மெயிண்ட்டெயின் பண்றாரு. அவங்க காதல் நிறைவேறுச்சா? காட்டு யானை வால்மார்ட் மாதிரி ஆக்ரமிச் சுதா அந்நியன் சுதா என்பதை படத்தில் காண்க.


படத்துக்கு முதல் ஹீரோக்கள் டி இமான் + தஞ்சை இளவல்யுகபாரதி . என்னமா பாட்டு போட்டிருக்காங்க. ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டல் ஒலி அள்ளுது.இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்கள் பட்டியலில் நிச்சயம் முதல்  இடம்.

 http://haihoi.com/Channels/cine_gallery/kumki_movie_latest_photos_stills_vikram_prabhu_lakshmi_menon_9664_S_113.jpg



அடுத்து ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன்ஸ். ஹாலிவுட் படமான எமர்ஃபால்டு ஃபாரஸ்ட்க்குப்பின் நான் பார்த்த அட்டகாசமான  அருவிகள் சூழ் மலை வாசஸ்தலம் பிரமாதம்.கேமரா கலக்கல்.


ஹீரோயின் ஆல்ரெடி சுந்தர பாண்டியன்ல அறிமுகம் ஆன லக்‌ஷ்மி மேணன். கொள்ளை அழகு. மலை வாழ் பெண் போல வே கெட்டப் , பாடி லேங்க்வேஜ் ஆஹா! ஒரு காட்சியில் க்ளோசப்பில் அவர் புருவத்தை காட்டும்போது எந்திரிச்சுப்போய் நீவி விடலாமா? என எண்ண வைக்கும் அழகு .. சரி சரி கண்ட்ரோல்


 ஹீரோ  சிவாஜியின் பேரன் .முதல் படம் என்ற அளவில் ஓக்கே . பிரமாதம்  என சொல்லும் அளவு இன்னும் வரலை. வந்த வரை ஓக்கே .


 http://www.lateststills.com/wp-content/uploads/2012/08/Lakshmi-Menon-www-lateststills-com-300x300.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. மைனா படத்துல எப்படி ஜிங்கி ஜிங்கி பஸ் பாட்டு படத்தை ஒரு ஜாலி மூடுக்கு கொண்டாந்துச்சோ அதே போல் இதுல சொய் சொய் பாட்டு . க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முன்னால வருது. அறுவடைக்காட்சி , கிராமத்து மக்களின் பாரம்பரிய நடனத்துடன் துள்ள வைக்கும் இசையில் அபாரமான பிக்சரைசேஷன்.


2. நாயகிக்கும் நாயகனின் யானைக்கும் இடையே மலரும் நட்பு . யானை என்றாலே மம்மியைக்கண்ட ஓ பி எஸ் மாதிரி பம்மும் சுபாவம் உள்ளவர் நாஞ்சில் சம்பத் ஜெ மாதிரி  சர்வ சாதாரணமாக நட்பு பாராட்டுவது அழகு .


3. மலை கிராமம் , அவங்க உடைகள் எல்லாம் யதார்த்தம்


4. கிராமத்து மக்கள் ராமையாவை தெய்வமாக நினைப்பதும் , உண்மை தெரிஞ்சுட்டா துவம்சம் பண்ணிடுவாங்க என்று அவர் தொடை நடுங்குவதும் செம காமெடி டிராக். தனி காமெடி டிராக்காக இல்லாமல் கதையுடன் பயணிக்கும் யதார்த்த காமெடி பிளஸ் 



5. சொல்லிட்டேனே  என் காதலை பாட்டு செம ஹிட் மெலோடி . அந்தப்பாட்டில் ஹீரோயின் முக பாவங்கள் , க்ளோசப் காட்சிகள் கொள்ளை அழகு

http://kollywoodz.com/wp-content/uploads/2011/10/Kumki-Movie-Stills04.jpg



மனம் கவர்ந்த வசனங்கள் 


1.விவசாயத்தை கண்டுபிடிச்ச கடவுள் மாதிரி பேசாதே. கட்டடத்தை கட்டி கட்டி கடைசில கல்லை உடைச்சு சாப்பிடும் சூழல் வரத்தான் போகுது



2. உனக்குன்னு ஒரு காலம் உடைச்சுக்கிட்டு வரும்


3. 52 வயசு வரைநாய் படாத பாடு படுவீங்க. அதுக்குப்பின்? பழகிடும் # கும்கி ( வால் பையன் எஸ் வி சேகர் மொக்கை உல்டா)


4. சார்! நீங்க மாமா தானே?

 போலீஸ் - வாட்?

 ஐ மீன் உங்க தங்கச்சி பையனுக்கு மாமா தானே?



5. ஆ ஆள்ட்ட நான் சம்சாரிக்கனும்.


யானைக்கு சம்சாரம் இல்லைன்னு ஃபீல் பண்றீங்களா?



6.  சார், நீங்க ஏன் மேரேஜ் பண்ணிக்கலைன்னு தெரியும், யானைப்பாகன் நீங்க, யானை மிதிச்சு செத்துட்டா? மனைவி சின்ன வயசுல விதவை ஆகிடுவா அதானா?

 அடேய்



7. பன்னிப்பயலே! உன்னை எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் நடக்கும்போது ஆரம்பிக்கும்போது பக்க வாதம் வந்துடனும்


8. கொசுக்கடி இந்த காட்ல ஜாஸ்தி போல


 2 மணி வரை பொறுத்துக்குங்க


 அதுக்குப்பின் வராதா?

 கொசுக்கடி பழகிடும் ( 1987 தினத்தந்தி மொக்கை ஜோக்)



9. எனக்கு அவளைத்தெரியும் , அவளை மட்டும் தான் தெரியும்

 கவித கவித


 இப்போ வெல்லாம் நான் எது பேசுனாலும் அது கவிதை மாதிரியே இருக்குனு எல்லாரும் சொல்றாங்க.



10.  நிஜ்மா சொல்றேன் , எனக்கு கல்யாணமும் நடக்கலை, ஒரு ஃபர்ஸ்ட் நைட் கூட ந்டக்கலை



11. உனக்கு சாபம் விடறேன் , நீ எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது டைவர்ஸ்ல தான் போய் முடியும்



12. சென்னிமலை மாப்ளை கட்னா இவளைத்தான் கட்டனும்னு அடம் பிடிக்கறாளாமெ? ( எங்க ஊர்ப்பேருக்காக )




http://moviegalleri.net/wp-content/gallery/kumki-movie-latest-stills/kumki_movie_latest_photos_stills_vikram_prabhu_lakshmi_menon_8722.jpg


13,. முகறையைப்பாரு , மூஞ்சூறுக்கு முதப்பிள்ளை மாதிரி



14. சார்ஜ் ஏறிடுச்சா?

 ஹூம், ஃபுல்லா ஏறிடுச்சு




15. யானையோட பலம் பாகனோட தைரியத்துல தான் இருக்கு 



16. இப்போ நாட்ல அமைச்சருங்க எல்லாம் 9 ஓட்டைகளையும் அடைச்சுக்கிட்டு அமைதியா இருக்காங்க. ஏன்? ( ஏன்னா நடப்பது அம்மா ஆட்சி ஹி ஹி )


17. மனிஷனாப்பிறந்தா  மானம் , ரோஷம் முக்கியம்


 மனுஷனுக்குத்தானே, நமக்கென்ன?

 நக்கல் பண்ணி நகர்த்தப்பார்க்கறே, நடக்காதுடி



18.   கம்பளியைப்போர்த்திக்கிட்டு  குனிஞ்ச வாக்குல இருக்கியே , ஏன்?

 யானை என்னைப்பார்த்தா யானைக்குட்டின்னு நினைச்சு விட்டுடும்


19. காட்டோட  கலாச்சாரத்தையும் , நம்பிக்கையையும் மாத்தவே முடியாது .அப்படி யாராவது மாத்தினா , மாத்த நினைச்சா அவன் நம்பிக்கைத்துரோகி . எங்க கூட்டத்துல நம்பிக்கைத்துரோகி .யே கிடையாதுங்க ( நல்லா பாருங்க சம்பத் மாதிரி ஒரு ஆள் எல்லா ஜில்லால்யும் உண்டாம்)


20. அஞ்சு நிமிஷம் அவ அ ப்பா கிட்டே பேசுனதுக்கே  நம்பிக்கைத்துரோகம் பண்ண மாடேன்னு சொல்லிட்டியே , 20 வருஷம் வளர்ந்தவ எப்டி உன் கூட வருவான்னு எதிர்பார்க்கறே?



21. ஆம்பளை உடனே லவ்வை சொல்லிடலாம், ஆனா பொம்பளை உடனே லவ்வை சொல்லிட மாட்டா, அப்படி சொல்லிட்டா அது காதலே இல்லை   


22. யோவ், ஒரு லைன் மேன் இப்டித்தான் ஒரு பெண் கிட்டே சவுக்கியமா இருக்கியா?ன்னு தான் கேட்டான், அதுக்கே அவன் ஆள் அட்ரஸை காணோம், நீ எபடி? அட்ரஸ் இல்லாம போகனுமா?


23. என்  மேல வெச்சிருக்கும் நம்பிக்கையை அப்படியே என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாரு


24. நீ என் ரத்தம்மா ,  தப்பு பண்ண மாட்டே





/.



http://filmreviews.bizhat.com/wp-content/gallery/kumki/kumki_movie_stills-1.jpg




இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. மலைஜாதி மக்கள்  வெளி ஆட்களை சேர்த்துக்க மாட்டாங்க என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டறாங்க வசனத்துல . ஆனா ஹீரோ அண்ட் கோவுக்கு சாப்பாடு போடும்போது அவங்க பிளேட்ல சாப்பாடு போடறாங்க அது எப்படி? பொதுவா கிராமங்கள்ல  வாழை இலை  சர்வ சாதாரணமா கிடைக்கும். விருந்தோம்பல்க்கு அதுதான் யூஸ் பண்ணுவாங்க. ஆனா வாழை இலையே யூஸ் பண்ணலை 



2. ஹீரோயின் தண்ணீர் எடுக்க வரும்போது கீழே ஸ்லிப் ஆகி விழப்போறார். அப்போ யானை ஆயிரத்தில் ஒருவன் ல எம் ஜி ஆர் ஜெவை காப்பாத்துன மாதிரி டக்னு துதிக்கைல் தடுத்து நிறுத்தி காப்பாத்துது அது வரை ஓக்கே , அனா குடத்துல தண்ணீர் முகண்டு அது எடுத்து தர்றதெல்லா ம் ஓவர் , ராமநாராயணன் படம் மாதிரி இருக்கு. செம காமெடி 


3.ஹீரோவோட மாமா ஃபோன் பண்ணி கும்கி யான்பையோட அங்கே வர்றேன்னு சொல்லும்போது ஹீரோ ஏன் வேணாம்கறார்? வந்தா இவர் கிளம்ப வேண்டியதிருக்கும்னு ஒரு சாக்கு. தேவையே இல்லை. 2 பேரும் சேர்ந்து விரட்றோம்னா மேட்டர் ஓவர். படத்துல மிகப்பெரிய லாஜிக், ஓட்டையே இதுதான். தன் யானை கும்கி இல்லை. இன்னொரு யானை ஒரிஜினல் கும்கி கொண்டு வரவேணாம்னு ஏன் சொல்லனும்? 


4. ஹீரோ பல காட்சிகளில் தான் ஒரு ஜிம் பாடின்னு காட்டிக்க டைட் பண்ணிட்டே இருக்காரே? எதுக்கு?  நரம்பெல்லாம் புடைக்குது. முடியல 


5. படம் போட்டு சரியா 124வது நிமிஷத்துல அதாவது 2 மணி நேரத்துக்கும் மேல தான் ஹீரோ ஹீரோயின் கிட்டே தன் லவ்வையே சொல்றாரு. அதுக்குப்பின் 37 நிமிஷம் . அந்த 37 நிமிஷம் தான் கதையே . ஏன் ஓப்பனிங்க்ல மெயின் கதைக்கு வர்லை?


6. லவ் சொன்னதும் ஹீரோயின் நம்பியாரைப்பார்த்த சரோஜாதேவி மாதிரி ஓடிடறார். அடுத்த நிமிஷமே  பாட்டு , பதில் சொல்லு பதில் சொல்லு தொனில “ எப்போ சொல்லப்போறே” பாட்டு. பாட்டு நல்லாருக்கு, ஆனா மிஸ் பிளேஸ். இன்னும் 4 சீன் காட்டி அதாவது ஹீரோ இன்னும் 4 டைம் ஹீரோயின் கிட்டே பேசிய பின் அந்த பாட்டைப்போட்டிருக்கனும்.


7. அந்த போலீஸ் ஆஃபீசர்ஸ் 2 பேரும் எப்போ பாரு கிராமத்து மக்களை மிரட்டிட்டே இருக்காங்க. இடத்தை காலி பண்ணிடுங்கன்னு. ஏதோ பெரிய ட்விஸ்ட் வரப்போகுது, அந்த மலைப்பகுதில போலீஸ் ஏதோ தகிடு தித்தம் பண்ணுது அவங்க தான் மெயின் வில்லன் அப்டிங்கற மாதிரி பில்டப் பேக்கிரவுண்ட் மியூசிக் எல்லாம் கொடுத்துட்டு  கடைசில சப்



8. ஹீரோ அடிக்கடி யானையின் தந்தத்தை புல் அப்ஸ் பார் மாதிரி நினைச்சு  டபுள் பார்மாதிரியூஸ் பண்ணி எக்சசைஸ் பண்றது மட்டும் 6 இடங்கள் ல வருது.


http://www.fashionstay.com/img/lakshmi-menon-hot-without-makeup.jpeg



9. தன் மேல ஹீரோயின் அப்பா பரிபூரண நம்பிக்கை வெச்சிருக்காரு அப்டினு ஹீரோவும் , ஹீரோயினும் பரஸ்பரம் நான் உன்னை மறந்துட்டேன்  அப்டினு சொல்றது காதலுக்கு மரியாதை படத்துல ஷாலினி சொல்வது போல் அழுத்தமா வந்திருக்க வேண்டிய காட்சி. ஆனா ஏனோதானோன்னு சாதாரணமா இருக்கு. 


10. படத்தின் மிக முக்கியமான யானை  VS   காட்டு யானை மோதல் மிகச்சாதாரணமா காட்டி இருக்காங்க. இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்.


11. கதை சொல்லும் உத்தி ரொம்ப சாவதானமா கேரளா மக்களுக்கு சொல்வது போல் இருக்கு 



12, கார்த்திக் நடிச்ச சோலைக்குயில்  படத்துல இருந்து 20% காட்சிகள் , மலைச்சாரல் அப்டினு ஒரு மலையாள கில்மாப்படம்ல இருந்து 30 % காட்சிகள் சுடப்பட்டிருக்கு ( அதுக்காக சீன் இருக்கா?ன்னு கேட்கப்படாது , இது குடும்பப்படம் )


13. நல்ல நேரம் எம் ஜி ஆர் படம் பார்ப்பது மாதிரி ஆரம்ப யானைக்காட்சிகள் ஆயாசத்தை  வர வைக்குது . இயக்குநர் அட்டகாசமான இசை ஆல்பம் , அற்புதமான ஒளிப்பதிவு இரண்டையும்  விழலுக்கு இரைத்த நீர் ஆக்கிட்டார். 


14. ராமைய்யா பேசும் பல வசனங்கள் அரதப்பழசான மொக்கை ஜோக்குகள், நாகெஷ் , எஸ் வி சேகர் காலத்து வசனங்கள் .  முடியல. அவரை ஓவரா நம்பிட்டீங்க போல



15. மலை கிராமத்து மக்கள் ல கன்னிப்பெண்கள் காதுல தோடு  மட்டும் தான் போடுவாங்க , காது மடல்ல காது ஃபுல்லா என்னென்னெமோ குத்தி இருப்பது மேரேஜ் ஆன பொண்ணுங்க தான். ஆனா ஹீரோயின் அப்டித்தான் இருக்கு , அதே போல் ஜரிகை வெச்ச ஜாக்கெட் கரை எல்லாம் அவங்க போட மாட்டாங்க , மற்ற எல்லாப்பெண்களும் அப்படிப்போடலை, ஹீரோயின் மட்டும் .அதே போல் ஸ்டிக்கர் பொட்டு வெச்சிருக்கு. மற்ற எல்லாப்பெண்களும் குங்குமம் வெச்சிருகாங்க, ஹீரோயின் மட்டும் ஸ்டிக்கர் பொட்டு


16. மலை வாழ் கிராம மக்கள் கிட்டே செல் ஃபோன் எல்லாம் கிடையாது. யாரும் வெச்சிருக்கலை, ஆனா சார்ஜ் இருக்கா? அப்டினு ஒருத்தன் ஹீரோ கிட்டே கேட்கறான் , சார்ஜர் எடுத்தும் தர்றான்  ஹி ஹி  





http://gallery.southdreamz.com/cache/actress/lakshmi-menon/stunning-fashion-and-style/hot-and-beautiful-desi-indian-girl-lakshmi-menon-photo-gallery-3_720_southdreamz.jpg



எதிர்பார்க்கும்  ஆனந்த விக்டன் மார்க் - 41


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


 சி.பி கமெண்ட் - ஒளிப்பதிவு , லொக்கேஷன், பாட்டு ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம். மற்ற படி படம் மாமூல் சாதா படம் தான். 200 ரூபா , 150 ரூப்பாக்கு எல்லாம் ஒர்த்தே இல்லை. 3 நாள் வெயிட் பண்ணினா கவுண்ட்டர் டிக்கெட்ல பாதிதான் வாங்குவாங்க . ஏ செண்ட்டர்ல  மட்டும் ஜனவரி 10 வரை ஓடும் , பி சி செண்ட்டர்ல எல்லாம் அடுத்த வாரம் ஜாக்கி சான் படம் மாத்திடுவாங்க ( நான் சொல்லலை, தியேட்டர் ஓனரே சொன்னார் )


http://www.kollytalk.com/wp-content/uploads/2012/07/Lakshmi-Menon-Prabhu-Solomon.jpg


diSki -

நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

  
http://www.adrasaka.com/2012/12/blog-post_5285.html

நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 

 

அனைத்துப்பாடல்களையும் வரி வடிவில்

கும்கி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_6836.html

  http://moviegalleri.net/wp-content/gallery/telugu-actress-lakshmi-menon-photo-shoot-stills/telugu_actress_lakshmi_menon_photo_shoot_pics_4377.jpg

 

Thursday, December 13, 2012

கும்கி

http://tamilasia.com/wp-content/uploads/2012/07/kumki-movie-songs-download.jpg

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்க, இமான் இசையமைத்து இருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

'கும்கி' படம் துவங்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பார்ப்பு தான். பிரபு சாலமன் இயக்கம் மட்டுமன்றி, நடிகர் திலகத்தின் பேரனும் பிரபுவின்  மகனுமான விக்ரம் பிரபு நடிக்கும் முதல் படம் என்பதாலும் கூடுதல் கவனத்தைப் பெற்றது.

காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வரும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் யானைக்கு 'கும்கி' என்று பெயர். அதனையே படத்திற்கு பெயராக வைத்து இருக்கிறார்கள். யானைகள் ஏன் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வருகின்றன? அதனை தீர்க்க என்ன வழி என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி சொல்லி இருக்கிறார்கள்.

'கும்கி' படம் குறித்து பிரபு சாலமன் " 'காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வர்ற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கினு பேரு. எதாவது ஒரு பகுதியில், 'யானைகள் புகுந்து அட்டகாசம்’, 'ரேஷன் கடையை உடைத்து நொறுக்கியது’, 'மனிதர்களைத் தாக்கியது’னு தினமும் யானைகளைப்பத்தி ஃப்ளாஷ் நியூஸ் வருது. ஏதோ யானைகளை வில்லன் ரேஞ்சுக்குக் கொண்டுவந்துட்டோம்.

ஆனா, நிஜத்தில் யானை ரொம்பப் பாசமான ஜீவன். நேசிக்கத்தக்க மிருகம். ஆசாபாசம், கோபம், காதல், பழிவாங்கும் உணர்ச்சி, ஞாபகசக்தினு 40-50 டன் எடை கொண்ட மனிதன் அது... அவ்வளவுதான். யானையைச் சும்மா மிருகம்னு சொல்ல கூச்சமா இருக்கு. அந்த யானைகளின் வாழ்வியல் சூழலின் பின்னணியில் ஒரு காதல் சொல்லி இருக்கேன்.

இப்போ வரை யானைகள் பத்தி தனியா ஒரு புத்தகம் எழுதுற அளவுக்குப் படிச்சாச்சு. யானைப் பாகன்களோடு பேசினால் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் சுவாரஸ்யம். யானைக்குச் சின்ன சத்தம்கூடப் பிடிக்காது. வனத்தில் இயல்பா யானைகள் திரியும்போது, அவ்வளவு அழகா இருக்கும். யானைகள் மனிதர்களின் வாசத்தைப் பதிவுபண்ணி வைக்கும். பாகனோட வார்த்தைக்குத்தான் கீழ்ப்படியும். எங்கே நெல் இருக்கு, சோளம் இருக்குனு அதுங்களுக்குத் தெரியும்.

பரம்பரை பரம்பரையாக யானைகளின் ஜீன்லயே மேப் ரூட் இருக்கு. பேச்சிலர் ஆண் யானைகள் மட்டுமே தனியாத் திரியும். பெண் யானைகள் மகள், அத்தை, அம்மானு உறவுகளோடுதான் திரியும். யானைகளைக் காதலிக்கிற ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலான காதல்தான் படம்.

கிராஃபிக்ஸ் கப்பல்ல நடந்தாலும் 'டைட்டானிக்’தான் உலகின் பிரமாண்டமான காதல் படம் இல்லையா? அப்படிப் பார்க்கும்போது, நிஜமான யானைகள் வளர்த்தெடுக்கும் 'கும்கி’ பிரமாண்டமான காதல் படமா இருக்கும். வனத்தையும் மனத்தையும் ஒருசேரத் தூண்டில்  போட்டுத் தூக்கும். அதுதான் படத்தின் விசேஷம்!'' என்று தெரிவித்தார்.

'கும்கி' படத்தின் இசையை ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, சத்யராஜ் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே ஒன்றிணைந்து வெளியிட்டார்கள். அவர்கள் அனைவருமே இணைந்து வெளியிட்டதாலோ என்னவோ பாடல்கள் அனைத்துமே ஹிட். இமான் இசையில் 'ஒண்ணும் புரியல', 'நீ எப்போ புள்ள' ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சியில் வருடத்திற்கு ஒரு முறை தான் தண்ணீர் வரும். அந்த நேரம் வரை காத்திருந்து ஒரு பாடலை அங்கு சென்று படமாக்கி இருக்கிறார்கள். அது போலவே பயிர் நட்டு அது வளர்த்து அறுவடை செய்யும் வரை காத்திருந்து பல காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறது. டிசம்பர் 14ம் தேதி முதல் தியேட்டர்களில் வலம்வர இருக்கிறது 'கும்கி'.


இளைஞர்களின் ரிங் டோனாக மாறிய கும்கி பாடல்கள்
[
கொலிவுட்டில் மைனா பட வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள 'கும்கி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
கும்கி படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது படத்தின் பாடல்கள், ட்ரைலரை பார்த்தவர்கள் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் விநியோகஸ்தர்கள் அனைவருமே தயாரிப்பாளர் லிங்குசாமி அலுவலகத்தினை முற்றுகையிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கும்கி பாடல்கள் இளைஞர்களின் காதுகளுக்கு இசை விருந்தாக அமைந்துள்ளது.
'ஒண்ணும் புரியல', 'அய்யய்யோ ஆனந்தமே', 'சொல்லிட்டாளே அவ காதல' ஆகிய பாடல்கள் காதலர்களின் ரிங் டோனாக மாறியிருக்கிறது. இப்படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.
மைனா பட குழு அப்படியே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
அனைத்து படங்களிலுமே க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகனை சுற்றி தான் இருக்கும். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் பிரபு சாலமன், கும்கி க்ளைமாக்ஸ் காட்சியினை யானையை மையப்படுத்தி வைத்து இருக்கிறார் என்று தகவல்

 
 

1.படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்




2.படம் : கும்கி
இசை : D. இமான்
பாடியவர் : அதிதி பால்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்

ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே உறவே உனதே

ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ

ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
தங்கி கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதனை
கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏது காதல் ஓடவே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருவேன் சுகமே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

3.
படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்
வரிகள் : யுகபாரதி

நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற



4. படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : D இமான்
வரிகள் : யுகபாரதி

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஒருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல





5.படம் : கும்கி
இசை: D இமான்
பாடியவர்கள் : பென்னி தயால் & D இமான்
வரிகள் : யுகபாரதி

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேலை
கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதியெல்லாம் சுத்தி வித்தை காட்டுவோங்க
வேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு முட்ட நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொழப்போமே



6.படம் : கும்கி
பாடியவர் : மகிழினி மணிமாறன்
வரிகள் : யுகபாரதி
இசை : இமான்

சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்


7. படம் : கும்கி
இசை : இமான்
பாடியவர் : ஹரிச்சரண்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ
ஹய்யய்யய்யோ
ஒ ஹய்யய்யய்யோ

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்துவாய்
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

ஏ ஏ ஏ புள்ளே ஏ புள்ளே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இளநெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

நன்றி -தமிழ் பாடல் வரிகள் , விகடன் , லங்காஸ்ரீ

diSki -

நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

 
 
 

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 




 அ