Monday, July 02, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 13

1 . உங்கள் முதல் பதிவு எப்போ போட்டிங்கனு ஞாபகம் இருக்கா ? அந்த பதிவுக்கு எத்தனை பேர் கமெண்ட்ஸ் போட்டாங்க ? அதுல மறக்கமுடியாத கமெண்ட்ஸ் எது ?(உங்க ப்ளாக் ஓபன் பண்ணி பார்காமசொல்லணும் )


ஜூலை 17, 2010 .. ஏன்னா அதுதான் என் முத போஸ்ட்.. என்ன தர்ம சங்கடமான சூழ்நிலைன்னா முத போஸ்டே என் நண்பர் பாடல் எழுதிய படம்.. ஆனா படம் டப்பா.. டைட்டில்ல விருந்தாளி - அபாயம் போகாதே -ன்னு வெச்சாச்சு.. ராங்க் செண்ட்டிமெண்ட்.. நிறைய பேரு அவ்ளவ் தான் அட்ரா சக்க ஊத்திக்கும்னாங்க.. எனக்கும் ஒரு ஒரத்துல பயம் இருந்தது.. ஆனாலும் அப்படி ஏதும் நடக்கலை.. பாடல் ஆசிரியர் திரு முருகன் மந்திரம்.. அவருக்கு மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்திருக்கும். கமென்ட்ஸ் போட்டது நல்ல நேரம் சதீஷ்னு நினைக்கறேன்.. யாருமே கமெண்ட் போடாததால நான் தான் அவருக்கு ஃபோன் பண்ணி கமெண்ட் போடச்சொன்னேன் ஹி ஹி 


2 .உங்கள் தந்தையை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்கள் அந்த பதிவை படித்து உங்களை யாராவது பாராட்டிய அனுபவம் இருந்தால் சொல்லுங்க ?


எல்லாருக்கும்  அப்பா இருக்கு, அப்பா பற்றிய நினைவுகள் இருக்கு.. ஆனா நான் என் அப்பா பற்றி எழுதுனதும் ஏகப்பட்ட பாராட்டு,.,. காரணம் நான் சீரியஸா எதுவும் எழுதுனதே இல்லை.. பெரும்பாலும் காமெடி தான் மொக்கை தான்.. அதனால அவங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சிருக்கலாம்.. மும்பை பிரகாஷ், லண்டன், இலங்கை போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் அதற்கு பாராட்டு தெரிவிச்சாங்க.. மனசுக்கு மகிழ்ச்சி.. அப்பாவுக்கு மரியாதை.. எழுத்துக்கு ஒரு நிறைவு..


3 . உங்களிடம் கணினியும் ,இணய இணைப்பும் இல்லை என்று சொல்லி இருந்தீர்கள் உங்கள் அலுவலக கணினியில்தான் பதிவுகள் ,டவிட்கள், போடுகிறீர்கள், இது உங்கள் மேலதிகாரிக்கு தெரியுமா ? உங்கள் சக ஊழியர்கள் உங்கள்பதிவை படிப்பார்களா? உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய உங்கள் முதலாளிக்கு நன்றி சொல்லி இருகிறீர்களா ?



பழைய ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு தெரியும்.. புது ஆஃபீஸ்ல இருக்கறவங்களுக்கு  தெரியாது.. அடிக்கடி நான் மொபைல்ல பிஸியா இருக்கறதை பார்த்து அவங்க ஏதோ லவ் மேட்டர்னு அவங்களுக்குள்ளேயே  சிரிச்சுக்குவாங்க .. நன்றி- மனசுக்குள்ளேயே சொல்லிக்குவேன்..


4 .இந்த பதிவை போட்டு இருக்க கூடாதுன்னு நினைச்ச பதிவு எது ?


நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும்.. ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 4 ரெண்டில் சொன்ன கருத்துக்களில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. என் மனசுல பட்டதை பகிர்ந்தேன்.. அது தேவை அற்ற மனக்கசப்புகளை கொண்டு வந்தது.. இனி ஜாக்கிரதையா இருப்பேன்./. சொல்வதெல்லாம் உண்மையா இருக்கனும் அதே சமயம் எதை சொல்லனுமோ அதை மட்டும் தான் சொல்லனும்



5 .மறைக்காமல் சொல்லுங்க உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம்தானே ??


என் தளம் பெண்களுக்கானதல்ல... பெரும்பாலான விஷயங்கள் ஆண்களை குறி வைத்தே எழுதப்படுகின்றது .. ஆனா  பெண்களும் படிக்கும் தரத்தில் தான் இருக்கும்.. பதிவு போட்டதும் ஏதாவது கண்டனம் வந்தா சர்ச்சைக்குரிய லைனை திருத்திடுவேன்


6 . சகபதிவர்கள் பதிவை படிப்பதுண்டா , அவைகளில் பிடித்த பதிவர் &பதிவு ஒன்றை சொல்லவும் 


தினமும் 5 பதிவாவது படிப்பேன்.. கும்மாச்சி, தமிழச்சி,டாக்டர் ராஜ் மோகன், மங்கை,மெட்ராஸ் பவன் சிவக்குமார்



7 . உங்களை கலாய்ப்பவ்ர்களை திட்டிதீர்ப்பிர்களா? இல்லை ரசிப்பீர்களா ?


ரசிப்பேன்.. வரம்பு மீறாதவரை 


8 .தயவு செய்து ஜிகிடி ,பிகிடிக்கு அர்த்தம் சொல்லவும் ?


ஜிகிடி பிகிடிக்கெல்லாம் அர்த்தம்   கிடையாதுன்னு ஆயிரம் தடவை சொல்லீட்டேனே?


9 .முகநூல் , ட்விட்டர்,ப்ளாக்  எது ரொம்ப பிடிக்கும் ?


பிளாக் தான் முதல்ல  எண்ட்டர் ஆனேன்.. மார்க்கெட்டிங்க்காக ட்விட்டர், ஃபேஸ் புக் வந்தேன்.. ஆனா ட்விட்டர் தான் செம ஜாலி



10 . உங்கள் முகநூல் ,ட்விட்டர் கமெண்ட்ஸ் களுக்கு நீங்கள் பதில் சொல்வது அரிது இது ஏன் ? வேலைபளுவா ? இல்லை நிராகரித்தலா ?


 எனக்கு கிடைக்கற டைம் ரொம்ப கம்மி.. பதிவு டைப் பண்ணனும், சினிமா பார்க்கனும், வசனத்தை மறக்காம நினைவு வெச்சுக்கனும். இந்த பிசில ரிப்ளை தர டைம் இல்லை சாரி


11 . இன்னும் நிறைய  கேள்விகள் இருக்கிறது கேட்க அனுமதி உண்டா ?


கேளுங்க , கேளூங்க  கேட்டுக்கிட்டே இருங்க.  அப்புறம் நான் எப்படித்தான் பதிவை தேத்துவது?--

மேலே கண்ட கேள்விகள் அனைத்தும் Sasimohan Kumar உடையது



12. சினி பிரியன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்கீங்களே.  நமிதா வந்து ரிப்பன் வெட்டுனதுக்கு அப்புறம்தான் அதுல எழுத ஆரம்பிப்பீங்களாமே? நெசமா? - மெட்ராஸ் பவன் சிவக்குமார்


சினிமா சம்பந்தப்பட்ட மேட்டர்களை மட்டும் ஒரு தளத்துல தனியா தொடங்கலாம்னு ஆசைப்பட்டு அதை ரெஜிஸ்டர் பண்ணி வெச்சேன்.. அட்ரா சக்க விரைவில் இலக்கிய தளமாக மாறும்..  



13. காதலை  உங்களோட கண்ணோட்டத்துல நீங்க அதை எப்படி பார்க்குறீங்க?? (காதல் பற்றி உங்க கருத்து என்ன???)  - திரு எனும் சேலம் மேங்கோ சிட்டி பாய்


உண்மையான காதல் இன்னைக்கும் இருக்கு , ஆனா அளவில் குறைவா இருக்கு.. இன்னைக்கு கள்ளகாதல் தான் அதிகம் தென்படுது./.  உண்மைக்காதலுக்காக உயிரையே கொடுப்போம்னு எல்லாம் யாரும் வசனம் பேசரது இல்லை. பிராக்டிகல் லைஃப் வாழறாங்க.. கல்யாணம் ஆன பின்பு காதல் குறையக்கூடாது  .. உண்மைக்காதல்  என்பது உடலாலும், மனதாலும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருத்தல்




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :)
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html




டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html




டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html


டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html

டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

பேட்டி சுவாரஸ்யமாத்தான் போகுது வாழ்த்துக்கள் நண்பரே!

ராஜி said...

அட்ரா சக்க விரைவில் இலக்கிய தளமாக மாறும்..

>>>>
ஜிகிடி, கில்மா, சில்பான்ஸ்ன்னு வார்த்தைகள் போட்டு வரும் இலக்கியப் பிரிவை உருவாக்க போகும் சிபி வாழ்க.

காப்பிகாரன் said...

konja nala block vela seiyalayea open aga matenutuchu yethum problama