Wednesday, July 04, 2012

கலைஞர் -குஷ்பூ இணைந்து வழங்கும் சிறை நிரப்பும் போராட்டம் - காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk5xTG8IHZcOOoKMIQKsKayp3YL5BOgumoUeVzruTtYiCI3hbp6TWiVeA0_gnFYHys7bEW6nB12aJUf__IiYkXp_srecbaHKdi7fZCY5Owf-75SsIZFmMJDf3R3jXSV1s7RGf7qAYd6ko/s400/DN_01-02-09_E1_05-06%2520CNI.jpg 

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வரும் திமுகவினருக்கு பி கிளாஸ் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நல்ல சாப்பாடு அவர்களுக்குக் கிடைக்கும். சுடச் சுட உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு தரப்படும். அதாவது அவர்களுக்கு பி கிளாஸ் சாப்பாடு தரப்படுமாம்.

பி கிளாஸாக இருந்தாலும் சாப்பாடு சூப்பராக இருக்குமாம். காலையில் சுடச் சுட உப்புமா, வெண் பொங்கல், கஞ்சி ஆகியவை தரப்படும். இதை ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் என மாற்றி மாற்றித் தருவார்களாம்.

மத்தியான சாப்பாடாக சாம்பார், காய்கறி கூட்டு, ரசம், மோர் ஆகியவை கிடைக்கும். அப்பளம் தரப்பட மாட்டாது.

இரவுக்கு சாப்பாடும், சாம்பாரும் மட்டும்தானாம். அதேசமயம், சர்க்கரை வியாதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் 2 சப்பாத்தி தருவார்களாம்.

ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறியைப் போட்டு அசத்துவார்களாம்.

'ஏ' கிளாஸ் சாப்பாடு வேண்டுமென்றால்...

சிலர் ஏ கிளாஸ் சாப்பாடு வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றால், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு கோழிக்கறி குழம்பு கொடுப்பார்கள். மாலையில் கூடுதலாக சுண்டல், டீ ஆகியவை தருவார்கள். சப்பாத்தியும் விசேஷமாக கிடைக்கும்.


தூங்க போர்வையும், பாயும்

இரவில் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் போர்வையும், படுக்க பாயும் தருவார்களாம்.

மொத்தத்தில் எந்தவித குறையும் இல்லாமல் திமுகவினர் தங்களது காவல் நாட்களை சிறையில் கழிக்க முடியும்.


http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பஸ்கள், வேன்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது

இதேபோல தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கே.என்.நேரு கைது

திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.


http://moonramkonam.com/wp-content/uploads/2011/05/karunanidhi-rest-cartoon.jpg


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.


இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.


கனிமொழி இன்று சிறையில் அடைக்கப்பட்டால், அவர் சிறை செல்வது இது 2வது முறையாக இருக்கும். இதற்கு முன்பு அவர் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இன்று காலை கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார். அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கனிமொழியை வழியனுப்பி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். பஸ்சில் ஏறிய கனிமொழியை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராசாத்தி அம்மாள்.


தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjhAJ0jhTdeGBtlZseiGFOKIelH4FG1Eu6q3QcuAepn4w-UkxKZjP8mqWUfAYPv7Yh9Z2HtXpuYSWXCxtYAOH9zYVKj6Eyx5QZLKQIZqS8AnvDa28ofaqXsy46sLqic-5LyoK_wSMu0DU/s1600/kuspoo-95.jpg


காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல்,இன்றைய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.


காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக் கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக ஸ்டாலின் பங்கேற்பதை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியின்போது,

மிகுந்த எழுச்சியோடு இந்த போராட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆங்காங்கு மாவட்ட கழக செயலாளர்கள் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.


கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. எந்த இடத்திலே கலந்துகொள்வார் என்று இன்னமும் தெரியவில்லை. காலையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் (சைதாப்பேட்டையில் பங்கேற்பதாக பின்னர் அறிவிப்பு வெளியானது).


அவர் சற்று உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் (கொளத்தூரில் பங்கேற்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது).


போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.


http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg


 மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்பட மொத்தம் 5 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.


மதுரை நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மட்டும் போராட்டம் திட்டமிடப்பட்டது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் போராட்டம் நடந்தது.


இந்த ஐந்து போராட்டங்களிலும் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. வாடிப்பட்டியில்நடந்த போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக போராட்டத்திற்கு நகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார்.


இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போராட்டத்திற்கு வராதது திமுகவினர் மத்தியி்ல பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


1. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஏன் வர்லை?


 போங்க தலைவரே! சின்ன வயசுல ஃபில் இன் த பிலாங்க்ஸ் ( FILL IN THE BLANKS)-கோடிட்ட இடத்தை நிரப்புக -இந்தக்கேள்வியையே நாங்க நிரப்பாம எஸ் ஆன ஆளுங்க,, நீங்க ஜெயிலை நிரப்பக்கூப்பிட்டா எப்படி?

-----------------------------------------



2. பதவி வேணும்னா ஜெயிலுக்கு போகனும்..

தலைவரே! ஆல்ரெடி பதவி வேணும்கறதுக்காக கட்சிக்குள்ளேயே போட்டிக்கு இருந்த 2 பேரை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவன் தான் நான்.. இந்த தகுதி ஓக்கேவா?
----------------------------------------


3.மன்னர் ரொம்ப விபரமான ஆள்.. அப்டினு எப்படி சொல்றே?

கஜானாவை நிரப்பும்போது மட்டும் சத்தம் இல்லாம கமுக்கமா நிரப்பிக்கறாரு.. இப்போ சிறை நிரப்பும் போது மட்டும் நம்மளை கூப்பிடறாரு. 



------------------------------------


4. தலைவரே! ஜெயிலுக்குப்போய்ட்டு வந்தா நீங்க பதவி கொடுப்பீங்க ஓக்கே? எங்களுக்கு பொண்ணு எவன் கொடுப்பான்? # பிரம்மச்சாரியின் கேள்வி


----------------------------


5. மணல் லோடு லாரி லாரியா போகுதே, எதுக்கு?

சிறையை சீக்கிரம் நிரப்பத்தான்.. எதிர்பார்த்த அளவு கூட்டம் வர்லையாம்./. 



-----------------------


6. ஜெயிலுக்குள்ளே போய் மறுபடி எதுக்கு போராட்டம் பண்றாங்க?


சிறை நிரப்பும் போராட்டத்துல கலந்துக்கிட்டவங்களுக்கு  சோறே போடலையாம்.. செம பசி.. இப்போ வயிறு நிரப்பும் போராட்டம்..



--------------------------------


7. குடும்பத்துடன்  அவசியம் வந்துடுங்கன்னு சொல்லிட்டு போறாரே, மேரேஜ் இன்விடேஷனா?

 ம்ஹூம், சிறை நிரப்பும் போராட்டம்.. 



-----------------------------------


8.  தலைவரே! இன்னைக்கு ஜெயிலுக்குள்ளே  ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு.. 


 என்ன ஆச்சு?


ஜெயிலர் வேணும்னே சாவியை தொலைச்சுட்டு  லாங்க் லீவ்ல போய்ட்டாராம்.


------------------------------


9. ஓ! தமிழர்களே!தமிழர்களே!அம்மையார் என்னை ஜெயிலில் தூக்கிப்போட்டாலும் நான் பெயிலில் வந்து விடுவேன், அங்கே தங்கி விட மாட்டேன்



--------------------------

10. குஷ்பூவின் இடுப்பைக்கிள்ளலாம், சைக்கிள் கேப்பில் கிடா வெட்டலாம் என யாரும் எதிர்பார்த்து வந்தால் ஏமாந்தே போவார்கள், தனி செல்லாம் 



-----------------------

 நன்றி - தட்ஸ் தமிழ்

6 comments:

முத்தரசு said...

ம் ம்ம்.... நீங்க நடத்துங்க சித்தப்பு

rajamelaiyur said...

நீங்க கலக்குங்க ..

rajamelaiyur said...

இன்று
தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?

MANO நாஞ்சில் மனோ said...

போராட்டம் பிசுபிசுத்து போனதுதான் உண்மையாம்....! மூனா கானா அதிர்ச்சியில்....!

கும்மாச்சி said...

வழக்கம்போல செம கலக்கல்.

sarathy said...

அருமைதான் ஒவ்வொன்றும்... 3 & 7 க்கு தனி ஷொட்டு, ஐயா... ஜாக்கிரதை, வெளுத்துகட்டுங்கோ...