Thursday, October 10, 2013

இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல்

காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல்


காதலர் டோடி ஃபயீதின் கருவை வயிற்றில் சுமந்ததால் இளவரசி டயானா கொல்லப்பட்டாரா?: வெளிவராத புதிய தகவல்
லண்டன், அக்.10-

இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார் விபத்தில் பலியானார்.

சார்லசுடன் வாழ்ந்த போதே இன்னொரு நபரை காதலிப்பதாக டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து, டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத் வற்புறுத்தினார்.

இந்நிலையில், பாரீஸ் நகரில் தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார்.

சரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா - டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.

இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கடந்த மாதம் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

விபத்துக்கு பின்னர் பாரீசில் உள்ள பிட்டி - சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு டயானாவை தூக்கி வந்தபோது அவரது வயிற்றை 'எக்ஸ்-ரே' எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 - 10 வார கருவினை கண்டதாக ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர்.

அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி டயானாவை இங்கிலாந்து அரண்மனை வட்டாரங்கள் தீர்த்து கட்டி விட்டது.

கர்ப்பமாக இருந்த அவரது வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டனர் எனவும் தனது புத்தகத்தில் அலன் பவர் குறிப்பிட்டுள்ளார்.

thanx - maalaimalar

இளவரசி டயானா பாக்., டாக்டரை காதலித்தாரா ? இம்ரானின் மாஜி மனைவி ஜெமீமா பேட்டி


பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா மீது, உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே, நல்ல மரியாதை உண்டு. அவரின் மனிதாபிமான குணம் தான், இதற்கு காரணம். ஆனால், டயானாவின் சொந்த வாழ்க்கை, திருப்பங்களும், சோகங்களும் நிறைந்தவை. அவர் இறந்து, 16 ஆண்டுகள் ஆன நிலையில், அவரைப் பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.




பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், இம்ரான்கான், பிரிட்டனை சேர்ந்த, ஜெமீமா என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்தார். பின், இருவரும் பிரிந்து விட்டனர். இந்த ஜெமீமா, பிரிட்டன் பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "இளவரசி டயானா, பாகிஸ்தானை சேர்ந்த, ஹஸ்னத்கான் என்ற டாக்டரை காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக, என் உதவியை நாடினார். இரண்டு முறை பாகிஸ்தானுக்கு வந்தார். ஆனால், அவரின் அந்த காதல், கைகூடாமல், தோல்வியில் முடிந்து விட்டது...' என, தெரிவித்துள்ளார்.



ஜெமீமா போட்டுள்ள, இந்த குண்டு, பாகிஸ் தானிலும், பிரிட்டனிலும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 ஜோல்னா பையன்.

thanx - varamalar

2 comments:

Seeni said...

appadiyaa...!!?

”தளிர் சுரேஷ்” said...

இறந்தும் இன்னும் நியுஸ் தந்து கொண்டிருக்கிறார் டயானா! இனியாவது அவரை நிம்மதியா இருக்க விடமாட்டாங்க போல பத்திரிக்கை காரங்க!