Showing posts with label SHORT FILM REVIEWa அனுபவம். Show all posts
Showing posts with label SHORT FILM REVIEWa அனுபவம். Show all posts

Thursday, June 21, 2012

நாளைய இயக்குநர் - செமி ஃபைனல் - விமர்சனம் ( 17 .6.2012)

வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க.. 

இந்த வாரம் நடுவர்களா இயக்குநர் விக்ரமன், மைனா இயக்குநர் பிரபு சாலமன்..

பிரபு சாலமன்...  -. எங்களுக்கு நாளைய இயக்குநர்  மாதிரி ஒரு பிளாட் கிடைச்சிருந்தா 12 வருஷங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்.என்னோட அடுத்த படம் கும்கி. அதாவது பயிற்சி கொடுக்கப்பட்ட யானைகள் வாழ்க்கை பற்றி. பின்னணில ஒரு காதல் கதை .. கிராமத்துல நடக்கும் பிரச்சனைகள்.. இப்படி போகும்.. 


விக்ரமன் - இந்த வாரம் டாபிக் போலீஸ் ஸ்டோரிஸ், சயின்ஸ் ஃபிக்சன்



#
என்னடா பிரச்சனை உங்களுக்கு ?-kovai mani



1. இயக்குநர் பெயர் - பாரதி பாலா , குறும்படத்தின் பெயர் - சத்தியப்பிரமாணம்


1960 களில் வந்த பழைய படங்களை கிண்டல் பண்ற மாதிரியும், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலுமா இந்தப்படம் எடுத்திருக்காரு.. பின்னணி இசை , உடை வடிவமைபு, உடல் மொழி, வசனம் எல்லாமே அப்படியே அந்தக்காலம்.. ஐ திங்க்.... இதுதான் முதல் பழைய கால பிரதிபலிப்பு முதல் குறும் படம்./.

போலீஸ் உயர் அதிகாரி அண்ணன் தம்பி 2 பேரையும் கூப்பிட்டு ஒரு பொறுப்பை ஒப்படைக்குது.. அவங்க 2 பேரும் போலீஸ் தான்.. ஒரு கடத்தல் கும்பலை பிடிக்கும் வேலை.. 

 இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. ஸ்கூல்ல படிக்கும்போதே டீச்சர் “ நீங்க என்னவாகனும்னு ஆசைப்படறீங்கன்னு கேட்டப்பவே 2 பேரும் ஒரே மாதிரி போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்டவங்க,.. 

பழைய பட சஸ்பென்ஸ் மாதிரியே அண்ணன் தம்பி ராமு- குமார்ல ராமுதான் வில்லன்.. ஆனாலும் அவனை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைக்கறதுதான் கதை.. 

 மேலோட்டமா பார்த்தா அல்லது எழுத்து வடிவில் இதை படிக்கும்போது அரைச்ச மாவுதானே என்ர சலிப்பு வரும்.. ஆனாலும் இந்த 8 நிமிட குறும்படத்துக்காக எடுத்துக்கொண்ட உழைப்பு அதிகம்.. 

 ஆனாலும் உழைப்பு அதிகம் என்பதற்காக யாரும் படங்களை ரசிப்பதில்லை.. அப்படி ரசிச்சிருந்தா கமல் ஹாசன் ரஜினியை பீட் பண்ணி இருப்பாரே?



விக்ரமன்  கமெண்ட் பண்றப்போ  “ ஸ்பூஃப் ட்ரை பண்ணி இருக்கீங்க. ஆனா அதிகம் ஒர்க் அவுட் ஆகலை.. 1960 டூ 75 அப்படியே கண் முன்னால் நிறுத்தினீங்க அப்டினு பாராட்னாரு.. 

சாலமன் - ஈஸ்ட்மென் கலர், டைட்டில் டிசைன்,  பின்னணி இசை எல்லாம் அபாரம்.. ஏன்னா அந்தக்காலத்துல ஈஸ்ட்மென் கலர்ல படம் எடுக்கறது அபூர்வம்.. அதனால அதை பெருமையா டைட்டில்ல போட்டுக்குவாங்க , அதைக்கூட மிஸ் பண்ணாம  கரெக்டா நோட் பண்ணி டைட்டில்ல யூஸ் பண்ணி இருக்கீங்க.. குட்.. நேர்த்தியான, உண்மையான உழைப்பு.. 


ஒளிப்பதிவுக்கு  பரிசு வாங்குச்சு.. 



Prime Minister Manmohan Singh today left for Rio De Janeiro to attend the Rio+20 summit, the three-day meeting to be attended by 193 nations.

Singh was here in this Mexican resort to participate in the seventh summit of the Group of developed and developing countries(G-20).


2,இயக்குநர் பெயர் -ஸ்ரீகணேஷ் , குறும்படத்தின் பெயர் - ஒரு கோப்பை தேநீர்

 எஸ் ராம கிருஷ்ணனின் சிறுகதையை பேஸ் பண்ணி  மகேந்திரன் பாணில அழகிய படம்.. 
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு கைதி .. 2 பேரும் லேடீஸ்.. கோர்ட்டுக்கு போற வழில அவங்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் தான் படம்.. 

 படத்தோட கதைப்போக்கு அன்பே சிவம் டைப் தான்.. அதாவது மாறுபட்ட 2 கேரக்டர்களை வெச்சு இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கருத்தை மக்களுக்கு சொல்வது ..

கைதி சின்ன விஷயத்துக்காக திருடி மாட்டிக்கறா.. அவளை கோர்ட்ல ஒப்படைக்க லேடி போலீஸ் கூட்டிட்டு போறாங்க,.,. அவங்க அன் மேரீடு.. வழில அவங்க மாமா கிட்டே பேசும்போது அந்த மேட்டர் தெரிய வருது.. போலீஸ்னாலே மாப்பிள்ளைங்க பயப்படறாங்க. அதனால லேடி போலீஸ்க்கு வருத்தம்.. 

 இதுல என்ன காண்ட்ரவர்சின்னா போலீஸ் வேலைல இருந்தும் அந்த லேடி டென்ஷனா இருக்காங்க, கைதியா இருந்தும் அந்த லேடி ஜாலியா , எதைப்பற்றியும் கவலை இல்லாம இருக்காங்க.. வழி பூரா தொண தொணனு பேசிட்டே வர்றா.. 

 திடீர்னு அந்த லேடிக்கு மென்சஸ் ஆகிடுது. போலீஸ் கிட்டே மெடிக்கல் ஷாப்ல நாப்கின் வாங்கித்தாங்கனு கேட்கறா.. போலீஸும் வாங்கித்தருது.. இதே ஒரு ஆண் போலீஸா இருந்தா கிண்டல் தான் பண்ணுவாங்க.. ஒரு பொண்ணா  இருப்பதால் தான் வலி உங்களுக்கும் தெரியுதுன்னு சொல்லி படத்தை செண்ட்டிமெண்ட்டா முடிக்கறாங்க

 இதுல முக்கியமான 2 கேரக்டர் நடிப்பும் கிளாஸ்.. போலீஸா வரும் நடிகை முகத்தில் கவலைச்சுருக்கங்கள் அப்படியே கண் முன் ... கைதியின் தெனாவெட்டுப்பேச்சு கலக்கல்.. 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. கில்மா லேடி - போற வர்றவங்க எல்லாம் யூஸ் பண்ண நான் என்ன குப்பைத்தொட்டியா? 


2. இங்கே பாருங்க மேடம், போலீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்கன்னா ஒரே பார்வை தான் ( எவன் சொன்னது? யூனிஃபார்ம்ல இருந்தா பம்முவோம் ஹி ஹி )


3. சாஃப்ட்வேர் கம்ப்பெனில ஒர்க் பண்றவன் எதுக்கு போலீஸ் லேடி மேரேஜ் பண்ணனும்னு இருக்கு? அவனுக்கு தோசை சுட்டுப்போடும் மனைவி போதாதா?


4. போலீஸ் - யார்டி அவன், உனக்கு ஹாய் சொல்லிட்டுப்போறான்?

 சும்மா. இப்போ ஜெயிலுக்கு போனா வெளில வர எப்படியும் 6 மாசம் ஆகும்.. அதான் அனுபவிக்கலாம்னு.. 


5. லீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் பெண்களுக்கு இந்த மாதாந்திர வலி பொதுவானது.. எல்லாருக்கும் வலிக்கும். 

6. நான் 1 கேட்பேன், பதில் சொல்லு.. நீ ஏன் திருடி ஆனே?


 நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க? 


7. உங்களை அக்கான்னு கூப்பிடவா?

 வேணாம்.. 

சரி ஏட்டம்மான்னு கூப்பிட்டுக்கறேன்.. 


ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் நல்லா இருந்தது.. 


சாலமன் - டைட்டில் சரி இல்லை, இன்னும் கிரிப்பா வெச்சிருக்கலாம் ( எப்படி? ஸ்ட்ராங்க் டீ 1 அப்டின்னா? )


விக்ரமன்  - மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்துல ஒரு தீம் மியூசிக் வரும்.. படம் முடிஞ்ச பின்னாலும் நம்ம மனசுல தங்கும் இசை அது.. அதே மாதிரி இந்தப்பட தீம் மியூசிக்கும் இருந்துச்சு வெல்டன். 



இந்தப்படம் இந்த வாரத்தின் சிறந்த படமா செலக்ட் ஆச்சு. சிறந்த நடிப்புக்கு 2  ஹீரோயின்ஸ்க்கும் கிடைச்சுது


ரெடி....1....2.....



3. இயக்குநர் பெயர் -செந்தில்   , குறும்படத்தின் பெயர் -ரெட்டைக்குழல்

 ரிட்டயர் ஆகப்போகும் ஒரு போலீஸ்காரரின் கடைசி பணி நாள் தான் கதை.. 
எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை..அப்டின்னு மனைவி புலம்பறாங்க.. பொதுவா இந்த சம்சாரங்களே புலம்பல் பார்ட்டிங்க தான்.. போலீஸ்காரர் ஸ்டேஷன் போறாரு./..அவரோட துப்பாக்கியை மிஸ் பண்ணிடறாரு.. கடைசி நாள் எல்லாம் ஒப்படைக்கனும்

 யார் எடுத்திருப்பாங்க? அவர் லிஸ்ட் அவுட் பண்ணி பார்க்கறார்.. அவரோட எதிரிகள் யார் எல்லாம் இருக்காங்க.? சமீபத்திய கேஸ்கள்ல மாட்டுனது யார்? ஒவ்வொருவரா விசாரனை பண்றாரு.. யாரும் எடுக்கலை.. 

 கடைசில பார்த்தா ஒரு லேடி கான்ஸ்டபிளே  அதை எடுத்து ஒளிச்சு வெச்சு அதுவே கண்டு பிடிச்சுத்தர்ற மாதிரி ஷோ காட்டி நல்ல பேர் வாங்குது.. என்ன ட்விஸ்ட்னா  அவர் பையன்  இந்த லேடியை லவ்விங்க். மாமனார்ட்ட நல்ல பேர் எடுக்க இப்படி ஒரு டிராமா...


மலைக்கிராமம் அப்படியே கண் முன் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்.. 


லாஜிக் மிஸ்டேக்கா  சாலமன் சொன்னது -நானும் சினி இண்டஸ்ட்ரில பல தடைகளை தாண்டி வந்ததால உங்க மனசை புண்படுத்த விரும்பலை, அதனால . சில குறைகளை சாஃப்ட்டா சொல்றேன்.


1.  ஒரு ரைபிளை இப்படி அசால்ட்டா ஒரு போலீஸ் வெச்சுட்டு போக மாட்டார். அதை வைக்க ஒரு லாக்கர் இருக்கு.. அதுல தான் வைப்பாங்க


2. துப்பாக்கியை காணோம்னா ஒரு பதட்டம், பரபரப்பு வேணும்.. எதையும் அந்த போலீஸ் காட்டலை. மெத்தனமா இருந்தா பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மட்டும் எப்படி ஒரு ஆர்வம் வரும் ?





 பாராட்டு பெறும் வசனங்கள்

1.  என் 33 வருஷ சர்வீசை வெறும் 7 மணி நேரம் மாத்திடும் போல இருக்கே?


2. எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை.




நிகழ்ச்சித்தொகுப்பாளர் கீர்த்தி கிட்டே ஒரு முன்னேற்றம்.. முதல்ல எல்லாம் ரொம்ப  கேவலமான நைட்டியை போட்டுட்டு வருவார்.. இப்போ கொஞ்சம் டீசண்ட்டா நைட் கவுன் போட்டுட்டு வர்றார்.. ( ஒரு வேளை ஷூட்டிங்க் நைட்ல நடக்கறதால  மேட்சுக்கு மேட்சா நைட் டிரஸ்ல வர்றாரோ?)

Tuesday, June 12, 2012

நாளைய இயக்குநர் -விமர்சனம் (10.6.2012)



வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க..

நடுவர்களான இயக்குநர் விக்ரமன், சுந்தர் சி ரெண்டு பேர்ட்டயும் ஆர்த்தி ஒரு கேள்வி கேட்டாங்க..நம்ம நாட்டுல நடத்தற ஷூட்டிங்க், ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல நடத்தற ஷூட்டிங்க் எது ஈசி,  என்ன ரீஸன்?


ஃபாரீன்ல செலவு கம்மி.. 10 பேரை வெச்சு முடிச்சுடலாம்.. இங்கே யூனியன் அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்.. 100 பேரை வெச்சு  எடுக்கனும், செலவு, சிரமம் எல்லாம் பல மடங்கு.. அப்புறம் நம்ம நாட்ல ஷூட் பண்ண பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. உதாரணமா மேட்டூர் டேம்ல ஒரு ஷூட்னா வன இலாகா, PWD,போலீஸ் இப்படி பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. ஃபாரீன்ல அப்படி இல்லை.. ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட்ல சொன்னா போதும்.. அவங்களே ஒரு ஆளை கூட அனுப்புவாங்க .. ஷூட்டிங்க்ல ஏதாவது பிரச்சனைன்னா அவங்களே உதவி செய்வாங்க, க்ளியர் பண்ணி விடுவாங்க 


அப்டின்னாரு சுந்தர் சி..அதே போல் விக்ரமன் சாரும் ஸ்விச்சர்லாந்தில் ரொம்ப ஈசியா தான் நடத்துன பட ஷூட்டிங்க் பற்றி சிலாகிச்சு பேசுனாரு..



1.இயக்குநர் பெயர் - மித்ரன்  , குறும்படத்தின் பெயர் - மனிதம் ( அறம் செய்ய விரும்பு )


ஒரு நாட்டுல ஒருத்தர் செய்யற தப்பால அந்த நாட்டுக்கே  கெட்ட பேர் வர்றது எப்படி? எதனால குறை சொல்றாங்க? அப்டிங்கற ஒன் லைன் தான் கதைக்கரு.. சமீபத்துல ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தான் கதைக்கான பேசிக்  KNOT

ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் ஒரு இந்திய மாணவன் செல் ஃபோன்ல அப்பா கிட்டே பேசிட்டு இருக்கான்.. அப்போ ஒருத்தன் வந்து அவனை கத்தியால குத்திட்டு போயிடறான்.. கொலை செஞ்சவனோட அம்மா வீட்ல அவனோட வித்தியாச நடவடிக்கைகளை நோட் பண்றாங்க.. இன்னொரு பக்கம் கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா கண்ணீர் விட்டுட்டு இருக்காரு..

 கலவரம், போராட்டம் நடக்குது.. நாடு முழுவதும் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் ஒரே ஒரு நாள் இந்திய உணவை சாப்பிட முடிவு செய்யறாங்க. ஒரு அஞ்சலி மாதிரி.. கொலையாளியின் அம்மாவே போலீஸ்ல அவனை பிடிச்சுக்கொடுத்துடறா.ங்க.

 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  கேவலம், ஒரே ஒரு செல் ஃபோனுக்காக ஒரு ஆளையே கொல்வாங்களா?

2. டேய் இந்தியா வர்றப்ப எனக்கு ஃபாரீன் சரக்கு வாங்கிட்டு வாடா..

அப்பா.. பையன் கிட்டே இப்படியா பேசுவாங்க?

புள்ளையையே எக்ஸ்போர்ட் பண்ணிட்டேன், சரக்கை இம்போர்ட் பண்ணக்கூடாதா?

3. குத்தறதையும் குத்திட்டு குருமா வேற சாப்பிடுவாங்களா?

4. என் பையன் எங்கே எல்லாம் போனானோ அங்கே எல்லாம் நானும் போய் பார்க்கனும்



சுந்தர் சி இந்தப்படத்தை ரொம்ப சிலாகிச்சு பாராட்டுனாலும் படம் ரொம்ப ஸ்லோவா போகுது,இன்னும் ஸ்பீடு பண்னனும்னாரு



2..இயக்குநர் பெயர் - கார்த்திகேயன் , குறும்படத்தின் பெயர் - புழுதிக்காடு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஒளிப்பதிவுல கலக்கி எடுத்துட்டாங்க .. அழகிய கிராமம்.. அங்கே பனை மரங்கள் உள்ள இடம்.. நிர்மலமான வானம், குருவி, ஓடை, பச்சைப்பசேல் வயல்கள், என ஷாட் பை ஷாட் பின்னி எடுத்தாங்க.. ஆனா கதை தான் ஒண்ணும் தேறலை..

 படத்துல வசனமே இல்லை.. 5  பிட் பாட்டுக்கள்.. ஓப்பனிங்க் ஷாங்க், ஒரு கொண்டாட்டப்பாட்டு, ஒரு ஒப்பாரிப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, நண்பர்களுடனான ஒரு தெம்மாங்குப்பாட்டு.. அவ்ளவ் தான் படம் முடிஞ்சுது.. இதுல என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலை..

 இதே கேள்வியை ஜட்ஜ்ங்க கேட்டப்ப “ ஹீரோவை அவன் காதலி மறந்துட்டு போயிடறா.. ஆனா ஹீரோவால அவளை மறக்க முடியலை.. அவ நினைவாவே காலம் எல்லாம் வாழறார்.. அதைத்தான் சொல்ல வந்தேன்னாரு.. ஆனா காட்சிகள்ல அந்த வலி பதிவு செய்யப்படலை.. 


பாடல் மூலமா கதை சொல்றது நல்ல விஷயம் தான் நாங்க எல்லாம் ஒரே பாட்டுல ஹீரோவை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கோம், ஆனா நீங்க சொன்ன கதைல எதுவும் தேறலை, பெட்டர்  லக் நெக்ஸ்ட் டைம் அப்டின்னாரு விக்ரமன்


3. இயக்குநர் பெயர் - நித்திலன் , குறும்படத்தின் பெயர் - சிரிப்பு வர்லைன்னா  பொறுப்பு நாங்க இல்லை

இதுல ஸ்பெஷல் விஷயம் என்னான்னா படத்தோட  ஹீரோ நம்ம ஊர்க்காரர் சாம் ஆண்டர்சன்.. 

ஒரு அப்பா தன் பையனை மன நல  மருத்துவரிடம் கூட்டிட்டு வர்றார்.. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு.. விசாரிச்சா காதல் தோல்வி.. தன்னோட  3 காதல் தோல்விகள் பற்றி ஹீரோ புளி போடாமயே விளக்கறாரு.. அப்போ டாக்டர் சொல்றாரு.. என் கிட்டே  ஒரு மாத்திரை இருக்கு, அதை விழுங்கிட்டா நீ கடந்த காலத்துல பயணம் செஞ்சு நீ செஞ்ச தப்பை கரெக்ட் பண்ணலாம், உன் காதலியை கிஸ் பண்ணலாம், என்ன வேணா செய்யலாம்..

 அட்டகாசமான வாய்ப்பு.. ஆனா இந்த ஹீரோ என்ன பண்றாரு ? கடந்த காலத்துல போய் தன்னை  , தன் காதலை கேவலப்படுத்திய ஒரு காதலி கிட்டே 1000 ரூபா நோட்டுல ஐ லவ் யூ எழுதி கொடுக்கறாரு.. அந்த பொண்ணு கெக்கே கெக்கே பிக்கெக்கே  என சிரிச்சுட்டே வாங்கிக்குது.. உடனே பளார்னு ஒரு அறை விட்டுட்டு ரிட்டர்ன் வந்துடறாரு.. 

 ரெண்டாவது காதல்.. அதை எதிர்த்த தன் அப்பாவை அடிச்சுட்டு வர்றாரு.. க்ளினிக் வெளீல வெயிட் பண்ணிட்டு இருந்த அப்பா அழுதுட்டே வர்றாரு.. அங்கே அடிச்சா இங்கே வலிக்கும் - ரமணா டயலாக் போல .. 

 மூணாவது காதல் -ல ஒரு ட்விஸ்ட்.. அதாவது காதலியின் அண்ணன் இப்போ மாத்திரை கொடுத்த டாக்டர் தான். அவரையும் ஹீரோ அடிக்கறாரு.. டாக்டர் அய்யோ அய்யோன்னு கத்த படம் ஃபினிஷ்.. 


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  கடந்த காலத்துல பயணிக்கும் அரிய வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் பாசிட்டிவா திங்க்  பண்ணி  காதலியை கரெக்ட் பண்ண பாப்பாங்க. ஹீரோ 3 காதலிகளை கண்டுக்கவே இல்லை.. பழி வாங்கும் உணர்ச்சி தான் அவன் கிட்டே இருக்கு.. 


2. காமெடிக்குத்தான் என்றாலும் 3 ஃபிளாஸ்பேக்க்கிலும் அவர் அடி  போடுவது போர்..  ஒவ்வொரு காதலையும் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.. 


3. நான் எடுக்க நினைச்ச கதையே வேற.. சாம் அண்டர்சன் கால்ஷீட் சொதப்பலால் வேற கதையை மாத்த வேண்டியதா போச்சுன்னு சமாளீஃபிகேஷன் கொடுத்ததை ஏத்துக்க முடியலை..


 சிறந்த படம் முதல் படமே.. அவார்டு வாங்குனதும் அதுவே..

Tuesday, June 05, 2012

நாளைய இயக்குநர் - ஃபேன்ட்டசி கதைகள் -(27.5.2012)-விமர்சனம்

மரசிற்பம் செய்யும் மாமனிதர்..........-k r vijayan.
Photo: மரசிற்பம் செய்யும் மாமனிதர்...........
1. இயக்குநர் பெயர் - பாக்யராஜ் கண்ணன் - குறும்படத்தின் பெயர் - வசூல்

இயக்குநர் தன் பேருக்குத்தகுந்த மாதிரி குறும்பான கதையைத்தான் செலக்ட் பண்ணி இருக்காரு..

ரஜினியின் அதிசயப்பிறவி,வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் படங்கள் மாதிரி இதுவும் ஒரு ஃபேண்டசி மேல் லோக கதை தான்.. அதாவது எம தர்ம மகாராஜா தன் சின்ன வீடான ரம்பை வீட்டுக்கு போறப்ப சாரி போன பின் அங்கேயே பாசக்கயிறை மறந்து வெச்சுட்டு வந்துடறாரு .. அதனால காலைல பூலோகத்துல ஒரு  உயிரை எடுக்க வேண்டிய சூழ்நிலைல அவரால உயிரை எடுக்க முடியலை.. அந்தாளோட சம்சாரம் அவரை எமலோகத்துக்கு கூட்டிட்டுப்போக ஒரு கண்டிஷன் போடறாங்க.. அதாவது அவங்க கணவர் பல பேருக்கு பணம் கடன் கொடுத்திருக்கார்.. அந்த கடன் பல லட்சங்கள் மதிப்பு பெறும்.. ஏதாவது ஒரு கடனை வசூல் பண்ணிக்கொடுத்துட்டு கூட்டிட்டுப்போங்கங்கறாங்க .. ( இவ தான்யா பொண்டாட்டி - டாக்டர் ராஜசேகர்க்கு அடுத்த பட டைட்டில் ரெடி )

எமனும், சித்திர குப்தனும் அங்கே இங்கே அலைஞ்சு பார்க்கறாங்க, வேலை ஆகலை..என்ன நடக்குதுங்கறதை காமெடியா சொல்லி இருக்காரு.. ஒரு 8 நிமிஷ படத்துக்கு அவர் உழைப்பு அதிகம் .. வெல்டன் சார்..

எமனா நடிச்சவர் நடிப்பு கலக்கல்னா அந்த சொர்ணாக்கா நடிப்பு செம.. வசனங்களில் நகைச்சுவை இழை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடனை எப்போ ரிட்டர்ன் பண்ணப்போறே?

எப்போ வேணும்னாலும்.. கைல காசு இருக்கறப்ப

2. மகனே!

யார்.. என் அப்பனே!

3. ஏத்துன போதையைக்கூட இறக்கிடலாம், ஆனா கொடுத்த கடனை திருப்பி வாங்கவே முடியாது

4. அவங்க ரம்பா மாதிரி என் கண்ணுக்கு தெரியறாங்க..

 என் கண்ணுக்கு என் வாகனம் எருமை மாதிரி தெரியறாங்க..

5. எனக்கு ஒரு சந்தேகம்..

 கேளு

 பவர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

6. இப்போ கணக்கு சரியா வருதா?

ம்ஹூம், கணக்கு சரியா வர்லை, காதல் தான் வருது



எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.
Photo: எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது  சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.




2. இயக்குநர் பெயர் - ஸ்ரீகணேஷ்  - குறும்படத்தின் பெயர் - பரிசு



ஒரு ஏழை.. குடிசை வீட்ல வசிக்கறாரு.. அவர் குடிகாரர்.. மனைவிதான் பொறுப்பா வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாத்துது.. அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை.. 10 வயசு.அந்தபெண்ணோட கனவுகள் பூ வளர்க்கனும்,கிதார் கத்துக்கனும், சைக்கிள் வாங்கனும்,,


 சைக்கிள் வாங்க காசு சேர்க்கறா.. அம்மா தீனி வாங்க குடுக்கற காசு, அக்கம் பக்கம் வீடுகளில் கடை கண்ணிக்குப்போய் அவங்க தர்ற டிப்ஸ் காசு எல்லாம் உண்டியல்ல சேர்த்து வைக்கிறா..


அப்போ டி வி ல ஒரு நியூஸ்... தானே புயல் நிவாரண நிதிக்காக அறைகூவல் விடுக்கறாங்க.. இவ தன் உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை கொண்டு போய் டி வி ஸ்டேஷன்ல கொடுக்கறா.. அவளைப்பற்றி டி வி நியூஸ்ல சொல்றாங்க.. அதைப்பார்த்த அவ பெற்றோர் உள்ளம் உருகறாங்க, அவ அப்பா இனி நான் குடிக்கலை.. 2 மாசம் குடிக்காம பணம் சேர்த்து வெச்சிருந்தா உனக்கு சைக்கிள் வாங்க காசு சேர்ந்திடும்னு சொல்றார்..


க்ளைமாக்ஸ்ல டி வி ல இருந்து அவ வீட்டுக்கு சைக்கிள் பரிசு வருது..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சைக்கிள் வாங்கி இருந்தாக்கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.. இப்போ தானே நிவாரண நிதிக்கு பணம் குடுத்தது மனசுக்கு நிறைவா இருக்கு

2. நீ ஏம்மா இந்த வீட்ல வந்து பிறந்தே?

3. ஃபோட்டோ எடுத்துக்கவா?

வேணாம் சார்.. நான் அழுத மாதிரி இருக்கேன், நல்லா வராது

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காசின் தேவை உள்ள ஏழைப்பெண் அடிப்படையில் கிறிஸ்டினாக இருந்தாலும் தான் கண்டெடுக்கும் 100 ரூபாய் பணத்தை இந்து உண்டியலில் போடுவது

2. அந்த 100 ரூபாய் இருந்தா குவாட்டர்க்கு ஆச்சு, என அப்பாவும், 4 கிலோ அரிசியாவது வாங்கி இருக்கலாம் என அம்மாவும் எதார்த்தமாக பேசுவதும், தன் பெண்ணின் நல்ல குணத்தை அவர்கள் புரியாதபடிக்கு இருப்பதும், பின் தாமதமாக அதை உணர்வதும்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அந்த சிறுமி டி வி ஸ்டேஷன்ல பணம் குடுத்துட்டு அப்பவே கிளம்பிடுது.. ஜஸ்ட் ஒரு ஃபோட்டோ  எடுக்கலாம்னு டி வி ஆஃபீசர் கேட்டப்பக்கூட வேனாம்னு சொல்லி கிளம்பிடுது.


டி வி செய்தில கூட அந்த சிறுமி பேர் சொல்லலை.. அப்படி இருக்கும்போது சைக்கிள் பரிசு தர அந்த ஆஃபீசர் கரெக்டா அந்த குடிசை வீட்டுக்கு வருவது எப்படி? எந்த விபரமும் அந்த சிறுமி சொல்லலையே?


2. அப்பா திருந்திடறாரு.. அப்போ அந்த சிறுமி தூங்கிட்டு இருக்கு.. அவளை எழுப்பி விட்டு அப்பா “ நான் திருந்திட்டேன்”னு சொல்றாரு.. மகள் மேல் பாசம் உள்ள எந்த அப்பா தூக்கத்தை கலைச்சு விட்டு தான் நல்லவன்னு சொல்வாரு.. காலைல சொல்லிக்கலாமே?

Photo


=

3. இயக்குநர் பெயர் - அஸ்வின்   - குறும்படத்தின் பெயர் - இன்பாக்ஸ்

இது செம ரொமாண்டிக் கதை.. எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க..

ஹீரோயின் 75 மார்க்  ஃபிகரு.. செம கலரு.. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல என்னமோ வாங்குது,, ஒரு அழகான கேரி பேக் மாதிரி 1 தர்றாங்க.. அதே கடை, ஹீரோவும் ஏதோ வாங்கறாரு.. அவருக்கும் ஒரு கேரி பேக்..

அந்த கேரி பேக் மெயில் சேட் மாதிரி யூஸ் ஆகுது.. அதாவது ஒரு சீட்ல ஹீரோ தன் பேரை எழுதி உள்ளே போட்டா அது ஹீரோயின் பேக்ல போய் சேருது, ஹீரோயின் அதை படிச்சுப்பார்த்துட்டு அதே போல் ரிப்ளை பண்ணுது.. 2 பேரும் தங்களைப்பற்றி தகவல்களை பகிர்ந்துக்கறாங்க..

2 பேரும் அதை வெச்சு சீட்டு விலையாடறாங்க.. எப்படின்னா 13 கார்டு அந்த பாக்ஸ்ல போட்டா அவ பாக்ஸ்க்கு அது போயிடும்..திடீர்னு கேரி பேக் கிழிஞ்சுடுது.. ஹீரோ சோகம் ஆகறாரு.. ஹீரோயினும் தான்.. 2 பேரும் எதேச்சையா பார்க் வர்றாங்க.. ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க, சேர்ந்துடறாங்க ...

நம்ப முடியாத கதை தான்.. ஆனாலும் ரசனையா தான் எடுத்திருக்காங்க

1. படத்தில் நோ வசனம்.. எல்லாம் காட்சிகள் தான் மகேந்திரன் சார் படம் மாதிரி

2. படம் பார்க்கறவ்ர்களை ஏங்க வைத்து விடுகிறது அது போல் ஒரு கேரி பேக் கிடைக்காதா என..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஒரு சீன்ல ஹீரோயின் லேப்டாப்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கு.. டக்னு அதை க்ளோஸ் பண்ணிடுது.. சைன் அவுட் கொடுத்து ஆஃப் பண்ணி அப்புறமா லேப்டாப்பை மூடனும்கற பேசிக் நாலெட்ஜே கிடையாதா?

2. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் வெவ்வேற ஏரியா.. அதெப்பிடி கரெக்ட்டா ஒரே பார்க் வந்து ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க? இன்னும் நம்பகத்தன்மையோட  அந்த ட்விஸ்ட்டை யூஸ் பண்ணி இருக்கலாம்..

இந்தப்படத்துக்கு சிறந்த படம் விருது கிடைச்சுது..