Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Friday, February 08, 2013

குறும்பட இயக்குநர்களால் தமிழ் சினிமா சீராகுமா? சீரழியுமா? - ஆடுகளம் வெற்றி மாறன் பேட்டி

இது சினிமாவுக்கு நல்லதா...கெட்டதா ?

எஸ்.கலீல்ராஜா படம்: ஆ.வின்சென்ட் பால் 
தலை எங்கே என்று தெரியாத அளவுக்கு முகத்தைச் சுற்றி முடி வளர்ந்திருக்கும் புறா, ஆளைப் பார்த்ததும் படபடக்கும் பந்தயப் புறா, அச்சு அசலாக கோழியைப் போலவே இருக்கும் ஃபேன்ஸி புறா, பின் வாலைச் சிலிர்த்துக்கொண்டு அலையும் வெண்புறா என இயக்குநர் வெற்றிமாறனின் அலுவலகமே புறாக்களாலும், அதன் சத்தங்களாலும் நிரம்பியிருக்கிறது.



''புறா வளர்க்கணும்னு ரொம்ப ஆசை. அதிலும் குறிப்பா பந்தயப் புறா. அப்போ வீட்ல கேட்டப்ப திட்டு விழுந்துச்சு. இப்போதான் சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன்ல... வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். எல்லாமே செம காஸ்ட்லி புறாக்கள். பார்க்கிறவங்களாம், 'என்ன... பந்தயப் புறா வெச்சுப் படம் எடுக்கப்போறீங்களா?’னு கேட்குறாங்க. இதுகளுக்குச் செலவு பண்ணின பணத்துக்கு, ரெண்டு படம் எடுத்தாத்தான் சம்பாதிக்க முடியும் போல!'' - கறுப்புத் தாடிக்குள் இருந்து பளீரெனச் சிரிக்கிறார் வெற்றிமாறன்.  


''சிம்புவோட சேர்ந்து 'வட சென்னை’ பண்ணப்போறதா சொன்னீங்க... ஒண்ணும் சத்தமே காணோம்?''



''எல்லாரும் என்ன பிரச்னைனு கேட்கிறாங்க. எனக்கும் சிம்புவுக்கும் நடுவுல எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கோம். சிம்புவோட டேட்ஸ் கிடைக்கிறதுலதான் பிரச்னை. சீக்கிரமே எங்க காம்பினேஷன்ல படம் ரிலீஸ் ஆகும்.''


''தனுஷை வெச்சுத் திரும்பவும் படம் பண்றீங்கபோல?''



''ஆமா. 'ஆடுகளம்’ வந்து ரெண்டு வருஷமாச்சு. நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் மூணு வருஷம் பக்கம் ஆச்சு. 'ஆடுகளம்’ முடிஞ்சதுமே நானும் தனுஷ§ம் வேற ஒரு படம் பண்ணிட்டு திரும்ப சேர்ந்து ஒரு படம் பண்றதுன்னு முடிவுபண்ணியிருந்தோம். தனுஷ் இல்லாம ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணேன். பட்ஜெட் செட் ஆகலை. இன்னொரு ஸ்க்ரிப்ட் பண்ண ஆரம்பிச்சதுமே, 'அதுக்கு தனுஷ்தான் ஃபிட் ஆவார்’னு தோணுச்சு. 'நாம நினைச்சது நடக்காதுபோல. நான் பண்ண ஸ்க்ரிப்ட் உங்களுக்குனு பண்ண மாதிரி இருக்கு’ன்னு சொன்னேன். கதை கேட்டுட்டு, 'நாமளே பண்ணலாம்’னு சொன்னார். மே மாசத்துல இருந்து ஷூட்டிங் போறோம்.''



''ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்ளோ இடைவெளி எடுத்துக்கிறீங்க?''



''முப்பது வருஷம் நாம கத்துக்கிட்ட விஷயங்களை ஸ்க்ரிப்ட்டாப் பண்ணி முதல் படம் இயக்கிருவோம். அதுக்கு அப்புறம் புதுசா ஒண்ணு கத்துக்கணும். புதுசா ஒரு ஏரியா தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கு ஒரு வருஷம் தேவைப்படுது. அப்புறம் அதைப் படமா எடுக்க இன்னொரு வருஷம் தேவைப்படுது. இது என் ஸ்டைல். இது ஆளுக்கேத்த மாதிரி மாறலாம். என் ஃபிலிம் கேரியர்ல எத்தனை படங்கள் இயக்கினேன்னு சொல்றதைவிட, என்னென்ன படங்கள் இயக் கினேன்னுதான் சொல்ல விரும்புறேன். எனக்கு இன்னும் முப்பது வருஷம் கேரியர் இருக்குன்னா மொத்தமா 15 படங்கள்தான் இயக்குவேன். அது போதும் எனக்கு!''



'' 'அதிர்வு’ன்னு ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சு புத்தகம் வெளியிட்டிருக்கீங்க. வாழ்த்துகள்!''



''நான் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பேன். எல்லா மொழிகளிலும் வர்ற புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருவாங்க. அதனால உலகத்தோட விதவிதமான கலாசாரம், மொழி, வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைக்கும். நான் படிச்சுட்டு பிரமிச்சுப்போன நாவல்கள் பத்தி என் நண்பர்கள்கிட்ட சொன்னா, அவங்களுக்கு அது தெரியாம இருக்கும். ஏன்னா, பெரும்பாலும் எல்லா ரும் தமிழ்ல நாவல் படிக்கிறவங்களா இருந்தாங்க. 



அந்த நாவல்கள் தமிழ்ல வந்திருக்கான்னு விசாரிச்சா, அப்படி ஒரு முயற்சி நடக்கவே இல்லைன்னு தெரிஞ்சது. கல்லூரிக் காலத்தில் அலெக்ஸ் ஹேலி எழுதின 'ஸிஷீஷீts: ஜிலீமீ ஷிணீரீணீ ஷீயீ ணீஸீ கினீமீக்ஷீவீநீணீஸீ திணீனீவீறீஹ்’ புத்தகம் படிச்சேன். 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஆப்பிரிக்கன் அமெரிக்காவில் அடிமையா விற்கப்படுவதும் அதைத் தொடரும் சம்பவங்களும்தான் புத்தகம். அந்தக் கதை வாழ்க்கை மீதான என் பார்வையையே மாத்தி அமைச்சது. அந்த மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் என்னைச் செதுக்குச்சு. அப்போ எல்லாம் 'ஐயோ... இந்தப் புத்தகம் தமிழ்ல இல்லையே’ன்னு நிறைய வருத்தப்பட்டிருக்கேன். கடைசியா என்னை உலுக்கின புத்தகத்தை 'ஓநாய் குலச்சின்னம்’னு மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கேன். முயற்சிகள் இன்னும் தொடரும்.''



''இப்போ தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கு?''  




''வித்தியாசமா இருக்கு. 2002-க்கு முன்னாடி இருந்த சூழல், 2003-க்கு அப்புறம் இல்லை. ஏன்னா, அப்போதான் உலக சினிமாக்களோட திருட்டு டி.வி.டி. பர்மா பஜார்ல சுலபமா கிடைக்க ஆரம்பிச்சது. அதுதான் தமிழ் சினிமா போக்கையே அப்போ மாத்துச்சு. அதுக்கு முன்னாடி ஃபிலிம் சொசைட்டியில மாசத்துக்கு நாலஞ்சு உலக சினிமாக்கள்தான் பார்க்க முடியும். காதல், ஆட்டோகிராஃப் படங்கள் சொல்லப்பட்ட விதத்துக்கு உலக சினிமாக்கள் உண்டாக்கிய தாக்கம்தான் பலமான காரணம். 



அதே 2008-க்கு அடுத்து வந்த குறும்படக் கலாசாரம் தமிழ் சினிமாவை வேற பக்கம் திருப்பிவிட்டுருச்சு. யார்கிட்டேயும் உதவியாளரா இல்லாத, எந்தப் பயமும் இல்லாத புதுப் புது இளைஞர்கள் உள்ளே வர்றாங்க. பல வருஷமா உதவி இயக்குநர்களா இருக்கிறவங்களுக்கு நிறையப் பயம் இருக்கும். இந்த இளைஞர்களிடம் அது இல்லை. தைரியமா மோதி ஜெயிக்கிறாங்க. இது தமிழ் சினிமாவை நல்ல நிலைமைக்குக் கொண்டுபோகுமா... இல்லை மோசமான இடத்துக்குக் கொண்டுபோகுமானு தெரியலை. நான் அதைப் பத்தி யோசிக்கவும் இல்லை. பேசவும் இல்லை. அமைதியாக் கவனிச்சுட்டு இருக்கேன்!''


 நன்றி - விகடன்

Tuesday, July 10, 2012

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள்- விமர்சனம் (8.7..2012)


நாளைய இயக்குநர் நிகழ்ச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் படைப்பளிகளை ஊக்குவிக்கும் ஒரு தரமான நிகழ்ச்சி.. காதலில் சொதப்புவது எப்படி? குறும்படம் பெரும்படம் ஆகி வசூல் தரும் படம் ஆன பிறகு இந்த நிகழ்ச்சிக்கான மதிப்பு உயர்கிறது . வாரா வாரம் ஞாயிறு காலை 10.30  டூ 11.30 கலைஞர் டி வியில் காணலாம்.. 


இன்னைக்கு ஆர்த்தி பெருசா பூப்போட்ட நைட்டி அணிஞ்சு வந்தாங்க.. ஜட்ஜஸ் 2 பேர் கிட்டேயும் கேள்வி கேட்டாங்க.. அதுக்கு அவங்க பதில்// 


ஆர்த்தி - சார், சமீபமா நீங்க என்ன படம் பண்ணிட்டு இருக்கிங்க? அது பற்றி சொல்லுங்க


 பிரபு சாலமன் -  நான் எடுத்து வரும் கும்கி படம் யானைகளை மையமா எடுத்து சொல்லப்படும்  டாக்குமெண்ட்ரி என நிறைய பேரு நினைக்கறாங்க, ஆனா அது உண்மை அல்ல,கதைக்கான பின்னணி யானை.. மற்றபடி ஒரு காதல் கதை,.. யானைப்பாகனின் கதைன்னும் சொல்லலாம்.. சிவாஜியின் பேரன்க்காக இந்த கதை எடுக்கறேன். 


விக்ரமன் - இளமை நாட்கள்னு ஒரு  படம்  பாதி எடுத்தாச்சு, இப்போ ஸ்டாப் பண்ணிட்டோம்.. புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன்


1. குறும்பட இயக்குநர் பெயர் - குகன் , குறும்படத்தின் பெயர் - H2O ( தண்ணீர் )


இது அக்மார்க் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை.. 2050ல கதை நடக்குது..  ஒரு பாலைவனம்.. அதுல ஒரு ஆள் பயணம் பண்றாரு. நடராஜா சர்வீஸ் தான்.. இடுப்புல வாட்டர் கேன், முதுகுல ட்ராவலிங்க் பேக்.. போற வழில 3 பேர் செத்தோ, மயக்கமாவோ கிடக்கறாங்க.. அவங்களை குனிஞ்சு செக் பண்றப்போ 3 பேர்ல ஒருத்தன் அவன் கிட்டே இருக்கும் வாட்டர் கேனை பிடுங்க பார்க்கறான். சண்டைல ஹீரோ அவனை கொன்னே போட்டுடறான்.. தண்ணீருக்காக கேரளா,கர்நாடகா, தமிழ் நாடு அடிச்சுக்குதே அதுதான் குறியீடு போல.. எதிர்காலத்துல உலகப்போர் வந்தா அது தண்ணீருக்ககவோ, பெட்ரோலுக்காகவோதான் இருக்கும்னு யாரோ சொன்னாங்க. .


ஹீரோ கழுத்துல காயத்தோட தனது பயணத்தை தொடர்றான்..  சாகற நிலைமை.. தனது கடைசி மூச்சு விடறப்போ  ஒரு செடிக்கு அந்த தண்ணீரை ஊற்றிட்டு சாகறான்.. 


விக்ரமன் - என்வயரோமெண்ட்ல அக்கறை வேணும், பொல்யூஷன் வராம பார்த்துக்கனும்னு சொல்ல வந்திருக்கீங்க.. குட்.. ஓப்பனிங்க் ஷாட்ல 1000 ரூபாய் நோட்டால வியர்வையை துடைக்கற சீன் கிளாசிக்.. அவனுக்கு பணம் ஒரு பொருட்டல்ல.. ஆனா தண்ணீர் தான் அத்தியாவசியத்தேவைன்னு சொல்ல வந்தது நல்லா வந்திருக்கு.. பதியுது..  அந்த  இடத்துல இசை சூப்பர்.. ஒரே ஒரு கேரக்டரை வெச்சு தண்ணீர் பிரச்சனையை பேஸ் பண்ணி படம் பண்ணி இருக்கீங்க.. குட்..


பிரபு சாலமன் - ஹீரோவோட சிந்தனை பூரா  தண்ணீர்ல ஊறி கிடக்கு என்பதை அவன் சாகற சீரியஸ் நிலைல கூட ஸ்விம்மிங்க் பூல்ல விழுந்த நினைவை காட்டுவதுல இருந்து உணர்த்திடறீங்க.. . எதிர் காலத்துல இப்படித்தான் நடக்கப்போகுதுன்னு சொல்ல வந்திருக்கீங்க.  நல்லாருக்கு


சி.பி - முன்னுக்குப்பின் முரணான பாத்திரப்படைப்பா  ஹீரோவை காட்டறீங்க.. ஒரு 100 மிலி தண்ணீருக்காக கொலை செய்யும் அளவுக்கு வக்கிரமான , குணம் கொண்ட ஹீரோ தன் உயிர் போறப்பக்கூட தன் தாகத்துக்கு தண்ணீரை குடிக்காம செடிக்கு தண்ணீர் ஊற்றுவது சூட் ஆகலையே.. சக உயிரை ஆறறிவு மனிதனை காப்பாற்றாமல் செடிக்கு ஊற்றுவது ஏன்?இயற்கையை பாதுகாக்க என்றால் மனிதனும் இயற்கையின் படைப்பு தானே?

இந்தப்படம் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்குச்சு..

மன்மோகன் ஆட்சியில் எவ்வளவு ஊழல் சாதனைகள் நடந்துருக்கு.. அதெல்லாம் சாதனை இல்லையா..


2. குறும்பட இயக்குநர் பெயர் - சந்ரு , குறும்படத்தின் பெயர் -ஆருயிரே

இந்தப்படத்தோட கதை , திரைக்கதை எல்லாம் நம்ம ஆளு அதிஷாவுடையது,, புதிய தலைமுறை உதவி ஆசிரியர்.. பிரபல ட்விட்டர்.. பிரபல பதிவர் என பன்முகம் கொண்டவர்..

சமீபத்தில் நடந்த  போலீசின் எண்கவுண்ட்டர் பற்றிய படம்..அதாவ்து  பேங்க் கொள்ளை நடந்தப்ப  இவங்க தான் பேங்க் கொள்ளையர்ஸ்னு வட மாநில ஆட்களை போட்டுத்தள்ளுச்சே போலீஸ் அதை கிண்டல் செய்யும் ப்டம்.. ஆனா காமெடி  கதை அல்ல. சீரியஸ்..

ஓப்பனிங்க் ஷாட்ல  லவ்வர்ஸ் ஜோடியை காட்ட்டறாங்க.. வழக்கம் போல ஊரை விட்டு ஓடி வந்தவங்க.. காதலன் தன் நண்பனை நம்பி வந்துடறான்.  ஆனா அவன் இவனை கண்டுக்கலை. செல் ஃபோன்ல நோ ரெஸ் பான்ஸ்.. கடைசில எப்படியோ கண்டு பிடிச்சு அந்த நண்பனோட ரூமுக்கு போறான்.. தனியாத்தான்.. காதலியை அவன் சாப்பிட்ட மெஸ்ல வெயிட் பண்ண வெச்சு இவன் மட்டும் போறான்.  ஆனா அந்த ரூம்ல அவனோட நண்பன் இல்லை.. சரின்னு அந்த ரூமை விட்டு வெளீல வர்றப்போ போலீஸ் கும்பல் அவனை , அந்த ரூம்ல இருக்கறவங்களை எந்த விசாரணையும் இல்லாம  போட்டுத்தள்ளிடுது..

 ஹீரோயின் அங்கே ஹீரோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கா.. அவ்லவ் தான் படம்



மனம் கவர்ந்த வசனங்கள்


1. போலீஸ் நம்மளை ட்ரேஸ் அவுட் பண்ணிட்டா என்ன பண்றதுனு செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராம வந்துட்டோம்..


2. எனக்கு பயமா இருக்கு.. நம்மை நிம்மதியா வாழ விட மாட்டாங்க..


3. ஃபிரண்ட் செல் நாட் ரீச்சபிள்.. அவனை நம்பி இங்கே வந்திருக்கக்கூடாதோ? எதுக்காக செல்லை ஆஃப் பண்ணிட்டான்னு தெரியலையே?


விக்ரமன் - காதல் பட இன்ஸ்பிரேஷன் அங்கங்கே தெரியுது,.,. ஹீரோ ஃபிரண்ட் கிட்டே பேசறப்போ காதல் சுகுமாறன் மாதிரியே என்னடா மச்சான் என்ரெல்லாம் கூப்பிடாம இருந்திருக்கலாம்.. காதலை நினைவு படுத்துது..



பிரபு சாலமன் -போலீஸ் ஸ்டோரிக்கான மூடு படத்துல மிச்சிங்க்.. அவங்க திடீர்னு வர்றாங்க, சுடறாங்க போயிடறாங்க.. படத்துல அவங்க வரப்போறாங்க என்பதற்கு ஒரு லீடு குடுத்திருக்கலாம்.. அது ஆடியன்ஸிடம் ஒரு டெம்ப்போ ஏத்தி இருக்கும்.. யூ ஸி.. சோகம் வேற , பாதிப்பு வேற.. வர்ற ஆடியன்சை சோகத்தோட அனுப்பக்கூடாது.. ஆனா நம்ம படம் அவங்க மனசை பாதிக்கனும்.. இதுதான் ஃபார்முலா..


சி.பி - போலீஸ் ஸ்டோரி கேட்டகிரில படம் எடுத்ததால கதையோட ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஸ்டார்ட் ஆகி இருந்தா நல்லார்ந்திருக்கும்.. ஹிட்சாக்கின் தியரிப்படி சஸ்பென்ஸ் என்பது திடீர்னு ஒரு எதிர்பாராத சம்பவத்தை காட்டி பார்வையாளனை திகைக்க வைப்பது அல்ல.. ஒரு வெடி குண்டு வெடிக்கப்போகுதுன்னு  ஆடியன்ஸ்க்கு சொல்லி அதை எப்போ எப்படி வெடிக்காம காப்பாத்தறாங்க என டெம்ப்போ ஏத்துவதே சஸ்பென்ஸ்க்கான இலக்கணம்.. போலீஸை ஓப்பனிங்க்லயே காட்டி இருந்தா இன்னும் கிராண்டா வந்திருக்கும்..

 படத்துல ஹீரோ, ஹீரோயின் 2 பேர் நடிப்பும் எதார்த்தம்.. பெஸ்ட் ஆக்டிங்க் அவார்டு 2 பேருக்கும் சமமா பகிந்து கொடுத்தாங்க.. ( அதை எப்படி 2 பேரும் ஷேர் பண்ணிக்குவாங்க? ஆளுக்கு ஒரு வாரமா? )

இந்தப்படம் பற்றி ட்விட்டர்ல நடந்த கலந்துரையாடல்


கி.கோ - ஆருயிரே' குறும்படம் யாராச்சும் பார்த்தீங்களா? இந்த அளவுக்கா நம்மூர்ல படைப்பு சுதந்திரம் இருக்குது ~ நம்பவே முடியல!


சி பி - டி வி க்கு சென்சார் இல்லை, அதுவும் இல்லாம போலி என்கவுண்ட்டர் பற்றி படம் எடுத்து இப்படி போடுவாங்கன்னு ஜெ அரசு எதிர்பார்த்து இருக்காது


கி கோ -ஆமாங்க.. ஆனாலும்.. சந்துருவின் கற்பனை கொஞ்சம் அதிகமா படுது.. சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை தான்..






3. குறும்பட இயக்குநர் பெயர் - மித்ரன் , குறும்படத்தின் பெயர் -பொல்லா வினையோன்




ஊஞ்சல்ல ஒரு பொண்ணு உக்காந்து ஆடிட்டு இருக்கு.. பேப்பர்ல ஒரு பறக்கும் தட்டை வரைஞ்சு அதை பார்த்துட்டு இருக்கு.. திடீர்னு ஒரு பறக்கும் தட்டு வந்து இறங்கி அந்த பாப்பாவை கூட்டிட்டு போயிட பாக்குது..


பாப்பாவோட மம்மி ஷாப்பிங்க் போறப்போ அந்த வேற்றுக்கிரக வாசிகள் அவளை அப்ரோச் பண்றாங்க.. இந்த உலகத்தை அழிச்சுட்டு புதுசா ஒரு உலகத்தை உருவாக்கப்போறோம்கறாங்க. கடைசில அந்த லேடி தன் குழந்தையை அவங்களோட அனுப்பி வைக்குது..

 எந்த ஊர்ல அப்படி ஒரு அம்மா குழந்தையை அனுப்பி வைக்குமோ தெரியலை.. சாமார்த்தியமா கதைக்களன் நியூ ஜெர்சிலன்னு காட்டிடறாங்க.. ஆனா எந்த ஒரு தேசத்திலும் பெற்ற அம்மாவே தன் குழந்தையை அப்படி அனுப்பி வைக்க மாட்டாங்கன்னுதான் தோணுது..

 வழக்கமா உள்ளத்தை தொடும் சமூக கருத்தை சொல்லும் மித்ரன் இந்த டைம் சரியான திரைக்கதை அமைக்காம சொதப்பிட்டார்னு தோணுது.. .



பிரபு சாலமன்  - புது உலகத்தை உருவாக்க நினைப்பது ஓக்கே.. ஆனா அதுக்காக ஏன் பழசை அழிக்கனும்?கான்செப்ட் ஈஸ் நாட் ஓக்கே.



 விக்ரமன்  - SOME TIMES CREATIONS WILL FAIL ,BUT THE CREATORS NEVER FAIL - சில சமயம் சில படைப்புகள் தோல்வி அடையலாம், ஆனால் படைப்பளிகள் தோற்பதில்லை


சி.பி - இவரோட படைப்புகள் எல்லாமே ஹை கிளாஸ் ஆடியன்ஸுக்கானவை.. மணிரத்னம், கவுதம் மாதிரி,. இன்னும் எளிமையா சொல்லலாம்


 பெஸ்ட் சி ஜி ஒர்க்குக்கான விருது கிடைச்சுது..





Thursday, June 21, 2012

நாளைய இயக்குநர் - செமி ஃபைனல் - விமர்சனம் ( 17 .6.2012)

வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க.. 

இந்த வாரம் நடுவர்களா இயக்குநர் விக்ரமன், மைனா இயக்குநர் பிரபு சாலமன்..

பிரபு சாலமன்...  -. எங்களுக்கு நாளைய இயக்குநர்  மாதிரி ஒரு பிளாட் கிடைச்சிருந்தா 12 வருஷங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்.என்னோட அடுத்த படம் கும்கி. அதாவது பயிற்சி கொடுக்கப்பட்ட யானைகள் வாழ்க்கை பற்றி. பின்னணில ஒரு காதல் கதை .. கிராமத்துல நடக்கும் பிரச்சனைகள்.. இப்படி போகும்.. 


விக்ரமன் - இந்த வாரம் டாபிக் போலீஸ் ஸ்டோரிஸ், சயின்ஸ் ஃபிக்சன்



#
என்னடா பிரச்சனை உங்களுக்கு ?-kovai mani



1. இயக்குநர் பெயர் - பாரதி பாலா , குறும்படத்தின் பெயர் - சத்தியப்பிரமாணம்


1960 களில் வந்த பழைய படங்களை கிண்டல் பண்ற மாதிரியும், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலுமா இந்தப்படம் எடுத்திருக்காரு.. பின்னணி இசை , உடை வடிவமைபு, உடல் மொழி, வசனம் எல்லாமே அப்படியே அந்தக்காலம்.. ஐ திங்க்.... இதுதான் முதல் பழைய கால பிரதிபலிப்பு முதல் குறும் படம்./.

போலீஸ் உயர் அதிகாரி அண்ணன் தம்பி 2 பேரையும் கூப்பிட்டு ஒரு பொறுப்பை ஒப்படைக்குது.. அவங்க 2 பேரும் போலீஸ் தான்.. ஒரு கடத்தல் கும்பலை பிடிக்கும் வேலை.. 

 இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. ஸ்கூல்ல படிக்கும்போதே டீச்சர் “ நீங்க என்னவாகனும்னு ஆசைப்படறீங்கன்னு கேட்டப்பவே 2 பேரும் ஒரே மாதிரி போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்டவங்க,.. 

பழைய பட சஸ்பென்ஸ் மாதிரியே அண்ணன் தம்பி ராமு- குமார்ல ராமுதான் வில்லன்.. ஆனாலும் அவனை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைக்கறதுதான் கதை.. 

 மேலோட்டமா பார்த்தா அல்லது எழுத்து வடிவில் இதை படிக்கும்போது அரைச்ச மாவுதானே என்ர சலிப்பு வரும்.. ஆனாலும் இந்த 8 நிமிட குறும்படத்துக்காக எடுத்துக்கொண்ட உழைப்பு அதிகம்.. 

 ஆனாலும் உழைப்பு அதிகம் என்பதற்காக யாரும் படங்களை ரசிப்பதில்லை.. அப்படி ரசிச்சிருந்தா கமல் ஹாசன் ரஜினியை பீட் பண்ணி இருப்பாரே?



விக்ரமன்  கமெண்ட் பண்றப்போ  “ ஸ்பூஃப் ட்ரை பண்ணி இருக்கீங்க. ஆனா அதிகம் ஒர்க் அவுட் ஆகலை.. 1960 டூ 75 அப்படியே கண் முன்னால் நிறுத்தினீங்க அப்டினு பாராட்னாரு.. 

சாலமன் - ஈஸ்ட்மென் கலர், டைட்டில் டிசைன்,  பின்னணி இசை எல்லாம் அபாரம்.. ஏன்னா அந்தக்காலத்துல ஈஸ்ட்மென் கலர்ல படம் எடுக்கறது அபூர்வம்.. அதனால அதை பெருமையா டைட்டில்ல போட்டுக்குவாங்க , அதைக்கூட மிஸ் பண்ணாம  கரெக்டா நோட் பண்ணி டைட்டில்ல யூஸ் பண்ணி இருக்கீங்க.. குட்.. நேர்த்தியான, உண்மையான உழைப்பு.. 


ஒளிப்பதிவுக்கு  பரிசு வாங்குச்சு.. 



Prime Minister Manmohan Singh today left for Rio De Janeiro to attend the Rio+20 summit, the three-day meeting to be attended by 193 nations.

Singh was here in this Mexican resort to participate in the seventh summit of the Group of developed and developing countries(G-20).


2,இயக்குநர் பெயர் -ஸ்ரீகணேஷ் , குறும்படத்தின் பெயர் - ஒரு கோப்பை தேநீர்

 எஸ் ராம கிருஷ்ணனின் சிறுகதையை பேஸ் பண்ணி  மகேந்திரன் பாணில அழகிய படம்.. 
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு கைதி .. 2 பேரும் லேடீஸ்.. கோர்ட்டுக்கு போற வழில அவங்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் தான் படம்.. 

 படத்தோட கதைப்போக்கு அன்பே சிவம் டைப் தான்.. அதாவது மாறுபட்ட 2 கேரக்டர்களை வெச்சு இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கருத்தை மக்களுக்கு சொல்வது ..

கைதி சின்ன விஷயத்துக்காக திருடி மாட்டிக்கறா.. அவளை கோர்ட்ல ஒப்படைக்க லேடி போலீஸ் கூட்டிட்டு போறாங்க,.,. அவங்க அன் மேரீடு.. வழில அவங்க மாமா கிட்டே பேசும்போது அந்த மேட்டர் தெரிய வருது.. போலீஸ்னாலே மாப்பிள்ளைங்க பயப்படறாங்க. அதனால லேடி போலீஸ்க்கு வருத்தம்.. 

 இதுல என்ன காண்ட்ரவர்சின்னா போலீஸ் வேலைல இருந்தும் அந்த லேடி டென்ஷனா இருக்காங்க, கைதியா இருந்தும் அந்த லேடி ஜாலியா , எதைப்பற்றியும் கவலை இல்லாம இருக்காங்க.. வழி பூரா தொண தொணனு பேசிட்டே வர்றா.. 

 திடீர்னு அந்த லேடிக்கு மென்சஸ் ஆகிடுது. போலீஸ் கிட்டே மெடிக்கல் ஷாப்ல நாப்கின் வாங்கித்தாங்கனு கேட்கறா.. போலீஸும் வாங்கித்தருது.. இதே ஒரு ஆண் போலீஸா இருந்தா கிண்டல் தான் பண்ணுவாங்க.. ஒரு பொண்ணா  இருப்பதால் தான் வலி உங்களுக்கும் தெரியுதுன்னு சொல்லி படத்தை செண்ட்டிமெண்ட்டா முடிக்கறாங்க

 இதுல முக்கியமான 2 கேரக்டர் நடிப்பும் கிளாஸ்.. போலீஸா வரும் நடிகை முகத்தில் கவலைச்சுருக்கங்கள் அப்படியே கண் முன் ... கைதியின் தெனாவெட்டுப்பேச்சு கலக்கல்.. 

மனம் கவர்ந்த வசனங்கள்


1. கில்மா லேடி - போற வர்றவங்க எல்லாம் யூஸ் பண்ண நான் என்ன குப்பைத்தொட்டியா? 


2. இங்கே பாருங்க மேடம், போலீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்கன்னா ஒரே பார்வை தான் ( எவன் சொன்னது? யூனிஃபார்ம்ல இருந்தா பம்முவோம் ஹி ஹி )


3. சாஃப்ட்வேர் கம்ப்பெனில ஒர்க் பண்றவன் எதுக்கு போலீஸ் லேடி மேரேஜ் பண்ணனும்னு இருக்கு? அவனுக்கு தோசை சுட்டுப்போடும் மனைவி போதாதா?


4. போலீஸ் - யார்டி அவன், உனக்கு ஹாய் சொல்லிட்டுப்போறான்?

 சும்மா. இப்போ ஜெயிலுக்கு போனா வெளில வர எப்படியும் 6 மாசம் ஆகும்.. அதான் அனுபவிக்கலாம்னு.. 


5. லீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் பெண்களுக்கு இந்த மாதாந்திர வலி பொதுவானது.. எல்லாருக்கும் வலிக்கும். 

6. நான் 1 கேட்பேன், பதில் சொல்லு.. நீ ஏன் திருடி ஆனே?


 நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க? 


7. உங்களை அக்கான்னு கூப்பிடவா?

 வேணாம்.. 

சரி ஏட்டம்மான்னு கூப்பிட்டுக்கறேன்.. 


ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் நல்லா இருந்தது.. 


சாலமன் - டைட்டில் சரி இல்லை, இன்னும் கிரிப்பா வெச்சிருக்கலாம் ( எப்படி? ஸ்ட்ராங்க் டீ 1 அப்டின்னா? )


விக்ரமன்  - மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்துல ஒரு தீம் மியூசிக் வரும்.. படம் முடிஞ்ச பின்னாலும் நம்ம மனசுல தங்கும் இசை அது.. அதே மாதிரி இந்தப்பட தீம் மியூசிக்கும் இருந்துச்சு வெல்டன். 



இந்தப்படம் இந்த வாரத்தின் சிறந்த படமா செலக்ட் ஆச்சு. சிறந்த நடிப்புக்கு 2  ஹீரோயின்ஸ்க்கும் கிடைச்சுது


ரெடி....1....2.....



3. இயக்குநர் பெயர் -செந்தில்   , குறும்படத்தின் பெயர் -ரெட்டைக்குழல்

 ரிட்டயர் ஆகப்போகும் ஒரு போலீஸ்காரரின் கடைசி பணி நாள் தான் கதை.. 
எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை..அப்டின்னு மனைவி புலம்பறாங்க.. பொதுவா இந்த சம்சாரங்களே புலம்பல் பார்ட்டிங்க தான்.. போலீஸ்காரர் ஸ்டேஷன் போறாரு./..அவரோட துப்பாக்கியை மிஸ் பண்ணிடறாரு.. கடைசி நாள் எல்லாம் ஒப்படைக்கனும்

 யார் எடுத்திருப்பாங்க? அவர் லிஸ்ட் அவுட் பண்ணி பார்க்கறார்.. அவரோட எதிரிகள் யார் எல்லாம் இருக்காங்க.? சமீபத்திய கேஸ்கள்ல மாட்டுனது யார்? ஒவ்வொருவரா விசாரனை பண்றாரு.. யாரும் எடுக்கலை.. 

 கடைசில பார்த்தா ஒரு லேடி கான்ஸ்டபிளே  அதை எடுத்து ஒளிச்சு வெச்சு அதுவே கண்டு பிடிச்சுத்தர்ற மாதிரி ஷோ காட்டி நல்ல பேர் வாங்குது.. என்ன ட்விஸ்ட்னா  அவர் பையன்  இந்த லேடியை லவ்விங்க். மாமனார்ட்ட நல்ல பேர் எடுக்க இப்படி ஒரு டிராமா...


மலைக்கிராமம் அப்படியே கண் முன் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்.. 


லாஜிக் மிஸ்டேக்கா  சாலமன் சொன்னது -நானும் சினி இண்டஸ்ட்ரில பல தடைகளை தாண்டி வந்ததால உங்க மனசை புண்படுத்த விரும்பலை, அதனால . சில குறைகளை சாஃப்ட்டா சொல்றேன்.


1.  ஒரு ரைபிளை இப்படி அசால்ட்டா ஒரு போலீஸ் வெச்சுட்டு போக மாட்டார். அதை வைக்க ஒரு லாக்கர் இருக்கு.. அதுல தான் வைப்பாங்க


2. துப்பாக்கியை காணோம்னா ஒரு பதட்டம், பரபரப்பு வேணும்.. எதையும் அந்த போலீஸ் காட்டலை. மெத்தனமா இருந்தா பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மட்டும் எப்படி ஒரு ஆர்வம் வரும் ?





 பாராட்டு பெறும் வசனங்கள்

1.  என் 33 வருஷ சர்வீசை வெறும் 7 மணி நேரம் மாத்திடும் போல இருக்கே?


2. எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை.




நிகழ்ச்சித்தொகுப்பாளர் கீர்த்தி கிட்டே ஒரு முன்னேற்றம்.. முதல்ல எல்லாம் ரொம்ப  கேவலமான நைட்டியை போட்டுட்டு வருவார்.. இப்போ கொஞ்சம் டீசண்ட்டா நைட் கவுன் போட்டுட்டு வர்றார்.. ( ஒரு வேளை ஷூட்டிங்க் நைட்ல நடக்கறதால  மேட்சுக்கு மேட்சா நைட் டிரஸ்ல வர்றாரோ?)

Wednesday, June 20, 2012

ட்விட்டர் கேங்கின் அலப்பறை - உடன்பிறப்புகளே! - குறும்பட விமர்சனம்

டைட்டிலே இது தி மு க வுக்கு எதிரானதுன்னு சொல்லிடுது.. இந்த கதைக்கு போறதுக்கு முன்னே நீங்க மனதளவில் ஸ்டாலினை அண்ணனாவும், அழகிரியை தம்பியாவும் கற்பனை பண்ணிக்குங்க. ஏன்னா நிஜ வாழ்வில் அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலின் .. ஆனா இந்தக்கதைல கொஞ்சம் மாத்தி இருக்காங்க.. 


ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு அரசியல் தலைவரை ஒரு கும்பல் ஃபோன்ல மிரட்டுது . உங்களை கொலை பண்ணப்போறோம். உங்க கூட இருக்கறவங்க தான் அதை செய்யப்போறாங்க..  அப்டினு..


அதே மாதிரி அவரை ஒரு ரூம்ல அடைச்சு வெச்சுட்டு பாஸ்க்கு ஃபோனை போடறாங்க.. அந்த பாஸ் வேற யாருமில்லை. அந்த அரசியல் தலைவரோட  தம்பி தான். அண்ணனோட  அரசியல் செல்வாக்கு பிடிக்காம அவருக்கு பிறகு தான் தான் வாரிசு ஆகனும்கற வெறில  இந்த பிளான். 

இப்போ அரசியல்வாதி தன் சாணக்கியத்தனத்தை காட்ட தன்னை கொலை வந்த ஆட்கள்ட்டயே பேரம் பேசறார்.. ஒரு கோடி வாங்குன ஆட்கள் 10 கோடிக்கு ஆசைப்பட்டு பிளேட்டை திருப்பி போட்டுடறாங்க. 

 அரசியல் தலைவர்  தன் தம்பியை போலீஸ்ல மாட்டி விட்டுடறார்.. அவ்ளவ் தான் கதை,.,. 


இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்


 படத்தில் பாராட்டுக்குரிய முதல் அம்சம் பின்னணி இசை. மிகச்சிறப்பா வந்திருக்கு..  படத்தோட விறு விறுப்புக்கு அது ரொம்ப உதவியா இருக்கு. 

 2 வது அம்சம் அண்ணன் , தம்பி கேரக்டர்ல நடிச்சிருக்கற 2 பேரும். 

 அண்ணனா  வர்றவர் ட்விட்டர் நண்பர் டி பி கேடி பெங்களூர்.. ஆள் நல்ல பாடியா இருக்கறதால அரசியல் தலைவர் கெட்டப் நல்லா சூட் ஆகுது.. அவரோட பாடி லேங்குவேஜ், வசன உச்சரிப்புகள் எல்லாம் கன கச்சிதம் 

தம்பியா வர்றவர் படத்தோட இயக்குநர். சிங்கம் சூர்யா மாதிரி கெட்டப்.. ஆள் நல்ல கலர்..  ஹீரோவா நடிக்க முயற்சி செஞ்சா கோடம்பாக்கத்தில் சான்ஸ் உண்டு..  ஆனா வசனம் பேசும்போது ,மட்டும் பல்லை கடிச்ச மாதிரி பேசறார்.. பல இடங்கள்ல செயற்கை தட்டுது.. 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இவனுங்க பேச்சே இன்னைக்கு சரி இல்லையே? ஒருத்தன் முடிச்சுட்டுத்தான் போவேன்கறான்.. இன்னொருத்தன் இனி பார்ப்போமா? மாட்டோமா? அப்டினு சொல்றான்.. ம் .. 


2. ஒரு கல்லுல 3 மாங்கா அடிச்சே எனக்கு பழக்கம்


3. நாளைக்கு தலைப்புச்செய்தி,.. நாளான்னைக்கு தலைவர் பதவி.. 


4. என்னது? 10 கோடியா? ஒரு கோடிதானே பேசுனது?

 மாத்தி மாத்தி பேசறது அரசியல்வாதி நீங்க மட்டும் தானா? நாங்க பண்ணக்கூடாதா?

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. படத்துல வசன உச்சரிப்புல ஒரு நாடகத்தனம் தெரியுது.. எல்லாருமே தயங்கித்தயங்கித்தான் பேசறாங்க..


2. மஞ்சள் பனியன் போட்டு வர்றவர் ஆள் வில்லன் மாதிரி ஜைஜாண்டிக்கா இருந்தாலும் வில்லனுக்குரிய சீரியஸ்னெஸ் மிஸ்சிங்க்,.. போதாததுக்கு ஜோக் எல்லாம் அடிக்கறார். வில்லன்க்கு டார்க் கலர்ல தான் டிரஸ் போட வைக்கனும். காமெடி ஆள் தான் மஞ்சள் டிரஸ் போடனும்


3. கூலிங்க் கிளாஸ் கழட்டறது, அப்புறம் போடறது பஞ்ச் டயலாக் பேசறது எல்லாம் உயிர் பயத்துல இருக்கற ஆள் செய்ய மாட்டார்.. அவருக்கு உயிரை காப்பாத்தனும்கற டென்ஷன் தான் இருக்கும்.. ஸ்டைல் பண்றதுக்கோ, பந்தா காட்டவோ அப்போ தோணாது..


4.  சி பி ஐ ஆ ஃபீசர் தம்பி கேரக்டர் கிட்டே பேசிட்டு அப்புறம் இப்போ இன்னொரு ஆஃபீசர் வருவார் பாருங்க , அப்டினு வர வைக்கறதும் நாடகத்தனமே.. ஏன் 2 பேரும் ஒண்ணா வர மாட்டாங்களா?


5. தன் தம்பி தான் தன்னை கொலை பண்ண ஆள் ரெடி பண்ணான் என்பது தெரிந்ததும் அண்ணன் ஷாக் ஆகறார், ஓக்கே அதை ஏன் 3 கட் ஷாட்ல  காட்டனும்?முதல் டைம் காட்டறப்போ ஓக்கே, 3 டைமும் காட்டுவது போர்


6. கொலை முயற்சிக்கே கைதா? அப்டினு நக்கலா ஒரு வசனம் வருது. ஏன்? அட்டெம்ப்ட் மர்டர், அட்டெம்ப்ட் ரேப் எல்லா க்ரைம்க்கும் தனி தனி செக்‌ஷன் இருக்கே..


7. போதை மருந்து கடத்தல் ஐ விட்னசா வர்றவர் கிராமத்து தமிழ்ல பேசறது ரொம்பவே செயற்கை.. அதே போல் அவர் தன் முதலாளியை பார்த்ததுமே பணியாமல் அவரிடம் பேசும்போது தான் மடிச்சுக்கட்டிய லுங்கியை கீழே இறக்கி வசனம் பேசறார்.. 

8. க்ளைமாக்ஸ் ல பணத்துக்காக கொலை செய்யும் கும்பல்ட்ட அண்ணனா வர்ற டி பி கே டி பேசற செண்ட்டிமெண்ட் டயலாக்கும் தேவை இல்லாதது.. 


9. ஒரு சீன்ல இன்ஸ்பெக்டர் இளமாறன் அப்டினு கூப்பிடற மாதிரி ஒரு ஷாட் வருது.. அந்த சீன்ல 4 இன்ஸ்பெக்டர் இருந்தா அது ஓக்கே. இருக்கறதே ஒரு இன்ஸ்பெக்டர் தான்.. இன்ஸ்பெக்டர்னு தான் கூப்பிடுவாங்க..


10. பொண்டாட்டி சீரியஸ்னு ஒரே ஒரு பொய் தான் சொன்னேன், உடனே கபிலன் ஊருக்கு ஓடிட்டான்னு ஒரு டயலாக் வருது.. கபிலனோட பொண்டாட்டி சீரியசா இருக்கறது  கபிலனுக்கே தெரியாம இவருக்கு எப்படி தெரியும்? அப்படியே இவர் சொன்னாலும் கபிலன் ஊருக்கு ஃபோன் பண்ணி விசாரிக்க மாட்டாரா?


11. கூலிங்க் கிளாஸ்ங்கறது பைக்ல வேகமா போறப்போ, வெய்யில்ல நடக்கறப்போ போடறது.. வீட்ல ஹால்ல தனிமைல இருக்கறப்போக்கூட கூலிங்க் கிளாஸா?


12. கதைல வர்ற அண்ணன்க்கு வயசு மீறி மீறிப்போனா அல்லது மீறாம போனா 40 தான் இருக்கும், ஆனா அவர் அரசியல் வாரிசை அறிவிக்கறாரு.. 89 வயசான கலைஞரே அதை இன்னும் செய்யலை... அவர் உடம்புக்கு எதுவும் ஆகலை.. அப்புறம் என்ன அவசரம்?



இப்போ கீழே உள்ள விபரங்கள் இயக்குநரின் வலைப்பூவில் இருந்து எடுக்கபட்டவை 


நடிகர்கள்:
அரவிந்த்
பலராமன்
சந்தோஷ்
ராஜேஷ்
லலிதா ராம்
மொகம்மெத் கஃபில்
தனசேகர்
சுப்பிரமணியன்
சரவணகுமார்
ஜெய் சங்கர்
கார்த்திக் அருள்

தொழில்நுட்ப வல்லுனர்கள்:



இசை, விளம்பரப்படம் வடிவமைப்பு – சாய் சுதர்ஷன்


ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – சரவண ராம் குமார்


ஒளிப்படங்கள் – கார்த்திகேயன்


ஒப்பனை – ஹரிஷ்


ஆங்கில அடிவரிகள் – அரவிந்த்


நட்புக்காக: கார்க்கியின் குரல்

Tuesday, June 12, 2012

நாளைய இயக்குநர் -விமர்சனம் (10.6.2012)



வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு  3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க..

நடுவர்களான இயக்குநர் விக்ரமன், சுந்தர் சி ரெண்டு பேர்ட்டயும் ஆர்த்தி ஒரு கேள்வி கேட்டாங்க..நம்ம நாட்டுல நடத்தற ஷூட்டிங்க், ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல நடத்தற ஷூட்டிங்க் எது ஈசி,  என்ன ரீஸன்?


ஃபாரீன்ல செலவு கம்மி.. 10 பேரை வெச்சு முடிச்சுடலாம்.. இங்கே யூனியன் அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்.. 100 பேரை வெச்சு  எடுக்கனும், செலவு, சிரமம் எல்லாம் பல மடங்கு.. அப்புறம் நம்ம நாட்ல ஷூட் பண்ண பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. உதாரணமா மேட்டூர் டேம்ல ஒரு ஷூட்னா வன இலாகா, PWD,போலீஸ் இப்படி பலர்ட்ட அனுமதி வாங்கனும்.. ஃபாரீன்ல அப்படி இல்லை.. ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட்ல சொன்னா போதும்.. அவங்களே ஒரு ஆளை கூட அனுப்புவாங்க .. ஷூட்டிங்க்ல ஏதாவது பிரச்சனைன்னா அவங்களே உதவி செய்வாங்க, க்ளியர் பண்ணி விடுவாங்க 


அப்டின்னாரு சுந்தர் சி..அதே போல் விக்ரமன் சாரும் ஸ்விச்சர்லாந்தில் ரொம்ப ஈசியா தான் நடத்துன பட ஷூட்டிங்க் பற்றி சிலாகிச்சு பேசுனாரு..



1.இயக்குநர் பெயர் - மித்ரன்  , குறும்படத்தின் பெயர் - மனிதம் ( அறம் செய்ய விரும்பு )


ஒரு நாட்டுல ஒருத்தர் செய்யற தப்பால அந்த நாட்டுக்கே  கெட்ட பேர் வர்றது எப்படி? எதனால குறை சொல்றாங்க? அப்டிங்கற ஒன் லைன் தான் கதைக்கரு.. சமீபத்துல ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தான் கதைக்கான பேசிக்  KNOT

ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் ஒரு இந்திய மாணவன் செல் ஃபோன்ல அப்பா கிட்டே பேசிட்டு இருக்கான்.. அப்போ ஒருத்தன் வந்து அவனை கத்தியால குத்திட்டு போயிடறான்.. கொலை செஞ்சவனோட அம்மா வீட்ல அவனோட வித்தியாச நடவடிக்கைகளை நோட் பண்றாங்க.. இன்னொரு பக்கம் கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா கண்ணீர் விட்டுட்டு இருக்காரு..

 கலவரம், போராட்டம் நடக்குது.. நாடு முழுவதும் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் ஒரே ஒரு நாள் இந்திய உணவை சாப்பிட முடிவு செய்யறாங்க. ஒரு அஞ்சலி மாதிரி.. கொலையாளியின் அம்மாவே போலீஸ்ல அவனை பிடிச்சுக்கொடுத்துடறா.ங்க.

 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  கேவலம், ஒரே ஒரு செல் ஃபோனுக்காக ஒரு ஆளையே கொல்வாங்களா?

2. டேய் இந்தியா வர்றப்ப எனக்கு ஃபாரீன் சரக்கு வாங்கிட்டு வாடா..

அப்பா.. பையன் கிட்டே இப்படியா பேசுவாங்க?

புள்ளையையே எக்ஸ்போர்ட் பண்ணிட்டேன், சரக்கை இம்போர்ட் பண்ணக்கூடாதா?

3. குத்தறதையும் குத்திட்டு குருமா வேற சாப்பிடுவாங்களா?

4. என் பையன் எங்கே எல்லாம் போனானோ அங்கே எல்லாம் நானும் போய் பார்க்கனும்



சுந்தர் சி இந்தப்படத்தை ரொம்ப சிலாகிச்சு பாராட்டுனாலும் படம் ரொம்ப ஸ்லோவா போகுது,இன்னும் ஸ்பீடு பண்னனும்னாரு



2..இயக்குநர் பெயர் - கார்த்திகேயன் , குறும்படத்தின் பெயர் - புழுதிக்காடு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஒளிப்பதிவுல கலக்கி எடுத்துட்டாங்க .. அழகிய கிராமம்.. அங்கே பனை மரங்கள் உள்ள இடம்.. நிர்மலமான வானம், குருவி, ஓடை, பச்சைப்பசேல் வயல்கள், என ஷாட் பை ஷாட் பின்னி எடுத்தாங்க.. ஆனா கதை தான் ஒண்ணும் தேறலை..

 படத்துல வசனமே இல்லை.. 5  பிட் பாட்டுக்கள்.. ஓப்பனிங்க் ஷாங்க், ஒரு கொண்டாட்டப்பாட்டு, ஒரு ஒப்பாரிப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, நண்பர்களுடனான ஒரு தெம்மாங்குப்பாட்டு.. அவ்ளவ் தான் படம் முடிஞ்சுது.. இதுல என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலை..

 இதே கேள்வியை ஜட்ஜ்ங்க கேட்டப்ப “ ஹீரோவை அவன் காதலி மறந்துட்டு போயிடறா.. ஆனா ஹீரோவால அவளை மறக்க முடியலை.. அவ நினைவாவே காலம் எல்லாம் வாழறார்.. அதைத்தான் சொல்ல வந்தேன்னாரு.. ஆனா காட்சிகள்ல அந்த வலி பதிவு செய்யப்படலை.. 


பாடல் மூலமா கதை சொல்றது நல்ல விஷயம் தான் நாங்க எல்லாம் ஒரே பாட்டுல ஹீரோவை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கோம், ஆனா நீங்க சொன்ன கதைல எதுவும் தேறலை, பெட்டர்  லக் நெக்ஸ்ட் டைம் அப்டின்னாரு விக்ரமன்


3. இயக்குநர் பெயர் - நித்திலன் , குறும்படத்தின் பெயர் - சிரிப்பு வர்லைன்னா  பொறுப்பு நாங்க இல்லை

இதுல ஸ்பெஷல் விஷயம் என்னான்னா படத்தோட  ஹீரோ நம்ம ஊர்க்காரர் சாம் ஆண்டர்சன்.. 

ஒரு அப்பா தன் பையனை மன நல  மருத்துவரிடம் கூட்டிட்டு வர்றார்.. அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு.. விசாரிச்சா காதல் தோல்வி.. தன்னோட  3 காதல் தோல்விகள் பற்றி ஹீரோ புளி போடாமயே விளக்கறாரு.. அப்போ டாக்டர் சொல்றாரு.. என் கிட்டே  ஒரு மாத்திரை இருக்கு, அதை விழுங்கிட்டா நீ கடந்த காலத்துல பயணம் செஞ்சு நீ செஞ்ச தப்பை கரெக்ட் பண்ணலாம், உன் காதலியை கிஸ் பண்ணலாம், என்ன வேணா செய்யலாம்..

 அட்டகாசமான வாய்ப்பு.. ஆனா இந்த ஹீரோ என்ன பண்றாரு ? கடந்த காலத்துல போய் தன்னை  , தன் காதலை கேவலப்படுத்திய ஒரு காதலி கிட்டே 1000 ரூபா நோட்டுல ஐ லவ் யூ எழுதி கொடுக்கறாரு.. அந்த பொண்ணு கெக்கே கெக்கே பிக்கெக்கே  என சிரிச்சுட்டே வாங்கிக்குது.. உடனே பளார்னு ஒரு அறை விட்டுட்டு ரிட்டர்ன் வந்துடறாரு.. 

 ரெண்டாவது காதல்.. அதை எதிர்த்த தன் அப்பாவை அடிச்சுட்டு வர்றாரு.. க்ளினிக் வெளீல வெயிட் பண்ணிட்டு இருந்த அப்பா அழுதுட்டே வர்றாரு.. அங்கே அடிச்சா இங்கே வலிக்கும் - ரமணா டயலாக் போல .. 

 மூணாவது காதல் -ல ஒரு ட்விஸ்ட்.. அதாவது காதலியின் அண்ணன் இப்போ மாத்திரை கொடுத்த டாக்டர் தான். அவரையும் ஹீரோ அடிக்கறாரு.. டாக்டர் அய்யோ அய்யோன்னு கத்த படம் ஃபினிஷ்.. 


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  கடந்த காலத்துல பயணிக்கும் அரிய வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் பாசிட்டிவா திங்க்  பண்ணி  காதலியை கரெக்ட் பண்ண பாப்பாங்க. ஹீரோ 3 காதலிகளை கண்டுக்கவே இல்லை.. பழி வாங்கும் உணர்ச்சி தான் அவன் கிட்டே இருக்கு.. 


2. காமெடிக்குத்தான் என்றாலும் 3 ஃபிளாஸ்பேக்க்கிலும் அவர் அடி  போடுவது போர்..  ஒவ்வொரு காதலையும் வித்தியாசப்படுத்தி இருக்கலாம்.. 


3. நான் எடுக்க நினைச்ச கதையே வேற.. சாம் அண்டர்சன் கால்ஷீட் சொதப்பலால் வேற கதையை மாத்த வேண்டியதா போச்சுன்னு சமாளீஃபிகேஷன் கொடுத்ததை ஏத்துக்க முடியலை..


 சிறந்த படம் முதல் படமே.. அவார்டு வாங்குனதும் அதுவே..

Tuesday, June 05, 2012

நாளைய இயக்குநர் - ஃபேன்ட்டசி கதைகள் -(27.5.2012)-விமர்சனம்

மரசிற்பம் செய்யும் மாமனிதர்..........-k r vijayan.
Photo: மரசிற்பம் செய்யும் மாமனிதர்...........
1. இயக்குநர் பெயர் - பாக்யராஜ் கண்ணன் - குறும்படத்தின் பெயர் - வசூல்

இயக்குநர் தன் பேருக்குத்தகுந்த மாதிரி குறும்பான கதையைத்தான் செலக்ட் பண்ணி இருக்காரு..

ரஜினியின் அதிசயப்பிறவி,வடிவேலுவின் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் படங்கள் மாதிரி இதுவும் ஒரு ஃபேண்டசி மேல் லோக கதை தான்.. அதாவது எம தர்ம மகாராஜா தன் சின்ன வீடான ரம்பை வீட்டுக்கு போறப்ப சாரி போன பின் அங்கேயே பாசக்கயிறை மறந்து வெச்சுட்டு வந்துடறாரு .. அதனால காலைல பூலோகத்துல ஒரு  உயிரை எடுக்க வேண்டிய சூழ்நிலைல அவரால உயிரை எடுக்க முடியலை.. அந்தாளோட சம்சாரம் அவரை எமலோகத்துக்கு கூட்டிட்டுப்போக ஒரு கண்டிஷன் போடறாங்க.. அதாவது அவங்க கணவர் பல பேருக்கு பணம் கடன் கொடுத்திருக்கார்.. அந்த கடன் பல லட்சங்கள் மதிப்பு பெறும்.. ஏதாவது ஒரு கடனை வசூல் பண்ணிக்கொடுத்துட்டு கூட்டிட்டுப்போங்கங்கறாங்க .. ( இவ தான்யா பொண்டாட்டி - டாக்டர் ராஜசேகர்க்கு அடுத்த பட டைட்டில் ரெடி )

எமனும், சித்திர குப்தனும் அங்கே இங்கே அலைஞ்சு பார்க்கறாங்க, வேலை ஆகலை..என்ன நடக்குதுங்கறதை காமெடியா சொல்லி இருக்காரு.. ஒரு 8 நிமிஷ படத்துக்கு அவர் உழைப்பு அதிகம் .. வெல்டன் சார்..

எமனா நடிச்சவர் நடிப்பு கலக்கல்னா அந்த சொர்ணாக்கா நடிப்பு செம.. வசனங்களில் நகைச்சுவை இழை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. கடனை எப்போ ரிட்டர்ன் பண்ணப்போறே?

எப்போ வேணும்னாலும்.. கைல காசு இருக்கறப்ப

2. மகனே!

யார்.. என் அப்பனே!

3. ஏத்துன போதையைக்கூட இறக்கிடலாம், ஆனா கொடுத்த கடனை திருப்பி வாங்கவே முடியாது

4. அவங்க ரம்பா மாதிரி என் கண்ணுக்கு தெரியறாங்க..

 என் கண்ணுக்கு என் வாகனம் எருமை மாதிரி தெரியறாங்க..

5. எனக்கு ஒரு சந்தேகம்..

 கேளு

 பவர் ஸ்டார் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

6. இப்போ கணக்கு சரியா வருதா?

ம்ஹூம், கணக்கு சரியா வர்லை, காதல் தான் வருது



எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.
Photo: எங்கள் தங்க தலைவருக்கு பிடித்தது  சோனியா காந்தி மட்டுமல்ல இந்த காந்தியும் தான்.




2. இயக்குநர் பெயர் - ஸ்ரீகணேஷ்  - குறும்படத்தின் பெயர் - பரிசு



ஒரு ஏழை.. குடிசை வீட்ல வசிக்கறாரு.. அவர் குடிகாரர்.. மனைவிதான் பொறுப்பா வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாத்துது.. அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை.. 10 வயசு.அந்தபெண்ணோட கனவுகள் பூ வளர்க்கனும்,கிதார் கத்துக்கனும், சைக்கிள் வாங்கனும்,,


 சைக்கிள் வாங்க காசு சேர்க்கறா.. அம்மா தீனி வாங்க குடுக்கற காசு, அக்கம் பக்கம் வீடுகளில் கடை கண்ணிக்குப்போய் அவங்க தர்ற டிப்ஸ் காசு எல்லாம் உண்டியல்ல சேர்த்து வைக்கிறா..


அப்போ டி வி ல ஒரு நியூஸ்... தானே புயல் நிவாரண நிதிக்காக அறைகூவல் விடுக்கறாங்க.. இவ தன் உண்டியல்ல சேர்த்து வெச்ச காசை கொண்டு போய் டி வி ஸ்டேஷன்ல கொடுக்கறா.. அவளைப்பற்றி டி வி நியூஸ்ல சொல்றாங்க.. அதைப்பார்த்த அவ பெற்றோர் உள்ளம் உருகறாங்க, அவ அப்பா இனி நான் குடிக்கலை.. 2 மாசம் குடிக்காம பணம் சேர்த்து வெச்சிருந்தா உனக்கு சைக்கிள் வாங்க காசு சேர்ந்திடும்னு சொல்றார்..


க்ளைமாக்ஸ்ல டி வி ல இருந்து அவ வீட்டுக்கு சைக்கிள் பரிசு வருது..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சைக்கிள் வாங்கி இருந்தாக்கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.. இப்போ தானே நிவாரண நிதிக்கு பணம் குடுத்தது மனசுக்கு நிறைவா இருக்கு

2. நீ ஏம்மா இந்த வீட்ல வந்து பிறந்தே?

3. ஃபோட்டோ எடுத்துக்கவா?

வேணாம் சார்.. நான் அழுத மாதிரி இருக்கேன், நல்லா வராது

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காசின் தேவை உள்ள ஏழைப்பெண் அடிப்படையில் கிறிஸ்டினாக இருந்தாலும் தான் கண்டெடுக்கும் 100 ரூபாய் பணத்தை இந்து உண்டியலில் போடுவது

2. அந்த 100 ரூபாய் இருந்தா குவாட்டர்க்கு ஆச்சு, என அப்பாவும், 4 கிலோ அரிசியாவது வாங்கி இருக்கலாம் என அம்மாவும் எதார்த்தமாக பேசுவதும், தன் பெண்ணின் நல்ல குணத்தை அவர்கள் புரியாதபடிக்கு இருப்பதும், பின் தாமதமாக அதை உணர்வதும்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அந்த சிறுமி டி வி ஸ்டேஷன்ல பணம் குடுத்துட்டு அப்பவே கிளம்பிடுது.. ஜஸ்ட் ஒரு ஃபோட்டோ  எடுக்கலாம்னு டி வி ஆஃபீசர் கேட்டப்பக்கூட வேனாம்னு சொல்லி கிளம்பிடுது.


டி வி செய்தில கூட அந்த சிறுமி பேர் சொல்லலை.. அப்படி இருக்கும்போது சைக்கிள் பரிசு தர அந்த ஆஃபீசர் கரெக்டா அந்த குடிசை வீட்டுக்கு வருவது எப்படி? எந்த விபரமும் அந்த சிறுமி சொல்லலையே?


2. அப்பா திருந்திடறாரு.. அப்போ அந்த சிறுமி தூங்கிட்டு இருக்கு.. அவளை எழுப்பி விட்டு அப்பா “ நான் திருந்திட்டேன்”னு சொல்றாரு.. மகள் மேல் பாசம் உள்ள எந்த அப்பா தூக்கத்தை கலைச்சு விட்டு தான் நல்லவன்னு சொல்வாரு.. காலைல சொல்லிக்கலாமே?

Photo


=

3. இயக்குநர் பெயர் - அஸ்வின்   - குறும்படத்தின் பெயர் - இன்பாக்ஸ்

இது செம ரொமாண்டிக் கதை.. எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க..

ஹீரோயின் 75 மார்க்  ஃபிகரு.. செம கலரு.. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ல என்னமோ வாங்குது,, ஒரு அழகான கேரி பேக் மாதிரி 1 தர்றாங்க.. அதே கடை, ஹீரோவும் ஏதோ வாங்கறாரு.. அவருக்கும் ஒரு கேரி பேக்..

அந்த கேரி பேக் மெயில் சேட் மாதிரி யூஸ் ஆகுது.. அதாவது ஒரு சீட்ல ஹீரோ தன் பேரை எழுதி உள்ளே போட்டா அது ஹீரோயின் பேக்ல போய் சேருது, ஹீரோயின் அதை படிச்சுப்பார்த்துட்டு அதே போல் ரிப்ளை பண்ணுது.. 2 பேரும் தங்களைப்பற்றி தகவல்களை பகிர்ந்துக்கறாங்க..

2 பேரும் அதை வெச்சு சீட்டு விலையாடறாங்க.. எப்படின்னா 13 கார்டு அந்த பாக்ஸ்ல போட்டா அவ பாக்ஸ்க்கு அது போயிடும்..திடீர்னு கேரி பேக் கிழிஞ்சுடுது.. ஹீரோ சோகம் ஆகறாரு.. ஹீரோயினும் தான்.. 2 பேரும் எதேச்சையா பார்க் வர்றாங்க.. ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க, சேர்ந்துடறாங்க ...

நம்ப முடியாத கதை தான்.. ஆனாலும் ரசனையா தான் எடுத்திருக்காங்க

1. படத்தில் நோ வசனம்.. எல்லாம் காட்சிகள் தான் மகேந்திரன் சார் படம் மாதிரி

2. படம் பார்க்கறவ்ர்களை ஏங்க வைத்து விடுகிறது அது போல் ஒரு கேரி பேக் கிடைக்காதா என..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஒரு சீன்ல ஹீரோயின் லேப்டாப்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கு.. டக்னு அதை க்ளோஸ் பண்ணிடுது.. சைன் அவுட் கொடுத்து ஆஃப் பண்ணி அப்புறமா லேப்டாப்பை மூடனும்கற பேசிக் நாலெட்ஜே கிடையாதா?

2. ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் வெவ்வேற ஏரியா.. அதெப்பிடி கரெக்ட்டா ஒரே பார்க் வந்து ஒரே பெஞ்ச்ல உக்கார்றாங்க? இன்னும் நம்பகத்தன்மையோட  அந்த ட்விஸ்ட்டை யூஸ் பண்ணி இருக்கலாம்..

இந்தப்படத்துக்கு சிறந்த படம் விருது கிடைச்சுது..


Wednesday, May 02, 2012

நாளைய இயக்குநர் 29.4.2012 - விமர்சனம்

வாரா வாரம் சண்டே அன்னைக்கு காலைல 10.30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சில தான் கலைஞர் டி வி ல பெஸ்ட் புரோகிராம்னு சொல்லலாம்.. பார்க்காதவங்க ரெகுலரா பாருங்க.. 7 நிமிட குறும்படங்கள் 3 ஒளீபரப்பாகுது.. 

பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா கீர்த்தி இன்னைக்கு பச்சைக்கலர் பாவாடை ( மிடி பாட்டம்?) போட்டுட்டு வந்திருந்தாங்க.. அவங்க கழுத்துல காசு மணீ பாசி மாலையும் பச்சைக்கலர்ல.. நல்ல வேளை பச்சை பச்சையா பேசலை.. மேட்சுக்கு மேட்ச் மிஸ்.. 


அவங்க தலை வலது புறமா லேசா வீங்கி இருந்தது,.. என்னான்னு கேட்டா அது ஒரு வகை ஹேர் ஸ்டைலாம்.. சகிக்கலை.. அவர் போட்டுட்டு வந்த ஹை ஹீல்ஸ் ரொம்ப குறுகலா இருக்கு.. இதே மாதிரி அவர் ரெகுலரா சைஸ் பத்தாத செப்பலை போட்டுட்டு வந்தா கால் பணால் ஆகிடும்.. ( இப்போ விமர்சனம் ஷார்ட் ஃபிலிமுக்கா? கீர்த்திக்கா?)


1. குறும்பட இயக்குநர் பெயர் - கார்த்திக்  - குறும்படத்தின் பெயர் - தோஸ்த்


ஓப்பனிங்க்லயே இது ஒரு காமெடி படம்னு தெரிஞ்சுடுது,, ஒரு வீட்டுக்குள்ள திருடன் திருடப்போறான்.. அங்கே ஃபோட்டோல இருக்கற பெருசு ஆவியா இருந்து அவனை வழி நடத்துது.. அதாவது அந்த பெருசு உயிரோட இருந்தப்போ அந்த வீட்ல இருந்தவங்க யாரும் சரியா அவரை கவனிக்கலை போல.. அதனால எந்தெந்த பொருளை அவன் திருடனும்னு அந்த ஆவியே சொல்லித்தருது.. 

 எல்லாம் முடிஞ்சு கிளம்பறப்ப அந்த ஆவி அந்த திருடன் கிட்டே அவன் ஃபோன் நெம்பர் கேக்குது.. அப்பப்ப போர் அடிச்சா உன் கிட்டே பேசறேன்குது.. திருடனும் குடுக்கறான்.. 

 அடுத்த நாளே போலீஸ்ல மாட்டிக்கறான்.. அந்த வீட்டின் ஓனர் ஒரு ஆட்டோமேடிக் கேமரா வீடியோ செட் பண்ணி வெச்சிருக்கான்.. அந்த வீடியோவுல்  திருடன் பேசுன ஃபோன் நெம்பர் ரெக்கார்டு ஆகிடுது.. அதனால மாட்டிக்கறான்...

மனம் கவர்ந்த வசனங்கள்


1. உன் பேரென்ன?

 கண்ணன்

 அதான் திருட வந்திருக்கே.. 


2.  முதல்ல இந்த டி வியை எடுத்துட்டுப்போ.. இதுல வர்ற 15 சீரியலையும் என் மருமக பார்க்கறா.. கரண்ட் போனா மட்டும் தான் என் பையனுக்கு சமைச்சுப்போடறா..


3. டேய்.. வீட்ல ஒரு ஆவிடா.. 

 குடிச்சிருக்கியா? எப்போ சரக்கை அடிச்சாலும் ஏண்டா எனக்கு ஃபோன் பண்ணி என் உயிரை வாங்கறே?


இந்தப்படத்துல ஹீரோவா வந்தவர் முகச்சாயல்லயும் சரி பாடி லேங்குவேஜ்லயும் சரி பருத்தி வீரன் கார்த்தி போலவே இருந்தாரு.. செம நடிப்பு.. பெஸ்ட் ஆக்டர் விருது வாங்குனாரு.. ஆவியா வந்த பெரியவர் நடிப்பும் பாந்தம்.. 

 பொதுவா பேய்னாலே பேக்கிரவுண்ட்ல  அதிரடி திகில் இசையைத்தான் போடுவாங்க.. இதுல கர்னாடிக் மியூசிக் வித்தியாசமா இருந்தது.. 


2.  குறும்பட இயக்குநர் பெயர் -ராஜேஷ்குமார் - குறும்படத்தின் பெயர் -சாரதி

 ஒரு கால் டாக்ஸி டிரைவர்.. ஒரு லண்டன் வாழ் தம்பதிக்கு ஒரு நாள் கார் டிரைவரா வர்றாரு.. அவங்க போற பக்கம் எல்லாம் டிரைவரும் போறாரு.. டிரைவருக்கு குழந்தைன்னா ஆசை.. ஆனா அவருக்கு குழந்தை இல்லை.. அந்த தம்பதியோட பெண் குழந்தை அந்த டிரைவர்ட்ட ஒட்டுதலா இல்லை.. அந்த பாப்பாவுக்கு இந்தியாவையே பிடிக்கலை.. நரசிம்மராவ் மாதிரியே மூஞ்சியை வெச்சிருக்கு.. 
பெண் குழந்தைகளை கடத்தி வியாபாரம் பண்ற ஒரு கும்பல் அந்த பெண் குழந்தையை கடத்திடுது.. டிரைவர் கஷ்டப்பட்டு  அந்த கும்பலில் மாட்டின குழந்தைகளை மீட்டு அவங்க பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் கதை.. 


கால் டாக்சி டிரைவரா நடிச்சவர் ரொம்ப யதார்த்த நாயகனா சேரன் மாதிரி ( ஆனா குண்டு) நடிச்சிருந்தார்.. எதுக்கும் கோபத்தை காட்டாத பொறுமையான நடிப்பு.. லண்டன் தம்பதியின் குழந்தையா வந்த பாப்பாவை விட கும்பல்ல மாட்டிக்கிட்ட இன்னொரு பெண் குழந்தை ஃபேஸ் கட், துறு துறுப்பு எல்லாம் செம கலக்கல்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பொதுவா கிட் நாப் கும்பல் கடத்துனதும் மயக்க மருந்து குடுத்துடுவாங்க.. ரிஸ்க் எதுக்குன்னு.. அதுவும் இல்லாம விழிச்சிருந்தா சத்தம் போடுவாங்க அல்லது தப்பிக்க வழி தேடுவாங்க ..

2. குழந்தைகளை கடத்தி வெச்சிருக்கற அதே ரூம்ல எந்த லூஸாவது ஹீரோவை அடைச்சி வைப்பானா?

3. டிரைவர் தன் மனைவியிடம்  செல் ஃபோனில் உரையாடும் காட்சி  தேவை இல்லாதது ( பிள்ளை இல்லாதவர் என்பதால் அவர் தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்ற சஸ்பென்சுக்காக என்றாலும் அது தேவை இல்லாத சீனே..)

 நடுவரா வந்த சுந்தர் சி,  வெற்றி மாறன் 2 பேருமே ஒரு குறை சொன்னாங்க.. அதாவது அந்தக்குழந்தை ஏன் டிரைவர் மேல வெறுப்பா இருக்கு.. கதைக்கு அது தேவையே இல்லைன்னு.. நான் என்ன சொல்றேன்னா நோ பிராப்ளம்.. அந்த குழந்தை வெறுப்பா இருந்தாக்கூட டிரைவர் அந்த குழந்தையை காப்பாத்தறார் என்பதுதான் கதைக்கரு.. 

 இந்த ஜட்ஜுங்க எல்லாம் ஸ்டேஜ்ல இயக்குநர்களை மடக்கிடறதா நினைச்சு சில கேள்விகளை கேட்க்றாங்க /. மேடை பயம் டென்ஷன் இதனால அந்த இயக்குநர்கள் அதுக்கு சரியா பதில் சொல்ல முடியறதில்லை.. இதனால ஜட்ஜூங்க ரொம்ப மிதப்பா நினைச்சுக்கறாங்க ..  

3.குறும்பட இயக்குநர் பெயர் -அருண் - குறும்படத்தின் பெயர் -கறுப்பு, மஞ்சள், சிவப்பு


வித்தியாசமான திகில் படம்.. பேசிக் இன்ஸ்டிங்க் - பாகம் 2 படத்தோட சாயல்ல..   காலேஜ் ஃபிரண்ட்ஸ் 3 பேரு அவங்க ரூமுக்குள்ள வர்றாங்க.. அதுல ஒரு பையன் இன்னொருத்தனை ( ரூம்ல இருக்கற 3 பேர் தவிர வேற ஒரு ஆள்) திட்டிட்டே இருக்கான்.. அவங்க பேச்சுல இருந்து நமக்கு தெரிய வர்ற விஷயம் என்னான்னா  வனை இவங்க 3 பேரும் நல்ல சக்கையா அடிச்சுப்போட்டுட்டு வந்துட்டாங்க.. வந்தவங்க அவன் பேக் ஒண்ணையும் எடுத்துட்டு வந்துட்டாங்க..
 

 அந்த பேக்ல ஒரு டைரி.. அது ரத்தத்தால எழுதப்பட்டிருக்கு.. அதை ஒருத்தன் படிக்கறான்.. என்ன ஆச்சரியம்னா  அதுல இவங்க அவனை அடிச்சதை, அடிச்சுப்போட்டுட்டு ரூமுக்கு வந்ததை எல்லாம் விவரமா அதுல எழுதி இருக்கு..  பயத்தோட, ஆர்வத்தோட படிக்கறப்ப ஒரு இடத்துல “ இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. 

 அதை படிச்சதும் டக்னு படிச்சவன் டைரியை அனிச்சையா தூக்கிப்போட்டுடறான்.. படிப்பு கட்,... அவன்  மண்டை பட்.. 

 மீதியை மீதி இருக்கற 2 பேரும் படிக்கறாங்க.. இப்போ நீங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் அடிச்சுக்கிட்டு சாவீங்கன்னு அதுல வருது.. உடனே 2 பேருக்கும் பயம்.. யார் யாரை போடப்போறாங்கன்னு.. ஆளுக்கொரு ஆயுதம் எடுக்கறாங்க.. ஆனா அதுல ஒருத்தன் சூசயிடு பண்ணிக்கறான்.. மீதி இருக்கறவன் ஒருத்தன்.. 

 இப்போ அவனும் சாகப்போறான்.. ஆனா மறுபடி எல்லாரும் பிழைச்சுக்குவீங்கன்னு வருது.. அதே போல் பிழைச்சுக்கறாங்க,..,ஆனா மறுபடி அதே போல் படிக்க ஆரம்பிக்கறாங்க..  ( செத்து செத்து விளையாடறாங்க)

 அதாவது பாதிக்கப்பட்ட அந்த ஆள் அவங்களை கொலை கொலை செஞ்சு தன் வெறியை தீர்த்துக்கறான் என்பதே கதை.. 

 ரொம்ப புதுமையா இருந்த  இந்தக்கதையை இரு இயக்குநர்களூம் பாராட்டாட்டிக்கூட பரவாயில்லை.. ஏகப்பட்ட வன்முறைன்னாங்க.. பேய்ப்படம்னா பின்னே கொஞ்சிட்டா இருக்க முடியும்?நகரம் படத்துல இல்லாத வன்முறையா? வெற்றி மாறன் இயக்கத்தில் வந்த பொல்லாதவன்ல கூட ஓவர் வன்முறை தான்.. 

 இதே கதை நாட் ல அமரர் சுஜாதா கூட ஒரு சிறுகதை எழுதி இருக்கார்.. டைட்டில் நினைவில்லை.. அதுல ஹீரோ ஹீரோயின் ஸ்விம்மிங்க் பூல்-ல நீச்சல் பழக்குவது போலவும் ஒருவர் சாவது போலவும்... மறுபடியும் முதல்ல இருந்து மாதிரியும் வரும்.. 

மாதவன் -ன்  யாவரும் நலம் படத்துல கூட டி வி ல வர்ற சீன் எல்லாம் நிஜத்துல நடக்கற மாதிரி காட்டி இருப்பாங்க.. 

 என்னைப்பொறுத்த வரை இது ஒரு நல்ல முயற்சி,.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. இந்தக்கதையை படிப்பதை நிறுத்தினால்  மண்டை வெடிச்சு செத்துடுவே”அப்டினு ஒரு வரி வருது.. முதல் ஆள் அதே போல் சாகறான், ஓக்கே, ஆனா அதுக்குப்பிறகு 2 வதா படிக்கறவன் கூட அதே போல் பாதிலயே படிக்கறதை நிறுத்தறான்..,ஆனா அவன் மண்டை வெடிக்கலை.. அது ஏன்?

2. ரூமில் இருக்கும் 3 பசங்க ஸ்டேட்மெண்ட் படி அந்தப்பையனை நல்லா அடிச்சுப்போட்டதாத்தான் வருது , கொலை செய்யலை.. ஏன்னா அவனை இன்னொரு டைம் போய் நல்லா அடிக்கனும்னு ஒருத்தன் சொல்றான்.. அப்புறம் எப்படி அவன் செத்தான்?

3. அந்த பையனை அடிச்சுப்போட்டுட்டு அப்போதான் ரூமுக்கு வர்றாங்க.. அப்படியே அவன் செத்திருந்தாலும் 10 நிமிஷ கேப்ல பேயாகி உடனே டைரி எழுதி பழி வாங்கனுமா? 2 நாள் கழிச்சு அந்த சம்பவம் நடப்பது போல் காட்டி இருக்கலாம்.. 

 இந்தப்படத்துக்கு பெஸ்ட் கேமரா, எடிட்டிங்க்னு 2 அவார்டு கிடைச்சது.. வெல்டன்

டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Wednesday, April 25, 2012

நாளைய இயக்குநர் 22.4.2012 - விமர்சனம்

கே பாக்யராஜ் நடுவரா  அல்லது ஜட்ஜா இருந்த டைம்ல அவர் டி எம் கே ல இருந்தாரு.. அவர் அம்மா கட்சிக்கு வரப்போறார்னு பேச்சு அடிப்பட்ட அடுத்த நாளே விக்ரமன் , வெற்றி மாறன் கூட்டணி.. இப்போ மறுபடி சுந்தர் சி உள்ளே வந்துட்டாரு.. சுந்தர் சி எப்பவும் சிரிச்ச முகம், வெற்றி மாறன் கடு கடு முகம்.. ஹூம்.. 


1. குறும்பட இயக்குநர் பெயர் - அஸ்வத்  - குறும்படத்தின் பெயர் - குழந்தையின் வயது 75

டைட்டிலை பார்த்ததுமே செண்ட்டிமெண்ட்ல பிழியப்போறாங்கனு நினைச்சேன்.. 100% சரி.. ஒரு அப்பா, பையன் நடுவில் உள்ள தவமாய் தவமிருந்த உறவு பற்றிய கதை.. படம் ஃபுல்லா 2 பேர் உரையாடல்லயே முடிஞ்சுடுது.. 

அப்பாவும், பையனும் லொட லொடனு பேசிட்டே இருக்காங்க.. அப்பா பேச்சு வாக்குல அது என்ன?னு கேட்கறார்.. பையன் சொல்றான் - அது அணில்ப்பா.. 
மறுபடி அதே கேள்வி.. மகன் அதே பதில். இந்த மாதிரி 4 டைம் ரிப்பீட் ஆனதும் பையன் கடுப்பாகி ஏன்பா திருப்பு திருப்பி கேட்கறீங்க?ங்கறார்.. அப்பா உடனே ஃபிளாஸ் பேக் சொல்றார்.. பழைய டைரி எடுத்து அதுல ஒரு பேஜ் படிக்க சொல்றார்.. அதுல பையன் 20 டைம் மாடு இருக்கறதை காட்டி அது என்னப்பா? என கேட்பதும், அப்பா அதற்கு சலிக்காமல் பதில் சொல்வதும் அதுல பதிவு பண்ணப்பட்டிருக்கு.. 

 மகன் அதை கேட்டு கண் கலங்கறான்.. அதாவது நம் பெற்றோர்கள் நாம குழந்தைகளா இருந்தப்போ காட்டுன அக்கறையை, பொறுமையை நாம் நம் பெற்றோர்களிடம் காட்டுவதில்லை என்ற கரு.. க்ளைமாக்ஸ்ல அந்த பையனின் மகள் அதே போல் லவ் பேர்ட்ஸ் கூண்டை காட்டி அது என்ன ? என 2 முறை கேட்க அவன் பொறுமையா  பறவை என்கிறான்..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அப்பா அந்த டைரியை எடுத்து டிசம்பர் 31 ஆம் பக்கம் எடுத்து படி என்கிறார்.. ஆனால் பையன் டைரியின் கடைசி பக்கம் பார்க்காமல் முதல் 25 வது பக்கம் பார்க்கிறான்

2. அப்பா 1985 ஆம் வருஷ டைரியை எடுன்னு சொன்னதும் பையன் உள்ளே போய் தேடி எடுக்காமல் ரெடியாக டக் என்று அவர் தலை மாட்டில் இருந்து எடுக்கிறான்

3.  அப்பாவின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் மகன் கேரக்டர் செயற்கையான நடிப்பு + சிரிப்பு. நாடகம் பார்ப்பது போல்.. இருக்கு

 இப்படி சில குறைகள் இருந்தாலும் இது ஒரு நல்ல படமே.. ஆனா ஜட்ஜ்ங்க  2 பேரும் இந்த படத்தை குறை தான் சொன்னாங்க..


2.குறும்பட இயக்குநர் பெயர் - ஸ்ரீ கணேஷ் - குறும்படத்தின் பெயர் - டைம் அவுட்.


அசோகமித்திரன் எழுதுன சிறுகதையான காலமும் 5 குழந்தைகளும் தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்.. எதைத்தொட்டாலும் துலங்காத ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவனைப்பற்றிய ஜாலியான நகைச்சுவைக்கதை.. 

கதையை சொல்றதுக்குப்பதிலா மனம் கவர்ந்த வசனங்கள் சொன்னாலே ஓரளவு கதை புரிஞ்சுடும்



1. ஆட்டோ.. அடையாறு போகனும்.. வர்றீயா?



 நான் மவுண்ட்ரோடு தான் போறேன்.. அங்கே வேணா வர்றியா?


2.  தலைவரே.. எப்படியாவது எனக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்துடுங்க.. 

 போலி எம் எல் ஏ - கவலையே படாதே. பணம் கொடுத்தாச்சு இல்ல? நீ தான் அடுத்த வி ஏ ஓ.. ஆமா ஏய்யா பி ஏ.. வி ஏ ஓ அப்படின்னா என்ன?


3. ஒரு 5 நிமிஷம் இந்த உலகம் சுத்தறதை நிறுத்திட்டு ரெஸ்ட் எடுத்தா என்ன?எப்போ பாரு பரப்பாவே இருக்கே..?ரெஸ்ட் எடுக்கவே மாட்டாங்களா?

4.  எங்கே ஓடறோம்? ஏன் ஓடறோம்? எவ்ளவ் தூரம் ஓடறோம்..? எதுவும் தெரியலை. திரும்பிப்பார்த்தா டோட்டல் வோர்ல்டும் ஓடிட்டே இருக்கு.. 


5. யோவ்.. ஆட்டோ சீக்கிரம் போய்யா. 

 இருங்க.. ஒரு சவ ஊர்வலம்..

 அடடா.. யோவ்.. ஒரு 5 நிமிஷம் லேட்டா செத்திருக்கக்கூடாதா?


6.  ஜோசியரே. என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

 10 வருஷம் நாய் படாத பாடு படுவீங்க.. 

 அதுக்குப்பிறகு என் நேரம் நல்லாருக்குமா?

 ம்ஹூம், அதுக்குப்பிறகு அது பழகிப்போயிடும்


படத்தோட ஹீரோ கடவுளையே ஒரு டைம் நேர்ல சந்திச்சும் அவனுக்கு அது யூஸ் இல்லாம போயிடுது அப்டிங்கற மாதிரி கொண்டு போனாங்க..

 இந்தப்படத்துக்கு இயக்குநர் எடுத்துக்கிட்ட முயற்சிகள், உழைப்பு பிரம்மிக்க வைத்தது.. 89 கட் ஷாட்ஸ்..  120 கேமிரா ஆங்கிள்ஸ்

உழைப்பு வீண்போகலை.. இந்த வாரத்துக்கான பெஸ்ட் ஃபிலிம், பெஸ்ட் ஆக்டிங்க், பெஸ்ட் கேமரா மேன் என 3 விருதும் ஒரே படமே வாங்குனது 10 மாதங்களூக்குப்பின் இதுவே முதல் முறை


3. குறும்பட இயக்குநர் பெயர் - ஷபி   குறும்படத்தின் பெயர் - இருட்டு


எனக்கு பேய், பிசாசுல நம்பிக்கை இல்லைன்னாலும் அந்த மாதிரி ஹாரர் ஃபிலிம்ஸை ரொம்ப ரசிப்பேன்.. த்ரில்லர் ஃபிலிம், ஹாரர் ஃபிலிம், காமெடி ஃபிலிம் இந்த 3 ம் தான் என் சாய்ஸ்.. ( கில்மா ஃபிலிம்? பப்ளிக் பப்ளிக்)

ஒரு கிராமம்.. அதுல ஆவி இருக்கறதா சொல்லப்படும்  வலையல் காரி வீட்டில் தங்குனா பரிசுன்னு ஒரு பந்தயம்.. 4 ஃபிரண்ட்ஸ் போய் தங்கறாங்க.. நைட் ஃபுல்லா எதுவும் ஆகலை.. விடிஞ்சதும்  அந்த 4 பேர்ல ஒருத்தன் ஒரு இடத்துல விழுந்து கிடக்கறான்.. அவனை விசாரிச்சா அவன் நைட்ல இருந்து அங்கே தான் மயங்கி இருக்கான்னு சொல்றான்.. அப்போ நைட் பூரா அவங்க கூட இருந்தது, பேசுனது எல்லாம் அந்த பெண் பேய் தான் அதுவும் அந்த நண்பன் ரூபத்துல.. உடனே பயந்து போய் அவனை அம்போன்னு அங்கேயே விட்டுட்டு ஓடிடறாங்க..


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பேய் தான் வெளில போயிடுச்சு././ இப்போ இவங்க பார்த்தது அவங்க நண்பனைத்தானே..? ஏன் பயந்து ஓடறாங்க?

2. நைட் பூரா நண்பர்களுடன் ஆண் வேடத்தில் இருந்த பெண் பேய் சாதிச்சது என்ன? ஒரு கொலை இல்லை, ஒரு ரேப் இல்லை.. சும்மா கடலை ஒன்லி??


3. இந்தக்கதையின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேய்கள் யாரையும் கொல்லாதுன்னா?

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்தக்காலத்துலயும் பேய், பிசாசு எல்லாம் இருக்கா?

 ஏன்? சாவு நடந்துட்டுத்தானே இருக்கு?


2. செயினைக்காணோம்டா..

 இங்கே எங்கேயும் இருக்காதுடா.. நாம முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்.. அங்கே போய் தேடிக்கலாம்..



Wednesday, January 18, 2012

நாளைய இயக்குநர் 8.1.2012 - க்ரைம், லவ், காமெடி -விமர்சனம்

http://www.bestactress.info/wp-content/uploads/2011/06/Keerthi-Chawla-hot-saree-navel.jpg 

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு இந்த வருஷம் ஒப்பனிங்க்கே சரி இல்லை, நியூ இயர் அன்னைக்கு சண்டே, அடுத்த வாரத்துக்கு அடுத்த வாரம் பொங்கல் என 2 சண்டே அநியாயமா அந்த நிகழ்ச்சி கட்.. அதுக்குப்பதிலா ஒரு மொக்கை புரோக்ராம் போட்டு கடுப்பேத்துனாங்க.. போன வாரம் பார்த்த அந்த நிகழ்ச்சி.. 


1. குறும்படத்தின் பெயர் -  விடுதி - குறும்பட இயக்குநர் பெயர் -  அருண் சக்தி முருகன் ( நாஞ்சில் விஜயன்)

ஓப்பனிங்க் ஷாட் ல பர பர நியூஸ் ஓடுது அதாவது ஒரு பிரபல காலேஜ் விடுதில ஒரு மாணவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்.. அதை பற்றி சொல்றாங்க..

காலேஜை காட்றாங்க.. அங்கே 3 சீனியர் ஸ்டூடண்ட்ஸ்..  அவங்க பண்ற கலாட்டாக்கள், காமெடியா கொஞ்சம் காட்றாங்க.. அவங்க கிட்டே ஒரு பொண்ணு  ( ஏன் ஃபிகரு, ஜிகிடின்னு சொல்லலைன்னா அந்த அளவு பாப்பா ஒர்த் இல்ல ஹி ஹி )

வாலண்ட்ரியா  செல்வா ராகவன் ஆண்ட்ரியா போல் பழகுது.. பாப்பா  திடீர்னு பார்த்தா பாப்பா அந்த 3 பேரையும் கொலை செய்யுது.. 


 இப்போ பாப்பா ஃபிளாஸ்பேக் சொல்லுது.. பாப்பாவோட தம்பி.. கொஞ்சம் பெண்மை சாயல் கொண்டவர்.. அவன் இவன் விஷால் மாதிரி.. அவரை இந்த 3 பேரும் காலேஜ் ல ரேகிங்க் பண்ணி இருக்காங்க.. அவமானம் தாங்காம அவன் தற்கொலை செஞ்சுக்கறான்.. அவன் மரணத்துக்கு காரணமான இவங்க 3 பேரையும் அக்கா பழி வாங்கறதுதான் கதை.. 


இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் எடுக்கற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கறேன், வில்லன்களை காட்றப்ப ஆடியன்ஸுக்கு அவங்க மேல வெறுப்போ, கோபமோ வரனும், அப்போதான் அவங்க சாகடிக்கப்படறப்ப  ஒரு திருப்தி வரும்.. அவங்க பண்ற காமெடி சீன்லாம் காட்டிட்டு கொலை செய்யப்படறதை காட்னா எஃபக்ட் இருக்காது.. 

3 பேரும் கொலை செய்யப்படும் காட்சி ஓவர் வல்கர்.. 

மனதில் நின்ற ஒரே வசனம் - சீனியர்னா உங்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?

http://chennai365.com/wp-content/uploads/actress/Keerthi_Chawla/Keerthi_Chawla_006.jpg


2. குறும்படத்தின் பெயர் -  ஒரு ஃபீலிங்க்  - குறும்பட இயக்குநர் பெயர் -  கார்த்திக்

ஓப்பனிங்க் செம காமெடியா இருந்துச்சு.. 2 ஃபிரண்ட்ஸ்.. ஒருத்தன் தம் அடிக்கறான், இன்னொருத்தன் புகை விடறான்,.. அந்த .. ஒருத்தன்   பபிள்கம் சாப்பிடறான், இன்னொருத்தன் குமிழி ( மொட்டுழி) விடறான்.. அவ்ளவ் க்ளோசாம் அடங்கோ...2 பேரும் ஜீரோ மார்க் தான் வாங்கறாங்க.. காலேஜ்ல..


அவ்ளவ் க்ளோசா இருக்கற 2 பேர்ல ஒருத்தன் ஒரு ஃபிகரை ரூட் போடறான்.. மேட்டரை அவ கிட்டே சொல்ல தயக்கம்.. அதனால அவன் ஃபிரண்ட் கிட்டே சொல்லி சொல்ல சொல்றான்.. அவன் போய் அந்த ஃபிகர்ட்ட இந்த மாதிரி இந்த மாதிரி இந்த மாதிரிங்க.. என் ஃபிரண்ட் உங்களை லவ் பண்றான்னு சொன்னதும் ஒழுக்கமான ஃபிகர் என்ன சொல்லனும்? எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கட் பண்னனும், ஆனா ஃபிகர் சொல்லுது >நான் உங்களை லவ் பண்றேன், அவனுக்காக நீங்க தூது வந்தா எப்படி?ன்னு கேக்குது , அவன் ஷாக் ஆகிடறான்


ஃபிகரோட ஃபிரண்ட் ஜிகிடி கேக்குது ஏண்டி அப்படி சொன்னே? அதுக்கு  ஃபிகர் சொல்லுது, அப்போதாண்டி அவங்க 2 பேரும் அடிச்சுக்குவாங்க.. நம்ம கிட்டே வர மாட்டாங்க.. என்ன லாஜிக்கோ?

அப்புறம் பார்த்தா அந்த 2 பேருக்கும் கிடைக்காத அந்த ஃபிகர் ஒரு டப்பா மூஞ்சி பையனுக்கு கிடைக்குது.. 

வழக்கமான கதைதான், உருப்படியா செஞ்ச விஷயம் படத்துல நடிச்ச அந்த 2 உருப்படிகள் தான் ஹி ஹி 

ரசித்த வசனங்கள்

1. அவனுக்கு லவ்வா? அவனுக்கு ஒழுங்கா வடை சுடக்கூடத்தெரியாது..

2. அவனவன் லவ்வை அவனவனே போய் சொல்லுங்கப்பா... 

3. காதல்ங்கறது ஆயா சுட்ட வடை மாதிரி..  ஜாக்கிரதையா இருக்கனும் இல்லைன்னா எவனாவது கவ்விட்டு போயிடுவான், நட்புங்கறது ஆயா மாதிரி , எவனும் கண்டுக்க மாட்டான்..  ( எஸ் எம் எஸ் ஜோக்)


அப்புறம் குறும்படம் இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை படத்துல டயலாக்ஸ் ஓடறப்ப தேவைப்படாம பின்னணி இசை போடாதீங்க. எப்படி வசனம் புரியும்?

http://farm3.staticflickr.com/2088/2343213010_d5a36c9a38_z.jpg?zz=1


 3. குறும்படத்தின் பெயர் -  குவியம்   - குறும்பட இயக்குநர் பெயர் -  கிஷோர்

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர், அவர் ஒரு ஃபோட்டோ மட்டும் இல்ல, பல ஃபோட்டோஸ் எடுப்பவர்.. ஒரு தடவை அவர் கண்ல, கேமரால எதேச்சையா ஒரு ஜிகிடி மாட்டுது.. அதை க்ளிக் பண்றாரு.. அந்த ஜிகிடி கிட்டே பிட்டை போடறாரு.. நீங்க மாடலிங்க்கா போஸ் தரனும்.. உங்க ஃபோட்டோ பார்த்துட்டு ஒரு பெரிய ஆங்கில பத்திரிக்கை ஓக்கே சொல்லி இருக்குன்னு பிட் போடறார்.. ஜிகிடி அதை நம்பிடுது ( பொதுவா இந்த பொண்ணுங்க உண்மையான பசங்களை நம்ப மாட்டாங்க, பொய் சொல்றவனுக்குத்தான் காலம், அவன் வண்டி வண்டியா பொய் சொல்லுவான், அதை நம்பிடும்ங்க அய்யா ஹய்யோ)


ஃபோட்டோ ஷூட் நடக்குது, பல கோணங்கள்ல படம் எடுக்கறார் ( அரக்கோணம், கும்ப கோணம் இப்படி இல்ல..:)2 பேருக்கும் லவ் க்ளிக் ஆகிடுது..
அப்புரம் ஒரு கட்டத்துல ஒரு விட்டத்துல, ஒரு சதுரத்துல ஹீரோயினுக்கு மேட்டர் தெரிஞ்சுடுதுன்னு , அப்புறம் ஏன் இப்படி கலைஞர் மாதிரி வாய்ல வர்றது எல்லாம் டகால்டியா இருக்கே?னு கேட்க அவர்  அதான் ஹீரோ டக்னு வடிவேல் மாதிரி பல்டி அடிச்சிடறார், உன்னை லவ் பண்ணேன், உன்னை டெவலப் பண்றதுக்காகத்தான் அப்படி பொய் சொன்னேன்கறார்.. உடனே ஜிகிடி சிரிச்சுக்கிட்டே ஓக்கே டன் அப்டினு சொல்லிடுது சுபம்.. ரொம்ப சிம்ப்பிள் லவ் ஸ்டோரி நீட்டா இருந்துச்சு ஹீரோயின் அழகும் , ஹீரோ நடிப்பும் ஓக்கே ரகம்.. 


ரசித்த வசனங்கள்


1. மேரேஜுக்காக 1000 பொய் சொல்லலாம்னு சொல்றாங்க, அப்போ லவ்வுக்காக மட்டும் பொய் சொல்லக்கூடாதா?


2. லவ் ஈஸ் ஸ்வீட் நத்திங்க் -LOVE IS  SWEET NOTHING( அப்டின்னா லவ்வுல ஸ்வீட் தவிர வேற எதுவும் இல்லைன்னு அர்த்தமா? காரம் சாப்பிட மாட்டாங்களா?) 


3. ஒரு நிமிஷம் இருங்க, கூலிங்க் கிளாஸ் போட மறந்துட்டேன் , அது லவ் க்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி 

மவுன ராகம் படம் மாதிரி ரொம்ப நீட்டா அழகா வந்ததா நடுவர்கள் சிலாகித்தார்கள்


டிஸ்கி - கீர்த்தி ஃபோட்டோஸ் போடலை, அதுக்கு சப்ஸ்டிடியூட்டா கீர்த்தி சாவ்லா ஃபோட்டோ  ... விமர்சனத்தை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கனும் என்பதை சொல்லும் வகையில் சானியா மிர்சா ஃபோட்டோ


டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

 

டிஸ்கி  5 -

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்


Thursday, December 15, 2011

நாளைய இயக்குநர் -காமெடி , காதல் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbhj_dm6l6nCmX-G2LI9vKce7p0xM1hYD4f8hXJTd3D9AExTWDnczWLCVGYWKRxIQ1-4WFuo8sBy1c8vNsJknkhhyphenhyphencq97I7NiPs2JKctvGaXGWaEvwy4pKovVKIc9WeG9pHwZxAMoMEjm4/s320/keerthy+jewellery+model.jpg

கலைஞர் டி வி ல வாரா வாரம் ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு  வர்ற நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு நான் ஒரே ஒரு கரெக்‌ஷன் மட்டும் சொல்லிக்கறேன்.. ஜட்ஜா வர்ற கே பாக்கியராஜ், சுந்தர் சி 2 பேரும் கோட் சூட்லதான் ரெகுலரா வர்றாங்க, அது போர்.. இயல்பா பேண்ட் சர்ட்ல வரலாமே?அப்புறம் கீர்த்தி எப்பவும் நைட்டி அல்லது பெட்டிகோட் மாதிரி ஒரு டிரஸ் போட்டுட்டுதான் வர்றாங்க.. அது ஏன்? சேலை, சுடினு டீசண்ட்டா வரலாமே? இன்னைக்கு கீர்த்தி ஏதோ சி டி மாதிரி ஒரு டாலர் செயின் போட்டு வந்தாங்க, அய்யோ ஹய்யோ

கீர்த்தி - உங்களை பொருத்தவரை ஆக்‌ஷன் , காதல் , காமெடி எந்த மாதிரி படம் எடுக்கறது டஃப்?

கே பாக்யராஜ் - என்னை பொறுத்தவரை எல்லாத்துக்குமே மூளையை கசக்க வேண்டி இருக்கு. இன்று போய் நாளை வா மாதிரி காமெடி சப்ஜெக்ட்டுக்கும் சரி, ஒரு கைதியின் டைரி மாதிரி ஆக்‌ஷன் படங்களுக்கும் சரி சீன் ரெடி பண்ண ரொம்பவே மெனக்கெடறோம்..

1. இயக்குநர் பெயர் - பிரசாந்த் - குறும்படத்தின் பெயர் - வடுகப்பட்டி ராம்சாமி

ஒரு காலேஜ் ஹாஸ்டல் ரூம். அதுல 3 ஃபிரண்ட்ஸ் தங்கி இருக்காங்க.. அவங்க ரூம்க்கு புதுசா ஒரு ஃபிரண்ட் வர்றான்.. அவன் தான் வடுகப்பட்டி ராம்சாமி.. அண்ணன் செம ராசியான ஆளு.. அவர் முகத்துல விழிச்சுட்டு போனதால்  ஒருத்தன் சேற்றில் விழுந்துடறான்.. இன்னொருத்தன் தன் காதலியின் அண்ணனிடம் அடி வாங்கறான். 3 வது ஆளு தன் ஆள் கிட்டே லவ் பிரப்போஸ் பண்ணி அது ரிஜக்ட் ஆகுது.. 3 பேரும் சேர்ந்து அந்த ராம்சாமியை துரத்தி விட்டுடறாங்க.. 

நல்லா காமெடியாத்தான் இருக்கு.. ஆனா இது ஒரு சம்பவம் மாதிரிதான் இருக்கே ஒழிய  ஒரு கதையாவோ, குறும்படமாவோ பிரமோட் பண்ணாம இருக்கு.. ஃபினிஷிங்க் டச் இல்ல. முழு நிறைவு வர்ல. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

2.  இயக்குநர் பெயர் - ஷஃபி  - குறும்படத்தின் பெயர் -தூவானம்

ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி.. ஒரு அம்மா அப்பா.. 18 வயசு பையன்.. ஓப்பனிங்க்ல அம்மா தைரியமா சொல்லிடும்மா என்கிறான் பையன்.. ஏதோ அவனோட லவ் மேட்டரை அவனோட அப்பா கிட்டே சொல்ல சொல்றதா ஒரு பில்டப். அப்புறம் பார்த்தா அம்மாவோட ஃபிளாஸ்பேக் காதல் ...அவங்க லவ் பண்ற பையனை அடிச்சு மிரட்டி துரத்திடறாங்க. அவங்களால தைரியமா நின்னு காதலை கவுரவிக்க முடியலை.. காதலனுக்கு வேற பக்கமும், இவங்களூக்கு வேறொருவர் கூடவும் மேரேஜ் ஆகிடுது.. இப்போ தன் பையனின் க்ளாஸ்மேட்டின் அப்பா தான் தன் முன்னாள் காதலன்கரதை தெரிஞ்சுக்கிட்டு  அவனை சந்திக்க மன்னிப்பு கேட்க ஆசைப்படறா.. ஆனா முன்னாள் காதலன் இறந்துட்டதா தகவல் தெரிய வருது..

இந்த கதைல மேக்கிங்க் ஸ்டைல். வசனம், எல்லாத்தையும் விட பிரமாதமான விஷயம் என்னான்னா அம்மாவா நடிச்ச மேடம் , அவங்க ஃபிளாஸ்பேக்ல வர்ற பொண்ணோட முகச்சாயலுடன் 100% ஒஹ்த்டுப்போற மாதிரி ஆர்ட்டிஸ்ட்டை தேடி கண்டு பிடிச்சதுதான்.. ( ஒரு வேளை அம்மா, பொண்ணாகவும் இருக்கலாம்.. ) ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷனுக்காகவே இந்த பட டைரக்டரை பாராட்டலாம் வெல்டன்..

3. இயக்குநர் பெயர் - பால மனோகர்  - குறும்படத்தின் பெயர் -காலேஜ் திருட்டு


ஒரு காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பெண் மாடியிலிருந்து குதிச்சு
தற்கொலை பண்ணிக்குது. ஆனா,யாருக்கும் காரணம் தெரியலை. அது போலீசு கேசாகி எல்லா பசங்க கிட்டயும் விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வரார்.
எல்லா பசங்ககிட்டயும் விசாரிக்குறார். எல்லார்மே அந்த பொண்ணு ரொம்ப நல்லபொண்ணுன்னு சொல்லி குட் சர்டிஃபிகேட் குடுக்குறாங்க. மண்டைய பிச்சுக்குற போலீஸ்காரர், அந்த பொண்ணோட க்ளோஸ் ஃப்ரெண்டை கூட்டிக்கிட்டு போய் விசாரிக்குறார்.

அட, ஏம்பா எல்லாரும் ஆர்வமாகுறீங்க, அவர் அந்த மாதிரி போலீஸ்கார்ர் இல்லை. இவர் காக்க காக்க சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல், தங்க பதக்கம் சிவாஜி, மூன்றுமுகம் ரஜினி போல ரொம்ப நல்ல போலீஸ்காரர். பாப்பாவும் எல்லாரையும் போல நல்ல பொண்ணு, சொக்க தங்கம்னு சர்டிஃபிகேட் குடுக்குது. அவ ரூமுல தனக்கு ஒரு க்ளூ கிடைச்சிருக்குறதாகவும், அதன்படி பார்த்தால், நீதான் அவ சாவுக்கு காரணம்னு பிட்டை போடுறார்(இது அந்த பிட்டோ,  பரிட்சை பிட்டோ இல்லை).

உடனே பாப்பா அழுதுக்கிட்டே தான் காரணம் இல்லைன்னும் ----ன்ற பையந்தான் காரணம்னு கொசுவர்த்தி ஏத்துது. அட அதான்பா பிளாஸ்பேக் ஓட்டுது. ஃப்ரெண்டாகி கடலை வறுக்க ஆரம்பிச்சு இருக்கு. வறுத்த கடலை ரொம்ப தீய்ஞ்சு போய் அந்த பையனை மத்த பொண்ணுங்க கூட பேசாத, கடலை போடாதே, சைட்டிக்காதேன்னு சொல்லியிருக்கு. பெத்தவங்க சொல்லியே கேக்காத நாம ஃபிகர் சொல்லியா கேட்க போறோம். அதுல கோவமாகி அந்த பையன் பாப்பாக்கிட்ட என்னை ஏன் இப்படிலாம் இம்சை
பண்ணுறே. உன்கூட மட்டும்தான் ஃப்ரெண்டா இருக்கனும்னு ஏன் என்னை
நச்சரிக்குறே, நீ செத்தாதான் நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்லி கோவமா
போய்டுறான். அதனால மனம் வெறுத்து போய் அந்த பொண்ணு மாடியிலிருந்து தற்கொலை பண்ணிக்கிட்டான்னு அவ ஃப்ரெண்ட் சொல்ல கேஸ் ஃபைலை மூடிடுறாங்க.

 லாஜிக் மிஸ்ஸிங்க்.. இதுக்கெல்லாமா தற்கொலை செஞ்சுக்குவாங்க? ஆனா ஒரு இன்வெஸ்டிகேஷன் படத்தை டைரக்ட் பண்ற சாமார்த்தியம் அந்த இயக்குர்ட்ட இருக்கு.. நல்ல ப்ளாட் தான் அமையலை.. 


 4.  - குறும்படத்தின் பெயர் -அகலாது - இயக்குநர் பெயர்- சீனிவாசன்


ஓப்பனிங் சீனில் இன்னிக்கு நமக்கு கல்யாண நாள். கல்யாண நாளைக்கு இங்க வரனும்னு தோணுச்சுன்னு வயசான பெருசு ரெண்டுங்க பேசிக்கிட்டு இருக்காங்க. பேசிக்கிட்டு இருக்கும்போதே தங்கள் இளமைக்கால நாட்களுக்கு போகுது அவங்க நினைவு....,

சுதந்தர போராட்ட காலத்தில் அவங்களுக்கு டீனேஜ். அப்போ அந்த ஹீரோ காந்தியோடு சேர்ந்து ரொம்ப தீவிரமா போராடுறார். அவர் வீரத்தில் மயங்கி ஹீரோயின் காதலிக்குறாங்க.  ஆனால், ஹீரோவுக்கும் மனசுல காதல் இருந்தாலும், சுதந்திரத்திற்கு அப்புறம்தான் கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறதை ஹீரோயினோட அப்பா பார்த்துடுறார். வீட்டுக்கு வந்து  இனி நீ சுதந்தர போராட்டம் அது இதுன்னு சொல்லி வெளிய போக்க்கூடாது. உடனே மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யாணம்ன்னு சொல்லிடுறார்.

ஹீரோயின் ஹீரோக்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி, எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லைன்னும், ஆனால், அதுக்காக, நீங்க, உங்க கொள்கையை விட்டு குடுக்க வேணாம், நான் கஸ்தூரிபாய் தலைமையில நடக்குற போராட்டத்துல கலந்துக்க நம்ம ஊரு பொண்ணுங்க போறாங்க. அவங்களோடு நான் போய்க்குறேன். அப்படி போகனும்னா எனக்கு பணம் வேணும். அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணி குடுங்கன்னு கேட்குறாங்க.


 ஹீரோவும் எங்கெங்கெல்லாமோ கேட்டு பார்க்குறார். ஆனால், பணம்தான் கிடைக்கலை. கடைசியா ஒருத்தர் சொல்றார், தன்கிட்டயும் பணமில்லை ஆனால், இந்த ஊர் பண்ணையார் பொண்ணு கல்யாணம் ஆகி கைக்குழந்தையோடு விதவையாயிருக்கு. அதை கட்டிக்கிட்டால், உனக்கு பணம் கிடைக்கும்னு வழிக்காட்டுறார். 

சரின்னு சொல்லி பணம் வாங்கி ஹீரோயின்கிட்ட குடுத்துட்டு, விதவை பொண்ணை கட்டிக்கிட்டு வண்டியில வரும்போது எதிர்க்க வண்டியில ஹீரோயினும் வேற ஒருத்தரை கல்யாணம் கட்டிக்கிட்டு வராங்க.
என்ன ஏதுன்னு விசாரிச்சால், போராட்டத்துக்கு கிளம்புகையில் அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டதால்  கல்யாணம் கட்டிக்கிட வேண்டியதாகிடுச்சுன்னு சொல்லி பிளாஸ்பேக்கை முடிச்சு நிகழ்காலத்துக்கு வராங்க.


சரி அவர் காத்துக்கிட்டு இருப்பார்ன்னு பாட்டியும், அவளுக்கு மருந்து வாங்கனும்னு தாத்தாவும் எதிரெதிர் திசையில் பிரியுறதா காட்டுறாங்க.
கதையும் நல்ல கதை, டெக்னிக்கல் விஷயம்,  நடிகர்கள் தேர்வு, இசைன்னு பக்காவா இருந்ததால், இந்த படத்துக்கு பெஸ்ட் ஃபிலிம் அவார்டும், பெஸ்ட் டெக்னிஷியன்சுக்கான அவார்டும் கிடைச்சுது. 

டிஸ்கி - கீர்த்தி ஜ்வல்லரி விளம்பரத்துக்கு  எடுத்த மாடல் ஃபோட்டோவை கீர்த்திக்கு சம்பர்ப்பிக்கிறேன்