Friday, April 13, 2012

டாஸ்மாக் வருமானத்தில் வாழும் அரசு -மனுஷ்யபுத்திரன் பேட்டி இன் விகடன்




மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிப்பவை மனுஷ்யபுத்திரன் கவிதைகள். சமூக, அரசியல் யதார்த்தங்களை உரக்கப் பேசும் இவர், சமகாலத்தின் குரல்.


1.  ''தமிழர்களின் இலக்கிய ரசனை எந்த அளவுக்குச் செறிவாகி இருக்கிறது?''


சி.பி - தமிழன் கிட்டே இலக்கிய அறிவு எப்பவும் கம்மிதான்.. சாப்பாடு பற்றிய அறிவு தான் ஜாஸ்தி..
''முதலில் தமிழர்களுக்கு இலக்கிய ரசனை என்று ஒன்று இருக்கிறதா? ஒரு துறையில் அதன் தாக்கத்தை அளவிட, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் அதில் ஈடுபட வேண்டும். எட்டுக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்ச் சமூகத்தில் எவ்வளவு பேர் இலக்கியம் அறிந்து உள்ளனர்? எவ்வளவு பேர் புத்தகங்கள் படிக்கின்றனர்?


 இன்னும் பலருக்குப் பத்திரிகைக்கும் புத்தகங்களுக்குமான வேறுபாடே தெரியவில்லை.


சி.பி - டீக்கடைல போய் ஓ சி ல படிச்சா அது பத்திரிக்கை.. லைப்ரரில போய் ஓ சி ல படிச்சா அது புத்தகம். இதுதான் தமிழனோட பார்வை 


 மக்களுக்கு அன்றாட வாழ்க்கை யில் ஏராளமான கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு இடையில்தான் சினிமா பார்க்கின்றனர், டி.வி. பார்க்கின்றனர், மற்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இலக்கியம் என்பதும் ஒரு கேளிக்கைதான். அது ஓர் உயர்தரமான, மனிதனைச் செம்மைப் படுத்தக்கூடிய கேளிக்கை. சக மனிதனைப் புரிந்துகொள்ளவும் வாழ்வை இன்னும் இலகுவாக்கவும் இலக்கியம் சொல்லித்தருகிறது.

திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள்... அதுபோன்ற படைப்பை ஒரு தனி மனிதன் உருவாக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவுநிலை அப்படி ஓர் உயர்மட்டத்தில் இருந்தால்தான் அது சாத்தியம். அதேபோல, திருவள்ளுவர் ஒருவர் மட்டும் இருந்திருக்க முடியாது. அவருக்கு முன்னும் பின்னும் பல்லாயிரம் படைப் பாளிகள் இருந்துள்ளனர்



 அப்படியானால், திருவள்ளுவர் எதனுடைய கண்ணி? எதனுடைய தொடர்ச்சி? இதை எல்லாம் நாம் என்றைக்கேனும் யோசித்தோமா? இரண்டாயிரம் வருடத் தமிழ் அறிவின் சாரமான திருக்குறளை, அதன் கவித்துவத் தைக் கெடுத்து, அதன் அறவியல் நோக்கத்தை உதறிவிட்டு, வெறுமனே மனப்பாடப் பொருளாக நம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகிறோம். தமிழ் இலக்கிய ரசனை இந்த அளவில்தான் இருக்கிறது!''


2. ''-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என இன்றைய இளைய சமூகம் ஒரு மெய்நிகர் உலகத்தில் (virtual world) வாழ ஆரம்பித்துவிட்டதா?''


சி.பி - நம்மாளு காலைல பல்லு விலக்குறதையே  செல் ஃபோன்ல படம் பிடிச்சு ஸ்டேட்டஸா போடறான். சென்னைல நில நடுக்கம் வந்தப்பக்கூட மாடிப்படில இறங்கி ஓடிட்டே ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றான்.. . 
''இணையத்தின் வழியாக நமக்குத் திறந்துவிடப்பட்டு இருக்கும் உலகம் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. மனிதகுல வரலாற்றில் இத்தனை கட்டற்ற சுதந்திரம் முன்னொருபோதும் இருந்தது இல்லை. தன் அடையாளத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு, அடையாளமே இல்லாத இன்னொருவருடன் உரையாடலாம். இது மனிதனுக்குப் பெரிய மன விடுதலையைக் கொடுத்திருக்கிறது

சி.பி - முன்னே எல்லாம் கில்மா படம் பார்க்கனும்னா அதுக்குன்னு இருக்கற தியேடர்க்குப்போய் இண்டர்வெல் பெல் அடிக்கற வரை காத்திருக்கனும்.. இப்போ எல்லாம் நடிகைங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் எடுத்து குளிக்கறப்பக்கூட அதை செல் ஃபோன்ல படம் பிடிச்சு  நெட்ல ரிலீஸ் பண்ணிடறாங்க.. டெக்னாலஜி ஈஸ் வெரி வெரி டெவலப்டு.. 




 ஏனெனில், நமது சமூகம் எப்போதும் நமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது, இடைவிடாமல் கண்காணிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மனிதர்களை மேலும் மேலும் தனிமைப்படுத்துகிறது. இணைய உலகில் இந்த தனிமைப்படுத்தலும் கண்காணிப்பும் இல்லை என்பது மனித மனதுக்குப் பெரிய ஆசுவாசம். ஆகவே, நான் இதை எதிர் மறையாகப் பார்க்கவில்லை. யதார்த்த வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழ்வதற்கான வாசலை விஞ்ஞானம் திறந்துவிட்டுள்ளது.

 சி.பி - இந்த சேட்டிங்க் மேட்டர்ல பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.. சாரு மாதிரி பாவாத்மாக்கள் கிட்டே மாட்டிக்கிட க்கூடாது



 இதை அனுபவிப்பதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த சைபர் ஸ்பேஸ் மிக முக்கியமானது. இதுவரை நம்மைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள்தான் இப்போது பதற்றத்துடன் எதிர்க்கின்றனர்!''



சி.பி - வீட்டில் நெட் வைத்திருப்பவர்கள் குழந்தைகளை தங்கள் மேற்பார்வையில் வைத்திருப்பது நல்லது. நெட் செண்ட்டர் அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் குழந்தைகளுடன் பெற்றோரில் ஒருவர் உடன் செல்வது நலம்..  

3. ''காதல் இப்போதும் புனிதமானதுதானா?''

சி.பி - காதல் எப்போதும் புனிதமானதுதான்.. ஆனால் காதலர்கள் தான் பாவம் பண்ணி பேரை கெடுக்கறாங்க. 
''காதல் எப்போதும் காதலாக மட்டும்தான் இருந்திருக்கிறது. அது புனிதமானதாகவோ, புனிதமற்றதாகவோ ஒருபோதும் இருந்தது இல்லை. எல்லா அடிப்படைத் தேவைகளையும்போல காதலும் ஓர் ஆதாரமான தேவை. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில்கூடக் கலப்படம் வந்துவிட்ட உலகில், காதல் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்

 சி.பி - இந்த உலகில் கலப்படம் இல்லாதது தாய்ப்பாலும் ,இளநீரும் தான்



 ஆனால், நடைமுறையில் சாத்தியப்படாத அப்படி ஒரு தூய்மைவாதக் காதலுக்கு மனித மனம் ஏங்குகிறது. கற்பனையின் வழியே காதலின் முழுமையை அடையத் துடிக்கிறது. நமது இலக்கியங்கள் அதற்குத் துணை செய்கின்றன. யதார்த்தம் அப்படி இருக்க முடியாது என்பதால், காதல் புனிதமானதாக இருப்பது இல்லை!''  

4. ''இலக்கு நிர்ணயித்து விற்பனையைப் பெருக்கும் அளவுக்கு அரசு டாஸ்மாக் மீது கரிசனத்துடன் இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - கவர்மெண்ட்டோட முக்கிய வருமானமே சரக்குல தானே?

''ஓர் அரசுக்குக் குறைந்தபட்சப் பொறுப்பு உணர்வு வேண் டாமா? டாஸ்மாக் மூலம் வரும் பணத்தை அரசு வருமானமாகப் பார்க்கிறது.அது எங்கே இருந்து வருகிறது? கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் உழைப்பை விற்றுச் சம்பா திக்கும் பணம்


 பிள்ளை களுக்குப் பால் டின் வாங்க வும் அடுத்த வேளை உண வுக்கு அரிசி வாங்கவும் வைத்திருந்த பணம். சாரா யத்தை ஊற்றிக்கொடுத்து, அவன் போதையில் இருக் கும்போது அந்தப் பணத்தை வழிப்பறி செய்வது அயோக்கியத்தனம் இல்லையா? ஆனால், இது குறித்து அரசாங்கத்துக்கு வெட்கமே இல்லை.
லாட்டரிச் சீட்டை ஏன் தடை செய்தார் கள்? ஏழைக் குடும்பங்களைப் பாதிக்கிறது என்றுதானே? அதே காரணம் குடிக்கும் பொருந்தாதா? அதைவிடவும் பன்மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும் குடியை ஊக்குவிப் பதும் பரவலாக்குவதும் மக்கள் நல அரசு செய்யும் வேலையா?
உலகின் பல சமூகங்களில் குடி என்பது ஓய்வு நேரப் பொழுதுபோக்கு. இங்குதான் வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எத்தனை லட்சம் குடும்பங்கள் நிர்கதி ஆக்கப்பட்டு உள்ளன? எத்தனைகுழந் தைகள் அநாதைகளாக அலைகின் றனர்? எத்தனை லட்சம் தொழிலாளர் கள் உழைக்கும் திறனை இழந்து, நோய் களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்? 



ஏன் அரசு இது குறித்த சிறு அக்கறையும் இல்லாமல் இருக்கிறது? குடியைத்தடை கூடச் செய்ய வேண்டாம்... குறைந்த பட்சக் கட்டுப்பாடு கொண்டுவரலாம் அல்லவா? ஏன் நாள் முழுக்க டாஸ் மாக் கடை திறந்திருக்க வேண்டும்? அரிசி இத்தனை கிலோதான் என்று கட்டுப்பாடு இருக்கும்போது சாராயத் துக்குக் கட்டுப்பாடு இருந்தால் என்ன தப்பு?''
5. ''இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவால்களாக நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?''



சி.பி - இளைஞர்கள் இப்போது சந்திக்கும் மிகப்பெரிய சவாலே வேலைதான்.. அதுவும் ஐ டி டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்யனும்னு துடிக்கிறான்.. அதுல தான் அதிக வருமானம் வருது. இப்போ பெண் வீட்டாரும் அதுதான் விரும்பறாங்க.. டாக்டர், எஞ்சினியர் காலம் எல்லாம் மலை ஏறிடுச்சு
''முந்தைய தலைமுறை மீது இல்லாத அழுத்தமும் சுமையும் இன்றைய இளைஞன் மீது படிந்திருக்கிறது. அவன் எதிர்கொள்ளும் மன நெருக்கடிகளும் சவால்களும் மிக அதிகம். குடும்பத்தின் தேவைகள், அலுவலக நெருக்கடிகள், வேலை கிடைக்காத சூழல் என அவன் எப்போதும் அவநம்பிக்கை யோடு வாழ்கிறான்.



 35, 40 வயதுகளில்கூட திருமணம் குறித்தோ, எதிர்கால வாழ்க்கை குறித்தோ சிந்திக்கக்கூடத் திராணியற்ற இளைஞர்களை நகரங்கள் உற்பத்தி செய்கின்றன. இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை நாம் பேசுவோம். வட மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இங்கு பணிபுரிகின்றனர். அவர்களை எந்தக்குற்ற உணர்வும் இல்லாமல் குறைந்த கூலிக்குச் சுரண்டுகிறோம். முறையான வாழ்விடம் தரப்படுவது இல்லை.



 வட மாநிலக் குழந் தைகள் படிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள அவர்களை முதலில் பரிவுடன் அணுக வேண்டும்.அவர்களின் குற்றச் செயல்கள் தொடர் பான விசாரணைகள் தனி. ஒரு குறிப்பிட்ட சமூகம் பெரும் அளவில் இடம்பெயர்ந்து வரும்போது, அதில் ஒரு பகுதியினர்குற்றச் செயல்களில் ஈடுபடுவது இயல்பானதுதான். அதற்காக ஒட்டுமொத்தக் குற்றங்களுக்கும் வட மாநிலத்தவர்களைக் காரணமாக்குவது தவறு.


தமிழ்நாட்டில் நடைபெறும் அத்த னைக் குற்றங்களையும் வட மாநிலத் தவர்கள்தான் செய்கிறார்களா என்ன?''

6. ''தனி நபர்களை மையமாகக்கொண்ட அரசியல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும்?''



சி.பி - மன்னராட்சி போய் மக்கள் ஆட்சி வந்தாலும் தமிழன் இன்னும் அதுல இருந்து மீண்டு வர முடியலை.. நேரு பரம்பரை மத்தியிலும், கலைஞர் பரம்பரை மாநிலத்திலும் தொடரும் அபாயம் இருக்கு. 
''ஓர் இயக்கம்தான் கோட்பாட்டு முடிவு களை எடுக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் எனத் தனி நபர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்தான் நடக்கிறது. இந்தத் தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகள்தான் ஒட்டுமொத்தத் தமிழக அரசியலின் திசையை, தன்மையைத் தீர்மானிக்கின்றன


 இது ஓர் அரசியல் சூனியத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறது. இது நீடிக்கும் வரை தமிழர்களின் எந்தப் பிரச்னைக்கும் ஒரு நியாயமான தீர்வை நம்மால் எதிர்பார்க்க முடியாது!''

2 comments:

sasibanuu said...

Arumai... Nice interview.
Thanks for your sharing...

விஸ்வநாத் said...

வார்த்தைகளை உடைத்து எழுதிருக்கீங்களே, ஏன் ?

Sample:
வேண் டாமா
சம்பா திக்கும்
பிள்ளை களுக்குப்
வாங்க வும்

இன்னும் நிறைய ...