Tuesday, April 03, 2012

ஒத்தைக்குதிரை -கொஞ்சம் திகில், கொஞ்சம் டஹில் - சினிமா விமர்சனம்

http://www.nanbargal.com/images/movies/tamil/othakuthirai.jpg

ஒரு கிராமம்.. அதுல வரிசையா சிலர் கொலை செய்யப்படறாங்க. கிராமத்து ஜனங்க எல்லாம் அது பேய் வேலைன்னு சொல்லிக்கறாங்க.. ஒரு பிரைவேட் டி வி சேனல் ஒரு குரூப்பை அனுப்பி நிலைமையை கண்டறிய ட்ரை பண்ணுது.. 

கிராமத்துல பஞ்சாயத்து தலைவர் அவங்களுக்கு தங்க உதவி பண்றார். டி வி டிடெக்டிவ் குரூப் 4 பேரு. 3 பசங்க, ஒரு பொண்ணு. கிராமங்கள்ள சந்தேகப்படும்படி தெரியற இடங்கள்ல ஹிடன் கேமரா வைக்கறாங்க ( எந்த குரங்கும் தூக்கிட்டு போகல)

ஹீரோவோட ஆள் ஆல்ரெடி இதே கிராமத்துல இதே டிடெக்டிவ் வேலைக்காக இங்கே வந்து மாயம் ஆகிட்டா .. ஹீரோ உடனே ஒரு ஐடியா பண்றாரு.. தன் ஆளோட தங்கச்சி அதாவது வருங்கால கொழுந்தியா அதே சாயல் பொண்ணு.. கிராமத்துக்கு வர வைக்கிறார்.. 

வில்லன் பஞ்சாயத்து தலைவன் தான்.. நைட் டைம் வில்லன் கார்ல வெளீல போறப்ப ஹீரோவோட கொழுந்தியாவை அவன் பார்வைல பட வைக்கிறாங்க.. வில்லன் திகில்ல உறைஞ்சிடறான்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_09_w800_h537_600024.jpg

 இன்னா மேட்டர்னா வில்லன்க்கு ஜாதி வெறி ஜாஸ்தி.. வில்லனோட பொண்ணு யாரையோ கீழ் ஜாதி ஆளை லவ் பண்ணி இருக்கு. 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போறப்ப வில்லன் வழி மறைச்சு பளார்னு ஒரு அறை விட்டாரு.. அதுல அவர் மகள் க்ளோஸ். 

எதேச்சையா நடந்த இந்த விபத்தை  வில்லன் பேய் அடிச்சதா கிளப்பி விட்டு எஸ் ஆகிடறாரு.. தன் மகளே போய்ட்டா.. என்னமோ ஆகட்டும்னு விட்டுட வேண்டியதுதானே.. அவ காதலனையும் அடிச்சே கொலை பண்றாரு.. அந்த கொலையை ஹீரோவோட ஆள் பார்த்துடறா,. அதனால  அவளையும் போட்டுத்தள்ளிடறாரு.. 

 இப்போ ஹீரோ தன் கொழுந்தியாவை வர வெச்சதும் வில்லனுக்கு குழப்பம். 

என்ன நடக்குது.?  என்பது  மீதி திரைக்கதை ( இப்போ நான் சொன்னதே முக்கா வாசி திரைக்கதை ஹி ஹி )

 அம்புலி படத்தை நினைவு படுத்தினாலும் இதுவும் நல்லதொரு திகில் பட முயற்சியே.. 

 ஆனா புது முகங்கள் செலக்‌ஷன் தான் சுமார் ரகம். ஹீரோ சுமாரா இருந்தா எப்படியோ போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை.. லட்சக்கணக்குல செலவு பண்ணி படம் எடுக்கறவங்க கதைக்கு அடுத்ததா முக்கியத்துவம் தர வேண்டியது ஹீரோயின் செலக்‌ஷனுக்குத்தான்.. சுமார் ஃபிகரை ஹீரோயினா போட்டா எப்படி?

படத்துல  2  ஹீரோயின். டி வி டிடெக்டிவ் குரூப்ல ஒரு பொண்ணு அது 50 மார் ஃபிகர்.. ஹீரோவோட லவ்வர் 54 மார்க் ஃபிகர். செம போர் ஹி ஹி

http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_32_w800_h537_600024.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. எப்படி எல்லா ஆண்களால் ராமனா இருக்க முடியாதோ, எப்படி எல்லா பொண்ணுங்களும் கண்ணகியா இருக்க முடியாதோ ,அதே மாதிரி எல்லா அரசியல்வாதிகளூம் நேர்மையா இருக்க முடியாது

2. XQS மீ



நான் ஒண்ணும் எச்சக்கலை மூர்த்தி இல்லை.. என் பேரு ஆறுச்சாமி

3. தண்ணியைப்போட்டாலும் குடிகாரங்க எப்பவும் உண்மையைத்தான் சொல்வாங்க.. 

4. பேய், பிசாசுல உங்களூக்கு நம்பிக்கை இருக்கா? பெரியவரே. 

 உங்க அனுபவத்துல இல்லாத ஒரு விஷயத்தை ப்பற்றி பேசுனா நீங்க நம்பப்போறதில்லை... 

5. பேய் இருக்கறது உண்மைன்னா அது இன்னொரு பேயை கொல்ல வேண்டியதுதானே , ஏன் மனுஷனை கொல்லனும்? ( தன் இனத்தை கொல்லாத இனமோ என்னவோ?)


6. அவன் நடந்து வர்றப்ப பேய் நடந்து வர்ற மாதிரியே இருக்கு

 இருடி உன்னை வந்து வெச்சுக்கறேன்

 அதுக்கு வேற ஆள் இருக்கு.. 

7. ம்.. சொல்லுப்பா... 

 என்னது? அப்பாவா?


 அது வேற அப்பா... 

8. பொண்ணுங்க இருக்காங்களே மேரேஜ்க்கு முன்னே நாமளா வலிய போய் பேசுனாலும் கண்டுக்க மாட்டாங்க.. மேரேஜ்க்குப்பிறகு அவங்களா நம்ம கிட்டே வந்து வந்து பேசி தொந்தரவு பண்ணுவாங்க.. 

9.  இந்த மூஞ்சிக்கே ஒருத்தன் சிக்கி இருக்கான்.. எனக்கு ஒருத்தன் சிக்காமயா போயிடுவான்.. 

10. அறிவாளி, புத்திசாலின்னு சொல்றீங்களே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

டியர்.. அது அந்த பேருக்கும் தான் தெரியும்.. நமக்கென்ன அதை பற்றி


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_25_w800_h537_600024.jpg


11. பெத்தவங்களை பாரமா நினைக்கக்கூடாது.. நம்ம உடம்புல ஒரு பாகமா நினைக்கனும்..

12. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்

எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு  நல்லாத்தான் இருக்கும்.. 

 அப்போ டிரஸ்சே போடலைன்னா?

13. என் பொண்டாட்டி என்ன காரியம் பண்ணிட்டா தெரியுமா?

 என்னய்யா பிரச்சனை? எவன் கூடயாவது தப்பு பண்ணிட்டாளா?

 அப்படி பண்ணி இருந்தாக்கூட பரவாயில்லையே?

 அடப்பாவி. நீ  எல்லாம் ஒரு புருஷனா? என்ன தான் பண்ணித்தொலைச்சா?

 எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த குவாட்டரை ஒரு சொட்டுக்கூட எனக்கு மிச்சம் வைக்காம அவளே  எடுத்துக்குடிச்சுட்டா..

14. என்ன ஒரு விசித்திரம்னா இந்த உலகத்துல காதலை நம்பறதில்லை, ஆனா சாமியை நம்பறாங்க

15. ஒண்ணா வாழ்ந்தோம்னு பேர் எடுப்போம், இல்லைன்னா ஒண்ணா செத்தோம்னு பேர் எடுப்போம்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_08_w800_h537_600024.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. முழுக்க முழுக்க ஒரே ஒரு கிராமத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து காசை மிச்சம் பண்ணியது.. ஸ்க்ரிப்ட்டில் நம்பிக்கை வைத்து பெரிய நடிக நடிகைகள் யாரும் இல்லாமல் படம் எடுத்தது

2. ஹீரோயின் இருவரும்  படம் பூரா திருப்பூர் பனியன் அல்லது டி சர்ட் மட்டும் அணிந்து வருவது..  அதிலும் 42 சைஸ் அணீய  வேண்டிய இருவரையும் 40 எனும் எல் சைஸ் கொடுத்து அணீய வைத்தது .. ஹி ஹி

3. தோளோடு தோளாய் சேரும் கைகள், என் காதல் என 2 பாடல்களை கண்ணியமாக எடுத்தது.. ஆனால் இந்தப்படத்துக்கு பாடல்களோ, டூயட்டோ தேவை இல்லை என்பது வேறு விஷயம்

4. பின்னணி இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் ஓக்கே தான்.. பயப்படுத்த வேண்டிய இடத்தில் பயப்படுத்தி விறு விறுப்பை கூட்டும் இடத்தில் திரில்லிங் மியூசிக் ..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_06_w800_h537_600024.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.கதை நடக்கற இடம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள ஒத்திக்குதிரை எனும் கிராமம்.. அங்கே கார்ல வர்ற  ஆள் கிட்டே போலீஸ் லைசன்ஸ் , ஆர் சி புக் எல்லாம் கேட்குது.. கார் தமிழ் நாடு ரிஜெஸ்டரேஷன்... ஆனா அவர் ஆர் சி புக் காட்டாம ஏதோ அட்டை ஒண்ணை காட்றாரு.. கர்நாடகா ஸ்டேட் ல தானே அட்டை வந்துச்சு? தமிழ் நாட்ல இன்னும் புக் சிஸ்டம் தானே?

2. ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் 10 நிமிஷம் ஒரு ஆளை சும்மா விசாரிச்சுட்டு இருக்கார்.. அப்போ தான் ஜஸ்ட் லைக் வந்த எஸ் ஐ “ என்னப்பா ரொம்ப நேரமா அவன் கிட்டே விசாரிச்சுட்டு இருக்கே?” அப்டினு கேட்கறாரே? அது எப்படி?

3. வில்லன் தன் மகளை ஓங்கி ஒரு அறை விட்டதும் மக செத்துடறா.. உடம்புல எந்த காயமும் இல்லை... பார்க்க ஆள் தூங்கிட்டு இருக்கற மாதிரியோ, மயக்கம் அடைஞ்ச மாதிரியோதான் இருக்கு.. ஆனா அப்போ அந்த வழியா வர்ற நெல்லை சிவா  “ ஆள் அவுட்”னு உடனே எப்படி முடிவு பண்றார்? ரத்தம் பார்த்தாரா? மூக்குல கை வெச்சு மூச்சு நின்னுடுச்சா?ன்னு பார்த்தாரா?

4. ஹீரோவோட லவ்வரை வில்லன் கொலை பண்ணி புதைச்சுடறார்.. 9 நாட்களுக்குப்பின் ஹீரோ அண்ட் கோ அந்த டெட் பாடியை  குழி தோண்டி எடுக்கறாங்க.. அப்போதான் புதைச்ச மாதிரி ஃபிரஷ்ஷா இருக்கே? அது எப்படி? ( குமட்டும் வாசம் அல்லது அழுகிய உடல் தானே காட்டனும்?)

5.  க்ளைமாக்ஸ் வரை நீட்டா போன  கதைல திடீர்னு சம்பந்தமே இல்லாம ஆவியை எதுக்கு கொண்டு வந்தீங்க?

6. கொலையாளியா ஊர்ப்பெரிய மனுஷரே இருக்கறப்ப அவரே அந்த டீம்க்கு ஏன் எல்லா வசதியும் பண்ணித்தரனும்?அவர் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னா? தேவையே இல்லையே..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_35_w800_h537_600024.jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி  கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களும்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

5 comments:

ராஜி said...

திரில்லர் படமா?! அப்போ பார்த்துட வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி

ஹாலிவுட்ரசிகன் said...

கொஞ்ச நாட்களாக த்ரில்லர் படங்களின் வருகை அதிகரித்திருக்கிறது. நல்ல விடயம் தான்.

விமர்சனம் கலக்கல் சி.பி.

பால கணேஷ் said...

க்ரைம் த்ரில்லர்ன்னா அதுல இருக்கற சின்னச் சின்னக் குறைகளை நான் கண்டுக்காம விட்ருவேன். அதனால இந்தப் படத்தைப் பாத்துடறேன்...!

Unknown said...

விமர்சணம் சூப்பர்

த்ரில்லர் படம்-னா நல்லாதான் இருக்கும்

இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

குரங்குபெடல் said...

மூணு மாறி இல்லாமல்

இது போன்று படம் எடுக்கும் ஆட்களை

போற்றும் உம் பணி வாழ்க