Showing posts with label பிந்து மாதவி. Show all posts
Showing posts with label பிந்து மாதவி. Show all posts

Sunday, April 06, 2014

நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும் - முழுநீள காமெடி படம்?- அருள் நிதி பேட்டி

தன் குடும்பத்தைச் சுற்றி நடந்துவரும் தேர்தல் களேபரத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது அடுத்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் அருள்நிதி. கோடம்பாக்க இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…



‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படம் என்ன மாதிரியான கதை?


முழுப் படமும் காமெடிதான். இயக்குநர் சிம்புதேவனைப் பற்றி உங்களுக்கே தெரியும். எப்போதுமே கதையோட ஹியூமர் வந்துகிட்டே இருக்கும். அதை நீங்க இந்தப் படத்துலயும் பார்ப்பீங்க. மொத்த படப்பிடிப்பையும் 43 நாட்கள்ல முடிச்சுட்டோம். அந்த அளவிற்கு பக்காவா எல்லாத்தையும் ப்ளான் பண்ணினார். நாசர், எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா, வி.எஸ்.ராகவன் இப்படிப் பல சீனியர் நடிகர்களை நடிக்க வச்சு 43 நாட்கள்ல ஷுட்டிங் முடிச்சது எவ்வளவு பெரிய விஷயம்!


முதல்ல இதை இயக்குநர் பாண்டிராஜ்தானே தயாரிப்பதாக இருந்தார்?


இந்தப் படம் ஆரம்பிச்சதுக்கு காரணமே இயக்குநர் பாண்டிராஜ் சார்தான். முதல்ல அவரே தயாரிப்பதா இருந்துச்சு. பிறகு அவர் வேறு படங்கள், இயக்கப் போயிட்டதால, நானும் ‘தகராறு' முடிச்சுட்டு ஆரம்பிக்கலாம்னு உடனே எங்களோட பேனர்லேயே பண்ணிட்டோம்.



‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்', ‘நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்' இப்படி காமெடி படங்கள் பக்கம் போயிட்டீங்க போல?


அப்படிச் சொல்ல முடியாது. என்னோட படங்கள் எல்லாமே வெவ்வேறு வகையாதான் இருக்கும். ‘வம்சம்',‘உதயன்', ‘மெளன குரு', ‘தகராறு' இப்படி எல்லாப் படங்களுமே வேற வேற கேரக்டர்கள்தான் பண்ணியிருப்பேன். நான் சிட்டி படங்கள் பண்ணாம இருந்தேன். முழுக்க தாடியோடயே சுத்திட்டு இருந்தேன். அப்படியிருக்கும்போதுதான், சிம்புதேவன் சார் இந்தக் கதையைச் சொன்னார். காமெடி கதை இதுவரைக்கும் நான் பண்ணதில்லை. இப்ப பண்ணலாமேன்னு தோணிச்சி.


அடுத்த படமான ‘நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்' படத்தில் கதை செம ஸ்டராங். அதை காமெடின்னு சொல்ல முடியாது. நாங்க சீரியஸா பண்ற விஷயங்கள், உங்களுக்கு காமெடியா தெரியும். ரொம்ப வித்தியாசமான கதை. இந்த ரெண்டு படங்களையும் பார்த்தீங்கன்னா ரெண்டுமே வித்தியாசமான படங்களாதான் இருக்கும்.


அந்த ஹீரோ மாதிரி ஆகணும், இந்த ஹீரோ மாதிரி ஆகணும்னு நான் சினிமாத் துறைக்குள்ள வரல. 10 படங்கள் பண்ணினத்துக்கு அப்புறம், இவன் வித்தியாசமான படங்களா பண்றான் அப்படிங்கிற பேர் கிடைச்சா போதும். ஆக் ஷன், காமெடி, த்ரில்லர் இந்த மாதிரியான படங்கள் மட்டும்தான் பண்ணனும்னு எனக்குக் கிடையாது. கதை நல்லாயிருக்கா அதுல ஆக் ஷன், காமெடி எதுவானாலும் பண்ணுவேன்.


முழுநீள காமெடி படம் பண்றது கஷ்டமா இல்லயா?


யாராவது என்கிட்ட பேசினாங்கன்னா, இயல்பாவே உடனுக்குடன் கவுண்டர் கொடுத்துக் கிட்டே இருப்பேன். அது ஒவ்வொருத்தங்க பேசுற விதத்துல இருக்கு. என்கிட்ட நல்லா பழகிட்டாங்கன்னா, பேசப் பேச கவுண்டர் கொடுத்துக்கிட்டே இருப்பேன். ‘வம்சம்' படத்துல முதல் பாதி காமெடிதான். ‘தகராறு' படத்துலயும் அப்படித்தான். காமெடி பண்றது எனக்குக் கஷ்டமா தெரியல. சிம்புதேவன் சார் படத்துல அவரோட வசனத்தை நாம சாதாரணமா சொன்னாலே காமெடி ஒர்க் அவுட்டாயிடும். ஏன்னா, அவரோட வசனங்கள் அவ்வளவு ஸ்ட்ராங்.



அரசியலில் அருள்நிதியை எப்போது எதிர் பார்க்கலாம்?



இப்போதைக்கு எனக்கு அரசியல் ஆசையே கிடையாது. வருங்காலத்தில் என்ன நடக்கும்னு இப்போ எப்படிச் சொல்ல முடியும். ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும், இந்தக் கேள்வி வந்துகிட்டே இருக்கு. எங்கப்பாவே இப்ப அரசியல்ல கிடையாதே.


உங்களோட சினிமா வளர்ச்சிக்கு தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின் எந்த அளவிற்கு உதவியா இருந்தாங்க?


ரெண்டு பேருமே எனக்கு உதவியாதான் இருந்தாங்க. பாண்டிராஜ் சாரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது உதயநிதி அண்ணன் தான். இப்போவும் ஞாபகம் இருக்கு, ‘வம்சம்' இசை வெளியீட்டு விழாவுல இடம் இல்லாம, துரை அண்ணன் நின்னுக்கிட்டே பாத்தாங்க. ஏன்னா, என் மீது அவ்வளவு பாசம். ‘தகராறு' பாத்தீங்கன்னா, தயாரிச்சது துரை, ரிலீஸ் பண்ணது உதய் அண்ணன்.


வீட்டுல நடிக்கப் போறேன்னு சொன்ன போதும், இப்பவும் என்ன சொல்றாங்க?



நடிக்கப் போறேன்னு சொன்ன உடனே ஏன் அரசியலுக்கு வரப் போறியானு கேட்டார் அப்பா. ஏன்னா அப்பா என்னை அரசியல்ல ஈடுபாடு காட்ட விட மாட்டார். என்னை ஒதுக்கியே வைச்சிருப்பார். ‘கோபுர வாசலிலே' உள்ளிட்ட நிறைய படங்கள் பண்ணிட்டு, சினிமாவுல இருந்து விலகிட்டார். அரசியலும் ஈடுபடாம, முழு நேரமா பிசினஸை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கார். அப்பாகிட்ட பேசி, ஒத்துக்க வைச்சதுக்கு அப்புறம் தாத்தாவைப் பார்த்துப் பேசினேன். நடிக்கிற வேலை மட்டும் பார், அரசியலுக்கு எல்லாம் வராதேன்னு சொல்லிட்டார். இன்னமும் நல்ல நடிக்கணும்னு சொல்லிட்டே இருக்கார். கூடிய சீக்கிரத்தில் “பிரமாதமா நடிச்சிருக்கடா” அப்படின்னு அவர் கிட்டேயிருந்து பாராட்டு வாங்கணும். வாங்குவேன்.


thanx - the hindu

Saturday, April 05, 2014

ஒரு கன்னியும் ,மூன்று களவாணிகளும் - சினிமா விமர்சனம்

தொழில் அதிபர்ங்க எல்லாம் நடிகையை கரெக்ட் பண்றது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடுச்சு. அதனால நம்ம வெட்டாஃபீஸ்  ஹீரோ ஒரு தொழில் அதிபர் பொண்ணை லவ்வறாரு. எதிர்ப்பு. சர்ச்சில் காதலிக்கு வேற ஒரு ஆள்  கூட மேரேஜ் நடக்க இருக்கு . 


நாயகனோட காதலியோட அப்பாவுக்கு தொழில் ரீதியா போட்டியா  இருக்கற ஆள் நாயகனைக்கூப்பிட்டு  நீ  உன் காதலியைக்கடத்திட்டா  உனக்கு 30 லட்சம் பணம் தர்றேன்கறான். கரும்பு தின்னக்கூலி! நயன் தாரா கூட சுத்துனா  ஜாலி.அதனால ஹீரோ தன் நண்பர்கள் 3 பேரு கூட சேர்ந்து அந்த பிராஜெக்டை பண்றார்.


இதை இப்டியே சொல்லிட்டா அது சாதாக்கதை. ஆனா இயக்கம் சிம்[புதேவன். ஹீரோ இந்த  பிராஜெக்டை காலை ல 8.59 க்கு  செய்ய ஆரம்பிச்சா  என்னாகும்?9 க்கு  செய்ய ஆரம்பிச்சா  என்னாகும்?,9.01 க்கு  செய்ய ஆரம்பிச்சா  என்னாகும்? -னு 3 வெவ்வேற கோணத்துல சொல்றாங்க. 


1998 -ல் ரிலீஸ் ஆகி சர்வ தேச அளவில் 28 விருதுகளை வாரிக்குவித்த  ரன் லோலா ரன்  எனும் ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் இது .2001 -ல்   12பி -னு ஒரு படம் இதே பாணில சிம்ரன்,ஜோதிகா,ஷாம் காம்போ வில் வந்தது 


ஹீரோவா அருள் நிதி. இவருக்கு எளிமையா  இருப்பது எப்படி?என்பது நல்லாவே வருது .அந்த ஒரே ஒரு பிளஸ் தான் . வேற நடிப்பு , பாவனை எதுவும் வர மாட்டேங்குது.நல்ல உயரமான ஆளா  இருப்பதால் ஆக்சன் காட்சிகள் , சேசிங்க் காட்சிகளீல் சமாளிக்கறார். காமெடி , காதல் காட்சிகளில் பம்மறார் . 




 ஹீரோயின் அர்ஷிதா ஷெட்டி.கெட்டியான பாலில் ( தண்ணி கலக்காத பால்) செய்யப்பட்ட பால்கோவாவில் ரசகுல்லாவின் ஜீராவை ஊற்றியது போல  இனிப்பான,மினுமினுக்கும் முகம்.ஆனா அவர் உதடு தான் ரொம்ப மெல்லிசா இருக்கு ( நாட்டுக்கு  ரொம்ப  முக்கியம் ) 


செகண்ட் ஹீரோயினா கஞ்சா கண்ணழகி , மாஞ்சா உதட்டழகி  பிந்து மாதவி. இவருக்கு ”பெருசா ” வேலை எதுவும் இல்லை . பாப் கட் ஹேர் ஸ்டைல்  ல ஹீரோ கூட ஸ்லோ மோஷன் ல ஓடுவதே அதிக வேலை . நல்லா  ஓடி இருக்கார் .


வ குவாட்டர் கட்டிங்க் ல காமெடி செஞ்சவர் இதுலயும் பட்டாசு கிளப்பும் சிச்சுவேசன் காமெடி செஞ்சிருக்கார்.குட்






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1.   ஓப்பனிங்க்கில்  வரும்  டீக்கடை காமெடி கலக்கல் ரகம்.போலீசைப்பார்த்ததும் அதிர்ச்சியில்  விக்கல் எடுக்கும் காமெடியன் போலீஸ் தண்ணியைக்குடி என டம்ளரை கன் -னால் தள்ளும்போது பம்முவது பிரமாதம் 



2 ஜூலை மாத நிலவே பாடலில் கவிதை நயம் எழுத்து வடிவிலும் , ஒளிப்பதிவின் காட்சி வடிவிலும் போட்டி போட்டுக்கொண்டு மனதை வருடி வசீகரிக்கிறது 



3 ஒவ்வொரு காட்சியிலும்  மேக்சிமம் எவ்வளவு காமெடி சிச்சுவேசனைப்புகுத்த முடியுமோ அந்தளவு நகைச்சுவைத்தோரணத்தைக்கட்டி  இருப்பது 


4  மூன்று வெவ்வேறு சம்பவங்கள் , ஆனால் ஒரே சிச்சுவேஷன் .இதுக்கான திரைக்கதை அமைக்கும் பணி மிகக்கடினம், பிரமிப்பு ஏற்படுத்தும் உழைப்பு 



இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. இசை அமைப்பாளர் பப்பிலஹரியிடம் என்ன பிரச்ச்னை? ஹிப்பி லஹரி வில்லன் கேரக்டர்?


2 தன் எதிரியைப்பழி வாங்க எதிரியின் மகளைத்தானே கடத்தி ரேப் பண்ணாமல் காதலனை கடத்தி வரச்சொல்லி சேர்த்து வைப்பது என்ன மாதிரி பழி வாங்கல்? நல்லா யோசிச்சுப்பார்த்தா உதவி தான் பண்றார். 


3 ஓப்பனிங்கில் எடுத்ததுமே டாப் கீரில் கடத்தல் காட்சியை ஆரம்பிக்காமல் நாயகன் -நாயகி காதல் காட்சிகள் காட்டப்பட்டால் தான் ரசிகனுக்கு கடத்தல் காட்சியில் ஆர்வம் ஏற்படும்.


4 முதல் 2 கதைகளிலேயே  லேசாக சலிப்புத்தட்ட ஆரம்பிக்குது. 3 வது கோணத்தில் சொல்லும்போது சாதா ரசிகன்  புலம்ப ஆரம்பிச்சுடறான். படத்தை முடிங்கப்பா சீக்கிரம்-னு புலம்பல் வேற 

5 படத்துக்கு ப்ரமோ சரியாத்தர்லை. தியேட்டர்ல  கூட்டமே இல்லை. போஸ்டர் டிசைனும் சுமார் தான் ., படம் இருக்கும் குவாலிட்டியில் 25 % கூட  விளம்பரம், போஸ்டர் டிசைன் இல்லை . இது படத்துக்குப்பெரிய பின்னடைவு



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நமக்கு சொந்தமான தை யாருக்கும் விட்டுத்தரக்கூடாது .தூக்கிடனும் .


தண்ணிக்குள்ளே வாத்து காலால நீந்திட்டிருக்கறது வெளில இருந்து பார்த்தா தெரியாது.அது மாதிரி நம்ம பயம் முகத்துல தெரியக்கூடாது #1 F 3M


3 போலீசால ஓட முடியாது.சினிமா தவிர வேற எங்காவது போலீஸ் ரோட்ல ஓடி பார்த்திருக்கியா? # 1F3M

4 லேடி - பசங்க போன் பண்ணா உடனே போனை எடுக்கக்கூடாது.விட்டுப்பிடிக்கனும்.அப்போதான் அவனுங்க நம்ம சொல்படி ஆடுவாங்க



பொறுப்பை ஏத்துக்காம நல்லவனா இருந்தா என்ன பிரயோஜனம் ? # 1F3M

6 உயிருக்கு பயந்தவனை கடவுளாலகூட பிடிக்க முடியாது # 1+3


7 வானத்துல புல் இருந்தா மான் கூடப்பறக்கும். ம்க்கும்.full இருந்தா மனுசன் கூடப்பறப்பான் #1+3


8 லவ் பண்ற நீயெ என் கிட்டே படிப்பு ,தகுதி எல்லாம் பார்க்கறே.உன் அப்பா என்னென்ன எல்லாம் எதிர்பார்க்கறாரோ? #1+3


====

9 உங்கப்பா கல் நெஞ்சக்காரராமே? 


ஆமா.குடும்பத்தை விட சமுதாயத்துக்காக அதிகம் பாடுபட்டவர்.#1+3


10 கோபக்கார ஏழை தான் திருடன் # சிம்புதேவன் ராக்கிங்

11 ஒரு விநாடிக்கு 4 குழஃந்தைங்க பிறக்குது பாப்புலேசன்


12 விதி என்பது தீர்மானிக்கப்பட்டது எனில் எல்லா நேரத்திலும் அது ஒரே மாதிரி தானே இருக்கனும்?


13 என்னப்பா? ஒரே பைக்ல 3 பேரு?

3 பேரும் 3 பைக்ல வந்தாத்தான் ஆச்சரியப்படனும்


14 காதல் என்பது குழந்தை மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்குவது


15 சின்ன முள் எங்கே இருக்கு ?

9 ல


பெரிய முள் ?

6 ல

அப்போ டைம் 9.06 ?

நோ 9.30

அது எப்படி?


16 கொள்கைக்காக வாழ்பவன் இல்லை , கோபத்துக்காக வாழ்பவன் நான்


17 உன் ஆளைத்தூக்கிடுவியா?

ரொம்ப ஈசிங்க. 46 கிலோ தான். பல டைம் தூக்கி இருக்கேன்



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1. இளைய தளபதியின் அடுத்த பட இயக்குநர் சிம்பு தேவன் ன் ஒரு கன்னியும் 3 களவாணிகளும் நம்ம அடுத்த டார்கெட் @ ஈரோடு சண்டிகா #,1F 3 M


2 பிந்து மாதவி ஸ்லோமோசன் ல ஓடி வரும்போது கேமராவை கூந்தலுக்கு க்ளோஸப் ஷாட் வைக்கறாங்க .டீசன்ட்டான போட்டோகிராபர் போல # 1F 3M


3 RUN LOLA RUN ,12B பட திரைக்கதை பாணியில் மாறுபட்ட காமெடி த்ரில்லர் மூவி #,ஒரு கன்னியும் 3 களவானிகளும்.இடைவேளை


4 இளைய தளபதி -ன் அடுத்த் பட கால்ஷீட்டை சிம்பு தேவன் க்கு தரும் முடிவை மறு பரிசீலனை செய்தால் நல்லது # ஒ க 3 க ளவானியும் ஊ ஊ


சி பி கமெண்ட் -ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் -ஒரே கதையை 3 விதமாகச்சொல்லும் காமெடி த்ரில்லர் - ஏ சென்ட்டர்ல மட்டும் ஓடும்.விகடன் =42 .ரேட்டிங் =2.75/ 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42


குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் = 2.75 / 5


ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்








டிஸ்கி 1 -மான் கராத்தே  சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/04/blog-post_4.html


டிஸ்கி - ஒரு கன்னியும் 3 களவாணிகளும் - வீடியோ விமர்சனம் பை சி பி எஸ் -

Monday, August 05, 2013

PILLA JAMINDAR - சினிமா விமர்சனம்

 

ஒண்ணே  முக்கால் லட்சம் கோடி அடிச்ச குரூப் எல்லாம் கமுக்கமா  இருக்கும்போது ஆஃப்டர் ஆல் 5000 கோடி சொத்துக்கு அதிபதி ஆகப்போகும் ஜமீன் தார் வாரிசு ஹீரோ  ஓவரா  அலப்பறை பண்றார் .அளவுக்கதிகமா  வகுப்பறை ல பாடம் நடத்தும் டீச்சரும் , வாழ்க்கைல அலப்பறை பண்ற டார்ச்சரும்  நல்லா  வாழ்ந்ததா சரித்திரம் இல்லை அப்டிங்கற பழமொழிக்கு  ஏற்ப   அவருக்கு ஒரு ஆப்பு காத்திருக்கு . 


 அதாவது அவரோட   தாத்தா  உயில் ல ஒரு கொக்கி வெச்சுட்டு போயிடறார் . டக்னு கழட்ட அது   ஃபிகரோட   ஜாக்கெட் கொக்கி இல்லை . சட்ட சிக்கல் நிபந்தனைக்கொக்கி . அதாகப்பட்டது  சில கண்டிஷன்ஸெல்லாம் போடறார் . ரொம்ப ரொம்ப கஷ்டமான அந்த கண்டிஷன் ஸ் என்னான்னா 

1. ஹீரோ  காலேஜ்ல டிகிரி முடிக்கனும் ( டிகிரியையே முடிச்சுக்கட்டக்கூடாது , படிச்சு பாஸ் ஆகனும் ) 


2. காலேஜ் சேர்மென் எலக்‌ஷன்ல ஜெயிச்சு   பதவில நிலைக்கனும் 


இந்த கேவலமான கண்டிஷன்ஸை  ஹீரோ எப்படி எதிர் கொள்ளறார் என்பதே  கோமாளித்தனமான திரைக்கதை



ஹீரோ நான் ஈ பட ஹீரோ வான நானி . அந்தப்படத்துல  பிரமாதமா நடிச்சவர் இந்தப்படத்துல சொதப்ப 2  காரணங்கள்  


1.  திரைக்கதை  புளிச்சுப்போன மாவு


2. இளைய தளபதி  விஜய் , புரட்சித்தளபதி விஷால்  மாதிரி  எல்லாம் இமிடேட் பண்ணி நடிச்சு சின்னத்தளபதி பரத் ரேஞ்சுக்கு கேவலமா  இவர் இறங்கிப்போனது ( பரத்துக்கு எங்காவது எந்த  மூலைலயாவது  ரசிகர்கள் ரசிகைகள்  இருந்தால் மன்னிக்க ) 


டான்ஸ் மூவ்மெண்ட்ல  விஜய் , காமெடி காட்சிகள் ல விஷால் இதுதான் நானியோட டார்கெட் . ஆனா அதுல என்ன காமெடின்னா டான்சில்கூட ஓக்கே , காமெடி சீன்கள் ல படு கேவலமான பாடி லேங்குவேஜ் , முடியல 


ஹீரோயின் 2 பேரு. ஆந்திராவில  எப்பவும் 2 ஹீரோயின்ஸ் தான் . படத்துல  ஒரு கதையும்  உருப்படியா இல்லைன்னாக்கூட  தமிழன் தேடித்தேடி தெலுங்குப்படம் பார்க்கக்  காரணமே   உருப்படியா  2  ஃபிகராவது  படத்துல மேம்போக்கா  , பதவிசா ,இளசா,  சொகுசா இருப்பாங்கன்னுதான் ( இந்த பத்தில தமிழன்னு சொன்னது  என்னைத்தான்  ஹிஹி )



ஒரு ஹீரோயின்   பிந்து மாதவி . மன்மதன் படத்துல  சீன் காட்டுச்சே  அந்த பாப்பா . ஸ்லீவ்லெஸ்   டாப் போட்டுக்கிட்டு   படம் பூரா ஆங்காங்கே வந்து சம்பந்தமே இல்லாம கெக்கே பிக்கேனு  சிரிச்சுட்டுப்போகுது.  ஹீரோவுக்கு
பாப்பா லவ்வரா ? ஜஸ்ட் கேர்ள் ஃபிரண்ட்டா ?  டேட்டிங்க் கேர்ளா? எதுவுமே டீட்டெயிலா இல்லை . ( டீட்டெயில் சொல்லிட்டா மாட்டும் நீ என்ன செய்யப்போறே? ) 


 மெயின் ஹீரோயின் ஹரி ப்ரியா . பாப்பா கையில் 10 லட்சம் ரூபா குடுத்து   சிரி அப்டினு சொன்னாக்கூட   உம்முனு இருக்கற உப்புமா  ரகம் போல . எப்போ பாரு உம்முன்னு இருக்கு  . சிரிச்சாலே பார்க்க சுமாரா தான் இருக்கும் உம்மானாம்மூஞ்சி ஃபிகருங்க எல்லாம் உம்முன்னு இருந்தா எப்ப டி?  மற்ற படி  லோ கட்  , லோ ஹிப்  , ஸ்லோ மோஷன் , லூஸ் மோஷன் காட்சிகள் எல்லாம் உண்டு . கண்டு பயன் பெறுக 




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச  தம்பிக்கு எந்த ஊரு படத்தைத்தான்   நகாசு வேலை  பண்ணி   படம் எடுத்து இருக்கோம்கறதை   மூச்சு விடாதது 



2.  படத்துல  இருக்கோ இல்லையோ  ஏகப்பட்ட சீன்கள் இருப்பது மாதிரி 2 ஹீரோயின்களை வெச்சு  கிளாமர்  ஸ்டில்ஸோட  போஸ்டர் ரெடி பண்ணினது 





 இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. என்ன தான் ஜமீன் தாரா  இருந்தாலும் நைட் படுக்கும்போது நைட் டிரஸோ , லுங்கி , வேட்டி, கைலி யோதானே கட்டிட்டு படுப்பாங்க .  நீட்டா பேண்ட் ,சர்ட்  போட்டு  டக் இன் பண்ணி டை கட்டி  கோட் சூட் போட்டுட்டு  ஷூ கூட கழட்டாம ஃபுல் மேக்கப்போட   எந்த கேனயனாவது  டெய்லி படுத்து  தூங்குவானா? ஓப்பனிங்க் சீன்லயே இந்த சொதப்பல் 


2.   ஹீரோ  ஏதோ  கோபத்துல  ஒருஆளை  கன்னத்துல  வெட்டுக்காயம்  வர்ற அளவு தாக்கிடறார்.   ஃபாரீன்ல போய் சிகிச்சை பண்ணாலே  அந்த காயம்  மறைய 6 மாசம் ஆகும். ஆனா அடுத்த நாளே   மழு மழுனு   அவர் கன்னம் இருக்கு , என்னய்யா  கண்ட்டிநியூட்டி பார்த்து கிழிச்சீங்க . இந்த  லட்சணத்துல   படத்துக்கு அசிஸ்டெண்ட்  டைரக்டர்ஸ்  24 பேராம் 



3.  ஒரு  காட்சில  ஹீரோ  வெங்கடாசலபதி  ஒயின்ஷாப்ல மீட் பண்ணலாம்கறார். ஆனா காட்சில  பார்வதி ஒயின் ஷாப் போர்டு இருக்கு 



4. ஹீரோ கைல காசு இல்லை . ஏ டி எம் கார்டு டி ஆக்டிவேட்டட் . ஜமீன் பணம் கிடையாது . மாசம் ரூ 2,500  மட்டுமே   கல்விச்  செலவுக்கு  தரப்படுது. அடிக்கடி   ஹீரோ பணமே இல்லைனு புலம்பறார்  . ஆனா   ஒருசீன்ல  5லட்சம் செலவு  பண்ணி  டான்ஸ் பார்ட்டி வைக்கறார் . அவர் என்ன டி எம் கே எம் எல் ஏவா?

5. சிக்கிமுக்கி கல்பாட்டு  மியூசிக் அச்சுஅசல்   அழகியதமிழ்மகன் பாட்டான “ மதுரைக்குப்போகாதடி” பாட்டுஇசை   உல்டா




மனம் கவர்ந்த வசனங்கள்

1. நான்   பேசனும்னு நினைக்கும்போதுதான்பேச முடியும்  .  நீ  பேசநினைக்கும்போது   முடியாது. ஏன்னா  நான் பாஸ்


2.  நான் பீட்சா டைப், நீ   தாம்பூலம் டைப், நம்க்குள்ளே  சிங்க்   ஆகாது


3. எத்தனை  சேவல் கூவுனாலும்  , கூடுனாலும்  முட்டை போடாத  கோழி அது , ஹி ஹி



4. பொட்டு  வைக்கக்கூட  மறக்கற பொண்ணுங்க  மருதாணி  வைக்க  ஆரம்பிச்சுட்டா   காதலிக்கறா -னு அர்த்தம்



5.  எக்சாம் ஹாலில் -

  டேய், எனக்கு ஒரு பிட் கொடு



 இதென்ன டீக்கடை   பஜ்ஜியா? எடுத்துத்தர?



6. சிங்கம்  காட்ல இருந்தாலும்  , ஜூ வில் இருந்தாலும்  வேட்டையாடித்தான்  சாப்பிடும்



7. நம்பிராஜனைப்பார்த்தியா?


 பக்கத்துல ஏதாவது  ஒயின்  ஷாப் இருக்கா பார்த்தியா?




8.  அம்மா  , தர்மம் பண்ணுங்கம்மா, ஆண் குழந்தையாப்பொறக்கும்

 அட போப்பா  , என் புருஷன்  ஓடிப்போய்  7வருஷம் ஆகுது , இவன்  வேற கடுப்பைக்கிளப்பிட்டு 


9. நாங்க வாழ நினைச்ச   எங்க வாழ்க்கையையும்   சேர்த்து நீ வாழனும்  ,இதுதான் எங்க  ஆசை



10.  வெற்றில  என்ன  இருக்கு?  ஒரு முறை   தோற்றுப்பார் .  இந்த  உலகமே  உனக்கு  புரிபட ஆரம்பிக்கும் 



11.  யோவ்,குளிக்கறியா?

 இல்லை , சைக்கிளுக்கு பஞ்சர் போட்டுட்டு இருக்கேன் , ஆத்தங்கரைல வந்து என்ன கேள்வி இது ராஸ்கல் ?






ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- தெலுங்கு படத்துக்கு விகடன்ல மார்க் போடறதில்லை , இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக   36



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - பத்து பைசாவுக்குக்கூட படம் தேறாது , டிவி ;ல போட்டாக்கூட யாரும்  பார்க்கவேணாம்





Friday, March 16, 2012

கழுகு - சினிமா விமர்சனம்

15 Mar (1 day ago)

to sabiramisree
http://1.bp.blogspot.com/-JScKCVg8YUE/T1ECUVVx49I/AAAAAAAABMs/KBVARErypL8/s1600/kazhugu_movie_wallpapers_501.jpg
டைட்டில், போஸ்டர் டிசைன், ட்ரெயிலர், படம் வெளியாகும் முன்பே சூப்பர் ஹிட் ஆன 2 பாடல்கள் இவை எல்லாம் ரொம்பவே வித்தியாசமான படமாக இருக்கும் என்று  எதிர் பார்க்க வைத்தது.. ஆனால் கதைக்களம் மட்டுமே புதுசு, மற்றபடி எப்பவும் சொல்ற அதே காதல் கதை தான்.. 

ஹீரோ கிருஷ்ணா,கருணாஸ், தம்பி ராமையா,இன்னும் ஒரு ஆள் இவங்க 4 பேரும் ஒரு குரூப். இவங்க தொழில் என்னன்னா மலை உச்சில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கற காதல் ஜோடி பிணங்களை பள்ளத்தாக்குல போய் இறங்கி எடுத்துட்டு வந்து ஒப்படைச்சு பணம் வாங்கறவங்க. ஹீரோயினோட அக்கா அவ லவ்வரோட குதிச்சு செத்துடறா.. அக்கா டெட் பாடியை எடுத்து தர்ற ஹீரோ பார்த்து ஹீரோயின்க்கு லவ் வந்துடுது.



ஹீரோயின் கண் எதிரே நடக்கற ஒரு விபத்துல ஹீரோ அடிப்பட்டார்னு பதட்டத்துல ஹீரோயின் ஹாஸ்பிடல் போய் பார்க்கறப்ப ஹீரோவுக்கு லேசா தான் அடி. ஹீரோயின் பதட்டம் பார்த்து ஹீரோவுக்கும் லவ் வந்துடுது.. இண்டர்வல்.

இதுக்குப்பிறகு திரைக்கதையை எப்படிக்கொண்டு போலாம்னு டைரக்டருக்கு ஒரே கன்ஃபியூஷன். அசிஸ்டெண்ட் டைரக்டர்கள்கிட்டே விவாதம் பண்றார். ஒரு வில்லனை உருவாக்கிறார்.  அவன் கள்ளக்கடத்தல் பண்றப்ப குறுக்க வந்த போலீஸ் ஆஃபீசருங்களை போட்டுத்தள்ளறார்..அந்த ஆஃபீசருங்களை பள்ளத்தாக்குல வீசிட்டு ஹீரோ அண்ட் கோ விடம் பாடி கிடைச்சா புதைச்சுட்டு பாடி சிக்கலைன்னு சொல்லிடுங்க அப்டிங்கறான்.


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/17993_1.jpg

 ஹீரோ அண்ட் கோ என்ன பண்ணுச்சு, க்ளைமாக்ஸ் என்ன? என்பதை வெண் திரையில் காண்க..

 அலாவுதீன், கற்றது களவு என்ற 2 வித்தியாசமான கதைக்களம் உள்ள  படங்களில் நடித்த கிருஷ்ணா இந்தப்படத்திலும் ஓரளவு புதிய கதா பாத்திரத்தில் தான் நடிச்சு இருக்கார்.. செகண்ட் ஆஃப் ஸ்க்ரீன்ப்ளே தான் காலை வாரிடுச்சு.. நடிப்பை பொறுத்தவரை ஓக்கே.. பாதி நேரம் தம் அடிப்பது, சரக்கு அடிப்பது என்றே ஹீரோ அண்ட் கோ டைம் பாஸ் பண்றாங்க.

மா இலை போல் அழகிய வதனம் உள்ள பிந்து மாதவி தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்யும் எழில்..அவரது ஒப்பனை இல்லாத உதட்டழகும். , களங்கம் இல்லாத கண்ணழகும் பெரிய பிளஸ்.. ஹீரோவுக்கு ஆக்சிடெண்ட் என்றதும் அவர் பதறித்துடித்து ஓடி வந்து துடிப்பது செம நடிப்பு.. படம் முழுக்கவே குறை சொல்ல முடியாத நடிப்பு..

தம்பி ராமையா வழக்கம் போல் யதார்த்த நடிப்பு.. ஆனால் அவர் லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பது எரிச்சல்.. கருணாஸ் அங்கங்கே கமெண்ட் அடித்து கொஞ்சம் கல கலப்பு ஏற்றுகிறார்..



http://www.nakkheeran.in/AllImages/Gallerys/18006_1.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. டெட்பாடியை எடுத்து வரும் ஆட்கள் பற்றிய முதல் தமிழ்ப்பட பதிவு என்ற வகையில் இயக்குநருக்கு ஒரு சபாஷ்..

2.  ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் அவசரம்,காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் அது எப்போதும் போதை ஆகும் நிலவரம் என்னும் பாடல் காட்சி நடன அமைப்பு, இசை, பாடல் வரிகள் எல்லாம் செம.. தியேட்டரில் கைதட்டல் காதை பிளந்தது.. ( அந்த பாடலில் ஒரே ஒரு சீனில் ஆடும் 18 வயசு ஃபிகர் ஹீரோயினை விட அழகு)

3. ஆத்தாடி மனசு தான், காதலை சொல்லு ஆகிய 2 பாடல்களும் ஓக்கே ரகம்..

4. லொக்கேஷன்கள், ஒளிப்பதிவு இரண்டும் அருமை.. ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்..

5. இடைவேளை வரை படம் எந்த இடத்திலும் தொய்வு இன்றி பரபரப்பாக செல்வது படத்தின் பிளஸ்..



http://puremasalablog.files.wordpress.com/2010/05/bindumadhavi06.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன் அக்கா இறந்த அடுத்த 5 வது நாளே ஹீரோயினுக்கு காதல் வருதே எப்படி? அதுவும் அக்கா இறந்தது காதல் தோல்வியால்.. அப்போ காதல் மீதே ஹீரோயினுக்கு வெறுப்பு வந்திருக்க வேண்டாமா?

2. ஹீரோயினின் அக்கா பிணத்தை ஹீரோ பணம் வாங்கி எடுத்துத்தர்றார்.. அந்த டெட் பாடில இருந்து அவர் அபேஸ் செஞ்ச நகையை திருப்பி தர்றார்.. கூலி 3000 ரூபாய்ல ரூ 1000 குறைச்சுக்கறார். இந்த 3 காரணங்கள் தான் ஹீரோயினுக்கு ஹீரோ மேல் லவ் வரக்காரணம் .. இந்தியன் டயலாக் தான் நினைவு வருது.. ஹீரோ அவன் செய்யவேண்டிய கடமையைத்தானே செய்தான்.. இதில் என்ன தியாகம் இருக்கு?

3. போலீஸ் ஆஃபீசர்ஸ் ஸை வில்லன் அடிச்சு போட்டிருக்கான்.. அது விபத்து அல்ல என்ற முக்கியமான விஷயத்தை ஹீரோ அண்ட் கோ போலீஸ்ட்ட சொல்றாங்க.. அப்பா அவங்க கிட்டே ரிட்டர்ன் ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்காமயே அவங்களை இன்ஸ்பெக்டர் அனுப்பிடறாரே, அது எப்படி?

4. வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷ் எதைக்கடத்தறார் என்பது தெளிவாக இல்லை.. அவர் ஏதோ டீத்தூள் கம்பெனி வெச்சிருக்கார் என்பது மட்டும் தான் தெரியுது.. ஹீரோ அண்ட் கோவிடம் லஞ்சம் வாங்கும் போலீஸ் வில்லனிடம் மட்டும் லஞ்சம் வாங்காமல் மாள்வது ஏன்?

http://www.bestceleb.info/wp-content/uploads/2012/02/bindu-madhavi-hot-300x254.jpg


 மனதில் நின்ற வசனங்கள்

1.  யோவ்.. இங்கே யார்யா தற்கொலையை பார்த்தது?

 நான் தான் அய்யா..

 எங்கே விழுந்து காண்பி..


2.  கள்ளக்காதல் ஜோடிங்க தான் நிறைய விழுந்து சாகுதுங்க.. நாம யார் கிட்டே போய் காசை வாங்கறது?


3.  கோபப்பட்டாலும் சரி நீ அதிகம் கோபப்படறே.. சிரிச்சாலும் நீ அதிகமா சிரிக்கறே..


4. விழுந்து சாகனும்னு முடிவு பண்ணுனவன் பக்கமா விழுந்து சாகக்கூடாது? இவ்வளவு தூரம் வந்தா சாவாங்க?


5. தற்கொலை செஞ்சு மலை உச்சில இருந்து விழும் ஜோடிகள் கைல எப்படி இலைகள்?

 சாவு பயத்துல கடைசி கட்டமா நாம தப்பிட மாட்டோமா?ன்ன கைக்கு கிடைக்கற கிளைகள், இலைகளை பிடிப்பாங்க :(


6.  நிறைய  பணம் சம்பாதிக்கற கம்ப்யூட்டர் ஃபீல்டுல இருக்கறவனை எவளும் வேணாம்னு ஒதுக்கறது இல்லை.. நிறைய கம்ப்யூட்டர் கம்ப்பெனிகளை மூடுனா  ஏகப்பட்ட லவ் ஜோடிகள் தற்கொலை செஞ்சுக்குவாங்கன்னு தோணுது


7. வேண்டப்பட்டவங்க சாகறப்பதான் சாவோட வலி மனுஷனுக்கு தெரியுது


8. சரக்கு அடிக்கறவரை நீ நம்பியாரு.. அடிச்சுட்டா எம்ஜியாரா? தத்துவம் பொழியறே?

9.  டாஸ்மாக் வர்றவங்க பாதி பேர் லவ் ஃபெயிலிய்ர்ல தான் வர்றாங்க

10.  ஏட்டய்யா, எனக்கு மட்டும் 7 அடி அடிச்சீங்க, என் ஃபிரஃண்ட்ஸ் 3 பேருக்கும் 2 அடிதானா? ஏன்?

 அடேய்.. எல்லாருக்கும் ஒரே மாதிரி அடி கொடுக்க இது என்ன சமத்துவபுரமா? லாக்கப்./..


11.  செயின் புதுசா இருக்கே..

 பரம்பரை செயின்னு இவர் தான் சொன்னாரு

 அட திருட்டுப்பயலே

12 .டீ விக்கறவன் கிட்டேயும் சரி, டிக்கெட் விக்கறவன் கிட்டேயும் சரி இந்த போலீஸ் கட்டிங்க்கை கரெக்ட்டா வாங்கிடும்.


13.  இப்பவெல்லாம் யார் நகையை போட்டுக்கிட்டு சாகறாங்க? ஊரை விட்டு ஓடி வந்ததும் லாட்ஜ்ல ரூம் போடறாங்க, அப்புறம் மேட்டரை முடிக்கறாங்க, வாடகைக்கு கூட பணம் பத்தாம நகையை வித்து செட்டில் பண்றாங்க.


14.  அக்கா.. உன் கிட்டே பேசனும்..

 அதைத்தாண்டி. தினமும் செஞ்சுட்டு இருக்கே..?

அய்யோ, ஒரு முக்கிய விசயம்  பேசனும்..

15.  அடியேய்.. பொண்டாட்டி விடற நீலிக்கண்ணீருக்கு அவளூங்க புருஷங்க வேணா பயப்படலாம், இரக்கப்படலாம்..  மத்தவங்க கிட்டே உங்க பப்பு வேகாது..

16.  நாளைக்கு என்ன டே?

 சண்டே..

 அப்போ அவ வீட்ல தான் இருப்பா..

 அது உனக்கு எப்படி தெரியும்?

 டேய்.. சண்டேன்னா எல்லாரும் வீட்ல தாண்டா இருப்பாங்க.. என் வெண்ணெய்....



http://www.thedipaar.com/pictures/resize_20120114142346.jpg


படத்தில் தேவை அற்ற டூயட், ஃபைட் சீன்கள் இல்லாதது ஒரு பிளஸ்..  வில்லனுக்கும் , ஹீரோயினுக்கும் வேறு ஏதாவது விரோதம் இருந்ததாக தனிக்கிளைக்கதை அமைத்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.. ஓக்கே பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி கமெண்ட் -  இடைவேளை வரை பார்த்துட்டு ரிட்டர்ன் வரலாம்னு நினைக்கறவங்க தியேட்டரிலும், மத்தவங்க டி வி லயும் பார்க்கலாம்.. எல்லாரும் பார்க்கற மாதிரி தான் படம் இருக்கு.. நோ வல்காரிட்டிஸ் ( சரக்கு அடிக்கற சீன், தம் அடிக்கற சீன் அதிகம்.. அதை விரும்பாத பெண்கள் தவிர்ப்பது நல்லது )

ஈரோடு ராயலில் படம் பார்த்தேன்

 ஆல் செண்ட்டர் 20 நாட்கள் சராசரியா ஓடும்




Friday, July 29, 2011

கவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா வின் வெப்பம் - சினிமா விமர்சனம்

http://www.cinehour.com/gallery/actresses/movieposters/movieposters/Veppam%20Movie%20Wallpapers/19665910Veppam-Movie-Wallpapers-5.jpg 

ஒரு பெண் இயக்குநர் என்றால் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்பு, உறவு , காதல் ஆகிய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் படமாக ,மனித நேயத்தை வளர்த்தும் விதமாக பிரமாதமான ட்ரீட்மெண்ட்டுடன் படம் எடுப்பார் என்று நம்பி போனால்........

ஆரண்ய காண்டம் படத்தில் வருவது போல் இதிலும் 2 தாதா கும்பல் ,கஞ்சா சரக்கு , கை மாறுது, சேசிங்க் தட் துரோகி.. ஆள், அடி தடி வெட்டு குத்து , ரத்தம் ரண களம்.. உஷ் அப்பா.. சாமி முடியலப்பா..

கார்த்திக் குமார்,நானி,நித்யா மேணன் ( 180 பட  ஹீரோயின் ), பிந்து மாதவி ( 2 பேர் அல்ல ஒரு ஃபிகர் தான்) என 2 லவ் ஜோடிகள் இருந்தும் படத்துல ரொம்னான்ஸூக்கெல்லாம் நேரம் ரொம்ப கம்மிதான்.. 

http://searchandhra.com/english/wp-content/uploads/2010/09/Bindu-Madhavi-Hot-Photo-Gallery-1-2.jpg

பொறுப்பில்லாத அப்பா,எப்போதும் நோய்வாய்ப்பட்ட நிலையில் அம்மா,அவர்களுக்கு 2 பசங்க .பெரிய பையன் ஏம்மா எப்போ பாரு படுக்கைலயே கிடக்கே?எப்போ உனக்கு சரி ஆகும்? என கேட்க அம்மா விஷம் சாப்பிடுகிறாள் ( ரெடியா பீரோல ஸ்டாக் வெச்சிருக்கா.. அதுல விஷம்னு லேபிள் வேற ) 

அம்மா சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்குனதும் அண்ணன் தம்பி 2 பேரும் கடத்தல், தாதா கும்பல்ல எப்டி மாட்றாங்க.. எப்டி அப்பாவையே போட்டுத்தள்ளறாங்க என்பதே கதை.. தில்லு இருக்கறவங்க தியேட்டர்ல போய் பாருங்கப்பா.

ஓபனிங்க் ஷாட்ல ஏரியல் வியூல ஹீரோயின் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கற மாதிரி பில்டப்பு.. நல்ல ஒளிப்பதிவு. ஆனா கடைசில பார்த்தா கஞ்சா பொட்டணத்தை கரைக்கவாம்.. போடாங்க்.... அந்த அரைக்கிலோ கஞ்சாவை கடற்கரைல கரைச்சா கரையாதா? மெனக்கெட்டு கடல்ல அரை கிலோ மீட்டர் போகனுமா? சஸ்பென்ஸாம்.. அவ்வ்வ்வ்

ஆனா ஒரு பிளஸ் இருக்கறதை ஒத்துக்கனும்.. இயக்குநர் அஞ்சனா மணி ரத்னம், அல்லது ஸ்ரீராமின் ரசிகை போல . பாடல் காட்சிகளில் கேமரா கோணங்களில் கலக்கறார்.ஹீரோயின்க்கு தரப்பட்ட தனிப்பாடலில் ஹஸ்கி வாய்சில் செம கிக் பாட்டு . அந்தப்பாடலில் ரசித்த வரிகள் - தேகம் இருக்கும் வரை தாகம் இருக்குமடா.. ( என்னே ஒரு அரிய கண்டு பிடிப்பு?!!)


ஜெராக்ஸ் கடைல வேலை பார்க்கும் ஃபிகராக வரும் நித்யாமேணன் நல்ல நடிப்பு.. ஆனால் 180 படத்தில் இருந்த ஃபிரஸ்நெஸ், இளமைத்துடிப்பு இதில் மிஸ்ஸிங்க் ( துடிப்பு கம்மிங்கறியே? ஸ்டெதஸ்கோப் வெச்சு பார்த்தியா? ராஸ்கல்ல்.ஸ். )

பிந்து மாதவி அந்த மாதிரி பெண்ணாக வந்தாலும் நல்ல காதலுக்காக ஏங்குபவராக நடிக்கிறார். ஆனால் அவர் காதலனிடம் கூட உதட்டை கடித்து மடக்கி, கண்ணை ஒரு மாதிரி பண்ணி ஏன் அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் கஷ்டப்படுத்துகிறார்னு புரியல,. அனா அவரோட அங்க லட்சணம், வளைவுகள் அழகு.. ( அதானே பார்த்தேன் )

2 ஹீரோக்களும் பாஸ் மார்க் வாங்க கூடிய நடிப்பு ( அடப்பாவி.. ஒரே லைன் தானா? ஆம்பளைங்களுக்கு?)




http://chennaionline.com/film/Photofeature/images/Veppam-Movie/07-Veppam-Movie-Stills.jpg

அஞ்சனாவின் வசனங்கள் நெஞ்சில் நின்றவை

1. அம்மா இறந்த பிறகு என் வாழ்க்கை கல்லை கட்டி கிணற்றில் விட்டது போல் ஆகிடுச்சு. 

2. ஜெயிக்கனும்னா நெஞ்சை நிமிர்த்து மோதனும்,பயத்தை விட்டுடனும்.

3. டேய்.. ஃபிகரைப்பார்த்து சாப்டாச்சா?ன்னு கேட்கற ஆளை பார்த்திருக்கேன். நீ என்னடா குளிச்சிட்டியா?ன்னு கேட்கறே? ( முழுகாம இருக்காளோ?ன்னு செக்கிங்கோ என்னவோ? )

4.  எதுக்காக என் மனைவிக்கு பூவை வீசிப்போட்டே?

யோவ்.. உன் மனைவின்னு எனக்கு தெரியாதுய்யா. முதல்ல தாலி கட்டுய்யா.. 



5. உங்கண்ணனுக்கு அடிக்கடி கோபம் வருது. அவருக்கு ஒரு மேரேஜ் பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கிறேன்.. ( அப்புறம் மேரேஜ் பண்ணி வெச்சவன் மேல கோபம் வருமே பரவால்லியா? )

6. எவரு செத்தாலும் தொழில் செத்துடக்கூடாதுய்யா.. ( வெட்டியானா இருப்பார் போல. )

7. என்னை கொலை செய்ய ஆள் ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.விஜி சொன்னா.. 



அய்யய்யோ. உடனே ஜோதிக்கு போனை போடு.. 

ஏற்பாடு பண்ணுனதே  ஜோதி தானாம்..



http://c563066.r66.cf2.rackcdn.com/wp-content/uploads/2011/06/South-Indian-Actress-Bindu-Madhavi-In-Telugu-film-Veppam-Movie-stills-5-580x866.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அழுகின்ற காதலியின் கண்ணீரை தன் உதடு ஒத்தடத்தால் துடைக்கும் காதலன், அதை படமாக்கிய விதம்.. செம 

2. படத்தின் 'மழை வரும் மழைத்துளி எனது விழிகளில் தெரியுதே' என்ற பாடல்கள் காதலர்களிடமும், 'ஏய் ராணி நான் மகாராணி நீ தான் என் அடிமை ' என்ற குத்துப்பாடல் இளைஞர்களிடமும் வரவேற்பை பெறும் விதத்தில் படம் ஆக்கியது.. 

3. படத்தின் தன்மையை கருதி தேவையற்ற காமெடி டிராக் சேர்த்தாமல் விட்டது.. 

http://www.indianactressphotos.net/photo.axd?t=n&fy=n&fx=n&s=&r=0&f=743cb0ef-75f1-49f1-9b8d-8c10011a76f9

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்


1. ஒயின் ஷாப்பில் அப்பா மப்பில் பயங்கி கிடக்கிறார் என்ற தகவல் வந்ததும் ஏன் அப்படி ஒரு பதட்டம்? மப்பில் இருப்பவர்கள் மயங்கி விழுவதும்,பாத்டப்பில் இருப்பவர்கள் நனைந்து கிடப்பதும் காலம் காலமாக நடப்பது தானே?ரொம்ப ஓவர் பில்டப் அந்த சீன்.. 

2. என்னதான் அந்நியோன்யமான ஃபிரண்ட்ஸ் என்றாலும் இப்படியா நண்பர் எதிரிலேயே காதலியுடன் ரொமான்ஸ் பண்ணுவாங்க?பார்க்கற நமக்குதான் கூச்சம் இருக்கு.. அவங்களுக்கு? ம்ஹூம்.

3. ஹீரோக்கள் 2 பேரையும் காட்டும்போது ஒண்ணா அவங்க தண்ணி அடிக்கறாங்க, இல்லை தம் அடிக்கறாங்க. 2 பேருக்கும் வேற வேலையே கிடையாதா? ( ஒரு பெண் இயக்குநர் கூட அப்படி எடுக்கனுமா?)

4. சொர்ணாக்கா மாதிரி வர்ற ரவுடி பொம்பள கேரக்டர் வலியனா திணிக்கப்பட்ட கேரக்டர்.. பிம்ப்பை அவர் மாமாப்பயலே என திட்டும்போதே  அவன் இருடி ஒரு நாள் உனக்கு ஆப்பு இருக்கு என கறுவுகிறான்.. அப்பவே தெரிஞ்சிடுது இவன் தான் அவளை கொலைபண்ணப்போறான்னு. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் ஏண்டிக்கிடக்கு?

5. ஹீரோ காதலியை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து மீட்டு வருவதற்காகத்தான் கடத்தல் தொழில் செய்யறான் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை

இந்தப்படம் ஏ, பி சி , டி ஈ எஃப் என எல்லா செண்டர்களிலும் 7 நாட்கள் தான் ஓடும்..

ஈரோட்டில் ஆனூர், வி எஸ் பி ஆகிய 2 தியேட்டர்களில் படம் ஓடுது. நான் ஆனூர்ல பார்த்தேன்

எதிர்பார்க்கப்படும் விகடன் விமர்சனம் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேணாங்கோ, விட்டுடுங்கோ
http://www.cinemagupshup.com/wp-content/uploads/2011/04/nitya-menon.jpg

டிஸ்கி - தயாரிப்பாளரான கெளதம் இப்படத்தை பார்த்துவிட்டு " இப்படம் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் மாதிரி தெரியவில்லை. படம் ரொம்ப ROUGH ஆக இருக்கிறது " என சொன்னாராம். பட ரிசல்ட்டும் அப்படித்தான் ரஃப் & டஃப்.

இயக்குநராக நடு நிசி நாய்களில் அடி வாங்கிய வர் தயாரிப்பளராக மீண்டும் சறுக்கி இருக்கிறார்..