Saturday, November 23, 2013

சுந்தரா டிராவல்ஸ் சொப்பன சுந்தரி ராதா - காமெடி கும்மி

 நடிகை ராதா

தொழிலதிபருடன் ஆறு ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்த நான் கர்ப்பமாகி கருவை கலைத்தேன் என்றும் தற்போது திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையரிடம் சுந்தரா டிராவல்ஸ் படநாயகி ராதா புகார் அளித்துள்ளார்.

நடிகர் முரளி நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா (29). இவர், மானஸ்தன், கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வரும் நடிகை ராதா, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தொழிலதிபர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதா, "ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த நான், சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். பிளஸ்2 வரை படித்துள்ள நான், சினிமாவில் பிரபலமாகி நன்றாக பணம் சம்பாதித்துள்ளேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை என்பதால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டேன்.


ஓரளவு சினிமாவில் நடித்தவுடன், திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்று இனிய இல்லற வாழ்க்கை வாழ்ந்திட ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் என்னை பெரும் புயலில் சிக்க வைத்து, எனது வாழ்க்கையை இப்போது நாசமாக்கிவிட்டது. கடந்த 2008ஆம் ஆண்டில் பிரபல படஅதிபர் ஒருவர் எனது செல்போனில் பேசி, ‘‘மலேசியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், உன்னை நேரில் பார்த்து பேச ஆசைப்படுகிறார். அவர் உனது தீவிர ரசிகர்’’ என்று சொன்னார். நான் அதற்கு சம்மதித்தேன்.


ஏவி.எம். ஸ்டூடியோவில் வைத்து, அந்த பட அதிபர் மூலம், மலேசிய தொழிலதிபர் என்ற நாமத்துடன் பைசூல் என்ற ஷியாம் என்பவர் என்னை நேரில் சந்தித்தார். என்னை கதாநாயகியாக நடிக்க வைத்து ஒரு படம் தயாரிப்பதாக சொன்னார். ரூ.10 ஆயிரம் பணத்தை அட்வான்சாக கொடுத்தார்.




சி பி - ஏம்மா , அது படத்துக்கான அட்வான்ஸ் தானா? ஏதாவது அக்ரீமெண்ட் ல சைன் போட்டீங்களா?  ஆதாரம் இருக்கா? அவ்ளவ் பெரிய தொழில் அதிபர் ஜஸ்ட் 10,000 தான் கொடுத்தாரா? நம்ப முடியவில்லை வில்லை வில்லை


அதன்பிறகு பட தயாரிப்பு தொடர்பாக அவரும், நானும் அடிக்கடி சந்தித்து பேசினோம். 


சி பி - ஏம்மா படம் தயாரிக்கனும்னா அவர் ஏன் உங்களை சந்திக்கனும்? ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு நேரா வர்றேன் அப்டினு சொல்ல வேண்டியதுதானே? 2 பேரும் ரூம் போட்டு ஸ்டோரி டிஸ்கஸன் பண்ணிட்டு இருந்தீங்களா? 




அடுத்த 20 நாட்களில் பைசூல் என்னை நேசிப்பதாக சொன்னார். திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே இல்லற வாழ்க்கையை விரும்பிய என்னை அவரது காதல் பொங்கிய அழைப்பு சிந்திக்க வைத்தது. அவரது காதலை ஏற்றுக்கொண்டேன்


சி பி - ஆம்பளை 1000 பொய் சொல்வான் . உங்களுக்கு எங்கே போச்சு ? ரிஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வாடான்னா தலை தெறிக்க ஓடி இருப்பான்  , 20 நாள் ல யே லவ் பண்றேன்னு  ரீல் விட்டிருக்காரு . அதென்ன 20 - 20  மேட்சா?



அவருடன் நடத்திய இல்லற வாழ்க்கையின் பலனாக, நான் கர்ப்பம் ஆனேன். ஆனால், அவர் சொன்னதின் பேரில் கருவை கலைத்துவிட்டேன்.



 சி பி - பாதுகாப்பான உறவு கொள்ளனும்னா நிறைய பேரு  ரூம்க்கு வெளில பாதுகாப்புக்கு ஒரு செக்யூரிட்டியை நிறுத்தி வெச்சுட்டா போதும்னு நினைப்பாங்க போல 

 
 கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் கணவன்–மனைவியாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்தோம். என்னை வெளிப்படையாக பைசூல் மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்.


சி பி - முத டைம் கில்மாக்கு கூப்பிடும்போதே இந்தகழுத்துல தாலி அந்தக்கைல கில்மா அப்டின்னுகண்டிஷன் போட்டுருந்தாலே அண்ணன் ஓடி இருப்பாரு , மேட்டர் எல்லாம் முடிஞ்ச பின் மேரேஜ் பண்ணு அப்டின்னா பண்ணுவாரா? 




 தனது தந்தை–தாய் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று முதலில் சொன்னார். இப்போது அவரது தாய்–தந்தை இறந்துவிட்டார்கள். அதற்கு பிறகும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

‘நடிகையை திருமணம் செய்ய முடியாது, வைப்பாட்டியாகத்தான் வைத்துக்கொள்ள முடியும்’ என்று என்னை இப்போது கிண்டலாக பேசுகிறார். அவரோடு இனி வாழ முடியாது என்று முடிவு செய்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர் என்னை அனுபவித்துவிட்டு, தூக்கி எறிந்துவிட்டார். போகத்துக்கும், பணத்துக்கும் மட்டும் என்னை பயன்படுத்தினார்.

பைசூல் வைர நகை செய்யும் தொழிலும் செய்வதாக சொன்னார். அந்த தொழிலுக்கு தேவைப்படுவதாக சொல்லி எனது நகைகளையும், ரொக்கப்பணமாக ரூ.50 லட்சம் வரையும் என்னிடம் இருந்து சுருட்டினார்.




சி பி - மேட்டர் முடிச்சுட்டு அவனவன் பாயைச்சுருட்டுவான் ,, அண்ணன் 50 லட்சத்தைசுருட்டி இருக்காரு . பணம் கேட்டப்பவே என் பேருல வைரக்கடையை எழுதிவைங்கன்னு கேட்டிருக்கலாம் , அல்லது அவர் பேருல அக்கவுண்ட் பேயி செக்கா போட்டுக்கொடுத்திருக்கலாம் , நான் வாங்கலைன்னு அண்ணன் மறுக்க முடியாது , இப்போ பணம் வாங்குனதுக்கு ஆதாரம் இருக்கா?ன்னு நாக்கு மேலபல்லைப்போட்டு , அல்லது பல்லு மேல நாக்கைப்போட்டு கேப்பாரு

 அந்த பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி சொந்த வீட்டில் வாழ்கிறார். அவரது சொந்த ஊர் சிவகங்கை அருகே உள்ள இளையான்குடி, புதூர் ஆகும். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி இருப்பதாக அறிகிறேன். பணத்துக்கும், போகத்துக்கும் என்னைப்போல வேறு நடிகையையோ, வேறு பெண்ணையோ அவர் ஏமாற்றி விடக்கூடாது. அவரது வேடத்தை கலைத்து, சட்டப்படி அவருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்காகவே, இந்த புகார் மனுவை கொடுத்துள்ளேன்" என்றார்.

நடிகை ராதாவின் புகார் மனு தியாகராயநகர் காவல்துறை துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சி பி - நல்ல வேளை புகார்கொடுக்க லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் போகாம உயர் அதிகாரி கிட்டே போய் இருக்காரு , இல்லைன்னா எஸ் ஐ கொஞ்சம் விளையாடி இருப்பாரு 

நடிகை ராதா பலபேரை மணந்துள்ளார்: தொழிலதிபர் குற்றச்சாட்டு

சென்னை: நடிகை ராதா எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தொழிலதிபர் பைசூல் கூறியுள்ளார்.
சி பி - யோவ் , அவர் பாஞ்சாலியா? கண்ணகியா? அப்டிங்கறது பேச்சில்லை . நீங்க  ராமனா? கண்ணனா? அதுக்குமட்டும் பதில் சொல்லுங்க

நடிகை ராதாவின் புகரை மறுத்துள்ள பைசூல், "என் மீது நடிகை ராதா சொன்ன குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை. அவரது புகாரை சட்டப்படி சந்திப்பேன். நியாயப்படி நான்தான் அவர் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு பெண் என்று இரக்கப்பட்டு, அவர் மீது புகார் கொடுக்காமல், அவர் கொடுத்த தொல்லைகளை நான் சமாளித்து வந்தேன்.

 சி பி - அதென்னாய்யா ஆளாளுக்கு பொண்ணுன்னா இரக்கப்படறீங்க ? உங்க இரக்கத்தை ஆம்பளைங்ககிட்டே காட்டவே மாட்டீங்களா? 


 அரசியல்வாதிகள் மூலம் அவர் என்னை மிரட்டி வந்தார். தயாரிப்பாளர் என்ற முறையில் நான் அவரோடு சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, என்னை அவமானப்படுத்திவிட்டார்.


சி பி - தயாரிப்பாளர்னா எதுக்கு உரசிட்டே போஸ் குடுக்கனும் ? ஏ வி எம் சரவணன் எப்டி நிப்பாரு? அப்படி அடக்கி வாசிப்பது தானே? 



அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரமாக அவரது பாஸ்போர்ட் மற்றும் அவரது வருமான வரித்துறை பான் கார்டு நகல்கள் உள்ளன. பான் கார்டில் அவரது கணவர் பெயர் என்ன போடப்பட்டுள்ளது, பாஸ்போர்ட்டில் அவரது கணவர் பெயர் என்ன என்று போடப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆதாரங்களை சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து கொடுப்பேன்.



சி பி - நீங்க ஒரு  உத்தம பத்தனன் அப்டின்னா பல பேரை மணந்த ஆள்கூட எதுக்கு சகவாசம் ?

அவர் எனக்கு அனுப்பி உள்ள எஸ்.எம்.எஸ். தகவல்களில் கூட நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவர் என்னை சிறைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ளார். நான் அவரை ஒரு முறை அல்ல, பல முறை சிறைக்கு அனுப்புவேன்" என்றார்


சி பி - ஜெயில்ல 2 பேரையும் தனித்தனி செல்லு ல போடனும் , இல்லைன்னா இன்னும் கூத்தடிப்பாங்க