புதுடில்லி : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட
வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு
வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி,
தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து
இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம,
தல்வார் கதறி அழுதார்.
டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்
ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே
மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில்
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இந்த கொலைக்கு
வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில்
கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின்
அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார்.
சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான
நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இவ்வழக்கை முடிக்கலாம்
என, சி.பி.ஐ., கோர்ட்டில் கூறியது.
சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு: அதை
ஏற்க மறுத்த சி.பி.ஐ., கோர்ட், இந்த
வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில்
மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு
பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள்
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ
சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை
பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரிய வந்தது.
ஐந்தரை ஆண்டுகள் விசாரணை:
ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின்,
அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம்
ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர்
மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார்
ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், பெற்றோரே குற்றவாளிகள்
என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
புதுடில்லி : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட
வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு
வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி,
தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து
இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம,
தல்வார் கதறி அழுதார்.
நன்றி - தினமலர்
இதனிடையே, தீர்ப்பு வெளியானவுடன் ஆருஷியின் பெற்றோர் ஓர் அறிக்கையை
வெளியிட்டனர். அதில், "நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நாங்கள்
செய்யாதக் குற்றத்துக்கு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது காயத்தையும்
கவலையையும் அளிக்கிறது. நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை
மறுக்கிறோம். நீதிக்கான எங்களது போராட்டம் தொடரும்" என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

அ

Unfortunate, The Parents were made scapegoat for the inefficiency of
CBI. When they were not able to find Scientific evidence they used
Circumstantial evidence against them Just to Protect the image of CBI.
This is happening everywhere including in Hospitals when they admit
patients for Transplant if they feel Patient will not Survive with
Transplant they the patient. They Do not want the patient to go another
hospital which will Affect their image and to keep 100% success rate for
money minting.Its very rampant and common now days in India. this has
touched even the investigation agency.If they do not find any proper
evidence make someone scapegoat & Sacrifice for the sake of Image. I
wish They Get Justice.

பெற்றோர்தான் இந்த குற்றத்தை செய்தனர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும்
சி பி ஐ ஆள் இதுவரை சேகரிக்க முடிய வில்லை... பெற்றோரே
ஒப்புக்கொண்டுவிட்டனர் என்பது சி பி ஐ இன் வாதம் இதன் அடிப்படையில் கோர்ட்
தீர்ப்பு கூறியுள்ளது.... 13 வயது பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்தனர்,
என்பதை நம்புவது மிக கஷ்டமாக உள்ளது...

நம்பி வளர்த்த நாய், பிள்ளையை கடிக்கிறது என்றால் அந்த நாயை அடித்து
விரட்டியிருக்க வேண்டும்... அதைவிடுத்து நாயையும் கொன்று, பிள்ளையையும்
கொன்று என்னத்தை பெற்றார்களோ அந்த பெற்றோர்..?

வழக்கம் போல , நம் வாசக நண்பர்கள் சிலர் நீதிபதியாக சிலர் துப்பறியும்
சிங்கமாக தாமே வேசம் போட்டுக் கொண்டு கண்டுபிடிப்புகளையும் தீர்ப்புகளையும்
வழங்கிவிட்டார்கள். இந்த நிமிடம், பா ஜ க ஆதரவு ஆங்கில சேனல் ஒன்று
இதையும் அரசியலாக்கி விவாத மேடையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
சி பி ஐ தண்டம் என்றும், தீர்ப்பு சரியில்லை என்றும் என்னென்னவோ பேசிக்
கொண்டிருக்கிறார்கள். என்னவோ, ராகுல் காந்தி தீர்ப்பு சொன்ன மாதிரி டி வி
யில் போட்டு தாக்குகிறார்கள் சிலர். காமெடியாக இருக்கிறது. தீர்ப்புகள்
வந்தாலும் திட்டுவார்கள், தீர விசாரிக்க வருடங்களை எடுத்துக் கொண்டாலும்
திட்டுவார்கள்.

BJP favoured national news channel??? are u sure sir??? i didnt come across anything like that for the last 10 years....

இருந்தது ஒரே மகள். அவளும் போயிட்டா. இனிமேல் கிளினிக் போனால்
என்ன...ஜெயிலுக்கு போனால் என்ன...மகளை வளர்த்தது சரியில்லை அல்லது பணியாளை
பார்த்து நியமிக்கத் தெரியவில்லை.

உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் தானா

மருத்துவர்களே மிருகங்களாய் நடந்து கொண்டால்..இவர்களுக்கு வழங்கப்படும்
தண்டனை மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை தருவதாக அமையவேண்டும்..ஏதோ பத்தோடு
பதினொன்றாய் ஆகிவிடக்கூடாது.

கோயம்புத்தூர் சீனிவாசனின் கேள்வி நியாமானதே. தமிழ் நாட்டில் எவ்வளவு
கொடுமை நடக்கிறது அதுவும் குழந்தைகளுக்கு எதிராக. சொல்வதெல்லாம் உண்மை
நிகழ்ச்சியை பாருங்கள் தெரியும். யார் போராட முயற்ச்சிக்கிறார்கள்? வட
இந்திய என்றாலே நம் தென்னிந்திய மனிதர்களுக்கு பயமும் தாழ்வு
மனப்பான்மையும் வந்துவிடுகிறது. அண்ணா அசாரே புரட்சி ??? செய்த பொது நம் வட
இந்திய மற்றும் தென்னிந்திய டிவிக்கள் எவ்வளவு முக்கியத்துவம்
கொடுத்தார்கள்? நம்மிடையே போராடி மறைந்த எம் எஸ் உதயமூர்த்தி ஐயாவுக்கு
எந்த டிவியாவது பத்திரிகையாவது முக்கியத்துவம் தந்து
ஒத்துழைத்தார்களா?
அவரின் வரலாறே மறைத்துவிட்டனர். அதேபோல தான் இந்த கொலை
கேசும். பெற்று வளர்த்து 14 வருடம் தியாகம் செய்த அப்பா அம்மாவுக்கு
துரோகம் செய்த அந்த பெண்ணின் மனசு மற்றும் என்ன நல்லதா? அப்பன் ஸ்தானத்தில்
உள்ள ஒருவனுடன் தன மகளை ஒரே கட்டிலில் பார்த்த போது என்ன செய்வது என்றே
தெரியாமல் செய்த கொலை தான் இது. இது ஒன்றும் திட்டமிட்ட கொலை இல்லை.
சந்தர்ப்பம் இப்படி இருவரையும் ஆக்கிவிட்டது. என்னை பொருத்தவரை இந்த
பொண்ணுக்கு வருத்தப்படும் நிலையை விட ஒரு படி அதிகமாய் அந்த
பெற்றோர்களுக்கு வருந்துகிறேன்.

இந்த காலத்து பிள்ளைகளால் பெற்றோருக்கு எத்தனை தலை குனிவு என்பதற்கு
இவ்வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. பெற்றோர்களே , நம் பிள்ளைகளிடம் அளவுக்கு
மேல் பாசம் வைக்க வேண்டாம். அது அவர்களுக்கும் நல்லதல்ல, நமக்கும்
நல்லதல்ல.

தீர்ப்பு வரவேற்க பட வேண்டிய ஒன்று.நீதியின் கதவுகள் எப்போதும் திறந்தே
உள்ளன .5 ஆண்டுகளுக்கு பின் நியாயம் கிடைத்துள்ளது உலகிற்கு காட்டபடுகிறது .

எமன் பெற்றோர்கள் வடிவில்....

பெற்றோர்கள் நல்ல படித்தவர்கள். டாக்டர்கள் பெண்ணுக்கோ 13 வயதுதான்
வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனுடன் தொடர்பு என்றால் எப்படி இருக்கும்?
சொல்லி பார்த்து இருப்பார்கள் ? கேட்டு இருக்க மாட்டாள். வயது அப்படி ?
வேறு வழி இல்லாமல் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் போலும் ?

அய்யா
, அன்பு கிடைக்காத அந்த பெண் அப்படி தவறு செய்திருந்தால் அதற்கு முழு
பொறுப்பும் அந்த பெற்றோர்கள்தான் காரணம்.. பணம் என்று பேயாய் அலைந்து பணம்
சேர்ப்பது மட்டும் வாழ்கை இல்லை..குழந்தைகளுக்கு அன்பை கொடுக்க
மறந்துவிட்டார்கள் ..அதுதான் பிரச்னை......

" இது சம்பவம்.... சமுதாயத்தில் தன்னை உயர்வாக பிறர் கருத வேண்டும் பணம்
பணம் என்று அலையும் பெற்றோர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு பணம் தான்
அனைத்தும் மற்றவையெல்லாம் பிறகுதான் என்று கருதும் பெற்றோர்கள்
.....சிறுவயதில் இருந்து பிள்ளையை அன்பு காட்டாமல் வளர்த்து பிறகு கொன்று
இருக்கிறார்கள் இந்த மனித மிருகங்கள் ....இவர்களை தூக்கில் இடுவதை விட
சித்திரவதை செய்து கொள்ளுங்கள் ...அப்பொழுதுதான் அந்த பிஞ்சு உள்ளம் பட்ட
வேதனை சாந்தி அடையும்

பெண்கள் வன்முறை ஒழிப்பு தினத்தில் கிடைத்த ஒரு துயர செய்தி....93
schoolgirls sexually harassed near Patna. Save your women government
doesn’t care.

எல்லா பெத்தவங்களுக்கும் ஒன்னு சொல்றேன் பிள்ளைங்க தப்பு செய்றது இயல்பு
பிள்ளைகளின் சுற்றமும் நட்பும் தெரியாமலே இருப்பதுதான் பெத்தவங்களோட பெரிய
தப்பு. நீங்க பிள்ளைங்க மேல அக்கறை வைத்திருந்தால் இந்த மாதிரி தவறுகள்
நடந்திருக்கவே செய்யாது மறுபடியும் சொல்றேன் பிள்ளைங்கள சரியா வளர்ப்பது
பெத்தவங்களோட முதல் கடமை.

அடப்பாவிகளா..? என்ன கொடுமையடா...? நீங்கள்லாம் எதற்கு பிள்ளை பெற்று ..
பின்... இப்படி..? உங்கள் மனநிலை இப்படி போக என்ன காரணம்? அதுவும் படித்த
மருத்துவர்கள்?...

மேற்கண்ட சிறுமி கொலைவழக்கு கவலை தந்தாலும் எனக்கொரு சந்தேகம். அதென்ன
டில்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடந்துவிட்டால் நாடே
ஸ்தம்பித்து, ஏக அமர்க்களமாகி விடுகிறது. முன்னர் ஒருமுறை காசியாபாத்
நகரில் இரண்டு மனிதர்கள் குழந்தையைக் கொன்றது, பின்னர் பஸ்ஸில் பலாத்காரம்
என்று தொடங்கி டில்லி-உபி யை மையம் கொண்ட களேபரங்கள் ஏராளம். நாட்டில்
வேறெங்கும் கொலை, பலாத்காரம் நடப்பதே இல்லையா? இல்லை அந்தக் குற்றங்களில்
சிக்கியவர்கள் மனிதர்கள்தான் இல்லையா? நானும் புரியாமல்தான்
கேட்டுவிட்டேன்.

நமக்கு
தான் அம்மாவை புகழ்வதற்கும் , அய்யாவை நய்யாண்டி செய்வதற்குமே நேரம்
சரியாக இருக்கிறதே .. வேறு எந்த பிரச்சனைகளை கவனிப்பது...Jokes
apart...நீங்கள் சொல்வது உண்மையல்ல..தினமலர் பத்திரிக்கை சமீபகாலமாக
லோக்சபா election ஐ கருத்தில் கொண்டு மோடிஐ புகழ்வதற்கும் மற்றும்
காங்கிரெஸ் ஐ தாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறது.. மற்ற பத்திரிகைகளில்
இது போன்ற செய்திகளில் வந்து கோடி தான் இருகின்றனர் .. ஒரே வித்யாசம்..
அங்கு பிரச்னை வந்தவுடன் மக்கள் களத்தில் இறங்கி போராடுகின்றனர் ( டெல்லி
மாணவி bus )..பிரச்சனையை பெரிது படுத்துகின்றனர் விழிப்புணர்ச்சி
ஏற்படுத்துகின்றனர் .. இங்கு நம் வீட்டிற்கு வராதவரை ஷேமம் என்று அடக்கி
வாசிகின்றோம்......

Very
simple Mr. Srinath அங்குள்ள மீடியா எல்லாம் (NDTV, Aajtak, IBN7......)
அரசியல் கலவாதது reach அதிகம் நாட்டில் உள்ள அல்லது நடந்த பிரச்சனைகளை ஆழ
ஊடுருவுகிறார்கள், இங்கே நமது Media .) அனைத்தும் அரசியல் வாதிகளால்
நடத்துவது, அவர்களுக்கு எதிர் அணி மீது சேற்றை வாரிஇறைக்கவும் இலங்கை
தமிழர்களுக்கு அழுகவும் நேரம் சரியாக உள்ளது நாட்டில் நடக்கும்
அக்கிரமங்களை வெளிப்படுத்த நேரமில்லை. சொல்லப்போனால் சிலசமயம் அவர்கள்
கட்சிக்கு சில விசயங்களில் மறைமுக தொடர்பு இருப்பதால் total blackout....
1 comments:
பல விதங்களில் இதை விமர்சிப்பர்கள் படிப்பினைகளை மறப்பது ஏன் என்று புரியவில்லை .ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கும் வாய்பூ கிடைத்தால் தவறுவது நூறு சதவிகதம் உண்மை. ஒரு ஆண் எப்போதும் ஆணாகத்தான் இருப்பான். அவர்களை சுதந்திரமாக விட்டது பெற்றோரின் அறிவீனம். பின் வரும் விளைவுகளை சிந்திக்காமல் சிரிபோர்களை நம்பி வாழ்வை இழப்பது பெண்மையின் அறிவீனம். ஆண் பெண் சரி நிகர் சமானம் என்று இதற்க்கூ பெயர் சூட்டுவது அறிவாளிகளின் அறிவீனம் .
Post a Comment