Showing posts with label FILMREVIEW. Show all posts
Showing posts with label FILMREVIEW. Show all posts

Monday, June 04, 2012

மயங்கினேன் தயங்கினேன் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22218_1.jpgஉங்க இடது கைல 2 ராஜேஷ் குமார் நாவல், வலது கைல 3 தேவி பாலா நாவல், 5 நாவலையும் அட்டர் டைம்ல படிச்சு கதை சொல்லுன்னு உங்க கிட்டே சொன்னா எப்படி இருக்கும்?அப்படித்தான் இந்த படத்தை பார்க்கறப்ப எனக்கும் இருந்துச்சு.. பொறுமையா உக்காருங்க, கதை சொல்றேன்... 

டிராக் -1 :  ஹீரோயின் க்கு ஒரு தங்கச்சி, ஒரு அம்மா, ஒரு அப்பா.. எதிர்பாராதவிதமா அம்மா, அப்பா இறந்துடறாங்க, அந்த அதிர்ச்சில தங்கச்சி மன நிலை பாதிக்கப்பட்டுடறா... மனநலக்காப்பகம்ல அவளை சேர்க்கறாங்க.. அங்கேயே ஹீரோயினும் சிஸ்டம் ஆபரேட்டரா சேர்ந்துக்கறாங்க.. அந்த காப்பகத்தோட நிறுவனர் நம்ம நித்தியானந்தா மாதிரி.. அந்த காப்பகத்துல இருக்கற பொண்ணுங்களை ரேப் பண்ணி தன் வெப்சைட்ல அப்டேட் பண்றான்.. ( வெப்சைட் லிங்க் எல்லாம் கேட்கக்கூடாது.. ) ஹீரோயின் அதைக்கண்டுபிடிச்சு போலீஸ்ல வில்லனை மாட்டி விட்டுடறா.. அந்த கடுப்புல வில்லன் அவளை பழி வாங்க தேடிட்டு இருக்கான்..

டிராக் 2 - ஹீரோவோட ஃபிரண்ட் காதல் படத்துல பரத் வந்தா மாதிரி ஒரு பைக் மெக்கானிக். தனுஷ்க்கு தம்பி மாதிரி ஆள் இருப்பார், ஆனா அவரையும் ஒரு 50 மார்க் ஃபிகர் வலியனா துரத்துது.. லவ் பண்ணுது.. அவன் மேல மேல வந்து விழுது.. மெயின் மேட்டர் தவிர மத்த மேட்டர் எல்லாம் முடிஞ்சுடுது, ஆனா வீட்ல சிங்கப்பூர் மாப்ளை பார்க்கறாங்கன்னு சொன்னதும் பாப்பா எந்த விதமான  மன தடுமாற்றமோ, சங்கடமோ இல்லாம ஓக்கே சொல்லிடுது.. இவன் மெண்ட்டல் ஆகிடறான்


 டிராக் -3 :  இன்னொரு வில்லன், இவன் .இன்ஸ்பெக்டர், ஆள் புரியாத புதிர் ரகுவரன் மாதிரி சைக்கோ பார்ட்டி.. ஆஃபீஸ் போறப்போ அவன் சம்சாரத்தை வீட்டுக்குள்ளேயே பூட்டிட்டு போற ஆள்.. ஒரு நாள் அவன் இல்லாதப்ப அங்கே வர்ற ஹீரோவோட ஃபிரண்ட் கூட பழக்கம் ஆகி ஹி ஹி .. ஒரு டைம் ஃபுல் மீல்ஸ் சாப்பிடச்சொல்லி அவன் சாப்பிட்டதும் தற்கொலை செஞ்சுக்குது//


டிராக்  4 : இப்போ தான் மெயின் கதை.. ஹீரோ ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர்..ஹீரோயின் அதே நிறுவனத்துல ஒர்க் பண்ற டெலி காலர்.. ஏதாவது அவசர கேஸ்னா அவ தான் ஹீரோவை கூப்பிடுவா .. ஐ மீன் ஃபோன்ல .. 2 பேரும் நேர்ல பார்த்துக்காமயே ஃபோன் லவ் பண்றாங்க.. ஆனா குள்ளநரிக்கூட்டம் படத்துல வர்ற மாதிரி நேர்ல பார்த்துக்கறாங்க.. ஆனா அவங்க தான் இவங்கன்னு அவங்களுக்கு தெரியாது..எப்படியோ கஷ்டப்பட்டு தெரிஞ்சு நம்மையும் கஷ்டப்படுத்தி பாடா படுத்தறாங்க..



http://www.koodal.com/cinema/koodal_reel/2011/mayanginen-16.jpg


இந்த 4 டிராக்கும் எப்படி இணையுது? வில்லன் துரத்திட்டு வந்த ஹீரோயின் வில்லன் கைல மாட்னாளா? என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதி கதை.. ம்க்கும், 98 % கதை சொல்லியாச்சு..


நிதின் சத்யா நல்ல நடிகர் தான்.. ஆனா இந்தப்படத்துல அண்ணனுக்கு சான்ஸ் கம்மி.. ஏதோ வாங்குன காசுக்கு வஞ்சகம் இல்லாம நடிக்கறார்.

மத்த ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் பற்றி சொல்ல பெருசா ஏதும் இல்லை.. கஞ்சா கறுப்பு கடி கடுப்பு.. என்ன சொன்னாலும் காமெடின்னு நினைச்சுக்குவார் போல. .


சைக்கோ போலீஸ் அஜய் ரத்னம் நடிப்பு  ஓவர் டோஸ்








இயக்குநரிடம் சில கேள்விகள்


1. இன்ஸ்பெக்டர் வில்லன் கோயிலுக்கு தன் சம்சாரத்தோட போறார், அப்போ சம்சாரம் மஞ்சள் கலர் சேலை கட்டிட்டு வருது, கோயில்ல ஒரு பன்னாடை அதாவது ஹீரோவோட ஃபிரண்ட் “ மேடம்  நீங்க செம கட்டையா இருக்கீங்க.. இந்த மஞ்சள் கலர் புடவை உங்களுக்கு சூப்பர்னு சொல்றான்.. எந்த ஊர்லயாவது கணவனை பக்கத்துல வெச்சுக்கிட்டே அப்படி யாராவது கமெண்ட் அடிப்பாங்களா? அதுவும் கணவர் ஒரு இன்ஸ்பெக்டர்..


2. வீட்டுக்கு வந்ததும் இன்ஸ்பெக்டர் கடுப்பாகி அந்த  மஞ்ச சேலையை உருவி சிகரெட் லைட்டரால எரிச்சிடறார்... அடுத்து 2 நாள் கழிச்சு ஹீரோவோட ஃபிரண்ட்  வீட்டுக்கு வந்து இன்ஸ்பெக்டர் சம்சாரம் கிட்டே “ நான் உங்களை முதல் முதலா பார்த்தேனே , மஞ்சள் கலர் புடவை அதை கட்டிட்டு வாங்க.. பார்க்கனும் போல இருக்குங்கறான்.. மேடமும் கட்டிட்டு வர்றாங்க.. அது எப்படி?


3. ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ ஹீரோயின் டெட் பாடியை வெச்சு அவ தலை மாட்டுல ஆரம்பிச்சு குழி தோண்டுறான்.. ஆனா குழி தோண்டி முடிக்கறப்போ அந்த குழி ஹீரோயின்க்கு கை சைடுல இருக்கு..


4. மொட்டை மாடில 1 ஏக்கர் அளவு இடம் இருக்கு.. நாடோடிகள் படத்துல வர்ற மாதிரி ஹீரோ மற்றும் நண்பர்கள் 3 பேரு படுத்திருக்காங்க.. ஹீரோவின் தங்கை போக ஏகப்பட்ட இடம் இருந்தும் அந்த 3 பேரை மிதிச்சுட்டு போறா.. அது காமெடியா?


5. ஹீரோயின் அடிக்கடி ஹீரோவுக்கு ஃபோன் பண்றாங்க , 2 பேரும் நேர்ல பார்த்துக்கிட்டதில்லை.. இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக் , ஹீரோ ஹீரோயினை பார்க்கலை ஓக்கே ஆனா ஹீரோயின் கம்ப்யூட்டர்ல தான் ஒர்க் பண்றாங்க? ஹீரோ அதே கம்பெனில ஒர்க் பண்றப்போ அவர் நினைச்சா ஈசியா சிஸ்டம்ல பார்க்கலாமே?


6. ஒரு சீன்ல ஹீரோயின் கொலுசுல திருகாணியை டைட் பண்ண பாவாடையை ஏன் முழங்கால் வரை தூக்குது? ஹீரோவும் பக்கத்துல இல்லை.. ஆடியன்சை கிளுகிளுப்பேத்தவா?


7. எந்த லூசாவது தான் பண்ற கில்மா ரேப் வேலையை எல்லாம் தன் வெப்சைட்ல ஏத்துவானா? வில்லன் அப்படி பண்றாரே? அதுவே எவிடென்ஸ் ஆகாதா?


8. சரி. அப்படித்தான் வெப்சைட்ல ஏத்தி வெச்சிருக்கார்னே இருக்கட்டும் , அதே சிஸ்டம்ல ஒர்க் பண்ண ஹீரோயினை  வில்லனே அப்பாயிண்ட் பண்றாரே? அது எபப்டி? அவ பார்ப்பா-னு தெரியாதா?


9. வில்லனின் கில்மா வேலைகளை எல்லாம் பென் டிரைவ்ல காப்பி பண்ணி மறைவா  வைக்காம லூஸ் ஹீரோயின் என்னமோ பெருமையா கம்பேனி ஐ டி கார்டு டேக் மாதிரி கழுத்துல மாட்டிட்டு இருக்கு.. அவளை பிடிச்ச வில்லன் உலக மகா  கேனம் போல “ ஆதாரத்தை எங்கே வெச்சிருக்கே?னு கேட்கறான்

10. ஒரு சீன்ல வில்லன் கோபம் வந்து அவர் போட்டிருக்கற பவர் கிளாசை தூக்கி எறியறார்.. யாருக்கு நஷ்டம்? புரொடியூசருக்கும், வில்லனுக்கும் தான்..

11. வில்லன் ஒரு பொம்பளை பொறுக்கி.. ஹீரோயின் லட்டு மாதிரி இருக்கா .. தனியா மாட்டிக்கிட்டா.. வில்லன் கூட 17 அடியாள்ங்க இருக்காங்க.. அவங்களை காவலுக்கு வெச்சு ஹீரோயினை ரேப் பண்ணாம் அந்த வில்லன் லூசு மாதிரி என்னமோ ஹீரோவை துரத்தி துரத்தி அடிக்கற மாதிரி அடிச்சுட்டு இருக்கான்.. அப்படியா ஒரு பெண்ணை அடிப்பாங்க?


12. ஆசிரமத்துல வில்லன் போலீசால் அப்போதான் கைதாகிறார்.. உடனே  மக்கள் எல்லாம் என்ன விபரம்னே தெரியாம கல் எடுத்து அடிக்கறாங்க..


13. வில்லன் தன்னை  சேஸ் பண்ணிட்டு இருக்கான்கற மேட்டரை ஹீரோயின் ஏன் எஸ் எம் எஸ் பண்ணலை?


14.  அம்மா, தங்கையுடன் வீட்டில் இருக்கும் ஹீரோ ஃபிரண்ட்சுடன் டைனிங்க் ஹால்ல சரக்கு ஓப்பன் பண்றார்.. பக்கத்துலயே அம்மா..


15.  பூட்டுன வீட்ல நுழையும் திருடன் முதல் வேலையா தாழ்ப்பாள் போட்டுக்குவான்.. ஆனா வில்லன் வீட்டுக்குள்ளே எப்படி திருடன் உள்ளே இருக்கும்போது வர்றான்?







 மனம் கவர்ந்த வசனங்கள்


1. பிடிக்காத பொண்ட்டாட்டியா இருந்தாலும், புருஷனா இருந்தாலும்  பேசிக்காம இருக்க மாட்டாங்க ..


2.  மாமி .. ஏதாவது உண்டியல்ல போடுங்க.. கோவில் கும்பாபிஷேகத்துக்கு நிதி திரட்டறோம்..

 என் கிட்டே குலுக்கி என்ன பிரயோசனம்.. மாமா கிட்டே குலுக்குங்கோ..

மாமா..

 போப்பா .. நான் மாமி உண்டியல்லயே காசு போடறதில்லை, சாமி உண்டியல்லயா போடப்போறேன்?


ஹூம், மாமா போடத்தயங்குனாலும் மாமி போட்டுடறா ..



3. அந்தக்காலத்துல விவரமாத்தான்யா கண்டு பிடிச்சிருக்காங்க.. போலீஸ்க்கு சைரன் மாதிரி, பெண்ணுக்கு கொலுசு.. ஓசையை வெச்சே கண்டு பிடிச்சுடலாம்..


4.  ஏண்டா, நீ கொடுத்த 500 ரூபா நோட்டுல காந்தித்தாத்தாவே இல்லையே?

ஹி ஹி அவசரத்துல என் தாத்தா ஃபோட்டோவை பிரிண்ட் பண்ணீட்டேன்..


5. யோவ்.. நான் புதுசா? பழசா?ங்கற  ஆராய்ச்சி இப்போ ரொம்ப முக்கியமா?


6. யோவ், நீ கறுப்பு.. உன் பொண்ணு சிவப்பு... எனி ஃபேமிலி சீக்ரெட்?

 போடா.. நீ கூட கறுப்பு, உங்கக்கா சிவப்பு நான் ஏதாவது கேட்டேனா?


7. என்னடி வேணும் உனக்கு?

 நீ தான்


 எஸ்னு சொன்னா கிஸ் வரை போயிடுவே.. கிளம்பு காத்து வரட்டும்


8.  யோவ்.. என்னைப்பத்தி உனக்குத்தெரியாது.. என் வலை தனி வலை ..






9.  உன் ஆள் வர்றாடா..

 ஏழரை வருதுன்னு சொல்லு..

 என்னடா சொன்னே?

 ஸ்பேனர் சைஸ் சொன்னேன்க்கா..


10. உங்க பேர் அனுவா?

 ஏன்?

 காபி வித் அனு மாதிரி.. ஹி ஹி


11. காலைல கொடுத்த காபி செம அதே மாதிரி குடுங்க..

 அதே மாதிரி கொடுத்தாச்சு..

 எப்படி?

 அது ஜெராக்ஸ் காப்பி ஆஃப் த காப்பி


12.  மேடம், அவனோட ரைட் ஹேண்ட், லெஃப்ட் ஹேண்ட் எல்லாம்  நான் தான்.. எதா இருந்தாலும் என் கிட்டே சொல்லுங்க..


ஏன் அவன் ஹேண்டி கேப்டா?


13. ஏண்டா லூசு.. பர்த்டேக்கு பொக்கே தராம புரோட்டாவா தருவாங்க ?


14. குழந்தைங்க அழுதுட்டே பிறக்கறது சிரிச்சுட்டே  வாழத்தான்


15. ஆம்பளைங்களை சந்தோஷப்படுத்தறதே  நல்ல பெண்ணுக்கு அழகு..


16.  ஆம்பளைங்க கிட்டே எப்படி வேணாலும் பேசிக்கோ, ஆனா பொம்பளைங்க கிட்டே மட்டும் ரொமாண்டிக்கா பேசு..


17. நான் தான் ஒத்தைல இருக்கேன்னு பார்த்தா  எனக்கு வந்திருக்கற  தலைவலியும் ஒத்தையா தான் இருக்கு ..


18.  என்னங்க.. நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்களுக்கு தலைவலி தைலம் தடவவா? ரிலீஃபா இருக்கும்


 என் வாழ்க்கைல  இனி ரிலீஃபும் இல்லை, ரீ லைஃபும் இல்லை








எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - அஜித் பெயின் ( தலவலி)










http://www.nakkheeran.in/AllImages/Gallerys/22221_1.jpg


Saturday, June 02, 2012

தடையறத்தாக்க - பர பர ஆக்‌ஷன் வித் ஓவர் வயலன்ஸ் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK3T3ZT7NpoMg6zVjzdKysMaTYdQxeV_2rc5TTWZkiQ5ueK4Vc5LA1eewD4zws7YEsXFmS61fvvaTrNPYHp8nihbpKb_B_O4rOV2CjxF5kw1ZPxnRbsXsTKW9zAqLM5eEaIF53EL4xTA4/s640/thadaiyara-thaakka-latest-wallpapers-and-posters-1.jpg 

உதயம்,சத்யா வரிசைல ரொம்ப நாளுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கும் ஆக்‌ஷன் படம் தான் இது. அருண்க்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால மென்மையான மனம் கொண்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படத்தை பார்க்க முடியாத அளவு அதிக பட்ச வன்முறைக்காட்சிகளும், அந்த வன்முறைக்காகவே ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குன படம் என்ற எச்சரிக்கையோடு...... 


அண்ணன் , தம்பி 2 பேரு வில்லன்க..இவங்க பூர்வீகக்கதையே கொடூரம்,அம்மா நடத்தைல சந்தேகப்பட்டு அப்பாவே அம்மிக்கல்லால கொலை செய்ய மகனே அப்பாவை கொலை செய்யறார். அப்படி சின்ன வயசுலயே ரத்தம் பார்த்தவங்க பெரிய ஆள் ஆனா காந்தி கொள்கையா வளர்ப்பாங்க..? தாதா கம் ரவுடிங்க ஆகறாங்க.. 

இந்தியாவுலயே பெரிய கோடீஸ்வரரோட பெண்ணை கிட்நாப் பண்ணி பணம் பறிக்க செய்யும் முயற்சில அண்ணன் அந்த பெண்ணை ரேப் பண்ணிடறான்..அப்போ தம்பியோட அட்வைஸ் “அண்ணே, போதும் அவளை கொன்னுடலாம்”.. அண்ணனோட பதில்..”ஒரு டைம் பத்தாது, இவளை ஒரு பங்களாவுல வெச்சிருந்து அப்பப்ப யூஸ் பண்ணிக்கறேன்.. 


 இப்போ ஹீரோ.. அறிமுகம்.. அவர் தன் லவ்வரோட ரொமான்டிக்கா  இருந்தது பத்தாதுன்னு தன் ஏரியா லேடிக்கு ஒரு கந்து வட்டி தகறாருல உதவறாரு.. வில்லன் குரூப்க்கும் அவருக்கும் ஆகலை.. 1008 விஷால், விஜய் படங்கள்ல பார்த்த மாதிரி  தனி ஆளா 67 பேரை அடிக்கறாரு.. 



http://andhramasala.in/data/media/166/thadaiyara-thaakka-movie-stills-9.jpg



ஆரம்பத்துல அண்ணன்கார வில்லன் ஒரு ஃபிகரை ரேப்புனானே அவன்  யாரோலோ படு பயங்கரமா தாக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல இருக்கான், தம்பிக்காரன் ஹீரோ மேல டவுட் பட்டு சேஸ் பண்றான். பரபரப்பான ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்ல  உலகத்துக்கே 3 வது ரீலில் தெரிஞ்ச சஸ்பென்சான கொலையை செஞ்சது ரேப் செய்யப்பட்ட ஃபிகர் தான் என்பது க்ளைமாக்ஸ்ல இயக்குநர் நமக்கு சொல்றார்..  அவ்ளவ் தான் கதை. 


ஆரண்ய காண்டம்க்குப்பிறகு ஆண்களால் அதிகம் ரசிக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் கொடுத்தத்தற்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் சூப்பர் ஹிட்டே கொடுக்காத  அருண்விஜய்க்கு இது நிச்சயம் ஒரு  ஹிட் படம் ஆக்கிய இயக்குநருக்கு வாழ்த்துகள். ( பாண்டவர் பூமி நல்ல படம் தான் ஆனால் வசூல் ரீதியா பெரிய அளவில் ஹிட் இல்லை)


ஹீரோ அருண் விஜய்க்கு ஆகிருதியான  உடம்பு என்பதாலும், அவர் முகமே இறுகிய நிலையில் இருப்பதாலும் ரொம்ப  ஈசியா கேரக்டர்;ல  ஃபிட் ஆகிடறார்.. ரொமான்ஸ், ஆக்‌ஷன், ஃபைட் , சேசிங்க் என படம் பூரா இவருக்கு வேலை அதிகம்.. நிறைவான நடிப்பு.. வெல்டன் அருண்..


ஹீரோயின் மம்தா மோஹன் தாஸ். பொட்டு வைக்காத ஃபிகர்ல ஒருவர். இந்தியாவுல பிறந்த பெண் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா ஆனாலும் நெற்றில ஒரு குங்குமப்பொட்டு வெச்சாத்தான் மங்களகரமா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து என்பதால் அதை விடுங்க.. ,மற்றபடி பாப்பாவுக்கு கொடுக்கப்பட்ட கவர்ச்சி காட்டும் பணியில் இயக்குநர் சொன்னபடி செய்து காஆஆட்டி இருக்கிறார்.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் காட்சி ரீதியாகவோ, வசன ரீதியாகவோ கிளு கிளு நிச்சயம்.. ( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா./)

ரேப் செய்யப்பட்ட பெண்ணாக வரும் ரகுல் ப்ரீத்தியும் பொட்டு வைக்காத ஃபிகர் தான், ஆனா அவருக்கு அதிகம் காட்சிகள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் இருட்டாவே இருப்பதாலும் அவர் பொட்டு வெச்சா என்ன? வைக்காட்டி என்ன என்ற எண்ணமே ஏற்படுது.. 

படத்தில் காமெடி மருந்துக்குக்கூட இல்லை. சீட்டின் நுனியில் அமர வைக்கும் அதிரடிகள்.  இருப்பதால் அது தேவையும் இல்லை




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbgbi59DYkcs9EA9dD6OH7E3_Qi4Sx1Bek4VDxKxmIa9WhSXexsYqGO8FwD0TglOqwmTfWUEK5K8LUQ4PfvanBcBm6M2MNH_CIFHaFagqNli4blYNGgS6WLX8McXLGoRj0F6ywCh1DjT0/s1600/Thadaiyara+Thaakka+Movie+Stills+Mycineworld+Com+(7).jpg


இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்


1. ஹீரோ, ஹீரோயின்  2 பேரும் ஹோட்டல்ல சாப்பிட வர்றாங்க.. ஹீரோ ஆர்டர் பண்ணிட்டு ஹீரோயின் கிட்டே பாத்ரூம்  போறேன்னு சொல்லிட்டு பாத்ரூம் வந்து அங்கே இருந்து  ஜம்ப் பண்ணி பின்பக்கம் வந்து முகத்தை மறைச்சு வில்லன் ஆள்ங்களை அடிச்சு துவம்சம் பண்ணி பின் நல்ல பிள்ளை மாதிரி ஹீரோயின் கூட உக்காந்து பேசுவது செம சீன்.. தீனா படத்தில் தல ஆக்‌ஷன் நினைவு படுத்துத்து


2. ஹீரோயினை அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக காட்டவோ, அல்லது வித்தியாசமான பெண்ணாக காட்டவோ இயக்குநர் அவரை வெட்கத்தை கேட்டால் கவர்ச்சியைத்தருவேன் என்று சொல்வது மாதிரி கேரக்டராக பயன்படுத்திட்டார்.. ஹீரோ படம் பூரா கம்முன்னு இருந்தாலும் ஹீரோயின் அப்பப்ப ஹீரோவை கில்மாக்கு  தூண்டி விட்டுட்டே இருப்பது புதுசு.. சொகுசு ரவுசு.. 


3. ஹீரோயினுக்கு ஹீரோ அழகிய கலர் கலரான பட்டர்ஃபிளை டிசைடு பாண்ட்டீஸ் கிஃப்ட் பார்சல் வாங்கித்தருவதும், ஊடலான பொழுதுகளில் ஃபோன் பண்ணி இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃபிளை எனக்கேட்டு கிளுகிளுக்க வைப்பதும் செம. ( காதலிக்கு ரோஸ், வாட்ச், கர்ச்சீஃப் வாங்கித்தர்ற காலம் மலை ஏறிப்போச்சுங்கோவ்)


4. காதலிக்கு முன் ஃபிரண்ட்சை விட்டுத்தராத ஹீரோவின் குணமும், அதைக்கண்டும் காணாமல் இருப்பது போன்ற ஹீரோயினின் அனுசரிப்புத்தனமும், அண்டர்ஸ்டேண்டிங்கும் கவிதை.. அது சம்பந்தமான காட்சிகளில் இயக்குநரின் தொடுகை.. ( அதான்பா டைரக்‌ஷன் டச்)


5. பல காட்சிகளில் விறுவிறுப்பான பதை பதைப்பு .. டெம்போ கூட்டுவதில் இயக்குநர் கை தேர்ந்தவரா இருக்கார்.. 


6. பூந்த,மல்லி புஷ்ப வல்லி டப்பாங்குத்து பாட்டு செம கலக்கல் டேன்ஸ் 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjghg8mqWyqcsOSvCbrub3KI6gJEJIZJpGBfQ3bU_2c12Dzj28mbr6JeVjUffZkY03IrSXiqSOXYofcVFnnXYws3s1AArOm5kiz2csi_CKCxW9SzoZUuwxx2aDBBouPTFKL66ZCxtkYtfc/s1600/Mamta+Mohandas+In+Thadaiyara+Thaakka+Stills+Mycineworld+Com+%252815%2529.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்



1. வில்லன்க தண்ணி அடிக்கற சீன்ல லாங்க் ஷாட் யூஸ் பண்ணக்கூடாதா? க்ளோசப்ல சரக்கை காட்றதும், மிக்சிங்கை விலாவாரியா காட்றதும் உவ்வே.. 


2. படத்துல எதுக்கு அதிக பட்ச இருட்டும், வலிய திணிக்கப்பட்ட மணிரத்னம் டைப் உள்வாங்கும் வசனங்களும்,.. சராசரி ரசிகனுக்கு புரியாது ( அந்த சராசரி ரசிகன் நான் தான் )


3. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை, அம்மா மார்க்கெட் போயிருக்காங்க.. ஹீரோயின் ஹால், வாசல் கதவை பெப்பெரப்பேன்னு திறந்து போட்டுட்டு பாத்ரூம்ல குளிக்குது./. எந்த ஊர்ல அப்படி குளிக்கறாங்க? ( ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்கறோம் ஏட்டய்யா )ஹீரோ நேரா உள்ளே வந்துடறாரு
( காட்சி கிளுகிளுப்பா இருந்தாலும் தமிழன் லாஜிக் பார்ப்பான் ஹி ஹி )


4. ஹீரோ 2 சீன்ல ஹோட்டல்ல ஒரு இங்க்லீஷ் ஃபார்ம் ஃபில்லப் பண்றாரு.. அவர் சாஃப்ட் வேர் கம்பெனி  டீலிங்க் எல்லாம் பண்றாரு. அப்படிப்பட்டவர்க்கு சாதாரண இங்க்லீஷ் வார்த்தையான சாரி (SORRY) என்பதற்குக்கூட ஸ்பெல்லிங்க் தெரியாதா? ஒரு சீன்ல தன் ஃபிரண்ட்ஸ் 5 பேர்ட்ட சாரிக்கு ஸ்பெல்லிங்க் என்ன?னு கேனத்தனமா கேட்கறார். அந்த லூசுங்களும் தெரியாதுன்னு சொல்லுது.. ஹய்யோ அய்யோ ( காமெடி சீன்னு நினச்சுட்டார் போல )


5. இடது கைப்பழக்கம் உள்ள ஹீரோ படத்துல பல காட்சிகளில் அதை மெயிண்டெயின் பண்றார்.. அவர் வாட்ச் கட்டறது கூட வலது கைல தான். ஆனா ஒரு சீன்ல அதாவது படம் போட்ட 57 வது நிமிஷத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன்ல , அப்புறம் ஒரு ஃபைட் சீன்ல  எல்லாரையும் போல இடது கைல தான் கட்டி இருக்கார்



http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Thadaiyara%20Thaakka%20Movie%20Stills/Thadaiyara_Thaakka_Movie_Stills17.jpg


6. வில்லன்க ஆள்ங்க ஒரு பாருக்கு வர்றாங்க, அங்கே ஒருத்தனை அடையாளம் காட்டனும்.. அதோ அந்த தாடி வெச்சவன் தான்னு சொன்னா வேலை முடிஞ்சது.. அவன் ஏன் கை நீட்டி காட்டிக்கொடுக்கனும்? அவன் பார்த்தா எஸ் ஆக மாட்டானா? 


7. ஒரு கிரிட்டிகலான சிச்சுவேஷன், ஹீரோ ஆட்டோல ஹீரோயின் கூட மிட் நைட்ல போறார்.. அவனுங்க வில்லன்க இருக்கற இடத்துல ஆட்டோவை ஓட்டி ஒரு சந்துல ஆட்டோவை நிறுத்தி ஓடுறாங்க.. இப்போ 24 பேர் வர்றாங்க .. ஆல்ரெடி ஹீரோ ஃபைட் எல்லாம் போட்டு வீரன்னு நிரூபிச்சாச்சு, இப்போ கூட காதலி. இந்த டைம்ல அவர் எவ்ளவ் முன் ஜாக்கிரதையா , வேகமா ஜாக்கிசான் மாதிரி சுறுசுறுப்பா ஃபைட் போடனும்? அதை விட்டுட்டு வில்லன் அடியாளுங்க கிட்டே வந்து 12 தடவை அடிச்சு பின் எம் ஜி ஆர் மாதிரி உதட்டுல ரத்தம் பார்த்த பின் ஃபைட் போடுவது ஓவர்


8. ஒரு சீன்ல ஹீரோ, ஹீரோயின் கார்னர் பண்ணப்படறாங்க, வில்லன் ஆளுங்க 64 பேர் இருக்காங்க , எல்லாரும் அரிவாளோட , தனி ஆளா ஹீரோ எந்த பாதிப்பும் இல்லாம ஃபைட் போட்டு ஜெயிக்கிறார், ஓக்கே ஹீரோயிஷம் தான். ஆனா வில்லன் ஆளூங்க அவ்ளவ் தத்தியா? ஹீரோயின் தேமேன்னு நிக்குது. 64 பேர்ல 4 பேரு ஹீரோயினை பணயப்பொண்ணா பிடிச்சா ஹீரோவை அடக்கலாமே? ரமணா டயலாக் மாதிரி இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் பாலிஸி.. அதை ஏன் யாரும் ட்ரை பண்ணலை?


9. கொலை செய்ய உபயோகப்படுத்துன கிரிக்கெட் பேட்டை  ஓடும் காரில் பார்க்கும் அந்த பெண் சாதாரணமா ஜன்னல் வழியா வெளில வீசினா மேட்டர் ஓவர்.. அவர் ஏன் மெனக்கெட்டு கார் பேனட்டுக்குள்ள வைக்கனும்? ஹீரோவை மாட்டி விடனும்கற எண்ணம் எல்லாம் இல்லை. ஏன் ரிஸ்க் எடுக்கறார்?



10. க்ளைமாக்ஸ்ல எல்லாம் சுபம்கற வேளைல அந்த பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குது?  வில்லனை கொலை செய்யும் துணிவு உள்ள பெண், கோடீஸ்வரி  ஏன் அந்த முடிவை எடுக்கனும்? கதைக்கு அந்த முடிவு எந்த அளவில் யூஸ்?



http://3.bp.blogspot.com/_0vmsnzIJ81w/SwJBqbe9gpI/AAAAAAAADhE/rsos0mnOf7g/s1600/bodies21.jpg


மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை 


1. சார்.. ஓப்பனா சொல்றேன், எனக்கு சுத்தி வளைச்சுப்பேசத்தெரியாது,உங்க பொண்ணை லவ் பண்றேன்,ஓக்கேன்னா சொல்லுங்க, இல்லைன்னா வேற பெண்ணை நான் மேரேஜ் பண்ணிக்கறேன், ஐ ஆம் பிராக்டிகல்


2.  எல்லாருக்கும் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன்..


 ரொம்ப தாங்க்ஸ் டா..


 ஆனா செலவு உன்னுது



3. அவன் ஒரு பொம்பளையை வெச்சிருக்கானாமே? நீ அவளை பார்த்திருக்கியா?


யா யா, இந்த ஏரியாவுலயே அப்படி ஒரு ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது


4. நல்ல ஜோசியரா பார்த்து ஜாதகம் ரெடி பண்ணுடா, அப்பா கேட்கறார்


நாம பண்றதே ஃபிராடுத்தனம்.. இதுல நல்ல ஜோசியர் வேற வேணுமாக்கும்?


5. நான் பாத்ரூம்ல இருந்து வெளில வந்து அரைகுறையா நிக்கறேன், அவன் என்னை சுத்தமா கண்டுக்கவே இல்லைடி.. நான் என்ன அவ்லவ் சப்பை ஃபிகரா?நம்ம ஊரு பசங்க சுத்த சடையனுங்க டி. அவ்ளவ் கிளுகிளுப்பான போஸ்ல ஆலை பார்த்தும் ஏதும் தோண மாட்டேங்குதே ?

 ஓ, உன் பிரச்சனை  இப்போ புரிஞ்சுடுச்சு, அவன் உன்னை சீன் பார்த்தது கூட தேவலை, ஆனா அவன் உன்னை ஏதும் செய்யலை.. அதானே உன் ஆதங்கம்?



6. டியர், இந்த ஊர்லயே அவ மாதிரி ஃபிகர் யாரும் இல்லைனு பேசிக்கறாங்க, ஆனா அவளை பார்க்கவே முடியறதில்லை, எங்கே அவ வெளில வந்தாத்தானே?

அப்போ நீ ட்ரை பண்ணி இருக்கே?


7. சரி.. லட்டு எப்படி?

 உன்னை விட டேஸ்ட் கம்மிதான்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsqdb3nAdDeiHetCCgE9JcTewTXxAAUSez8BRdySjyKzwOgZMt8uAhzBXWGcszy8ORRz8EnPEJBmg2RslQp4VeltOvOQfIXtnevtFZEviSTu7tgjPKM8kqm3DMv76AW3_FIOjvJPXJDpA/s1600/Thadaiyara+Thaakka+Movie+First+Look+Mycineworld+Com+(3).jpg

8. இன்னைக்கு பச்சைக்கலர் பட்டர் ஃபிளைடா..

 வாட்? புரியலை?

 மண்டு, நீ கிஃப்டா குடுத்தியே பாண்ட்டீஸ்..





9. என்னடா அரை மணீ நேரமா அந்த பங்களாவை வாட்ச் பண்ணிட்டு இருக்கோம். அவ வெளில வந்த பாட்டைக்காணோம்?

அட..ச்சே இவ வேலைக்காரிடா..

 இவ கூட 10 வருஷம் முன்னே  செம ஃபிகரா நல்லா தான் இருந்திருப்பா..


10. டேய்.. இந்த லட்டை எந்தகக்டைல வாங்குனே? கேவலமா இருக்கு.. லாலா கடைல வாங்கி இருக்கலாம்.

 ஹி ஹி அடப்பாவி, என் ஆள் செஞ்சதுடா..

 பொய் சொல்லாத.. ஏதோ மட்டமான கடைல வாங்கி இருப்பே..


11. அவ அப்பன் முகம் மாதிரி இருக்கு.. அவ செஞ்ச லட்டும்

 நான் என்ன இல்லைன்னா சொன்னேன்.. அவ இருக்கறப்ப அப்படி சொல்லலாமா?

 சுத்தம் , கண்ணா கொஞ்சம் திருபிப்பாரு, உன் ஆள் நிக்கறா


12. ஸாரிக்கு உனக்கு ஸ்பெல்லிங்க் தெரியுமா?

 சாரி தெரியாது


13. பாய் ஃபிரண்ட்ஸ் கூட நாம ஃபைட் போட்டா நாமா வலியனா போய் பேசக்கூடாது, கெத்து போயிடும்..


14. டேய், இங்கே பாரு, நாம 2 பேரும் பெட்ரூம்ல இருக்கோம், அம்மா கிச்சன்ல இட்லி ஊத்தறாங்க, அவங்க இங்கே வர 20 நிமிஷம் ஆகும், வேணூம்னா என்னை யூஸ் பண்ணிக்கோ, எனக்குத்தேவை இல்லை.. ஹி ஹி உனக்கு வேணும்னா......


15. உன் ஃபிரண்ட் எங்கே?ன்னு சொல்லிடு.. இல்ல.. உன்னை ஒரு பொம்பள கூட யூஸ் பண்ண முடியாதபடி பண்ணிடுவோம்..

 ஆல்ரெடி நான் அப்படித்தாங்க இருக்கேன் ஹி ஹி 



6.


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று 




http://masscinema.in/wp-content/gallery/thadaiyara-thaakka-movie-stills/thadaiyara-thaakka-movie-stills-43.jpg


 சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் ரசிகர்கள், ஆண்கள், த்ரில்லர் பிரியர்கள் பார்க்கலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மாணவ மாணவிகள், குழந்தைகள் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகள் அதிகம் என்பதால் தவிர்க்கவும்

 ஈரோடு தேவி அபிராமி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீநிவசா என 3 தியேட்டரில் ஓடுது..

50 நாள் கேரண்டி..  ஏ , பி, சி என எல்லா செண்ட்டர்களிலும் வசூலை அள்ளிடும். 

 நான் தேவி அபிராமில படம் பார்த்தேன்





http://media.onsugar.com/files/2011/02/08/3/1440/14400286/f4/mamta-01.jpg


டிஸ்கி -

மனம் கொத்திப்பறவை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/06/blog-post_01.html

Friday, May 25, 2012

MEN IN BLACK - 3 - ஹாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://4.bp.blogspot.com/-AvmhTlJAvLo/T1cgK81xLhI/AAAAAAAAMUw/m_lv-4KyrZs/s1600/men_in_black_3+(+iii+).jpg 

வில் ஸ்மித் எல்லாருக்கும் பிடிச்ச ஆக்‌ஷன் ஹீரோ.. லொட ,லொடன்னு காமெடியா அவர் பேசிட்டே பண்ற அதிரடி ஆக்‌ஷன்கள் அசத்த வைக்கும்.. மென் இன் பிளாக் ஆல்ரெடி 2 பார்ட்ல வந்த அதே டைப் ஆக்‌ஷன் கதை தான் இதுவும்.. 


போரஸ் அப்டினு ஒரு வில்லன் .. நம்ம ராகுல் மாதிரி.. அவனை பிடிச்சு ஜெயில்ல போட்டுடறாங்க .. 40 வருசமா அவன் ஜெயில்ல இருக்கான். அப்போ எல்லாம் எதும் செய்யலை.. தப்பிக்க முயற்சி பண்ணலை.. 40 வருஷம் போய் காலம் போன காலத்துல தப்பிச்சு உலகத்தை அழிக்க கிளம்பறான்.. அவன் ஒரு ஏலியன்ஸ் .. அதாவது வேற்றுக்கிரக வாசி..

 சாதா தமிழ்ப்படம்னா ஹீரோ என்ன பண்ணுவாரு அவனை துரத்தி உலகத்தை அழிவில் இருந்து காப்பாத்துவாரு/ ஆனா இது ஹாலிவுட் படம்.. அதனால கொஞ்சம் ரிச்சா காதுல பூ சுத்தனும்..( அந்த ரிச்சா இல்லை.. )அதனால அவங்க என்ன பண்றாங்கன்னா  கடந்த காலத்துல போய் அவனை அழிக்க ட்ரை பண்றாங்க.. 

 அதாவது நிகழ்காலத்துல அவனை தேடி கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கறதை விட கடந்த காலத்துல போனா ஈசியா கொன்னுடலாம்.. அதுவும் இல்லாம இன்னொரு சாவு பற்றியும் துப்பு கண்டு பிடிக்க வேண்டி இருக்கு,...  ஒரே சைட்ல 2 ஃபிகரு.. அதாவது ஒரே கல்லுல 2 மாங்கா.. 

 ஏஜெண்ட் ஜே, ஏஜெண்ட் கே  2 பேரும்  எப்படி இணைஞ்சு இந்த வேலையை செய்யறாங்க என்பதை சரியா 108 நிமிஷத்துல ஜாலியா , விறு விறுப்பா சொல்லி இருக்காங்க .. 


வில் ஸ்மித் எப்பவும் போல சுறுசுறு நடிப்பு துறு துறு பேச்சு.. அழகிய டிரஸ்சிங்க் சென்ஸ்.. ஜைஜாண்டிக் பாடி லாங்குவேஜ்.. குட் பர்ஃபாமென்ஸ்.. கீப் இட் அப்..



படத்துல ஹீரோயின் இல்லாதது பெரிய குறை ( படத்துக்கோ, கதைக்கோ அல்ல என்னை மாதிரி யூத்ங்களுக்கு ஹி ஹி )

Tommy Lee Jones இன்னொரு ஏஜெண்ட்டா நடிச்சிருக்காரு.. அவர் ஆள் முகம் பாறை மாதிரி எந்த உணர்ச்சியையும் காட்டாத சுபாவம் செம கலக்கல் .



http://www.redcarpetdivas.com/images/nicole-scherzinger/nicole-scherzinger-men-in-black-3-premiere.jpg.


 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இவ ஆபத்தானவ இல்லை, இவ அழகுல மயங்குனாத்தான் ஆபத்து.. 


2.  வெட்டியாத்தானே நிக்கறே.. இந்த கேக்கை வெட்டேன்?


3.. நீ ஜெயிச்சுடுவேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? 

 வெற்றிக்கு தோல்வியே கிடையாது.. 


4. ஃபிளைட்ல போறப்ப செல் ஃபோனை எல்லாரும் ஆஃப் பண்ணிடுங்க.. அப்படி பண்ணலைன்னா செல் ஃபோன் ஆன் ல இருக்கும், ஆனா நீங்க எல்லாம் ஆஃப் ஆகிடுவீங்க..


5. என்னோட இரங்கல் கூட்டத்துலயாவது ஒழுங்கா பேசுவியா?

செத்தாலும் அப்படி பேச மாட்டேன்



6. எனக்கு கடந்த கால கருவி வேணும்.. 

 எதுக்கு?

 கடந்த காலத்துல என் கையை வெட்டுனவனை பார்த்து அவன் என் கையை வெட்டும் முன்னே அவன் தலையை வெட்டனும்.. 


7. என்னை அடிக்கடி தெளீவா குழப்பறதே உன் வேலையாப்போச்சு.. 

8.  டேய் கண்ணா .. 40 வருஷ ஜெயில் தண்டனை எப்படி இருந்தது?


நீ அனுபவிக்கப்போறதை விட சுமாரா தான் இருந்தது.. 


9.  பல வருஷங்களூக்கு முன்பே அவனை ஜெயில்ல போட்டது தப்போன்னு இப்போத்தோணுது
\
 ஏன்? 

 அவனை கொன்னிருக்கனும்.. 


10.  ஏய்யா,.. அவனை யூத்தான என்னாலயே சமாளிக்க முடியலையே.. வயசான நீ எப்படி சமாளிக்கப்போறே?


11.  நீ ஓவரா வாய் பேசறே.. உன்னை 2 வாரம் சஸ்பெண்ட் பண்றேன்

 போய்யா லூசு


4  வாரம்


12. மம்மி.. அந்த அங்க்கிள் என்கிட்டே இருந்து சாக்லெட் ஃபேவரை பிடுங்கிட்டாரு

 ம் ம் 

 அது கூட தேவலை, ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலை.. 


13. நீங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை.. 5 அடி தள்ளியே நில்லுங்க.. குரல் வளையை  கடிச்சுடப்போறேன்


14.  ஏஜெண்ட் கே எப்படி இருப்பாரு?

 அவர் ரொம்ப அழகா இருப்பாரு.. ஆனா அவர் சிரிச்சா ரொம்ப கேவலமா இருக்கும்


15. எதுக்காக இப்போ சிரிச்சே?

 ஜோக் அடிச்சா சிரிப்பேன்.. இப்போ நீ சொன்னது ஜோக் தானே? 



http://www.etunlimited.com/wp-content/uploads/2012/04/MIB-3-WALLPAPER-3.jpg

16.  காஃபி ஏன் மண் மாதிரி இருக்கு?

 ஏன்னா காஃபிக்கொட்டை மண்ல இருந்துதானே விளையுது?



17. ஸாரி சார்.. சம்பளம் அதிகமா வாங்கற  ஹை கிளாஸ் ஆஃபீசர்ங்க கிட்டே தான் அதெல்லாம் சொல்லுவோம்.. உங்க கிட்டே சொல்ல முடியாது.. நீங்க லோயர் கிரேடு 

 அப்போ என் சம்பளத்தை உயர்த்திடுங்க ஹி ஹி


18. என்னை மாதிரி கறுப்பா இருக்கறவங்க  கலரா கார் ஓட்டிட்டு வந்தா அது திருட்டுக்காரா?


 ஏன் அப்படி சொல்றீங்க? இது திருட்டுக்கார் தான்.. 

 ஆனா அதுக்கும் என் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை



19. எதுக்காக என் கிட்டே கன்னை காட்டறீங்க? என் கிட்டே புல்லட்ஸ் ஏதும் ஸ்டாக் இல்லை.. 

 புல்லட் நீயே வெச்சுக்கோ,.,. காட்ட வர்லை மிரட்ட வந்திருக்கோம்


20. இந்த பொருள் சரியா வேலை செய்யுமா?ன்னு செக் பண்ணீயாச்சா?


 நீ உயிரோட இருந்தா சரியா வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம் ஹி ஹி 


21. எனக்கு பழசெல்லாம் மறந்துடுச்சு.. நான் இப்போ குழந்தை மாதிரி

 அதை எப்படி நாங்க நம்பறது?

 அப்பா.. நான் பூமில இருக்கேன்.. என்னை ஜாமீன்ல கூட்டிட்டு போங்க .. 


22.  இந்த கன்ஸ், வெப்பன்ஸ் எல்லாம் ஏது?

 தேர்க்கடைல ரிங்க் போட்டு மாட்னது ஜ்ஹி ஹி


23.  நான் எல்லா லேடீசையும் ஓ-ன்னு தான் கூப்பிடுவேன் 

 யோவ்1 


 டோண்ட் மிஸ்டேக்கன் மீ..  ஓக்கேவான்னு அர்த்தம்


24.  என்னமோ ஐ டெஸ்ட்னு கூட்டிட்டு வந்திருக்கீங்க ஆனா  இது பார்த்தா நியூராலாரிஸம் போல இருக்கே.. 

 உனக்கு பல உண்மைகள் தெரிஞ்சுருக்கு 



25.  உனக்கு என்ன வயசு? 

 29


 எது? இந்த 28க்க்குப்பிறகு வருமே அதுவா?

26. அவனுக்கு 5 பரிமாணம் இருக்கு..  இருந்த இடத்துல இருந்தே 5 வெவ்வேற வடிவம் எடுத்து அவன் நினைச்சதை சாதிக்க முடியும் 


27. எங்க தாத்தா அடிக்கடி என்ன சொல்லுவாருன்னா உன்னால ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியலைன்னா ஆறப்போடு.. போய் சாப்பிடு..  அப்புறமா அது பற்றி யோசின்னு.. 


28. கசப்பான உண்மை இனிப்பான பொய்யை விட பெஸ்ட்


29. மரணத்தை தடுக்கனும்னா இன்னொரு மரணத்தால தான் அது முடியும்..


30. லேடி - ஏஜெண்ட் கே எப்படி இருக்கீங்க? 



 யோவ்.. இந்த குசலம் விசாரிக்கறது, கடலை போடறது இதெல்லாம் போய்க்கிட்டே பேசலாமே?




http://im.in.com/media/download/wallpapers/2012/May/mib3_seoulpremiere18_1024x768_420x315.jpg


வில்லனோட ஆள் தலையை தனியா கட் பண்ணி பேஸ் பால் விளையாடும் சீன் தியேட்டரில் செம கிளாப்ஸ்.. 

 ஏஜெண்ட் கே, ஏஜெண்ட் ஜே, இன்னொருத்தர் 3 பேரும் பாலத்துல நின்னு பேசிட்டு இருக்கும்போது வில்லன் பைக்ல அசுர வேகத்துல வந்து அந்த இன்னொரு ஆளை அலேக்கா தூக்கி பைக்ல உக்கார வெச்சு கடத்துவது கலக்கல் ஆக்‌ஷன் 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங் ஷாட்ல வில்லன் தனக்கு உதவின லேடியை எதுக்கு சம்பந்தமே இல்லாம கொல்லனும்? இதுல “என்னை நம்புனது உன் தப்புன்னு பஞ்ச் டயலாக் வேற 

2. அபார சக்தி, அளப்பறிய மேஜிக் எல்லாம் தெரிஞ்ச அந்த வில்லன் 40 வருஷங்கள் ஏன் மன்மோகன் சிங்க் மாதிரி டம்மியா இருக்கனும்?

3. வில் ஸ்மித் காலக்கருவி\யோட 1969க்குப்போறாரு. க்ளைமாக்ஸ்ல ஏஜெண்ட்  கே கூட அந்த சின்னப்பையன் ( ஸ்மித்தின் சின்னப்பையன் வடிவம்) போறதை வேடிக்கை பார்த்துட்டே நிக்கறார்.. அவர் கைல காலக்கருவி இருக்கு அது 2012 உலகத்துக்கு ஒப்படைக்க வேணாமா? அதை ஏன் ஏஜெண்ட் கிட்டே அதை கொடுக்கலை?

 ஆர்ட் டைரக்‌ஷன், இசை, ஒளிப்பதிவு எல்லமே அசத்தல்..  பிரம்மாண்டம் காட்சிக்கு காட்சி.. 


சி.பி கமெண்ட் -  ஆக்‌ஷன் ரசிகர்கள், வில் ஸ்மித் ஃபேன்ஸ் அனைவரும் பார்க்கலாம், பெண்களும் பார்க்கற அளவு கண்ணியமான நெறியாள்கை தான்

 ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்

Saturday, February 04, 2012

செங்காத்து பூமியிலே- மதுரை உசிலம்பட்டி மண்வாசனை,இளையராஜா இசை ரசனை -சினிமா விமர்சனம்

http://www.desiboost.com/tamil/wp-content/uploads/2011/04/sengathu-bhoomiyile-audio-songs.jpg 

ஆண்களின் அவசர முடிவால் பெண்களுக்கு ஏற்படும் மாறாத வடுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.. ஆத்திரத்தில், கோபத்தில் , பழி வாங்கும் உணர்வில் ஆண் செய்யும் சில செயல்கள் அந்த நொடியில் சரியானதாகத்தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் காலம் பூராவும் உறுத்திக்கொண்டும், மனதை வருத்திக்கொண்டும் தான் இருக்கும்.. அந்த மாதிரி ஒரு குடும்பப்பகையின் ஆராத ரணம் தான் செங்காத்து பூமியிலே.. 

பாரதிராஜாவின் சீடரான ரத்னகுமார் மண்ணுக்குள் வைரம் படத்திலேயே கண் கலங்க வைத்தவர்.. இந்தப்படத்துக்கு கதைக்கு பெரிதாக மெனக்கெடவில்லை.. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே தோசையை திருப்பி போட்டா அது செங்காத்து பூமியிலே ... தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற "கிழக்குச் சீமை‌‌யிலே",விருது வாங்குன  "கருத்தம்மா", சுமாரா ஓடுன "கடல் பூக்கள்", ஃபிளாப் ஆன "தமிழ்ச்செல்வன்" போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் தான் இவர்.. 

படத்தோட கதை என்ன? பவன், செந்தில் 2 பேரும் மாமன் மச்சான்ஸ்.. இவர் தங்கச்சியை அவரும், அவர் தங்கச்சியை இவரும் லவ்விங்க்.. ஒரு அடிதடி தகராறுல கொலை கேஸ்ல  பவன் ஜெயிலுக்கு போயிடறாரு.. கொலையை பார்த்த சாட்சி செந்திலும், செந்திலோட அப்பாவும்.. பவனோட அப்பா கெஞ்சறாரு.. என் பையன் உசுரு உங்க கையில தான் இருக்கு.. பொய் சாட்சி சொல்லி காப்பாத்துங்கன்னு.. கேட்கலை.. உண்மை விளம்பிகளா இருக்காங்க.. கோர்ட்ல உண்மையை சொன்னதும் பவன் வீட்ல பிரச்சனை.. உன்னால தானே பையன் ஜெயில்ல இருக்கான், நீ ஏன் உசுரோட இருக்கே, நாண்டுக்கிட்டு சாக வேண்டியதுதானேன்னு சம்சாரம் திட்ட பவனோட அப்பா தூக்கு போட்டு சாகறாரு.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh79kQLlijDP0BomOytw8gSuFh-LNNywgR_kNcoPVDx_dMeMRE4siBDn7IuYxFUs-w94YCUZiZSxnthyJGdOpC4tVw1PxzvovI_b1M81a2MplxmUxwAEd3jUHgwUUrJjmhwyEoGt33U1G4/s1600/Sengathu+Bhoomiyile+Stills+%252814%2529.jpg

அப்பாவோட இறுதி சடங்குல கலந்துக்க ஜெயில்ல இருந்து போலீஸ் பாதுகாப்புல வர்ற  பவன் தன் அப்பாவின் சாவுக்கு மறைமுகமான காரணமா இருந்த செந்திலோட அப்பாவை சதக்..ஆள் க்ளோஸ்.. ஜென்மப்பகை ஆகிடுது.. 2 லவ்வும் பணால்.. 

பல வெட்டு குத்து கொலைகளுக்குப்பிறகு காதல் ஜோடிகள் இணைஞ்சாங்களா? வீணா போனாங்களா? அப்படிங்கறதுதான் கதை..

பவன் நடிப்பு கன கச்சிதம்.. முறைப்பு, விரைப்பு,கோபம், வஞ்சம் என எல்லா உணர்வுகளையும் கண்களிலேயே காட்டி விடுகிறார்.. ஆனா எப்போ பாரு அவர் அருவா , ஆக்ரோஷம் காட்டிட்டே இருப்பது சலிப்பா இருக்கு.. 

மிர்ச்சி செந்தில் வாய்ப்பு கம்மி என்றாலும் வந்த வரை ஓக்கே.. இவர் காதல் காட்சியில் பரிமளிக்கிறார்..

பிரியங்கா மஞ்சள் கிழங்கையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் கலப்பினம் செய்து தயாரிக்கப்பட்ட கலப்பின கிழங்கு வகை மாதிரி தள தள என்று இருக்கிறார்.. ஆல்ரெடி வெய்யில் படத்தில் நடிச்சிருக்கார்.. இவர் தன் மாமனுடன் செய்யும்  குறும்புகள் ஓக்கே ரகம்.. 

சுனு லட்சுமி மாநிறமாக இருந்தாலும் களையான கிராமத்துமுகம்,.,. இவர்க்கு நல்ல எதிர்காலம் இருக்கு..  சோகமான காட்சியில் கூட ஜொலிக்கிறார்.. மேக்கப்பே இல்லாமல், சில இடங்களில் மிக சொற்ப ஒப்பனையில் அவர் பிரியங்காவை முந்துகிறார்.. 

சிங்கம்புலி சீரியஸ் ஆன கதையில் இளைப்பாற கொஞ்சம் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு.. அவர் வாய்ஸ் மாடுலேஷன் மாபெரும் பிளஸ் என்றாலும் அவர் லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது போர்..

பவனின் அப்பாவாக வரும் நடிகர் புதுமுகம் போல .. நீட் பர்ஃபார்மென்ஸ்.. அதே போல் செந்திலின் அப்பாவாக வருபவர் நிதானமான நடிப்பு, அதுவும் கோர்ட் சீன்ல் செம கலக்கல்  நடிப்பு.. 

படத்துக்கு பெரிய பிளஸ் இசை ஞாநி இளையராஜா..  படத்தோட ஓப்பனிங்க்ல வரும் ஓரம் போ ரீமிக்ஸ் செம ரகளை.. ஒரே பைக்கில் 2 காதல் ஜோடிகளும் ஊர் உலா போவது செம கிளு கிளு.. ( அவங்க போனா நமக்கு ஏன் கிளு கிளு? ஹி ஹி அவங்க போனா நாம போன மாதிரி ஹி ஹி )

சிக்கிக்குங்க..... பாட்டு செம மெலோடி.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு வந்த இசை ஞானி ஹிட்..  காத்திருப்பேன் காத்திருப்பேன் என் கண் ரெண்டும் உள்ள வரை க்கும் பாட்டு அழகான டூயட் பாடல்.. கிராமிய இசை..  க்ளைமாக்ஸ் சோகப்பாட்டான என் உசுரு என்னை விட்டுப்போனாலும் உன்னை விட்டு போகாது உருக்கம்.. தியேட்டரில் யாரும் கிளம்பிப்போகாமல் பார்க்க வைக்கிறது.. கிராமத்து திருவிழாவில் பின்னணி இசையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.. வழக்கமாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் பண்ணும் இசை ஞாநி இதில் பாடல்களுக்கான இசையில் அதீத கவனம் செலுத்தி உழைத்திருப்பது தெரிகிறது

http://mimg.sulekha.com/tamil/sengathu-bhoomiyile/stills/sengathu-bhoomiyile-movie-photos-0115.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  நாயகிகள் தேர்வு கன கச்சிதம்.. இருவரும் படத்துக்கு முக்கிய பிளஸ்..

2. ஒளிப்பதிவு, இசை படத்துக்கு மிகப்பெரிய பிளஸ். சூர்யோதய, அஸ்தமன காட்சிகள் கிராமத்துக்கொள்ளை அழகு.. 

3. இரண்டு நாயகிகள் இருந்தும் மிக கண்ணியமாக காதல் காட்சிகள் வைத்தது.. 

4. அப்பா கேரக்டரில் வரும் இருவரும் மிக இயல்பான நடிப்பை தந்தது.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzoBISdrbDrm_Qz2rCBrp5RofifnCaixwQe38Q3i27UidtTd9xp0eiPIphZmriYcuZtHjNF_3tjUpeHZT4wTuuRPGUY8rQHBxLY-kzI8wmvy1MO09uAgw6lVMYWHj3n8MaOSh0oJiUPwF1/s1600/sengathu-bhoomiyile+_25_.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தில் எதற்கு இத்தனை கேரக்டர்கள்? யார்  யார் யாரோட சொந்தம்? என்று கண்டு பிடித்து புரியறதுக்குள் இடைவேளையே வந்துடுது.. 

2.  நகராட்சி கழிப்பறை வாசலில்  சேர் போட்டு அமர்ந்து வசூல் செய்யும்  ஒரு ஹீரோவின் அம்மா கேரக்டர் உடல் முழுக்க 70 பவுன் நகை போட்டு இருக்கே? ஒரு சாதாரண ஊர்ல ஒரு பொண்ணு அவ்ளவ் நகை போட்டுட்டு மேரேஜ்க்குதான் போவாங்க.. 

3. அதே பெண் வாசலில் அமர்ந்து வசூல் பண்ணி விடுகிறார்.. அடுத்த கட்சியில் அவர் கணவர் உள்ளே போய் ஸ்பாட் வசூல் பண்றார்.. போதாததுக்கு சிங்கம் புலி வேற உள்ளே போய்  வசூல் பண்றார்.. ஏன்?

4. இயற்கை உபாதைகள் கழிப்பதை, அந்த இடத்தை வைத்து காமெடி பண்ணத்தான் வேண்டுமா?

5. கிராமம் என்றாலே வன்முறை கொலை, வெட்டு, குத்து மட்டும்தானா? அதன் மறுபக்கம் ஏதும் இல்லையா?

6. பரோலில் வரும் கைதி உடன் காவலுக்கு 4 போலீஸ் பக்கத்துலயே இருக்காங்க.. தன் அப்பாவின் சடலத்துக்கு தீ வைத்து விட்டு ஒருத்தனை வெட்ட அரிவாள் எடுத்து பாய்வதை அந்த போலீஸ் பார்த்துக்கிட்டே இருக்கு.. அந்த போலீஸ்க்குப்பின்னால நிக்கற கிராமத்து ஆளுங்க பாய்ந்து வந்த பின் தான் போலீஸ் நகர்ந்து வர்றாங்க.. ஏன்?

http://4.bp.blogspot.com/-I2rr6_HezrE/TcAOYV5KeiI/AAAAAAAAWfg/zBLH71_0l9w/s640/sengathu-bhoomiyile+_44_.jpg


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் -  கிராமத்து கதை ரசிப்பவர்கள், இசைஞானி ரசிகர்கள், பெண்கள் பார்க்கலாம்.

ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்.

Thursday, November 24, 2011

The Shawshank Redemption - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://movietrailers2.com/wp-content/gallery/the-shawshank-redemption/shawshank-redemption-picture2.jpg

ஒரு புருஷன், ஒரு பொண்டாட்டி.. ஒரு கள்ளக்காதலன்.. உடனே கில்மாப்படமா?ன்னு யாரும் குதூகலப்படத்தேவை இல்லை.. ஓப்பனிங்க் சீன்லயே அந்த  கள்ளக்காதல் ஜோடி யாரோலோ சாகடிக்கப்படறா..  இந்த தத்தி போலீஸ்ங்க எப்பவுமே நல்லவனை. அப்பாவியைத்தானே அரெஸ்ட் பண்ணும்.. ? அந்தப்பொண்ணோட கணவனை அரெஸ்ட் பண்ணிடுது.. சந்தர்ப்பங்கள், சாட்சியங்கள் எல்லாமே அவனுக்கு எதிரா இருக்கு... அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிச்சு கோர்ட் தீர்ப்பு சொல்லிடுது..



ஹீரோ ஒரு பேங்க்ல ஒர்க் செஞ்சவர்.. நல்ல படிப்பு.. ஆனாலும் அவருக்கு நேரம் சரி இல்லை.. சம்சாரம் வழி தவறுது.. கொலைப்பழி  அவர் மேல விழுந்து செய்யாத தப்புக்கு தண்டனை.. இப்போ இவர் மகாநதி கமல் மாதிரி ஜெயில்ல என்னவெல்லாம் அவஸ்தைப்படறார்ங்கறதுதான் 70% படம்.. 1994 -ல் ரிலீஸ் ஆன படம் 2 மணிநேரம் 24 நிமிடங்கள் என நீளமான படமா இருந்தாலும் ஒரு சீன்ல கூட போர் அடிக்காத படம்..  படத்தோட திரைக்கதை, இயக்கம் எல்லாமே Frank Darabont தான்..

 Tim Robbins - Andy DufresneMorgan , Freeman - Ellis Boyd "Red" ReddingBob Gunton - Warden Samuel NortonWilliam ,  Sadler - HeywoodClancy  , Brown - Captain Byron Hadley

ஜெயில்ல ஹீரோ முதல் 2 வருஷங்கள் லாண்டரில வேலை செய்யறார்.. பிறகு தனது தொழில் அனுபவங்களின் காரணமாக ஜெயிலருக்கு ஃபைனான்சியல் அட்வைஸ் செய்கிறார்.. ஜெயிலில் உள்ள லைப்ரரியை விஸ்தீகர்க்க அரசாங்கத்துக்கு கடிதம் எழுதுகிறார் .. வாரா வாரம் நிதி வேண்டி மாநில அரசுக்கு அவர் எழுதும் கடிதத்துக்கு பலன் கிடைக்கிறது..

ஹீரோவின் ஆலோசனைப்படி ஜெயிலர் ஜெயில் கைதிகளை பப்ளிக் ஒர்க்ஸ்க்கு யூஸ் பண்ணிக்கறார்.. அதனால ஜெயில் கைதிகளுக்கு வெளி உலகத்தை பார்க்க ஒரு சந்தர்ப்பம்.. 

ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் மனைவியை கொன்றவன் அந்த ஜெயிலில் இருப்பதை கண்டு பிடிக்கிறான்.. அதை ஜெயில் அதிகாரியிடம் சாட்சியுடன் விளக்கும்போது அந்த சாட்சி மர்மமான முறையில் கொல்லப்படுகிறான்..  ஹீரோ ரிலீஸ் ஆவது பிடிக்காமல் செய்யப்படும் சதி.. ஹீரோ தப்பிக்க முடிவு செய்கிறான்.. எந்த தப்பும் செய்யாமல் 20 வருடங்கள் ஜெயிலில் சித்திரவதைகளை அனுபவித்து ஹீரோ ஜெயிலில் இருந்து தப்பி சுதந்திர வாழ்க்கையை அனுபவிக்கிறான்..

http://i2.listal.com/image/266791/600full-the-shawshank-redemption-screenshot.jpg

ரசித்த வசனங்கள்

1. வர்றவனுங்க எல்லாம் கேடிங்க.. ஆனா பாரு எல்லாரும் அப்பாவி மாதிரியே முகத்தை வெச்சுக்குவானுங்க..

2. நான் ரெண்டு விஷயம் நம்பறேன்.. 1. ஒழுக்கம் 2 . பைபிள்

3. மொத்த வாழ்க்கையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள்ள மாறிப்போறதை தாங்கிக்கவே முடியறதில்ல..

4. நான் நல்லவன் தான், ஆனா ஜட்ஜ் என்னை கெட்டவன்னு சொல்லிட்டார்..

5. என் பேரு ரெட்.. ஆனா நான் கறுப்பு.. டிஃப்ரண்ட்டான ஆளு..

6. இதை உங்க ஒயிஃப்க்கு கிஃப்ட்டா குடுங்க.. எனக்குதான் அந்த குடுப்பினை இல்லை..

7. நாங்க எல்லாம் சாப்பாட்டையே ஸ்ட்ரா போட்டு உறிஞ்சற ஆளுங்க..

8. தனிமை என்னை துரத்த ஆரம்பிச்சுது.. தனிமைதான் உலகின் பெரிய பழி வாங்கல்.. அதுவும் ஜெயில்ல தனிமைச்சிறை என்பது ரொம்ப கொடுமையானது.. 

9. நினைச்சதை உடனே செஞ்சு முடிக்கறவன் தான் மனுஷன்.. அதை தள்ளிப்போடறவன் அல்ல..

10. ஒருத்தன் உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் அவன் சோம்பேறியா இருக்க மாட்டான்..

http://www.listosaurusrex.com/wp-content/uploads/2008/01/stiff-breeze.PNG

11. நான் உருவாக்குன கற்பனை கதாபாத்திரத்துக்கு பர்த் சர்ட்டிஃபிகேட் , டிரைவிங்க் லைசன்ஸ் கூட  ரெடி..


12. வாழ்க்கைல தப்பு பண்ணாம யாராலயும் இருக்க முடியாது.. மாட்டிக்காம வேணா சிலர் இருக்கலாம்..



13. எதுக்காக நீ ஜெயிலுக்கு வந்தே?

வெளீல புழுக்கமா இருந்துச்சு.. அதான்.. கேக்கறான் பாரு கேள்வி..

14.  எதுக்காக இந்த பேப்பரை நீ எல்லாருக்கும் பாஸ் (PAUSE) பண்ணுனே?

ஹா ஹா.. நானா? எந்த பேப்பரையும் இதுவரை நான் பாஸ் (PASS) பண்ணுனதே இல்லையே..

15. செத்ததுக்குப்பிறகு 4 பேர் தூக்கிப்போட்டா என்ன? 40 பேர் தூக்கிப்போட்டா என்ன?

16. கனவு  காண , அதை நிறைவேத்த ஆண்டவன் நமக்கு 2 சான்ஸ் குடுத்திருக்கான்.. 1. எப்படி வாழனும்? 2 எப்படி சாகனும்?

17. மனசு ஒடிஞ்சவன் என்ன வேணாலும் செய்வான்.. தேவைப்பட்டா தற்கொலை கூட..

18.  நான் இன்னும் 500 கஜம் இந்த பாதாள சாக்கடையை  நீந்திக்கடக்கனும்.. மூச்சு விடாம..  5 ஃபுட் பால் கிரவுண்டுக்கு சமமான தூரம்.. கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர்..

19. திருந்தறதும், வருந்தறதும் ஒண்ணுதானே.. திருந்தறதுக்கு 1 மாசம் போதாதா? அட்லீஸ்ட் 2 மாசம்? எதுக்காக 40 வருஷம் தேவைப்பட்டுது? எனக்கு?

http://i2.listal.com/image/266798/600full-the-shawshank-redemption-screenshot.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. கிட்டத்தட்ட ரெண்டே முக்கால் மணி நேர படத்தில் ஒரே ஒரு சீன் தவிர பெண் கேரக்டர்களே இல்லாமல் செம இண்ட்ரஸ்ட்டாக ஒரு படம் கொடுத்ததற்காக பாராட்டலாம்..



2.  ஜெயிலில் இருந்து ஹீரோ தப்பிக்கும் சீனை  நிதானமாக காட்டியது.. பெரும்பாலும் ஹீரோ ஜெயிலில் வந்த உடன் அடுத்த நாளே தப்பி விடும் படங்களூக்கு இடையே 20 வருடங்கள் பிளான் பண்ணி ஸ்டெப் பை  ஸ்டெப்  திட்டம் போட்டு தப்பிப்பதாக காட்டியது..

3. ஹீரோ, நண்பர் ரெட்டாக வருபவர், ஜெயிலர் என பல தரப்பட்ட பாத்திரங்களின் இயற்கையான நடிப்பு..

4. எந்த வித செயற்கை ஒளியும் இன்றி அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு..

5. தேவையான இடங்களில் அமைதி.. தேவைப்படும் இடங்களில் மட்டும் ஒலிச்சேர்க்கை என பின்னணி இசையில் கவனம்..

http://i.telegraph.co.uk/multimedia/archive/01467/filmdone_1467999c.jpg

லாஜிக் மிஸ்டேக்ஸ் டன் பை டைரக்டர் 

1.  ஹீரோ  ஜெயில் செல்லுக்குள் ஒரு ஹாலிவுட் நடிகையின் வால் போஸ்டரை மாட்டி வைத்திருக்கிறார்.. சிறை ரூம் என்ன சலூன் கடையா? எப்படி நிர்வாகம் அதை அனுமதிக்கிறது?

2. ஒரு மனிதனால் முக்கால் கி மீ தூரம் பாதாள சாக்கடையில் மூச்சை நிறுத்தி நீந்த முடியுமா?

3. ஹீரோ தனது நண்பர் ரெட் அவர்களுக்கு ஒரு குறிப்பு பேப்பர் தருவதும் , அதை ஃபாலோ பண்ணி அவர் ஹீரோவை கண்டறிவதும் நம்பும்படி இல்லை


 சி.பி கமெண்ட் - பல அவார்டுகளை அள்ளிய இந்தப்படம் அனைவரும் காண வேண்டிய படம் டோண்ட் மிஸ் இட்.. ஃபேமிலியுடன் பார்க்கலாம்

Friday, September 30, 2011

வாகை சூடவா - மண்வாசனை,ஒளிப்பதிவு ஸ்பெஷல் - சினிமா விமர்சனம்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/12644_1.jpg

முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்து விட்டால் 2 வது படம் சறுக்கி விடும் என்ற கோடம்பாக்கத்து செண்ட்டிமெண்ட்க்கு மீண்டும் ஒரு உதாரணமாக களவாணி சூப்பர் ஹிட் கொடுத்த சற்குணம் ஆகி இருக்கிறார்..  


( விக்ரமன் 1.புது வசந்தம் 2.பெரும்புள்ளி ,
ஆர் பார்த்திபன 1.புதிய பாதை 2 பொண்டாட்டி தேவை ,

எம் சசி குமார் 1.சுப்ரமணிய புரம் 2.ஈசன் 

எஸ்.எழில் 1.துள்ளாத மனமும் துள்ளும் 2.பெண்ணின் மனதைத்தொட்டு, 

வஸந்த் 1. கேளடி கண்மணி 2.நீ பாதி நான் பாதி .. 

என நீண்டு செல்லும் உதாரணங்கள்...

ஆனால்  (HAIR)ஹேர் இழையில் கமர்ஷியல் வெற்றியைத்தவறவிட்ட மண்மணம் கமழும் ,குழந்தைத்தொழிலாளர்களுகெதிரான விழிப்புணர்வுப்படம் வாகை சூட வா என்பதிலும்,இதற்கு சில விருதுகள் நிச்சயம் என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லை.. 






http://www.cinespot.net/gallery/d/582254-1/Vaagai+Sooda+Vaa+photos+_12_.jpg

 கே பாக்யராஜ் பத்திரப்பதிவு எழுத்தர், தன் மகன் அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதே இவரது அவா..அதற்காக  பயிற்சி வாத்தியாராக தன் மகன் விமலை  கண்டெடுத்தான் காடு எனும் படிப்பறிவே இல்லாத கிராமத்திற்கு அனுப்புகிறார்.. அங்கே அறியா மக்களை செங்கல் சூளை முதலாளி ஏமாற்றுவதை அறிந்து குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியை பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைமுறைப்படுத்தும் விமல் அவ்வப்போது டீக்கடைக்காரி ஹீரோயினால் லவ்வப்படுகிறார்.. கவர்மெண்ட் வேலை கிடைத்த பிறகும்  அவர் அந்த வேலையை உதறி அந்த ஊர் மக்களோடு மக்களாய் கலப்பதே கதை..


இயக்குநரின் எண்ணம், எழுத்து, நோக்கம் அனைத்தும் பாராட்டத்தக்கதே.. ஆனால் என்ன தவறு செய்தார் என்றால் அவர் மெயின் கதைக்கு வரும்போதே 8 ரீல் முடிந்து விடுகிறது.. அதுவரை பாத்திர அறிமுகங்கள் , நாயகி பாடல்,குறும்புகள் என திசை மாறிப்பயணிக்கிறது திரைக்கதை..

விமல்க்கு இது முக்கியமான படம் அவர் கேரியரில்.. 1966-ல் நடக்கும் கதை நடப்பதால் அந்த கால கட்டத்தை நினைவு படுத்த ஆர்ட் டைரக்டரும், பட டைரக்டரும் எந்த அளவு உழைத்திருப்பார்கள் என்பது காட்சிகளில் தெரிகிறது.. 

அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் விமல் அசத்தல்..  செங்கல் சூளை முதலாளியிடம்,அவரது அடி ஆட்களிடம் அடி படும் காட்சியில் எந்த வித ஹீரோயிசத்தையும் காட்டாமல் அடி வாங்குகிறார்.. ஹீரோயினைப்பார்த்தும் வழியவில்லை.. குட்.. நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படுகின்றன.

கேரளத்துப்பைங்கிளி இனியா ஹீரோயின். இவர் அந்தக்கால ரஞ்சனியை, ரஞ்சிதாவை கலந்து கட்டி வார்க்கப்பட்ட களிமண் சிலை போல் இருக்கிறார்.. விழிகளாலேயே பல வித்தகங்கள் புரிகிறார்..  நல்ல எதிர் காலம் உண்டு.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-1.jpg

மண்மணம் கமழ்ந்த படத்தில் செவி வளம்  காண வைத்த வசனங்கள்

1.  அய்யா, நாங்க என்னய்யா செய்வோம்? கண்ணாலம் பண்ண வாங்குன காசுக்கு காலம் பூரா வேலை செய்யனும் போல....

2. வந்திருக்கறது வாத்தியார்யா.. அடிப்பாரா?

அவர் என்னடா நம்மை அடிக்கறது? நான் அவரை அடிக்கறேன் பாரு.... 

3. தூண்டிலைப்போட்டதுமே தக்கையின் அசைவை வெச்சே மாட்னது என்ன வகை மீன்னு கண்டுபிடிப்போம் இல்ல..!!!

4.  யோவ்... 2 காசு டீ.. 3 காசு டீ. எது வேணும்?

2க்கும் என்னம்மா வித்தியாசம்?

3 காசு டீ போட்டா ருசி அடி நாக்குல அப்படியே நிக்கும்..

சரி பரவால்ல.. 2காசு டீ.யே போடு..

போய்யாங்க்.... ( கதைக்களன் 1966)


5.  வாத்தியாரே.... நாங்க இதை திருடிட்டு வந்துட்டோம்.. நீங்க வெளிலயே நில்லுங்க.. யாராவது வந்தா , நாங்க இங்கே இல்லைன்னு சொல்லிடுங்க.. 

6. என்னைப்பற்றி என்ன வேணா பேசுங்க, ஆனா என் லாரியைப்பற்றி எதுவும் பேசக்கூடாது.. 

அப்டியா.. டேய் இவன் மூஞ்சியைப்பாரு.. ஆளும் அவனும்.. 

டேய்.. நிறுத்துங்கடா.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. 

7.  சார்.. எங்களைத்தப்பா நினைக்காதீங்க.. எங்களுக்கும் , படிப்புக்கும் ஒத்ஹ்டு வராது.. ஆள் வேணா பிடிச்சுத்தர்றோம்..

8. அய்யா.. உங்க பையன் கெட்ட வார்த்தை பேசறான் சார்... தேவ...யான்னு சொன்னான் சார்..

இல்லப்பா டி கட் பண்ணிட்டுதான் சொன்னேன்.. 

9. இந்த சேலையை வாங்கி ரெண்டரை வருஷம் தான் ஆகுது.. அதுக்குள்ள கிழிஞ்சிடுச்சு. வாங்குன காசைத்திருப்பிக்குடு.. 

ஏம்மா.. சேலைன்னா அது கிழியத்தான்மா செய்யும்.. 

10. நீங்கதான் போஸ்ட்மேனா?

அதுக்கு ஏன்யா சிரிக்கறே?

இல்ல லேடி போஸ்ட் விமனை இப்போதான் பார்க்கறேன்.. 



http://www.tamiltinsel.com/wp-content/gallery/tamil-movie-vagai-sooda-vaa-heroine-iniya-latest-hot-n-cute-stills/tamil-cinema-actress-vagai-sooda-vaa-film-heroine-iniya-spicy-photoshoot-stills-4.jpg

11. நான் வாங்கற சம்பளம் என் சைக்கிள்க்கு பஞ்சர் ஒட்டக்கூட பத்தாது போல... 

12. உங்களுக்கு அத்தை பொண்னு, மாமன் பொண்ணு யாராவது இருக்காங்களா? இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்ணாலம் கட்டாதீங்க.. உடம்புக்கு நல்லதில்லை.. சந்ததிக்கும்..

13. எனக்கு சீர் வரிசைக்கு காசு சேத்தனும்,... இன்னைல இருந்து எல்லாத்துக்கும் ரேட் அதிகம் பண்ணிட வேண்டியதுதான்... 

14.  வாத்தியாரய்யா.. உங்களை மாதிரியே வேலையே செய்யாம சம்பளம் வாங்கற மாதிரி ஏதாவது வேலை இருக்கா?

15.  ஏம்மா, போஸ்ட் விமன், நீங்க எப்பவும் பேனாவை ஜாக்கெட்ல தான் சொருகி வெச்சுப்பீங்களோ?

யோவ்!!!!!!!!!!!!!!

16.  அரசாங்கத்தோட நேரடித்தொடர்புல உங்கப்பன் நான் இருக்கறதால அரசாங்கத்தை ஏமாத்தலாம், தனியாரை ஏமாத்தலாமா? ( வாட் எ லாஜிக்!!)

17.  இங்கே பாரம்மா.. எனக்கு 80 வயசுதான்.. வயசாகிடுச்சேன்னு என்னை இளப்பமா நினைக்காதே.. இப்பக்கூட இளவட்டப்பசங்களால என்னோட போட்டி போட முடியாது தெரிஞ்சுக்கோ.. வெத்தலை கொடு..

இந்தாய்யா பெரிசு.. நல்லா இறுக்கிக்கட்டிக்கய்யா.. கீழே விழுந்திடப்போகுது வெத்தலை!!!!!!!!!!!!!!!

18.  அந்தப்பொண்ணு கிட்டே இருந்து ரெட்டை மூக்கு வெத்தலை வாங்கிட்டியா? அப்போ புதுத்துணி எடுத்துத்தந்தே ஆகனும்./.

19.  டேய்./.. வாத்தியார் கதை சொல்லப்போறாராம்.. போலாமாடா?

அட.. விட்றா.. நமக்குத்தெரியாத கதையா அவர் சொல்லிடப்பொறாரு?

20.  முன்னெல்லாம் எக்சஸைஸ் செஞ்சு செஞ்சு எனக்கு கால் எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் மொத்தம் இருக்கும் , கை எப்படி இருக்கும் தெரியுமா? இவ்ளவ் பெரிசா  இருக்கும்.. என் செஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா?

சார்.. அப்போ அங்கே இருந்து பால் வருமா சார்..?



http://thebollywoodgallery.com/wp-content/uploads/2011/07/Iniya-Vaagai-Sooda-Vaa-Heroine-8-269x339.jpg

21.  அக்காவுக்கு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னேன்.. அவர் சிரிச்சாருக்கா....

22. நீ யாரை வேணாலும் கண்ணாலம் கட்டிக்கோ.. எனக்கென்ன? சாப்பாடு போட ஆள் இருக்காதேன்னு பார்த்தேன் , அவ்ளவ் தான்... 

யோவ்.. ப்ளீஸ் என்னை கண்னாலம் பண்ணிக்கய்யா.. டீக்கடை வெச்சு அந்தக்காசுல சீர்க்காசை கரெக்ட் பண்ணிடறேன்.. 

23. டேய்.. வாத்தியாரோட அப்பாவும் சர்க்காரோட நேரடித்தொடர்பு வெச்சிருக்கர் போல.. 

24. யோவ்.... வாழ்ந்தா கெட்டப்பா ( கித்தாய்ப்பா) வாழனும்.. இல்லன்னா செத்துப்போகனும்யா....

25.. வயசுப்பொண்ணு எப்பவும் வக்கணையாத்தான் சமைக்கும்.. 

26. பசியும் , சோறும் தான் வாழ்க்கைன்னு கிடந்த எங்களை படிக்க வெச்சதே நீங்கதான்யா!!

http://www.newsonweb.com/newsimages/September2011/a114d1f5-f31c-476c-8270-c5709fc219321.jpg




இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. கமர்ஷியலாய் இது சக்சஸ் ஆகாது என்பது தெரிந்தும் கதையை சமூக சீர்திருத்த நோக்கத்தோடு வடிவமைத்தது.. 

2. ஆர்ட் டைரக்டர் சீனுவோடு சேர்ந்து புதுக்கொட்டையில்  2 கோடி செலவில் 75 குடும்பங்கள் வாழும் வீட்டை 1966 மாடலில் வடிவமைத்தது..

3. புதிய இசை அமைப்பாளர் ஜிப்ரானை அறிமுகப்படுத்தியது.. அவரது இசையில் 1.  சாரக்காத்து வீசும்போது சாரைப்பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே சாரைப்பார்த்ததுமே..... 2. போறானே போறானே... போகாம போறானே..  போன்ற பாடல்கள் கலக்கல் ரகம், அந்தப்பாடலை படம் பிடித்த விதம் டாப்... ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்க்கு ஒரு ஓ போடலாம்..

4.  ஓப்பனிங்க் ஷாட்டில் செங்கல் சூளையை காட்டும்போது.. மண் தரையில் ஓடி வரும் பஞ்சுப்பூ,  செங்கல் சுமப்பவர் தன் தலையில் ஏராளமான செங்கல்களை அடுக்கும் அழகு ( கிராஃபிக்ஸ் என்றாலும் )  என ஜால வித்தை..

5.  காலம் காலமாக பெண் தன்னை விரும்பும் ஆணிடம் தனக்கு வேறு பக்கம் மணம் ஆகப்போகிறது என பொய் சொல்லி அவன் மனம் வாடுவது கண்டு மனம் மகிழும் பெண்ணியல் சார்ந்த உளவு சூத்திரத்தின் படி நாயகி நாயகனை சீண்டி விட்டி ஒரு குதியாட்டம் போடுகிறாரே.. மார்வலஸ் நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் இனியா & ஆல்சோ டைரக்டர்..

6. பையன் ஒருவன் கிணற்றில் விழுந்ததும் உடனே அந்த ஊரில் ஏற்படும் பதட்டம், களேபரம், குழப்பம் என அனைத்தையும் இசையால், காட்சிப்படுத்தியமைக்கு சபாஷ்!

7. சின்னப்பசங்க ரேடியோவைத்திருடிட்டு ஓடிப்போறப்ப திருடாதே பாப்பா திருடாதே ஒலிபரப்பாவது டைமிங்க்....


http://gallery.southdreamz.com/cache/movie-gallery/idhayathil-idam-kodu/idhayathil-idam-kodu-movie-udhayakumar-iniya-ganja-karuppu-stills-13_720_southdreamz.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1. கதைக்கான ரோல் மாடலாக முந்தானை முடிச்சையும், திரைக்கதைக்கான ரோல் மாடலாக திருமதி பழனிச்சாமியை எடுத்துக்கொண்டதும் பட்டவர்த்தனமாய் த்தெரிகிறது ..

2. வாத்தியாரை கிராமத்துக்கு நியமிக்கும் சேவா சங்கம் சட்டப்படி உறுதிப்படுத்த மாதம் 2 முறை வர வேண்டும், ஆனால் யாரும் வரவே இல்லை.. ஹீரோ பாடமே எடுக்காமல் 2 மாச சம்பளமே வாங்கி விடுகிறார்.. அதற்குப்பிறகே சிலேட், புக்ஸ் எல்லாம் வருது.. எப்படி?

3. ரேடியோவில் பாட்டு கேட்கும் சீனில்; அதில் லைட் எரியுமே.. காணோமே? ரேடியோவை மட்டும் காட்டி விட்டி பாட்டை வேறு டேப்பிலிருந்து ஒலிபரப்பியது நல்லாத்தெரியுது..

4. அபியும், நானும் படத்தில் த்ரிஷா வீட்டு வேலைக்காரனாக வந்து கலக்கினாரே அவர் இதில் பைத்தியமாக வருகிறார்.. அவர் விமலிடம் நான் போறேன்.. நீ இருக்கனும் என்று சொல்லி விட்டுப்போகிறார்.. அந்த சஸ்பென்ஸ் காட்சியை வைத்து இடைவேளை விட்டு பில்டப் பண்றாங்க.. ஆனா அதுக்குப்பிறகு அது பற்றி எதுவும் சொல்லவே இல்லை.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?

5. களவாணி படத்தில் இருந்த கலகலப்பு மைனஸ்..  இடைவேளை வரை கதைக்கே போகாமல் இழுத்தது அதை விட பெரிய மைனஸ்.. 

6. அவ்ளவ் கட்டுப்பெட்டியான கிராமத்தில் வாத்தியாருடன் ஹீரோயின் பழகுவதை யாரும் கண்டுக்கவே இல்லையே ஏன்?

7. க்ளைமாக்ஸில் ஹீரோ கவர்மெண்ட் வேலையை விடுவது தியாகமாகத்தெரியவில்லை.. அவர் பாடம் சொல்லித்தருவதே தினமும் மாலை 1 மணி நேரம் தான்.. அதற்கு ஏன் வேலையை விட வேண்டு> கவர்மெண்ட் வேலைக்குப்போய்ட்டே அதை தொடரலாமே? வாரா வாரம் சனி , ஞாயிறு மட்டும் வந்து சொல்லிக்கொடுத்தால் போதுமே?

8. பொன்வண்ணன் மாதிரி கேணை வில்லனை பார்க்க முடியாது.. அவர் ஏன் அப்படி பயந்து ஓடுகிறார்.. ?

அடிதடி தாதா கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு ஒரு வித்தியாச அனுபவம்தான் இந்தப்படம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6gakMt66Yon5-ZYk3mQAP_bxKPB9H8k2E6RkS0PFDhuWMgbpcKYU-IKS7nyts4adj_jUgV9ifX_I97rV4RfJEm5d5SscwJA6TbAA0WZjW3BymHzsFd_vbMfJ_1Gicotk9Y6_x2iRxXE/s400/RA%25252B5.jpg



ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடும்....

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - களவாணியை விட கம்மி தான், ஆனாலும் பார்க்கலாம்.


ஈரோடு ராயல் தியேட்டரில் படம் பார்த்தேன்


டிஸ்கி -1

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி -3

வெடி - ன் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்



Saturday, February 19, 2011

காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்


http://indiamoviez.com/wp-content/uploads/2009/12/KaavalarKudiyiruppuFront.jpg
சயனைடு (குப்பி )என்ற வித்தியாசமான படம் குடுத்த ரமேஷ் இயக்கத்தில் வந்துள்ள காதல் சப்ஜெக்ட் படம்.மனதைக்கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ், இறுக்கமான, உருக்கமான கடைசி 30 நிமிட காட்சிகள் என பல பிளஸ் பாயிண்ட்ஸ் இருந்தும் படத்தின் முதல் பாதியில் இயக்குநர் ஏன் அவ்வளவு தடுமாறினார் என்றே புரியவில்லை...

நண்பனுக்காக காதலை விட்டுகொடுத்தல்,தனக்கு நோய் இருப்பதால் காதலியாவது நல்லாருக்கட்டும் என காதலிக்காக காதலை விட்டு கொடுத்தல்,குடும்ப நலனுக்காக காதலை விட்டுக்கொடுத்தல் வரிசையில் நன்றிக்கடனுக்காக காதலை விட்டுக்கொடுக்கும் கதை.

ஹீரோ அனிஷ் தேற மாட்டார். (ஹூம், நாம எந்தக்காலத்துல ஆம்பளைங்களை பாராட்டி இருக்கோம்..?# மனசாட்சி)காதல் வரும்போது,ஊடல் கொள்ளும்போது, அம்மாவிடம் பேசும்போது,காதலியிடம் பேசும்போது, என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் அண்ணனிடம் கைவச,ம் ஒரே முக பாவனை தான். பாவம் அவர் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்..? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்?

இப்படியாக முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்‌ஷன்லதப்பு பண்ணுன இயக்குநர் ஹீரோயின் செலக்‌ஷன் ல அடடே சொல்ல வெச்சுட்டார்.. ( அதானே பார்த்தேன்..)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijYhFWTYHtbuW6AkGT33bXhPVbZAJJnIh_L956kmQboo6cFnsnDIG0ZRDxEAeP5CpsspoWOHnm9W96uXHx6MmzCtL5CA4OZt-3FeJEnh86a3PprAqsSjdCmnVmA8f3SfGLrS0ROjLA_uzb/s400/009-Kavalar-Kudiyiruppu-37.jpg

ஸ்ருதி... இவர் நடிப்புல பாஸ் மார்க் வாங்கிடறார் ஈஸியா..( பொண்ணுங்க எப்பவும் ஈஸியா பாஸ் ஆகிடுவாங்க..) இவர் கிட்டே பர்சனலா எனக்கு பிடிச்சதே இவர் சுடிதாருக்கு போடற துப்பட்டாவை புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்.வாழ்க தமிழச்சி பண்பாடு.



படத்துல இயக்குநர் ரொம்ப நம்பி இருந்த சீன் பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்துல நாட்டுல நடந்த கலவரத்தை படத்துல சாமார்த்தியமா புகுத்துன விதம்.ஆனா பின்னணி இசை, படமாக்கம், எடிட்டிங்க் எல்லாமே ரொம்ப சுமார்தான் அந்த சீன்ல.

கங்கை நதி எங்கேயோ பிறந்து .. பாட்டு 1968 ல நடக்கற கதைல வர்ற சிச்சுவேஷன்கறதை  புரிஞ்சுக்கிட்டு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பழைய கால மெட்டு இதம்.

சொன்னதைக்கேட்க மாட்டே பாட்டு செம கும்மாளம் என்றாலும் அது ஸ்ரீகாந்த் - சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் வரும் சைட் அடிக்கப்போக மாட்டோம் பாட்டின் மெட்டை ஞாபகப்படுத்துது.



http://nowrunning.com/content/movie/2009/kavalarkudiyiruppu/stills/kaavalaar_kudiyiruppu%20(34).jpg
--
உயிரே ... என் உயிரில் ஏன் வந்தாய் பாட்டுக்கான ஓபனிங்க் லீடில் ஹீரோயின் ஒரே ஒரு நெற்பயிரைக்கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே நிற்கும் காட்சியை படமாக்கிய விதத்தில் இயக்குநர் தனது அழகியல் ரசனையை பதிவு செய்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மேல் ஏன் காதல் வருது? என்பதற்கான காட்சி அமைப்பில் ஒரு ஆபத்து என்றதும் ஓடி வந்து ஹீரோ காப்பாத்தறார் என்பதுதான் எனும்போது பெண் எப்போதும் செக்யூரிட்டி பர்ப்பஸ்க்குத்தான் லவ் பண்ணுறாங்க என்ற எண்ணம் வருது.அதே போல் ஹீரோ ஹீரோயின் மேல் எரிந்து எரிந்து விழுகிறார்.. தியேட்டர் இருட்டின் தனிமையில் ஹீரோயின் ஹீரோ தோளில் சாய்ந்து கொண்ட அந்த உடல் நெருக்கத்தில் தான் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் காதல் வருகிறது என்று சொன்னதும் ஒரு காதல் சப்ஜெக்ட்டில் முக்கிய மைனஸ்.

பொதுவாக ஒரு காதல் கதை வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் வரும் சம்பவம் கவிதையாக இருக்க வேண்டும்.பிறகு முதன் முதலாக காதலை பரஸ்பரம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும் ஒரு கலக்கலான காட்சி அமைப்பு வைக்க வேண்டும்.இந்த இரண்டையும் சரியாக கவனிக்காத காதல் படங்கள் தோல்வி அடைவதை தவிர்கவே முடியாது. காரணம் படம் பார்ப்பவர்கள் மனதில் முதலில் அந்த காதல் ஆழப்பதிய வேண்டுமே...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXMZ_ye7_G7EaWXD5utx7u7pe5jVAPYYDFoNZemKv9zXloKbCToQs-Nt4mL_C8NUc0udef6BXLsvnxyqE0Ro_d6XecCxPhyphenhyphenpKqCea5C8yueOv-4xITcS330gpUgQbR8JNWCwGB4qQ7RJrh/s400/kavalar-kudiiruppu-movie-latest-stills-pics-photo-gallery-01.jpg
வசனகர்த்தா நம் மனதில் குடி கொண்ட இடங்கள்

1. ஹீரோயின் - அத்தை...காலேஜ் சீட் கிடைச்சிருக்கு..ஸ்வீட் எடுத்துக்கோங்க..

ஹீரோ - த்தூ...

சரண்யா - ஏண்டா.. துப்பறே,,?

ஹீரோ - பல் துலக்கறப்ப துப்பாம எப்படி இருக்கறது..?

2. டேய். பைக் வேணாம்டா.. நடந்தே போயிடலாம்டா...

ஏன்?

ஷோ ரூம் காரன் போட்ட பெட்ரோல் தீர்ந்துடுச்சு.

அட த்தூ... ( படம் பூரா துப்பீட்டே இருக்கறாங்கப்பா..)

3. எங்கண்ணன் கூட பிளஸ் டூ எக்ஸாம் எழுதுனே...,அப்புறம் என் கூட, இப்போ என் தம்பி கூட... அவங்க எல்லாம் பாஸ் ஆகிட்டாங்க.. நீ அநேகமா என் பையன் பிளஸ் டூ படிக்கறப்பவும் எழுதுவேன்னு நினைக்கறேன்...

4. எதுக்கு தாரை தப்பட்டையோட ஊர்வலம் வர்றீங்க..?

நான் பிளஸ் டூ ல பாஸ் ஆகிட்டேன்.

அடப்பாவி,.. இது சாவுக்கு அடிக்கற மேளம்டா...

5. ஹீரோயின் - நீ குடிச்சாலும் சரி,வேற ஒரு பொண்ணோட சுத்துனாலும் சரி.. நான் உன்னைத்தான் லவ் பண்ணுவேன். ( நல்ல பொண்ணு போல...)

6. நீ அவளைக்கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ செத்துடுவா... ஆனா பண்ணீக்கிட்டா அவங்கம்மா,அப்பா செத்துடுவாங்க... ( அப்போ ஆடியன்ஸ்..?)

சரண்யாவின் நடிப்பு அருமை.ஒரு சராசரி தாயின் பரிதவிப்பை கண் முண் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆனால் பேசாம செத்துத்தொலையேன்மா என கோபத்தில் மகன் சொன்னதும் நிஜமாகவே தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை.

அதே போல் மதக்கலவரம் நடக்கும்போது தனது மாமா மகனுக்கு ஃபோன் பண்ணி ஹீரோயின் கூப்பிடும்போது அவர் சாரி.. நான் வர்லை பைக்ல பெட்ரோல் இல்லை என்பதும்,ஃபோன் ரிசீவரை கையில் வைத்துக்கொண்டே தனது அம்மாவிடம் கலவரம் நடக்கறப்ப நான் போனா மாட்டிக்குவேன் என சொல்வதும் காதில் பூ சுற்றும் காட்சிகள்.

மாமா பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க எல்லாம் பாய்ஞ்சு போக மாட்டோம்..? ( அதான் உனக்கு மாமா பொண்ணே இல்லை..)என்ன பண்றது..? ஹீரோ வந்து தான் ஹீரோயினை காப்பாற்ற வேண்டும் என்ற ஆகம விதியின் படி.....

படத்துல ரசிக்கற மாதிரி ஒரு சீன்னா  ( சாதா சீனப்பா) ஹீரோ,ஹீரோயின் சந்திப்பின்போது ஹீரோயின் ஹீரோவிடம் உன் ஃபிரண்டை கழட்டி விடு ,நாம ஜாலியா பேசிட்டு இருக்கலாம் என்பதும் அதற்கு நண்பன் நொந்து கொள்வதும் செம காமெடி சீன். ஹீரோவின் நண்பராக நடிப்பவரின் முக பாவனை அருமை. அதனால்தானோ என்னவோ ஹீரோ வசனம் பேசும் காட்சிகளில் கூட கேமரா ஹீரோவின் நண்பன் முகத்தையே காட்டுது.

ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.ஹீரோயின்-ன் மாமா மகனாக வருபவர் சல்மான்கான் மாதிரி ஜம் என இருப்பதும்,ஹீரோவாக வருபவர் பேப்பர் பொறுக்குபவர் போல் சீவாத பரட்டைத்தலை,துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுடன் இருப்பதும் தமிழ் சினிமாவின் தலை எழுத்து.

ஏ, பி ,சி என அனைத்து செண்ட்டர்களிலும் இந்தப்படம் 10 நாட்களைத்தாண்டாது.

ஆனந்த விகடன்ல இந்தப்படம் விமர்சனம் போட மாட்டாங்க ,மீறிப்போட்டா 37 மார்க்.(மீறாம போட்டா..?)

குமுதம் ரேங்க்கிங்க்  - சுமார்.



டிஸ்கி 2 -  ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்

Friday, February 18, 2011

ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1460&option=com_joomgallery&Itemid=65
சி எம் சீட்டுக்காக நாய் மாதிரி அலையும் ஒரு சந்தர்ப்பவாத , பச்சோந்தித்தனமான மன நிலை கொண்ட அரசியல் வாதி.... ( சுருக்கமா நம்ம டாக்டர் ராம்தாஸ் மாதிரி) தான்  படத்துக்கு வில்லன்.(பொதுவா இந்த அரசியல் வாதிகளே நமக்கு வில்லன்க தானே..?). அவரது பொண்ணைக்காதலிக்கும் ஹீரோ...எப்படி எதிர்ப்புகளை மீறி கைப்பிடிக்கிறார்ங்கறது தான் கதை.

ஈரம்,அய்யனார்,மிருகம் போன்ற வித்தியாசமான சப்ஜெக்ட்டில் நடித்து நல்ல பெயர் வாங்கிய ஆதிக்கு விஜய் மாதிரி ஆக்‌ஷன் கம் மசாலா ஹீரோ ஆகனும்னு ஆசை வந்துடுச்சு போல.. அறிமுக பாடல் காட்சிலயே விஜய் மாதிரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் குடுத்து பயப்பட வைக்கிறார்.அதே போல் வில்லனிடம் சவால் விடும் காட்சிகளில் சிவகாசி விஜய்-யை இமிடேட் செய்கிறார்.ம்ஹும், தேற மாட்டார்னு நினைக்கிறேன்.. ஏற்கனவே விஷால்க்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்.

ஹீரோயின் பூர்ணா.. ஜூனியர் அசின் -னு முகச்சாயல்ல இவரை கோடம்பாக்கத்துல சொல்றாங்களாம். (அப்படின்னு பூர்ணாவே வதந்தியை கிளப்பறார்னு நினைக்கிறேன்.)முகத்துல ஒரு ஃபிரஸ்னெஸ்ஸெ இல்லை. ஏதோ சம்பளம் வாங்குனமா? டைரக்டர் சொன்னபடி நடிச்சமா?ன்னு ரொம்ப சுமாரான நடிப்புத்தான்.

படத்துல ஆறுதலான ஒரே அம்சம் வில்லனா வர்ற சுரேஷ்தான் ( பன்னீர் புஷ்பங்கள் புகழ்)சொட்டைத்தலையோட வந்து அவர் நயவஞ்சகமா சிரிக்கறப்ப அப்படியே டாக்டர் ராம்தாஸைப்பார்க்கற மாதிரியே இருக்கு.

http://www.dinamani.com/Images/article/2010/8/6/cin2.jpg
வில்லனுக்கு பி ஏ வாக வரும் மயில்சாமி அப்பப்ப சிச்சுவேஷனுக்குத்தக்கபடி கவுண்ட்டர் டயலாக் குடுத்து அப்ளாஸை அள்ளறார்.

உன்னை நினைக்கையிலே மனசுக்குள் மழைக்காலம் என்ற பாடல் வரிகளை அழகாக எழுதிய கவிஞர் பாடலை படமாக்கிய விதத்தினை பார்த்திருந்தா (PICTURAISATION OF THE SONG)பாட்டு எழுதுறதையே விட்டுடுவார்னு நினைக்கிறேன்.

அதே போல் இடைவேளைக்குப்பிறகு வரும் மாமூல் ஃபேமிலி சாங்க்கில் அத்தனை பேரும் (கிட்டத்தட்ட 24 பேர்) கூலிங்க் கிளாஸ் அணிந்து வந்து பயமுறுத்துகிறார்கள். அந்த பாடல் காட்சியில் பழம்பெருமை மிக்க ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா உட்பட அனைவருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்து அவர்களையும் படுத்தி , நம்மையும் படுத்தி எடுக்கிறார் இயக்குநர்.

மனதைத்தொட்ட வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip5yXmTS28HTTvXFc6fyBMstjRMTKdmLRfI92ZwrLF8X0-0-XUr4HfxXaStLbxnvUR-S6Uxhyphenhyphen2EFBJW9Qz4ef37bhM2efDyDlzAvrMNhrTsBeHdaNGJ9JyVLzX3gWVOUQf7EjEdE909Ls/s320/poorna.jpg
1. அடேங்கப்பா.. வழுக்கு மரமே இப்படி ஏர்றானே.....வாழ்க்கைல எப்படி முன்னேறுவான்?

அவ்வளவுதானா? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்.

2.  நீங்கதான் என் பையனுக்கு ஒரு பேரு வைக்கனும்.

ஹரிதாஸ்  , ஹரிதாஸ்

எனக்கு இந்த பேரு பிடிக்கலை.
ஓ. இதுக்குத்தான் குழந்தைகளுக்கு பேசறதுக்கு முன்னேயே பேரு வெச்சுடறாங்க போல...

3. ஏம்மா.. படுத்திருந்த பொண்ணைக்காணோமேன்னுபதட்டப்படாம ஸ்கூல்க்கு கிளம்பறியே.. ஏன்?

பொண்ணைப்பெத்திருந்தா பயப்படுவேன், பொறுக்கியை அல்ல பெத்திருக்கேன்..? ( ஆஹா என்ன ஒரு மாதர் குல மாணிக்கங்களாடா...)

4. பாப்பா பாக்க டாப்பாத்தான் இருக்கு, ஆனா ட்ரை பண்ணிப்பார்த்தா படு லோக்கலா இருக்கும் போல...

5. கணக்கு டீச்சர் - டேய்.. உங்கப்பாவுக்கு நான் ரூ 1000 பணம் கடன் தர்றேன். மாசாமாசம் ரூ 50 திருப்பித்தர்றதா சொல்றாரு. அப்போ எத்தனை  மாசத்துல திருப்பித்தருவாரு?

மாணவன் - எத்தனை  மாசமானாலும் திருப்பியே தரமாட்டார் மேடம்.. உங்களுக்கு எங்கப்பாவைப்பற்றித்தெரியலை...

6. ஒரு கெட்டவன் உருவாகறது அவன் சொன்ன முதல் பொய்ல...

7. எல்லாரும் சாவுக்கு சங்கு ஊதுவாங்க.. இவன் தான் சாகறதுக்கே சங்கு ஊதறான்.

8. ஒரு பொண்ணு வண்டி ஓட்டறப்ப அவ பின்னால ஒரு பையன் உக்காந்தா அது லிஃப்ட்டுன்னு நினைப்பாங்க. ஆனா ஒரு பையன் பின்னால ஒரு பொண்ணு உக்காந்தா லிஃப்ட்டைத்தவிர மத்த எல்லாத்தையும் நினைப்பாங்க..

9. ஹீரோயின் - உன் கை டிகாக்‌ஷன் மாதிரி இருக்கு, என் கை பால் மாதிரி இருக்கு...

ஹீரோ - அப்போ நமக்குப்பிறக்கபோற குழந்தை காஃபி  மாதிரி இருக்கும்னு சொல்லு.

(இந்த சீன்ல என்ன காமெடின்னா 2 பேர் கையும் மாநிறமா தான் இருக்கும் )

10. எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்.

ஏன் அப்படி சொல்றே.. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையே...எந்தப்பொண்ணையும் எதுவும் பண்ணுனது இல்லையே...

அதான். கல்யாணத்துக்குப்பிறகு மட்டும் என்னைக்கட்டிட்டு என்ன செய்யப்போறே,,?

(சபாஷ்.. தமிழ்ப்பொண்ணுன்னா இப்படித்தான் கலாச்சாரத்தைக்காப்பாத்தனும்)

11. ஹீரோ - அப்பா, இவ்வளவு கட்டுப்பாடா வளர்ந்த நீங்க எப்படி எனக்கு இவ்வளவு ஃபிரீடம் குடுத்தீங்க..?

பிரபு -  நான் எப்படி எல்லாம் வாழனும்னு நினைச்சனோ அந்த மாதிரி...நீ வாழனும்னு ஆசைப்படறேன்.

12. ஹீரோயின்  - எதுக்காக என்னை அவசரமா வரச்சொன்னே..?

ஹீரோ - நம்ம லவ் மேட்டர் எங்க வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு.

ஹீரோயின் - அய்யய்யோ.. என்ன சொன்னாங்க..?

ஹீரோ - ஓக்கே சொல்லீட்டாங்க.. அதான் கவலையா இருக்கு..

13. வில்லனின் எடுபுடி  - பால்பாண்டின்னா பால் கறக்கற பாண்டின்னு நினைச்சியா?உனக்குப்பால் ஊத்தற பாண்டிடா... ( பஞ்ச் டயலாக்காம்.. சகிக்கல...)



http://www.sivajitv.com/newsphotos/poorna4.jpg
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஹீரோ தனது காதலை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தனித்தனியே சொல்லி உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் .என டபாய்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும்  கல கல சீனும்.

2.செலவு அதிகம் இல்லாம ஒரு மசாலாப்படத்தை கொடுத்தது.

3. ஹீரோயினை சுமாரா செலக்ட் பண்ணி கடுப்பை கிளப்பினாலும் ஹீரோயின் அம்மாவா யுவராணியை போட்டு கிளுகிளுப்பு ஏத்துனது..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஹீரோ கம்பம் ஏறும்போது கீழே விழுந்து சேறு ஆகிடுது ஓக்கே... அப்போ கூட இருந்த 42 பேருக்கும் அதே மாதிரி சேறு எப்படி ஆச்சு? ( பாட்டுக்கு மேட்ச்சுக்கு மேட்சுக்கா?)

2. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பைக்ல வேகமா வந்து விழறார். வில்லனோட அடியாளுங்க 34 பேர் சுத்தி நிக்கறாங்க. உடனே எந்த ஸ்பேனர், ஸ்க்ரூ ட்ரைவர் இல்லாம தன் பைக்கோட முன்னாடி சக்கரத்தை கழட்டி வீசி அடிக்கறாரு..? அது எப்படி?அந்த ஒரு சக்கரம் பட்டு 12 பேர் விழறாங்க...

எப்படியோ படம் தப்பிச்சிக்கிச்சு....

ஏ செண்ட்டர்ல 35 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல  15 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே


டிஸ்கி -