Showing posts with label பேய்ப்படம். Show all posts
Showing posts with label பேய்ப்படம். Show all posts

Tuesday, April 03, 2012

ஒத்தைக்குதிரை -கொஞ்சம் திகில், கொஞ்சம் டஹில் - சினிமா விமர்சனம்

http://www.nanbargal.com/images/movies/tamil/othakuthirai.jpg

ஒரு கிராமம்.. அதுல வரிசையா சிலர் கொலை செய்யப்படறாங்க. கிராமத்து ஜனங்க எல்லாம் அது பேய் வேலைன்னு சொல்லிக்கறாங்க.. ஒரு பிரைவேட் டி வி சேனல் ஒரு குரூப்பை அனுப்பி நிலைமையை கண்டறிய ட்ரை பண்ணுது.. 

கிராமத்துல பஞ்சாயத்து தலைவர் அவங்களுக்கு தங்க உதவி பண்றார். டி வி டிடெக்டிவ் குரூப் 4 பேரு. 3 பசங்க, ஒரு பொண்ணு. கிராமங்கள்ள சந்தேகப்படும்படி தெரியற இடங்கள்ல ஹிடன் கேமரா வைக்கறாங்க ( எந்த குரங்கும் தூக்கிட்டு போகல)

ஹீரோவோட ஆள் ஆல்ரெடி இதே கிராமத்துல இதே டிடெக்டிவ் வேலைக்காக இங்கே வந்து மாயம் ஆகிட்டா .. ஹீரோ உடனே ஒரு ஐடியா பண்றாரு.. தன் ஆளோட தங்கச்சி அதாவது வருங்கால கொழுந்தியா அதே சாயல் பொண்ணு.. கிராமத்துக்கு வர வைக்கிறார்.. 

வில்லன் பஞ்சாயத்து தலைவன் தான்.. நைட் டைம் வில்லன் கார்ல வெளீல போறப்ப ஹீரோவோட கொழுந்தியாவை அவன் பார்வைல பட வைக்கிறாங்க.. வில்லன் திகில்ல உறைஞ்சிடறான்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_09_w800_h537_600024.jpg

 இன்னா மேட்டர்னா வில்லன்க்கு ஜாதி வெறி ஜாஸ்தி.. வில்லனோட பொண்ணு யாரையோ கீழ் ஜாதி ஆளை லவ் பண்ணி இருக்கு. 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போறப்ப வில்லன் வழி மறைச்சு பளார்னு ஒரு அறை விட்டாரு.. அதுல அவர் மகள் க்ளோஸ். 

எதேச்சையா நடந்த இந்த விபத்தை  வில்லன் பேய் அடிச்சதா கிளப்பி விட்டு எஸ் ஆகிடறாரு.. தன் மகளே போய்ட்டா.. என்னமோ ஆகட்டும்னு விட்டுட வேண்டியதுதானே.. அவ காதலனையும் அடிச்சே கொலை பண்றாரு.. அந்த கொலையை ஹீரோவோட ஆள் பார்த்துடறா,. அதனால  அவளையும் போட்டுத்தள்ளிடறாரு.. 

 இப்போ ஹீரோ தன் கொழுந்தியாவை வர வெச்சதும் வில்லனுக்கு குழப்பம். 

என்ன நடக்குது.?  என்பது  மீதி திரைக்கதை ( இப்போ நான் சொன்னதே முக்கா வாசி திரைக்கதை ஹி ஹி )

 அம்புலி படத்தை நினைவு படுத்தினாலும் இதுவும் நல்லதொரு திகில் பட முயற்சியே.. 

 ஆனா புது முகங்கள் செலக்‌ஷன் தான் சுமார் ரகம். ஹீரோ சுமாரா இருந்தா எப்படியோ போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை.. லட்சக்கணக்குல செலவு பண்ணி படம் எடுக்கறவங்க கதைக்கு அடுத்ததா முக்கியத்துவம் தர வேண்டியது ஹீரோயின் செலக்‌ஷனுக்குத்தான்.. சுமார் ஃபிகரை ஹீரோயினா போட்டா எப்படி?

படத்துல  2  ஹீரோயின். டி வி டிடெக்டிவ் குரூப்ல ஒரு பொண்ணு அது 50 மார் ஃபிகர்.. ஹீரோவோட லவ்வர் 54 மார்க் ஃபிகர். செம போர் ஹி ஹி

http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_32_w800_h537_600024.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. எப்படி எல்லா ஆண்களால் ராமனா இருக்க முடியாதோ, எப்படி எல்லா பொண்ணுங்களும் கண்ணகியா இருக்க முடியாதோ ,அதே மாதிரி எல்லா அரசியல்வாதிகளூம் நேர்மையா இருக்க முடியாது

2. XQS மீ



நான் ஒண்ணும் எச்சக்கலை மூர்த்தி இல்லை.. என் பேரு ஆறுச்சாமி

3. தண்ணியைப்போட்டாலும் குடிகாரங்க எப்பவும் உண்மையைத்தான் சொல்வாங்க.. 

4. பேய், பிசாசுல உங்களூக்கு நம்பிக்கை இருக்கா? பெரியவரே. 

 உங்க அனுபவத்துல இல்லாத ஒரு விஷயத்தை ப்பற்றி பேசுனா நீங்க நம்பப்போறதில்லை... 

5. பேய் இருக்கறது உண்மைன்னா அது இன்னொரு பேயை கொல்ல வேண்டியதுதானே , ஏன் மனுஷனை கொல்லனும்? ( தன் இனத்தை கொல்லாத இனமோ என்னவோ?)


6. அவன் நடந்து வர்றப்ப பேய் நடந்து வர்ற மாதிரியே இருக்கு

 இருடி உன்னை வந்து வெச்சுக்கறேன்

 அதுக்கு வேற ஆள் இருக்கு.. 

7. ம்.. சொல்லுப்பா... 

 என்னது? அப்பாவா?


 அது வேற அப்பா... 

8. பொண்ணுங்க இருக்காங்களே மேரேஜ்க்கு முன்னே நாமளா வலிய போய் பேசுனாலும் கண்டுக்க மாட்டாங்க.. மேரேஜ்க்குப்பிறகு அவங்களா நம்ம கிட்டே வந்து வந்து பேசி தொந்தரவு பண்ணுவாங்க.. 

9.  இந்த மூஞ்சிக்கே ஒருத்தன் சிக்கி இருக்கான்.. எனக்கு ஒருத்தன் சிக்காமயா போயிடுவான்.. 

10. அறிவாளி, புத்திசாலின்னு சொல்றீங்களே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

டியர்.. அது அந்த பேருக்கும் தான் தெரியும்.. நமக்கென்ன அதை பற்றி


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_25_w800_h537_600024.jpg


11. பெத்தவங்களை பாரமா நினைக்கக்கூடாது.. நம்ம உடம்புல ஒரு பாகமா நினைக்கனும்..

12. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்

எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு  நல்லாத்தான் இருக்கும்.. 

 அப்போ டிரஸ்சே போடலைன்னா?

13. என் பொண்டாட்டி என்ன காரியம் பண்ணிட்டா தெரியுமா?

 என்னய்யா பிரச்சனை? எவன் கூடயாவது தப்பு பண்ணிட்டாளா?

 அப்படி பண்ணி இருந்தாக்கூட பரவாயில்லையே?

 அடப்பாவி. நீ  எல்லாம் ஒரு புருஷனா? என்ன தான் பண்ணித்தொலைச்சா?

 எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த குவாட்டரை ஒரு சொட்டுக்கூட எனக்கு மிச்சம் வைக்காம அவளே  எடுத்துக்குடிச்சுட்டா..

14. என்ன ஒரு விசித்திரம்னா இந்த உலகத்துல காதலை நம்பறதில்லை, ஆனா சாமியை நம்பறாங்க

15. ஒண்ணா வாழ்ந்தோம்னு பேர் எடுப்போம், இல்லைன்னா ஒண்ணா செத்தோம்னு பேர் எடுப்போம்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_08_w800_h537_600024.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. முழுக்க முழுக்க ஒரே ஒரு கிராமத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து காசை மிச்சம் பண்ணியது.. ஸ்க்ரிப்ட்டில் நம்பிக்கை வைத்து பெரிய நடிக நடிகைகள் யாரும் இல்லாமல் படம் எடுத்தது

2. ஹீரோயின் இருவரும்  படம் பூரா திருப்பூர் பனியன் அல்லது டி சர்ட் மட்டும் அணிந்து வருவது..  அதிலும் 42 சைஸ் அணீய  வேண்டிய இருவரையும் 40 எனும் எல் சைஸ் கொடுத்து அணீய வைத்தது .. ஹி ஹி

3. தோளோடு தோளாய் சேரும் கைகள், என் காதல் என 2 பாடல்களை கண்ணியமாக எடுத்தது.. ஆனால் இந்தப்படத்துக்கு பாடல்களோ, டூயட்டோ தேவை இல்லை என்பது வேறு விஷயம்

4. பின்னணி இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் ஓக்கே தான்.. பயப்படுத்த வேண்டிய இடத்தில் பயப்படுத்தி விறு விறுப்பை கூட்டும் இடத்தில் திரில்லிங் மியூசிக் ..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_06_w800_h537_600024.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.கதை நடக்கற இடம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள ஒத்திக்குதிரை எனும் கிராமம்.. அங்கே கார்ல வர்ற  ஆள் கிட்டே போலீஸ் லைசன்ஸ் , ஆர் சி புக் எல்லாம் கேட்குது.. கார் தமிழ் நாடு ரிஜெஸ்டரேஷன்... ஆனா அவர் ஆர் சி புக் காட்டாம ஏதோ அட்டை ஒண்ணை காட்றாரு.. கர்நாடகா ஸ்டேட் ல தானே அட்டை வந்துச்சு? தமிழ் நாட்ல இன்னும் புக் சிஸ்டம் தானே?

2. ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் 10 நிமிஷம் ஒரு ஆளை சும்மா விசாரிச்சுட்டு இருக்கார்.. அப்போ தான் ஜஸ்ட் லைக் வந்த எஸ் ஐ “ என்னப்பா ரொம்ப நேரமா அவன் கிட்டே விசாரிச்சுட்டு இருக்கே?” அப்டினு கேட்கறாரே? அது எப்படி?

3. வில்லன் தன் மகளை ஓங்கி ஒரு அறை விட்டதும் மக செத்துடறா.. உடம்புல எந்த காயமும் இல்லை... பார்க்க ஆள் தூங்கிட்டு இருக்கற மாதிரியோ, மயக்கம் அடைஞ்ச மாதிரியோதான் இருக்கு.. ஆனா அப்போ அந்த வழியா வர்ற நெல்லை சிவா  “ ஆள் அவுட்”னு உடனே எப்படி முடிவு பண்றார்? ரத்தம் பார்த்தாரா? மூக்குல கை வெச்சு மூச்சு நின்னுடுச்சா?ன்னு பார்த்தாரா?

4. ஹீரோவோட லவ்வரை வில்லன் கொலை பண்ணி புதைச்சுடறார்.. 9 நாட்களுக்குப்பின் ஹீரோ அண்ட் கோ அந்த டெட் பாடியை  குழி தோண்டி எடுக்கறாங்க.. அப்போதான் புதைச்ச மாதிரி ஃபிரஷ்ஷா இருக்கே? அது எப்படி? ( குமட்டும் வாசம் அல்லது அழுகிய உடல் தானே காட்டனும்?)

5.  க்ளைமாக்ஸ் வரை நீட்டா போன  கதைல திடீர்னு சம்பந்தமே இல்லாம ஆவியை எதுக்கு கொண்டு வந்தீங்க?

6. கொலையாளியா ஊர்ப்பெரிய மனுஷரே இருக்கறப்ப அவரே அந்த டீம்க்கு ஏன் எல்லா வசதியும் பண்ணித்தரனும்?அவர் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னா? தேவையே இல்லையே..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_35_w800_h537_600024.jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி  கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களும்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

Monday, May 16, 2011

HAUNTED 3D - பேய்ப்படமா? கில்மாப்படமா?- ஹிந்திப்பட விமர்சனம்

http://mimg.sulekha.com/hindi/haunted-3d/stills/haunted-3d-stills-011.jpg


நான் எழுதும் கன்னிப்பேய் பட விமர்சனம். அதுக்காக அந்தப்பேய் கன்னி என உனக்கு எப்படித்தெரியும்னு கேட்டுடாதீங்க.. முதன் முதலா ஒரு பேய்ப்படத்துக்கு விமர்சனம் எழுதறேன்.கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. படிக்கறவங்கள்ல பயப்படும் மனோ பாவம் உள்ளவர்கள் ,ஜேசுதாஸ் பாவம் இல்லாதவர்கள் எல்லாம் எதுக்கும் (அவங்கவங்க)சம்சாரத்தோட கையை பிடிச்சுக்கிட்டே படிங்க.. சம்சாரமே பேய் மாதிரி தான் என் கண்ணுக்குத்தெரியறா என சொல்பவர்கள் தனியாவே படிங்க.. ஹி ஹி

ஃபாரீன்ல இருந்து ஒரு பங்களாவை சேல்ஸ் பண்ணறது சம்மந்தமா ஒரு லேண்ட் புரோக்கர் இந்தியா வர்றார். அந்த பங்களாவுல பேய் இருக்குன்னு கண்டு பிடிக்கிறார். ( அது ஏன் பேய்ங்க எல்லாம் பங்களாவுலயே குடி இருக்கு?குடிசைப்பேய் ஒண்ணு கூட நான் பார்த்ததே இல்லை)வழக்கமா எல்லா பேய்ப்படங்கள்லயும் வர்ற ,மாதிரி அலறல் சத்தம், டபார்னு ஒரு உருவம் ஓடறது, தனி தலை மட்டும் குப்பைக்கூடைல கிடக்கறதுன்னு ஓப்பனிங்க் பில்டப் முடிஞ்சதும் இயக்குநர் கதைக்கு வர்றார்.


அந்த பெண் பேய் தன்னோட ஃபிளாஸ்பேக்கை டைரி மூலமா சொல்லுது.. ( வழக்கமா ஆண் பேய்க்கதைன்னா எவனும் சீண்ட மாட்டான்னு எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை)

http://imedia.cinebasti.com/cb/galery_movies/medium/Haunted_3d_movie_still1.jpg





18 வயசு ஃபிகரு..70 மார்க் ( டென்த்லயா? பிளஸ்டூலயா?ன்னு கேட்கற அப்பாவிகளெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்).. அம்மா அப்பா ஊர்ல இல்ல.. தனியா இருக்கு.. ( அட்ரஸ் பிளீஸ்..னு  யாரும் எஸ் எம் எஸ் பண்ணாதீங்க.. இது கதை..)பியானோ கத்துக்குடுக்கற புரொஃபசர் இப்போ எண்ட்ரி ஆகறார். ( தியேட்டர்ல ஒரு பையனாவது கண்ணை இமைக்கனுமே?)ஆண்டாண்டு காலமா வில்லன் ஹீரோயினை என்ன பண்ணுவானோ  அதே மேட்டரை இவனும் பண்ண ட்ரை பண்றான். ( எதுக்கு நடந்ததை  டைரக்ட் ஸ்பீச்ல சொல்லாம இண்டைரக்ட் ஸ்பீச்?ல சொல்றென்?ஏன்னா இது ஒரு கண்ணியமான பிளாக்.. ஹி ஹி )

பொதுவாவே ஹீரோ கூட பிரமாதமா ஃபைட் போடற வில்லன்க எல்லாம் ஹீரோயின் கிட்டே தோத்துடுவாங்க.. ( நற நற..)ஹீரோயின் வில்லன் தலைல மடார்னு ஒரு லேம்ப் போஸ்ட்டால ஒரு போடு போடறா.வில்லன் அவுட்.. ( அட போங்கப்பா.. சுவராஸ்யமும் அவுட்..)


வில்லன் ஆவி ஆகிறான்.( ஒரு பாவி ஆவி ஆகிட்டான் அடடே,... ஆச்ச்சரியக்குறி )இப்போ வில்லன் பேயா மாறியும் திருந்தலை... ( அதானே நமக்கு வேணும்..?)


வில்லன் ஹீரோயினை ரேப்பிடறான்.. ( என்ன கண்றாவி தமிங்கிலீஷ் வார்த்தை இது..?)தினத்தந்தி ரசிகர்கள் மட்டும் ரேப்புக்கு முன்னால கதறக்கதற என்ற வார்த்தையை சேர்த்துக்கவும்.இப்போ தான் டைரக்டர் ஒரு காமெடி பண்றார்.. இந்த புனித வேலையை வில்லன் 80 வருஷமா கண்ட்டினியூ பண்றாராம்.நான் தெரியாம தான் கேட்கறேன்.. போர் அடிக்காது? ஒரே பங்களாவுல ஒரே ஃபிகரை மடக்கி வெச்சு எந்த மடையனாவது 80 வருஷம் ரேப் பண்ணிட்டே இருப்பானா?http://g.ahan.in/hindi/Haunted%203D%20Movie%20Special%20Show/Haunted%203D%20Movie%20Special%20Show%20(4).jpg





இதுல தான் இயக்குநர் தன் புத்திசாலித்தனத்தை காட்றார்.பேய்க்கு வயசே ஆகறது இல்லையாம். சேம் ஏஜ்.. ( லாஜிக்கு..?)

ஃபிளாஸ்பேக் முடிஞ்சதும் ஹீரோ கடந்த காலத்துக்குப்போய் அந்த கொலையை தடுக்க ட்ரை பண்றார்.. ( காதுல பூ)ஆனா முடியலை.. அவர் கண் முன்னால அதே சம்பவங்கள் மீண்டும் நடக்குது..

அப்போ தான் ஒரு மத போதகர் ஹீரோயினிடம் நீ இரண்டற கலந்து விட்டால் பேய் கிட்டே வராது.. ( இரண்டற கலக்கனும்னா 2 டைம் கலக்கனுமா? #டவுட்டு )


சரி.. இப்பவாவது சீன் உண்டுன்னு ஆர்வமா பார்க்கறவங்க எல்லாம் டூயட் சீன் பார்த்து கடுப்பாகிடறாங்க..

அப்புறம் பாலமித்ரா, அம்புலிமாமா கதைல வர்ற மாதிரி ஹீரோ ஹீரோயினை எப்படி காப்பாத்தறார்ங்கறது தான் மிச்ச சொச்ச திரைக்கதை..

http://www.celluloidtamil.com/wp-content/gallery/haunted-3d/haunted-3d.jpg



இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்



1. ஹீரோ முதன் முதலா பங்களாவுல எண்ட்ரி ஆனதும் திடீர்னு ஒரு உள்ளங்கை மட்டும் கண்ணாடிக்கதவுல ரேகை பதிச்சு ஆ என அலறும் சத்தம் எடுக்கப்பட்ட விதம் கிளாசிக்.. தியேட்டர்ல அலறாதவங்க கம்மி..

2. தட்டு முட்டு சாமான்கள் வைக்கப்பட்ட அறைக்குள் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட தலையை மட்டும் காட்டும் இடத்தில் எழும் பகீர் உணர்வு.. ஹார்ட் பேஷண்ட்ஸ் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்.


3. திடீர் என தூக்கில் தொங்கியபடி ஊசலாடும் பெண்ணின் பிணம் ( ஒளிப்பதிவு செம)





http://img.india-forums.com/wallpapers/1280x1024/124046-twinkle-bajpai-and-mimoh-chakraborty-in-the-movie-haunted-3d.jpg

--


வசனங்களில் பளிச் வசனங்கள்



1. துஷ்ட தேவதையோட அல்லது ஆவியோட பெயரை சொன்னா அதனோட சக்தி அதிகம் ஆகிடும்.. ( இனிமே சம்சாரம் கூட சண்டைன்னா அவ பேரை சொல்லக்கூடாது #நீதி)


2. கண்ணா.. லட்டை மிஸ் பண்ணீட்டே.

3, வம்பு பண்ணனும்னு நினைச்சிருந்தா அப்பவே வம்பு பண்ணி இருப்பனே? என்னை நம்பு.. ( நம்ப முடியாது.. நீ லேட் பிக்கப்போ என்னவோ?)


4. நான் உனக்கும், உன் தலை எழுத்துக்கும் நடுவுல இருக்கேன்.. (நீ என்ன பிரம்மாவோட செகரட்ரியா?#டவுட்டு)

5. பேய்க்கு எழுதப்படிக்கத்தெரியாது... ( ஏன் எல்லா பேய்களும் அன் எஜூக்கேட்டட்டா இருக்க்கு? #டவுட்டு)

6. பொதுவா பேய்ங்களுக்கு விடிகாலைல 3 மணிக்கு பலம் அதிகம் ஆகும், மதியம் 3 மணிக்கு பலவீனம் ஆகிடும்.. ( அப்போ மிட் நைட்ல 12 மணிக்கு பயப்பட வேண்டியது இல்லையா?)


 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்


 1. மிக சிறப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநர் க்ளைமாக்ஸ் ஆவி ஒழிப்பு சீனில் சொதப்பியது... படமே முடிஞ்சாச்சு என நிம்மதிப்பெரு மூச்சு விடும்போது 2வது க்ளைமாக்ஸ் வைத்து போர் அடித்தது..

2. தனிமைல இருக்கற பொண்ணு மாஸ்டர் பியானோ கத்துக்க வர்றார்னு தெரிஞ்சும் அவ்வளவு லோ கட் ஜாக்கெட் போடுவாளா?
( துப்பட்டா கூட போடலை)

3.வில்லன் ஹீரோயின் பின்னால நின்னு 10 நிமிஷம் உரசிட்டு கூந்தலை மோப்பம் பிடிச்சுட்டு நிக்கற வரை ஹீரோயினுக்கு எதுவுமே தோணலையா?( இதை ஏன் கேட்கறேன்னா பெண்களுக்கு முன் ஜாக்கிரதை உணர்வும், விழிப்புணர்வும் ஜாஸ்தி.. டக்குன்னு கண்டு பிடிச்சுடுவாங்களே..?)

4. மத போதகர் புனித நீர் ஜக்கு எடுத்துக்குடுத்து பேய் வந்தா யூஸ் பண்ணிக்குங்க.. ஆனா இது டெம்ப்ரவரி தான்.. பர்மணண்ட் கிடையாது அப்படிங்கறார்.. கடவுளின் பவர்ல கூட அப்படி டெம்ப்ரவரி, பர்மணண்ட் என 2 வித பவர் இருக்குமா?


5. ஹீரோயின் கழுத்துல இருக்கற செயினை கிணத்துல போட்டுட்டா பேய் செத்துடும். செயினை தூக்கி கிணத்துல போட்டாச்சு.. ஆனா அது தண்ணீல விழாம ஒரு கல்லுல இருக்கு. இது ஹீரோ , வில்லன் 2 பேருக்கும் தெரியும்.. அப்போ வில்லன் பேய் முத வேலையா அந்த செயினை பறிக்கத்தானே முயற்சி செய்யும்? ஆனா படத்துல 80 வருஷமா பல தடவை ரேப் பண்ணூன ஹீரோயினை மறுபடி 2756 வது தடவையா ரேப் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கே? அது ஏன்?

6. ஹீரோ கடந்த காலத்துல  போய் வில்லனை அழிச்சிடறார் ஓக்கே.. ஆனா ஹீரோயின் வேற ஒருவரை கல்யாணம் பண்ணிடறதா காட்றாங்களே அது எப்படி? டைம் மெஷினோட லாஜிக் படி இறந்த காலத்துல போனா எந்த சேஞ்சும் பண்ணிடக்கூடாது என்பது தானே?



மொத்தத்துல படத்துல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இது ரசிக்க வேண்டிய பேய்ப்படம் தான். ஆனால் பெண்கள், கர்ப்பிணிகள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், சிறுவர் , சிறுமியர்கள்,மாணவர்கள் இந்தப்படத்தினை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்ப்படுகிறார்கள்.

 சில ஊர்களில் இது ஆத்மா 3டி என தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது .


ஈரோட்டில் ஸ்ரீலட்சுமி தியேட்டரில் போட்டிருக்காங்க..  


டிஸ்கி 1 - கீரை வகைகளும் சமையல் செய்யும் முறைகளும்  

டிஸ்கி 2 -சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை? 

 டிஸ்கி 3 - அழகர் சாமியின் குதிரை - அழகிய கிராமம்+பழகிய காதல் - சினிமா விமர்சனம்