Wednesday, October 23, 2013

ரகளபுரம் -சினிமா விமர்சனம்



நான் சின்னப்பையனா இருக்கும்போது துப்பறியும் சாம்பு அப்டினு படக்கதை படிச்ச நினைவு இருக்கு. அதுல ஹீரோ எது செஞ்சாலும் அவரையும் அறியாம அது மக்களுக்கு நல்லதாவோ , கெட்டவங்களுக்கு எதிராவோ அமைஞ்சு அவரை உலகமே கொண்டாடும் . அந்த மாதிரி ஏ கிளாஸ் கதையை , சம்பவங்களை  முடிஞ்சவரை  லோ கிளாஸா எடுத்து சி செண்ட்ட்ர் ஆடியன்சை கவர முயன்ற படம்  தான்  கருணாசின் சொந்தப்படமான ரகளை புரம்

ஹீரோ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் , பயந்த சுபாவம் .அப்பா அவருக்குன்னு விட்டுட்டுப்போனது கடன்  தான். ( எல்லா அப்பாக்களும் கலைஞர் மாதிரியே சொத்து சேர்த்து வெச்சுட்டு இருக்க முடியுமா? ) தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுவது மாதிரி , நயன் தாரா ஏதாவது விழாவுக்கு வரும்போது எதேச்சையாவோ , ஏதாவது ஒரு இச்சையாவோ சிம்புவும் அங்கே ஆஜர் ஆவது போல் மத்த போலீஸ் செய்யும் சாகசங்களால் ஹீரோவுக்கு நல்ல பேரு கிடைக்குது . 


சக போலீஸ் ஒருவரின் சதியால் ஹீரோவுக்கு பிளட் கேன்சர் இருப்பதா தவறான தகவல் ஹீரோவுக்கு தெரிய வருது . இதனால வாழ்க்கைல விரக்தி அடைஞ்ச அவரு தன் காதலி தன்னை வெறுக்கட்டும்னு வேணும்னே மத்த பொண்ணோட  சுத்துவது மாதிரி  டிராமா பண்றார் , போலீஸ் டியூட்டி ல வீரசாகசம் செய்யும்போது செத்தா ஏராளமான பணம் வரும் , அது தன் குடும்பத்துக்கு உபயோகமா  இருக்கும்னு  அவர் பண்ணும்  கோமாளிக்கூத்துக்கள் தான் மிச்ச மீதி திரைக்கதை .


தயாரிப்பாளர் கம் ஹீரோ கருணாஸ் .  எடுத்துக்கொண்ட  கதை அவருக்கு கனகச்சிதம் , ஆனா  திரைக்கதை  அமைக்கும்போது போதுமான சிரத்தை  இல்லை . இப்பவெல்லாம்   காமெடி டிராக் எழுதறவங்க  சிரிப்பு வர்ற மாதிரி எழுதறதே இல்லை , காமெடி நடிகர்கள் ஏதாவது  மொக்கை போட்டா மக்கள் சிரிச்சுடுவாங்கன்னு தப்பா கணக்கு போட்டுடறாங்க .


கருணாஸ் டூயட் எல்லாம் ஆடறார் ., முன்னணி  ஹீரோக்கள் மாதிரி போஸ்  கொடுக்கறார் , ஒரு லிப் கிஸ் வேற ( சென்சார் கட் )  ஒரு  நல்ல குத்தாட்டப்பாட்டுக்கு கேவலமான  டான்ஸ் மூவ்மெண்ட் தர்றார்  . ஹூம். லோ கிளாஸ் ஆடியன்ஸ் கிட்டே கிளாப்ஸ் வாங்கனும்னா லோ லெவல் ல இறங்கனும்னு இவங்களா நினைச்சுடறாங்க . 


ஹீரோயின்  புதுமுகம் அங்கனாராய் , நேட்டிவ் பெங்களூராம் , இனி அங்கனவே இருக்கவேண்டியதுதான் . சுமார் மூஞ்சி குமாரி .  மேக்கப் மட்டும் சுமாரைத்தாண்டி.. இப்பவெல்லாம் லட்டு ஃபிகருங்க போடற மேக்கப்பை விட அட்டு ஃபிகருங்க போடும் மேக்கப் தான்  தூக்கலா இருக்கு , அதுவே அவங்களைக்காட்டிக்கொடுத்துடுது. இந்த  35 மார்க்  ஃபிகருக்கு  இதெல்லாம்  ஓவர்.




கிளாமருக்காக  சஞ்சனாசிங்க் . இதுவும் தேறாத ஃபிகர் தான் . பொதுவா  தமிழனுக்கு  குதிரை மாதிரி வாட்டசாட்டமா  இருக்கும்  ஃபிகரை பிடிக்கும், ஆனா குதிரை மாதிரி நீள் வட்ட முகம்  பிடிக்காது . ( டேய் , ராஸ்கல் நீ பொண்ணா கட்டற?” ) 


 கோவை சரளா , சிங்கம் புலி காமெடி ஆங்காங்கே கலகலப்பூட்டுது . சிங்கம்புலியின்  டைமிங்க் சென்ஸ் , வாய்ஸ் மாடுலேஷன் அருமை . 

 மனோபாலா  தோற்றத்திலேயே சிரிப்பை வரவழைக்கும் நல்ல ஒரு காமெடி நடிகர்  அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனால் சைக்காலஜிக்கலாகப்பார்க்கும்போது  ஒரு காமெடி  ஹீரோ , ஹீரோவாக நடிக்கும்போது அதுவும் அவர் சொந்தப்படமாக  இருக்கும் பட்சத்தில்  தன்னைத்தவிர வேறு யாரும் காமெடி செஞ்சு பேர் வாங்கிடக்கூடாது  என  நினைப்பது இயல்பு , கருணாசும் அதற்கு விதி விலக்கல்ல 

  டெல்லி கணேஷ் , உமா பத்மனாபன்  எம் எஸ் பாஸ்கர்  உட்பட ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் .


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சுடுகாட்டு கானா செம கலக்கு கலக்குது . அதே போல் அடி தேவலோக ரதியே , சூடாமணி , ரகள புரம் என எல்லாப்பாட்டுக்களுமே  சராசரிக்கும் மேலே . 



2. படம் மொக்கைக்காமெடியாக  இருந்தாலும்  ரொம்ப  பொறுமையை சோதிக்காம  உட்கார்ந்து பார்க்கும் விதத்தில் திரைக்கதை அமைச்சது 


3 போஸ்டர்  டிசைனில் சிங்கம் 3 வருது  என பில்டப் கொடுத்தது . பாவம்  சூர்யா . 


4.  ஜெயிலில் இருந்து வெளியே வரும் லாரியில்  கைதிகள் இருப்பதாக  ஹீரோ அள்ளி விட  நிஜமாகவே அங்கே கைதிகள்  இருப்பதும்  அதைத்தொடர்ந்து  வரும் சேசிங்க் காட்சியும் . ஹீரோ எதேச்சையாக செய்யும் விஷயங்கள் எல்லாம் சாதனை ஆகும்  4 வெவ்வேறு சம்பவங்களின் நம்பகத்தன்மை 


5 லோ  கிளாஸ் ஆடியன்சின் கவனம் கவரும் ஷகீலா டான்ஸ்





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. ஒரு கான்ஸ்டபிள் ஏதோ ஒரு ரவுடியை பிடிச்சுக்கொடுத்தார் என உடனே அவருக்கு இன்ஸ்பெக்டராக பிரமோஷன்  கிடைப்பது எப்படி?  சட்டப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆன ;பின்  தானே  இன்ஸ்பெக்டர் ஆக முடியும் ? 


2. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக  இருப்பவருக்கு (ஒரு பேச்சுக்கு) இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்தால் அவர் அதுவரை பார்த்த ஸ்டேஷனில் வேலை பார்க்க முடியாது . வேறு ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்ஃபரோடுதான் பிரமோஷன் கிடைக்கும் 


3 ஹீரோ தன்  முத மாச  சம்பளம்னு அம்மா கிட்டே பணம் கொண்டு வந்து தரும்போது  ஹால் ல மாட்டி இருக்கும் டெய்லி ஷீட்  காலண்டர்ல 16ந்தேதி காட்டுதெ? மாசா மாசம் 28ந்தேதியே அரசு சம்பளம் பட்டுவாடா பண்ணிடுவாங்களே, இது தமிழக் அரசை அவமானப்படுத்துவது ஆகாதா? 

4  சப் இன்ஸ்பெக்டர் ஒரு கமிஷனர் முன் அடக்கமாக இருக்கனும்னா  அட்டென்ஷன் பொசிசனில் தான் நிற்பார் , இப்படி கை கட்டி நிக்க மாட்டார் . அவர் என்ன அரசியல்வாதியிடம் வேலை  பார்க்கும் அல்லக்கையா? 


5 இன்ஸ்பெக்டரின் சம்பளம் 30,000  என  ஒரு இடத்தில் வசனம் வருது . கைல வாங்குவதே அவ்வளவு என்பது மாதிரி , ஒரு இன்ஸ்பெக்டரின் டேக் ஹோம் சேலரி ரூ 24,500  தான் 


6  பிளட் கேன்சர் ஒரு தீராத வியாதி  என நம்பிக்கை வருவது போல் காட்சி அமைப்புகளும் , வசனங்களும் வருது  இது கண்டிக்கத்தக்க ஒன்று , படம் பார்க்கும் ஆடியன்சிடம் இது தவறான பயத்தைக்கொடுக்கக்கூடும் 





7 சாதாரணமா ஒரு வைரஸ் காய்ச்சல் வந்தாலே ரெண்டு , மூணு ஹாஸ்பிடல் ல செக் பண்ணி கன்ஃபர்ம்  பண்ணுபவன்  தமிழன் . பிளட் கேன்சர் என தெரிஞ்சா  ரீ செக்கப் ஏன் செய்யல ? 


8  போலீஸ் ஸ்டேஷன் ல சம்பந்தமே இல்லாம எம்   ஜி ஆர் படம் மாட்டப்பட்டு இருக்கே, எதுக்கு ? ஆட்சியாளர்களை குஷிப்படுத்தவா?  முன்னாள் முதல்வர்கள் என சால்ஜாப்பு சொன்னா அங்கே கலைஞர் ஃபோட்டோவும்  இருக்கனுமே? 


9 பணயக்கைதியா பப்ளிக் 15 பேரைப்பிடிச்சு மிரட்டும் ஒரு தீவிரவாதி  ஒரே ஒரு போலீஸ் ஆல்ட்டர்நேட்டிவ் பணயக்கைதியா வந்ததும் 15 பேரை எப்படி  விடுவிப்பான்? 


10 போலீஸ்  கான்ஸ்டபிளா வர்ற எல்லோரும் காக்கி பெல்ட் போட்டிருக்கும்போது  சிங்கம் புலி , கோவை சரளா மட்டும் ஏன் ப்ளூ பெல்ட் போட்டிருக்காங்க ? 


11  காமெடி என்ற பெயரில் பயந்தாங்கொள்ளி பயத்தில் பேண்ட்டோடு நெம்பர் ஒன் போவதை ஒரு டைம் காட்டலாம். 2 டைம் காட்டலாம் . 10 நிமிஷத்துக்கு ஒரு டைம் காட்டிட்டே இருக்க அது என்ன நமீதா  முதுகா? 


12 படம்  முழுக்க ஏகப்பட்ட டபுள் மினிங்க் டயலாக்குகள் , கேவலமான கேமரா கோணங்கள் இந்த லட்சணத்துல  இதுக்கு யூ சர்ட்டிஃபிகேட் வேற ,. நிஜமாவே சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு டபுள் மீனிங்க் டயலாக்ஸ்  புரியலையா? கை நீட்டிட்டாங்களா?  


13  குறிப்பிட்ட தீவிரவாதியைப்பிடிச்சா ரூ 10 லட்சம் பரிசுனு சொல்லப்படுது , ஆனா  ஹீரோ 20 லட்சம் கிடைச்சிடுச்சுன்னு டயலாக் ல சொல்றார் , பணத்தோட மதிப்பு  அவ்ளவ்  குறைஞ்சிடுச்சா? 


 

மனம் கவர்ந்த வசனங்கள் 


1.  செய் அல்லது செத்து மடி   சார் 


 என்னது மடிசாரா? 


2  அக்யூஸ்ட்டைப்பார்த்தாத்தான் லத்தியைத்தூக்கனும் , சும்மா சும்மா தூக்கிட்டே  இருந்தா நஞ்சுடும் ( நைந்து போய்டும் )


3 டியுட்டிக்குப்போன உன் புருஷன் வர்லை , ஊட்டிக்குப்போன என் பொண்டாட்டி வர்வே போறதில்லை , கடவுள் ஏதோ கால்குலேட் பண்ணித்தான் நம்மளை சேர்த்திருப்பாரோ ? 



4 சரியான வயசுல மேரேஜ் பண்ணலைன்னா பொண்ணுப்பார்க்க முடியாது , பொம்பளை தான் பார்க்கனும் 


5  பேர் என்ன ? 

 கல்யாணி ?

 உங்கப்பா  டாஸ்மாக்ல இருக்காரா? பீர் பேர் வெச்சிருக்காரு? 



6 பெரிய விஷயத்துக்கு ஆசைப்பட்டா  புதுசா பிளான் பண்ணி ஹார்டு ஒர்க் பண்ணனும் ]


7 நம்ம குத்து விளக்கை வெச்சு இவன்  குத்துவிளக்கை ஏத்திடுவான் போல இருக்கே? 


8  சாரி மேடம், என் கிட்டே சில்லறை இல்லை 


 இருந்தா மட்டும் தந்துடப்போறியா? 


9 நாம பண்ணப்போற இந்த ஆபரேஷனுக்கு நான்  கொ ஆபரேட் பண்றேன் , யூ டோண்ட் ஒர்ர்ரி 


10  நீங்க பைக்  சூப்பரா  ஓட்டறீங்க 


 நான் பழைய லாரியே நல்லா ஓட்டுவேன் 


வ்


11  காதலனா இருந்தா  அவ தொடவே விடமாட்டா, கணவனா  இருந்தா அவன் தொடவே மாட்டான், அநெகமா  இது கள்ளக்காதலாத்தான் இருக்கனும் 


12 . சாரி எனக்கு  ஹிந்தி தெரியாது 

 பாடி லேங்குவேஜ்க்கு எதுக்கு அந்த லேங்குவேஜ்? 


13  ஹூம் , நான் போகாத பொண்ணில்லை , வாங்காத புண்ணில்லை 


14 வாழப்போறவன் தான் பயப்படனும், சாகப்போறவன் சந்தோஷமா  இருக்கனும் 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-37


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2.25   / 5


சி பி கமெண்ட்  - டி வி ல போட்டா பார்க்கலாம் , தியேட்டர்ல போய்ப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . 10  ரூபா கொடுத்து பெஞ்ச் டிக்கெட் ல பார்க்கும் அளவு இருக்கு 
 


இந்தப்படத்தை விருதாச்சலம் அருகே உளுந்தூர்ப்பேட்டை ஸ்ரீ நாராயணா தியேட்டர் ல பார்த்தேன் . 40  ரூபா தான் பால்கனி டிக்கெட்டே . படத்துக்கு ஏகப்பட்ட கள்ளக்காதல்  ஜோடிங்க வந்திருந்தாங்க . அதுல  ஒரு ஜோடி தியேட்டர்லயே டான்ஸ் வேற ஆடுனாங்க, இது தியேட்டரா? விழா மேடையா?>னு டவுட்டே வந்துடுச்சு , இது பற்றித்தனி பதிவு விரைவில் 



3 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்ப படம் பாக்கலாம்ன்னு சொல்றீங்க...

jegan said...

Yov..loosu..ithu just comedy padam.logic lam parkka kudathu...

jegan said...

very worst comments..dont insult cinima..