Monday, April 02, 2012

மீராவுடன் கிருஷ்ணா - டவுட்டு டேவிட்டு மிஸஸ் ரிவீட்டு - சினிமா விமர்சனம்

http://filmglitz.com/tamil/wp-content/uploads/2012/03/meeravudan_krishna_audio_launch_Stills-1.jpg

புரியாத புதிர் வந்த சீசன்ல ரகுவரன், பிரகாஷ்ராஜ் 2 பேருக்கும் ரெகுலரா தரப்படும் கேரக்டர் சைக்கோ கணவன் கேரக்டர் தான்.. மனைவி மேல் சந்தேகப்பட்டு அவங்க பண்ற வித்தியாசமான சைக்கோத்தனங்கள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. ஒரு சாதாரண  சராசரி குடும்பத்தலைவன் சந்தேகப்பிராணியா இருந்தா? இதுதான் படத்தோட ஒன் லைன்..


ஹீரோ 35 வயசான ஆள்.. லேட் மேரேஜ்.. சம்சாரம் டாக்டர். அவங்க நல்ல டைப் தான். ஆனா அவங்க க்ளினிக்ல இருக்கற எம் டி ஜொள் கேஸ்.. லைட்டா பிட்டை போடறார்.. மேடம் மசியலை. உடனே ஹீரோவுக்கு அனாதமதேய ஃபோன் கால்ஸ் போட்டு உன் சம்சாரம்  கேரக்டர் சரி இல்லைன்னு அள்ளி விடறார்.. 

 ஆல்ரெடி ஹீரோ ஒரு டைப்பான டவுட் பார்ட்டி.. ஒயிஃபை கண்காணிக்கறார்.. அதனால என்ன பிரச்சனை ஏற்படுதுங்கறது கதை.. 

 அது போக ஹீரோ ஏன் இப்படி ஆனார்?ங்கறதுக்கு ஃபிளாஸ் பேக்ல 3 சம்பவங்கள்



http://img1.dinamalar.com/cini/ShootingImages/14493965491.jpg

1. அவர் சின்ன வயசுல அவரோட அம்மா பாத்ரூம்ல குளிக்கறப்ப ஹீரோவோட ஃபிரண்டே எட்டிப்பார்த்துடறான்.. (அதனால்  நண்பர்கள் என்றாலே வெறுப்பு )

2. ஹீரோவோட ஃபிரண்ட் சம்சாரம்  ஃபிரண்டுக்கு துரோகம் பண்ணிடறா

3. தன்னோட ரோல் மாடல்னு தான் நினைக்கற ஒரு நல்ல மனிதர் க்கு அவர் மனைவி துரோகம் பண்ணிடறாங்க.. 

 டாக்டரான மனைவி எப்படி பொறூமையா தன் கணவரை டீல் பண்ணறாங்க என்பது தான் மிச்ச கதை.. 

 படத்தோட டைரக்டரே ஹீரோ.. சராசரி பக்கத்து வீட்டுக்காரர் முகம்.. இயல்பான நடிப்பு.. கண்ணாடி முன் நின்னுக்கிட்டு அந்நியன் விக்ரம் மாதிரி மாத்தி மாத்தி முகபாவனை காட்டி வசனம் பேசி தன்னைத்தானே கலாய்ச்சுக்கறதும் அவர் ஒரு மிமிக்ரி மேன் என்பதும் கூடுதல் சுவராஸ்யம். 

ஓப்பனிங்க்ல ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் அவரை ஒரு ரூம்ல தள்ளி அங்கே ஒரு டிக்கெட்டை புக் பண்ணூவதும் அந்த டிக்கெட்டுக்கே யோகா கத்துக்குடுத்து புலம்ப வைப்பதும் செம  பாக்யராஜ் ஐடியா.. அதே டிக்கெட் பின்னாளில் மனைவியின் முன் நலம் விசாரிப்பதும் டவுட் வர்ற மாதிரி பேசுவதும் குட் ஒன்.. 

 எப்பவும் இது நம்ம ஆளு மாடு மாதிரி கில்மா முனகலுடனே அலையும் வேலைக்காரி கேரக்டர் ஓவர். ஓவரோ ஓவர். ஆனாலும் கிளு கிளுப்பு தான் ..ஹீரோயின் கொழு கொழு குண்டு முகம்.. ஆனாலும் அவர் டாக்டரா வர்றதாலயோ என்னவோ அவ்வளவா கிளுகிளுப்பு வர்லை.. மனசுக்குள்ள மரியாதை தான் வருது.. இது அவருக்கு பிளஸா மைனஸா?ன்னு போகப்போகத்தான் தெரியும்..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/03/Meeravudan-Krishna-15.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


1. கமல் போல் இல்லைன்னாலும் நானா படேகர் மாதிரி இல்லை?

மூஞ்சியையும் ,முகரையையும் பாரு..

 ஏம்மா...?


2.  ஆஹா.. எல்லாம் ரெடி பண்ணிட்டேன்./. இனி எப்படி இடி வருதுன்னு நான் பார்க்கறேன்..

 இடி தாங்கி வெச்சு பில்டிங்க்கை காப்பாத்திட்டே, ஓக்கே.. பூகம்பம் வந்தா என்ன பண்ணுவே?

நாளைல இருந்து நீ பேப்பர் போடாதே..


3.  வயசுக்கு வந்த பொண்ணையும், வாங்கிட்டு வந்த சரக்கையும் காக்க வைக்கக்கூடாது


4.  என்ன?

 வேலைக்காரி - பால் குடுக்க வந்தேன்..

 சூடா இருக்கில்ல?

 ம்.. ஆத்திக்குடுக்கவா? அப்படியே குடுக்கவா?


5. மாப்ளை.. காபில சீனி இருக்கா?

 ம்

 அப்போ பொண்ணுக்கு மாப்ளையை பிடிச்சுப்போச்சுன்னு அர்த்தம்.. ஏன்னா மாப்ளை பிடிக்கலைன்னா என் பொண்ணு சர்க்கரை போட மாட்டா..


6. ஒரு கண்டிஷன்.. பொண்ணு மேரேஜ்க்குப்பிறகும் டாக்டரா ஒர்க் பண்ணூவா..

 நோ பிராப்ளம்.. கல்யாணத்தன்னைக்குக்கூட அவங்க டியுட்டிக்கு போலாம்..

7.  டியர்.. நீ ரொம்ப அழகு..

 போங்க பொய் சொல்றீங்க..

 கள்ளி.. கரெக்டா கண்டு பிடிச்சுட்டியே.... ( எஸ் வி சேகர் -ன்  ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடக வசனத்தில் சுட்டது )


8. தட்டுல கை கழுவாதீங்க..

 ஏன்?

 குடும்பத்துக்கு ஆகாது

9. அத்தான்.. சாப்பாடு எப்படி இருந்தது? ( டபுள் மீனிங்க் )

 நான் பசிக்கு சாப்பிறவன் இல்லை.. ருசிக்கு சாப்பிடறவன்

 ம்க்கும்.. இதுக்கு நான் கேட்காமலயே இருந்திருக்கலாம்


10.  மண் வெட்டுற மம்முட்டி மாதிரி இருந்தான்.. இப்போ மெகா ஸ்டார் மம்முட்டி  மாதிரி ஆகிட்டானே..


11.  கடன் வாங்கி உன் பொண்ணுக்கு காது குத்துறியா? அப்போ நீ மொத்தம் 2 பேருக்கு காது குத்தறே?


12.  ஹூம்.. கம்பி மாதிரி ஒரு தம்பி..

13. கள்ளழகர்னு இவனுக்கு மனசுக்குள்ள நினப்பு. பைக்ல வர்ற ஸ்டைலைப்பாரு.. கன்னத்துல காடு வளர்த்து அதை மீசைன்னு சொல்றான்..


14.  மேடம்.. ஓப்பன் பண்ணுங்க...

 வாட்?

 ஐ மீன்.. மை கிஃப்ட்டை.. ஹி ஹி


15.  சிக்ஸ் பேக் இருந்தாத்தான்  பொண்டாட்டிக்குப்புருஷனைப்பிடிக்கும்னா
 அத்தனை ஆம்பளையும் சி ஜி ஆபரேஷன் தான் பண்ணிக்கனும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7kygQ_Ey2ryyTcoM0JRroqVqBC54-N2dHCjkwjfpA2sIhzUfxTumnZkbK0stg1gt2lzrvq6myoEYicskJoBsCj2eQdZRIKbptLkG3D0UrIG8Pg9MUyB62uwt0MR-ia6gM-z_G8WII6FY4/s320/Meeravudan+Krishna+Movie+Stills++Mycineworld+Com+(5).jpg


16. .பைக்ல இருக்கற நெருக்கம் கார்ல கிடைக்காது.. டியர்..

17. இன்ஸ்பெக்டர் சார்.. பைக்ல போறப்ப முன்னால போற பொண்ணோட இடுப்புல லைட்டை ஜூம் பண்றான் சார்.

 மனசில் - ஹூ,ம்.. நாம டியூட்டிக்கு வர்றதுக்கு முன்னே என்ன பண்ணிட்டு இருந்தமோ அதை இவன் பண்ணி இருக்கான்..


18. அத்தான்.. நீங்க அப்பா ஆகிட்டீங்க..

 நீ அம்மா ஆகிட்டேன்னு சொல்லு

19. மேடம்.. நீங்க நைட் 12 மணிக்கு வான்னு நான் கூப்பிட்டாக்கூட வந்துடறீங்க..

 வாட்?

 அந்த அளவு டியூட்டில சின்சியர்னு சொல்ல வர்றேன்..


20.  புருஷன், பொண்டாட்டிக்குள்ள நடக்கற சின்ன சின்ன சண்டை எல்லாம் பெரியவங்களுக்குத்தெரியாம இருக்கறது நல்லதுதான்.. ஆனா பெரிய பிரச்சனைன்னா சொல்லியே தீரனும்..


21. தப்பு செஞ்சவங்க  அதை ஒத்துக்கிட்டாலே திருந்திட்டதா அர்த்தம்.. ஆனா சில பொம்பளைங்க தப்பு பண்ணிட்டு கடைசி வரை ஒத்துக்கிடவே மாட்டாங்க..


22. பொம்பளைங்க தப்பு பண்ணுனா ஆம்பளை மானஸ்தனா இருந்தா தூக்கு போட்டுக்குவான்.. கோபக்காரனா இருந்தா  கொலை செய்வான்..

23. மத்தவங்க பார்க்கறப்ப  சந்தோஷமா இருக்கற மாதிரி நடிச்சா போதாது.. புருஷனுக்கு உண்மையா இருக்கனும்..




24. செல் ஃபோனைக்கண்டு பிடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சா....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDwOGa60quCJ1qmLAO8UuaUE2XimgOnAZmXiCCBeJJLHZJLqlRqtBLuEt169B4802QDXVSFkmcMEl287_OF3gwHIe-CJIDnm2FWst2LEd3ntuXgKwEKFRdms8BTUTyYLwaaQm9uoO_Iws/s640/Meeravudan+Krishna+Movie+Stills+Meeravudan+Krishna+New+Movie+Photos+(22).jpg




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோ அடிக்கடி கண்ணாடி முன் நின்று அந்நியன் விக்ரம் மாதிரி முக பாவனை மாற்றி மாற்றி பேசி தன் குணாதிசயத்தை வெளிப்படுத்துவது

2.  நண்பர்கள் டிக்கெட்டை ரெடி பண்ணி ஹீரோவை ரூமில் தள்ளி விட்டு சத்தத்தை ஒட்டு கேட்க ரூமுக்கு வெளீல வெயிட் பண்றப்ப உள்ளே ஹீரோ அந்த டிக்கெட்டுக்கு யோகா சொல்லித்தருவதும் அதற்கான வசனங்கள், ஒலிக்குறிப்புகள் அனைத்தும் கில்மா நடப்பது போல வெளியே இருப்பவர்களுக்கு கேட்பதும் அசல் முருங்கைக்காய்  கே பா டச்

3. ஹீரோ அப்படி டவுட் டேவிட்டாக மாறுவதற்கு சொல்லப்படும் ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் 3 வெவ்வேறு கதைகளும் அருமை

http://4.bp.blogspot.com/-bIVW4NWOzKE/T2gu6qwfrHI/AAAAAAAAtFg/Kh_JHW05ZS0/s1600/Swapna+At+Meeravudan+Krishna+Movie+Audio+Launch+(1).jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் மற்றும் லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  ஒரு டாக்டர் டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் குளிப்பது ரெகுலரா  நடப்பதுதானே.. அதில் எப்படி டவுட் வரும்?

2. சீஃப் டாக்டரும், எம் டி யுமான வில்லன் ஒரு சபலிஷ்ட் என்று தெரிந்தும் ஹீரோயினான டாக்டர் ஏன் மிட் நைட்டில்  ரிசைன் லெட்டர் தர அவர் வீட்டுக்கு போகிறார்? ரிசைன் லெட்டரை தபாலில் அனுப்பலாம்.. அல்லது ஹாஸ்பிடலில் பகலில் போய் தரலாமே?

3.  ஒரு லேடி டாக்டரோட ஹேண்ட் பேக்ல  காண்டம் பாக்கெட் இருந்தா புருஷன் சந்தேகப்பட ஸ்ட்ராங்க் ரீசன் இல்லையே? டாக்டர்கள் கருத்தடை மாத்திரை, காண்டம் ஆகியவற்றை யாருக்காவது தரக்கூட வெச்சிருக்கலாம்..

4. வில்லன் காண்டம் பாக்கெட்டை ஹீரோயின் டாக்டர் ஹேண்ட் பேக்கில் பகலில் போட்டு விடுகிறான்.. நைட் வீடு திரும்பும் வரை அவர் அதை ஓப்பன் செய்யவே இல்லையா?

 5. ஹீரோயின் வயிற்றில் வளரும் கரு தன்னுடையது அல்ல என சந்தேகப்படும் கணவன் அந்த கருவை கலைக்கச்சொல்லுவது எல்லாம் 1980 உடன் சரி.. இப்போ தான் ஏகப்பட்ட டெஸ்ட் வந்தாச்சே... கருவுக்கு அப்பா கணவன் தானா? என்பதை ஈசியா கண்டு பிடிச்சிடலாமே? லேடி டாக்டராக வரும் ஹீரோயின் ஏன் ஒரு சீனில் கூட அந்த வாதத்தை முன் வைக்கவில்லை..?

6.  ஹீரோவின் பால்ய காலத்தில் ஹீரோவின் அம்மா குளீப்பதை மறைந்திருந்து பார்க்கும் ஹீரோவின் நண்பன் கையில் கடலைக்காய் உடைச்சு உடைச்சு சாப்பிட்டுட்டே பார்க்கறான்... அந்த சத்தம் கேட்டு அவங்க உஷார் ஆக மாட்டாங்களா?மூச்சு விடற சத்தம் கூட வெளீல வராம தானே வேடிக்கை பார்ப்பாங்க?

7. ஹால்ல 2 பசங்களூம் விளையாடறாங்க.. அவங்கம்மா பாத்ரூம்ல அப்போதான் குளிக்கப்போறாங்க.. இந்த பையன் விக்கல் எடுக்குது.. தண்ணி குடுன்னு கேட்கறான்.. ஹீரோ உள்ளே போய் தண்ணி சொம்பில் கொண்டு வர அதிக பட்சம் 40 செகண்ட் தான் ஆகும்.. ஆனால் அந்தப்பையன் 3 நிமிஷம் யோசித்து.. பாத்ரூமில் 4 நிமிஷம் வேடிக்கை பார்க்கற வரை ஹீரோ வரவே இல்லை..

8. இன்னொரு கதைல  ஹீரோவோட ஃபிரண்ட் வீட்டில் இல்லை.. ஃபிரண்டோட சம்சாரம் வேற ஒரு ஆளோட கில்மால இருக்கான்.. எந்த மடையனாவது வாசல்ல செருப்பு விட்டுட்டு, டி வி எஸ் ஸை வாசல்ல நிறுத்திட்டு போய் கதவை தாழ் போட்டுட்டு கில்மா பண்ணுவானா? செருப்போட உள்ளே போவான்.. பைக்கை வேற எங்காவது நிறுத்திட்டு தான் இங்கே வருவான்?

9. வில்லன் ஜொள் பார்ட்டின்னு தெரிஞ்சும் ஏன் ஹீரோயின் அவர் காரில் தனிமையில் போகனும்.. சரி பணீ நிமித்தம் போக வேண்டி வந்தாலும் ஏன் அவர் பக்கமா உட்காரனும்? பின் சீட்டில் உட்காரலாமே?

10.. வில்லன் ஹீரோயின் மேல கார்ல போறப்ப கை வைக்கறா\ன்.. ஹீரோயின் கோபமா  காரை நிறுத்த சொல்லி இறங்கறா.. அப்போ ரோட்டில் யாரும் இல்லை.. ஏன் வில்லன் அப்படி பம்மறான்? விட்டா கால்ல விழுந்துடுவான் போல.. ஹாஸ்பிடலில் 10 பேர் முன்னால அவ அவமானப்படுத்தி இருந்தா பயப்படலாம்.. தனிமையில் தானே? ஏன் பம்மல்?

11. ஒரு முக்கியமான கேள்வி.. ஹீரோயினும், ஹீரோவும் தனிக்குடித்தனம்.. மேரீடு கப்பிள்ஸ்... ஆரம்ப கட்ட வெட்கம் எல்லாம் முடிஞ்சிருக்கும்... ஆனா பாத்ரூம்ல தனிய தாழ் போட்டுட்டு குளிக்கும் ஹீரோயின் ஏன்  பாவாடை கட்டிட்டு குளிக்கறாங்க? ஆத்து மேட்டுல, வாய்க்கால் ஓரங்கள்ல குளீக்கற லேடீஸ் தான் அப்படி குளிப்பாங்க.... கழுத்து வரை மட்டும் காட்டி இருந்தா இந்த தவறை சரி பண்ணி இருக்கலாம். ஹி ஹி

12. க்ளைமாக்ஸ்ல ஹீரோ திருந்துவது டிராமா மாதிரி இருக்கு.. அந்த சீனை வேற மாதிரி எடுத்திருக்கலாம்././அதே போல் கற்பு நெறி தவறாம வாழும் ஹீரோயின்க்கு ஏன் கால் போற மாதிரி காட்டனும்?

http://chennai365.com/wp-content/uploads/movies/Meeravudan-Krishna/Meeravudan-Krishna-Stills-032057057.jpg


 கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள், சந்தேகப்பிராணீகள்,காண வேண்டிய படம்


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி கமெண்ட் -  மேரேஜ் கப்பிள்ஸ் எல்லாரும் பார்க்கலாம்

 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ப்டம் பார்த்தேன்






8 comments:

Nirosh said...

வழமைபோல கலக்கல்... அண்ணே எனக்கொரு டவுட்டு ஹீரோயின் ஹன்ஷிகாவுக்கு சொந்தமா....???

ஹாலிவுட்ரசிகன் said...

விமர்சனம் நல்லாயிருக்கு சி.பி. லிஸ்டுல ஓரமா போட்டு வைப்போம்.

நீங்க சொன்னது போல ஹீரோயின் கண்ணியமா லட்சணமா இருக்கா. ஆனா உள்ளுக்குள்ள ஒரு ஃபிகருக்கான ஃபீல் வரல.

ராஜி said...

கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள், சந்தேகப்பிராணீகள்,காண வேண்டிய படம்
>>>
பார்த்துட்டா மட்டும் மாறிடவா போறாங்க?!

Unknown said...

சின்ன படம், பெரிய படம் என்ற வித்தியாசம் ஏதும் இல்லாமல் விமர்சனத்தில் படத்தை அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்..

முட்டாப்பையன் said...

மிஸ்டர் கபி.பந்தல்குமார்.
தமிழ்மணத்துல நாலாவது இடம்-னு
இப்படி கொலையா கொல்லுரீயே.
உனக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வரதா?

நீ என்ன தான் சாபிடுரே ?
உன் பதிவு காலம் முடியும் நேரம்
வருது.
இனி நாங்க சும்மா இருக்க போறதில்லை.
ஏன் இப்படி வெறி பிடித்து அலையுற?

ஒரு நாளைக்கு தேர்ந்தெடுத்து நல்ல போஸ்ட்ஆ போடு.
உன்னை விட்டுடுறோம்.
உனக்கு சிந்திக்கும் திறனே இல்லையா?
இப்படி பதிவா போட்டினா உனக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறையும்.
இது சிம்பிள் லாஜிக்.

உன்னை நாங்க அடித்தும் நீ திருந்தலை.இனி உன்னை விடுற மாதிரி இல்லை .
பார்தீல்ல எங்க போஸ்ட்ஐ பார்த்ததும் மத வாதி திருந்தின மாதிரி நடிக்கிராணுக.
இனி உனக்கு கடுமையான அடி இருக்கு.

உன் எல்லா போஸ்ட்ளையும் இனி நாங்க வருவோம்.கமெண்ட் போடுவோம்.

உன்னுடைய ஐந்து மாதத்திற்கு முத்தையா போஸ்ட் கமெண்ட் பார்க்கவும்.
அங்கு வந்து கமெண்ட் போட்டவங்க இப்ப கமெண்ட் போடுரான்களா?
சிந்திக்கவும்.
அதுவும் இந்த ட்விட்டர் மொக்கைஏய் போஸ்ட்ஆ போடுறத நிறுத்து.
ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் சும்மா நச்சினு போடு.
உனக்கு கமெண்ட்,வோட் எல்லாம் கிடைக்கும்.

இது இறுதி தகவல்.

முட்டாப்பையன் said...

மிஸ்டர் கபி.பந்தல்குமார்.
தமிழ்மணத்துல நாலாவது இடம்-னு
இப்படி கொலையா கொல்லுரீயே.
உனக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வரதா?

நீ என்ன தான் சாபிடுரே ?
உன் பதிவு காலம் முடியும் நேரம்
வருது.
இனி நாங்க சும்மா இருக்க போறதில்லை.
ஏன் இப்படி வெறி பிடித்து அலையுற?

ஒரு நாளைக்கு தேர்ந்தெடுத்து நல்ல போஸ்ட்ஆ போடு.
உன்னை விட்டுடுறோம்.
உனக்கு சிந்திக்கும் திறனே இல்லையா?
இப்படி பதிவா போட்டினா உனக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறையும்.
இது சிம்பிள் லாஜிக்.

உன்னை நாங்க அடித்தும் நீ திருந்தலை.இனி உன்னை விடுற மாதிரி இல்லை .
பார்தீல்ல எங்க போஸ்ட்ஐ பார்த்ததும் மத வாதி திருந்தின மாதிரி நடிக்கிராணுக.
இனி உனக்கு கடுமையான அடி இருக்கு.

உன் எல்லா போஸ்ட்ளையும் இனி நாங்க வருவோம்.கமெண்ட் போடுவோம்.

உன்னுடைய ஐந்து மாதத்திற்கு முத்தையா போஸ்ட் கமெண்ட் பார்க்கவும்.
அங்கு வந்து கமெண்ட் போட்டவங்க இப்ப கமெண்ட் போடுரான்களா?
சிந்திக்கவும்.
அதுவும் இந்த ட்விட்டர் மொக்கைஏய் போஸ்ட்ஆ போடுறத நிறுத்து.
ஒரு நாளைக்கு ஒரு போஸ்ட் சும்மா நச்சினு போடு.
உனக்கு கமெண்ட்,வோட் எல்லாம் கிடைக்கும்.

இது இறுதி தகவல்.

முட்டாப்பையன் said...

இவர் பதிவுக்கு வரும் வாசகர்களே.
போய் வேற வேலைய பாருங்க.
வோட் போட்டுடுங்க .
இல்லாட்டி இன்னும் சாகடிப்பான்.

மக்களே உங்களுக்கு பொழப்பு இல்லையா?

இவன் போடுறது எல்லாம் ஒரு பதிவுன்னு வந்து கமெண்ட் போட்டுக்கிட்டு

Unknown said...

@முட்டாப்பையன் சூப்பருடா முட்டாப்பையா