Thursday, April 05, 2012

சூரிய நகரம் - சினிமா விமர்சனம்

http://www.mysixer.com/wp-content/gallery/suriya-nagaram-gallery/suriya-nagaram.jpg

யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சுங்கறதை சிம்பாலிக்கா சொல்ற மாதிரி படம் பூரா ஹீரோயினுக்கு யு நெக் ஜாக்கெட், நல்ல வேளை பேக் யூ நெக்..ஹீரோயின் புதுமுகம்.. லட்சணமான, லட்சுமிகரமான முக அமைப்பு. படம் பூரா பாந்தமா பாவாடை தாவணில  சொக்க வைக்கிறார்.. ஆனா ஒரு முழுப்படத்தை ஹீரோயின் மட்டுமே காப்பாத்த முடியாதே?


இதுல செம காமெடியான சீன் என்னான்னா வேலை வெட்டியே இல்லாத ஹீரோ ரோட்ல நிக்கறப்ப ஒரு கார் அங்கே வந்து நிக்குது.. கார்க்கதவு வழியா ஒரே ஒரு கை மட்டும் வெளீல வந்து பூ வாங்குது.. பிக்காலிப்பையன் இதுவரை பொம்பளை கையையே பார்த்தது இல்லை போல..  உடனே அந்த காரை ஃபாலோ பண்ணி கண்டு பிடிச்சு ஹீரோயினை பார்த்து நெக்ஸ்ட் செகண்ட்டே ஐ லவ் யூ சொல்லிடறான்..

 அதைக்கூட ஜீரணீச்சுக்கலாம்.. கோயில் வாசல்ல உக்காந்து பிச்சை எடுக்கற ஆளுக்கு அவ போட்ட ஒரு ரூபா காசை 100 ரூபா குடுத்து வாங்கறான். அவனோட இந்த வெட்டி வேலையை பார்த்து நமக்கு ஆத்திரம் வருது.. ஆனா ஹீரோயினுக்கு காதல் வருது

 ஹீரோயின் அவனுக்கும் மேல.. ஆம்பளையையே பார்த்ததில்லை போல. உடனே அவளும் ஈ ஈ ந்னு பல்லை காட்டி லவ்க்கு ஓக்கே சொல்றா. 2 தத்திங்களும் ஜாலியா டூயட் பாடி லவ்வுதுங்க. நிற்க..


http://lh6.ggpht.com/-P2zUlNNPNHE/TyKR0fOWNvI/AAAAAAABB7Y/4AmwzaAf6H4/meera%252520nandan%252520cute%252520pic%25255B3%25255D.jpg

 ஹீரோயின் அப்பா தான் வில்லன்.. டைரக்டர் ஆர் வி உதய குமார்.. அவர் என்னமோ விஜய குமார்க்கு வாரிசு மாதிரி ஜாதி வெறி பிடிச்ச பெரிய மனுஷனா வந்து லவ்வை எதிர்க்கறார்.

வேற மாப்ளை பொண்ணுக்கு பார்க்கறார்.. இப்போ தான் அடுத்த காமெடி.. ஹீரோவுக்கு தில் இருந்தா ஹீரோயினை கூட்டிட்டு ஓடனும்.. தில் இல்லைன்னா கிராமத்தை விட்டே அவர் மட்டும் தனியா ஓடனும்.. அவர் 2ம் பண்ணலை.. இன்னா பண்றார்னா சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நின்னுடும்கற மாதிரி மாப்ளையை கொலை பண்ணிடறார்..

 திரைக்கதையில் செம கேனத்தனம் இதுதான். ஹீரோ புள்ள பூச்சி மாதிரி இருந்துக்கிட்டு எதுக்கு சம்பந்தமே இல்லாம அந்தாளை கொல்லனும்?அப்படியே ஹீரோ அந்த மாப்ளையை கொலை பண்ணனும்னா வில்லன் ஹீரோயினை ரேப் பண்ற மாதிரி காட்டி இருந்தா சீனுக்கு சீனும் ஆச்சு. லாஜிக்கு  லாஜிக்கும் ஆச்சுன்னா அமைதியா இருந்துருப்போம்..


ஹீரோ ஜெயில்ல . ஹீரோயின் எத்தனை வருஷம் ஆனாலும் ஹீரோவைத்தான் கட்டுவேன்னு ஒரே அடம்..

 வில்லன் ஆர் வி உதய குமார்க்கும் பட டைரக்டர்க்கும் ஏதோ சண்டை போல. அவசர அவசரமா திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாம வில்லனை பாதிலயே ஒரு கோஷ்டி தாதா சண்டைல கொலை பண்ணிடறார்.

ஹீரோயினுக்கு ஒரு தம்பி.. அவன் 12  வயசுல இருந்து 23 வயசு இளைஞன் ஆகறவரை ஹீரோ ஜெயில்லயே களி சாப்பிட்டு இருக்கான்..

இனிமே என்ன ஆகுதுங்கறதை யாரும் பார்க்கவே வேணாம்.. ஹி ஹி

http://middaytimes.com/wp-content/uploads/2012/01/meera-nandan-suriya-nagaram00-1-640x424.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. இவர் தான் எங்க ஊர் புரூஸ்லீ

 என்னது பெருச்சாளியா?


2. டேய்.. எதுக்காக நீ இப்போ சிரசாசனம் பண்றே?

 நம்ம சாதி சனத்தை காப்பாத்த தலைகீழா நின்னாவது பாடுபடனும்னு நீங்கதானே சொன்னீங்க?

3.  கண் உறுத்துது


என்ன விழுந்துச்சு?

 ம். நயன் தாரா

4.  குத்து விளக்கு மாதிரி ஃபிகர் வேணும்னா கோயில்ல தான் அதை பிடிக்கனும்.


5. ஏண்டி அவனை லவ் பண்ணலை?

 போடி. அவன் கிட்டே ஒரு கார், பைக் எதுவும் இல்லை.. எல்லா இடங்களுக்கும் நடந்து தான் போறான்.. அவனை லவ் பண்ணுனா பாத யாத்திரை தான் போகனும்.

6.  புள்ளையை பெத்துப்போடச்சொன்னா எமனைப்பெத்துப்போட்டிருக்கு பக்கிக. இவனால என்னென்ன நடக்கப்போகுதோ.




7.  நீ ஐ ஐ டி ஃபெயிலா?

 ஆமா.. எப்படி கண்டு பிடிச்சே?

 பழைய கவிதையா சொல்லி அறுக்கறியே?

http://3.bp.blogspot.com/-ixJsAdQweQc/TgjeIj4r3-I/AAAAAAAABZo/TD0S187f8ag/s1600/MeeraChandhan281210_014.jpg


8. அவங்க மாலையை போட்டுட்டாங்க.. வில்லன் ஆளூங்க அடுத்து உங்களை போடப்போறாங்க./.

9. நமக்கு நாமளே தீயை வைக்கற மாதிரி இருக்கு.


10.  உன் கல்யாண பத்திரிக்கையை பார்த்தேனே?

 அச்சடிச்ச பேப்பரை நம்பறே.. உசுரோட இருக்கற என்னை நம்ப மாட்டேங்கறே..


11. நான் ஒரு மரத்தடி ஜோசியர்ங்க.. யார் யார் கையையோ பிடிச்சு பலன் சொன்ன எனக்கு என் கையை பிடிச்சவ பற்றி தெரியாம போச்சு.. அவ கையை எவனோ பிடிச்சு கூட்டிட்டு போய்ட்டான்.. அவனைப்போட்டுத்தள்ளிட்டு ஜெயிலுக்கு வந்து இருக்கேன்..


12. இந்த ரேகைப்படி நாம 2 பேரும் 1 சேர முடியாது டியர்


 அப்போ இந்த ரேகையே வேணாம்

 அடிப்பாவி.. எதுக்கு கத்தியால கையை கிழிச்சே?

உன்னையும், என்னையும் சேர்க்காத இந்தக்கை ரேகை எதுக்கு?

13.  ஒரு ஆம்பளை கடைசி வரை தனியா வாழ்ந்துடலாம், ஆனா ஒரு பொம்பளையால அப்படி வாழ முடியாது..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4J-eSFH4kgKzyf1tOC6RyyhBjI1gkchleXK9WglLnGmqjjb6I5bZPIvZLkM5jUL1XfsO9GhccgDFbpV1pia18OZ2KfksV49N1KJ3lZ5tonEt7PUkEIYjeioBXmuwGNLmkEFF7SzZj9yQ/s1600/oridathoru-postman-22.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  படத்துல காமெடியனாவும், ஹீரோ ஃபிரண்டாவும் வர்றவர் கோயிலுக்குள்ள லுங்கியோட வர்றாரே? எந்த ஹிந்துக்கோயில்ல அலோ பண்றாங்க?


2. ஹீரோயின் ஊர்லயே பெரிய பணக்காரர் வீட்டுப்பொண்ணு.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஹீரோ வேலை செய்யற ஒர்க்‌ஷாப்க்கு வருது?அதுவும் நடந்து வருது?

3. வில்லனோட ஆட்கள்ல ஒருத்தன் ஹீரோயினை பார்த்துடறான்.. உடனே கோயில் திருவிழாவுல விற்கற முகமூடியை ஹீரோயின்  மாட்டிக்கறா.. ஃபேஸ் மட்டும் தானே அது மறைக்குது? 18 வருஷமா வேலை செஞ்ச அடியாளுக்கு அந்த ஹீரோயின் உடம்பு ஞாபகம் இருக்காதா?அல்லது டவுட்னா முகமூடியை கழட்டி பார்க்க மாட்டானா?

4.  ஹீரோ ஹீரோயின் 2 பேரும் மெக்கானிக் ஷாப்ல சைக்கிள் டியூப்பை மாலையா மாத்தி கல்யாணம் பண்ணீக்கறது செம காமெடி.. ஏன் சார் ஏன்?

5.  சின்னப்பையன் அதாவது ஹீரோயின் தம்பி வேணும்னே கீழே விழுந்து காயத்தை வாங்கி நிச்சய தார்த்தத்தை நிறுத்துறது எல்லாம் ரொம்ப ஓவரு..

6.  ஹீரோ, ஹீரோயின் 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போக கிளம்பிட்டாங்க.. 2 பேரும் வெறுங்கையை வீசுட்டு வர்றாங்க? ஒரு பேக் கூட இல்லாம கிளம்ப அவங்க என்ன பேக்கா?

7. கொலைக்குற்றவாளி எப்படி பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகறார்? அவருக்கு செக்யூரிட்டியாய் நியமிக்கப்படும் 2 கான்ஸ்டபிள்ஸ்-ம் ஒரே டைமில் டீ குடிக்க வெளீல போறாங்களே. அது எப்படி?

8. ரிலீஸ் ஆகி வர்ற ஹீரோவை வரவேற்க ஹீரோயின் தம்பியோ. ஹீரோவின் நண்பர்கள் யாரும் போகலை.. ஆனா வில்லன்கள்க்கு மட்டும் தகவல் தெரிஞ்சு போறாங்களே?

9. கிராமம் பூரா காதலுக்கு எதிர்ப்புன்னு தெரிஞ்சும் ஏன் அந்த ஊர்க்கோயில்ல மேரேஜ் பண்ண லூசு த்தனமா முடிவு பண்றாங்க? ஊரை விட்டு ஓட வேண்டியதுதானே?

10 . க்ளைமாக்ஸ் மகா அபத்தம்.. ஊர்மக்களிடம் இருந்து காதல் ஜோடியை காப்பாற்ற ஹீரோயினின் தம்பியே அந்த ஜோடியை வெட்டி கொலை செய்து கருணைக்கொலை செய்யறார்.. அடங்கோ


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3VpTxSMb9BlA5pTn7jWaofrqthXaVqlxICT8SehQKqnVpxlj54mR7D-NfTaQSN7sEHm_cxmzybHhJMxKh1nPZVMD4O6LHPQtsF3-5vUK8XHGpYrqZf9ydM3Z8VQbEZz8w0yEcEOnw0viE/s1600/Meera+Nandan+at+prithviraj+marriage+reception+_6_.jpg

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - அய்யய்யோ வேணாண்டா வேணாண்டா இதுல ஒண்ணுமே இல்லை.. படம் போட்ட நொடில இருந்து ஒரே தொல்லை.  


 ஈரோடு சங்கீதா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. சங்கூதற வயசுல சங்கீதா கேட்குதா? ராஸ்கல்ஸ்

 டிஸ்கி - டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை.. சூரியன் ஹிட், சூரிய வம்சம் ஹிட்.. அந்த செண்ட்டிமெண்ட்ல வெச்சிருப்பார் போல.. ஆனானப்பட்ட உதய சூரியனுக்கே இப்போ நேரம் சரி இல்லைன்னு அவருக்கு தெரியல போல..

10 comments:

கோவை நேரம் said...

மாலை வணக்கம்...சிபி

கோவை நேரம் said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு...எங்களை காப்பாத்த நீங்க படற கஷ்டம் இருக்கே....

கோவை நேரம் said...

மாலை வணக்கம் சிபி'

கோவை நேரம் said...

அந்த அம்மணி கூட நல்லா தான் இருக்கு...

கோவை நேரம் said...

இதையும் பார்த்துட்டு...ஏகப்பட்ட கேள்விகள் வேற....தேவையா இது..

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி வணக்கங்கள், சுணக்கங்கள் அவ்வ்வ்

test said...

very nice story thank you for news i am bookmarking my browser thank you my website please visit http://www.kollywoodthendral.in

Unknown said...

பாவம், படத்த எடுத்த டைரக்டர்.. உங்க விமர்சனத்தை படிச்ச டெங்ஸ்சன் ஆயிடுவாரு.. ரொம்பவே கலாய்ய்ச்சி எடுத்திருக்கீங்க..

போதிவர்மா said...

வெட்டிப்பேச்சை விடுத்து தமிழர் புகழ், வீரம் சார்ந்த பதிவிடுங்கள் அன்பரே. போதிக்க வருவான் போதிவர்மா

Vadakkupatti Raamsami said...

அடப்பாவிகளா இப்படி ஒரு சூப்பர் பிகரை இப்படி மொக்கை படத்தில் நடிக்க வைக்குரீன்களே?உங்களை அகூன்பதம் செய்தால்தான் என்ன?