Wednesday, January 30, 2013

ஜெ VS கமல் - மோதல் - உண்மையான காரணம் என்ன?ஜு வி யின் அலசல்

விஸ்வரூப அரசியல்!

சேட்டிலைட் நிழல் யுத்தம்... சென்சார் சண்டை... கோலிவுட் மோதல்
 
'யார் என்று புரிகிறதா
 இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்

ஞாபகம் வருகிறதா’ - 'விஸ்வரூபம்’ படத்தில் வரும் பாடல் வரிகள் இவை. தடைகளைத் தாண்டி கமல் எப்படி வெல்லப்போகிறார் என்பதை தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. விஸ்வரூப விவ காரத்தில் திரைக்குப் பின்னால் நடக்கும் சில விஷ யங்கள் இங்கே..


பிரச்னைக்குக் காரணம், தி.மு.க. நெருக்கமா?


''சென்சார் போர்டில் அசன் முகம்மது ஜின்னா என்ற முஸ்லிம் ஒருவரே படத்தைப் பார்த்து ஓகே செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது படத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கமல் தரப்பில் கேட்கிறார்கள். இந்த ஜின்னா யார் தெரியுமா? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா, ''முஸ்லிம்களுக்கு எதிரானகாட்சிகள் 'விஸ்வரூபம்’ படத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டோம். உடனே, கமல் சார்பில் என்னிடம் பேசியவர் ஜின்னாதான். 'படத்தின் டிரைலரைப் பார்த்து விட்டு எதிர்க்க வேண்டாம். கமல் பேசத் தயாராக இருக்கிறார்’ என்றார். படத்தை சென்சார் செய்வதோடு ஜின்னாவின் வேலை முடிந்து விட் டது. அவர் எதற்காக கமலுக்கு ஆதரவாகப் பேச வேண்டும்? அப்படிப்பட்டவர் எப்படி படத்தை சென்சார் செய்திருப்பார்?'' என்கிறார்.


தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''படத்தின் சேலம் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். சென்சார் போர்டில் தி.மு.க-வைச் சேர்ந்த ஜின்னா, ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியோடு கமல் மேடை ஏறியது, இவற்றை எல்லாம் ஆளும் கட்சி ரசிக்கவில்லை. அதன்பிறகுதான், கமலுக்குப் பிரச்னைகளும் ஆரம் பம் ஆனது'' என்கிறார்கள்.



ஜின்னா என்ன சொல்கிறார்? ''எந்த மதத்தின் உணர்வும் புண்படுத்தப்படுவதை தணிக்கைத் துறை விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை. வழி காட்டும் முறைகளின்​படிதான் தணிக்கை நடக்கிறது. சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகை யிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்த​தாகவோ காட்சிகள் இருப்பின், அவை நீக்கப்படுகின்றன. ஒரு படத்துக்கான தணிக்கை முறைகளில் அதில் பங்கு பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது. நான் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை, இஸ்லாத்துக்கு எதிராக மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் எதிரான தவறான உள்நோக்கம் கொண்ட சித்திரிப்புகளை பலமாகவே எதிர்த்து இருக்கிறேன்'' என்கிறார்.  


சேட்டிலைட் நிழல் யுத்தம்!


'விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு  டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று  டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. 



கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம். இந்த நடவடிக்கை அந்த டி.வி. தரப்பை கொந்தளிக்க வைத்து விட்டதாம். ''சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, 'விஸ்வரூபம்’ படத்துக்கு எழுந்த தடை'' என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார்.



'விஸ்வரூபம்’ பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனதும் நீதிபதி வெங்கடராமன் படத்தைப் பார்க்க முடிவு செய்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் 'விஸ்வரூபம்’ ஸ்பெஷலாகத் திரையிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் நீதிபதிகளுடன் படம் பார்த்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகளுடன் கமலைப் பேசச் சொன்னது நீதிமன்றம். அநேகமாக, இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கும்.


''நாங்கள் தேசத் துரோகிகளா?''


'விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து கமல் வெளியிட்ட அறிக்கையில், ''நியாயமான தேசப்பற்றுமிக்க முஸ்லிம் யாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் பெருமைப்படுவார்கள்'' என்று சொல்லி இருக்கிறார். இதுவும் முஸ்லிம் கூட்டமைப்பினரை கொதிக்க வைத்திருக்கிறது. ''சிறு குழு எனச் சொல்லி எங்களை தேசப்பற்று இல்லாதவர்களைப்போல் சித்திரித்து இருக்கிறார். கூடங்குளம் தொடங்கி தர்மபுரி கலவரம், எல் லையில் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் வரை குரல் கொடுக்கும் நாங்கள் தேசத் துரோகிகளா?'' என கேள்வி எழுப்பும் அவர்கள், ''படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படை தாலிபான்களை சுடும் காட்சி வரும்.



 அதில் அப்பாவியான பெண் ஒருவர் பலியாவார். இதற்காக அமெரிக்க வீரர்கள் பரிதாபப்படுவார்கள். தாலிபான்கள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தப்பி ஓடும் காட்சியில் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடுவார்கள். அப்போது ஒரு தாலிபான், 'குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு தப்பிச் செல்லலாம்’ என்பார். அதற்கு இன்னொரு தாலிபான், 'அமெரிக்கர்கள் பெண்களை குழந்தைகளை கொல்ல மாட்டார்கள்’ என டயலாக் பேசுவார். இப்படி படம் முழுவதும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல காட்சிகளை அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றனர்.


சினிமா மோதல்!
கமலுக்கு ஆதரவாக திரையுலகத்தினரும்அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர். ரஜினி, பாரதிராஜா, பார்த்திபன், அஜித் ஆகியோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ம.க-வும் 'விஸ்வரூபம்’ படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் அமீர் ''யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவிக்கலாம்'' என்று சொல்லி இருப்பதை கோலிவுட் ரசிக்கவில்லை.



'கமலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு திரையுலகம் மௌனமாக இருப்பது ஏன்?’ என்று பாரதிராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு இன்னொரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. ''ஈழத் தமிழர்களின் வலியைச் சொல்லும் 'காற்றுக் கென்ன வேலி’ படத்துக்கும் இதேபோல் தடை வந்த போது அந்தப் படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜும் தயாரிப்பாளர் வெள்ளையனும் மட் டுமே போராடினர். அப்போது, இந்த பாரதிராஜா எல்லாம் எங்கே போனார். மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது அநியாயம்'' என்று குமுறுகிறது கோலிவுட்டின் ஒரு பிரிவு.


''இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!''


கமல் ரசிகர்களும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப் பவர்களும் சொல்லும் வாதம் இதுதான்...


''நடப்பு விஷயத்தை படமாக எடுக்கும்போது தாலிபான் தீவிரவாதிகளை வேறு மதத்தின் அடையாளமாக எப்படிக் காட்ட முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரத்தை இங்கே இருக்கிற முஸ்லிம்கள் தங்களோடு ஏன் தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான் தீவிரவாதம் பற்றி எத்தனையோ ஆங் கிலப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தக் காட்சிகள் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் இந்தப் படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. 




படத்தை தடை செய்வதைவிட, அந்தப் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்பது அதைவிட பெரிய தண்டனைதான். அந்த வழியில்தான்  முஸ்லிம்கள் படத்தை எதிர்த்து இருக்க வேண்டுமே தவிர, தடை செய்யச் சொல்வது சரி அல்ல. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஆங்கில அரசு பறித்ததால்தான், சுதந்திரப் போராட்டமே நடந்தது. அப்படிப்பட்ட தேசத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போர்க்​கொடி தூக்குவது ஜனநாயகம் அல்ல'' என்கிறார்கள்.



நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடக்கும் விஷயங்​கள் என்ன அதிர்வலைகளை உண்டாக்கப்​போகிறதோ?


- ஜூ.வி. டீம்





மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன்: கமலஹாசன் குமுறல் 
 
 
Posted Date : 11:45 (30/01/2013)Last updated : 18:08 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று படமெடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகர் கமலஹாசன்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தால், கடன் கொடுத்தவர் வசம் தமது சொத்துக்கள் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கமல்,  " இந்த படத்திற்காக நான் மிகுந்த பொருட் செலவு செய்துள்ளேன். நான் நின்று கொண்டிருக்கும் இந்த வீடு உட்பட என்னுடைய அனைத்து சொத்துக்களையும் இந்த படத்திற்காக அடமானம் வைத்திருக்கிறேன்.
படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகப் போக நான் நிற்கும் இந்த கட்டடம் கூட எனக்கு சொந்தமில்லாமல் போகும். அநேகமாக இதுவே கூட நான் இங்கிருந்து அளிக்கும் கடைசி பேட்டியாக அமையலாம்.

நாட்டின் ஒற்றுமையா இல்லை என்னுடைய சொத்தா என்ற கேள்வி வரும் போது, நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நான் கருதுகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக சொத்துக்களை இழக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமல்ல. நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.


எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டதாக கருதுகிறேன்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.  இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.


எனது திரைப்படத்திற்கு தடை, தடைக்குதடை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான் தமிழகத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருக்கிறேன். மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனாமல் வேற மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன். தமிழகம் முதல் காஷ்மீர் வரை வேறு மதச்சார்பற்ற மாநிலம் இல்லை என்றால் மதச்சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன்.


விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான். எனக்கு மதம், அரசியல் சார்பு இல்லை. ஆனால் என் திறமை என்னுடன் இருக்கும்.


விஸ்வரூபம் படம் நடக்கும் களம் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இது இஸ்லாமியர்களை கேலி செய்யும் படமல்ல. எனக்கு மதம் இல்லை. மனிதம்தான் உண்டு" என்றார்.

விஸ்வரூபம்: குரான் காட்சியை நீக்க கமல் சம்மதம் 
 
 
 
Posted Date : 15:32 (30/01/2013)Last updated : 16:13 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தில் குரான் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க நடிகர் கமலஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம்  செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம்  காரணமாக இருக்க விரும்பவில்லை என்றார்.

விஸ்வரூபம் பட தடை விவகாரத்திற்கு பிறகு கமல் இன்று காலை பேட்டி அளித்தார்.  அவருடைய பேட்டி தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. கமலை  அடுத்தடுத்து வி.ஐ.பி.கள் சந்தித்து வருகின்றன.  காங்கிரஸ் எம்.பி. ஆரூண், தேசிய லீக்  கட்சி தலைவர் பஷீர் ஆகியோர் கமலை சந்தித்தார்.


 பின்னர் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது  'விஸ்வரூபம் படத்தில் குரான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் தொடர்பான சில காட்சிகளை  நீக்க முடிவெடுத்துள்ளதாகவும்,  'ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  22 முஸ்லிம் கட்சிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு   நிர்வாகிகள் யாரும் கமலை சந்திக்காத நிலையில் ஆருணும் பஷீரும்  சந்தித்திருக்கிறார்கள்.

இதுபற்றி கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்  ரீபாயி ''படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற எங்கள் கோரிகையில் உறுதியாக  இருக்கிறோம். தமிழக அரசின் முடிவை ஆதரிக்கிறோம். அரசு மேல் முறையீடு  செய்திருக்கிறது. அதனை வரவேற்கிறோம். ஆருணும், பஷீரும் கமலை பார்த்ததற்கும்  எங்கள் கூட்டமைப்புக்கும்  எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

ஆருண் பேசும் போது, காட்சிகள் நீக்கப்படும் என்கிற கமலின் முடிவை கூட்டமைப்பிடம்  தெரிவித்து அவர்களின் ஒப்புதலை பெறுவோம்" என்றார்.



விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை; உச்ச நீதிமன்றத்தை நாட கமல் முடிவு! 
 
 
Posted Date : 15:53 (30/01/2013)Last updated : 16:48 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்துள்ளார்.


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு பிறப்பித்த தடையை நீதிபதி வெங்கடராமன் நேற்றிரவு நிறுத்தி வைத்ததார். 

இதனால் இன்று படம் வெளியாகும் என்கிற சுழ்நிலையில் விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல் முறையீடு செய்தது. அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், நீதிமன்றம் தொடங்கியதும்  முதல் வழக்காக ப‌திவு செய்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி

அருணா ஜெகதீஷன் அடங்கிய பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கை விசாரிப்பதாகக் கூறியுது.

இதன்படி வழக்கு விசாரணைக்கு வந்ததும் தமிழக அரசின் கோரிகையை ஏற்று தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது.வருகிற திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.


இதனால் படம் வெளியாவது மேலும் தாமதம் ஆகியிருக்கிறது
இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து கமலஹான உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கமலஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்! 
 
 
Posted Date : 12:26 (30/01/2013)Last updated : 12:27 (30/01/2013)
சென்னை: நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டபோதிலும், காவல்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்  இன்று காலை திரையிடப்பட்ட விஸ்வரூபம், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தமிழகத்தில்  விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

விஸ்வரூபம் திரைப் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நேற்று சென்னை  உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று பல இடங்களில்  விஸ்வரூபம் காலையிலேயே திரையிடப்பட்டது. ஆனால், படம் ஓடத் தொடங்கிய சில  நிமிடங்களில் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்  படத்தை நிறுத்த சொல்லி தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும்  அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதால்,தியேட்டர் உரிமையாளர்கள்  படத்தை நிறுத்தினர்.

தூத்துக்குடி, கோவை, ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் பத்து நிமிடத்திலேயே  விஸ்வரூபம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள்  சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின்  பல இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் திரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், சென்னை தேவி தியேட்டர் எதிரில்  வைக்கப்படிருந்த விஸ்வரூபம் பேனரை தீ வைத்து எரித்தனர்.

கோவையில் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  விஸ்வரூபம் திரையிட இருந்த தியேட்டர்களில் வீச பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற  கோணத்தில்; காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நன்றி - விகடன்


Kamal hasan's emotional speech - Ananda Vikatan 

 

 

 மக்கள் கருத்து



1.இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....ஜெயா செய்துள்ளது அப்பட்டமான மிரட்டல் வேலை. ஆனால், அதே சமயம் பாட்சா, ரஜினி .... விஸ்வரூபம், கமல் ........வாய்ஸ் வரும் அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று கணக்கு போட வேண்டாம். ஏற்கனவே, இந்த மாதிரி வாய்ஸ் கொடுக்கப் போய்தான் தி.மு.க. திரும்ப ஆட்சிக்கு வந்து.........டில்லி வரைக்கும் கொடி கட்டி பறந்து, லட்சம் கோடிகளில் ஊழல் என்று புதிய பரிணாமத்தை அரசியல் வானில் புகுத்தினர்.........ஜெயா செய்த தவறுக்கு, இந்த லட்சம் கோடிகளில் புரளும் கேடிகளை திரும்பவும் வாழ வைக்க வேண்டாம். தவிர, கமல் என்ற கலைங்கனை பிடிக்கும் தமிழக மக்களுக்கு, கமல் என்ற தனிப்பட்ட மனிதனை, அவரின் குழப்பத்தனமான சிந்தனைகளை அறவே பிடிக்காது.

 

2. இந்த தீர்ப்பு விஸ்வரூபத்திற்கு கிடைத்த வெற்றி, கமலஹாசன் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த தோல்வி.

 

 3.உண்மையிலேயே ஜாதி மதம் மொழி என்று எதையாவது இழிவு படுத்தினால் தடை செய்யலாம் அமெரிக்கா விற்கு கமல் வக்காலத்து வாங்கினால் நம்ம ஊரு பாயுக்கு ஏன் வலிக்குது?

 

4. ஜெஜெ இந்த விஸ்வரூபம் படத்தால் தமிழ் சினிமாவை பகைத்துக்கொண்டார். தமிழ் இனிமாவை பகைதவர்களின் கதி ... கஸ்டம் தான். ஜெஜெவின் துவேசம் இதில் தெறிகிரது.இதுவே இவருக்கு தோல்வியை தரும். 

 

 

5. உயர்நீதிமன்றம் தேவையில்லாத தாமதத்துக்கு பிறகு தடையை நீக்கி இருக்கிறது. முதலில் தணிக்கைக்குழு சான்று வழங்கிய படத்தை ஏன் நீதிபதி பார்க்க வேண்டும் என்பதே புரியவில்லை. போகட்டும்.

முஸ்லிம்கள் மனம் புண்படுகிறது என போராடும் இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளா? ஏன் அனைத்து மசூதிக்கூட்டங்களிலும் இவர்களைப் போல யாரும் முடிவுகள் அறிவிக்கவில்லை? இவர்கள் மனம் எதனால் புண்பட்டது என்பதை படம் வெளியிட்ட பின் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து அதற்கு தடை வாங்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு மதத்தை அரசியலோடு கலந்து செயல்படுவது ஏன்?

எதிர்ப்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? "பேர்ள்" என்ற பத்திரிகை நிருபரை கட்டிவைத்து குரான் வாசகம் படிக்கும்போதே கழுத்தை அறுத்து அதை வீடியோ எடுத்து காட்டி தங்கள் வீரத்தை ஒளிபரப்பியது உண்மைதானே. அமெரிக்க இரட்டை கோபுரத்தை தகர்த்து 4000 பேரை கொலை செய்யும் முன் குரான் ஓதிவிட்டு சென்றது உண்மைதானே. பம்பாயில் வந்து இறங்கி துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவரை கொன்றவர்கள் குரானை ஓதியபின் தானே அதை செய்தார்கள்? அவர்களை கொடூரர்களாக காட்டினால் இங்கே உள்ளவர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள், கொதிக்கிறார்கள்? இவர்களும் அவர்களோடு தொடர்பு உடையவர்களா?

பல டி.வி.சேனல்களில் விலை கொடுத்து வாங்கி மதப்பிரச்சாரம் செய்யும் இவர்கள் அந்த நேரங்களில் ஒரு முறையாவது தாலிபான் செயல்பாடுகள் தவறானவை என சொல்லி இருப்பார்களா? எங்கோ இருந்த ஒரு பாழ்மண்டபத்தை இடித்ததற்காக அது இருக்கும் இடம் கூட தெரியாத இவர்கள் நாடு முழுதும் வன்முறையில் இறங்கவில்லையா? இவை எதையேனும் இவர்கள் கண்டித்ததுண்டா?


மொத்தத்தில் தங்களுக்குள்ள 15 சதவீத ஓட்டு வங்கியை வைத்து இந்திய அரசையே பணியவைக்க முடியும் என நம்புவதாலேயே இவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இதில் "வெளியிட்டால் விபரீதமாகும்" என அரசுக்கே எச்சரிக்கை வேறு. வன்முறையை கையாள வக்கில்லாத ஒரு அரசு இவர்களுக்கு ஆதரவு. காரணம் பண வெறி.

முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும் எனவும் கமல்ஹாசன் படத்தை வாங்கிய மற்றையோர் நஷ்டமடைய வேண்டும் எனவும் கணக்கு போடும் ஜெயலலிதா தனக்கு இந்து வோட்டுக்கள் கணிசமாக குறைந்தால் என்ன நடக்கும் என சீக்கிரமே தெரிந்துகொள்வார். 

 

 6.காற்றில்லாமல் புகையாது. முஸ்லீம தப்ப சித்தரிக்கிக்கராங்க அப்படின்ர காரனாத்துக்காக இவ்வளவு முஸ்லீம் பிரமுகர்கள் போராட்டம் பண்ரபோது அரசு சும்மா இருக்க முடியாது. முன்பு சண்டியர்ன்னு ஒரு படத்துக்கு பேர் வைச்சதுனால தலித் பிரச்சனை பண்னங்க அது மாதிரி தான் இதுவும். டிவிக்கு படம் தரலை அது இதுன்னு வெட்டியான காரணம். அது இலவசமா டிவில் காட்டரதுக்கான உரிமை விளம்பரங்கள் மட்டும்தான் வருமானம். ட்டிஎச்ல 1000 ரூபா குடுத்து எவ்வளவு பேர் பாப்பாங்க. இது அந்த டிவிக்கு தெரியாத என்ன (நமக்கே தெரியும்போது)

7. இந்தப் படத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், உண்மையான இஸ்லாமியர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, படத்தையே தடை செய்ய சொல்வது அறமல்ல.. 

 

 

8
விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம்

படத்தை வீடு, வாசல் விற்று செலவிட்டு எடுத்தவன் எங்கு அதிக விலைக்கு விற்கலாம் என்று தானே பார்ப்பான். காய்கறி விவசாயி ஒரு கடையை விட அடுத்த கடை கூட விலை தருகிறேன் என்றால் அங்கு தான் விற்பான், 90 கோடி செலவழித்தவர்க்கு அந்த உரிமை இல்லையா? அர்சாங்கம் தன் கையிலிருக்கு என்பதால் அடி மாட்டு விலைக்கு கொடுக்கனும்னு சட்டமா?

 

 

9. தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

ஆக பாட்டியே லெட்டர்பேடு ஆட்களை கூப்பிட்டு தூண்டியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது, இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும், இதிலே பாட்டி பிரதமர் கனவு வேறே

 10.தலைமை நீதிபதியிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்கள், காலை 10.30 வரை திரையிடக் கூடாதென்று... தற்போது உண்மை வெளி வந்து விட்டது.

இது ஜெயலலிதாவின் பழிவாங்கல் நடவடிக்கை, பகடைக்காயாக்கப்பட்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்.

அப்பாவிகளிடையே பிளவைத்தூண்டி அரசியல் குளிர் காய்வது கட்சிகளின் வழக்கம் என்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

3 comments:

Unknown said...

அருமையான விளக்கம் .

Unknown said...

ningal sollum anitum unmi illai annitum poiumillai . hindu vin parrvail musli devirawati.....
muslimin parvai hindu tevirawati........ karanam vyapara arasial ningalum nanum keatdum padtadum solukirom

Unknown said...

இன்று தன்னுடைய படத்தின் ரிலீஸ் க்காக இவ்வளவு பாடு படும் கமல்,90'இல் தன்னுடைய படத்தின் கதாநாயகிகள் "தன்னுடைய எண்ணப்படி " நடக்காவிட்டால் தயாரிப்பாளரையும் இயக்குனரையும் பாதித்தாலும் பரவாஇல்லை என்று தன்னுடைய படத்தையே ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்த கதைகள் உண்டு. நதியா ,ரோஜா போன்ற கத நாயகிகள் கமலுடன் நடிக்க மறுத்ததற்கு இது தான் காரணம் . கமலுக்கு வக்காலத்து வாங்குவதை விட்டு விட்டு போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கப்பா!!