Monday, January 28, 2013

விஸ்வரூபம்- கோர்ட் அப்டேட்

விஸ்வரூபம் விவகாரம்: தீர்ப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
 
 
Posted Date : 11:02 (28/01/2013)Last updated : 14:00 (28/01/2013)
சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.


நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தை தமிழகத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்தது.


தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப் படத்தை பார்த்தனர்.


இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.


புதிய  மனு...


விஸ்வரூபம் பிரச்னையில் இன்று காலை கமல்ஹாசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோர், விஸ்வரூபம் படத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ள‌ 144 தடை உத்தரவை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக நீதிபதியின் முன்பு தெரிவித்தார்கள்.

அதை கேட்ட நீதிபதி கே.வெங்கட்ராமன், "ஏற்கெனவே இது தொடர்பாக ஒரு வழக்கு உள்ளது. ஆகவே அதே விஷயம் தொடர்பாக இன்னொரு மனு மீது தனியாக உத்தரவிட முடியாது. எனவே நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த மனுவையும் அதனுடன் சேர்த்து தாக்கல் செய்யுங்கள்" என்று அறிவுறுத்தியதுடன், 'இந்த பிரச்னை சட்டம் ஒழுங்கு, சமூக ஒற்றுமை, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு ஆகியவை தொடர்புடையது. எனவே அரசுத் தரப்புடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, இதில் ஒரு உடன்பாட்டுக்கு வருவது, நாளை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பயனுள்ளதாக இருக்கும்'' என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே விஸ்வரூபம் படத்துக்கான தடை மீதான தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மனுவும் நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இன்று நீதிமன்றத்துக்கு வந்த கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், 'ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகன் தன் பிரச்னைகளுக்காக சட்டப்பூர்வமான வழியில் முறையிட இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அரசிடம் முறையிடலாம். மற்றொன்று நீதிமன்றத்தில் முறையிடலாம். நாங்கள் இரண்டு வழிகளிலும் முயற்சிக்கிறோம்" என்று பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாளும் புதிய வழக்குகள் சூழும் நிலையில்... விஸ்வரூபம் சர்ச்சைகள் தொடர்கின்றன.

விஸ்வரூபம் பிரச்னை: கமல் நாளை புதிய மனு தாக்கல்
 
 
Posted Date : 11:54 (28/01/2013)Last updated : 13:40 (28/01/2013)
சென்னை:  விஸ்வரூபம் பிரச்னையில் இன்று காலை கமல்ஹாசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோர், விஸ்வரூபம் படத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ள‌ 144 தடை உத்தரவை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக நீதிபதியின் முன்பு தெரிவித்தார்கள்.



அதை கேட்ட நீதிபதி கே.வெங்கட்ராமன், "ஏற்கெனவே இது தொடர்பாக ஒரு வழக்கு உள்ளது. ஆகவே அதே விஷயம் தொடர்பாக இன்னொரு மனு மீது தனியாக உத்தரவிட முடியாது. எனவே நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த மனுவையும் அதனுடன் சேர்த்து தாக்கல் செய்யுங்கள்" என்று அறிவுறுத்தியதுடன், 'இந்த பிரச்னை சட்டம் ஒழுங்கு, சமூக ஒற்றுமை, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு ஆகியவை தொடர்புடையது. எனவே அரசுத் தரப்புடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, இதில் ஒரு உடன்பாட்டுக்கு வருவது, நாளை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பயனுள்ளதாக இருக்கும்'' என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே விஸ்வரூபம் படத்துக்கான தடை மீதான தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய மனுவும் நாளை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இன்று நீதிமன்றத்துக்கு வந்த கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன், 'ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகன் தன் பிரச்னைகளுக்காக சட்டப்பூர்வமான வழியில் முறையிட இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அரசிடம் முறையிடலாம். மற்றொன்று நீதிமன்றத்தில் முறையிடலாம். நாங்கள் இரண்டு வழிகளிலும் முயற்சிக்கிறோம்" என்று பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாளும் புதிய வழக்குகள் சூழும் நிலையில்... விஸ்வரூபம் சர்ச்சைகள் தொடர்கின்றன.


thanx - vikatan

7 comments:

Seeni said...

thakavalukku natri!

தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

தமிழ்மகன் said...

ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் - இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்


http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

Velu said...
This comment has been removed by the author.
Velu said...


பொதுவாக ஒரு விஷயத்திற்காக போராடுபவர்களை
இரண்டு வகையாக பிரிக்கலாம் .
1.மிதவாதி
2.தீவிரவாதி
மிதவாதத்தால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானது
மிதவாதியின் பெயர் ராம் ஆக இருந்தாலும் ராபர்ட் ஆக இருந்தாலும்
ரஹீம் ஆக இருந்தாலும் பாராட்டப் பட வேண்டியவர்கள்

தீவிரவாதத்தால் பெரும்பாலும் வெற்றி கிட்டாது .அபபடியே கிடைக்கும் வெற்றி நிரந்தமானது அல்ல
அது மேலும் பிரச்சனையை வளர்க்கும்.
தீவிரவாதியின் பெயர் அமர் ஆக இருந்தாலும் அக்பர் ஆக இருந்தாலும் அந்தோணி ஆக இருந்தாலும்
அவர்களுக்கு நல்லவர்களின் ஆதரவும் அவர்கள் கும்பிடும் கடவுளின் ஆதரவும் கண்டிப்பாக கிடைக்காது



விஸ்வரூபம் பிரச்சினையில் முஸ்லிம்கள் போராட விரும்பினால் ,மிதவாதம் மூலமாக போராடி ,அதாவது ஒரு முஸ்லிம் கூட
இந்த படத்தை பார்க்ககூடாது என முடிவு செய்திருந்தால் ,இந்த மாதிரி பிரச்னைக்கு நிரந்திர முடிவு கிடைத்திருக்கும்


அதை விட்டுவிட்டு இப்படி ஒரு பெரிய விளம்பரம் கிடைத்திருப்பதால்

இனி வரும் சிறு இயக்குனர்கள் கூட தமக்கு பெரும் விளம்பரம் கிடைப்பதற்காக வேண்டி சாதாரண படத்திற்கு கூட
வில்லன் பெயரை ஒரு முஸ்லிம் பெயராக
வைக்க ஆரம்பிக்கலாம்

இப்பொழுது கூட தடையை வாபஸ் பெற வெய்த்து படம் பார்ப்பவர்கள் வசம் கமல் செய்தது சரியா அல்லது தவறா என தீர்ப்பளிக்க
வாய்ப்பளித்து தங்களது மிதவாதத்தை காட்ட ஆரம்பிக்கலாம்
வேலு

RAMA RAVI (RAMVI) said...

எப்பதான் படத்தை பார்க்க போகிறோம் என்றாகிவிட்டது!!