Tuesday, April 10, 2012

லக்கி லுக் நானா? என் சம்சாரம் குஷ்பூ வா? மசாலா கபே ஓனர் சுந்தர் சி பேட்டி - காமெடி கும்மி

http://i.imgur.com/Qb3nh.jpg


''நான் சினிமாவைச் சந்தோஷமான அனுபவமாத்தான் பார்க்கிறேன். அழவைக்கிறதிலோ, அதிரவைக்கிறதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. ரஜினி, கமல், அஜீத்னு பெரிய ஹீரோக்களோடு படம் பண்ணியாச்சு. கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு 'உள்ளத்தை அள்ளித்தாமாதிரி சிரிக்கவைக்கிறதுக்காகவே ஒரு படம் கொடுக்க ஆசை. அப்படி ஒரு ஸ்கிரிப்ட் 'மசாலா கபே’ -  



சி.பி - அழ வைக்கறதுல உடன் பாடு இல்லையா? அண்ணே.. நீங்க நடிச்ச நகரம் படம் பாருங்கண்ணே. 

 ''விமல் - மிர்ச்சி சிவானு ரெண்டு பேரும் காமெடியில் அப்படி அசத்துறாங்க. அதிலும் சிவா பேசறது, சிரிக்கிறது எல்லாமே காமெடிதான். ஹீரோயின் அஞ்சலி. ஒரு படத்தில் அவங்க எனக்கு ஹீரோயினா நடிச்சிருந்தாங்க. 'களவாணிமூலமா மனசைக் களவாடின ஓவியா. இந்த ஜோடிகளைச் சேர்த்துவெச்சு ஒரு கதை உருவாக்கியாச்சு

சி.பி - நல்ல வேளை. நான் எப்பவும் கதையை உருவாக்குவேன்,. அதுக்குப்பிறகுதான் அதுக்கு ஏத்த கதாநாயக நடிக நடிகைகளை தேடுவேன்னு கதை விடாம உண்மையை சொல்லீட்டீங்க.. 



 பெற்றோர்கள் பாரம்பரியமா நடத்தின மசாலா கபேயைப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி நடத்தறாங்கனு கதை. நம்ம ஜனங்களுக்கு ஏற்கெனவே எவ்வளவோ பிரச்னை.


சி.பி - ஆமாண்ணே. 9 தாராவுக்கு மேரேஜ் நின்னுடுச்சு, அனன்யாவுக்கு ஆஞ்சநேயர் அல்வா அடச்சே  வடை குடுத்துட்டார்.. நாட்டுல தான் எத்தனை பிரச்சனை..  


http://flickmotions.com/addons/albums/images/877878866.jpg


 அதனால, சினிமாவுக்கு வந்து அங்கேயும் மெசேஜ் சொல்லி அவங்களை டயர்ட் ஆக்காம, முழுக்க முழுக்கச் சிரிக்கவைக்கிற மாதிரி வேலை பண்ணி இருக்கோம். இதை இந்திக்கும் கொண்டுபோக வேலை நடக்குது. என்னைப் பொறுத்த வரை ஜனங்களைச் சிரிக்கவைக்கிறதுதாங்க இருக்கிறதிலேயே பெரிய வேலை!''


சி.பி - நீங்க டைரக்டரா ஆடியன்சை சிரிக்க வெச்சீங்க, ஓக்கே ஆனா ஹீரோவா பல புரொடியூசரை அழ வெச்சுட்டீங்களே?

''நீங்களும் வடிவேலுவைக் கைவிட்டுட்டீங்களே?''

''அப்படி இல்லைங்க. எவ்வளவோ படங்களில் நானும் வடிவேலுவும் இணைஞ்சு விளையாடி இருக்கோம். அதே மாதிரியே விவேக், சந்தானம் காமெடியும் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. 'மசாலா கபேகேரக்டருக்கு சந்தானம் ரொம்பப்  பொருத்தமானவரா இருந்தார். என்னோட வெற்றியில் பெரும்பங்கு வடிவேலு, விவேக், சந்தானத்துக்கு உண்டு. எவ்வளவோ காதல், ஆக்ஷன் படங்கள் செஞ்சு இருக்கேன். ஆனால், எல்லோராலும் சொல்லப்படறது, 'சுந்தர் நல்லா காமெடியாப் படம் பண்ணுவார்ங்கிறதுதானே? இதில் 'வெட்டுப்புலிங்கிற கேரக்டர் சந்தானத்துக்கு. அவருக்கு இந்தப் படம் மூலமா இன்னும் பெரிய ரீச் இருக்கும்.''


சி.பி - அண்ணே, எதுக்கு சுத்தி வளைக்கறீங்க? விவேக்குக்கு மார்க்கெட் இல்லை. வடிவேல்க்கு சான்ஸ் குடுத்தா ஆளுங்கட்சியை பகைச்சுக்கிட்ட மாதிரி ஆகிடும். மார்க்கெட்ல இப்போ நல்லா ஓடற குதிரை சந்தானம் தான். அதனால புக் பண்ணீங்கன்னு ஓப்பனா சொல்லுங்க. யாருக்குத்தெரியாம இருக்கு?

''ஏன் நடிகரா இருந்தது போரடிச்சிடுச்சா?''


சி.பி - போர் எல்லாம் அடிக்கலை, மக்களுக்கு போரடிச்சுடுச்சு 

 http://www.rameshcelebs.com/wp-content/uploads/2010/08/oviya.jpg

''தொடர்ந்து மூணு ஹிட்ஸ் கொடுத்தேன். என்னைவெச்சுப் படம் எடுத்தவங்க யாரும் இன்டஸ்ட்ரியைவிட்டுப் போகலை. ஏதாவது சில படங்கள் தோல்வி அடைஞ்சிருந்தால், அதுக்கு என்னோட அஜாக்கிரதைதான் காரணமா இருக்கும். நடிகனா நான் ரொம்ப ஆவரேஜ்தான். ஆனால், டைரக்டரா என்னோட ஹிட்ஸ் பெரிசு. இப்போதைக்கு நடிப்புக்கு சின்ன பிரேக். நல்ல கதை கிடைச்சா கண்டிப்பா அது தொடரும்!''


சி.பி - ஆண்டவா! சுந்தர் சிக்கு நல்ல கதை மட்டும் சிக்கிடக்கூடாது.. ஹீரோவா நடிச்சு கொலையா கொல்லுவாரு.. அதை மட்டும் நீ பார்த்துக்கோ. அவர் டைரக்ட் பண்ற படத்தை நாங்க பார்த்துக்கறோம். 
''குஷ்பு அரசியலில் இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?''


சி.பி - அதுல அவருக்கு என்ன கஷ்டம்? லாபம் தான்./. அரசியல் பின்புலம் உள்ளவரோட கணவர் என்பதில் க்ர்த்து தான். அடிக்கடி சம்சாரம் கூட்டம், பிரச்சாரம்னு வெளீல கிளம்பிடுவார்,.. சல்லை விட்டதுன்னு இவர் ஜாலியா இருக்கலாம்.. 
''அது அவங்க இஷ்டம். அவங்க எதைச் செஞ்சாலும் சிறப்பா செய்வாங்க


சி.பி - ஹி ஹி ஹி.. நீங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.. 



 அவங்க செயல்பாடுகள்ல தலையிடுறது என் வேலை இல்லை. கணவரா இருந்திட்டால் எல்லாத்திலும் தலையிட்டு கருத்துச் சொல்லணும்கிற அவசியம் இல்லையே?''



சி.பி - இந்தக்காலத்துல எந்த சம்சாரம் தான் புருஷன் கருத்தை மதிக்குது? ஹூம்.  

''என்ன இருந்தாலும் குஷ்பு கணவர்னுதானே நீங்க அறியப்படுறீங்க?''


சி.பி - இப்படியா பப்ளிக்கா கேட்கறது? அண்ணன் ரொம்ப யோசிக்கறார் பாருங்க.  


http://i.imgur.com/7oErB.jpg
''நான் டைரக்ட் பண்ற 25-வது படம் 'மசாலா கபே’. 11 படங்களில் ஹீரோவா நடிச்சிட்டேன். ஆனாலும், எங்கே போனாலும் தமிழ் மக்கள் என் கையைப் பிடிச்சிட்டுக் கொண்டாடுறது 'குஷ்பு புருஷன்னு சொல்லித்தான். நான் சினிமாவில் நுழையும்போது, குஷ்பு பெரிய ஹீரோயின். ரஜினி, கமல்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளோடு நடிச்சிட்டாங்க. அப்போ நான் புது டைரக்டர். இவ்வளவு படம் செய்யப்போறேன்னு அன்னைக்குத் தெரியாது. ஆனாலும், என்னைக் காதலிச்சுக் கணவரா ஏத்துக்கிட்டாங்க


சி.பி - ஓஹோ.. வாழ்க்கை கொடுத்துட்டரா? குட் வெரி குட்
குஷ்பு செஞ்சதுதான் பெரிய தியாகம். அதுக்காக என்னைக் 'குஷ்பு புருஷன்னு சொல்றதை அழகா ஏத்துக்கிட்டுப்போறேன். குஷ்புவுக்காக இந்தச் சின்ன தியாகத்தைக்கூட நான் செய்ய மாட்டேனா என்ன?''


சி.பி - நீங்க தியாகியா? அவர் தியாகியா?ன்னு போகப்போகத்தெரியும். இந்த பூவின் வாசம் புரியும்.  



http://123tamilforum.com/imgcache2/2012/04/DSC_0289-1.jpg


டிஸ்கி - சுந்தர் சி பேட்டில அவர் ஃபோட்டோவையும் காணோம்.. அவர் சம்சாரம் ஃபோட்டோவையும் காணோம் என யாரும் அங்கலாய்க்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. பை மசாலா கஃபே ஸ்டில்ஸ் ரசிகர் மன்றம் ஹி ஹி

6 comments:

Jayaprakash said...

Super thala!

Unknown said...

என்னவோ போங்க சித்தப்பு இப்பல்லாம் எதுவுமே சரியா பிரியல ச்சே புரியல...நீங்க பாட்டுக்கு உங்க கமன்ட்டுன்னு சொல்லி செவப்பா போட்டுட்டு போறீங்களே...அம்புட்டுஅடியா வாங்கிபுட்டீக!

முத்தரசு said...

ஜொள்ளு லொள்ளுக்காக வைத்த ஸ்டில்லை சுட்டுட்டேயே சித்தப்பு

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ்

சூப்பர்......அந்த அஞ்சலி போட்டோவை பார்த்துகிட்டே இருக்கலாம் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

மசால கபே அறிமுகம்! நல்ல மசால விளம்பரம்! அருதை! புலவர் சா இராமாநுசம்

அன்பு ஆமீரா said...

அண்ணா நால்ல காமெடி