Tuesday, July 24, 2012

தேள் விஷம் - கி.ராஜநாராயணன் -ன் கிராமத்து கில்மா சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFUiLbVyzQ7Mg_xgxupBMMMQkFSY7nzdKQselkkST9GguXjnbWN7790vifOBCqyeqRr_86T0K5mkZvnZ_tXIuGP1CTxedL6KVLfQq75QeX0llswHn0XyILZ4SLozPPQF8mOQ1y5ewMr_Pm/s400/scorpion-birth_01.jpg 

18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).



ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளுக்கு அடுத்த தெருவுல கடை வச்சிருந்த ஒருத்தனோட ‘தொடுப்பு’ உண்டாயிப் போச்சு. எப்பிடின்னா…..




அவ போனா மட்டும் அவன் கடையில ஒரு கூறுப் பருத்திக்கு ரெண்டு கூறுப் பருத்திக்கு உண்டான சாமான்கள் கொடுக்கிறது. ஒழக்குத் தானியத்துக்கு அரைப்படித் தானியத்துக்கு கொடுக்கிற அளவுக்கு – ரெண்டு மடங்கு சாமான்கள் தந்தான். ஒரு நா ராத்திரி, அவ சாமான்க வாங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிட்டு. ஆனாலும் அவம் காத்திருந்தான். வளக்கம் போல தானியம் கொண்டு வந்தா. சாமான் வாங்குனா.




புறப்பட்டு போறதுக்கு முன்னாடி, அவ தயங்குன மாதிரி இருந்தது.


என்னெங்கிற மாதிரி அவெள ஏறிட்டுப் பார்த்தான். அப்பதாம் அவ சொல்லுவா.’ஒடம்பு ஏம் இப்பிடி மெலிஞ்சிக்கிட்டே வர்ரீறு. வைத்தியருகிட்டே கையக் காமிச்சு மருந்து ஏதாவது சாப்பிடக் கூடாதா?’


அப்பதாம் அவம் தன்னோட ஆசைய தயங்கி தயங்கிச் சொன்னாம்.


இவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம, வேற என்னத்தையோ பத்தி அவங்கிட்டே ஒரு தகவல் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா. இவம் அதுக்கு என்னத்தையோ பதில் சொன்னாம்.


இப்பிடிக் கொஞ்சம் நேரம் போச்சி. அதுக்குப் பிறகு என்ன பேசன்னுட்டுத் தெரியல. இவம்தான் சொன்னாம்.’நாளைக்கு ஓம் வீட்டுக்கு வரட்டா?’


அவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம ஒரு ‘குறுஞ்சிரிப்பாணி’ சிரிச்சிட்டுப் போயிட்டா.


***
காட்லே சம்சாரி விடியுமின்னெ உழப் போனான். ஏரெக் கட்டி கொஞ்ச நேரந்தாம் உழுதிருப்பான். தண்ணிக் கலயத்தெ காக்கா உருட்டிவிட்டுட்டது.




இது என்னடா சங்கட்டம். தண்ணியில்லாம என்ன செய்ய. வெயிலேறிட்டா தண்ணி குடிக்காம முடியாதென்னு ஏரெ நிறுத்திட்டு, கலயத்தெ எடுத்திக்கிட்டு விறுவிறுன்னு வீட்டப் பாக்க வந்தாம்.




வீட்டுக் கதவு சாத்தியிருக்கு.இந்நேரத்துக்கு வீட்டுக்கதவு சாத்தியிருக்கக் காரணமில்லையே.


என்ன விசயம்னு தொறவால் தொளை (சாவி துவாரம்) வழியா உள்ளுக்குப் பாத்தா, அவம் கண்ணுக்கு ஒரு காச்சி (காட்சி) தெரியுது.


கடைக்காரன் இவம் பொண்டாட்டி மார்ல வாய வச்சி…………
……
படபடன்னு கதவெத் தட்டினான்.கதவு தொறந்தது. இவம் பெண்டாட்டி இவனெப் பாத்ததும் ‘ஓ’ண்ணு கதறிக் கிட்டே, நல்லவேளை இப்பவாது வந்தீளே. ஏம் பாட்டெப் பாத்தீளா. இந்தக் கொடுமை உண்டுமா. இவரு இல்லேன்னா நாஞ் செத்துத்தாம் போயிருப்பேம் என்று சொல்லி அழுதாள்.




புருசங்காரனுக்கு ஒண்ணும் வெளங்கலே.




கடைக்காரனெப் பாத்தா அவம் தலெயக் கவுந்துகிட்டு ஒண்ணுஞ்சொல்லாம நிக்காம்.


என்ன, என்ன சொல்லுதே என்ன நடந்தது. வெவரமாச் சொன்னாத்தானே தெரியும்னு கேட்டான் சம்சாரி.




என்னத்தெ வெவரமாச் சொல்ல, வெக்கக் கேடு. பருத்தி மார்ப் படப்புலெ போயி பருத்தி புடுங்கி அணைச்சி எடுத்துக்கிட்டுதாம் வந்தேன். ‘சுரீர்’னு மார்ல தீக்கங்கு வச்ச மாதிரி இருந்தது. கீழபோட்டுப் பார்த்தா…சரியான கருந்தேளு. வலியான வலியில்லே. தாங்க முடியல. என்ன செய்யிறதுன்னுட்டுந் தெரியல. இவரு தேள் விசத்தை உறுஞ்சி எடுத்துருவாருன்னு சொன்னாங்க. இவரெப் போயி கூப்ட்டா, நா ஆம்பளை இல்லாத வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டாரு. பெறவு, நாந்தாம் சொல்லி, எம் வீட்டுக்காரரு அப்பிடியெல்லாம் நெனக்க கூடியவரு இல்லெ. அதோட ஆபத்துக்குப் பாவமில்லேன்னு கூட்டிட்டு வந்தேம். அப்போதைக்கு இப்போ தேவலைன்னாலும் வலி பொறுக்க முடியலன்னு அழுதா.




சரி…சரி…அழுவாதெ. இதெல்லாம் யாருக்கும் வரக்கூடியதாம். நம்ம என்ன செய்ய முடியும் அதுக்கு. பரவாயில்ல. அவராவது சமயத்துக்கு கூப்ட்ட ஒடனே வந்தாரெ.




‘நா அங்க, தண்ணிய காக்கா கொட்டிட்டதுன்னு திரும்பவும் தண்ணி கொண்டு போறதுக்காக வந்தென்னு’ கடைக்காரனுக்கு ‘சமயத்துக்கு வந்து ஒதவினதுக்கு ரொம்ப உபகாரம்’னுட்டு சொல்லிட்டு, கலயத்துல தண்ணிய றெப்பிக்கிட்டுப் போயிட்டான்.




***
கொஞ்ச நா கழிஞ்சது.




ஒரு நா திடீர்னு அய்யோ தேள் கொட்டீட்டதேன்னு சம்சாரி கூப்பாடு போட்டான்.அடுப்பங் கூடத்துல வேலையா இருந்த அவம் பொண்டாட்டி எங்கே எங்கே ‘தேளுதான்னுட்டுப் பாத்தீங்களா’ என்று பதச்சிப் போயி வந்தா.




தேளுதாம் பாத்துட்டேன். வசமாப் பிடிச்சி மாட்டிட்டது. நல்ல கருந்தேளுன்னாம்.அய்யோ வலி பொறுக்க முடியலயே. நீ ஓடிப் போயி அந்தக் கடைக்காரனெ கையோட கூட்டிட்டு வா. ஓடு சீக்கிரம்னு அவசரப்படுத்தினான்.




அவளும் ஓட்டமும் நடையுமாப்போயி கடைக்காரன பாத்து, இன்ன மாதிரி, சங்கதி ஒடனே பொறப்பட்டு வா. நீ இப்ப வரலன்னா அவரு சந்தேகப் பட்டுடுவாரு. எந்தின்னு சொன்னா.


அவனுக்கும் நாம வர்றமா இல்லயான்னு பாக்கதுக்குதான் இதெல்லாமான்னு ஒரு எண்ணம்.




வேற வழியில்லாம அவனும் வந்தாம்.


எங்கே, எந்த எடத்துலன்னு கடைக்காரன் கேட்டாம்.


சம்சாரி வேட்டிய …………………
..
தாத்தாவோட சேர்ந்து நாங்களும் சிரிச்சோம்!


‘பெறவு?’ என்று கேட்டாம் கிட்டான்


பெறவு என்னடா பெறவு? பெறவு பெறவுதான்.


கடைக்காரப் பயல் தப்ப முடியல. வசமா மாட்டிக்கிட்டான்.

5 comments:

nellai அண்ணாச்சி said...

பாட்டயாவின் கதய படிச்சாலே நாள் முழுதும் மனசுக்குள் ஒரே சிரிப்பு

Doha Talkies said...

மிகவும் அருமை அண்ணா.

Admin said...

ஏற்கனவே இந்த கதையை படித்திருப்பதாய் ஞாபகம்.இருப்பினும் இன்னுமொருமுறை வாசிக்கிறேன்..நன்றி..

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்..

பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

Unknown said...

கடைக்காரனுக்கு நல்ல தீர்ப்பு .

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நல்ல கதைதான்....
hihee...