Showing posts with label கி.ராஜநாராயணன். Show all posts
Showing posts with label கி.ராஜநாராயணன். Show all posts

Thursday, September 03, 2015

சொர்க்கத்தின் சாவி! - கி.ராஜநாராயணன்

எனக்கு நெருக்கமாக ஒரு நண்பர் ஒருவர் இருந்தார். அவரை அவருடைய அத்தைதான் அன் போடு எடுத்து வளர்ந்து வந்தாள். அத்தைக்கு வயதாகி தலை சாய்ந்த வுடன், வீட்டு முன்வாசல் திண்ணைக் கட்டிலில் படுத்த படுக்கையாகிவிட்டாள். தளர்ந்த வயோதிகத்தைத் தவிர அத்தையை வேறு எந்த சீக்கும் அண்டவே இல்லை. சீக்குதான் இல்லை என்றாலும்கூட எப்பப் பார்த் தாலும் பொழுது முச்சூடும் அனத்திக் கொண்டே இருப்பாள். இந்த அமைதியின்மைக்கு என்ன காரணம் என்று நண்பர் யோசித்துக்கொண்டே இருந்தாராம்.
ஒருநாள் பக்கத்துத் தெருவில் ஒரு கல்யாணம். கதவைப் பூட்டிக்கொண்டு எல்லோரும் அங்கே புறப்படும்போது, பூட்டிய தலைவாசக் கதவின் பெரிய இரும்புச் சாவியை அத்தையிடம் கொடுத்தார்களாம். அப்படி ஒரு மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாளாம்.
அத்தையின் நிம்மதியின்மைக்கான முழுக் காரணம் உடனே புரிந்துவிட்டதாம் நண்பருக்கு. அதன் பிறகு இதே வழியைப் பின்பற்றினோம் என்றார். அத்தையின் சாவு நெருங்க நெருங்க, ஒரு வேற்றுச் சாவியை அத்தையின் கையில் நிரந்தரமாக கொடுத்து வைத்துவிட்டார்களாம்.
ஒருநாள் அத்தை இறந்துவிட்டார். முறையான இறுதிச் சடங்குகள் செய்வதற்காக உறவுமுறைகள் எல்லாரும் கூடி, அவரது உடம்பைக் குளிப்பாட்ட முனைந்தபோது… விரல் கள் அழுத்தமாக மூடியிருந்த அத்தை யின் ஒரு கையில் இருந்து அந்த சாவியை எடுக்க ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்திருந்ததாம். அப்போ ஒரு வேடிக்கை ஆசாமி இப்படி சொன்னாராம்: ‘‘மேலே சொர்க்கவாசல் பூட்டியிருந்தாக்கூட, தள்ளு தள்ளு… நானே சாவி கொண்டாந்துட்டேன்னு சொல்லி, திறந்திருப்பார் உங்க அத்தை.’’
‘‘ஞாயப்படி பார்த்தா அந்தச் சாவியையும் அத்தையோட பிரேதத் துடன் கூடவே வெச்சுத்தான் அவங்களை மேலே ’அனுப்பி’ இருக்கணும். எப்படி சும்மா வெறுங்கையோட அவங்களை மேலே அனுப்பி வைக்க முடிஞ்சுதோ…’’ என்று சொன்னார் ஒரு பெண்மணி. அதையும் இங்கே நினைச்சுப் பார்க்க வேண்டியிருக்கு!
ஒரு மாதாந்த வெள்ளிக்கிழமையன்று உத்தியம்மா வீட்டை ஒதுங்க வைத்து, சாணிப் பால் கரைசலால் மெழுக ஆயத்தம் செய்தாள்.
வீட்டினுள் அடைசலாக இருந்த சாமான் சட்டுகளையெல்லாம் ஓர ஒதுங்க வைக்கிறபோது உத்தியம்மாவின் கண்கள் தேடுவது அத்தையம்மாவின் சிறுவாட்டு வெள்ளிப் பணம், பாக்கி தங்க நகைககளை எல்லாம் அத்தையம்மா எந்த இடத்தில் புதைத்து வைத்துவிட்டுப் போயிருப்பார் என்பதைத்தான்.
அந்தக் காலத்தில் ஒளித்து வைக்க வேற வழியே கிடையாது. ஒழுக்கரைப் பெட்டிகள் புழக்கத்துக்கு பட்டிதொட்டிகளுக்கு வராத காலம் அது. ரூபாய் நோட்டுகளேகூட அவ்வளவாக சகஜமாகப் புழக்கத்துக்கு வரவில்லை.
அந்த வீட்டின் மண் தரையில் எல்லா இடத்தையும் நினைச்ச சமயத்தில் அடிக்கடி தோண்டியோ, நோண்டியோ பார்க்க முடியாது. குறிப்பிட்ட, சந்தேகம் வரும் இடங்களை மட்டும்தான் நோண்டிப் பார்க்க முடியும். அப்படிப் பார்த்த ஓர் இடத்தில் மண் சும்மாடு ஒன்று தலை காட்டியது. ‘‘வாங்க அத்தையம்மா’’ என்று மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு, வெளிவாசக் கதவுகளெல்லாம் சரியாகப் பூட்டி யிருக்கா என்று பார்த்துவிட்டு, ஒரு பிள்ளைக் கடப்பாரையும், கொத்து வேலைக்குப் பயன்படும் தேய்ந்துபோன ஒரு கரணையையும் எடுத்துக்கொண்டு வந்தாள். இன்னும் கொஞ்சம் தோண்டிய உடனே ஒரு தோண்டி தெரிந்தது.
வேகமாகப் போய் ஒரு கோழியைப் பிடித்துக்கொண்டு வந்து, அதன் ஒரு காலின் விரல்நுனியை அறுத்து ரத்தப் பலி காட்டிவிட்டு, மேற்கொண்டு தோண் டினாள். முயற்சி வீண் போகவில்லை.
வெள்ளி நாணயங்கள், தங்க நாணயங்கள், பழங்காலத்து தங்க ஆபரணங்கள் இன்னும் ஏதேதோ உள்ளே இருந்துகொண்டு சிரித்தன.
‘கையும் ஓடலை காலும் ஓடலை’ என்று சொல்வார்களே அந்த நிலைதான் உத்தியம்மாவுக்கு. மனசு கிடந்து திக்குமுக்காடியது. அதுமட்டுமா…
ஓவென்று கூப்பாடு போட்டு சங்… சங்… என்று கும்மாளமும் போட்டது மனசு.
‘கொடுக்கிற தெய்வம் கூரை யைப் பிய்த்துக்கொண்டுதான் கொட் டும்’ என்பார்கள். இதுவோ, தரையைப் பிய்த்துக்கொண்டல்லவா மேலெழுந்து துருத்திக்கொண்டு வந் திருக்கிறது. இதுவொரு வகை விபத்துப்போலத்தான்.
கரிசல்ச் சீமையில் ‘தன்னூத்து’ என்று சொல்வார்கள். அவனுக்கு எதுவும் பூமியின் கீழ் இருந்தே வர வேண்டும். குளமோ, குளத்துக்குள் கிணறோ தோண்டும்போது எதிர்பாராத கணத்தில் காத்துக்கொண்டே இருந்ததுபோல் பூமியின் அடியில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.
அந்த நீர் ஒருவருக்கானது அல்ல; ஊருக்கே ஆனது. அப்படி பீய்ச்சியடிக்கும் தண்ணீரைக் கண்டு விட்டால் ஆனந்தக் கூத்திடுவார்கள் மக்கள். ஊரே அதில் நனையும்.
தூங்கா நாயக்கரின் குடும்பம் அதில் இருந்து நிலம் நீச்சு என்று நிமிர்ந்து எழுந்து நின்றது.
எந்திரங்கள் இல்லாத தனிமனித உழைப்பை மட்டுமே கொண்டு வாழ்ந்த காலம் அது. எந்திரம் என்றால் அது சுற்ற வேண்டும்.
அப்போது திரிகை ஒன்றுதான் இருந்தது. அதுவும் கல்லால் ஆனது. அதன் கைப்பிடியும் உள் அச்சு மட்டுமே மரத்தில் ஆனவை.
உலக்கைகளுக்கான பூண்கள் பின்னால் வந்தவை. உரல்களும் மரத்தில் இருந்து பிறகு கல் பிறப் பெடுத்தவையாகும். இரும்புச் சுத்திய லுக்கு முந்தி இருந்தது கொட்டாப்புளி கட்டை.
வெகுநாள்ப்பட்ட வைரம் பாய்ந்த புளிய மரத்தில் இருந்து வந்ததினால் அது கொட்டாப்புளி எனப்பட்டது.
மரச்செக்குகள் கல் செக்குகளாயின. பருத்தியில் இருந்து கொட்டையையும் பஞ்சையும் பிரிக்கும் எந்திரம் முழுவதும் மரத்தினால் ஆனதே.
உலோகத்தினால் முதல் சக்கரம் செய்து எதிரிகளை வதைத்த முதலவன் அசோதை வளர்த்தெடுத்த கண்ணபிரானே. அந்த மாயம் அவனோடு போய்விட்டது.
ஓவியங்கள்: மனோகர்
- இன்னும் வருவாங்க…


நன்றி-த இந்து

Thursday, June 11, 2015

மனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க!-கி.ராஜநாராயணன்

தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற சிறிய புத்தகத்தில், கரிசல்காட்டில் அவர் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கையில் ஒரு சம்சாரி சீனிவாசராவை ராச்சாப்பாட்டுக்கு அழைத்துப் போகிறார். நல்ல பசி இவ ருக்கு. ஆனாலும், அந்த ரசமும் குதிரை வாலி அரிசிச் சோற்றையும் அவரால் சாப்பிட முடியவில்லை. அந்தச் சம்சாரி வேகமாகப் பிழிந்து பிழிந்து சாப்பிடு வதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டி ருந்ததாகச் சொல்லுகிறார்.
முதன்முதலில் ரங்கூனில் இருந்து நெல்லரிசி வந்து இங்கே விற்கும்போது ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி கிடைத் தது என்று சொன்னால், இப்போது நம்பவே மாட்டார்கள். அதோடு அதனுடைய ருசியையும் சொல்லணும். கரிசல்காட்டுக்காரனுக்கு நெல் அரிசி்ச் சோறுதான் ருசியான பலகாரம். ஓட்டல் களைப் பார்த்து அவன் ஓடியதுக்கு இதுவும் ஒரு காரணம்.
சின்னப் பையனாக இருந் தப்போ, ஓட்டல்களில் பாம்பே ரவையில் ஆக்கிய உப்புமாவை ரொம்ப விரும்பி உண்பேன். அதையெல்லாத்தையும்விட ஓட்டல்களில் ரவா தோசை அப்படி ஒரு ருசி அந்தக் காலத்தில்.
நான் இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் என்னைப் புரட்டிப் போட்டது அந்தக் காலத்து ஓட்டல்களின் பூரிக் கிழங்கு. அந்தக் கிழங்குக்கும் பூரிக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம்!
அந்தக் கிழங்கின் ருசியைப் பற்றி ரசிகமணியிடம் சொன்னேன். உற்சாக மாகிவிட்டது அவருக்கு. ‘‘அந்தக் கிழங்கை வைத்துக்கொண்டு ஒரு ஹிண்டு நியூஸ் பேப்பரையே சாப்பிட்டு விடலாமே’’ என்றார் அவர். அதை நாங்கள் மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி இப்பவும் சிரிப்போம்.
அந்தக் காலத்தில் அந்த உருளைக் கிழங்கின் அப்படியான ருசிக்குக் காரணம்? ஊட்டியின் குளிர், மண், அந்த மழைதான்!
இப்போது உருளைக் கிழங்கு எந்தத் தரையிலும் விளைவதால் ருசியும் தரை மட்டமாகிவிட்டது. வெள்ளைப் பூண்டி லும்கூட மலைப் பூண்டின் ருசி தரைப் பூண்டுக்குக் கிடையவே கிடையாது.
சென்னையில், ஒரு பிரபலமான கல்யாணத்துக்கு நாரணதுரைக் கண்ணன், கு.அழகிரிசாமியை அழைத் துக்கொண்டு போனார். அங்கே பாதாம்கீர் தந்துள்ளார்கள். அருமையாக இருக்கிறதே என்று விரும்பி வாங்கிக் குடித்தார்களாம். கு.அழகிரிசாமியால் மட்டும் குடிக்கவே முடியலையாம். என்ன செய்கிறதுனும் தெரியல. இதை என்னிடம் அவனேதான் சொன்னான். நானும் பாதாம்கீர் குடித்தது இல்லை.
அது எப்படியிருக்கும் என்று கேட் டேன். ‘‘அதை ஏம் கேக்கிற. ஒரே மூட்டப் பூச்சி வாடை அடிக்குது. கொண்டா கொண்டான்னு வாங்கி வாங்கி மொக்குரான்க’’ என்று அப்போது அப்படிச் சொன்னவன், அதே பாதாமில் தயாரித்த பாதாம் அல்வாவைச் சாப்பிட என்னை கோந்தப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஆரிய பவனுக்கு அழைத்துச் சென்றவனும் அவனே!
கிராமப்புறங்கள்ல நாங்கள் தின்னு அனுபவிச்ச பலகாரப் பண்டங்கள் கருப் பட்டித் தோசை, கருப்பட்டிப் பணியாரம், சுசியம், சினைக் கொழுக்கட்டை, உளுந்த வடை, ஆமைவடை, முந் திரிக் கொத்து, மாவு உருண்டை, முறுக்கு வகைகளெல் லாம் இப்போ இப்படித்தான்.
ஏழை சம்சாரி வீடுகளில் அப்போ தெல்லாம் தோசைக்குப் போட்டாலே கொண்டாட்டம்தான்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கேட் டாராம். ‘‘ஏண்டா நீ நேத்துப் பள்ளிக் கூடத் துக்கு வரலை?’’ என்று. அதுக்கு அந்தப் பையன் ‘‘நேத்து எங்க வீட்டுல தோசைக் குப் போட்டிருந்தார்கெ சார். அதான் வரல’’ என்று பதில் சொல்லியிருக்கான்.
இந்தப் பையன் பெரியவனாகி, பட் டணத்துக்குப் போய் மிட்டாய்க் கடையை முதன்முதலில் பார்க்க நேர்ந்தபோது தான் ‘பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சுப் பார்த்ததுபோல’ என்கிற பேச்சு வந்திருக்கும்போல!
ஆனால், நான் முதன்முதலா முறைச் சுப் பார்த்தது திருநெல்வேலி போனப்ப நிலக்கண்ணாடி வைச்ச முட்டாசுக் கடையைத்தான். அந்த நிலக்கண்ணாடி யில் நமது மூஞ்சி முகரை எல்லாம் பளிச்சென்று தெளிவாத் தெரியும். அதை தரமான அசல் பெல்ஜியம் கண்ணாடி என்பார்கள். அதுசரி, இருந்துட்டுப் போகட்டும்.
இந்தக் கண்ணாடிங்க முடி திருத்துற கடைங்கள்ல இருக்கிறது சரி. வித விதமா இனிப்புகளை நிறுத்துப் போடுற கடைகள்ல ஏன் வைக்கணும்?
ஒருநாள், கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரஹரியிடம் இந்த சந்தேகத் தைக் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டு அழகிரிசாமி முதல் எல்லோருமே சிரிச்சோம்.
திருநெல்வேலியில் லாலாக்கடை அல்வா பிரிசித்தி பெற்றது. இந்த லாலாக்களில் ஒருத்தர் தேசிய விடுதலை இயக்கத்திலும், நெல்லையில் நடந்த போராட்டங்களிலும் பங்கேற்றுப் பிரி சித்திப் பெற்றார்.
தமிழ்நாட்டுப் பலகாரங்களில் கீர்த்தி பெற்றது என்று பலதைச் சொல்லலாம். ருஷ்ய நாட்டில் இருந்து வந்த பிரதமர் குருஷேவ்வுக்கு, நெய்யில் சுட்ட ஒரு உளுந்த வடையைக் கொடுத்தார்களாம். தின்னு பார்த்துவிட்டு இன்னொண்ணு கிடைக்குமா என்று கேட்டார் என்பார்கள்.
பயணம் போகும்போது உண்ணக் கொண்டுபோக என்றே நம்மிடம் பலது உண்டு. ஒருநாள் ‘கப்பல் குழம்பு’ பற்றிக் கேள்விப்பட்டேன். இதுவும் பலநாட்கள் தாக்குப்பிடிக்குமாம்.
கிருபானந்த வாரியார் ஒருநாள் தண்ணீர் விடாமல் செய்யும் குழம்பைப் பற்றிச் சொன்னார்.
குற்றாலத்தில் பெரிய அண்ணியார் (ரசிகமணி அவர்களின் வீட்டம்மா) சிறப்பாக ஆக்குவார் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
நாங்களே ஒருநாள் ரசிகமணி அவர் களிடம் இதுபற்றிக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே கேள்விப்பட்டா மட்டும் போதுமா? சாப்பிட்டும் பார்க்க வேண்டாமா என்று கேட்டார். மறுநாளே எங்களுக்கு அது அண்ணியாரிடம் இருந்து கிடைத் தது. ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தோம்.
எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் குறித்து வைத்துக்கொள் கிற புத்தியெல்லாம் எங்களுக்கு இல்லை. அந்தப் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படிக்கவில்லை.
ருசித்து அனுபவிச்சுச் சாப்பிடுகிறது என்பதையே சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
- இன்னும் வருவாங்க…
a


thanx - the hindu

Monday, June 08, 2015

என்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநாராயணன்

என்னோடு பழகியவர்களைப் பற்றியெல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை. என்றாலும் முடிந்த மட்டும் பார்க்கலாம்.
என்னைப் போன்ற உதவாக்கரைகள் கிராமங்களில் அபூர்வம்தான்.
‘முளைக்கும் செடிகளில் எதுவும் களையில்லை…’ என்று சமீபத்தில்தான் படித்தேன்.
இதேபோல்தான் மனுசப் பிறப்புக்களிலும் என்றாலும், விதிவிலக்கு எதிலும் இருக்கும் போலிருக்கு.
பூமிக்குப் பாரமாகப் பிறந்துவிட் டோமே என்று, ஒரு நேரம் நினைத்துக் கொண்டதில்லை என்னைப் பற்றி.
பேராசிரியர் பஞ்சு ஒருநாள் சமீபத்தில்தான் கேட்டார் என்னிடம்:
‘‘தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எப்பவாவது தோன்றியது உண்டா?’’
சிரிப்புதான் வந்தது.
என்னை பேட்டி கண்டபோது, அவர் கேட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.
முற்றிய தொழுநோய் வந்து, விரல் கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண் டிருக்கும் நிலையில்கூட, ஒருவன் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கிறான். ஏன்?
‘ஒரு அற்புதம் தோன்றும்; இந் நோய் குணமாகிவிடும்’ என்ற நம்பிக்கையில்தான்!
‘‘சீன் நாயக்கர்’ என்றுதான் அவ ரைக் கூப்பிடுவேன். என்னைவிட அவர் மூப்புதான். அய்ந்தாறு வயசுகூட அதிகம் இருக்கலாம். அவர் என்னை ‘‘யோவ்…’’ என்றுதான் அழைப்பார்.
பொதுவாக கிராமங்களில் இப்ப டிக் கூப்பிடுகிறது இல்லை; முறை சொல்லித்தான் கூப்பிடுகிறது; மாமா மச்சான்; அண்ணன் தம்பி என்று.
ஓரனேர் சம்சாரி அவர். ஜோடி மாடுகள், அதுக்கான கோப்புசம் எல்லாம் இருந்தது. வீட்டில் அவரும், அவரது உடன் பிறந்த அக்காள் மகள் நாச்சியாவும் இருந்தார்கள். நாச்சியாள் பிறந்ததில் இருந்து அந்த வீட்டின் சகல வேலை, பொறுப்பு, சமையல் முதக் கொண்டு யாவும் அவள்தான். அவரை வாய் நிறைய ‘மாமா… மாமா’ என்று கொண்டாடுவாள். அவள் பிறந்தவுடனே வீட்டார், இவள் சீன் நாயக்கருக்குத்தான் என்று தீர் மானித்திருந்தார்கள்.
அம்மா, அப்பா காலமானார்கள். உடன் பிறந்த பெண்களையெல்லாம் கட்டிக் கொடுத்தாயிற்று. ஒரே அண் ணன் பக்கத்து ஊரில் கல்யாணம் செய்துகொண்டு, அங் கேயே போய் நிரந்தரமாகிவிட்டார். இப்போது வீட்டில் இவர்கள் இருவர் மட்டும்தான்.
அந்த வீட்டுக்கு வரும் அவரது சொந்தங்கள், ‘‘என்னப்பா, வயசு காணாதா. அந்தப் பிள்ளை கழுத்தில் ஒரு மூணு முடிச்சு போட்டு கொண்டனைச்கொ..’’ என்பார்கள்.
நாயக்கர் மவுனமாகிவிடுவார். பதிலே பேச மாட்டார். ரொம்ப நெருக்கமானவர்கள் வற்புறுத்திக் கேட்டால் மட்டும், ‘‘அவளை வெளியே எங்கேயாவதுதான் கட்டிக் கொடுக்க வேணும். உடன் பிறந்தாபோல கூடவே இருந்துவிட்டு, வேற மாதிரி பார்க்க முடியலை…’’ என்பார்.
நாச்சியாள் தனிமையில் போய் அழுது கண்ணீர் வடிப்பாள்.
வயசு ஏறிக் கொண்டே போயிற்று இருவருக்கும். என்ன செய்வதென்று தெரியவில்லை.
கரிசல் விவசாயத்தில் கொஞ்சங் கொஞ்சமாக இருள் கவிய ஆரம்பித்தது. வானம் சுருங்கிக் கொண்டே வந்தது.
ரங்கூனில் இருந்து கப்பல்களில் வந்திறங்கிய அரிசி வரத்து நின்று போனது. வங்காளத்தில் பஞ்சம் வந்து ரெண்டு லட்சம் மக்கள் செத்துப் போனார்கள் என்று சொன்னார்கள்.
இரண்டாவது உலகப் போர் பற்றி ஒரு தொடர்கதையைப் போல பத்திரிகைகள் சுவாரஸ்யமாக செய்திகள் கொடுத்துக் கொண்டி ருந்தன. படிக்கத் தெரிந்த இள வட்டப் பிள்ளைகள் வாசித்துச் சொல்ல, வயசாளிகள் கேட்டுத் தெரிந்துகொண்டே இருந்தார்கள்.
வெள்ளைக்காரன் பேரில் இருந்த கோபத்தால் ஜெர்மன்காரனான இட்லர் மேல் மக்களுக்கு ஒரு அபிமானம் உண்டானது.
‘கப்சிப் தர்பார்’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’ என்று இட்லர் பற்றியும், முசோலினி பற்றியும் புத்தகங்கள் வந்தன.
விடிஞ்சதும் பத்திரிகைகள் எப்ப வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித் தார்கள். அப்போது ரேடியோ எல்லாம் வரவில்லை கிராமங்களுக்கு.
தினப் பத்திரிகை படிப்பது என்று ஆரம்பித்துவிட்டால் ஒரு போதை வஸ்துபோல பற்றிக் கொள்ளும். சீன் நாயக்கருக்கு இந்த நோய் பலமாகவே பற்றிக்கொண்டது. எப்படா விடியும் என்று காத்திருந்து, ஒரு கூறு பருத்தியை எடுத்துக் கொண்டு கடைத் தெருவுக்கு வந்து விடுவார் பீடி வாங்க.
பீடியைச் சுண்டுவதும், பத்திரிகை படிப்பதும் அவருக்கு ஏற்பட்டுப் போனது, கடைசி வரையிலும் அதுவே கதி என்றும் ஆகிவிட்டது.
சம்சாரித்தனம் (விவசாயம்) நின்று போனதால், எதுவும் செய்யாத மனிதர் ஆனார். அதுவே சுகம் என்று ஆகிவிட்டது.
அவருடைய சொந்தக்காரர்கள், ‘இனி, இவர் ஒப்பேற மாட்டார்… ’ என்று தீர்மானித்து நாச்சியாளுக்குக் கல்யாண ஏற்பாடு செய்தார்கள்.
- வருவாங்க...
ஓவியங்கள்: மனோகர்


நன்றி- த இந்து


இதன்  2ம்  பாகம்  நாளை மதியம் 1 30 க்கு

Thursday, October 04, 2012

கன்னிமை - கி. ராஜநாராயணன்-சிறுகதை


http://3.bp.blogspot.com/_zmZAoGSCETs/TbDg07dUStI/AAAAAAAAHog/BtfyPj1LTiM/ku.aa_thumb%5B1%5D.jpg?imgmax=800

சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று
நினைக்கவேயில்லை.


அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்.
‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக்கொண்டாள்.


அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு நிகர் அவளேதான்.

அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள்
குடும்பத்துக்கே பொன் நாட்கள்.

வேலைக்காரர்களுக்குக்கூட அவளுடைய கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி.

நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகு வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்துக் கொண்டுவந்து விடுவாள். சருவச் சட்டியிலிருந்து வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, அண்ணாந்து கஞ்சியை விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால், ‘நாமும் அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்.



ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள
கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின்
காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டா கொண்டா’ என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாஅ பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.




வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா
என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப்
படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி.
அவள் வாழ்க்கைப்பட்டு, புருஷன் வீட்டுக்குப் போனபிறகு எங்கள் நாக்குகள் எல்லாம்
இப்போது சப்பிட்டுப் போய்விட்டது. உயர்ந்த ஜாதி நெத்திலியைத் தலைகளைக் கிள்ளி
நீக்கிவிட்டுக் காரம் இட்டு வறுத்துக் கொடுப்பாள்.



இப்போது யாருமில்லை எங்களுக்கு. அந்தப் பொன்முறுவல் பக்குவம் யாருக்கும் கைவராது. பருப்புச்சோற்றுக்கு உப்புக்கண்டம் வறுத்துக் கொடுப்பாள். ரஸ சாதத்துக்கு முட்டை அவித்துக் காரமிட்டுக் கொடுப்பாள். திரண்ட கட்டி வெண்ணெயை எடுத்துத் தின்னக் கொடுப்பாள், அம்மாவுக்குத் தெரியாமல்.
அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு
நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.



மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும்
வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால் பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப் பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது.



அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது
அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின் வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத் தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட’ வடிவத்தில் ஒரு துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும். அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும் பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள்



. வாசித்துக்கொண்டே வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப் பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.




அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும்
செய்யும்; ‘கேட்க’வும் செய்யும்.
விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும்
விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும்
அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.
தானாகக் கண்கள் சோர்ந்து மூடிக்கொண்டுவிடும்.



அதிகாலையில் ரங்கையா வந்து என்னை எழுப்பினான். ராமர், லக்‌ஷ்மணர், சீதை மூவரும் எங்கள் தெருவின் முடிவிலுள்ள கிழக்காகப் பார்த்த ஒரு வீட்டிலிருந்து இறங்கிக் காட்டுக்குப் போகிறார்கள். பார்வதி அம்மன் கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தையும் கடந்து, கம்மாய்க்கரை வழியாக அந்த மூவரும் போகிறாள். எனக்குத் தொண்டையில் வலிக்கிறாற்போல் இருக்கிறது. முகத்தைச் சுளிக்க முடியவில்லை. ரங்கையா தோள்களைப் பிடித்துப் பலமாக உலுக்கியதால் விழித்துவிட்டேன். சே! நன்றாக விடிந்துவிட்டிருக்கிறது. ரங்கையா சிரித்துக்கொண்டு நின்றிருந்தான், கிளம்பு கிளம்பு என்று ஜரூர்ப்படுத்தினான்.


நாச்சியாரம்மா செம்பு நிறையத் தயிர் கொண்டுவந்து வைத்தாள், இருவரும்
வயிறுமுட்டக் குடித்துவிட்டுக் கிளம்பினோம்.
ரங்கையா எங்கள் மச்சினன்; ‘வீட்டுக்கு மேல்’ வரப்போகும் மாப்பிள்ளை.
நாச்சியாரம்மாவை இவனுக்குத்தான் கொடுக்க இருக்கிறோம். இவனும்
நாச்சியாரம்மாபேரில் உயிரையே வைத்திருக்கிறான்; அவளும் அப்படித்தான்.



‘புல்லை’யையும் ’மயிலை’ யையும் பிடித்து ரங்கையா வண்டி போட்டான். அவை இரண்டும் எங்கள் தொழுவில் பிறந்தவை. ஒன்று இரண்டு; இன்னொன்று நாலு பல். பாய்ச்சலில் புறப்பட்டது வண்டி. ஊணுக் கம்பைப் பிடித்துத்தொத்தி, அவற்றில் இரண்டைக் கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு குனிந்து நின்றுகொண்டேன். சட்டத்தில் இரும்பு வளையங்கள் அதிர்ந்து குலுங்கிச் சத்தம் எழுப்பியது. வண்டியின் வேகத்தினால் ஏற்பட்ட குலுக்கலில் உடம்பு அதிர்ந்தது. கல்லாஞ்சிரட்டைத் தாண்டி வண்டியின் அறைத் தடத்துக்குள் காளைகள் நிதானங்கொண்டு நடை போட்டன.
நடுவோடைப் பாதையிலுள்ள வன்னிமரத்தருகில் வண்டியை அவிழ்த்து, காளைகளை
மேய்ச்சலுக்காக ஓடைக்குக் கொண்டு போனோம்.



காட்டில் பருத்தி எடுக்கும் பெண்கள் காட்டுப் பாடல்கள் பாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நாச்சியாரம்மாவும் நிரை போட்டுப் பருத்தி
எடுத்துக் கொண்டிருந்தாள். பருத்தி ‘காடாய்’ வெடித்துக் கிடந்தது; பச்சை
வானத்தில் நட்சத்திரங்களைப்போலே. ரங்கையா தன் மடியிலிருந்த கம்பரக் கத்தியால்
கருவைக் குச்சியைச் சீவி, பல் தேய்க்கத் தனக்கு ஒன்று வைத்துக்கொண்டு எனக்கு
ஒன்று கொடுத்தான்.



 போக இன்னொன்று தயார் செய்து வைத்துக்கொண்டான்!
நேரம், கிடை எழுப்புகிற நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது. காளைகள் வயிறு முட்டப்
புல்மேய்ந்து விட்டு வன்னிமர நிழலில் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தன.
நாச்சியாரம்மா, பருத்தியைக் கருவமரத்து நிழலில் கூறுவைத்துக் கொடுத்துக்
கொண்டிருந்தாள். மடிப் பருத்தி, பிள்ளைப் பருத்தி, போடு பருத்தி என்று
பகிர்ந்து போட, பள்ளுப் பெண்கள் சந்தோஷமாக நாச்சியாரம்மாவை வாழ்த்திக்கொண்டே வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் வேறு யார் வந்து கூறுவைத்துக் கொடுத்தாலும் ஒப்பமாட்டார்கள். நாச்சியாரம்மாதான் வேணும் அவர்களுக்கு.
கிஸ்தான் தாட்டுக்களில் பகிர்ந்த பருத்தி அம்பாரத்தைப் பொதியாக்கட்டி வண்டியில்
பாரம் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டோம்.



 பள்ளுப்பெண்கள் முன்கூட்டிப்
புறப்பட்டுப் போய் விட்டார்கள் - நாச்சியாரம்மாவும் நானும் வண்டியில்
ஏறிக்கொண்டு பருத்திப் பொட்டணங்களின்மேல் உட்கார்ந்துகொண்டு ஊணுக்கம்புகளைப் பிடித்துக்கொண்டோம். ரங்கையா வண்டியை விரட்டினான்.
வருகிற பாதையில் மடியில் பகிர்ந்த பருத்தியோடு நடந்து வருகிற பெண்டுகளின்
கூட்டத்தைக் கடந்துகொண்டே வந்தது வண்டி. அவர்கள் வேண்டுமென்று
குடிகாரர்களைப்போல் தள்ளாடி நடந்துகொண்டே வேடிக்கைப் பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கேலிசெய்து தள்ளிக்கொண்டும் வந்தார்கள். தொட்டெரம்மா கோயில் பக்கத்தில் வந்ததும் ரங்கையா கயிறுகளை முழங்கைகளில் சுற்றி இழுத்து வண்டியை நிறுத்தினான். தொட்டெரம்மா கோயிலின் இலந்தைமுள் கோட்டையின்மேல் நாச்சியாரம்மா ஒரு கூறு பருத்தியை எடுத்து இரு கைகளிலும் ஏந்திப் பயபக்தியோடு அந்த முள்கோட்டையின் மீது போட்டாள். பின்னால் வந்துக்கொண்டிருந்த பள்ளுப்பெண்கள் குலவையிட்டார்கள். ரங்கையா கயிற்றை நெகிழ்ந்து விட்டதும் புல்லையும் மயிலையும் வால்களை விடைத்துக்கொண்டு பாய்ந்து புறப்பட்டது.




********
ஊரெல்லாம் ஒரே சலசலப்பு. என்ன ஆகுமோ என்ற பயம். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே வந்து சேர்ந்தான் ரங்கையா. ‘என்ன ஆச்சி?’ என்று அவனைக் கேட்பதுபோல் பார்த்தோம் யாவரும். அவன் என்னை மட்டிலும் ‘ராஜா, இங்கே வா’ என்று தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.
எங்கள் ஊரில், சுந்தரத்தேவன் என்று ஒரு பெரிய போக்கிரி இருந்தான். ஏழுதடவை
ஜெயிலுக்குப் போனவன். மூன்று கொலைகள் செய்தவன். அதில் ஒன்று இரட்டைக் கொலை. அவனுடைய மகனை, எங்கள் தகப்பனார் எங்கள் புஞ்சையில் ‘வாங்கித்திங்க’




பருத்திச்சுளை எடுத்தான் என்றதுக்கு ஊணுக்கம்பால் அடி நொறுக்கி எடுத்து
விட்டார். பையனைக் கட்டிலில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து அவனுடைய வீட்டில் கிடத்தியிருக்கிறார்கள். சுந்தரத்தேவன் வெட்டரிவாளை எடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறான். விஷயம் இதுதான். ரங்கையா போய் எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை அவன்.
நாச்சியாரம்மா சுந்தரத்தேவன் வீட்டை


நோக்கிப் போனாள். அவள் அங்கு போயிருப்பாள் என்று நாங்கள் முதலில் நினைக்கவில்லை; பிறகுதான் தெரியவந்தது.
அங்கு அவள் போனபோது ஒரே கூட்டம். அழுகைச் சத்தம். நாச்சியாரம்மா நுழைந்ததும் பரபரப்பு உண்டானது. பெண்கள் பணிவாக வழிவிட்டு விலகி நின்றனர். அடிப்பட்ட சிறுவ்னை அந்தக் கட்டிலிலேயே கிடந்த்தியிருந்தது. இரத்த உறவு கொண்ட பெண்கள் ஓவென்று அழுதுகொண்டிருந்தார்கள். சிறுவனின் தாய் கதறியது உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது. நாச்சியாரம்மா சிலையானாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. அவள் சுந்தரத்தேவனை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு கட்டிலின்
சட்டத்தில் உட்கார்ந்தாள்.



தன் முந்தானையாள் கண்ணீரை ஒத்திக்கொண்டு
அச்சிறுவனின் இரத்தம் உறைந்த முகத்தைத் துடைத்தாள். சுந்தரத்தேவன் கட்டிலின்
பக்கத்தில் நெருங்கி அரிவாளைத் தரையில் ஊன்றி ஒற்றைக் கால் மண்டியிட்டு
உட்கார்ந்துகொண்டு இடது முழங்கையைக் கட்டிலின் சட்டத்தில் ஊன்றி முகத்தில்
ஐந்து விரல்களால் விரித்து மூடிக்கொண்டு ஒரு குழந்தைபோல் குமுறி அழுதான்.



நாச்சியாரம்மா சிறுவனை மூர்ச்சை தெளிவித்தாள். வீட்டிலிருந்த புளித்த மோரை
வருத்திச் சிறிது கொடுத்துத் தெம்பு உண்டாக்கினாள். மஞ்சணத்தி இலைகளைப்
பறித்துக்கொண்டு வரச் சொன்னாள். அதை வதக்கித் தன் கையாலேயே ஒத்தடம் கொடுத்தாள்.
சுவரொட்டி இலைகளை வாட்டிப் பக்குவப்படுத்திக் காயங்களைக் கட்டினாள். பின்பு
வீட்டுக்கு வந்து, பத்துப் பக்கா நெல் அரிசியும், இரண்டு கோழிகளையும்
கொடுத்தனுப்பினாள்.


நாங்கள் ஊமைகளைப்போல் ஒன்றுமே பேசாமல் அவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.
எங்கள் தகப்பனாரோ, இப்பொழுதுதான் ஒன்றுமே நடக்காதது போல் தலையில் கட்டிய
லேஞ்சியோடு நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு சுவர்நிழலில் சூரித்தட்டை
வீசிக்கொண்டிருந்தார். இடையிடையே வாயில் ஊறும் வெற்றிலை எச்சியை இரண்டு
விரல்களை உதட்டில் அழுத்திப் பதித்துக்கொண்டு பீச்சித் துப்புவார். அது
கம்மந்தட்டைகளையெல்லாம் தாண்டித் தூரப்போய் விழும்.



********
எல்லாப் பெண்களையும்போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒருநாள் கல்யாணம் நிச்சயமானது. அந்தக்காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று இன்றுவரைக்கும் நான் யாரிடமும் காரனம் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம். நாச்சியாரம்மாவும் ஒரு மூணுநாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’ காத்தாள்.


வழக்கம்போல் மூன்றுநாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் ‘பொண்ணுக்கு இருந்த’ அழகைச் சொல்லிமுடியாது. கல்யாணம் முடிந்த நாலாம்நாள் அவள் எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக்கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப் பாடலின்
ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்-


*‘மாயம்ம லக்‌ஷ்மியம்ம போயிராவே...’
(எங்கள் தாயே லக்‌ஷ்மி தேவியே போய் வருவாய்)*
அந்தக் காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது. அவளை நாங்கள்
உள்ளூரில்தான் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஐந்து வீடுகள் தள்ளித்தான் அவளுடைய
புக்ககம். அவளுக்கு நாங்கள் விடை கொடுத்து அனுப்புவது என்பதில்
அர்த்தமில்லைதான். ஆனால் ஏதோ ஒன்றுக்கு நிச்சயமாக விடை கொடுத்தனுப்பி
இருக்கிறோம்.


அந்த ஒன்று இப்பொழுது எங்கள் நாச்சியாரம்மாவிடம் இல்லை. அது அவளிடமிருந்துபோயே போய்விட்டது.


-----
2
ஆம் அது ரொம்ப உண்மை.
ராஜா அடிக்கடி சொல்லுவான். இப்பொழுதுதான் தெரிகிறது எனக்கு.
நான் நாச்சியாரம்மாவைக் கல்யாணம் செய்து அடைந்து கொண்டேன். ஆனால் அவளிடமிருந்து எதையோ பிரித்துவிட்டேன்.
அவள் இப்பொழுது ரெட்டிப்புக் கலகலப்பாக உண்மையாகவே இருக்கிறாள். என்
குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறாள். எங்கள் கல்யாணத்துக்கு முன்பு எனக்கு
இருந்த நாச்சியாரம்மாள்; இப்பொழுது இருக்கும் என் நாச்சியாரம்மாள்; நான் அந்த
அவளைத்தான் மிகவும் நேசிக்கிறேன்.



இப்பொழுது மூணு குழந்தைகள் எங்களுக்கு, தொடர்ந்த பிரசவம். இது அவளைப்
பாதித்திருப்பது உண்மைதான். குழந்தைகளையும், குடும்பத்தையுமே சதா கவனிக்கும்
சுயநலமி ஆகிவிட்டாள்.


எங்கோ ஓர் இடத்தில் கோளாறாகிவிட்டது. சந்தேகமே இல்லை. ஓய்வு ஒழிச்சலில்லாமல் முன்னைவிடப் பலமடங்கு அவள் இப்பொழுது உடைக்கிறாள். உழைத்து ஓடாய்த் தேய்ந்து வருகிறாள் என்னவள். ஒருநாளில் அவள் தூங்குகிற நேரம் மிகவும் அற்பம். என்ன பொறுமை, என்ன பொறுமை!


குழந்தைக்கு முலையூட்டிவிட்டு விலகிய மாராப்பைக்கூடச் சரி செய்து கொள்ளாமல்
தூளியில் இட்டு ஆட்டும் இந்த இவளா அவள்?


ஏகாலிக்கும், குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது முகம் சுளிக்கிறாள்.
குழந்தைக்குப் பாலூட்டும்போதோ, அல்லது தான் சாப்பிட உட்காரும்போதோ
பார்த்துத்தான் அவர்கள் சோறு வாங்கிப் போக வருகிறார்கள் தினமும் என்று புகார்
செய்கிறாள். பிச்சைக்காரர்களுக்கு ‘வாய்தாப்’ போடுகிராள். வேலைக்காரகளின்மேல்
எரிந்து விழுகிராள். ‘அப்பப்பா என்ன தீனி தின்கின்றான்கள் ஒவ்வொருத்தரும்’
என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.



குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள் தலைவாசலில்
வெகுநேரம் புகழ்வதில்லை. பெருமாள் மாட்டுக்காரன் தன் மாட்டுக்கு
கம்மஞ்சோற்றையும் பருத்திக்கொட்டையையும் தவிட்டையும் கலந்து வைக்கும் அந்த ‘நாச்சியார்’ எங்கே போனாள் என்று தேடிக்கொண்டிருக்கிறான்.
கல்யாணத்துக்கு முன் நாச்சியாரு, நின்ற கண்ணிப்பிள்ளை சேகரித்து மெத்தைகள்,
தலையணைகள் தைப்பாள். மெத்தை உறைகளிலும் தலையணை உறைகளிலும் பட்டு நூலால்
வேலைப்பாடுகள் செய்வாள்.


அவள் தனியாக உட்கார்ந்துகொண்டு நிம்மதியாகவும்
நிதானமாகவும் யோசித்து யோசித்துச் செய்யும் அந்தப் பின்னல் வேலைகளில், தன்
கன்னிப் பருவத்தின் எண்ணங்களையும் கனவுகளையுமே அதில் பதித்துப் பின்னுவதுபோல் தோன்றும். இடையிடையே அவளுக்குள் அவளாகவே குறுநகை செய்து கொள்வாள். சில சமயம் வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பார்வை எந்தப் பொருள்பேரிலும் படியாமல் ‘பார்த்து’க்கொண்டே இருப்பாள். அப்புறம் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தையலில் மூழ்குவாள்.



ஒருநாள் நாச்சியாருவின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு ஒரு புதிய ஏர்வடம்
தேவையாக இருந்தது. அவர்களுடைய வீட்டில் அப்பொழுது களத்து ஜோலியாக எல்லாரும் வெளியே போயிருந்தார்கள். அடுப்பங்கூடத்தை ஒட்டி ஒரு நீளமான ஓடு வேய்ந்த கட்டிடம். அதில் ‘குறுக்க மறுக்க’ நிறையக் குலுக்கைகள். குதிரைவாலி,
நாத்துச்சோளம், வரகு, காடைக்கண்ணி முதலிய தானியங்கள் ரொம்பி இருக்கும். புதிய
ஏர் வடங்கள் ஓட்டின் கைமரச் சட்டங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.
தொங்கிய கயிறுகளுக்கு மத்தியில், மண் ஓட்டில் ஓட்டை போட்டுக்
கோர்த்திருந்தார்கள்.


 ஏர்வடத்தைக் கத்தரிக்கக் கயிறு வழியாக இறங்கி மண்
ஓட்டுக்கு வந்ததும் எலிகள் கீழே விழுந்துவிடும். ஆள் புழக்கம் அங்கு
அதிகமிராததால் தேள்கள் நிறைய இருக்கும். பதனமாகப் பார்த்துக் குலுக்கை மேல் ஏறி நின்றேன். மத்தியான வெயிலால் ஓட்டின் வெக்கை தாள முடியாததாக இருந்தது.



தற்செயலாக மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தரையில் நாச்சியாரு ஒரு
தலைப்பலகையை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்! மார்பின்மீது விரித்துக்
கவிழ்க்கப்பட்ட ’அல்லி அரசாணி மாலை’ப் புத்தகம். பக்கத்தில் வெங்கலப்
பல்லாங்குழியின் மீது குவிக்கப்பட்ட சோழிகள். ஜன்னலில் ஒரு செம்பு, பக்கத்தில்
ஒரு சினுக்குவலி, இரண்டு பக்கமும் பற்கள் உள்ள ஒரு மரச்சீப்பு, ஒரு ஈருவாங்கி,
ஒரு உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடி முதலியன இருந்தன. அவள் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தாள். பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில்
பால்நுரைமீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல் மெல்லிய குறட்டை ஒலி.
அவள் தூங்கும் வைபவத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.


அடர்ந்த நீண்டு வளைந்த ரெப்பை ரோமங்களைக் கொண்ட மூடிய அவள் கண்கள் அவ்வளவு அழகாய் இருந்தது. மெதுவாக இறங்கிப் போய் அந்த மூடிய கண்களில் புருவத்துக்கும் ரெப்பை ரோமங்களுக்கும் மத்தியில் முத்தமிட வேண்டும்போல் இருந்தது.
சொல்லி வைத்ததுபோல் நாச்சியாரு கண்களைத் திறந்தாள். தூக்கத்தினால் சிவந்த
விழிகள் இன்னும் பார்க்க நன்றாக இருந்தது. குலுக்கைமேல் இருந்த என்னை அதே கணம் பார்த்துவிட்டாள். ‘


இது என்ன வேடிக்கை?’ என்பதுபோல் சிரித்துப் பார்த்தாள்.
அவள் எழுந்த வேகத்தில் புஸ்தகம் அவளுடைய காலடியில் விழுந்தது. விழுந்த
புஸ்தகத்தைத் தொட்டு வேகமாக இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதை எடுத்து ஜன்னலில் வைத்தாள். பின்பு லஜ்ஜையோடு சிரித்துத் தலைகவிந்துகொண்டே, நழுவும் மார்பு சேலையை வலதுகையினால் மார்போடு ஒட்ட வைத்துக்கொண்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவினாள்.



கல்யாணத்துக்கு முன்பிருந்தே நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். யாரும் அறியாமல் தொலைவில் இருந்துகொண்டே ரகசியமாக ஒட்டிப் பழகினோம். இதயங்கள் அப்படி ஒன்றி ஊசலாடின. பேசாத ரகசியங்கள்தான் எங்களுக்குள் எத்தனை!
எனக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமென்று நான் உணர்த்தாமலே அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆச்சரியப்படும்படி அவைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கும் அப்போது.



********
ஒரு நாள் கோவில்பட்டியிலிருந்து ராத்திரி வந்தேன். அன்று வீட்டிற்கு நிறையச்
சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. காலம் முன்னைமாதிரி இல்லை. ஒரும்பாகிவிட்டது.
முன்னெல்லாம் கொஞ்ச ரூபாயில் நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரலாம். இப்போதோ நிறைய ரூபாய்கள் கொண்டுபோய் கொஞ்ச சாமான்களையே வாங்கமுடிகிறது.


வந்ததும் வராததுமாய்ச் சாமான்களையெல்லாம் வண்டியிலிருந்து இறக்கி
வைத்துவிட்டுப் பணப்பையையும் கச்சாத்துகளையும் நாச்சியாருவிடம் கொடுத்துவிட்டு அப்படியே வந்து கட்டிலில் வீழ்ந்தேன். உடம்பெல்லாம் அடித்துப்போட்டதுமாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக் கக்கிக்கொண்டிருந்தது. மண்டைப் பொருத்தோடுகளில் ஆக்ரா இறக்கியது போல் தெறி. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. அரிக்கன் லாம்பை சரியாகத் துடைத்துத் திரியைக் கத்தரித்து விடாததாலோ என்னவோ சுடர் பிறைவடிவில் எரிந்துகொண்டிருந்தது. சிம்னியில் புகைபிடிக்க ஆரம்பித்திருந்தது.


அந்த வெளிச்சத்தில் அவள் கச்சாத்துக்களிலிருந்த தொகைகளைக் கூட்டிக்கொண்டும்,
மீதிப்பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டுமிருந்தாள்.
கணக்கில் ஒரு ஐந்து ரூபாய் சொச்சம் உதைத்தது. அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன
என்று என்னிடம் கேட்டாள்.
’எல்லாத்தையும் எடுத்துவை
கணக்கு எங்கெயும் போய்விடாது;
காலையில் பாத்துக்கலாம், எல்லாம்.’
அவள் பிடிவாதமாகக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.



எனக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. மூடிக்கொண்டே இருக்கவேண்டும்போல்
இருந்தது. என்னுடைய நெற்றி ஒரு இதமான விரல்களின் ஒத்தடத்துக்கு ஏங்கியது.
மூக்கு மயிர் கருகும்படியான உஷ்ணக்காற்றை நான் வெளிவிட்டுக் கொண்டிருந்தேன்.
நல்ல உயர்ந்த காய்ச்சல்.



சூழ்நிலையின் பிரக்ஞை வட்டம் சுருங்கிக்கொண்டே வந்தது. சின்ன, மெல்லிய
சப்தங்கள்கூடக் கோரமாகக் கேட்டன. கண்களைத் திறந்து நாச்சியாரு என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் ரூபாய் அணா பைசாவில் மூழ்கியிருந்தாள்.


குளிர்ந்த காற்றுப்பட்டதால் கண்கள் நீரை நிறைத்தன, துடைத்துக்கொள்ளக் கையை
எடுக்க இஷ்டமில்லை. அதை இமைகளாலேயே மூடி வெளியேற்றினேன். மீண்டும்
நாச்சியாருவையே பார்த்தேன். அவளுடைய ரவிக்கையின் அவிழ்க்கப்பட்ட முடிச்சு
முடியப்படாமலே தொங்கின. கூந்தல் வாரிச் சேர்க்கப்படாததால் கற்றைகள்
முன்முகத்தில் வந்து விழுந்து கிடந்தன.


என்ன ஆனந்தமான ‘சொகம்’ இந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதினால்! கானல்
அலைகளைப்போல் என் உடம்பிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் உஷ்ண அலைகள் கண்ணால் பார்க்கமுடியாமலிர்ந்தாலும் தெரிந்தது. நான் எரிந்துக்கொண்டிருக்கும் ஒரு
சிதைக்குள் படுத்திருப்பதுபோல் குளிருக்கு அடக்கமாக இருந்தது. உயர்ந்த
காய்ச்சலின் போதை இடைவிடாது மீட்டப்படும் சுருதிபோல் லயிப்பு மயமாக இருந்தது.
இந்த ஆனந்தத்தில் பங்குகொள்ள எனக்கு ஒரு துணைவேண்டும்போல் இருந்தது. அவள் எங்கே? அவள்தான்; என் அருமை நாச்சியாரு.


‘நாச்சியாரு, என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்?’

http://www.uyirmmai.com/Images/ProductImages/2011/anbulla%20kee%20raa.jpg

********
நன்றி: தீபம்


s:
 சிறுகதை கி.ராஜநாராயணன் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)

Tuesday, July 24, 2012

தேள் விஷம் - கி.ராஜநாராயணன் -ன் கிராமத்து கில்மா சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFUiLbVyzQ7Mg_xgxupBMMMQkFSY7nzdKQselkkST9GguXjnbWN7790vifOBCqyeqRr_86T0K5mkZvnZ_tXIuGP1CTxedL6KVLfQq75QeX0llswHn0XyILZ4SLozPPQF8mOQ1y5ewMr_Pm/s400/scorpion-birth_01.jpg 

18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).



ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே தனி. அவளுக்கு அடுத்த தெருவுல கடை வச்சிருந்த ஒருத்தனோட ‘தொடுப்பு’ உண்டாயிப் போச்சு. எப்பிடின்னா…..




அவ போனா மட்டும் அவன் கடையில ஒரு கூறுப் பருத்திக்கு ரெண்டு கூறுப் பருத்திக்கு உண்டான சாமான்கள் கொடுக்கிறது. ஒழக்குத் தானியத்துக்கு அரைப்படித் தானியத்துக்கு கொடுக்கிற அளவுக்கு – ரெண்டு மடங்கு சாமான்கள் தந்தான். ஒரு நா ராத்திரி, அவ சாமான்க வாங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிட்டு. ஆனாலும் அவம் காத்திருந்தான். வளக்கம் போல தானியம் கொண்டு வந்தா. சாமான் வாங்குனா.




புறப்பட்டு போறதுக்கு முன்னாடி, அவ தயங்குன மாதிரி இருந்தது.


என்னெங்கிற மாதிரி அவெள ஏறிட்டுப் பார்த்தான். அப்பதாம் அவ சொல்லுவா.’ஒடம்பு ஏம் இப்பிடி மெலிஞ்சிக்கிட்டே வர்ரீறு. வைத்தியருகிட்டே கையக் காமிச்சு மருந்து ஏதாவது சாப்பிடக் கூடாதா?’


அப்பதாம் அவம் தன்னோட ஆசைய தயங்கி தயங்கிச் சொன்னாம்.


இவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம, வேற என்னத்தையோ பத்தி அவங்கிட்டே ஒரு தகவல் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா. இவம் அதுக்கு என்னத்தையோ பதில் சொன்னாம்.


இப்பிடிக் கொஞ்சம் நேரம் போச்சி. அதுக்குப் பிறகு என்ன பேசன்னுட்டுத் தெரியல. இவம்தான் சொன்னாம்.’நாளைக்கு ஓம் வீட்டுக்கு வரட்டா?’


அவ அதுக்கு ஒண்ணுஞ் சொல்லாம ஒரு ‘குறுஞ்சிரிப்பாணி’ சிரிச்சிட்டுப் போயிட்டா.


***
காட்லே சம்சாரி விடியுமின்னெ உழப் போனான். ஏரெக் கட்டி கொஞ்ச நேரந்தாம் உழுதிருப்பான். தண்ணிக் கலயத்தெ காக்கா உருட்டிவிட்டுட்டது.




இது என்னடா சங்கட்டம். தண்ணியில்லாம என்ன செய்ய. வெயிலேறிட்டா தண்ணி குடிக்காம முடியாதென்னு ஏரெ நிறுத்திட்டு, கலயத்தெ எடுத்திக்கிட்டு விறுவிறுன்னு வீட்டப் பாக்க வந்தாம்.




வீட்டுக் கதவு சாத்தியிருக்கு.இந்நேரத்துக்கு வீட்டுக்கதவு சாத்தியிருக்கக் காரணமில்லையே.


என்ன விசயம்னு தொறவால் தொளை (சாவி துவாரம்) வழியா உள்ளுக்குப் பாத்தா, அவம் கண்ணுக்கு ஒரு காச்சி (காட்சி) தெரியுது.


கடைக்காரன் இவம் பொண்டாட்டி மார்ல வாய வச்சி…………
……
படபடன்னு கதவெத் தட்டினான்.கதவு தொறந்தது. இவம் பெண்டாட்டி இவனெப் பாத்ததும் ‘ஓ’ண்ணு கதறிக் கிட்டே, நல்லவேளை இப்பவாது வந்தீளே. ஏம் பாட்டெப் பாத்தீளா. இந்தக் கொடுமை உண்டுமா. இவரு இல்லேன்னா நாஞ் செத்துத்தாம் போயிருப்பேம் என்று சொல்லி அழுதாள்.




புருசங்காரனுக்கு ஒண்ணும் வெளங்கலே.




கடைக்காரனெப் பாத்தா அவம் தலெயக் கவுந்துகிட்டு ஒண்ணுஞ்சொல்லாம நிக்காம்.


என்ன, என்ன சொல்லுதே என்ன நடந்தது. வெவரமாச் சொன்னாத்தானே தெரியும்னு கேட்டான் சம்சாரி.




என்னத்தெ வெவரமாச் சொல்ல, வெக்கக் கேடு. பருத்தி மார்ப் படப்புலெ போயி பருத்தி புடுங்கி அணைச்சி எடுத்துக்கிட்டுதாம் வந்தேன். ‘சுரீர்’னு மார்ல தீக்கங்கு வச்ச மாதிரி இருந்தது. கீழபோட்டுப் பார்த்தா…சரியான கருந்தேளு. வலியான வலியில்லே. தாங்க முடியல. என்ன செய்யிறதுன்னுட்டுந் தெரியல. இவரு தேள் விசத்தை உறுஞ்சி எடுத்துருவாருன்னு சொன்னாங்க. இவரெப் போயி கூப்ட்டா, நா ஆம்பளை இல்லாத வீட்டுக்கு வரமாட்டேன்னுட்டாரு. பெறவு, நாந்தாம் சொல்லி, எம் வீட்டுக்காரரு அப்பிடியெல்லாம் நெனக்க கூடியவரு இல்லெ. அதோட ஆபத்துக்குப் பாவமில்லேன்னு கூட்டிட்டு வந்தேம். அப்போதைக்கு இப்போ தேவலைன்னாலும் வலி பொறுக்க முடியலன்னு அழுதா.




சரி…சரி…அழுவாதெ. இதெல்லாம் யாருக்கும் வரக்கூடியதாம். நம்ம என்ன செய்ய முடியும் அதுக்கு. பரவாயில்ல. அவராவது சமயத்துக்கு கூப்ட்ட ஒடனே வந்தாரெ.




‘நா அங்க, தண்ணிய காக்கா கொட்டிட்டதுன்னு திரும்பவும் தண்ணி கொண்டு போறதுக்காக வந்தென்னு’ கடைக்காரனுக்கு ‘சமயத்துக்கு வந்து ஒதவினதுக்கு ரொம்ப உபகாரம்’னுட்டு சொல்லிட்டு, கலயத்துல தண்ணிய றெப்பிக்கிட்டுப் போயிட்டான்.




***
கொஞ்ச நா கழிஞ்சது.




ஒரு நா திடீர்னு அய்யோ தேள் கொட்டீட்டதேன்னு சம்சாரி கூப்பாடு போட்டான்.அடுப்பங் கூடத்துல வேலையா இருந்த அவம் பொண்டாட்டி எங்கே எங்கே ‘தேளுதான்னுட்டுப் பாத்தீங்களா’ என்று பதச்சிப் போயி வந்தா.




தேளுதாம் பாத்துட்டேன். வசமாப் பிடிச்சி மாட்டிட்டது. நல்ல கருந்தேளுன்னாம்.அய்யோ வலி பொறுக்க முடியலயே. நீ ஓடிப் போயி அந்தக் கடைக்காரனெ கையோட கூட்டிட்டு வா. ஓடு சீக்கிரம்னு அவசரப்படுத்தினான்.




அவளும் ஓட்டமும் நடையுமாப்போயி கடைக்காரன பாத்து, இன்ன மாதிரி, சங்கதி ஒடனே பொறப்பட்டு வா. நீ இப்ப வரலன்னா அவரு சந்தேகப் பட்டுடுவாரு. எந்தின்னு சொன்னா.


அவனுக்கும் நாம வர்றமா இல்லயான்னு பாக்கதுக்குதான் இதெல்லாமான்னு ஒரு எண்ணம்.




வேற வழியில்லாம அவனும் வந்தாம்.


எங்கே, எந்த எடத்துலன்னு கடைக்காரன் கேட்டாம்.


சம்சாரி வேட்டிய …………………
..
தாத்தாவோட சேர்ந்து நாங்களும் சிரிச்சோம்!


‘பெறவு?’ என்று கேட்டாம் கிட்டான்


பெறவு என்னடா பெறவு? பெறவு பெறவுதான்.


கடைக்காரப் பயல் தப்ப முடியல. வசமா மாட்டிக்கிட்டான்.

Sunday, July 22, 2012

கி.ராஜநாராயணன் -ன் பாலியல் நகைச்சுவை சிறுகதை -ராசா தேடின பொண்ணு! 18 +

(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).

இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள் முதலில் இருந்ததாகச் சொல்லுவாங்க. இவன் என்னடான்னா நாலு தனங்கள் வேணுங்கறானே எங்க போக, என்று பெரியவங்க வருத்தப்பட்டாங்க.


யப்பா, இப்பிடியா உள்ள ஒரு பெண்ண நீதாந் தேடிக் கண்டுபிடிக்கணும். எங்களாலே ஆகாதுன்னுட்டாங்க.


சரீன்னு சொல்லி இவன் புறப்பட்டாம். ஊரு ஒலகமெல்லாம் சுத்தினாம். ஆத்துல குளத்துல வாய்க்கால்லன்னுட்டு வரீசைய பாத்துகிட்டே வந்தாம். விதவிதமானதுகளத் தாம் பாத்தானே தவிர நாலு உள்ளதுகளுமில்ல. மூணு உள்ளதுகளுமில்ல. சொல்லப் போனா ஒண்ணரை, ஒண்ணே முக்காலு இப்பிடித்தான் இருந்துச்சாம்.


பயலுக்கு சே’ன்னு ஆயிட்டது!
பின்னே ஏம் இப்பிடிச் சொன்னாம்?

அதுக்கு ஒரு காரணம் இருந்தது.

ஒரு நா ராத்திரி அவம் தூக்கத்துல ஒரு சொப்பனங்கண்டாம். அந்த சொப்பனம் விடியப் போற நேரத்துல வந்தது.

விடியப் போற நேரத்துல வார சொப்பனம் பலிக்கும்ங்கிற நம்பிக்கெ.
அந்த சொப்பனத்துல ஒரு பொண்ணு குளிச்சிக்கிட்டிருக்கா; உடம்பெத் தேச்சிக் குளிக்கிறப்போ தேக்கிற வளைய சத்தங்கூடக் கேட்டுது. கவனிச்சிப் பாத்தப்போ அந்தப் பொண்ணுக்கு முதுகுல ரெண்ணு தனங்கள் இருந்தது.
ரொம்ப ஆச்சர்யம் இவனுக்கு.


இவனே நெனச்சது உண்டு; இப்பிடி இருந்தா சில சமயத்துல வசதியா இருக்குமேன்னுட்டு.

முழிப்புத் தட்டியதும் தான் நினைச்சாம். நிச்சயம் எங்கோ அப்பிடி ஒரு பொண்ணு இருக்கா. கட்டாயம் தேடிக் கண்டுபிடிச்சிக் கட்டிக்கிடணும். அதுலயிருந்து அவன் அவளைத் தேட ஆரம்பிச்சாம்.


நாலு தனங்கள் உள்ள பொண்ணுகளெத் தேடித் தேடி எங்கயும் காங்காம அலுத்து, ஒருநா ஒரு குளத்தங்கரை மரத்து எணல்லெ அசந்து படுத்தவன் நல்லாத் தூங்கிட்டாம்.


அவம் முந்தி ஒருநா சொப்பனத்துல கண்டானே, அப்பக் கேட்டுதெ, அதேபோல வளைய சத்தம் கேட்டுது.
கொஞ்சங்கொஞ்சமா பயலுக்கு முளிப்பு வந்தது.
அரண்மனையில, பஞ்சுமெத்தயில படுத்துக்கிட்டிருக்கிறதா நெனச்சிக்கிட்டிருந்தவனுக்கு, மரத்துக் கடியில உதுந்து குமிஞ்சிக் கிடக்கிற சருகு இலைக மேல வேட்டிய விரிச்சிப் படுத்துக் கிடக்குது தெரிஞ்சது. பெறவுதாம் குளத்துக்கரைங்கிறது ஞாபகத்துக்கு வந்தது. ஆனா, வளையச்சத்தம் இன்னும் கேட்டுக்கிட்டுத் தானிருந்தது.


பைய்ய எந்திரிச்சி பாத்தாம். கண்ணெ கசக்கிவிட்டுப் பாத்தாம். சொப்பனங்காணலை, நெசந்தாம்! அந்த தாமரைக் குளத்து படிக்கட்டுல ஒரு பொண்ணு அம்மணமா குளிச்சிக்கிட்டிருந்தா. யாருமே பாக்கலெங்கிற தைரியத்துல சாவாசமா உக்காந்து குளிச்சிட்டிருந்தா. இவனுக்கு அவளோட முதுகுப்பக்கந்தாம் தெரியிது. முதுகுல ரெண்டு தனங்கள் இருந்தது தெரிஞ்சது.


ஆகா! நாம நெனச்சது கெடச்சுட்டு. கடவுளே கொண்டாந்து காணிச்சிட்டார். சரி, இவ குளிச்சி முடிக்கட்டும். இவளுக்குத் தெரியாமயே இவ பெறத்தால போவம். எந்த வீட்டுக்குள்ளாற நுழையிதாளோ அதெ கவனிச்சி வச்சிருந்து மொறப்படி போயி பொண்ணு கேட்டு கலியாணத்த முடிச்சிருவம்னு தீர்மானிச்சி, அதே பிரகாரம் அவ குளிச்சிட்டுப் போயி நுழையிற அவ வீட்டையுங் கண்டுபிடிச்சிட்டாம்.


பெறகென்ன; போயி பொண்ணு கேட்டாம்.
ராசாவுக்கு பொண்ணுகேட்டா முடியாதுன்னு சொல்ல இயலுமா?
கலியாணம் முடிஞ்சது.


மொதநா ராத்திரி, பய ஆசையோட அவளெ கட்டிப்புடுச்சி முதுகெப் புடிச்சாம்.
என்னத்தெ எளவு ஒண்ணத்தையுங்காணம்?ன்னு அவக்கிட்டயவே கேட்டாம்.
அவளுக்கு சிரிப்பு வந்திட்டு. அட கோட்டிக்காரப்பய ராசா மவனேன்னு நெனச்சிக்கிட்டு.


‘மாட்டுக்கு வாலு பின்னாலே
மனுசனுக்கு பாலு முன்னாலே’ங்கிறது கூட ஒனக்குத் தெரியாதா?


மார்ல இருக்கவேண்டியது எங்கனாச்சும் முதுகில இருக்குமான்னு கேட்டா
ஏங்கண்ணாலயே பாத்தென ஒம் முதுகில இருந்த்தேன்னு கேட்டாம்
முன்னால இருந்த அதெத்தாம் நீ பின்னால பாத்தென்னா


இவனுக்கு வெளங்கல.

பெறவு அவதாம் வெளக்கமாச் சொன்னா

ஒடம்ப நல்லாத் தேய்ச்சிக் குளிக்கணும்னுட்டுதாம் அவ அந்த காட்டுக் குளத்துக்குப் போவாளாம். வயித்துக்குச் கீழெயெல்லாம் தேச்சிக் குளிக்க இதுக ரெண்டும் எடைஞ்சலா இருக்கும்னுட்டு அதுகள ரெண்டு தோள்களுக்கும் மேலே எடுத்துப் போட்டுக்கிடுவாளாம். அதுக முதுகில கிடக்கும்போது பாத்துட்டு பய சரியாப் பாக்காம முதுகுலதாம் இருக்கும்னுட்டு நெனச்சிக்கிட்டா நாம என்ன செய்யிறதுன்னு கேட்டாளாம்.

Saturday, July 21, 2012

கி.ராஜநாராயணன் -ன் பாலியல் நகைச்சுவை சிறுகதை -இருதலைமணியன் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkRCI-ZASWwxtcz-riyZyJrexjg2OGRWDaY3CzQlJi_c8Nqt2pS69Es9LoObZC3t6-Y4-obfOCEalKHyau5Bl-aYz4E8C_XxDUyJq6Cqsy5AOcgZ7l4fAxyhN-98l0BfCWOUUzsLQOSUM/s1600/8.JPG(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).


ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது.

அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில ஒருத்தனுக்கு அமையுமோ என்னவோ

இன்னொரு அதிசயம், அவனுக்கு இப்பிடி இருந்ததுனாலயோ என்னவோ ரெண்டு ஆள் பலமும் வீரியமும் இருந்த்து.
ஒருத்தரு சொன்னாரு ‘இருக்கும். ரெண்டு ‘இது’ இருந்தா ரெண்டாள் பலம் இருக்கத்தானே செய்யும்! அவரு சொன்னது ஏடாசியா நெசமான்னு தெரியலன்னாலும் எல்லாரும் சிரிச்சாங்க.


இப்பிடி இருந்ததுனால அவனுக்கு ‘இருதலைமணியன்’னு பட்டப் பேரு ஏற்பட்டுப்போச்சு!


எல்லோரும் அவனெ ரொம்ப கேலி பண்ணுனதுனால அவம் ஊரெ வுட்டே காணாம போய்ட்டாம். ரொம்ப தூர ஊர்ல போயி, யாரும் முகந்தெரியாத இடத்துல போயி வேல செஞ்சி பிழைக்கிறதுன்னு ஆயிட்டது.
அங்கே யாருக்கும் இது தெரியாம இருக்கும்படியா பாத்துக்கிட்டாம்.
பய வளந்து இளவட்டு ஆனாம். பாக்கவும் லெட்சணமா இருந்தாம்.


இப்பிடி இருக்கையில, அவனும் மனுசம்தானே, அவனுக்கு பொம்பளை ஆசை வந்தது.
வராதா பின்ன என்று கூட்டத்துல ஒருத்தர் சொன்னார்.
வேல செஞ்சி சம்பாதிச்ச பணத்துல கொஞ்சம் மிச்சம் வச்சி, ஒரு நா ‘தேவிடியாக்குடி’ போனாம்.


அங்கே ஒருத்தி பாத்துக்கிட்டா அத.
அவளுக்கு இது அதிசயமா இருந்தது. வித்தியாசமா இருந்தது. அதனால அவ அவன வெளியவிடாம ராத்திரிபூரா தங்கிட்டயே வச்சிக்கிட்டா.


காலையில ஆத்துக்கு அவ குளிக்கப்போன எடத்துல தனக்கு வேண்டப்பட்ட சிநேகிதக்காரிக்கிட்ட இதெ சொல்லிச் சொல்லி சந்தோசப்பட்டா.
சிநேகிதக்காரிக்கும் இப்படியாப்பட்ட காரியங்கள்ள ரொம்ப பிரியம். அதனால அவ, நா இப்பவே ஓங்கூட வர்றேம். நானும் அதெப் பாக்கேண்டாமான்னு புறப்பட்டுட்டா.


அவ அத பாத்து அனுபவிச்சுட்டு அவளோட சேத்திக்காரி நாலு பேரு கிட்ட சொன்னா.
ஆக இப்பிடி இந்த ரகசியம் தீயாப் பரவி இந்த விசயத்துல ரொம்ப பிரியமான பொம்பளைகளுக்கெல்லாம் தெரிஞ்சி, பயலுக்கு ஒரே கிறுக்கு ஆயிட்டுது.

இருக்காதா பின்னே என்றார் ஒருத்தர்.
இப்பல்லாம் அவன் வேலைக்கே போறதில்ல

அவனோட ‘சங்கதி’ விஷயம் அந்த நாட்டோட அரண்மன அந்தப்புரத்துக்குள்ளேயும் போயிட்டு. மகாராணிக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒரு சேடிப் பொண்ணு பாத்து வந்து சொல்லிட்டா.

இப்ப மகாராணிக்கும் அதெப் பாக்கணும்னு ஆயிட்டது.
அந்த சேடிப்பொண்ணு மூலமாவே மகாராணி அவனுக்கு ரகசியமா தாக்கல் சொல்லி அனுப்பிச்சா.


அவம் பதறிப் போயிட்டாம். இதேதுடா சங்கட்டம். வம்புல போயி மாட்டுவம் போலுக்கேன்னு நெனச்சி அவகிட்ட ஏத்தா நீ என்னமோ ஆசெப்பட்ட வந்தே போனேன்னு இருக்காம இதெப் போயி அரண்மனையில மகாராணியிட்ட பத்த வெச்சிட்டயெ. அப்படியாப்பட்ட இடத்துக்கெல்லாம் நாம போவலாமா?


அதுக பேன் எடுத்தாலும் எடுக்கும், காத அத்தாலும் அத்துருமே. என்னால முடியாது ஆத்தா. நா வர மாட்டேன்னாம்.


நீ ஒண்ணும் பயப்படவேண்டாம். மகாராணிக்கு இதுல எல்லாம் பிரியம் சாஸ்த்தி. ஒன்னெ ‘பொன்னுங்கண்ணுமா’ வச்சிக்கிடுவா. சும்மா வா; அங்கே வந்துட்டே ராசாக்கணக்கா இருக்கலாம்னா.

ஏத்தா என்னே ஆளவிடுன்னு சொல்லிப்பாத்தாம்.

இந்தா பாரு இது மகாராணியோட ஆக்கின. நீ வல்லேன்னா இப்ப ஒந்தலைக்கு கத்திதாம் காத்துக்கிட்டிருக்கு. தப்பிக்க முடியாது பாத்துக்க.
அங்க வந்து இருக்க ஒனக்கு என்ன கொள்ள. நல்..லா தின்னுட்டு பொலிகாள போல இருக்க வலிக்கா உனக்கு? மரியாதையா எந்திரிச்சி எம் பொறத்தால வான்னா.


நல்லா ரோசிச்சுப் பாத்தாம். இங்க இப்பிடி அரையுங் கொறையுமா தின்னுக்கிட்டு இந்த முண்டெக கூட லோலுப்பட்டுக்கிட்டு இருக்கத விட அங்கென போயி ராசாக்கணக்க இருக்கலாம்னு தோணிச்சி. சரீன்னுட்டாம்.

பொண்ணு வேசம் போட்டு ராத்திரியோட ராத்திரியா சேடிப்பொண்ணு கூடவே ராணியோட அந்தப்புரம் போயிச் சேந்தாம்.


அப்ப ராசா நகரத்துல இல்ல. வேட்டையாடப் போயிருந்தாரு. வேட்டையாடப் போனா அங்க கொஞ்ச நா தங்கி இருந்துட்டுதாம் வருவாரு. அதனால இங்க இவம்பாடு வேட்டையா இருந்திச்சி.

சாதாரண விசயமா இருந்தா பரவா இல்லாம இருக்கும். இது அதிசயமான விசயமாச்சே. எப்பிடியோ பொட்டைச்சிக மத்தீயில கிசுகிசுப்பாயி இது இன்னொரு ராணிக்குத் தெரிஞ்சு போச்சி. அவளும் ராசாவுக்குப் பிரியமான ஒரு மகாராணிதாம்.


அவ மாத்திரம் என்ன.. நான் பாக்கேண்டாமான்னு கேட்டனுப்பிச்சா
இது நாம்பாத்துக் கொண்டாந்தது. நா வச்சிருக்கேம். ஒனக்கென்ன? வேணும்னா நீ பாத்து ஒண்ணெ கொண்டாந்து வச்சிக்கயேம்னா
அது என்ன அம்புட்டு லேசாக் கிடச்சிருமா. அதெ எப்பிடிக் கண்டு புடிக்கது!

அதென்னமோ எனக்குத் தெரியாது. எனக்கு வேணும். அது எப்பிடித்தாம் இருக்குதுன்னு நாம் பாக்கணும்னு சொல்லி அனுப்பிச்சா அந்த இன்னொரு ராணி.


இப்பிடியே இவுகளுக்குள்ள ஒரு ‘எசலிப்பு’ ஏற்பட்டு, ராசா வேட்டையிலிருந்து திரும்புறதுக்கு முன்னாடி அவரு காது வரைக்கும் போயிட்டுது சண்டை. ராசாவுக்கு கோவமான கோவமில்ல’. அண்ட கடாரம் முட்டிப் போச்சி

‘தாயோளிது’ ஏம் அரமனைக்குள்ளாற வந்து அப்பிடி ஒரு பய வந்து இருக்க அவனுக்கு என்ன ரெண்டு ‘இதா’ இருக்குன்னு கேட்டாரு.

ஆமா ராசா…அப்பிடித்தாம் கேள்வி; அவனுக்கு ரெண்டுதாம் இருக்கும்னாங்க.

சே..இது மோசக் கேடுல்லா வந்து சேந்திருக்கு. அவனப் புடுச்சி அப்பிடியே அதும்மேல யானைய விட்டு மிதிக்க வச்சிக் கொன்னுப்புடுங்கன்னு ஆக்கின அனுப்பிச்சிட்டாரு.

இது எப்பிடியோ மகாராணிக்கு வேண்டியவன் ஒருத்தன் அங்கிருந்து ரகசியமாச் சொல்லி அனுப்பிச்சி ‘இருதலைமணியனை’ தப்பி ஓடி போகச் சொல்லிட்டா ராணி.

பயல் எங்கே போனானோ தெரியல. தல மறைவாயிட்டாம். ஏதோ வேலை செஞ்சி பொழக்க முடிஞ்சதே தவிர, முந்திய மாதிரி பொம்பளைகிட்ட போயி ‘நல்லாப் பொல்லா’ இருக்க முடியல; இருந்தாத்தாம் தெரிஞ்சி போகுமே.


ராசா முரசு அறஞ்சி தேசம் பூராவும் அறிவிச்சிட்டாரு. இன்ன இன்ன மாதிரி அடயாளம் உள்ள இளந்தாரிப்பயல புடுச்சி யாரு தர்றாங்களோ அவர்களுக்கு பதினாயிரம் களஞ்சிப் பொன் தர்றதாக!

வேலை செய்ய மாச்சப் பட்டவெனெல்லாம் மந்தை,சந்தை,வெளிக்கிருக்குத இடம் இப்பிடி எவனுக்கு ரெண்டு இது இருக்குன்னு தேடிக்கிட்டு அலையுதாங்க.

சும்மாவா பதினாயிரங்களஞ்சி பொன்னுல்லா!

இந்தப்பய யாரு கண்ணுலயும் காங்காம அலைஞ்சி திரிஞ்சதுல உடம்பு பூரா முடி காடா வளந்து போச்சு. ஒரு நா நாசுவம் கிட்ட போயி ‘ஏடே எனக்கு உடம்பு சவரம் பண்ணனும். நா ஆத்துல இந்த மரத்துக்குக் கீழ இருக்கேம். வந்து செஞ்சயனா ஒனக்கு ஒரு களஞ்சிப் பொன்னு தருவேம்னு சொல்ல நாசுவனும் சரி போங்க வர்றேம்னாம்.


இவம் போயி மரத்து எணல்ல மறைவான இடம் பாத்து மணல்ல ‘ஒண்ணைப்’ பொதச்சு வச்சி உக்காந்துக்கிட்டு இருந்தாம் கண்டுபிடிச்சிரக்கூடாதேன்னு. நாசுவன் கிண்ணத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து எதுர்க்க மணல்ல உக்காந்துக்கிட்டு தண்ணிய விட்டு நல்ல இவன தேச்சிவிட்டாம்.

பயலுக்கு ‘பாத்து’ ரொம்ப நாளாச்சி. அதுலயும் வேத்து மனுசன் கைப்பட்டதும் தேச்சதும் சேந்து, மணலுக்குள்ள தெரியாம இருக்க பொதச்சு வச்சிருந்த்து ‘படார்’னு வேகமா எந்திரிச்சதுல நாசுவம் கண்ணுல மணலு விழ, அவம் சத்தம் போட்டு ‘யப்பா…நீதானா அது’ன்னு கேட்டுட்டாம்.


பிடிச்சானே ஓட்டம்.

யய்யா எனக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் குத்தமில்ல. பதினாயிரங் களஞ்சி பொன்னு வேண்டாம். அந்த ஒத்த களஞ்சி பொன்னாவது குடுத்துட்டு போரும்னு இவம் பொறத்தாலயே ஓட, அங்க ஆத்துல குளிச்சிட்டு வேட்டியக் காயப் போட்டுட்டு இருந்தவங்கள்லாம் என்ன ஏதுன்னு கேக்க…

‘அய்யோ போகுதே பதினாயிரங் களஞ்சிப் பொன்னு போகுதேன்னு’ இவம் கூப்பாடு போட, அங்கே ஒரே அவக்காடு ஆயிட்டு.
‘பெறகென்ன…போனவம் போனவந்தாம்’
ராசா அவனத் தேடிட்டிருக்காம். ராணியும் தேடிட்டிருக்கா.

பாத்தாச் சொல்லுங்க. பதினாயிரம் களஞ்சியம் பொன்னு கெடக்கும்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifQ0HkQvTVE8mZctWcAgg0fPnszTONGR155y1_EzTd286zOvAxq0a66E55hfMSsdZXhM9H4WOlWpcmu0AJDiofnGusa4jwfkXJBljxdfunk7dBeGIYI0LN9del5ej5t4qpoY00mFkRtss/s400/Ki.Ra.bmp

Thursday, July 19, 2012

கி.ராஜநாராயணன் - நடுநிசிக்கதை- நீர்முள்ளு 18+

http://discoverybookpalace.com/product_images/uploaded_images/Anbulla_kee.raa.vukku_-K.rajanarayanan.jpg 


(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).



கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது. நான் அதைப் பார்த்ததில்லை என்றேன்.


அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக் கேளுங்க என்று தொடங்கினார் பெரியவர்.


‘இப்படித்தாம் பாருங்க, எங்க ஊர்ல ஒரு ‘செவ்வாளப்பய’ சரியான வெடுவாச்சுட்டி. எருமை மாட்ட மேய்ச்சுட்டு வந்து தண்ணியில அடிச்சாம்.


எருமக் களுதைக தண்ணிக்குள்ள எறங்கினா சாமானியமா வெளியேறுமா சவம். அத வெளியேத்துததுக்குள்ளே மனுசம் படுற பாடு…குளத்து கரையில ஒத்தக் கல்லு காங்க முடியாது. சுத்தி சுத்திப் பெறக்கி எரும மாட்டே எறியதேம்னு சொல்ல.


தண்ணிக்குள்ள வீசிக்கிட்டே இருந்தா எங்கென இருக்கும் கல்லு!


பய..நல்லா வேகமா நீஞ்சுவானாம். எல்லாத்தையும் களைஞ்சு எறிஞ்சுட்டு, நாளு வெரல் அகலத்துல உள்ள கோமணத்த மட்டும் வச்சுக்கிட்டு தண்ணிக்குள்ள பாஞ்சாம். அந்த இடத்துல தண்ணீக்குள்ளார ‘நீருமுள்ளுச் செடி’ இருந்தது அவனுக்குத் தெரியாது.


கோமணத்துல ‘சுருக்’குன்னதும் சுள்ளாச்சுருக்குதாம் போலிருக்குன்னு நெனச்சு கவனிக்காம விட்டுட்டாம்.(சுள்ளாஞ்சுருக்கு – துணிகளின் மேல் ஒட்டிக் கொள்ளும் ஒருவகை புல்லின் விதை. துணியின் மீது ஒட்டிக் கொண்டு அசைவின் போது சுருக்கென்று உடம்பில் தைக்கும். இதனால் கெடுதி இல்லை; உபத்திரவம்தான்)


இந்த நீர்முள்ளுச் செடியோட முள்ளு, ரோமத்தை விட கொஞ்…சம் கனம்; அவ்வளவுதான். மஞ்சள் நிறத்துல இருக்கும். பய நிறமும் மஞ்சள்; அதனால் ஒண்ணும் தெரியல சரியா. அதோட நல்ல விளையாட்டுப் பருவம்; கக்கத்துலல்லாம் அப்பத்தாம் ரோமம் முளைக்கிற வயசுன்னு வச்சுக்கிடுங்களேம்.


ஒரு நாளாச்சி, ரெண்டு நாளாச்சு, மூணு நாளாச்சு பொதுபொதுண்ணு வீங்கிருச்சு. கோமணம் வய்க்க முடியல! பய மேலுக்கு குதுகுதுன்னு வந்துட்டு.


யாரிட்ட காணிப்பான், காணிக்க கூடிய இடமா?அண்ணைக்கி பெயலால மாட்டுக்குப் போக முடியல. இழுத்து மூடிப்படுத்துக்கிட்டு முக்கிக்கிட்டு மொனங்கிக்கிட்டும் கெடக்காம்.


ஏலே; எந்தி; நேரங்காணாதான்னு அவம் வீட்டுத்தாத்தா வந்து உசுப்பினாரு. தாத்தாகிட்ட கொஞ்சம் ஒட்டுதல் உண்டும் இவனுக்கு.
மெண்ணு மெண்ணு முழுங்கி ஒருபடியா இப்படி சங்கதின்னிட்டு சொன்னான்.


எங்கலே பாப்பம்னுட்டு பாத்தா…பெரிய மஞ்ச முள்ளங்கீக்கிழங்கு கணக்கா வீங்கிக் கிடக்கு! கண்ணாடியா மின்னுது.


அட பெயித்தியாரப்பயலே, ஆரம்பத்திலேயே சொல்லப்படாதா, இப்பிடி வீங்கிப்போச்சே, உழுவ மீனு மாதிரியில்ல ஆயிட்டுன்னு சொல்லி, பெயல கட்டுல்ல படுக்க வச்சி. பக்கத்து ஊருக்கு கொண்டு போனாவ.


பக்கத்து ஊருல, ‘பார்வை’ பாக்குதவரு இருக்காரு. இவுக போன நேரம் அவரு இல்லே. அவரோட சம்சாரந்தான் இருந்திச்சு. அந்தம்மாவும் ‘பார்வை’ பாக்கும்.


வர்றவுகளுக்கு அவதான் பார்வை பாத்துக்கிட்டிருந்தா. இவனோ வெடலைப் பெய; பொம்பளையிட்ட எப்டிக் காண்பிக்கிறதுன்னுட்டு தாத்தாவுக்கு யோசனை. சரி என்ன செய்ய. ஆபத்துக்குப் பாவமில்லன்னுட்டு அவகிட்ட இப்பிடி இப்பிடி சங்கதி; ‘நோக்காதண்டி’ ஆயிட்டது. நீங்கதாம் பாக்கணும்னு சொன்னாரு தாத்தா.


அதுலயா முள்ளு குத்தியிருக்கு. அதாம் அப்பிடி வீங்கியிருக்கு. அப்படீன்னா… நீங்க வேற ஆளத்தான் பாக்கணும்னு சொல்லிட்டா.


அம்மா தாயி ஒரு பக்கமும் தூக்கிட்டுப் போக முடியாது. இங்க கொண்டாந்ததே பரவாயில்ல. நீங்கதாம் காப்பாத்தணும்னு கால்லே விழாத குறையாக் கெஞ்சினாரு. அவ கிழவின்னாலும் குத்தமில்ல. கொஞ்ச வயசுக்காரி. கிழவனார் தாத்தா சொன்னதுல இருந்து மனசுக்குள்ள ‘நோக்காத் தண்டியா…நோக்காத்தண்டியா – அப்பிடின்னா பாக்கணுமே அதன்னு ஆசை!


சரி கொண்டாங்கன்னா.


கட்டுலோட தூக்கிட்டு வந்தாங்க. பயலெப் பாத்தா. பாத்ததுமே பிடிச்சுப் போச்சு. சரி இருக்கட்டும்னு நெனச்சி, தன்னோட கண்ணெ துணியால கட்டிக்கிட்டு, அவனோட கண்ணெயும் கட்டச் சொல்லிட்டு வேப்பங் கொழய சுழத்தி வீசி வீசி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சா.


மந்திரம் வர்றதுக்கு பதிலா வாய்லேர்ந்து நோக்காத்தண்டி நோக்காத்தண்டின்னுட்டுதான் வருது!


அய்யோ நோக்காதண்ணியா அத நாம் பாக்கணுமேன்னுதான் மந்திரம் வருது.


ஒன்றரை மணிநேரம் வேப்பங்கொழை அடிச்சாச்சி! மந்திரமும் ஓதியாச்சு.

வீக்கங் குறைஞ்சிருக்கா; வலி நின்னுருக்கான்னு கேட்டா.

வீக்கங் கொறயல. வலியும் நிக்கலேன்னு சொன்னதும் ‘சரி இதுக்கு வேற பக்குவங்தாம் செய்யணும். எல்லாரும் முதல்ல சத்தோடம் வெளியே நில்லுங்கன்னா. எல்லாரும் வெளியேப் போயாச்சு. கதவ ஒருச்சாச்சு வச்சிக்கிட்டா. தன்னோட கண்கட்ட அவுத்துட்டு, ஒரு ‘கோழி ரோமம்’ எடுத்தா.


வீங்குனதும்பேர்ல அப்படியோ பட்டதும் படலையோன்னு மேலும் கீழுமா ரோசுனா. அந்த வலியிலேயும் பயலுக்கு அப்படியே சொகமா இருக்கவும் கொஞ்சங் கொஞ்சமா ‘உசுருத்தலத்துக்கு’ உசுரு வர ஆரம்பிச்சது. விரிய விரியவும் சலம் தன்னப்போல ஒடஞ்சு வெளியேறவும் பயலுக்கு வலிக்கவும் செய்யுது. சொகமாவும் இருக்கு. அப்பிடியே பெறத்தால கையிரண்டையும் கட்டில் சட்டத்துல ஊனிக்கிட்டு முக்குதாம் மொனங்குதாம்;

மறி மோத்திரத்த குடிச்ச கெடாக்கணக்கா சத்தங் கொடுக்காம்! வெளியில நின்ன தாத்தாவுக்கு வாயெல்லாம் பல்லு!! சலத்தோட முள்ளு வெளியில வாரது மாதிரி அவருக்கு மனசுல தோணுது.


ஆனா இங்க செலந்தா வந்திருக்கு. முள்ளெக் காணோம். முக்காவாசி செலம் வந்திட்டதும் பயலுக்கு வலி குறைஞ்சிட்டது. முள்ள இனி பிதுக்கித்தாம் எடுக்கணும். உயிர்த்தலத்த பிதுக்கினா தாங்கமாட்டாம். திரும்பவும் கோழி ரோமத்தால தடவிக்கொடுத்தா. பிறவு அப்படியே நாக்கால தடவவும் பயலுக்கு வலிக்கு சூடா ஒத்தனங் கொடுத்த்து போல எதமா இருந்திச்சு. முள்ளு வர்ற மாதிரித் தெரியல. பல்லுபடாம பதனமா வலி தெரியாம இதமா சுவைச்சு உறிஞ்சி துப்புனா. சின்ன ரோமத்தண்டி விழுந்து கிடந்த்து. இப்ப எப்பிடி இருக்குன்னு கேட்டா.


செத்த தேவலன்னாம்


எப்பிடித் தச்சது முள்ளுன்னு கேட்டா

வெவரம் எல்லாத்தையும் ஒண்ணு விடாமச் சொன்னாம். ஒரு முள்ளுதாம் தச்சதாம்னு கேட்டு எல்லாப்பக்கத்தையும் பாத்தா.

தாத்தா சொன்னது சரிதாம்னு பட்டது அவளுக்கு

இது விச முள்ளு. இன்னும் நாலு நேரமாவது மந்திரிக்கணும். போயிட்டு மூணாம்பக்கம் வான்னு சொல்லி ஒரு பச்சிலையை அறைச்சிப் போடுன்னு சொல்லிக் கொடுத்தா.

இப்ப வலியில்ல. ஆனாலும் மூணாம் பக்கம் மந்திரிக்கப் போனோம்.
விச முள்ளுல்லா. கூடவே நாலு தரம் மந்திரிச்சாம்.


மந்திரிக்க மந்திரிக்கதாம் தெரிஞ்சது நீர் முள்ளோட அருமை அவனுக்கு
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-57/3854653351_493bba7008_m.jpg

Wednesday, July 18, 2012

கி.ராஜநாராயணன் - அர்த்தஜாமக்கதை -தவளையும் பாம்பும் 18 +

http://lh6.ggpht.com/-7d2XBDiXa7k/TuVXaGVYhNI/AAAAAAAAAbE/-yeaZb0LiBg/ki_ra1%25255B3%25255D.jpg 


(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).


வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது.


தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக வந்து தவளைகளை பிடிச்சித் திங்க ஆரம்பிச்சதும் தவளைகளுக்கு ரொம்ப பயமாப் போச்சி. அதுகளுக்கு என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. எங்கன போயி ஒளியறதுன்னுட்டுந் தெரியல. அதுகளோட நிலமை ரொம்பப் பரிதாபமா ஆயிட்டது.


இவ தலைக்கு சீய்க்கா போட்டுத் தேச்சிக் குளிக்க, தண்ணிக்குள்ள முங்குன ஒரு படிக்கட்டுல வசமா உக்கார்ந்துகிட்டு கண்ணுல சீய்க்க விழுந்துராம இருக்க கண்ண மூடிக்கிட்டு தலையைத் தேய்ச்சிக்கிட்டிருக்கா.


அந்த சமயத்துல ஒரு தண்ணிப் பாம்பு ஒரு தவளைய விடேன் தொடேன்னு முடுக்கிட்டு வருது. கடோசியா தவளைக்குத் தப்பிக்க ஒரு வழியுந் தெரியல.


இவ கால அகட்டி உக்காந்து தலெ குளிச்சிட்டிருந்தாளா, அது பாட்டுக்குப் போயி இருந்துக்கிட்டது. பாம்புக்குப் பார்வை தவளை மேல. அதனால தவளையங் காங்கலங்கவும் அது திரும்பி போயிட்டது. தவளைக்கு இப்பதாம் உயிரு வந்தது. இம்புட்டுப் பாதுகாப்பா, குளிருக்கு அடக்கமா ஒரு இடம் கிடைக்கும்னு அது கனவுலயும் நெனக்கல.


சரி. இதுலயே இப்படியே இருப்போம்னு இருந்துக்கிட்டது. அந்தத் தவளையப் பிடிக்க அதெ வெரட்டிக்கிட்டு வந்த பாம்புக்கு ஒரு சந்தேகம் வந்துட்டது. அதுக்குள்ள இந்தத் தவள எங்கிட்டுப் போயிருக்க முடியும்ன்னுட்டு.


ஒரு வேள இதுக்குள்ள இருக்கலாமோன்னு தலைய நுழைச்சிப் பாத்தது.உசாரா இருந்த தவளை இத எதிர்பார்த்து இருந்ததால இன்னும் உள்ளுக்குப் போயி வசமான இடத்துல பதுங்கியிருந்துக்கிட்டது. உள்ள நுழைஞ்சி பாத்த பாம்புக்கு ஒரே இருட்டா இருந்ததுனால ஒண்ணுந் தெரியல. அதனால தலைய வெளிய இழுத்துக்கிட்டு வேற தவளையப் பாப்பம்னு போயிட்டது.


பாம்பு போயிட்டதுன்னு உறுதியாத் தெரிந்த பிறகு தவளை மெள்ள வெளியே வந்துட்டது.

உயிரு தப்பியதை நினைத்து அதுக்கு ஒரே புல்லரிப்பு நிறைந்த தாங்க முடியாத மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சியை தனது சேக்காளித்தவளையிடம் போய்ச் சொன்னது. நடந்ததை அப்பிடியே சொல்லி, பாம்பு உள்ளே வந்து தேடியதையும் தன்னைப் பிடிக்க முடியலைன்னு சொல்லிவிட்டு-

ஹ..! அந்த இடம்; ரொம்ப அருமையான இடம் ஒளிய. நீயும் அதப் போய்ப் பாக்கணும். பாத்து வச்சிக்கிட்டா பாம்புக வெறட்டும்போது போயிப் பதுங்கிக்கலாம்னு சொன்னதும் இந்தப் பயித்தியாரத் தவளை உள்ளே போயிப் பாக்கிறதுக்கும் அவ குளிச்சி எழுந்திருக்கிறதுக்கும் சரிய்யாக இருந்தது.


அடடா உள்ள மாட்டிக்கிட்டமே. சரி. நாளைக்கு இந்நேரந்தாம் வெளியே வர முடியும்னு கம்முனு பதுங்கி இருந்துக்கிட்டது.


அதேபோல மறுநா அவ அந்த குளத்துக்கு தலை குளிக்க வந்து தண்ணீர்ப் படியில உக்காந்து தலெயெத் தேச்சிக் குளிச்ச போது தவளை தப்பிச்சேன் பிழைச்சேன்னு பாஞ்சி வெளியே வந்திட்டது. சேக்காளித்தவளெ என்னடா இவம் போனவனெக் காங்கலயே; பாம்புதாம் முழுங்கிருச்சோன்னு கவலையா இருந்த சமயம்; இது அதெத்தேடி வந்தது சிரிச்சுக்கிட்டே.
என்னப்பா என்ன ஆச்சி; எப்பிடி இருந்ததுன்னு மற்ற தவளை கேக்க…


அய்யோ! அதெ ஏங் கேக்கெபோ; ஒரு பாம்பா ரெண்டு பாம்பா எத்தென பாம்புங்கிற; விதவிதமா வருதப்போவ்! நானும் பாத்ததுலயும் பாத்தேன்; இப்படிப் பாம்புகளைப் பாத்ததில்லப்ப, வார சனியன் எட்டிப் பாத்துட்டு, இல்லேன்னு தெரிஞ்சதும் போக வேண்டியதுதானே. ரொம்ப சந்தேகம் பிடிச்ச பாம்புகப்பா. மாறி மாறி மாறி மாறி வந்து வந்து பாக்குதுங்கெ.


நா அம்புடுவேனா. எவ்ளோ எடம்கிற. நம்ம குளத்துத் தவளயெல்லாம் போயி இருந்துக்கிறலாம். அப்பேர்க்கொத்த பெரிய இடம் அது என்று பெருமை பீத்திக்கொண்டது அந்த தவளை. அப்படியா சங்கதி. நா நாளைக்குப் போயி பாத்துட்டு வந்துரணும். அதெ என்று சொல்லிக் கொண்டது மற்ற தவளை.


 நன்றி - நாட்டுப்புற பாலியல் கதைகள்,கி.ராஜநாராயணன்


http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/TAg9TyE2reI/AAAAAAAAGT0/PayTz1bnZC4/kira3_thumb%5B13%5D.jpg