Wednesday, July 18, 2012

கி.ராஜநாராயணன் - அர்த்தஜாமக்கதை -தவளையும் பாம்பும் 18 +

http://lh6.ggpht.com/-7d2XBDiXa7k/TuVXaGVYhNI/AAAAAAAAAbE/-yeaZb0LiBg/ki_ra1%25255B3%25255D.jpg 


(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).


வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது.


தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக வந்து தவளைகளை பிடிச்சித் திங்க ஆரம்பிச்சதும் தவளைகளுக்கு ரொம்ப பயமாப் போச்சி. அதுகளுக்கு என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. எங்கன போயி ஒளியறதுன்னுட்டுந் தெரியல. அதுகளோட நிலமை ரொம்பப் பரிதாபமா ஆயிட்டது.


இவ தலைக்கு சீய்க்கா போட்டுத் தேச்சிக் குளிக்க, தண்ணிக்குள்ள முங்குன ஒரு படிக்கட்டுல வசமா உக்கார்ந்துகிட்டு கண்ணுல சீய்க்க விழுந்துராம இருக்க கண்ண மூடிக்கிட்டு தலையைத் தேய்ச்சிக்கிட்டிருக்கா.


அந்த சமயத்துல ஒரு தண்ணிப் பாம்பு ஒரு தவளைய விடேன் தொடேன்னு முடுக்கிட்டு வருது. கடோசியா தவளைக்குத் தப்பிக்க ஒரு வழியுந் தெரியல.


இவ கால அகட்டி உக்காந்து தலெ குளிச்சிட்டிருந்தாளா, அது பாட்டுக்குப் போயி இருந்துக்கிட்டது. பாம்புக்குப் பார்வை தவளை மேல. அதனால தவளையங் காங்கலங்கவும் அது திரும்பி போயிட்டது. தவளைக்கு இப்பதாம் உயிரு வந்தது. இம்புட்டுப் பாதுகாப்பா, குளிருக்கு அடக்கமா ஒரு இடம் கிடைக்கும்னு அது கனவுலயும் நெனக்கல.


சரி. இதுலயே இப்படியே இருப்போம்னு இருந்துக்கிட்டது. அந்தத் தவளையப் பிடிக்க அதெ வெரட்டிக்கிட்டு வந்த பாம்புக்கு ஒரு சந்தேகம் வந்துட்டது. அதுக்குள்ள இந்தத் தவள எங்கிட்டுப் போயிருக்க முடியும்ன்னுட்டு.


ஒரு வேள இதுக்குள்ள இருக்கலாமோன்னு தலைய நுழைச்சிப் பாத்தது.உசாரா இருந்த தவளை இத எதிர்பார்த்து இருந்ததால இன்னும் உள்ளுக்குப் போயி வசமான இடத்துல பதுங்கியிருந்துக்கிட்டது. உள்ள நுழைஞ்சி பாத்த பாம்புக்கு ஒரே இருட்டா இருந்ததுனால ஒண்ணுந் தெரியல. அதனால தலைய வெளிய இழுத்துக்கிட்டு வேற தவளையப் பாப்பம்னு போயிட்டது.


பாம்பு போயிட்டதுன்னு உறுதியாத் தெரிந்த பிறகு தவளை மெள்ள வெளியே வந்துட்டது.

உயிரு தப்பியதை நினைத்து அதுக்கு ஒரே புல்லரிப்பு நிறைந்த தாங்க முடியாத மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சியை தனது சேக்காளித்தவளையிடம் போய்ச் சொன்னது. நடந்ததை அப்பிடியே சொல்லி, பாம்பு உள்ளே வந்து தேடியதையும் தன்னைப் பிடிக்க முடியலைன்னு சொல்லிவிட்டு-

ஹ..! அந்த இடம்; ரொம்ப அருமையான இடம் ஒளிய. நீயும் அதப் போய்ப் பாக்கணும். பாத்து வச்சிக்கிட்டா பாம்புக வெறட்டும்போது போயிப் பதுங்கிக்கலாம்னு சொன்னதும் இந்தப் பயித்தியாரத் தவளை உள்ளே போயிப் பாக்கிறதுக்கும் அவ குளிச்சி எழுந்திருக்கிறதுக்கும் சரிய்யாக இருந்தது.


அடடா உள்ள மாட்டிக்கிட்டமே. சரி. நாளைக்கு இந்நேரந்தாம் வெளியே வர முடியும்னு கம்முனு பதுங்கி இருந்துக்கிட்டது.


அதேபோல மறுநா அவ அந்த குளத்துக்கு தலை குளிக்க வந்து தண்ணீர்ப் படியில உக்காந்து தலெயெத் தேச்சிக் குளிச்ச போது தவளை தப்பிச்சேன் பிழைச்சேன்னு பாஞ்சி வெளியே வந்திட்டது. சேக்காளித்தவளெ என்னடா இவம் போனவனெக் காங்கலயே; பாம்புதாம் முழுங்கிருச்சோன்னு கவலையா இருந்த சமயம்; இது அதெத்தேடி வந்தது சிரிச்சுக்கிட்டே.
என்னப்பா என்ன ஆச்சி; எப்பிடி இருந்ததுன்னு மற்ற தவளை கேக்க…


அய்யோ! அதெ ஏங் கேக்கெபோ; ஒரு பாம்பா ரெண்டு பாம்பா எத்தென பாம்புங்கிற; விதவிதமா வருதப்போவ்! நானும் பாத்ததுலயும் பாத்தேன்; இப்படிப் பாம்புகளைப் பாத்ததில்லப்ப, வார சனியன் எட்டிப் பாத்துட்டு, இல்லேன்னு தெரிஞ்சதும் போக வேண்டியதுதானே. ரொம்ப சந்தேகம் பிடிச்ச பாம்புகப்பா. மாறி மாறி மாறி மாறி வந்து வந்து பாக்குதுங்கெ.


நா அம்புடுவேனா. எவ்ளோ எடம்கிற. நம்ம குளத்துத் தவளயெல்லாம் போயி இருந்துக்கிறலாம். அப்பேர்க்கொத்த பெரிய இடம் அது என்று பெருமை பீத்திக்கொண்டது அந்த தவளை. அப்படியா சங்கதி. நா நாளைக்குப் போயி பாத்துட்டு வந்துரணும். அதெ என்று சொல்லிக் கொண்டது மற்ற தவளை.


 நன்றி - நாட்டுப்புற பாலியல் கதைகள்,கி.ராஜநாராயணன்


http://lh6.ggpht.com/_zmZAoGSCETs/TAg9TyE2reI/AAAAAAAAGT0/PayTz1bnZC4/kira3_thumb%5B13%5D.jpg

12 comments:

Kathiravan Rathinavel said...

எங்க பக்கம் இன்னொரு விசயம் சேர்த்து சொல்லுவாங்க
"வந்த பாம்புங்க போறப்ப விஷத்தை கக்கிட்டு போச்சு"

சிறுவயது adulds story.

everestdurai said...

அருமை செந்தில்

”தளிர் சுரேஷ்” said...

ஹா! ஹா! ரொம்பவே ரசிக்கவைத்தது கி.ரா.வின் நாட்டுப்புற கதை! ஏற்கனவே படித்தது என்றாலும் மீண்டும் படித்து ரசித்து சிரித்தேன்.!

வெற்றிவேல் said...

@கதிரவன்

நானும் இந்தக் கதையைக் கேட்டுருக்கேன்...

வெற்றிவேல் said...

@கதிரவன்

நானும் இந்தக் கதையைக் கேட்டுருக்கேன்...

வெற்றிவேல் said...

நீண்ட நாள்களுக்குப் பிறகு படித்த சிறு கதை... அருமை பாஸ்...

Ganesh.N said...

ஒரு ஃபினிஷிங் டச்சு வேணுமே.. அதத்தான காணோம்ங்கிறேன்..

kanagavelrajan said...

வந்த பாம்பு எல்லாம் என்னை பார்த்துட்டு இவன் ஈக்குஞ்சுன்னு எச்ச துப்பிட்டு போயிறுச்சு நல்ல வேளை தப்பிச்சேன் எப்படி முடிவு சரியா

Kharthik said...

Copy & paste from http://chilledbeers.blogspot.in/2012/01/18.html

நம்பள்கி said...

@Kharthik

Copy & paste from http://chilledbeers.blogspot.in/2012/01/18.html

புரியவில்லை! இது எப்படி காப்பி பேஸ்ட் ஆகும்; இரண்டு பெரும் கி.ரா கிட்ட இருந்து சுட்டு இருக்கீங்க! அது. கி. ரா வின் சொந்த சரக்கும் கிடையாது. அது காலம் காலமாக சொல்லாப்படும் கதைகள்...

கி. ரா வை விட எல்லோரும் ரசிக்கும் படியவும் புரியும் படியும் நீங்கள் யாரவது ஒருவர் எழுதி இருந்தால் பாராட்டலாம்...

என்னால் எழுத முடியும்; எழுதுவேன் வளர்ந்த பிறகு. இப்ப நான் எழுதினா ஆபாசம்; வளர்ந்த பின் எழுதினா இலக்கியம்!

நான் இலக்கியம் படைக்கப் போகிறேன்!

உதயகுமார் said...

எதுவும் கடிச்சு வைக்கதாதது நல்லதாப் போச்சு.

உதயகுமார் said...

எதுவும் கடிச்சு வைக்கதாதது நல்லதாப் போச்சு.