Wednesday, November 23, 2011

நமீதா - குட்டை பாவாடை , குஷ்பூ - செம கட்டை பஞ்சாயத்து - காமெடி கும்மி கலாட்டா

http://bollywoodhotties.net/data/media/144/Namitha%20014.jpg

பொது விழாக்களில் நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் அவரது வீட்டுக்கு கோவணம் கட்டி  200பேர் வந்தால் அவர்களை வரவேற்பாரா என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சி.பி - அரசியல் நாகரீகம் நல்லா வளர்ந்திருக்கு போல.. 


சினிமாவில் தான் நடிகைகள் படுகவர்ச்சியாக வருகிறார்கள் என்றால், பொது நிகழ்ச்சிககளிலும் படுகவர்ச்சியான உடையணிந்தும், குட்டை பாவாடை அணிந்து வருகின்றனர். சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது.

சி.பி - அவங்களே கவலைப்படலை.. உங்களுக்கென்னய்யா? 




இந்நிலையில், நடிகை நமீதா அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சி.பி - சுந்தர் சிக்கும் பிடிக்குமாமே? விசாரிங்க.. 


அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால் சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.


சி.பி - அதானே , பெண் சுதந்திரத்தை யாரப்பா எதிர்க்கறது? ராஸ்கல்ஸ்.. அவங்க இஷ்டம் அதெல்லாம்.. ஹி ஹி ரசிக்காம.... 




இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாச்சாரம், பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலமே தமிழகம் தான். அதனால் தான் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம்.

சி.பி - நாட்ல எல்லாருமே கற்புக்கரசி யாருன்னு கேட்டா கண்ணகி பேரையே சொல்றாங்களே? அவங்கவங்க சம்சாரம் அவங்கவங்களுக்கு கற்புக்கரசியா தெரியலையா? அவ்வ்வ்வ்வ் 


குஷ்பு சொல்வது போல், 2 நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் நடிகைகள் அதுபோல் அணியட்டும், பொது விழாக்களில் அப்படி அணிய வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.

சி.பி - முன்னாள் சி எம் எங்க தலைவர் டாக்டர் கலைஞரே அது பற்றி எதுவும் சொல்லலை.. எத்தனை சினிமா ஃபங்ஷன் அட்டெண்ட் பண்ணாரு.. ? உங்களுக்கென்னாய்யா போச்சு?




நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் 200பேர் கோவணம் கட்டி அவர் வீட்டு வாசல் முன் வந்து நின்றால், அவர்களை சந்திப்பாரா...? அல்லது பேசத்தான் செய்வாரா...? ஆகவே, இதுபோன்ற நடிகைகளுக்கு வக்காலத்து வாங்குவதை குஷ்பு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.


http://www.southgossips.in/wp-content/uploads/2009/04/namitha_hot_sexy_billa_hq_28.jpg

இனி ஜோக்ஸ் 


1. நடிகை - எனக்கு டிரஸ்ஸிங்க் சென்ஸ் இல்லைன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?



XQSமீ மேடம்.. சென்ஸ் இருக்குது, ஆனா டிரஸ் இல்லை..

-----------------------------------

2. ஒரு கட்டையே  குட்டை பாவாடை போடுகிறதே... அடடே.. ஆச்சரியக்குறி!!

----------------------------------

3. நான் குட்டை பாவாடை போடறதால உங்களுக்கென்னய்யா பிரச்சனை? 

அதாவது மேடம் நாங்க ஆஃபீஸ்ல டக் இன் சர்ட் பண்ணீட்டு வந்திருக்கோம் ஹி ஹி

------------------------------------

4. கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?-இந்து மக்கள் கட்சி! # அண்ணே, மேனர்ஸ் மேனர்ஸ்,, அப்புறமா கட்சி ஓக்கே

--------------------------------

5. விழா மேடைல 24 சேர் இருக்கு, ஆனா எல்லா ஆளுங்களும் தரைல உக்காந்திருக்காங்களே? ஏன்?

தலைவரே, சிறப்பு விருந்தினரா வர்ற நடிகை குட்டை பாவாடைல.. ஹி ஹி

-------------------------------------

6. மேடம் உங்களுக்கு பிடிச்ச ரீ மிக்ஸ் பாட்டு எது? 

பாவாடை குட்டையாக போட்ட உருவமா இது .... கர்சீப்பால் மேலாடை தைத்த பருவமா ஹோய்

----------------------------------

7. இப்போ என்னய்யா பிரச்சனை? பாடைலயா போயிடுச்சு? பாவாடைலதானே போனாங்க.. பொழப்ப பாருங்கப்பா.. 

-----------------------------------

 8. நமீதா மூன்றெழுத்து , குஷ்பூ மூன்றெழுத்து , பாவாடை மூன்றெழுத்து ,ஜாமீன் மூன்றெழுத்து , திஹார் மூன்றெழுத்து, ஊழல் மூன்றெழுத்து , ஆவின் மூன்றெழுத்து , அம்மா மூன்றெழுத்து ,- ஹூம் எல்லாம் நம்ம தலை எழுத்து

-------------------------------------------

22 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் ரசிகன்;....

கும்மாச்சி said...

பாவடையிலேயே பதிவை தேத்திட்டிங்க, ஹூம்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரீமிக்ஸ் பாவாடை பாட்டு பொருத்தம்...


நம்ம தளத்தில்:
போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்கிருந்தெல்லாம் நகைச்சுவையை புடிச்சிடுறாருப்பா...

MANO நாஞ்சில் மனோ said...

குஷ்பு'வுக்கு கண்டம் மறுபடியும் ஆரம்பிச்சிருச்சு, கட்சியில கனிமொழி இடத்தை பிடிப்பதுக்கு யாரும் ஐடியா குடுத்தாங்களோ என்னமோ...??

MANO நாஞ்சில் மனோ said...

அந்த கடைசி மேட்டர் சூப்பரு...!!!

குரங்குபெடல் said...

தம்பி ரொம்ப ஆபாசமா போகுது . . . . .

பாத்துக்குங்க . . .

rajamelaiyur said...

Ha . . Ha . .

Anonymous said...

/// சி.பி.செந்தில்குமார் said...

mகமல் ரூட்டா? ஒரு கமர்ஷியல் போஸ்ட் .... ஒரு நல்ல போஸ்ட் ///

ஆமாண்ணே அப்பொழுது தான் அந்த நல்ல போஸ்ட்டும் நாலு பேருக்கு போய் சேருகிறது.

Anonymous said...

எப்படிண்ணே கொஞ்சம் கூட ஸ்பீடு குறையலையே, உங்க பதிவெழுதும் வேகம் நான்ஸ்டாப்பா போயிட்டு இருக்கு. நீங்க தான் எனக்கு குருநாதரு.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கண்ணகி பற்றிய கேள்வி ஞாயமான கேள்வி

Anonymous said...

அடுத்த முதலவர் குஸ்புதான்னு நினைக்கிறேன்...

Anonymous said...

ஹீ ஹீ... அவுங்க டிரெஸ் மேட்டர் கெடக்குது கழுத.. ஆனா எத எத எல்லாம் வச்சி பதிவுபோடுறீங்க பாஸ்,,, உங்க சேவை நாட்டுக்கு தேவை...

Napoo Sounthar said...

ஹி.. ஹி..

கடம்பவன குயில் said...

ஒரு சின்ன மேட்டர் கிடைத்தாலும் அதைவைத்து ஒரு பதிவை எழுதிடறீங்களே...நிஜமாகவே ரொம்ப பெரிய ஜீனியஸ்தான் நீங்கள்.

Unknown said...

சிபி அண்ணனுக்கு நமீதாவ நினைக்கிலைன்னா தூக்கம் வராது..
சிபி நமீதாவ பற்றி எழுதுனா எங்களுக்கு தூக்கம் வராது!!
ஆஃபீஸ்ல டக் இன்...... கொய்யால பதிவுலக பாக்கியராஜ் சிபி வாழ்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தலை எழுத்து
-ஆறு எழுத்து.

Yoga.S. said...

ஆமாமா,எல்லாமே மூன்றெழுத்துதான்.சி.பி.செ. கூட மூன்றெழுத்துதான்!!!தலை எழுத்து!

Philosophy Prabhakaran said...

XQSமீ என்று புது ஸ்பெல்லிங் கண்டுபிடித்த னீங்க ஒரு ஞானி தல...

KANA VARO said...

சி.பி.எஸ் மூன்றெழுத்து.. ஹி ஹி

K.s.s.Rajh said...

அண்ணே நமீதாப்படம் கண்ணுங்குள்ளே இருக்கு அதனால் பதிவை முழுமனதுடன் படிக்க முடியவில்லை சாரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

//// 8. நமீதா மூன்றெழுத்து , குஷ்பூ மூன்றெழுத்து , பாவாடை மூன்றெழுத்து ,ஜாமீன் மூன்றெழுத்து , திஹார் மூன்றெழுத்து, ஊழல் மூன்றெழுத்து , ஆவின் மூன்றெழுத்து , அம்மா மூன்றெழுத்து ,- ஹூம் எல்லாம் நம்ம தலை எழுத்து
/////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...................