Sunday, September 04, 2011

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா சுட்டதன் பின்னணி என்ன?

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataM/mgr/images/restricted/06-11-2008/malayalam_actor_mgr_20.jpg



1. எம்.சிவகுமார், வேதாரண்யம்.

 இந்த அரசின் 100 நாள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்? 

'ஜெயலலிதாவிடம் கொஞ்சம் மாறுதல் தெரிகிறது’ என்று பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க ஆரம்பித்திருப்பதே பெரிய சாதனை!

சி.பி - நில மோசடி வழக்கில் வரிசையா பெரிய தலைங்க எல்லாம் உள்ளே போறாங்க, பலருக்கு கிலி.. இது நல்ல ஓப்பனிங்க்.. 
2.  வசந்த முருகன், மன்னார்குடி.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டதற்கு உண்மை​யான காரணம் என்ன? 


அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்த எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசிய பேச்சைக் கேளுங்கள்...


'எம்.ஜி.ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். அம்பது வருஷமா சிநேகிதம். ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம். ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் 'டப்பு... டப்பு’ன்னது. நிறுத்திப்புட்டோம். 

அதுல என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் எட்டு தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, எட்டு தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறாப் பேசுறாங்க!’

சி.பி - ஒரு பட அதிபரை கால்ஷீட் விஷயத்தில் எம்ஜிஆர் இழுத்தடித்ததாகவும், அது பற்றிய பஞ்சாயத்தில் எம் ஆர் ராதாவை வாக்குவாதத்தில் சுட முயன்றபோது அவ்ர் முந்திக்கொண்டதாகவும் ஒரு உறுதி செய்யப்படாத தகவல் உலா வருகிறது.. 


http://cdn4.supergoodmovies.com/FilesFour/mgr-s-assistant-muthu-passes-away-418a725d.jpg
3.  பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

அடையாள உண்ணாவிரதம், ஒரு நாள் உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், சாகும் வரை உண்ணாவிரதம்.... என்ன வேறுபாடு? 

முன்னது இரண்டும் கட்சிகள் நடத்துவது. மூன்றாவது, போராட்டக்காரர்கள் நடத்துவது. சாகும் வரை உண்ணாவிரதம் மட்டுமே தியாகிகள் நடத்துவது!
முன்னது இரண்டும் ஒப்புக்காக நடத்தப்படுவது. நிர்ப்பந்தமும் நெருக்கடியும் காலவரையற்ற உண்ணா​​விரதத்துக்குக் காரணமாக இருக்கிறது. எதைப் பற்றிய கவலையும் இல்லாமல், நோக்கம் நிறைவேறினால் மட்டுமே போதும் என்ற ஒரே இலக்கோடு நடத்தப்படுவைதான் தியாக நெருப்பில் நடப்பவை!



சி.பி -  அடையாள உண்ணாவிரதம் கலைஞர் நடத்தும் 3 மணி நேர நாடகம் போல, ஒரு நாள் உண்ணாவிரதம் வீட்டில் மனைவி நம்மை வழிக்கு கொண்டு வர நடத்துவது,காலவரையற்ற உண்ணாவிரதம் காந்திஅடிகள் செய்தது, சாகும் வரை உண்ணாவிரதம் திலீபன் செய்தது. 


4.  மகேந்திரன், செய்யாறு.

அறிவை விருத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்? 

'அதிகம் உற்று நோக்க வேண்டும். கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்’ - என்று கெதே சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
'கண்டதும் கற்றால் பண்டிதன் ஆவான்’ என்கிறதே நம்முடைய பழந்தமிழர் மொழி!

சி.பி - பல புத்தகங்கள் படிக்க வேண்டும், பல சான்றோர்கள், ஆன்றோர்கள் அனுபவங்களை கேட்டு அதன் படி நடக்க வேண்டும். 

  http://www.mgrhome.org/Pictures/AAA.jpg
5.  அய்யாறு வாசுதேவன், சென்னை-14.

மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டால் சமூகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும், கொலைபற்றிய பீதியிலேயே மக்கள் வாழ வேண்டி இருக்கும் என்கிறார்​களே? 

அப்படியா?
மரண தண்டனை இப்போது நடைமுறையில்தானே இருக்கிறது. அதனால், நாட்டில் கொலையே நடக்கவில்லையா? கொலை, கொள்ளை பீதி இல்லாமல்தான் வாழ்கிறீர்களா? தண்டனைகளைக் கடுமைப்படுத்துவதால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. குற்றவாளிகள் - காவல் துறை - ஆட்சியாளர்கள் - அதிகார வர்க்கம் இவற்றுக்குள் இருக்கும் நட்புறவுச் சங்கிலியை அறுப்பதன் மூலம்தான் குற்றங்​களைக் குறைக்க முடியும்!


சி.பி - கண்ணுக்கு கண் , பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்பது கொடூரம்..


6.  ஆர்.அஜிதா, கம்பம்.

'அ.தி.மு.க. அரசுபற்றி இப்போது கருத்துச் சொல்ல மாட்டேன். ஆறு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்’ என்று சொல்கிறாரே எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த்? 

இதெல்லாம் நொண்டிச் சாக்கு!
அதுவரைக்கும் ஜெயலலிதா என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வாரா விஜயகாந்த்?

தி.மு.க-வினர் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், 'அவர்கள் இப்போதுதான் அதிகாரத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆட்சி என்றால் என்ன, எந்த ஃபைல் எங்கே இருக்கிறது, அதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கு ஆறு மாதங்களாவது அவகாசம் தர வேண்டும். அதுவரை விமர்சிக்க மாட்டேன்’ என்று பெருந்தன்மையாகச் சொன்னார். 

அது புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்குத்தான் பொருந்துமே தவிர... மூன்றாவது முறையாக முதல்வராகும் ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது.
அதைவிட முக்கியமாக, முதல் தடவை எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு வருபவர் ஆறு மாதங்களுக்கு சட்டமன்றத்துக்கு வரத் தேவை இல்லை என்று பெருந்தலைவர் காமராஜர் ஏதாவது சொல்லி வைத்தாரா என்று பழைய பேப்பரைப் பார்க்க வேண்டும்!


சி.பி - உ:ள்ளாட்சித்தேர்தல் வரும்போது கூட்டு தொடர வேண்டுமெ? அதுக்காக அண்ணன் பம்பறார்னு நினைக்கறேன்.. 

http://blog.tamilmp3songslyrics.com/image.axd?picture=2010%2F3%2Fmgr_latha.jpg
7.  நா.மைதிலி, சென்னை-45.

தற்போதைய தலைமைச் செயலகம் இடப்பற்றாக்குறையாக இருப்பதால்தானே இப்போதுள்ள அரசு முந்தைய ஆட்சிக் காலத்திலும் புதிய கட்டடம் கட்டலாம் எனத் திட்டமிட்டது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை அரசு அலுவலகங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு... மத்திய சிறை இருந்த இடத்தில் மருத்துவமனையை விரிவாக்கம் செய்துகொள்ளலாமே? 


நல்ல யோசனைதான்! அதைச் செய்யவிடாமல் தடுக்கும் 'ஈகோ’வை எங்கே கொண்டு​போய்​வைப்பது?

சி.பி - கலைஞரால் தொடங்கப்பட்ட எந்த ஒரு திட்டத்தாலும் நல்ல பெயர் அவருக்கு வந்துடக்கூடாதுனு அம்மாவுக்கு ஒரு நல்ல எண்ணம் இருக்கு.. 
8.  முருகேசன், திருவள்ளூர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தண்டனையைக் குறைக்கச் சொல்லி அறிக்கைவிடுத்த கருணாநிதி, 'இது கடிதம் அல்ல. கருணை மனு’ என்கிறாரே? 


அவர் முதலமைச்சராக இருந்தபோது, இதே மூவரும் அனுப்பிய கருணை மனுவை வெறும் கடிதமாகத்​தான் பார்த்தார். இன்று இவரது கடிதத்​
தை கருணை மனுவாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.
வெறும் வார்த்தை ஜாலங்களில் ஓடுகிறது காலம்!

சி.பி - அவர் முதல்வராக இருந்தபோது ஏதாவது செய்திருக்கலாம், அப்போ விட்டுட்டு........

நன்றி - ஜூ வி

28 comments:

சசிகுமார் said...

என்னது விளையாட்டா சுட்டுகிட்டாங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

''.....வெறும் வார்த்தை சாலங்களில் ஓடுகிறது காலம்...''
சரியாகச் சொன்னீங்க....தானாகக் கனியாவிட்டால எதுவுமே சரியாக நடக்காது...
வேதா. இலங்காதிலகம்.

கும்மாச்சி said...

அவர் நீதி மன்றத்திலேயே “சுட்டான் சுட்டேன்” என்றுதான் வாக்குமூலம் கொடுத்தார்.

சென்னை பித்தன் said...

ஜூ.வி.பதில் விட செ.பி .பதில் நல்லாருக்கே!

RAMA RAVI (RAMVI) said...

கேள்வி பதிகளுக்கு உங்க கமண்ட் நன்னயிருக்கு.
தலைவரின் படங்கள் அருமை.

மாலதி said...

உங்களின் இந்த பதிவு சிறப்பான இடத்தை பெறுகிறது பாராட்டுகள் எல்லாமே உண்மையில் பரட்ட்ட கூடியன நன்றி பாராட்டுகள் .

மாலதி said...

தலைவரின் படங்கள் அருமை

idroos said...

எம்.ஜி.ஆர்,ராதா காலத்தை பற்றியெல்லாம் என் வயதை ஒத்தோருக்கு தெரிய வாய்ப்பில்லை,வயது மூத்த ஒருவர் என்னிடம் இவ்வாறு சொன்னார் எம்.ஜி.ஆர் அந்த விஷயத்தில் கொஞ்சம் அப்டி இப்டியாம், சுட்டு வெளான்டதுக்கு அதுதான் காரணம் என்கிறார்.

Unknown said...

சுட்டேன் இப்போ என்ன அதுக்கு!....

செங்கோவி said...

சுட்டதுக்குப் பிண்ணனி அந்த பலான புக் தானய்யா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தெரிந்துகொண்டேன் .

சுதா SJ said...

அட சூப்பர் தகவல்கள்

சுதா SJ said...

எம் ஆர் ராதாவின் பேச்சு செம காமெடி பா

MANO நாஞ்சில் மனோ said...

அருவாளா இருந்தா ஒரே வீச்சுல தலை போயிருக்குமே அதான் சுட்டுகிட்டாயிங்க போல....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா, அவிங்க ரெண்டு பெரும் சுட்டுகிட்டது ஏதோ லேடீஸ் மேட்டர்னு கேள்விப்பட்டேனே உண்மையா..?

ராஜ நடராஜன் said...

தமிழகம் இதுவரை அறிந்து கொள்ளாத ரகசியம் எம்.ஜி.ஆர்.எம்.ஆர்.ராதா துப்பாக்கி சூடு!நடந்தது என்ன?புலன் விசாரணை என்ற இப்போதைய புரளி நிகழ்ச்சிகளும் கூட கண்டு பிடிக்க முடியாத தங்கமலை ரகசியம்:)

Anonymous said...

அதென்ன வடையா சுட்டு சுட்டு விளாடுவதுக்கு ஹிஹி

SURYAJEEVA said...

ஆனா அந்த உண்மை மட்டும் இருவர் சமாதியுடன் அடக்கமாகி விட்டது என்று அழகாக சொல்லி, நிகழ் கால அரசியலுக்கும் குட்டு வைத்து சி.பி பின்னூட்டங்களில் "அட" போட்ட நீங்கள் பதிவிலும் "அட" போட்டு இருக்கிறீர்கள்..

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
உங்களுக்கு உண்மையிலே ஒரு வக்கீலாகக் கூடிய சான்ஸ் இருக்கு...

நீங்கள் குறுக்கு விசாரணை செய்வதைப் பார்த்தால் எனக்கு அப்படித் தான் தோன்றுகிறது.

காட்டான் said...

மாப்பிள சின்ன பையங்க கையில துப்பாக்கி கிடைச்சுது அதுதான் விளையாடி பாத்திருக்காங்க.. ஹிஹி ஓட்டு போட்டிருக்கேன் மாப்பிள..

நிரூபன் said...

சமகால அரசியலோடு சேர்த்துப் போட்டுத் தாளிச்சிருக்கிறீங்க பாஸ்...

ஐ லைக் தட்.

கடம்பவன குயில் said...

மதுரையைப் பொருத்தளவில் நிலமோசடியே திமுக வின் பலவீனமாயும் மீட்டுத் தருவேன் என்று ஜெ கொடுத்த வாக்குறுதியே அதிமுகவின் மிகப்பெரிய பலமாகவும் நின்று மதுரையை அதிமுக கோட்டையாக்கியது.

கடம்பவன குயில் said...

ஓ...கையில் கம்பிருந்தா கம்பாலயும் கத்தியிருந்தா கத்தியாலயும் இரண்டு நண்பர்கள் அடிச்சு விளையாடிக்கலாமா???இது புதுசாயிருக்கே... கையில் கத்தியுடன் தேடுகிறேன் குத்திவிளையாட ஒரு நண்பரையும் காணலயே...........

கடம்பவன குயில் said...

உண்ணா விரதத்திற்கு சிபி கொடுத்த எடுத்துக்காட்டு அற்புதம்...

கடம்பவன குயில் said...

அறிவை விருத்தி செய்ய ”அரிவை” பற்றித் தெரிந்தால் போதுமென்றுதான் இந்தக் கால பையன்கள் நினைக்கறாங்கப்பா....(அரிவை- பெண்கள்(20 - 25 வயதுள்ள)

சிபிசார் என்னவோ புத்தகம் படி சான்றோர் ஆன்றோர் பேச்சைக்கேளுன்னு முதுரை சொல்றார். இன்னும் ஏன்சார் இப்படி அப்பாவியா இருக்கீங்க.....

N.H. Narasimma Prasad said...

'பொன்மனச் செம்மல்' எம்.ஜி.ஆர் அவர்களுடைய புகைப்படங்கள் அனைத்தும் அருமை. அதை விட எம். ஆர். ராதாவின் பதில் நச்.

Angel said...

கேள்வி பதில்கள் மற்றும் சிபியின் கமெண்ட்ஸ் சூப்பர் .
தம்பதி சகிதமாக இருக்கும் படம் ரொம்ப அழகா இருக்கு

”தளிர் சுரேஷ்” said...

விளையாடினாங்களாமா? ரொம்ப விளையாட்டாத்தான் இருக்கு! நல்ல தகவல் தொகுப்பு! நன்றிகள்!