Wednesday, September 07, 2011

ஜெயா டி வியில் சிம்ரன் ஜாக்கெட் டிசைன் டாப்பாமே? ஏன்?எதற்கு? எப்படி?

1.கவிதை எழுதுபவர்கள் அனைவருமே காதலிப்பவர்கள் அல்ல, ஆனால் காதலிப்பவர்கள் அனைவருமே கவிதைக்காரர்களே!

--------------------------

2. பொதுவான கவிதை கவனிக்கப்படுகிறது, காதல் கவிதைகள் ரசிக்கப்படுகிறது,காதலில் ஈடுபட்டவன் எழுதிய கவிதை நேசிக்கப்படுகிறது

-------------------------

3. தனது காதலை  வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தியபோது நிராகரிக்கப்பட்ட பலர் கவிதைகளாக வடித்து காதலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்

--------------------------

4. ஜெயா டிவியில் சிம்ரன் மட்டுமல்ல மதன், யூகி சேது மற்றும் பலரும்...!! # அய்யய்யோ,அவங்களும் சட்டையை சட்டை பண்ண மாட்டாங்களா? டாப்லெஸ்?அவ்வ்

-------------------------
5. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்! சில்க் வேடம் பற்றி வித்யாபாலன்!! # சென்சார் விதிமுறைகளை தாண்டி வந்தா சரிதான் மேடம்

--------------------------



Celebs and their cars


-----------------------
6. வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் உரித்தாகும்,ஆனால் கூட அவன் அன்புக்குரியவள் இருக்கும்போது மட்டும் வெளிப்படும்

----------------------------

7.  நேரத்தை பணயம் வைத்து இணையம் எங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்கவே இல்லை, உன் மவுன மொழிக்கான அர்த்தங்களை

----------------------

8. காரணமே இல்லாமல் சும்மானாச்சுக்கும் ஒரு குழந்தை அழும்போது அதன் அம்மாவைத்தவிர சுலபமாக யாராலும் அழுகையை நிறுத்தி விட முடியாது

-----------------------

9. காகிதத்தில் காதல் கடிதம் எழுதும்போது அதில் உயிர் ஓட்டம் இருந்தது, மெயிலில் லவ் மெசேஜ் அனுப்புகையில் வெறும் எண்ண ஓட்டம் மட்டுமே!

--------------------------

10. . இப்போது நமது தலைவர் அவர்கள் கால்வாயை திறந்து வைத்து நம்மிடையே உரை ஆற்றுவார்.

ஏன் முழு வாயை திறந்து பேசுனா குறைஞ்சிடுவாரா?

--------------------------


..and he never returned

11. பாலகுமாரன் எப்போது ஆன்மீகக்கதைகள் எழுத ஆரம்பித்தாரோ அப்போதிருந்து அவர் ஒரிஜினாலிட்டியை இழந்தார், கூடவே வாசகர்களையும்

----------------------

12. வரலாற்றுப்புதினங்களில் சாண்டில்யனின் நடை ரஜினியின் ஜனரஞ்சகம், கல்கியின்நடை கமலின்மதிநுட்பம்.ஆனால் பி சி ரசிகர்களை சாண்டில்யனே கவர்ந்தார்

----------------------------

13. வெற்றிக்கு 2 வழிகள் உள்ளன. 1. உங்களுக்குத்தெரிந்த எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்காதீங்க 2. முதல் வழியை இன்னொருக்கா படிங்க

------------------------

14. பிரிவோம் சந்திப்போம் ஆனந்த தாண்டவம் ஆக. ரத்னா கேரக்டரில் ருக்மணி 80 % பொருந்தியும், மதுமிதா கேரக்டரில் தமனா 50% கூட பொருந்தவில்லை

----------------------------
15. ஜீவா-சமந்தா நடிப்பில் நீதானே என் பொன்வசந்தம் - கௌதம் புதிய பட அறிவிப்பு.# விண்ணைத்தாண்டி வெற்றி வர வாழ்த்துக்கள்

------------------------ 
 Landscape Art - An Oil paint depicting a painters pride...
bob-ross-landscape-oil-painting-27-12.jpg

16. பழக்கமான நண்பர்களுடன் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்த சிறந்த வழி அவர்களை புறக்கணிப்பதே

-----------------------------


17. டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை. 

நிஜமாவா? 

ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்

-----------------------

18. அப்பா,எனக்கொரு பேய்க்கதை சொல்லுங்கப்பா.. 

ஒரு காலத்துல பவர் ஸ்டார்னு ஒரு நடிகர் இருந்தாரு..

அய்யய்யோ ,பயமா இருக்கு, போதும் நிறுத்துங்க

-----------------------------

19. பல தவறுகளுக்குப்பிறகு எடிசன் பல்பு கண்டு பிடிச்சார்,ஒரே ஒரு தவறு செஞ்சாக்கூட நாம் பல்பு வாங்கியவ்ர் என்றே அழைக்கப்படறோம்

----------------------------

20. தலைவரே! எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாதுன்னு எந்த தைரியத்துல  சொல்றீங்க? 

2016 வரை எலக்‌ஷன் வராதுங்கற தைரியத்துல  # DR  ராம்தாஸ்

------------------------


21. எக்சாம்ல பாஸ் ஆனாலும், ஃபெயில் ஆனாலும் ஃபிரண்ட் மட்டும் மாறுவதே இல்லை - மச்சி ட்ரீட் எப்போ?

--------------------------

22.  சைடு எஃபக்ட்டே இல்லாத சிறந்த மருந்து புன்னகையே!

-----------------------------

23. யார் கூட இருந்தா நல்லா இருப்போம்? என ஆராய்வது பெண்ணின் மனது, யார்கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என வாழ்த்துவது ஆணின் மனது

--------------------

24. இது என்ன காதல் உதிர் காலமா? என் மீதான உன் காதல் குறைந்து கொண்டே வருகிறதே?

--------------------------

25. நான் வெற்றியில் திளைக்கும்போது உன் உள்ளங்கை பற்றவும், தோல்வி என்னை துளைக்கும்போது உன் மடியினில் என் தலை சாய்க்கவும் உன்னை தேடுவேன்

------------------------------

Wild Animals

 

 

32 comments:

MANO நாஞ்சில் மனோ said...

anne

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா உனக்கு இதெல்லாம் யாருடா சொல் தர்றாங்க..?

MANO நாஞ்சில் மனோ said...

படமெல்லாம் சூப்பர் அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் அண்ணா ஹி ஹி தமிழ்மணம் அவுட்டே, இன்ட்லியும் அவுட்டே ஹய் ஜாலி ஜாலி ஜாலி....

Unknown said...

சூப்பர் தம்பி! அது திரிஷா தானே? டாட்டூ பார்த்துத்தான் கண்டுபிடிச்சேன்! :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே.... டாப்பு, பாட்டம் சூப்பரு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் காணாம போச்சே...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...

இது மாதிரி படம் போட்டா நாங்க பதிவை படிக்கிரதா படத்தை மட்டும் பாக்கிரதா அவ்வ்வ்வ்...

இதெல்லாம் சரி இல்லை சொல்லிட்டேன் ஆமா ஹி..ஹி..

சக்தி கல்வி மையம் said...

தமிழ்வாசி - Prakash said...
அண்ணே.... டாப்பு, பாட்டம் சூப்பரு...///

என்னடா கமென்ட் போடற ராஸ்கல்..

பிச்சுடுவேன்..

Mohamed Faaique said...

///Side Effect இல்லாத சிறந்த மருந்து “புன்னகையே”////

இதை என் ப்லாக்`ல கேப்ஷன் ஆக போடலாமா???

ஜெய்லானி said...

எனந்து தமிழ் மணம் காலியா ..? அட ஆமா ஹை ஜாலி...ஜாலி :-)))

Anonymous said...

படங்கள் நிறைய போட வேண்டாம்.ப்ளாக் ஓபனாக நேரம் ஆகும்..வேகம் அதிகம் இருக்கும் இணையதளம் வைத்திருப்பவர் மட்டுமே படிக்க முடியும்.என் ப்ளாக்கை மறுபடி பின் தொடரவும்.

Unknown said...

என்றா இது கமலா காமேஷ் படத்துக்கே இந்த ஜொள்ளு விடறாங்க....ஹிஹி....இம்புட்டு மூளைய கசக்கி இருக்காரு அதுக்கு பதில் வரல....ஆங் அந்த 23 எனக்கு பிடிச்சது!

சென்னை பித்தன் said...

கலக்கறீங்க!

KANA VARO said...

தமிழ் மணம் வந்திட்டுது..

சி.பி.செந்தில்குமார் said...

@Mohamed Faaique

தாராளமா!!!!!!!!!!!

ராஜி said...

கவிதை எழுதுபவர்கள் அனைவருமே காதலிப்பவர்கள் அல்ல, ஆனால் காதலிப்பவர்கள் அனைவருமே கவிதைக்காரர்களே!
>>
அடடா! இதுவே சூப்பர் கவிதையா இருக்கே

ராஜி said...

தனது காதலை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தியபோது நிராகரிக்கப்பட்ட பலர் கவிதைகளாக வடித்து காதலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்
>>>
சொந்த அனுபவம் போல‌

Anonymous said...

ட்வீட்ஸ் ...படங்கள் சூப்பர் தல...

ராஜி said...

இப்போது நமது தலைவர் அவர்கள் கால்வாயை திறந்து வைத்து நம்மிடையே உரை ஆற்றுவார்.

ஏன் முழு வாயை திறந்து பேசுனா குறைஞ்சிடுவாரா?
>>>
இதுதான் டாப் கிளாஸ்

மகேந்திரன் said...

துணுக்குகள் அருமை.....

வெளங்காதவன்™ said...

ராமதாசு, பவர் ஸ்டாரு....

கலக்கலோ கலக்கல்....

அம்பாளடியாள் said...

ஆகா அருமை ஒவ்வொரு விசயமும் நல்ல உணர்வுபூர்வமாக
சிந்தித்து எழுத்தப்பட்டுள்ளது .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 6

சுதா SJ said...

திரிஷா படத்துக்காகவே நான் உங்களுக்கு தமிழ்மணத்தில் ஒட்டு போட்டேன்
ஹீ ஹீ

சுதா SJ said...

அப்புறம்
சாண்டில்யன் மேட்டர் நிஜமே......
ஆனால் எழுத்தில் எனக்கு சாண்டில்யனையே பிடிக்கும்
நடிப்பில் கமலைத்தான் புடிக்கும்.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
மொதல் படம் ஏதோ பண்ணுகிறதே...

நிரூபன் said...

காதல் பற்றிய முதல் பாதி..கலக்கல் பாஸ்.

நிரூபன் said...

சினிமா பற்றிய சில்மிஷத் தகவல்கள் அசத்தல்.

நிரூபன் said...

டுவிட்ஸ் எல்லாமே வழமை போலவே அசத்தல் பாஸ்.

sivagiri senthil said...

நல்ல இருக்கு ஆனா ஜோக்ஸ் ,காதல்னு பிரிச்சு போட்ட இன்னு நல்ல இருக்கும்