Aliens Bike

1.நீ என்னுடன் இருக்கையில் நான் குழந்தை ஆகிறேன், நீ என்னை விட்டு விலகிச்சென்றதும் நான் மடந்தை ஆகிறேன்.

-----------------------------------
2. உயிர் மெய் எழுத்து என் உயிர் ஆனது - நீ! ,
மெய் எழுத்து என் கனவானது - ச்!
----------------------------
3. உன் அழகைப்பார்க்கையில் எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது,
உன் அன்பைப்பெறுகையில் வாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது
---------------
4. உன் அலங்காரங்கள் என்னைத்தாக்குகின்றன! உன் அகங்காரங்கள் என்னை உன்னிடம் அண்ட விடாமல் செய்கின்றன!
-------------------------
5. உன்னுடனான சம்பாஷைணகளின்போது உன் உதடுகளின் மூலம் வரும் ஒலிகளை உன் கண்களின் ஒளிகள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன. (ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை மிஞ்சி விடும்னு சயின்ஸ் டீச்சர் டெல்)
---------------------------
6. பூக்களை நீ சூடும்போது உனக்கான பிரத்யேக நறுமணத்தை நீ இழக்கிறாய் அன்பே!!
-----------------------------
7. உலகில் இதுவரை சொன்னவற்றில் உன்னத புத்திமதி - யாருக்கும் புத்திமதி சொல்லாதே!
----------------------------
8. முடியும் என்றால் முயற்சி செய், முடியாது என்றால் பயிற்சி செய்
-------------------------
9. ஒரு இடத்தை வாங்கும் முன் வில்லங்கச்சான்றிதழ் பெறுவது மாதிரி ஒரு மனதை நேசிக்கும்முன் வெற்றிடச்சான்றிதழ் வாங்கமுடிந்தால் எப்படி இருக்கும்? ( பெரும்பாலும் ஆல்ரெடி புக்டு ஆகவே இருக்கே?)
-----------------------------------
10. நாம் இருவரும் இணையும் காதல் கூட்டணியில் விருப்பம் எனக்கு! கடைசி நிமிடம் வரை கூட்டணி பற்றி வாய் திறக்காத சாமார்த்தியம் உனக்கு!
---------------------------
11. நமக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட வழியே இல்லை, ஏன் எனில் உன்னுடனான ஒற்றுமையில் நான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன்
-
---------------------
12. வாழ்வின் பாதி நேரம் உன் மடியில் நான் தலை சாய்ந்திருக்க வேண்டும், மீதி நேரம் என் மடியில் நீ தலை சாய்ந்திருக்க வேண்டும். ( வேலைக்கே போகமாட்டேன் ஹி ஹி )
---------------
13. உணவில் நான் சைவம், நீ அசைவம், அன்பில் நான் புத்தன், நீ ஹிட்லர், எதிர் எதிர் துருவங்கள் நாம், ஆனாலும் ஈர்க்கப்பட்டோம்
---------------
14. உன் மனதை மாற்றிவிட நான் முயலும்போது என் மனதை ஏமாற்றி விட நீ முடிவு செய்து விடுகிறாய்
-------------------
15. நீ 143 சொல்லும்போதே கூட்டுத்தொகை 8 வருதே, அஷ்டமத்துல சனி என்றே நினைத்தேன் # ஒரு ஜோதிடப்பைத்தியத்தின் கேனத்தனமான காதல்
---------------------------------
16. தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் சிலரிடம் மட்டுமே உண்டு, அதை திருத்திக்கொள்ளும் மனோ பக்குவம் மிகச்சிலரிடம் மட்டுமே உண்டு
---------------------------------
17. குற்றம் நடந்தது என்ன? என்று நட்பு வட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தால் நம் மனநிம்மதி,நேரம் இழப்பதைத்தவிர பெரிதாக ஏதும் நடக்காது
--------------------------------
18. கனகாம்பரப்பூக்களை மட்டுமே நான் உன் கூந்தலில் சூடுவேன், உள்ளதில் மிக லேசான பூ அதுவே! # ஒரு முழமே 5 ரூபாதான் - சிக்கன சிகாமணி
-----------------------------
19. அடுத்த ஜென்மத்திலாவது நாம் ஒன்று சேர்வோம் என்றாய்!ஆறுதலாய்,போன பிறவியிலும் இப்படி சொல்லி ஏமாற்றி இருப்பாயோ?
------------------
20. உன்னை சந்திக்கும் முன் எனக்கு விக்கல் வந்ததில்லை! சந்தித்த பின் விக்கல் வராத நாளே இல்லை!
----------------------------------------
21. தன்னைவிட மிகக்குறைந்த வயதுள்ள பெண்ணை திருமணம் செய்தபெரியாரை எதிர்த்த அண்ணா ஏனோ எம்ஜிஆரை, கலைஞரை கண்டிக்கவும்,கண்டுக்கவும் இல்லை #Periyar
--------------------------------------
22. கறந்த பாலின் தூய்மையுடன் உன் மனசு! பிறந்த மழலையின் பொலிவுடன் உன் காதல்!
-------------------------------------
23. வேண்டும் என்றே நீ என்னைப்பிரிந்தாய்! நான் வேண்டாம் என்றே விலகிச்சென்றாய்!
------------------------------------
24. நம் இருவர் கண்களும் முதன் முதலில் சந்தித்தபோது என் உள்ளுணர்வு ஏதும் சொல்லவில்லை!ஏன் எனில் என் உணர்வுகள் ஏதும் அப்போது வேலையே செய்யவில்லை
---------------------------
25. காங்., தனித்து போட்டி: திமுக., வெளியேற்றவில்லை: தங்கபாலு # முதல் இரவில் சண்டை ஏதும் இல்லை, திண்ணையில் தான் நல்லா காத்து வருது!!
--------------------------------------

