Tuesday, August 02, 2011

கழுவற மீன்ல நழுவற மீனா ஃபிகர் இருந்தா நாம என்னா செய்யனும்?

Colorful Cauliflowers
1. எப்போ பார்த்தாலும் எனக்கு ஐஸ் வெச்சு பேசறீங்களே?ஏன்?


EYES உன் மேல் இருக்கையில்  ICE என் வார்த்தைகளில் இருப்பதில் வியப்பென்ன? # காதல் கடலை





--------------------------------------


2. ”ஏதோ கோபத்துல பேசிட்டேன்,எதையும் மனசுல வெச்சுக்காதீங்க”

“உன் அன்பைத்தவிர வேறெதுவும் என் மனசில் தங்குவதில்லை” # காதல் கடலை.




-------------------------------------

3.  உன் கூந்தல் இழைகள் இவ்வளவு சூடாக இருக்கக்காரணம் என் சமீபமா? இல்ல. உன் வீட்ல இருந்து கிளம்பறப்பவே கூந்தலை அயர்ன் பண்ணிட்டு வந்துட்டியா?

--------------------------

4. சர்வ சாதாரணமாக அடையாளம் காணப்படுகிறது பல பெண்களின் அநாவசிய அலட்டல்கள்,ஆனால் அனைத்து ஆண்களாலும் ரசிக்கப்படும் திகட்டல்கள்

----------------------


5. கூடல் முடிந்தும் கூடவே அணைத்தபடி படுத்திருந்தால் அவன் அன்பானவன்,அந்தப்பக்கம் திரும்பிப்படுத்தால் ஆணானவன்,ஆணவமானவன்

------------------
 Photo




6. ”பேசிப்பேசியே என்னை மடக்கி விட்டீர்கள்”

“ பேசா மடந்தையாயிருந்த என்னை மடக்கி பேச வைத்ததே நீ தானே?” # காதல் கடலை

-----------------------


7. நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க  அதன் அழுத்தமும் அதிகரிப்பது போல நீ என்னை விட்டு தொலை தூரம் செல்ல செல்ல என் நேசமும் அதிகரிக்கும்

--------------------------


8. எங்கள் இருவரில் யார் உசத்தி? என விஷத்தீ பரப்பும் கேள்வியை 2 சிநேகிதிகள் கேட்கையில் நிசத்தினை சொல்ல அகத்திணை தடுக்குது

-------------------------


9. மொய்க்கு மொய் வைப்பது தமிழனின் பாரம்பரியம்,நான் உன் மீது ஏராளமான அன்பை செலுத்தி விட்டேன், இனி உன் முறை


---------------------------------


10. ”நீ ஒரு மச்சக்கன்னி”

“அழகிலா?”

“ ம்ஹூம், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கழுவற மீன்ல நழுவற மீனா இருப்பதால்”

----------------------------

Photo



11. டியர்,எனக்கு கண்கள், உதடுகள் 2ம் ரொம்ப சின்னது.பிடிச்சிருக்கா?

“அப்படி சொல்ல உனக்கு உரிமை இல்லை,அவை முழுக்க  என்னுது,இன்னும்  என் மனசுக்குள்  மின்னுது

--------------------

12. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் இனி சத்தியம் செய்ய மாட்டேன். இது உன் மேல சத்தியம்

-----------------------------


13. எந்த பக்க விளைவும் இல்லாத உலகின் மிகச்சிறந்த மருந்து புன்னகைத்த முகம்

-------------------


14. சில சமயம் சிரிப்பாள்,பல சமயம் சீறுவாள்,மல்டிபிள் பர்சனாலிட்டி உண்டு அவளுக்கு,அதனாலேயே அந்நியள் ஆனாள்

-------------------------


15. ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை...கைது!: நில மோசடியில் அடுத்த திருப்பம் #அவர் ஏதாவது சைடுல யாரையாவது கணக்கு பண்ணீட்டாரா?

------------------------
 Hoverpath



16. என் வளர்ச்சியை பொறுக்க முடியாதவங்க என்னைப் பற்றி  தப்பான செய்தியை பரப்புகிறார்கள் -  திவ்யா ஸ்பந்தனா#பெரிய வளர்ச்சி ஒண்ணும் தட்டுப்படலையே மேடம்?

------------------


17. ஆத்தூர் அருகே கணவன் சாவு: மனைவி தற்கொலை முயற்சி #இந்த முயற்சியை முதல்லியே ஒழுங்கா செஞ்சிருந்தா அண்ணன் தப்பி இருப்பாரு!

--------------------------


18. பரத்துக்கு மார்க்கெட் இல்லை- சிம்பு  #நல்ல வேளை, நயன் தாரா மார்க்கட்டு சரிஞ்சிடுச்சுன்னு பிரபு தேவாவுக்கு தந்தி அடிக்காம விட்டீங்களே!

---------------------------


19. தி.மு.க., பொதுக்குழுவில் ஸ்டாலின் கை ஓங்கியது #ஆமா, அழகிரியின் முகம் கோபத்தில் வீங்கியது,அவரது வாகனம் மதுரையில் தேங்கியது

-------------------


20. குஷ்பூ கைது# அவரை கைது பண்ணி கூட்டிட்டு போனப்ப பேக் டிராப்ல போவோமா ஊர்கோலம்,ஜெயிலோரம் எங்கெங்கும் பாட்டு போட்டாங்களா?

---------------


21.ஊர்ல 10 தடவை 15 தடவை ஜெயிலுக்குப்போனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான், ஒரே ஒரு தடவை நான் ஜெயிலுக்குப்போயிட்டு பட்ட அவஸ்தை இருக்கே!- குஷ்பூ

-------------------------


22. பச்சோந்தியின் கண்கள் பார்க்கும் தன்மையை இழந்து விட்டால் அதன் நிறம் மாறும் தன்மையும் மறைந்து விடுவது போல உன் நேசத்தை சார்ந்து என் கவிதைகள் தடம் மாறுகின்றன.

---------------------


23.. ஆஃபீஸ் கான்ஃப்ரன்ஸ் ஹால் நோட்டீஸ் போர்டில் “ KEEP YOUR CELL PHONE IN MANMOHAN SINGH MODE"

---------------------

24. என்னதான் கற்பனை என்றாலும் விறகு வெட்டி கதையில் ஒன்றிற்கு 3 கோடாலிகளாக தந்து மரம் வெட்ட ஊக்குவித்தவள் எப்படி தேவதையாக இருக்க முடியும்?

--------------------

25. யுவர் ஆனர், என் காதலி என்னை பழி வாங்கும் நடவடிக்கைல ஈடுபட்டிருக்கா.

எப்படி?

மேரேஜ் பண்ணிக்க சொல்றா.#DMK  லவ்வர்




------------------------------



39 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் மீன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்ப பார்த்தாலும் ஐஸ் வச்சா குளிர் ஜுரம் வந்திருமே?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கோபத்துல பேசிட்டேன் மனசுல வச்சுக்காத>>>>>

சி பி அவர்களே மனசு எங்கே இருக்கு? விளக்கம் தர முடியுமா?

கோவை நேரம் said...

வணக்கமுங்க ...

வைகை said...

திவ்யாவோட வளர்ச்சி உங்களுக்கு எப்பிடியா தட்டுப்படும்? பார்க்கமுடிஞ்சதே பெரிய விஷயம்?

வைகை said...

சிம்பு ஏன் பிரபுதேவாவுக்கு தந்தி அடிக்கணும்? அவருக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும் :))

வைகை said...

குஷ்பூ கைது - இதுக்குதான் கம்பி வச்ச ஜாக்கெட் எல்லாம் போடக்கூடாதுன்னு சொல்றது :))

Anonymous said...

பெரிய வளர்ச்சி;-)))))))))))))))))

வைகை said...

குஷ்பூ கைது - இதுக்குதான் கம்பி வச்ச ஜாக்கெட் எல்லாம் போடக்கூடாதுன்னு சொல்றது :))

வைகை said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
பெரிய வளர்ச்சி;-)))))))))))))))))//


இது யாருக்கு? சிபியதானே சொன்னீங்க?

கவி அழகன் said...

சுவைதரும் பதிவு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்று செய்திகள் (!?!) எல்லாமே ரசிக்கும் படி இருந்தது.
மன்மோகன் சிங் மோட் நச்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கூடல் முடிந்த பின் தான் ஆணின் உண்மையான மனது வெளிப்படுகிறது என்ற எனது எண்ணத்தை பிரதிபலித்தது ஐந்து
ரசிக்க வைத்தது ஒன்பது
புரிந்து கொண்டால் எத்தனையோ சாதிக்கலாம் பதிமூன்று
சேட்டை பதினேழு
புத்திசாலித்தனம் இருபத்திநாலு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

படங்கள் தேர்வு செய்வதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை .
இன்று எனது ரசிப்பின் பிரதிபலிப்பு தான் மூன்று பின்னூட்டங்கள்

Anonymous said...

Too much...:) வழக்கம் போல் கலக்கல்...படங்களும் அருமை...
அசத்துங்க சி பி

vetha (kovaikkavi) said...

மசாலா மிக்ஸ் ஆக இருக்கிறதே!..அத்துடன் நிறைய விடயங்களும். நன்றி.
Vetha. Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

இந்திரா said...

படங்களின் தேர்வுகள் அருமை.
குறிப்பாக கடைசிக்கு முந்தின படம் கலக்கல்.
புரிந்துகொள்ளத்தான் சற்று நேரமானது.

சசிகுமார் said...

ஹா ஹா செம காமடி போங்க கமென்ட் -17 ஓட்டு 4 யாராவது ஓட்டு போடுங்கப்பா. ஹீ ஹீ

'பரிவை' சே.குமார் said...

வழக்கம் போல் கலக்கல்.
படங்களும் அருமை...

செங்கோவி said...

நல்லாயிருக்கே இது!

Unknown said...

நல்ல பதிவு! படமும் பிரமாதம்
சொல்லப்பட்ட செய்திகளும்
நகைச் சுவையே
நன்றி!
நம்ம பக்கம் வரக்கூடாதா ....!

புலவர் சா இராமாநுசம்

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா சூப்பரா இருக்குடா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய், புலவர் வருத்தபடகூடாது, போ போயி என்னான்னு கேளு....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் மூதேவி, தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நாந்தேன்....

உணவு உலகம் said...

கலக்கல் சிபி.

Mohamed Faaique said...

தூரப் போனா அன்பு அதிகரிச்சா, பக்கதுல இருக்கும் போது அதிகரிக்குதில்லையா`னு கேப்பாங்களே!! அதுக்கு என்ன பதில் சொல்ரது?????

Napoo Sounthar said...

சூப்பர்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

20 க்கு பொருத்தமான பாட்டு தான். படித்ததும் சிரித்து விட்டேன்.

ராஜி said...

உன் கூந்தல் இழைகள் இவ்வளவு சூடாக இருக்கக்காரணம் என் சமீபமா? இல்ல. உன் வீட்ல இருந்து கிளம்பறப்பவே கூந்தலை அயர்ன் பண்ணிட்டு வந்துட்டியா?
எப்பிடிங்க சிபி சார் இப்படியெல்லாம் யோசிக்குறீங்க.?

ராஜி said...

நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அழுத்தமும் அதிகரிப்பது போல நீ என்னை விட்டு தொலை தூரம் செல்ல செல்ல என் நேசமும் அதிகரிக்கும்
>>>>>
ஓஓஓஓஓஓஒ அப்பிடிங்களா? புரிஞ்சுடுச்சி சிபி சார்

ராஜி said...

”நீ ஒரு மச்சக்கன்னி”

“அழகிலா?”

“ ம்ஹூம், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கழுவற மீன்ல நழுவற மீனா இருப்பதால்”
>>>>
அப்போ அவங்க அழகில்லைனு சொல்ல வர்றீங்களா?

ராஜி said...

. என்னதான் கற்பனை என்றாலும் விறகு வெட்டி கதையில் ஒன்றிற்கு 3 கோடாலிகளாக தந்து மரம் வெட்ட ஊக்குவித்தவள் எப்படி தேவதையாக இருக்க முடியும்?
>>
கிஸ்ஸாளஜி, ஜொள்ளாலகிக்கு இடையில், சமூக சிந்தனையுள்ள ட்வீட்டுக்கு வாழ்த்துக்கள் சிபி சார்

நிரூபன் said...

கழுவற மீன்ல நழுவற மீனா ஃபிகர் இருந்தா நாம என்னா செய்யனும்?//

நைசா, எஸ் ஆகிடனும், அதனைப் பின் தொடருவது வேஸ்ட் என்று உணர்ந்து ரூட்டை மாத்தனும்,

நிரூபன் said...

”ஏதோ கோபத்துல பேசிட்டேன்,எதையும் மனசுல வெச்சுக்காதீங்க”

“உன் அன்பைத்தவிர வேறெதுவும் என் மனசில் தங்குவதில்லை” # காதல் கடலை.//

அவ்....இந்த ரூட்டிலை போனால்...மனைவியிடம் இருந்து தப்பிக்கலாமா.
நாங்க சின்னப் பசங்க பாஸ்.

நிரூபன் said...

கூடல் முடிந்தும் கூடவே அணைத்தபடி படுத்திருந்தால் அவன் அன்பானவன்,அந்தப்பக்கம் திரும்பிப்படுத்தால் ஆணானவன்,ஆணவமானவன//

தத்துவம், கல்லகல் பாஸ்,.

நிரூபன் said...

”பேசிப்பேசியே என்னை மடக்கி விட்டீர்கள்”

“ பேசா மடந்தையாயிருந்த என்னை மடக்கி பேச வைத்ததே நீ தானே?” # காதல் கடலை//

ஆகா...காலேஜ்ஜ் படிக்கும் போது, உங்களுக்கு நிறையப் பிகருங்க செட் ஆகியிருக்குமே பாஸ்.

நிரூபன் said...

13. எந்த பக்க விளைவும் இல்லாத உலகின் மிகச்சிறந்த மருந்து புன்னகைத்த முகம//

இது சூப்பர் பாஸ்,.

நிரூபன் said...

வழமை போலவே எல்லாமே அசத்தல் பாஸ்.

Unknown said...

இந்த பதிவில் நிறைய இடங்களில் உங்கள் குசும்பு நல்லா சிரிக்க வைத்தது.