Tuesday, August 16, 2011

கேரளா ஃபிகரை லவ் பண்றதால இன்னா பிரச்சனைன்னா........

Green Pepper Reaction
1.உன் கண்ணுக்கு பாஸிட்டிவ் பார்வை இருந்தால்  நீ உலகை நேசிப்பாய், உன் நாக்குக்கு பாஸிட்டிவ் பார்வை இருந்தால் உலகம் உன்னை நேசிக்கும்

---------------------------

2. மக்கள் ஏன் சந்தோஷமா இல்லை? தெரியுமா? மத்தவங்க எல்லாம் எப்படி சந்தோஷமா இருக்காங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்கறதாலதான்


----------------------------

3. கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் மனிதனுக்கு பொராடும் எண்ணமே வந்திருக்காது

----------------------------

4. நம்மோட டெம்ப்ரவர் லைஃப்ல எல்லாமே பர்மணண்ட்டா இருக்கனும்னு நினைக்கறமே இதைத்தான் கேனத்தன்ம்னு சொல்வாங்க

-----------------------

5. யாருக்காக சிரிக்கிறோமோ  அவரை எளிதில் மறந்து விடலாம், ஆனால் யாருக்காக அழுகிறோமோ அவரை வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது

----------------------


Eye Drop Photography

6.  சத்யராஜ் - நான் எவ்வளவோ கேர்ஃபுல்லா இருந்தும் என் காதலி என்னை விட்டு ஓடிட்டா.


சந்தானம் - CAREFULL லா இருந்தா மட்டும் போதாது,தலைல HAIRFULL லாவும் இருக்கனும்

-----------------------

7. விஜயகாந்த் மகன் படத்தில் காமெடியன் யார்? புது குழப்பம்!!  # இதுல குழம்ப என்ன இருக்கு?விஜய்காந்த்தே செம காமெடியன் தானே?

---------------------

8. வீட்டுக்குள்ள வரும்போது வலதுகாலை எடுத்துவெச்சு உள்ளே வாங்கறாங்களே? ஏணில ஏறும்போது எந்த காலை வெச்சுஏறுனாலும் முன்னேற்றத்தைநோக்கித்தானே?

------------------------

9. அவள் கொலுசு ஜல் ஜல் என்றது, என் மனசு அவளை நோக்கி செல் செல் என்றது,ஆனா என்ன கொடுமைன்னா அவ வீட்டு நாய் வள் வள் என்றது

------------------------

10. உன்னை எப்பவும் பார்த்துட்டே இருக்கனும்னு கடவுள்ட்டே வரம் கேட்டேன்,கடவுள் கேட்டாரு - ஏன் உங்க வீட்டுல டிஸ்கவரி சேனல் எடுக்காதா?

-------------------------

Graffiti Artist

11. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபுதேவாவுக்கு உதவி செய்த நயன்தாரா!  # இதெல்லாம் ஒரு நியூஸா? வெட்டிங்க் ஸ்பாட்ல என்னநடந்தது?ன்னு ரிப்போர்ட்குடுங்க

-------------------------------

12. ஏப்ரல், மே மாச கேப்ல டீச்சர் ஸ்டூடண்ட்க்கு  SMS அனுப்புனாரு - ஐ மிஸ் யூ , அதுக்கு ஸ்டூடண்ட் ரிப்ளை அனுப்பினான் - ஐ ஸ்டூடண்ட் யூ

-------------------------

13. ஜீவா ரசிகர்கள் கோ தானம்!  # நல்ல வேளை ,ஜீவா காதலிங்கற டைட்டில்ல படம் பண்ணலை!!!

--------------------------

14. காதலின் ரகசியமே காதலியிடம் முட்டாள் தனமாக நடந்து கொள்வதுதான், உன் டேலண்ட்டை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு லவ் பண்ணு

--------------------------

15. நினைவுகள் என்பது கடல் அலை போல,  அருகில் வரும்போது விலகத்தோன்றும், தொலைவில் இருக்கும்போது ரசிக்கத்தோன்றும்

------------------------


 



16. நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது, உன்னை விரும்பும் உயிருக்கு உன்னைத்தவிர வேறொன்றும் ஒரு பொருட்டாய் தெரியாது

---------------------

17. சன் டிவிக்கு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் எச்சரிக்கை # பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு நலமும் விசாரிக்கும்,வார்னிங்கும் குடுக்கும் போல

--------------------------

18.மச்சி, காலேஜ் ;லைஃப் முடிஞ்சதும் நீ என்னை மறந்துடுவியா? என்ன மாம்ஸ்? நான் என்ன உன் காதலியா? டக்னு மறக்க? # நண்பேண்டா

--------------------------
19. சாப்பிட்டியா?  நல்லாருக்கியா?ன்னு சில சமயம் கேட்காமல் இருந்திருக்கலாம். உன்னை நேசிக்கலைன்னு அர்த்தம் இல்லை, நானும்உன்னைமாதிரிசோம்பேறி

---------------------

20. எதுக்கெடுத்தாலும் சாரி சொல்ல நினைச்சா வெற்றியை மறந்துடு, வெற்றி பெற விரும்பினால் சாரி கேட்கும்படி நடந்துக்காதே

--------------------------




21. உன்னை வெறுக்க யாராலும் முடியாது, உனக்கு நேசிக்கத்தெரிந்திருந்தால்

---------------------

22. பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் மதுரை வாலிபர் # உயிரோட இருந்தப்போ அந்த பொண்ணு கழுத்தறுத்திருக்கும், தானிக்கு தீனி 

--------------------

23. நீ உன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால், நீ நல்லவன் என யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது

---------------------

24. அவ பார்வைக்கு அர்த்தம் தெரிஞ்ச  எனக்கு அவ பேசுன வார்த்தைக்கு அர்த்தம் தெரில , கேரளா ஃபிகர், மலையாளத்துலயே பேசறா!!

-------------------------

25. இருள் என்பதால் கருவறையை வெறுத்தவரும் இல்லை, நிம்மதி என்பதால் கல்லறையை விரும்பியவரும் இல்லை

---------------------------

Flamingos run through shallow water before taking flight in the muddy wetlands of the Yucatán Peninsula, along the coast of the Gulf of Mexico.
mexico-flamingos_6839_600x450.jpg
26.எச்.ஐ.வி., பாதிப்பு இந்தியா 10-வது இடம் #நாங்க ஆட்சிக்கு வந்தா இந்தியா அதுல நெம்பர் ஒன் ப்ளேஸ் பிடிக்கும்னு யாரும் கூவாம இருந்தா சரிதான்

------------------------------

27. ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: இன்ஸ்பெக்டர் கைது #பதவிக்கு ஏத்த மாதிரி லஞ்ச நிர்ணயத்தை ஹைக் பண்ணுங்கய்யா.. விலை வாசி எல்லாம் எம்புட்டு ஏறிக்கிடக்கு

----------------------------



28. யோகா குரு ராம்தேவ்விடம் மத்திய அமைச்சர்கள் கெஞ்சல்: ஊழல் எதிர்ப்பு போரை கைவிட வலியுறுத்தல் #அப்பவும் ஊழலை விட்டுத்தள்ள யாருக்கும் நோஐடியா

----------------------

29. .விளாத்திகுளம் ஆம்னி பஸ்சில் நகை திருட்டு#செயின் திருடர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை,அவர்கள் ஆந்திரா போய்ட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே?

-------------------------

30.எங்களை குறை கூறியவர்கள் இப்போது பாராட்டுகின்றனர்: கருணாநிதி வேதனை#இந்தத்தமிழனுங்களே இப்படித்தான் தலைவரே,எதையும் முழுசா செய்ய மாட்டாங்க

--------------------------

amazing..........
eagle%201.jpg

31. மருத்துவமனையில் கணவர் இறப்பை நம்பாத மனைவி#பேச்சு மூச்சே இல்லாம தானே இருக்காருன்னு சொன்னதுக்கு என் எதிரே அவர் எப்போ பேசி இருக்காரு? மூச்.

-------------------------

32  இலவச கிரைண்டர்  திட்டத்துக்கான கிரைண்டர்களை கோவை உற்பத்தியாளர்களிடமிருந்தே பெற வேண்டும்#2016ல கோவையில் போயஸ் பாவை ஊழல் நியூஸ் கன்ஃபர்ம்

---------------------------

33 .தன் நட்பு வட்டாரத்தை திருமணத்துக்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே முடிகிறது#பச்சோந்திப்பாவைகள்

---------------------------

34. பெரும்பாலான சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில்,பேச்சில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்#தாய்மைப்பண்பு


---------------------------

35. பெண்கள் புகை பிடிக்கக்கூடாது-நடிகை சமீரா ரெட்டி அட்வைஸ்#நடிகைகள் அட்வைஸ் செய்யக்கூடாது-ஆணாதிக்கவாதிகள் அறிவிப்பு

---------------------------------

Whale & Penguins
whalesssss.jpg

 

46 comments:

முத்தரசு said...

படிக்கிறேன் பின் வருகிறேன்

Anonymous said...

1 மற்றும் 4 சூப்பர்
12 நல்லா யோசிக்கறாங்கப்பா
25 செம..
9 ம்ம்... ஒகே...

தமிழ்க்காதலன் said...

கவர்ச்சியான தலைப்புக்கு பின்னால் அறிவைத் தூண்டும் அற்புதம் நிகழ்த்துகிறீர். பாராட்டுகள்.

நல்ல விடயங்கள் பல இங்கே நிறையக் கிடக்கின்றன. வாரி இறைத்தமைக்கு என் நன்றி.

தொடர்ந்து தமிழர்களை சரியாகப் புரிந்து நல்லப் பதிவுகள் தாருங்கள் தோழமையே...

Mohammed Arafath @ AAA said...

உண்மையானது .எனக்கு தெரிந்து எந்த ஆண் நண்பனும் சாப்பிட்டாயா என்று கேட்க மாட்டான்.ஏனா சாப்பாடு வங்கிகோடு ன்னு சொல்லிடுவான் ல ஹஹா ...

T-Mart India said...
This comment has been removed by the author.
Unknown said...

super super super

RAMA RAVI (RAMVI) said...

//கஷ்டங்கள் இல்லைன்னா மனிதனுக்கு போராடும் எண்ணமே வந்திருக்காது.//நன்னாயிருக்கு.

படங்கள் அழகா இருக்கு.

“ஃப்லெமிங்கோ” வ அந்த கலர்ல பார்த்ததில்லை. ரொம்ப நல்லா இருக்கு.

Mohamed Faaique said...

எல்லாமே நல்லா இருக்கு.. 25வது ராக்ஸ்

Anonymous said...

எதுக்கு பச்ச மிளகாய்,பூனை படமெல்லாம்..?

சசிகுமார் said...

படங்கள் = ரசிக்க மட்டும்

நாய் நக்ஸ் said...

படங்கள் சூப்பர்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் என் பிந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

என் நெட்டுக்கு சூனியம் வைச்சிட்டாங்க.
அதான் எல்லோர் வலைக்கும் வரமுடியலை. இப்போ ஒரு ப்ளாக் ஓப்பின் பண்ணவே மூனு நிமிசம் எடுக்கிறது.

மன்னிக்கவும்,

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா தலைப்புல என்னை எதுக்குடா வாரி இருக்கே ராஸ்கல், பிச்சிபுடுவேன் பிச்சி....

நிரூபன் said...

Capsicum ஐ ரெண்டாக வெட்டிப் போட்டு...
பாஸ்
பாஸிடிவ் பார்வை, பற்றி வெளங்கப்படுத்துறாரே))))))))))))));

நிரூபன் said...

@
MANO நாஞ்சில் மனோ said...
டேய் அண்ணா தலைப்புல என்னை எதுக்குடா வாரி இருக்கே ராஸ்கல், பிச்சிபுடுவேன் பிச்சி....//

நீங்க தான் பாம்பே பிகருங்களை லுக்கு வுடுறதா பேசிக்குறாங்க., இப்போ இது வேறையா;-))))))))))))))))))))))))

நிரூபன் said...

கருணாநிதி வேதனை..................
அவ்,,,

தாங்க முடியலையே...இந்த.......தொல்லை.

Unknown said...

வேட்டை சூப்பர் அண்ணா

உணவு உலகம் said...

எல்லாமே சிபி ராக்ஸ்.

சி.கிருபா கரன் said...

10 மிக அருமை அண்ணா

சி.கிருபா கரன் said...

டேய் அண்ணா கனிமொழி பற்றி எழுதி ரொம்ப நாள் அச்சி, எதாவது பார்த்து பண்ணுங்க ...........

செங்கோவி said...

Good ...

சி.கிருபா கரன் said...

அண்ணா நீங்க எந்த (கில்மா) கம்பெனில வேல செய்றிங்க

(நீ வேல செய்றிய, டோவ்ட்டு)

rajamelaiyur said...

Super . . . Super . .

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு..

கவி அழகன் said...

சூப்பர்....

Nirosh said...

annaa... vipachchaara kozhi idda muddai thappakuma...?

'super anna vaazhthukkal'

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்க கலக்குங்க தல...

Unknown said...

hehe!

போளூர் தயாநிதி said...

//கஷ்டங்கள் இல்லைன்னா மனிதனுக்கு போராடும் எண்ணமே வந்திருக்காது.//அருமை

Kumaran S said...

ka ka ka po.

கூடல் பாலா said...

போராட்டக் களத்தில் பிசி அப்புறமா வாரேன்.......

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

படங்கள் அருமை .

அம்பாளடியாள் said...

அருமையான நகைச்சுவைப் பகிர்வு .மிக்க
நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .......

Amudhavan said...

22-வது கமெண்ட்//பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் வாலிபர்-உயிரோடு இருந்தப்போ அந்தப்பொண்ணு கழுத்தறுத்திருக்கும்-தானிக்கு தீனி// ஏன் சிபி இந்த விஷயத்தை எல்லாம்கூட கிண்டலடிக்கத்தோன்றுகிறதா உங்களுக்கு? ஒரு பரிதாபம் பச்சாத்தாபம் தோன்றுகிற விஷயங்கள் என்று எதுவுமே இல்லையா? இதிலெல்லாமா வார்த்தை விளையாட்டு?

ராஜி said...

எதுக்கெடுத்தாலும் சாரி சொல்ல நினைச்சா வெற்றியை மறந்துடு, வெற்றி பெற விரும்பினால் சாரி கேட்கும்படி நடந்துக்காதே

ரைட்டு

ராஜி said...

----------------------
19. சாப்பிட்டியா? நல்லாருக்கியா?ன்னு சில சமயம் கேட்காமல் இருந்திருக்கலாம். உன்னை நேசிக்கலைன்னு அர்த்தம் இல்லை, நானும்உன்னைமாதிரிசோம்பேறி

தினமும் நாலு பதிவு, வாரத்துல மூணு சினிமா, ட்விட்டர்னு போட மட்டும் முடியுது, சாப்பிட்டியானு கேட்க மட்டும் உங்களுக்கு முடியலையா சார்

ராஜி said...

மச்சி, காலேஜ் ;லைஃப் முடிஞ்சதும் நீ என்னை மறந்துடுவியா? என்ன மாம்ஸ்? நான் என்ன உன் காதலியா? டக்னு மறக்க? # நண்பேண்டா
சரக்கடிக்க துணைக்கு ஆள் வேணுமே!

ராஜி said...

நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது, உன்னை விரும்பும் உயிருக்கு உன்னைத்தவிர வேறொன்றும் ஒரு பொருட்டாய் தெரியாது
நிஜமான வரிகள்

ராஜி said...

ஏப்ரல், மே மாச கேப்ல டீச்சர் ஸ்டூடண்ட்க்கு SMS அனுப்புனாரு - ஐ மிஸ் யூ , அதுக்கு ஸ்டூடண்ட் ரிப்ளை அனுப்பினான் - ஐ ஸ்டூடண்ட் யூ
என்னமா மூளையை யூஸ் பண்ணியிருக்கு பயபுள்ளை

ராஜி said...

உன்னை எப்பவும் பார்த்துட்டே இருக்கனும்னு கடவுள்ட்டே வரம் கேட்டேன்,கடவுள் கேட்டாரு - ஏன் உங்க வீட்டுல டிஸ்கவரி சேனல் எடுக்காதா?
இந்த ட்விட்டை அவங்களுக்கு ரிடைரக்ட் செஞ்சு விடுறேன் இருங்க.
-------------------------

ராஜி said...

யாருக்காக சிரிக்கிறோமோ அவரை எளிதில் மறந்து விடலாம், ஆனால் யாருக்காக அழுகிறோமோ அவரை வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது
அடடா? அப்படியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு என்ன ஒரே தத்துவக்குத்தா இருக்கு?

ராஜ நடராஜன் said...

நீங்க துணுக்கு பதிவு போட்டா படிக்காமலும்,பின்னூட்டம் போடாமலும் ஓடி விடுவது எனது பழக்கம்.

இப்பவும் கூட தலைப்புக்கான துணுக்கு எதுவென்று தெரியாமலே இந்தப் பின்னூட்டம்:)

ஸ்ரீராம். said...

யாரால் அழுகிறோமோ, அவரையும்!
மற்ற எல்லாமே 'அட்ரா சக்க, அட்ரா சக்க'தான். சூப்பர்!
எல்லாப் படங்களும் அழகு.

Thangasivam said...

சூப்பரப்பு...............

Jaganathan Kandasamy said...

Good Pict's. oru ooooooooo podunga.........