Showing posts with label tweets. Show all posts
Showing posts with label tweets. Show all posts

Wednesday, January 23, 2013

ட்விட்டரில் ஃபேக் ஐ டி களை அடையாளம் காண்பது எப்படி?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLHiKn7kj9Nm7S9mTCItUOEMniDhaHMs2VpYC-Cqq3aJa6P38b7xJ3jk-TeyRyXUpIZ5GNBqaM3p-xLdwxwpNqIktPv3o5jdINQRpbJAaDL_e2-GK9SceVnaY1jPeC4Sr-DlcrltqDP4/s1600/Trisha3.jpg

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு . யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை? ன்னு , ஆனா அது இந்தக்காலத்துல செட் ஆகாது , ஏன்னா டோட்டல் தமிழ்நாடே பாதி நேரம் இருட்டுல தான் இருக்கு. ட்விட்டர்ல நாம பாட்டுக்கு வர்றோம், ட்வீட் போடறோம், பிளாக் லிங்க் ஷேர் பண்றோம் , போறோம், இதுல யார் ஒரிஜினல் , யார் ஃபேக்கா இருந்தா நமக்கென்ன? என இருப்போர் ஒரு வகை . இப்படி இருப்பதுதான் நமக்கு நல்லது. 


 ஆனா பாருங்க  எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க .ராதா பொண்ணுங்களையே எடுத்துக்குங்குங்க , கார்த்திகா ஒரு டைப் , துளசி இன்னொரு டைப் . அந்த மாதிரி ட்விட்டர்கள் பலர் ஃபேக் ஐடிங்கள் யார் அப்டினு ஆராய்ச்சி பண்ணிட்டே இருக்காங்க . 



எதுக்காக ஃபேக் ஐடி கள் உருவாகுது? அதாவது சில ட்வீட்டர்கள் ஃபிகர்ட்ட கடலை போடுவாங்க . அது பலருக்கு பிடிக்காது . அவங்களை காய விடுவதற்கும் , பழி வாங்குவதற்கும்  பெண் பெயரில்   ஒரு ஐ டி ஆரம்பிச்சு உசுப்பேத்தி விட வேண்டியது . அவருக்கு டைம் வேஸ்ட் ஆகும்  , இவர் தன் நண்பர்கள் எல்லார் கிட்டேயும்  “ நான் அவரை ஏமாத்திட்டேன், நல்லா ஏமாந்தான், வழிஞ்சான் “ அப்டினு பெருமை பேசிக்குவாங்க . இதுக்குத்தான் பெரும்பாலான ஃபேக் ஐ டிகள் உருவாகுது. 


 அப்புறம் 2 ட்வீட்டர்களுக்குள் ஏதோ சண்டை . பரஸ்பரம் பிளாக் பண்ணிக்கறாங்க . அதனால  பூட்டு போட்டிருப்பாங்க. ஆனா பரஸ்பரம் ஒருவர் ட்வீட்டை இன்னொருவர் படிக்க முடியாது . ஆனா படிக்கனும். இதுக்கு என்ன வழி? வேற ஒரு ஃபேக் ஐ டி மூலம் அவரை ஃபாலோ பண்ணி ஃபாலோ பண்ண வெச்சா அது சாத்தியம் 


 99 % ஃபேக் ஐ டி கள் ஆண்கள் தான். ஏன்னா பொண்ணுங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். அவங்க இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யறதில்லை . 



 ஓக்கே கமிங் டூ த மேட்டர்.. ஃபேக் ஐ டிகளை கண்டு பிடிப்பது எப்படி ? 


 கம்ப்யூட்டர் புலியா இருந்தா  அவங்க ட்விட்டர் ஹேண்டில் வெச்சு லொக்கேஷன் கண்டு பிடிக்கலாம் .  அது போக டெக்னிக்கலா பல வழிகள் இருக்கு . இந்த பதிவு வந்தே மாதரம் சசி மாதிரி டெக்னிக் ஆளுங்க தான் எழுதனும். நாம என்ன பண்ணலாம்? சராசரி ட்வீட்டர் ஒரு ஃபேக் ஐ டியை கண்டறிய சில குறுக்கு வழிகள் ஃபாலோ பண்ணலாம் . தமிழனுக்கு குறுக்கு வழின்னா அல்வா சாப்பிடுவது மாதிரி .. 



1. முதல்ல நீண்ட நாட்கள் ட்விட்டர்ல இருக்கும் பெண் ஐ டிகள் 10 பேரை ஃபாலோ பண்ணி  ஃபிரண்ட்ஷிப் பிடிச்சுக்குங்க . பெங்களூர் , கோவை , மதுரை ,இங்கே தான் அப்படிப்பட்ட ட்வீட்டர்ஸ் இருக்காங்க . உங்களுக்கு டவுட்டா இருக்கும் ஹேண்டில் பற்றி அவங்க கிட்டே சொல்லி விசாரிக்க சொல்லுங்க . இப்போ பல பெண் ட்வீட்டர்கள் தங்கள் ஃபோன் நெம்பரை ஆண் ட்வீட்டர்களிடம் பாதுகாப்பு கருதி தர மாட்டாங்க . ஆனா பெண்களிடம் சகஜமா  பேசுவாங்க . ஃபோன் நெம்பர் ஷேர் பண்ணிக்குவாங்க . 


உண்மையான பெண் ஐடிகளிடம் கூட தங்களை வெளிப்படுத்திக்க விரும்பலை , ஃபோன் நெம்பர் தர மாட்டேன் , பேச மாட்டேன் என சொல்லிட்டா 90 % அவங்க ஃபேக் ஐ டி தான் 



2. பிரபல ட்வீட்டர்களான  கட்ட துர , ரைட்டர் சி எஸ் கே இவங்க 2 பேரும் யார் கிட்டே அதிகமா பேசிட்டு இருக்காங்கன்னு பாருங்க . அவங்க கண்டிப்பா ஃபேக் ஐடியா இருக்காது . ஏன்னா கோலப்போட்டிங்கற பேர்ல கட்டதுர எல்லா பெண்  ஐ டிகளிடமும் ( எல்லா = பெரும்பாலான )  மெயில் ஐ டி வாங்குனதன் நோக்கமே வேற . ஒரிஜினலை ட்ரேஸ் அவுட் பண்ணத்தான். ராஜேஷ் மூலம் அவர் கண்டு பிடிச்சிருப்பாரு . அதனால கட்டதுரக்கு எல்லாம் தெரியும் 


 அதே போல் தான் ரைட்டரும். அவர் ஆத்ம நண்பர் சென்னைல  கம்புயூட்டர் புலி . அவருக்கு டவுட்டா இருக்கும் பெண் ஐ டிகளை அவரை விட்டு ட்ரேஸ் அவுட் பண்ணி எது ஃபேக் ஐ டி என கண்டு பிடிச்சுடுவார். அதனால இவங்க 2 பேரும் பேசும் ஐ டி கள் ஒரிஜினலாகத்தான் இருக்கும் 




3. நாம மொக்கை ட்வீட் போட்டாலே அபாரம் , சூப்பர் அப்டினு சம்பந்தமே இல்லாம பாராட்டுனா  அவங்க நிச்சயம் ஃபேக் ஐ டி தான் 


 4. கொச்சின் பார்ட்டி கனல் கிட்டே ஜாக்கிரதையா இருந்துக்குங்க . அவர் 8 ஐ டி வெச்சிருக்கார் .  ஒரே டைம்ல  8 ஐ டி கள் ல இருந்தும் ட்வீட் போடும் சாமார்த்தியம் உண்டு . அவரோட ஃபேக் ஐ டிகளை எப்படி கண்டுக்கறது? அவர் டைம் லைன்ல இருக்கும்போது பெரும்பாலும் அவங்க ( 8) இருக்காது 



5.  எந்த  புது ஐ டி யிடமும் நீங்களா போய் ஆஜர் ஆகி “ சாப்டாச்சா? காலை வணக்கம் , இன்னைக்கு என்ன குழம்பு? என முறை வாசல் வைக்காதீங்க. 


6. வலை பாயுதே , வலைப்பேச்சு  இந்த மாதிரி பத்திரிக்கைகளில்  ட்வீட்ஸ் ரெகுலராக வரும் ஐடிகள்  ஃபேக் ஐ டியா இருக்க வாய்ப்பு கம்மி . ஏன்னா  பொய்யான புனைப்பேர் ஃபேமஸ் ஆவதற்கு யாரும் விரும்ப மாட்டாங்க 



7. பொதுவா தமிழ் நாட்டில் வாழும் பெண்கள் நைட் டைம்ல 11 டூ 4 இந்த டைம்ல ரெகுலரா ட்விட்டர் வர மாட்டாங்க . கரண்ட் கட் ஆனா எப்பவாவது வரலாம் . அதே போல் ஃபாரீன் ட்வீட்டர்கள் கணக்கில்லை . உள்ளூர் பெண் ட்வீட்டர்கள் அந்த அன் டைம் ல அடிக்கடி வந்துட்டு இருந்தா அவங்க ஃபேக் ஐ டியா இருக்க வாய்ப்பு அதிகம்



8. அழகி சீரியல் ல க்ரேசி கோபால் நடிக்கறாரே, அவர் ட்விட்டர்ல இருக்கார் . இவர் பெண் குரலில் பிரமாதமாக மிமிக்ரி பண்ணுவார். அண்ணன் ஷூட்டிங்க் ஸ்பாட்ல அங்கே இருக்கும் ஃபிகரை கரெக்ட் பண்ண நம்மளை பகடைக்காயா யூஸ் பண்ணுவார் , அதாவது நமக்கு ஃபோன் போட்டு பெண் குரலில் ஏதோ ஒரு பேரை சொல்லி உங்க ஸ்கூல் மேட்டு எப்போ நம்ம அடுத்த மீட்டு? அப்டினு பிட்டைப்போடுவார், நாம பேசறதை ரெக்கார்டு பண்ணி அவங்க கிட்டே போட்டுக்காட்டி கலாய்ப்பார் . அவர் ஃபோன் நெம்பர் 90951***** இது போக  90951 ல   4 நெம்பர் இருக்கு ( நெம்பரே 4 இருக்கே? )


 இந்த மாதிரி பார்ட்டி கிட்டே நாம உஷாரா இருக்கனும், அறிமுகம் இல்லாத புது நெம்பர் ல திடீர்னு ஒரு பொண்ணு கூப்பிட்டு வழிஞ்சா  நயன் தாரா மேல சத்தியமா அது இந்த ஆள் தான் .;-) ஜாக்கிரதை  . வாரம் ஒரு டைம் அந்தாள் போடும் ட்வீட்டை ஒரு ஆர் டி போட்டு வெச்சுக்குவது நல்லது , எதுக்கு பெரிய மனுஷன் பொல்லாப்பு நமக்கு ?



9. கரூர் ஜெகன் தெரியும் . எல்லாருக்கும் ஆனந்த விகடனின் பர்மணண்ட் ட்வீட்டர் , ஆல் தோட்ட பூபதி என்னும் தோட்டா குங்குமம் பத்திரிக்கையின் ஆஸ்தான கட்டுரை  ஆசிரியர் இன்னும் இன்ன பிற பல திறமை உள்ளவர் . இவர் டைம் லைன் வந்தா தான் உண்டு தன் வேலை உண்டு தன் பி ஏ கொஞ்சம் குண்டு என  பொடுவாட்டம் ( அதாவது அமைதியா )  இருப்பார் . இவர் யார் கிட்டேயும் வம்பு வெச்சுக்க மாட்டார் .

 எப்பவாவது அறச்சீற்றத்தை காட்டினா அது சத்தியமா ஃபேக் ஐ டி தான் . இவர் யார் யார்  கிட்டே எல்லாம் ஃபைட் பண்றார்னு நோட் பண்ணிக்குங்க  . அவங்க எல்லாம் ஃபேக் ஐ டி தான்



10 . அடுத்து அண்ணன் கானாப்ரபா . இவர் சிட்னி டைம் ட்வீட்டர். நம்ம இந்திய நேரப்படி  அதிகாலை 3 மணீல இருந்து ட்வீட்டிட்டு இருப்பார் .  அண்ணன் செம விபரம் . இவர் யார் கூட எல்லாம் பேசிட்டு இருக்கார்னு நோட் பண்ணிக்குங்க . அவங்க எல்லாரும் ஒரிஜினல் ஐ டி தான்


11. ஃபேக் ஐ டிங்க பெரும்பாலும் லாங்க் லைஃப் இருக்காது . அவங்கவங்க யாரைப்பழி வாங்கனுமோ அந்த வேலைக்காக அவ்வப்போது  உருவாகின்றன அதனால புரோஃபைல் செக் பண்ணிக்குங்க . 4 வருஷம் , 2 வருஷமா அந்த அக்கவுண்ட் இருந்தா ஃபேக் ஐடியா இருக்காது . மீறி இருந்தா அவங்க டி எல் செக் பண்ணிப்பாருங்க , ட்வீட்ஸ் எல்லாம் படிச்சா தெரிஞ்சுடும்




12. பெண் ஐ டிகள் பெரும்பாலும் அவங்க ட்வீட்ல ஸ்மைலி  :) இப்படி சிக்கனமாத்தான் போடுவாங்க , ஆண்கள் தான் ;-))  ;-)) இப்படி போடுவாங்க
 அப்பறம் பெண்கள் ட்வீட்ல  எப்பவும் வெறும் ட்வீட் மட்டும் இருக்காது , ஏதாவது சிம்பல் இருக்கும் ! ? ;)   வெவ்வெவேவே , ம்க்கும் , கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்,  இப்படி ஏதாவது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் இருக்கும்


 13 . ஆண் ட்வீட்டர்கள் வந்தமா  , ட்வீட் போட்டமா? , போனமான்னு இருப்பாங்க . பொண்ணுங்க உள்ளே வரும்போதே விஜய் மாதிரி எண்ட்ரி பில்டப் குடுப்பாங்க .1.  உள்ளே வரலாமா?  2  என்ன நடக்குது ? 3  உள்ளே  4 -------------  வந்தாச்சு   5 காலை வணக்கம் , கையை வணக்கம் , புருஷனை நல்லா வணக்கும்  இப்படி ஏதாவது 1



14. ஆண் ட்வீட்டர்கள்னா  சமுதாய பிரச்சனைகள் , சினிமா செய்திகள் பற்றி தட்ஸ் தமிழ் , தினமலர் கட் நியூஸ்  2 லைன் போட்டு # ஒரு கமென்ட் போடுவாங்க , பொண்ணுங்கன்னா   இன்னைக்கு என்ன சமைச்சாங்க ? கோலம் போட்டது  இப்படி நாட்டுக்கு முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றி ட்வீட்ஸ் போடுவாங்க



15. ஒரிஜினல் ஐ டிங்க பெரும்பாலும்  அவங்க சொந்த ஃபோட்டோவை டி பியா வெச்சிருப்பாங்க . தங்கள் முகத்தை வெளிக்காட்ட விருப்பமில்லா ட்வீட்டர்களா இருந்தாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல அவங்களையும் அறியாம அவங்க ஃபோட்டோவை போட்டுடுவாங்க , நாம டக்னு அதை ஸ்டோர் பண்ணி  வெச்சுக்கனும் . உதாரணத்துக்கு  ஆனந்த விகடன் ல  வலைப்பூக்கள் அறிமுகம் ஒரு கட்டத்துல நடந்தது . அப்போ  பிளாக்கர் கம் ட்வீட்டர்கள் எல்லாம்  5 லட்சம் பிரதிகள்ல நம்ம ஃபோட்டோ வர்ற இது ஒரு வாய்ப்பு அப்டினு ஒரிஜினல் ஃபோட்டோ வெச்சு டக்னு அவங்க காரியம் முடிஞ்சதும் பழைய படி மாத்திக்கிட்டாங்க , அவங்க எல்லாம் ஒரிஜினல் தான்




 டிஸ்கி -  1 மேலே சொன்னதெல்லாம் ஒரு சமூகசேவை தான் . யார் மனமாவது புண்பட்டா மன்னிப்பு கேட்டுக்கறேன். தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு தான் அப்டினு  பஞ்ச் டயலாக் சொல்ல நான் ரமணா ரசிகன் இல்லை , தமனா ரசிகன் . மன்னிப்பு கேட்க த்தயங்க மாட்டேன் . அதுவும் இல்லாம ஈரோட்ல 5 ரூபாக்கு 10 மன்னிப்பு



டிஸ்கி 2 - அப்புறம்  மேலே நான் சொல்ல வந்தது ஃபேக் ஐ டி களைப்பற்றி , அதுல என்னையும் மீறி ஆணாதிக்கம் தென் பட்டிருந்தா அதுக்கும் ஒரு மன்னிப்பு ,இதை யாராவது நீக்கனும்னு வேண்டிக்கிட்டா  6 மணி நேரத்துல நீக்கிடுவேன் , ஏன்னா  இப்போ இருக்கும் ஆன் லைன் நிலவரப்படி ஒரு பதிவோட ஹிட் ஆயுள் 6 மணி நேரம் தான் ,  அதுக்கப்புறம் அந்தப்பதிவு இருந்தாலும் , இல்லாட்டாலும் 1 தான்  நாஞ்சில் சம்பத் மாதிரி வால்யூ இல்லாம போயிடும்


 
டிஸ்கி 3 - நாம சொல்ல வந்ததை  யாராவது படிச்சுட்டா நம்ம நோக்கம் நிறைவேறிடுது , அதுக்கப்புறம் அதை அழிச்சுட்டா ஒண்ணும் பிரச்சனை இல்லை, சில பேரு பதிவு அழிச்சுட்டா பயங்கர லாஸ் மாதிரி நினைக்கறாங்க , நாம என்ன தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதுன சரித்திரக்குறிப்புகளையா எழுதறோம்?



டிஸ்கி 4 - மேலே உள்ள கட்டுரைக்கும் த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்?  பெண்களை நான் மதிக்கிறேன் என்பதற்கான புரூஃப் அது, ஹி ஹி 

Saturday, December 08, 2012

Saturday, March 17, 2012

சிங்கள கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள், சேனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்

லகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி! 

நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்’ என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை.


வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வாணக் குவியலாய் லட்சக்கணக்கில் செத்து அழிந்தபோதும்கூட, 'ஒரு புகைப்படத்துக்காக கண்ணீர் வடித்த உலகச் சமூகம்’ அமைதியாகவே இருக்கிறது.


இலங்கையின் இனப்படுகொலை களுக்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் இருந்தும், 'தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று சாயம் பூசியதே தவிர, 'இது மனிதத்துக்கு எதிரான போர்’, 'தமிழர் களை அழிக்கும் போர்’ என்று சிறு முணுமுணுப்பும் எழவில்லை. ரசாயனக் குண்டுகளில் கருகிப் பொசுங்கி, பிய்த்து எறியப்பட்ட உடலையும் விடாமல் புணர்ந்து சிரித்து தமிழர்களைத் தின்று தீர்த்தது சிங்கள இனவெறி. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த இலங் கையின் இனப்படுகொலையும் ஈழத் தமிழர்கள் வெந்து துடித்து அனுபவித்த ரணங்களையும் சொற்களால் வர்ணித்துவிட முடியாது.


உயிர் கொடுத்த சேனல் 4 


இறுதிக்கட்டப் போரின் முடிவுக்குப் பிறகு, உலகச் சமூகத்துக்கு பொட்டில் அடித்தது போல், சேனல் 4 தொலைக்காட்சி சில காட்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. 'இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற காணொளியை வெளியிட்டது. இலங்கைக்கு எதிரான இந்தக் காணொளியைப் பார்த்து, இங்கிலாந்து நாடாளு மன்றம் தொடங்கி நார்வே, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் செனட் வரை அதிர்ந்தன. அந்தக் காணொளி திரையிடப்படாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகெங்கும் அதிர்ச்சியை உரு வாக்கியது. இப்போது நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு, பக்கபலமாக இருப்பது இந்தக் காணொளிக் காட்சிகள்தான். இப்போது மீண்டும், 'இலங்கையின் கொலைக்களங்கள் -  தண்டிக்கப்படாத குற்றங்கள்’ என்ற பெயரில் புதிய காணொளியை சேனல் 4 கடந்த புதன்கிழமை வெளியிட்டது!


அதிர வைத்த ஆவணப் படம்!
கடந்த மார்ச் 11 அன்று ஓர் ஆவணப் படம், மனித உரிமைத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைஅரசு பாதுகாப்பான பகுதி என்று அறிவித்த பகுதிகளில் இருந்த அப்பாவி மக்கள் மீது செல் குண்டு தாக்குதல்கள் நடத்தியது முதல், பெண் புலிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி இறந்த பிறகும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது வரை அதில் இரு ந்தது. இதையே சேனல் 4 வெளியிட்ட நேரத்தில், 'அது பொய்யானது, ஜோடிக்கப்பட்டது’ என்று, இலங்கை அரசு சொன்னது. ஆனால், இப்போது காட்டப்பட்ட ஆவணப் படத்தில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என் பதும்  தெளிவாக அடையாளம் காணும் அளவுக்கு இருக்கிறது.


பாதுகாப்பான வளையம் என்று சொல் லப்பட்ட பதுங்கு குழிகள், ஐ.நா. உதவியுடன் அப்பாவி மக்கள் பாதுகாப்புக்காக இலங்கை அரசால் அமைக்கப்பட்டன. அதன் மீதே குண்டுகள் வீசித் தாக்கியுள்ளார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த மக்களுக்கு உணவு தரப்படவில்லை. காயம்பட்ட வர்கள் மருந்து இல்லாமல் இறந்து போயிருக் கிறார்கள். புதுமாத்தளன் மருத்துவமனை மீது செல்குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த ஆவணப் படத்தில் இருக்கின்றன.


புதன்கிழமை காணொளி! 

'அய்யோ! இந்தப் பச்சப் பிள்ளையைக் காப்பாத்த முடியலையே’ என்ற மரணத்தை  விழி முன்னே நிறுத்தும் தாயின் கதறலின் ஊடே சேனல் 4 தொலைக் காட்சியின் புதிய காணொளி கடந்த புதன்கிழமை வெளியானது. சுமார் 53:12  நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளிக் காட்சிகளை கல்லம் மெக்ரே இயக்கி உள்ளார்.


''உலக நாடுகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டும், உலக சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. இத்தகைய தருணத்தில்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறோம்'' என்ற விளக்கத்துடன் தொடர்கிறார் ஜான் ஸ்னோ.


''சேனல் 4 வெளியிட்ட இலங்கைக் கொலைக் களங்கள் வீடியோவைப் பார்த்துவிட்டு என் 28 வயது மகன் கதறி அழுதான். இந்தக் கொடூரத்தைக் கண்டுவிட்டு நான் சிங்களன், இலங்கை பிரஜை என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது என்றான்'' என்று, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சொல்வது அடுத்து வருகிறது.


இங்கிலாந்து முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட், ''26 ஆண்டு காலமாகப் போராடிய விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி, பெருந்தொகையான மக்களை இரு சகோதரர்களான கோத்தபயவும் மகிந்தாவும் அழித்து உள்ளனர். அவர் கள் தயாரித்த நல்லிணக்க அறிக்கையில் இந்தக் கொடூரங்களுக்கு யார் காரணம் என்பதைக் கூற மறுத்து விட்டனர்'' என்று குற்றம் சாட்டுகிறார்.


கத்தினால் ராணுவம் சுடும்! 

2009 ஜனவரி 23 அன்று பொதுமக்களைக் காப்பதற்காக ஐ.நா. சார்பில் பதுங்கு குழிகள் அமைக் கப்பட்டன. 'பாதுகாப்பு வளையம்’ என்று இலங்கை அரசால் முதலில் சொல்லப்பட்ட உட்டியகட்டுப் பகுதி அருகே பீட்டர் மெக்கே என்ற ஐ.நா. பணியாளர் மேற்பார்வையில் இது அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் ஐ.நா-வின் பதுங்கு குழிகள் மீதே எறிகணைகள் விழுந்திட.. இந்தத் தகவலை சரத் பொன்சேகா, கோத்தபய ஆகியோரிடம் பீட்டர் மெக்கே சொல்கிறார். உடனே, பாதுகாப்பு வளைய ங்களுக்கு கொஞ்சம் தள்ளி எறிகணைகளை வீசியிருக்கிறார்கள்.


பாதுகாப்பு வளையத்தில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர், 'நாங்கள் பட்ட காயங்களுக்கு மருந்து இல்லாமல் கத்திக்கொண்டே கண் சொருகி விழுந்து விடுவோம். அதுதான் எங்களுக்கு வலி நிவாரணி. அடிபட்டவர்கள் கத்திக்கொண்டே இருப்பதைக் கண்டால், இழுத்துப்போட்டு சுட்டுக் கொன்று விடுவார்கள் ராணுவத்தினர்''  என்கிறார் அதே வலியோடு.  


பிரபாகரனின் இளைய மகன் படுகொலை! 

மே 17-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது அழுத்தமாக இந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது. பாலச்சந்திரனின் மெய்க்காவலர்கள் ஐந்து பேரும் கண்கள் கட்டப் பட்டு, கைகள் முதுகின் பின் கட்டப்பட்ட நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

 பாலச்சந்திரன் உடம்பில் இரண்டடி முதல் மூன்று அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் ஐந்து குண்டுகள் பாய்ந்து ள்ளன. இவர், பிரபாகரனின் மகன் என்பதாலேயே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று சேனல் 4 குறிப்பிடுகிறது.


தலைப்பகுதி மோசமாக சிதைக்கப்பட்டு, உடலில் சேறு பூசி, உடைகளை அகற்றிக் காட்டப்படுகிறது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல். 'இது பிரபாகரன்தான்’ என்று கருணா உறுதிப்படுத்தியதாக சிங்கள ராணுவம் சொல்கிறது. ஆனால், இது வரை மருத்துவச் சான்றிதழை இந்தியாவுக்குத் தராமல் மறைக்கிறது இலங்கை அரசு. சிங்கள ராணுவத்தினரால் காட்டப்பட்ட அதே காட்சிகள், சேனல் 4 தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன. ஆனால், இவை உண்மையில் பிரபாகரன்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை.


ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் இல்லை! 


இலங்கையில் போர் நடைபெற்ற போதும், அதன் பின்னரும் ஊடகவியலாளர்கள் நிலை குறித்து இலங்கையின் சுதந்திர ஊடகவியலாளர் பாஷன அபயவர்த்தனே பேசி இருக்கிறார். ''இலங்கையில் ஊடகவியலாளர் யாராக இருந் தாலும் அவர் கொல்லப்படவோ அல்லது நாட்டை விட்டு விரட்டப்படவோ வேண்டும் என்ற நிலையே இப்போதும் தொடர்கிறது. இது வரை, 60 பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டு உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் இதுவரை சிங்களர்கள், தமிழர்கள் என்று 26 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்'' என்று சொல்கிறார்.


இதில் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும், படங்களும் தடயவியல் நிபுணர் டென்ரிக் ஃபவுன்டர் மூலமாக ஆராயப்பட்டுள்ளன. ''இந்தக் காட்சிகள் அனைத்தும் உண்மை. இதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஜோடிக்கப்பட்ட காட்சிகளோ, பொய்யானவையோ அல்ல.




சிங்கள ராணுவத்தினர் எடுத்த காட்சிகள்தான் இவை. பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டதில், அவருக்கு உடல் அளவில் எந்தக் கொடுமைகள் செய்யப்பட்டதற்கும் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர் மனதளவில் கொடுமை படுத்தப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது'' என்கிறார்.
இசைப்பிரியாவை சீரழித்த முந்தைய காட்சிகள், பெண் போராளி கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வது, உயிரற்ற போராளிகளைக் குப்பைகளைப் போல் ஆடைகளை அகற்றி டிராக்டரில் தூக்கி வீசும் சிங்களப் படை, உயிரைக் காத்துக்கொள்ள கடலிலும் காடுகளிலும் தஞ்சம் புகுந்து தப்பிக்கும் மக்கள் என்று ரத்தசாட்சிகளாய் சிவக்கிறது திரை.


போர் முடிந்ததும் சிங்களப் படையின் கொண் டாட்டங்கள், இந்திய அரசின் சார்பாக சிவசங்கர மேனன் ராஜபக்ஷேவுடன் நடத்திய சந்திப்புகள் போன்ற காட்சிகளும் வருகின்றன. 2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இருக்கும் சமயத்தில், '40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா-வும் உலகச் சமூகமும் மறந்துவிட வேண்டாம்’ என்று, குற்றவாளிகளை அடையாளம் காட்டிய நீதியுடன் இருள்கிறது காட்சிகள்.


என்ன செய்யப்போகிறது இந்தியா?

ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்புக்கு நீதி கேட்டு வெடித்திருக்கும் ட்விட்டர் புரட்சி

 ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.. என் அளவில் நான் எழுதியவை..

http://www.eelamview.com/wp-content/uploads/2011/09/prabhakaran-mgr.jpg


1.ஆங்கிலேயன் இந்தியாவை கொள்ளை அடித்தான், ஒரே ஒரு இத்தாலிப்பெண் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே பலி ஆக்கினாள்"


----------------------------

2. தமிழனை காட்டி கொடுக்கத்தயங்காதவன் கருணா,தமிழன் வெட்டி எரியப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தவர் கலைஞர் "


------------------------------

 3. திமுக கொடியின் நிறத்துக்கான விளக்கம்- ஈழத்தமிழனின் ரத்தமும்,அவன் எதிர்காலமுமா?-சிவப்பு,கறுப்பு


------------------------------

4. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவர் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, எல்லாரையும் ஒரு வருடம் இலங்கையில் தங்கவைத்தால் என்ன?"


----------------------------------------

5. சாப்பாட்டில் கை வைக்கும்போது இலங்கையில் ஓடிய ரத்த ஆறுதான் நினைவு வருகிறது, கை கழுவினால் அவர்கள் கண்ணீர் நினைவு 

-------------------------------

 6. தமிழ் நாட்டை பீடித்த ரோகி, தமிழ் இனத்தை ஆண்ட துரோகி, அவர் கலைஞரா? கொலைஞரா.?


-------------------------------------

7. தமிழ் இனத்தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போன தலைவர் என்று வரலாறு அழைக்கட்டும் 

--------------------------

 8. இந்தியா நான்கு எழுத்து,தமிழன் நான்கு எழுத்து,இலங்கை நான்கு எழுத்து,கலைஞர் நான்கு எழுத்து துரோகம் நான்கு எழுத்து


-----------------------------------

9. உயிரைக்கொடுத்து இன மானம் காக்க பலர்.. மானத்தைக்கெடுத்து,அடுத்துக்கெடுத்து பதவியைத்தக்கவைக்க சிலர் 

------------------------------------

 10. இந்தியப்பெருங்கடல் நீர் மட்டம் உயர்ந்தால் அது ஈழத்தமிழர்களின் நிலை கண்ட நம் கண்ணீராய் இருக்கும்


-----------------------------------

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg

11. அரசியல் லாபத்துக்காக ஒரு இனத்தையே பலியிடத்துணிந்த இரு குடும்பங்களும் மன உறுத்தல்களுடனே எஞ்சிவாழ்நாளை கழிக்கட்டும் 


-----------------------------------------

12. கடவுள் அரக்கனை கொன்ற நிகழ்வு சூரசம்ஹாரம், ஒரு அரக்கன் பல வீரர்களை சூழ்ச்சி செய்து தின்ற நிகழ்வு வீர சம்ஹாரம் 

------------------------------

13. இலங்கையில் ராகுலையும், கூடங்குளத்தில் பிரியங்காவையும் நிரந்தரக்குடி வைத்து விட வேண்டும் 


-----------------------------------

14. அகதிகளின் கதி அதோ கதி, அனைத்தும் அரசியல் சதி, தமிழனின் நெற்றியில் பலவந்தமாக எழுதப்பட்ட விதி 

------------------------------

15. கையில் இருப்பதை எல்லாம் கொடுத்தான் கர்ணன், கைக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்றான் கர்ண கொடூரன் ராஜபக்சே 

--------------------------------

16. தமிழ்நாட்டைவிட்டு கலைஞர் , இந்தியாவை விட்டு சோனியா காந்தி 2 குடும்பமும் தள்ளி வைக்கப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும் 


---------------------------------

17. ஒரு ஊர் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம், ஆனால் ஒரு குடும்பம் வாழ ஒரு இனத்தையே அழிக்க வழி செய்தார் கலைஞர் 

----------------------------

18. இத்தாலி தன் ஒரு தாலி இழந்ததற்கு ஒரு லட்சம் தாலிகளை பலி கொடுத்தது, பழி தீர்த்தது# 

-------------------------------

19. ஒரு இந்தியன் இத்தாலிக்கு வாழ்வு கொடுத்தான், பல தமிழர்களின் வாழ்வு கெடுத்தான்


----------------------------------

20. காந்தியின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்தும் அவர் குணங்கள் எதுவுமே வரப்பெறவில்லை எனில் எதற்கு அந்த பதவி? 


--------------------------------------

http://farm4.static.flickr.com/3564/3577976220_6551920c3f_o.jpg

21. இரண்டு தனி நபர்கள் நினைத்திருந்தால் ஒரு இனமே அழிக்கப்படாமல் இருந்திருக்கும் 


-----------------------------------

22. நம்மிடம் கொடுப்பதற்கு, காப்பதற்கு மனம் இல்லை, அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை 

---------------------------------

23. எட்டு மணி நேர மின்வெட்டையே தாங்கிக்கொள்ள முடியாதவன் தமிழகத்தமிழன், 24 மணிநேரமும் மனித வெட்டை சந்திப்பவன் ஈழத்தமிழன்#KILLINGFIELDS

-------------------------------------------

24 இல்பொருள் உவமை அணிக்கு மிகக்கொடூரமான உதா”ரணம்” கருணையே இல்லாத துரோகி கருணா#Killingfields


----------------------------------

25. ஈழத்தமிழனின் வீட்டில் அரிசி உலை கொதிப்பதில்லை,எந்த சிங்களனும் அவர்களை மதிப்பதில்லை#KillingFields


---------------------------------

26. அமைதிக்கான நோபல் பரிசை தருவதற்கு முன் அட்டூழியத்துக்கான அகோர தண்டனை ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட வேண்டும்#KillingFields


------------------------

27. இறந்தான் இறந்தான் ஈழத்தமிழன் இறந்தான், மறந்தான் மறந்தான் தமிழகத்தலைவன் தாய் நாட்டை நேசிக்க, காப்பாற்ற  மறந்தான்#KillingFields


----------------------------------

28. ஈழத்தில் பிறந்து ஈழத்தில் அழிந்த பிரம்மபுத்திரர்கள்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் பிரம்மபுத்ரா நதியே வற்றிவிட்டதாம்#KillingFields

----------------------------------

29. வெண்ணைகள் எல்லாம் அன்னைகள் ஆகின்றனர்,தலை எடுக்க விடாமல் துரத்தப்பட வேண்டியவர்கள்  தலைவராக இருக்கிறார்கள்#KillingFields

--------------------------------

30. உயிருடன் ஈழத்தமிழனை எரித்த ராஜபக்சேவுக்கு விருந்து வை, கண்டனம் தெரிவிக்க உருவ பொம்மை எரித்தால் சிறையில் வை #KillingFields

----------------------------------

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/BloG%20fotos/4.jpg

31. ஈழத்தமிழனுக்காக போராடிய புலிகளை அரசியல் லாபத்துக்காக வஞ்சித்தன தமிழக நரிகள் #killingfields

------------------------------

32. கடல் கடந்து ஈழத்தில் தமிழன் மண்டையைப்போட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே நாம் கடலை போட்டுக்கிட்டு இருக்கோம் :(


---------------------------------------

 33. ஓ! தமிழர்களே! நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு என் குடும்பம் தான் பெருசு

----------------------------------

34. ஈழத்தில் சாதம் வடிக்க வழி இல்லாமல் தமிழன், இங்கே சச்சின் சதம் அடித்தால் என்ன? அடிக்கா விட்டால் என்ன?  

---------------------------

35. எந்த குடுகுடுப்பைக்காரராலும் நம் நாட்டுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும்னு சொல்லவே முடியலை :(  

------------------------------

36. தமிழக அரசியல் தலைவர்களில் முதல்வராக இருந்தவர்களில் எம் ஜி ஆர் மட்டுமே ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்ய நினைத்தவர் ””

------------------------- 

 நண்பர் சிவா அனுப்பிய மெயிலில் இருந்து-

( #killingfields ).. @இந்தியா சும்மா சொல்லக் கூடாது..ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ப அறிவாளிங்கடா... நாளைக்கே உலகப்போர் என்று வந்தாலும் கூட இலங்கைகாரன் சீனாப்பக்கம்தான் நிற்பான்னு நல்லாத்தெரிஞ்சிருந்தும்.. ஆயுத உதவி,ரேடார் உள்ளிட்ட தொழில் நுட்ப உதவி, ஆயிரக்கணக்கான கோடிகள் பண உதவின்னு எத்தனையோ உதவிகள் செஞ்சதும் இல்லாம..இப்ப 7.21 கோடி பேர் கெஞ்சலையும் ஹேருக்குச் சமானமா நெனச்சு தூக்கிக் கெடாசிட்டு.. "இலங்கைக்கு எதிரா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எப்போதும் இந்தியா எடுக்காது!"னு சொன்னீங்க பாத்தீங்களா.. அங்க நிரூப்பிச்சுட்டீங்கடா உண்மையிலேயே உங்க நிலைப்பாடு என்னன்னு.!


 போகட்டும்... இன்னுமும் உங்க மேல துளியூண்டு நம்பிக்கை வச்சிருக்கோம்..இந்த கொடூரத்தை நிகழ்த்தி முடிச்சு 3 வருசமாச்சு..! நீங்க செய்த பச்சைத்துரோகத்துக்கு பரிகாரமா தயவுசெய்து இந்த ஒரு காரியமாச்சும் செய்ங்க..ஜெனீவால நடைபெறப்போகும் வாக்கெடுப்புல இலங்கைக்கு எதிரா வாக்களியுங்க..

'இல்லை..அப்டி செஞ்சா என் முகமூடி கிழிஞ்சிடும்'னு இப்பவும் துரோகத்த செஞ்சீங்கன்னா..இனி இந்தியாவும் தமிழ்நாடும் உணர்வுரீதியா மட்டுமில்ல..அனைத்துரீதியுலும் வேற வேற ஆகிடும்.. இதற்கு மேல நாங்க இந்தியன்னு சொல்லிக்கறது நாங்க குடிச்ச தமிழ்ப்பாலுக்கு கேவலம்.


 @தமிழன் ..இனியாச்சும் நிஜமாவே இனப்பற்று, மொழிப்பற்றோட இருந்துக்கோங்க...இல்லாட்டி இவனுங்க தமிழ்நாட்டையும் அழிச்சு..அடியோட பொதச்சு.. சோனியா குடும்பமும், ராஜபக்ஷே குடுபமும் தமிழ்நாட்டில தன் சந்ததிகள உருவாக்கி குதூகலமா வாழ்வாய்ங்க!! :-(((( 



டிஸ்கி -1   ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்  ”” இந்த டேக்கில் வரும் அனைவர் ட்வீட்ஸையும் ஆர் டி செய்யவும்.. அது உலக அரங்கில் கவனம் ஈர்க்கும்.. RT பட்டனை க்ளிக் செய்ய வேண்டாம், தனி ட்வீட்டாய் ஆர் டி செய்யவும்

டிஸ்கி 2 - சமூக வலைத்தளங்களால் என்ன சாதித்து விட முடியும்? என்ற அலட்சியமோ, அங்கலாய்ப்போ வேண்டாம்.. ஒபாமாவின் ஆட்சிக்கு ட்விட்டர் மற்றும் சமூக வலைதள புரட்சியே முக்கிய காரணம்.. ஒரு சிறு தீ பற்றிக்கொண்டால் புரட்சித்தீ வெடித்தே தீரும்..


http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg

Saturday, February 25, 2012

சென்னை - பெண் ட்வீட்டர்கள் சந்திப்பு - இன்னா பேசுனாங்கோ? ஜாலி கலாட்டா கற்பனை

pic.twitter.com/WfS1xPRa 
வர வர பொண்ணுங்களோட ஆதிக்கம் அதிகம் ஆகிடுச்சு.. ஆண்கள் எல்லாம் சமையலை முடிச்சுட்டு ஆஃபீஸ் போன பின்பு இவங்க சும்மா  இருக்காம காலண்டர்ல, பஞ்சாங்க புக்ல இருக்கற தத்துவங்களை எல்லாம் ட்வீட்ங்கற பேர்ல தத்துவமா போட்டு கொலையா கொல்லறாங்க.. அப்புறம் ஆண்கள் ட்வீட் அப் , பதிவர் சந்திப்பு நடத்தறதை பார்த்து இவங்களுக்கும் ஆசை வந்துடுச்சு.. இப்போ சென்னைல பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ட்வீட் அப்.. அங்கே என்னத்தை பேசிக்கிழிச்சிருப்பாங்கன்னு இப்போ பார்க்கலாம்.. சும்மா ஜாலிக்கு ./. யாராவது சண்டைக்கு வந்தா உடனே கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுவோம்.. நாங்க எல்லாம் வீரபிரதாபன் பரம்பரை ஹி ஹி

மொதல்ல மாதர் குல மாணிக்கம்  பாட்டிகள் சங்கத்தலைவி மெடிக்கல் ஷாப் மேனகா  மெரீனா பீச் வந்து சேர்ந்தாங்க..

அடுத்ததா ஆண்ட்டியோ அம்பிருந்தா வம்பிருந்தா  சொம்பிருந்தா வர்றாங்க 

- ஹாய் , ஆண்ட்டி.. இந்த சேலை சூப்பரா இருக்குக்கா.. எங்கே எடுத்தீங்க?

 ஜவுளிக்கடைல கடைக்காரன் பார்க்காதப்ப எடுத்தேன் ஹி ஹி 

அக்கா, உங்க கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீஸ்ல இருக்காராமே? ரொம்ப கஷ்டமான வேலையா?

 இல்ல, அங்கே ஈசியாத்தான் வேலை செய்வாரு.. இங்கே வீட்டுக்கு வந்ததும் தான் அவருக்கு ஏகப்பட வேலை, சமையல் வேலை, பசங்களூக்கு படிப்பு சொல்லித்தர்றது.. இப்படி

 அப்புறம் நீங்க என்ன தான் செய்வீங்க? 

 விளையாடறியா? காலைல 7 மணிக்கு சிஸ்டம் ஆன் பண்ணி உக்காந்தா நைட் 1 மணி வரை நான் ட்விட்டர்ல தானே இருக்கேன்? உனக்கு தெரியாதா?  டைம் லைனை நல்லா பாரு.. அப்பப்ப சாப்பிட, டீ குடிக்க மட்டும்  10 நிமிஷம் பிரேக்  எடுத்துக்குவேன்  ...

அடுத்து சாவி தராதே பூட்டை விடாதே  வர்றாங்க  - உஷ். அப்பா.. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு கட் அடிச்சுட்டேன் ,.. ஐ ஜாலி 

நீங்க எப்போ ஆஃபீஸ் போய் இருக்கீங்க? இப்போ புதுசா கட் அடிச்சதா சொல்றீங்க?

 அப்படி எல்லாம் சொல்லாதே, மாசாமாசம் ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்க போய்த்தானே ஆகனும்?

இளிச்சவாய் டேமேஜர் உங்க ளை மாதிரி எல்லாருக்கும் சிக்கறதே இல்லையே?

 அப்போ கன் ஃபைட் காஞ்சனா  வாட்டர் கேன்ல சிறுவாணித்தண்ணியோட வர்றாங்க..

  ( ஓப்பனிங்க் சாங்க்... சிறுவாணித்தண்ணி குடிச்சு நான் ஃபைட் மாஸ்டரா பொறந்து வளர்ந்தவ... )

 டேமேஜர் பற்றி தப்பா பேசாதீங்க.. ஏன்னா மீ ஆல்சோ எ டேமேஜர்..

ஓகே , காந்தி சிலைக்கு போலாமா ? அப்போ தான் “அமைதி”யா பேச முடியும்./. 

 சாரி.. எனக்கு ஆம்பளைங்கன்னாலே அலர்ஜி.. கண்ணகி சிலைக்கு போயிடலாம்.. 

ஓக்கே.. அக்கா, ஆம்பளைங்களை திட்டறதுக்கு என்ன பண்னலாம்?

இப்போ நான் அதைத்தானே டெயிலி பண்ணிட்டு இருக்கேன்?

இன்னும் கேவலமா திட்ட ?

ஃபேக் ஐ டி ஓப்பன் பண்ணிக்க வேண்டியதுதான்.. பசங்கள்ல சிலர் எப்படி பொண்ணுங்க ஐ டில வர்றாங்களோ அந்த மாதிரி.. 

 அப்போ வள் வள் பொண்ணு ,சைதை பண்ணு எல்லாம் யாரு?

 யாருக்குத்தெரியும்? இப்போ அதுவா முக்கியம்.. நாட்டுக்கு உபயோகமான சில விஷயங்களை இப்போ டிஸ்கஸ்  பண்ண்ப்போறோம்././

 அது இருக்கட்டும்.. உங்க கூந்தல் இவ்லவ் கரு கருன்னு இருக்கே..  மீரா ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா? சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு குளிப்பீங்களா? 

 2ம் இல்லை பிளாக் மேஹந்தி போடுவேன். டை அடிச்சா அலர்ஜி ஆகிடுது.. அதனால.. நீங்க?

 நான் சவுரி வெச்சுக்குவேன்.. 

ஏய் கீரைக்காரம்மா... எவ்ளவ் கீரை?

 ஏய்.. என்னை அடையாளம் தெரியலை?

 சொன்னாத்தானே தெரியும்?

 நான் தான் யூ மலையாளச்சி

 அட விடிகாலைல 3.30 மணிக்கே ட்வீட்ஸ் போடுவீங்கள்ளே? அது நீங்க தானா?

 யா யா .. 

 நீங்க ஏன் நெற்றில  பொட்டில்லாம இருக்கீங்க?

 நல்லா பாரம்மா, சந்தனக்கலர்ல பொட்டு வெச்சிருக்கேன்.. உற்றுப்பார்த்தாத்தான் தெரியும்.. ஏன்னா மீ ஆல்சோ சந்தனக்கலர் ஹி ஹி 

அக்கா சுண்டல் வேணுமா?  

 வேணாம், போம்மா.. 

 அய்யோ அக்கா என்னைத்தெரியல ? நான் தான்க்கா திருச்சி மலைக்கோட்டைல அன்னதானம் ஸ்பான்சர்..... 

 ஸ்பான்சர் பண்ணுவீங்களா?

 ச்சே ச்சே டெயிலி லஞ்ச்க்கு அன்னதானம் அங்கே தான் ஸ்பான்சர் ஹி ஹி  என் பேரு டூப்ளிகேட் மானு.. 

எங்கே ஸ்கூட்டி காணோம்?

 கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதிங்கக்கா.. அந்த டப்பா ஸ்கூட்டி எங்க வீட்ல இருந்து ஆஃபீஸ் போகவே 6 டைம் நின்னுடும்,, எவனாவது இளிச்சவாயன் சிக்குனான்னா அவனை தள்ளிட சொல்லி ஸ்டார்ட் பண்ணுவேன், அதுல எப்படி சென்னை வரை வர முடியும்?

http://p.twimg.com/AmgCh91CIAELodm.jpg
a

இடமிருந்து வலமாக மங்கை எனும் சந்தியா சாரு அவர்களின் தவப்புதல்வர்கள் 2 பேர்.. 3 வதாக இருப்பவர் ராஜ குமாரி சோனியா பெற்றெடுத்த ராஜகுமாரன்

இந்தியா சாரு  வர்லையா?

 அட உனக்கு மேட்டரே தெரியாதா? மேனகா, சாரு 2ம் ஒரே ஆள் தான்.. 

 ஓஹோ , எப்படி அடையாளம் கண்டு பிடிக்க? 

 அடிக்கடி கர்ர்ர் புர்ர்ர்-னு ரிப்ளை குடுத்தா, இளைய தலைவலியை பாராட்டி போடற ட்வீட்சை ஆர் டி செஞ்சா அது மேனகா ...  ஒன்றரை லைன்ல சோக தத்துவமா போட்டா  அது  இந்தியா சாரு..

 ஓஹோ, காதல் கவிதை எல்லாம் பின்றீங்களே, அது எப்படி?

 1980 ல நான் +2 படிச்சப்ப ரிலீஸ் ஆன இளையாராஜா இசை அமைச்ச பட பாடல்களை எல்லாம் டைரில எழுதி வெச்சிருக்கேன். இந்த கடன் கார  பசங்களுக்கு முதல் நாலு லைன்ஸ் தான் தெரியும்.. நான் நடுவால இருந்து 2 லைன் எடுத்து விடுவேன் ஹய்யோ அய்யோ 

ஓஹோ,, அக்கா ஏன் சுத்தி முத்தியும் பார்க்கறீங்க?

சுத்தி பாருங்கடி நம்மளை படம் புடிச்சு டிவிட்டரில போட்டிட போறாங்க.இன்னைக்குனு  பார்த்து நான் சவுரி முடி வைச்சிட்டு வரல

எனக்கு ஒரு டவுட்

 கேளு

அப்பளம் எப்பிடி பொரிக்கிறது ..?

 ரைஸ் குக்கர் எதுக்குடி இருக்கு அதுல போடுடி

என்ன ஒரு அநியாயம்,போயும் போயும் இந்த செல்வம் இப்படி மாறுவான்னு நான் கனால கூட நினைச்சு பாக்கல 

 அது யாரு? உன் பாய் ஃபிரண்டா?

 ச்சே, ச்சே, சீரியல்ல வர்ற கேரக்டர்டி. 

ஓ.. சரி நாம என்ன மாதிரி ட்வீட் போடலாம்?

நம்மள என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் நம்ம தத்துவம் போடுறத நிறுத்தவே கூடாதுடி 

 அதெல்லாம் காலண்டர்ல வந்ததுன்னு கண்டு பிடிக்க மாட்டாங்களா? 

 அது ஒண்ணும் பிரச்சனை இல்லை.. நான் ரெகுலரா தத்துவம் தான் போடறேன், அதுக்கே ஆர் டி பறக்குது 


ஓ.. ஹேய் உனக்கு பத்மினி புடிக்குமா இல்ல சரோஜாதேவியா?

 அஞ்சலி தேவி, வைஜய்ந்தி மாலா வை எல்லாம் விட்டுடே.. சரி நாம இப்போ பேசுன மேட்டர் வேளில தெரிய வேணாம்

 ஏன்>

 இதை வெச்சு நம்ம வயசை கண்டு பிடிச்சுடுவானுங்க.. நாம எப்பவும் போல 20 + அப்டினு மெயிண்ட்டெயின் பண்ணுவோம்.. 

ஒரிஜினல் போட்டோவ DPயா யாரும் வச்சுறாதீங்க, அப்புறம் ஒரு பய பாலோவ் பண்ணமாட்டான் 

 அக்கா , ந நி கீ அப்டின்னா என்ன? 

 நடு நிசிக்கீச்சு

 அப்டின்னா?

 ஏ ஜோக்ஸை பசங்க நைட் 12 மணில இருந்து 2 மணி வரை போடுவாங்க.. நாம அப்போ அவங்களுக்குத்தெரியாம வேடிக்கை மட்டும் பார்க்கனும்.. 

ஓஹோ ,இப்போ எல்லாம் விகடன் வலை பாயுதே, குங்குமம் வலைப்பேச்சு, குமுதம் ரிப்போர்ட்டட் ஆன் லைன் ஆப்பு, மல்லிகை மகள் வலைப்பேச்சு இதுல எல்லாம் பெண்களாகிய நாம் தான் வர்றோம்? இதுல இருந்து என்ன தெரியுது?

 பசங்களுக்கு ஆஃபீஸ் வேலை, வீட்டு வேலைன்னு ஏகப்பட்ட டென்ஷன்.. நமக்கு ஒரு கவலையும் இல்லை.. பொழப்பே இங்கே தான் ஓடுது.. அதான் காரணம்.. 

சரி லஞ்ச் சாப்பிடப்போலாமா?

 வேணாம்க்கா..  வீட்ல புருஷன் ஆசையா ஆக்கி வெச்சிருக்கார் , வேஸ்ட்டா போயிடும்.. 

 சரி, நாலைக்கு டைம் லைன்ல பசங்க என்ன பேசுனீங்கன்னு கேட்டா சமையல், கோலம்,  சவுரி, மேக்கப் மேட்டர் பேசுனோம்னு சொல்லிட வேணாம்.. 

 ஏன்?

 நமக்குன்னு ஒரு இமேஜ் இருக்கில்ல?அது டேமேஜ் ஆகிடும்.. ஹி ஹி 

http://upload.wikimedia.org/wikipedia/commons/d/df/Young_girls_in_bunad.jpg

டிஸ்கி -1 முதலில் உள்ள பெண் ட்வீட்டர்கள் படத்தை எடுத்து உதவி செய்தது  மை மாப்ஸ் கோவை ஷேக் .. மேலும் பல ஐடியாக்களை டைம் லைனில்  தந்து உதவிய அனைத்து ஆண் சிங்கங்கள்க்கும் நன்னீஸ்  ஹி ஹி

 டிஸ்கி 2 - பெண் ட்வீட்டார்ஸ் சந்திப்பு முதல் முறை நடந்த போதே ரெடி செய்யப்பட்ட பதிவு இது.. இப்போ கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டிருக்கேன்

 டிஸ்கி 3 - முன்நாள் உலக அழகியும் இந்திய சினிமாவில் பிரபல்யமானவருமான ஜஸ்வர்யா ராயின் குழந்தையின் படம் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்னரே பெயர் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பேரு அபிலாஷா..



Friday, September 02, 2011

மீட் மை ஃபேமிலி நர்ஸ்... ஹி ஹி ஹி!!!!



Sun at horizon at sea
1.மேரேஜ்க்குப்பிறகு பொண்ணு ரொம்ப பொறுப்பு ஆகிடுது, பையன் பருப்பு ஆகிடறான் # அவ்வ்வ்

--------------------------

2. புருஷன் - பொண்டாட்டிக்கு நடுவே சண்டை எதனால வருதுன்னு கண்டுபிடிச்சுட்டேன் # டைவர்ஸ் பண்ணாம இருக்கறதால!

-------------------------

3. மதுரைக்குப்போனா ஜாஸ்மின் ஞாபகம், கேரளா போனா மீரா ஜாஸ்மின் ஞாபகம் # ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்

---------------------

4. புருஷன் தலை ஈரமா இருந்தா அவன் மனைவி அவனை பிரெயின் வாஷ் பண்ணிட்டான்னு அர்த்தமா? டவுட்டு

-------------------------
5.அப்பாவி லவ்வர்ஸ் என்பவர்கள் யார்? தியேட்டரில் நுழைந்ததும் ரைட்கார்னர்சீட்டில் காதலன், லெஃப்ட்கார்னர் சீட்டில்காதலி என தனித்தனியே அமர்வது

-----------------------




6. பசங்க வயசை மட்டும் அல்ல ,மனசையும் மறைக்க மாட்டாங்க!பொண்ணுங்கதான் வயசு,மனசு எல்லாவற்றையும் மறைப்பதும்,மாற்றுவதும்

-------------------------

7. காதலில் விழுந்தால் அடிபடுமோ?இல்லையோ?காதலி மடியில் விழுந்தால் அடி படாது #  SO SLIP ON LOVER

----------------

8. தாமதமாக எடுக்கப்படும் சரியான முடிவு கூட தவறாகிவிட வாய்ப்பு இருக்கிறது

---------------------

9. கண்களை மூடினால் இமைக்கதவின் வாயிலில் அருவமாய் நீ! கண்கள் திறந்தால் இதயக்கோயிலில் தெய்வமாய் நீ!

------------------------


10. அதிர்ஷ்ட தேவதை வலது காலை தூக்கும்போதே என் வாழ்வில் துர் அதிர்ஷ்ட தேவதை இடது காலை வைத்து விடுகிறாள்

------------------------




11. அல்சர் இருப்பதால் காரம், உப்பு சேர்த்தாமல் சாப்பிடும் சூப்பர் ஃபிகரை சப்பை ஃபிகர் என்றழைத்தால் அது சாமி குத்தமா?

-------------------------

12. எனக்குள் நீ குடி வந்த பிறகு நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் ஏற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு

--------------------------

13. டெயிலி 1, 2, 3 என எண்களை எண்ணுபவன் தான் ”எண்”கவுண்ட்டர் ஏகாம்பரமா?

-----------------------

14.  மூளை சொல்படி கேட்டு நடப்பவன் காதலிக்க மாட்டான்.காதல் மூளையை மழுங்க வைத்து விடுகிறது, ஆனாலும் அதை விரும்புகிறோம்

-------------------------

15.  எதை எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை சுலபமாக மாற்றிவிட்டது உன் காதலும், உன் பெயரும்

------------------------

Hammock Boat


16.  நமக்குப்புரிஞ்சதைத்தான் கவிதையா எழுதனும்னு அவசியம் இல்லை, பெரும்பாலும் நிறைய பேருக்குப்புரியாம இருப்பதே கவிதைக்கான இலக்கணம் ஆகிவிடுகிறது

-----------------------------

17. பொண்ணு பார்க்க வெளில கிளம்பறப்ப செம ஃபிகர் எதிரே வந்தா அது நல்ல சகுனமா? டவுட்டு

----------------------------

18. நீ அருகில் இருந்தால் எனக்கு தூக்கம் வருவதில்லை, பிரகாசமான வெளிச்சத்தில் தூங்கி எனக்கு பழக்கம் இல்லை # ஃபிகரு டியூப்லைட்

-----------------------

19. அவளை மறக்க நினைக்கும்போது மனம் கேட்கிறது.. “ ஏன்? அவ தங்கச்சிக்கு என்ன குறைச்சல்?” # SMS

--------------------------

20. ஹை க்ளாஸோ. மிடில் க்ளாஸோ ஃபேமிலி டாக்டர் வெச்சுக்கறாங்க, ஆனா ஃபேமிலி நர்ஸ் வெச்சுக்கறதில்லை ஏன்? டவுட் பை லோ க்ளாஸ் பையன்

-------------------

 

21.எடிட்டர் சார்! சன்மானம் கம்மியா அனுப்பிஇருக்கீங்க? 

யோவ், பவுன் விலை ஏறிடுச்சுங்கறதுக்காக நீ அனுப்பற பொன்மொழிக்கெல்லாம் ரேட் ஏத்தமுடியாது

---------------------------------

22. என் மனைவியோட பர்சனல் பீரோ கோயில் மாதிரி. 

நிஜமாவா? 

ஆமா! திறந்து பார்த்தா ஏகப்பட்ட நகைங்க!

----------------------------

23. டிராஃபிக் எஸ் ஐ - யோவ், டிரைவிங்க் லைசன்சை எடு. 

ஓக்கே சார், இப்போத்தானே சொல்லி இருக்கீங்க? எடுத்திடறேன்

--------------------

24. டைரக்டர் சார், கதைக்கும், ஹீரோயினுக்கும் சம்பந்தமே இல்லையே? 

ஹி ஹி , எனக்கும் ஹீரோயினுக்கும் சம்பந்தம் இருக்கே?

-----------------------------

25. ஜெயில்ல முதல்வகுப்பு வேணாம்னு தலைவர் சொல்லீட்டாராமே? 

ஏற்கனவே அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சவரை மறுபடி முதல் வகுப்பு போங்கன்னா கோபம் வராதா?

-----------------------------


26. கடைசியில் எல்லாம் சரி ஆகி விடும் என நம்புங்கள்,சரி ஆகவில்லை என்றால் இது கடைசி அல்ல என நம்புங்கள்
----------------------

27. உனக்கு சயின்ஸ் கொஞ்சம் கூடப்பிடிக்காதுன்னே!ஆனா சயின்ஸ் டீச்சரை கல்யாணம் பண்ணி இருக்கியே? 

ஹி ஹி  பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு

--------------------------

28. உங்க கவிதைல ஏதும் உள் குத்து இருக்கா? 

ஆமாங்க, என் லவ்வரோட அண்ணன் உள்ள கூட்டிட்டுப்போய் செம குத்து குத்திட்டான்,அந்த சோகக்கவிதைதான்

----------------------------

29. ஒரு பெண்ணுக்கு காதல்மூடு வர மழை,ரீசன், சீசன்,எமோஷன், எல்லாம் வேணும், ஆனா ஒருஆணுக்கு மூடு வர ஒரு பெண் இருந்தால்போதும்# நீதி -ஆண் எளியோன்

---------------------

30.  ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வீட்டுக்கு வந்தா என் மனைவி தாளிச்சுடுவா! பொய் சொல்லாதே? அவளுக்குத்தான் சமைக்கவே தெரியாதே?


-----------------------------

Tuesday, August 30, 2011

ஆண்கள் ஏன் ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்?


1.பாலிவுட்டின் வளரும் நடிகைகளில் சரா கானும் ஒருவர்-தினமலர் செய்தி#26 வயசு ஆச்சே இன்னுமா வளர்ந்துட்டு இருக்கு?#டவுட்டு

---------------------------------

2. இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!#என்னய்யா நியூஸ் போடறீங்க.. எதுக்கு பரபரப்பு? கிளு கிளுப்புன்னு போடுங்க .. அப்ப்டியே ..லிங்க் ப்ளீஸ்   pls

-------------------------------

3. மிஸ், டைம் ப்ளீஸ் என்றேன், ரொம்ப ஓல்டு டெக்னிக் என்றாள். ஓல்டு ஈஸ் கோல்டு என்றேன்#கடலை ஸ்டார்ட்ஸ்

-----------------------------

4. சூப்பர் ஃபிகருடன் சேர்ந்து வெளியே வரும் மொக்கை ஃபிகர் கூட சீன் போடுவதை ஆண் வேறு வழி இல்லாமல் பொறுத்துக்கொள்கிறான்

-------------------------

5. மதிமுக பூப்படைந்துவிட்டது - நாஞ்சில் சம்பத்#சாரி அண்ணே.. ஒரு சின்ன கரெக்‌ஷன் மூப்படைந்து விட்டது,அவ்வளவு தான் , இனி எழ முடியாது.

-------------------------




6. தியேட்டரின் பால்கனியில்  நுழைந்ததும் கிடைத்த இடத்தில் அமர்பவர்கள் ஜஸ்ட் சிநேகிதர்கள், கார்னர்சீட் தேடிப்போய் அமர்பவர்கள் காதலர்கள்#ஜிகிடி

------------------------

7. நீ ஏன் என்னிடம் ஒரு தடவை கூட கோவிச்சுக்கவே மாட்டேங்கறே?என்று முனகி கோபித்துக்கொண்டாள் காதலி#ஸ்.. ஷ்.. அப்பா .. முடியல

---------------------

8. பெண்கள் பெரும்பாலும் வழிவதில்லை,பெண்களுக்கு அவர்கள் முன் இருக்கும் ஏராளமான தூண்டில்களிடமிருந்து தப்பிக்கவே நேரம் சரியாக இருக்கிறது

------------------------

9. சந்தர்ப்பங்கள் சாதகம் ஆகாத காரணத்தால் பெரும்பாலான  ஆண்கள் தங்களை ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்

-----------------------

10. காதலியிடம் அடிக்கடி பொய் சொல்க.சத்தியம் பண்ணுங்க என்பாள்,உன் மீது சத்தியம் என்று தொடுவதற்கு எதார்த்தமான வாய்ப்புக்கள் கிடைக்கும்@#ஜிகிடி

----------------------------


a
11. காதலிக்கும்போது பெண்கள் காதலன்மீது வைக்கும் அன்பை காதல் தோல்வி அடைந்த பின்னும் ஆண்கள் காதலி மீது வைத்திருப்பார்கள்


--------------------------

12. 100% தூய்மை, 100 % நேர்மை என யாருமே இங்கே கிடையாது,சின்ன சின்ன தவறுகளுக்காக மனிதர்களை நீ ஒதுக்க ஆரம்பித்தால் நீ தான் தனியன் ஆவாய்

-------------------------------

13. அர்த்தம் அற்ற வார்த்தைகளை விட அர்த்தம் உள்ள மவுனம் சிறந்தது

-----------------------------

14. முக்கியமான ஒன்றைத்தொலைக்கும்போது யாராவது மனம் மகிழ்வார்களா? நான் மகிழ்ந்தேன், என் இதயம் தொலைக்கையில்

----------------------------

15. என்னுடன் பேசவே கூடாது எனும் வைராக்கியத்துடன் நீ இருக்கிறாய்!எப்போதாவது நீயாய் வந்து பேசுவாய் எனும் எதிர்பார்ப்புடன் நான் இருக்கிறேன்.

---------------------------------



16. நாத்திகவாதியாய் இருப்பவர்கள் காதலியின் நலனுக்காக பிரார்த்திக்கும்போது ஆத்திகவாதி ஆகிவிடுகிறார்கள்

-----------------------------

17. இழப்பதற்கு உன் நினைவுகள் தவிர வேறெதுவும் இல்லை என்னிடம்,மறப்பதற்கு என் காதல் தவிர வேறெதுவும் இல்லை உன்னிடம்

--------------------------

18. உன்னை மட்டுமே நினைக்க வேண்டும் என்று பணித்தாய், உன் அளவு கடந்த அன்புகளை என் மேல் திணித்தாய்

------------------------

19. விமானத்தில் தனியே தொலை தூரம் நீ 32 மணி நேரம் பயணித்தாய்! நான் 64 மணிநேரம் கழித்து திரும்பினேன்


-------------------------

20. நீ என்னை உன்னவனாய் நினைக்க ஆரம்பித்த நாளை என் முதல் பிறந்த நாளாய் எண்ண ஆரம்பித்தேன்

-------------------------



21. உன்னைச்சுற்றி அமையும் ஒரு பாதுகாப்பு வளையமாய் நான் மாற முடிந்தால் சந்தோஷப்படுவேன்

------------------------

22.அடிக்கடி என் கனவில் நீ வரும்போதே நான் உஷார் ஆகி இருக்க வேண்டும் , நீ கனவாகவே கரையப்போகிறாய் என்று


---------------------

23. மெலோடி சாங்க்ஸ் ரசிக்கும் பெண்கள் எல்லோரும் மென்மையான மனம் படைத்தவர்கள் அல்ல, அடிப்பாட்டை விரும்பும் ஆண்கள் வன்மையான குணம் உள்ளவர்கள் அல்ல

----------------------------

அனகா அலங்காமணி - ஸ்குவாஷ்
24.சேலை பெண்கள் முந்தானையை சரி செய்வதை விட 4 மடங்கு அதிகமாக சுடிதார் பெண்கள் துப்பட்டாவை சரி செய்கிறார்கள்#மைக்ரோநோட்டாலஜி

-----------------------

25 காதலிக்காதவன் கவிதை எழுதும்போது வார்த்தைகளாக வந்து விழும்,காதலிப்பவன் கவிதை எழுதும்போது வரி வரியாக மிதந்து வரும்#முப்பொழுதும் அவள் கற்பனை

--------------------

26 பெண்கள் கால் விரல் மிஞ்சி பட்டா போடப்பட்டவள் என்பதை  காட்டிக்கொடுப்பது போல் ஆண்களுக்கு?நாங்க தான் ஷூ போட்டுக்கறோமே? #யாரு கிட்டே?

-----------------------

27 சரக்கு ஸ்மெல்,சிகரெட் ஸ்மெல் இவற்றை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் பெண் ஆணின் முத்தம் விரும்புகிறாள்#கில்மாலஜி

------------------

28. சுடிதார் பெண்களின் துப்பட்டா போடும் ஸ்டைல் தான் அவரது டிரஸ்சிங்க் சென்சை தீர்மானிக்கிறது#டிரஸ்ஸாலஜி

------------------------



29. கோயிலுக்குப்போவதால் மனநிம்மதி,ஓசி பிரசாதம்,ஏசி போட்டது மாதிரி குஜிலியின் கூல் பார்வை மூன்று பலன்கள் இருப்பதால் ஆன்மீகவாதியாகு#ஜிகிடி

---------------------

30.நெயில் பாலீஸ் வைப்பது ஃபிகர்களின் பழக்கம்,இயற்கை மருதாணிச்சிவப்பை ரசிப்பது ஆண்களின் வழக்கம்#ஜிகிடி

---------------------------

31 கலைநிகழ்ச்சிகளில்,விழாக்களில் மேடையில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சாமான்யன்,ஆடியன்ஸ் தரப்பில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சரித்திரன்#ஜிகிடி

-----------------------

32 ஒற்றை நாடிப்பெண்களுக்கு ஒற்றைஜடை அழகு,ரெட்டைநாடிப்பெண்களுக்கு ரெட்டை ஜடை அழகு என்று நினைப்பது அழகிய முட்டாள் தனம்#ஜிகிடி

------------------

33. ஜிமிக்கி அணிந்த பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்,ஆனால் அவர்கள் ஆண்களுக்குப்பிடிக்காத மாடலில் பெரிய சைஸ் ரிங்க் மாட்டி கடுப்பேற்றுகிறார்கள்

rainbow rose

Monday, August 29, 2011

ஃபிகரு ஒற்றை நாடியா? ரெட்டை நாடியா? எது டாப்?


1.ஒற்றை நாடியா இருந்தா பிடிக்குமா?ரெட்டை நாடியா இருந்தா பிடிக்குமா?எனகேட்டாள்  காதலி.நீ என் உயிர் நாடியா இருந்தா பிடிக்கும்னேன்#காணாத காதல்

-----------------------------

2. ஐ லவ் யூ சொல் 

என்றேன்.

ம்ஹூம், அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் 

என்றாள் காதலி.

அப்போ பேச நேரம் இருக்காது

என்றேன்,முகம் சிவந்தாள்

--------------------------

3. நறுமணக்காதல் என்பது என்ன?மல்லிகைச்சரத்தை கூந்தலில் சூடிய காதலி ஸ்கூட்டி ஓட்ட நீ பின்னால் அமர்ந்து செல்லும்போது நீ அனுபவிப்பது#லவ்வாலஜி

---------------------

4. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்றாள் காதலி,கூடா நட்பு கேடா முடியும் என்றேன்,ஓக்கே சொன்னாள் #தாங்க்ஸ் டூ கலைஞர்

--------------------------

5. நான் சேலையில் அழகா? சுடியில் அழகா? என்றாள் காதலி.ரோஜா செடியில் அழகா? கூந்தலில் அழகா? என்றேன்

------------------------


Nayantaras family forces Prabhu Deva


6. பத்திரிகையாளர் வேடத்தில் பூனம் பஜ்வா!#விருந்து,திரைச்சித்ரா மாதிரி மஞ்சள் பத்திரிக்கையா இருக்கப்போகுது, நிறைய பேரு மங்களகரமானதுங்கறாங்க

--------------------------

7, கவர்ச்சிக்கு மாறுகிறார் அனுயா!#என்னமோ வீடு மாறுகிறார்ங்கற ரேஞ்ச்ல நியூஸ் போடறாங்களே?இத்தனை நாளா குணச்சித்திரத்தை கொட்டிமுடிச்சுட்டாங்களா?

-----------------------------------

8. என் கிட்டே உனக்கு பிடிச்ச அம்சம் எது? என்றாள் காதலி.. டோட்டலாகவே நீ அம்சமா இருக்கியே அது தான் என்றேன்#லவ்வாலஜி

--------------------

9. இனி எனக்கு ஒரு SMS கூட அனுப்பாதே என்று கோபமாக SMS  செய்தாள் காதலி. ஓக்கே டன் என்று SMS  ரிப்ளை அனுப்பினேன்#ஊடல்

-----------------------------

10. 25 வயதுக்கு குறைவானவர்கள் "சரக்கு' அடிக்க தடை வரலாம்-செய்தி#நல்ல வேளை,சரக்கு அடிக்கறதுக்கு மட்டும் தடை வருது

A Hamster funny trick...:)
funny_hamster-wallpaper-960x640.jpga

11.மவுன சாமியார் மன்மோகன் சிங் : சத்ருகன் விமர்சனம் # என்னது? சாமியாரா? ச்சே! ச்சே!  “அப்படி” எல்லாம் இருக்காது

------------------------

12. பிரதமருக்கு சம்மன் -ஆ. ராசா வலியுறுத்தல் # கூட்டாளியை காட்டிக்கொடுத்த ஷோக்காளி!!!!

---------------------

13.ஆண்களை எடை போடுவதில் பெண்கள் கில்லடிகள், ஆனால் என்ன பரிதாபம்னா அவங்களும் ஓவரா எடை போட்டுடறாங்க # ஓவர் வெயிட் ஓமனாஸ்

------------------------------

14.  நமக்குப்பிடித்தமானவர்கள் மனதிற்குப்பிடித்தமானவை நமக்கும் பிடித்துப்போவது திண்ணம்

------------------------------

15. 60- ஆம் கல்யாணத்தை ஆர்ப்பாட்டமா கொண்டாடுனா சாதா தலைவன், 60 கல்யாணம் அமுக்கமா பண்ணிக்கிட்டா அவன் தான் சரித்திரத்தலைவன்

---------------



16. கண்களால் கிறங்கடித்தால் அது பெண்கள், உதடுகளால் சரக்கடித்தால் அது ஆண்கள்

--------------------------

17. டியர்,உன்னைப்பார்க்கும்போது எனக்கு குதிரை ஞாபகம் தான் வருது, இன்னா ஹைட் நீ?

சாரி. உன்னைப்பார்க்கறப்ப எனக்கு கழுதை ஞாபகம் தான் வருது

----------------------------------

18. வீட்ல இருந்த லேண்ட் லைன் ஃபோன் கனெக்‌ஷனை ஏன் கட் பண்ணிட்டீங்க தலைவரே?

நில மோசடி வழக்கு பாய்ஞ்சிட்டா?

------------------

19.  மெல்லத்திறந்த கதவு பட பாடலான தேடும் கண் பார்வை  தவிக்க தமிழின் சிறந்த கஜல் பாடல் #  SPB பேட்டி  IN  குமுதம்

---------------------------

20.  யோவ் பி ஏ, லிவ்விங்க் டுகெதர்னா என்னய்யா?

தலைவரே! மகளிர் அணித்தலைவி கூட இருக்கீங்களே? அதுதான்

-----------------------


 
 

21 தலைல அடிச்சுக்கிட்டே ஆடியன்ஸ் படம் பார்க்கறப்ப பல்லை கடிச்சுக்கிட்டே வசனம் பேசுறவரு எங்க கேப்டன் #CaptainBirthday


--------------------------

22. முதல் முறையா பேக் ஷாட் அறிமுகப்படுத்துனவரே எங்க கேப்டன் தான் ( ஃபைட் சீன்ல )

---------------------------


23. வாதாடும் உன் உதடுகளை அடைக்க எனக்கு வாதிடும் சாமார்த்தியம் இல்லாததால்  குறுக்கு வழியை  தேர்ந்தெடுத்தேன் # கிஸ்ஸாலஜி

---------------------------

24. ஃபிகரைப்பார்த்துட்டு இருந்தா லைஃப் போயிடும் , ஃபிகரைப்பார்க்காம விட்டா  ஃபிகர் போயிடும், ஃபிகரா? லைஃபா?

------------------------

25.  வெற்றி ஒரு போதும் உன்னைத்தேடி வராது, நீ தான் அதை தேடி செல்ல வேண்டும்

----------------------------



26  மற்றவர்கள் மனதைத்தொடும்படி உன் பேச்சு இருக்க வேண்டும் எனில் உன் பேச்சு உன் உள்ளத்திலிருந்து வர வேண்டும், உதட்டிலிருந்து அல்ல!

-------------------------

27. அன்னா முன்னேற்றக்கழகம் ஒன்று உருவானால் பல கழகங்கள் வாழ்வில் கலவரங்கள் நிகழ்வது திண்ணம்

-----------------------------


28. இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: 100-வது நாளையொட்டி பேரவையில் ஜெயலலிதா # அப்போ கொடுத்த வாக்கு எல்லாம் ஊ ஊ ஊ வா?

--------------


29. டியர், நான் கணக்குல வீக் என்பதால் என்னை ரிஜக்ட் பண்ணிட்டியா? ஏன்?

டேய், லூசு, கணக்கே சரியா வர்லை, நீ எப்படி ஒருஃபிகரை கணக்கு பண்ணப்போறே?

--------------------------

30.  பசங்க கலர் கலரா பேனா எடுத்துட்டு போறதுக்கு காரணம் அவங்க வசம் ஏகப்பட்ட கலருங்க இருக்குன்னு காட்டிக்கறதுக்காக்கூடா இருக்கலாம்

--------------------------

 
 


31. எந்த ஊழலும் நடைபெறவில்லை, எல்லாம் முறைப்படிதான் நடந்துள்ளது - ஆ ராசா # முறைப்படின்னா சமமா பிரிச்சுக்கிட்டீங்களா?

----------------------

32. நான் என்ன சுகர் பேஷண்ட்டா? ஏன் முத்தம் தர மறுக்கிறாய்? பை ஃபிகர் பேஷண்ட் (ஃபிகரால் பேஷண்ட் ஆனோர் சங்கம்)

--------------------------

33. டியர், நீங்க ராணி, தேவி இந்த  2 புக்ஸ் மட்டும் படிக்க வேணாம்.

ஏன்?

அதுல லேடீஸ் பேரு இருக்கே?

-------------------------

34.  பழையவற்றை, வேண்டாதவற்றை எரிப்பது போகிப்பண்டிகை,மெய் ஆசைகளை, தீண்டாதவற்றை எரிப்பது போகப்பண்டிகை

--------------------------

35.  எடியூரப்பா,ஷீலாதீட்சித் -வித்தியாசம்? எடியூரப்பா தன் ஃபேமிலி வெல்த் மட்டும் பார்த்துக்கிட்டாரு, ஷீலாதீட்சித் காமன்வெல்த்தை கவனிச்சாரு

---------------------


 
 

36. தலைவரே!காமன்வெல்த் ஊழல் பற்றி ஏன் கருத்து தெரிவிக்கலை?

காமன் என்பது காமக்கடவுள்,ஆன்மீகத்தில் தலையிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும்.

----------------------------

37. அதிமுக ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே கருத்து தெரிவிப்பேன்- விஜயகாந்த் #  அதாவது உள்ளாட்சித்தேர்தல் எல்லாம் முடிஞ்ச பிறகு?

-------------------------

38.  காதலிப்பவர்களுக்கு மட்டுமே காதல் புனிதம், காதலிக்காதவர்களுக்கும் , காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் அது பைத்தியகாரத்தனம்

----------------------

39.  கடவுளைக்கண்டவரை கண்டவர் யாரும் இலர், ஆனால் காதலை கண்டவர், உண்டவர் பலர் நம்முடன் இருப்பதால் கடவுளை விட காதல்-ல்  நம்பகத்தன்மை அதிகம்

---------------------

40. வடிவேலு மீதான நிலமோசடி - திடீர் திருப்பம் : சம்பந்தப்பட்ட நபரிடமே நிலத்தை ஒப்படைத்தார்!!  #  ஈரோடு NKKP ராஜா வகையறாக்கள் கவனிக்க